Friday, June 18, 2010

Dogs will always lick.

நாய் நக்கியத்தான் குடிக்கும்.அதற்குத்தின்னத்தெரியாது.நாலு காசு கிடைக்கு மென்றால் இவர்கள் -இந்த முதலாளிமர்கள்-என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தச்சண்டார்ளர்கள் செய்யும் அயோக்கியத்தனம்-சுற்றுலா என்றபெயரில் இவர்கள் செய்வது மனிதகுலம் இதுவரை கேட்டறியாதது.


ஆப்பிரிக்காவுக்கு சிங்கம்,புலி,என்றுபார்ப்பதற்காக அழைத்துச்செல்வார்கள்.சுற்றுலாத் துறையில் உள்ள தனியார் கம்பெனிகள் இத்தகைய சுற்றுலாவினை ஏற்பாடு செய்கிறார்கள். அந்தமான் தீவின் சுற்றுலா அபிவிருத்திக்காக விளம்பரங்கள் வந்துள்ளன. பரதங்க் தீவு என்பது அந்தமானின் மத்தியில் உள்ளது. இங்குள்ள ஆதிவாசி மக்கள் 55000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறார்கள்.உலகத்தொடர்பே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்துவந்தார்கள்.1998ம் ஆண்டுதான் முதன்முதலாக வெளிஉலகத்திற்கே தெரியவந்துள்ளது.இவர்கள் தங்களை "ஜராவஸ்" என்று அழைத்துக் கொள்கிறர்கள்.இப்பொழுது 350 பேர்தான் உயிரோடு இருக்கின்றனர்.

இவர்களுக்கென்று தனிகுடியிருப்பு உள்ளது.இவர்களை 'ஆங்க்' என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். "ஆங்க்" என்றால் "மனித இனம்"என்று அர்த்தமாம்.இவர்கள் இத்தனை காலம் மிருகங்களப்போல வழ்ந்துவந்தாலும் தாங்கள் வித்தியாசமான உயிரினம் என்பதை உணர்ந்தே இருந்து வருகிறர்கள். இப்படி ஏராளமான பழங்குடிகள் நாகரீகம் என்ற பெயரில் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன.

ஆஸ்திரேலிய பழங்குடிகளை ப்ரிட்டிஷ்காரர்கள் எப்படி அழித்து தங்கள் நாடாக்கிக்கோண்டார்கள் என்பது வரலாறு.அந்த மக்களின் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.பெண்களை வண்புணர்ச்சி மூலம் புதிய கலப்பினத்தை உருவாக்கினார்கள்.ஆஸ்திரேலியாவில் "ஒலிம்பிக்" விளையாட்டு நடந்தபோது இது அம்பலமாகியது.

இந்தியாவில் பழங்குடி மக்களைப் பாதுகாக்க தனியான சட்டம் உள்ளது.அது நடைமுறையில் இல்லை.வளர்ச்சி,முன்னேற்றம் என்ற பெயரில் இவர்களின் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது"ஜராவஸ்" இன மக்கள் வாழும் பகுதி வழியாக மிகப்பெரிய சாலை போட்டிருக்கிறார்கள். சுற்றுலா வசதிக்காக.விளம்பரத்தில்,"முதுமலை காடுகளில் நீர் குடிக்க வரும் யானை களை பார்ப்பது போல் இந்தசாலையில் உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் "ஜராவஸ்" இன மனிதர்களைப்பார்க்கலாம்." என்று போட்டிருந்தார்கள். மானுடவியலார் சில வருடங்களில் இந்த மக்களை அழித்துவிடும் முயற்சியே இது என்கிறார்கள்.

அருந்ததி ராய் இவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்."மேம் சாகிப்" என்ற திரைப்படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக நடித்ததுதான் அவருக்கும் ஆதிவாசிகளுக்கும் உள்ள ஒரே தொடர்பு.

Monday, June 14, 2010

emergency.....3

அவசரநிலையிலும், அதன் கெடுபிடியையும் மீறி செயல்பட வேண்டியதிருந்தது.மத்தியதர வகுப்பை செர்ந்தவர்களின் துடிப்பு மிக்க செயல்பாடு இந்தக்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அதன் காரணமாகவே அவர்களை ஒன்றுதிரட்டி போதமளிக்கவேண்டிய அவசியமும் இருந்தது.எல்.ஐ.சி, வங்கி,தபால் தந்தி,மத்திய,மாநில அரசு ஊழியர்கள் என்று அவர்களுக்கு தத்துவார்த்த,அரசியல் வகுப்பு நடத்தினோம்.மதுரயைப் பொருத்தமட்டில், இந்தவிஷயத்தில் எல்.ஐ.சி ஊழியர்களின் பொறுப்பு சிறப்பாக இருந்தது.ரகசியமாக நடத்தவேண்டியிருந்ததால் எல்.ஐ.சி யைச்செர்ந்ததோழர் B.நாரயணசிங்கிடம் பொறுப்பு கட்டப்பட்டது.துணிச்சலும்திட்டமிடலுமவருடையசொத்து..


யார் யார், எப்பொழுது,எங்கு வரவேண்டும்,என்பதிலிருந்து,உணவு ஏற்படு வரை அவரே கவனித்துக் கொண்டார்.மறைந்த எல்.ஐ.சி தோழர் மாணிக்கம் வீட்டு மாடியில் வகுப்பு நடத்தப்படும். ஆசிரியரை வரவழைத்து முகாமுக்கு கொண்டுவருவது என் பொறுப்பாகும்.வெளிநாட்டில் பொருளாதாரம் படித்து மார்க்சீய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் அப்போதுதான் இந்தியா வந்திருந்தார்.அவரை கொண்டுவரும் பொறுப்பு எனக்கு என்றாயிற்று.அவர் எடுத்த வகுப்பை இன்றும் நண்பர்கள் நினைவு.றுத்தி பேசிக்கொண்டிருக்கிறர்கள்.பண்டமாற்று பொருளாதாரம்,எப்படி பணப்பட்டுவாடா பொருளாதாரமாக மாறியது என்பதை அற்புதமாக விளக்குவார்.மார்க்சின் "மூலதனம்" அவருக்கு பிடித்தமான நூலாகும்.

அப்போது இருந்தநிலையில் அவருடன் நான் மட்டுமே தொடர்பு கொள்வது என்று முடிவு செய்தோம்.அவருக்கு அனுப்பும் செய்திகள்கூட சங்கேத மொழியில் இருக்கும்."அன்புள்ள பாலு மாப்பிள்ளைக்கு, வரும் ஞாயிறு ஜூன் 20ம் தேதி,பும்சவன சீமந்த முகூர்த்தம் நடக்கிறது.நீங்கள் சௌபக்கியவதி சந்திராவை யும் அழைத்துக்கொண்டு முந்தின இரவே வந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.காலை பத்துமணிக்கு முகூர்த்தம்,உறவினர்களும்,நண்பர்களும் உங்களைப் பார்க்க பேச ஆவலோடு இருக்கிறார்கள்." என்று அஞ்சல் அட்டை போடுவேன்.

பாலுவைத்தொடர்பு கொண்டு வெகுனாட்களாகிவிட்டது .இரண்டு நாட்களுக்கு முன்பு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார். பழய கதைகளை பேசி மகிழ்ந்தோம்.Dr.வெங்கடேஷ் ஆத்ரேயா தான் அந்த "பாலு."

Thursday, June 10, 2010

emergency---------2

நாமக்கல் இலக்கிய முகமுக்கு போகும்போது கூட்டமாக பயணம் செய்யவேண்டாம்.காவல்துறை சந்தேகப்படும்.தனித்தனியாகவே செல்லுங்கள் என்றார்கள். அப்போது திருவள்ளுவர்,பல்லவன் மட்டும்தன் உண்டு.இரவு பத்துமணிக்குமேல் மதுரை பாத்திமா கல்லூரி அருகில் பஸ் பிடித்தேன். முன்பதிவு என்றெல்லாம் கிடையாது.எக்கச்சக்கமான கூட்டம்.இஞ்சின் மீது அமர்ந்து பயணிக்க முடிந்தது.நவம்பர் மாதமாதலால் இஞ்சின் சூடு இதமாக இருந்தது.வாடிப்ப ட்டியில இரண்டுபேர் ஏறினார்கள்.ஊதாநிறகால்சட்டையும் வெள்ளைநிறமேல் சட்டையும் ஒருவர் அணிந்திருந்தார்.


மஞ்சள்பையும் தலைமுடி வெட்டும் அவரை போலீசாக எனக்குக்காட்டியது. . என்னைப்பர்த்து மெலிதாகசிரித்தார்.என் அடிவயிறு கலங்கியது.நிற்பவர்களுக்கு ஊடாக ஊர்ந்து பின்னால் சென்று நின்றேன்.கோடைரோடு போகும் போது மீண்டும் என் அருகில் வந்தார். என்னைக்கண்காணிக்கும் இந்தபோலீசிடமிருந்து தப்பவேண்டும். அதுதான் முக்கியம்.திண்டுக்கல் நகரில் மிகப்பெரிய மூத்திரக்கிடங்குதான் அப்போது பஸ்ஸ்டாண்டு.இறங்கி வேறு வண்டியில் போகலாம் என்று நினைத்தேன்.இருட்டான பகுதியில் பதுங்கினேன்.திரும்பினால் போலீசம் இறங்கு வது தெரிந்தது.மீண்டும் ஓடும் வண்டியில் ஏறும் போது போலீஸ்காரர் ஏறுவதை உணர்ந்தேன்.எதுவும் செய்யமுடியாது.பிடிபட்டாலும் நான் ஒருவன் தான்.நாமக்கல் வரை வந்தால்,அத்துணைபேரையும் கோழியை அமுக்குவதுபோல் அமுக்கிவிடுவார்கள்.கரூர் தாண்டியாகி விட்டது.நாமக்கல் வந்ததும் வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி இருட்டில் பதுங்கினேன்.

இருட்டுக்குள்ளேயே ஒருகடையைத்தேடி ஆயிர வைஸ்ய மண்டபம் பற்றி விசாரித்து வண்டியை விட்டேன்.இருந்தாலும் பொறுப்பாளர்களிடம் போலிஸ் தொடர்ந்ததை சொல்லிவிட முடிவுசெய்தேன்.மண்டப முன்வாயிலில் கு.சி.பா வும் வக்கீல் சுப்பிரமணியும் இருந்தார்கள்."போங்கள் போங்கள்,உள்ளே போய் பேசலாம்" என்றார் வக்கீல்.கு.சி.பாவுடன் உள்ளே. நகர்ந்தேன்.அரவம் கேட்டது.திரும்பினால் அதே போலீஸ் வக்கீலோடு பெசிக்கோண்டுருந்தார்.."இவர்தான் ,இவர்தான் என்று வக்கீலிடம் கூவினேன்.போலீஸ்காரர் "இவர்தான் மதுரையிலிருந்து என்னை தொடர்கிறார்" என்றார்."யோவ்! இது நம்ம காஸ்யபன்யா....காஸ்யபன் இது கவிஞர் வெண்மணி"என்று வக்கீல் அறிமுகம்செய்தார்.இதயம் விம்ம வெண்மணியின்கைகளைப் ப்ற்றிக் கொண்டேன்.அவர் கண்களைப் பார்த்தேன்.கவிஞர் அல்லவா.பனித்திருந்தது.........

Wednesday, June 09, 2010

emergency

அவசரநிலைக்காலத்தில் த.மு.எ.ச உதயமானது.அதைவிட முக்கியமானது கெடுபிடிகளைத்தாங்கிக்கொண்டும் அது செயல்பட்டதுதான்.புதிய எழுத்தாளர்களை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.குறிப்பாக பண்டய தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்யவேண்டும் என்பது பொதுச்செயலாளர் கே.முத்தய்யா அவர்களின் விருப்பம்.ஒரு இலக்கியமுகாம் நடத்தமுடிவேடுக்கப்பட்டது.எங்கு நடத்துவது?ஜனநாயக இயக்கங்கள் முடக்கப்பட்டு இருந்தன.பொதுமான ஆள்பலம் வேண்டும்.அந்தச்சமயத்தில்தான் நாமக்கல் மாவட்ட


த்தில் நடத்துவதாக கு.சி.பா கூறினார்கள்.(ஏற்கனவே சிறையிலிருந்து வெளிவந்தவர் தான் அவர்)

சுமார் நூற்றைம்பது பேர் வர திட்டமிடப்பட்டது.திருச்சியைச்சேர்ந்த பேரா.மணிமாறன்.பி.கோவிந்தபிள்ளை,கே.முத்தய்யா ஆகியோர் ஆசிரியர்கள்.L.I.C யில் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றN.V.நாயுடு அவர்கள் தமிழிலக்கியத்தில் சமஸ்கிருதத்தின்

தாக்கம் என்பது பற்றி வகுப்பு எடுப்பார்.தமிழ்நாடு பூராவிலுமிருந்து எழ்த்தாளர்கள் வந்திருந்தனர்.திரவிடர் கழகத்தின் செயல்பாடு பிடிக்காமல் வந்தவர்கள் உண்டு.பொதியவெற்பன், அறிவுறுவோனென்று வந்தார்கள்.கர்நாடகத்திலிருந்து கிழார்,DRநாகராஜ்,சுப்பிரமணியம்,அப்போது எம்.ஏ படித்துக்கொண்டிருந்த சித்தலிங்கய்யா என்று ஒரு ஜமாவந்தது.அவருடைய புகழ் பெற்றபாடல்

"நம்ம ஜனங்களு" முகாமில்தான் முதலில் பாடப்பட்டது. கம்பத்தைச்செர்ந்த ஆசிரியர் நாராயணசாமி தான் அதனை கன்னடத்திலும்,தமிழிலும் இசை அமைத்து மேடையில் படினார்.

எந்த சமயத்திலும் எதுவும் நடக்கலாம்.கே.முத்தய்யா அவார்கள் எங்கு செல்கிறேன் என்பதை வீட்டில் சொல்லாமல் வருங்கள் என்று கூறியிருந்தார்கள்.அதனால் வந்திருந்தவர்கள் இறுக்கம் கூடுதலாகவே இருத்தது.சுமார் முப்பத்துஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த

முகாம் என் போன்றவர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

Saturday, June 05, 2010

three language

மின் கட்டணம் எவ்வளவு என்று பார்க்க முனைந்தேன்.எழுத்து புரியவில்லை.எண்கள் புரிந்தன. அதன் பிறகுதான் நான் தமிழ்நாட்டில் இல்லை என்பதும் நினைவு வந்தது.மராட்டியத்தில் முழுக்க முழுக்க மராட்டிய மொழியில் தான் இருக்கும்.பக்கத்து வீட்டு நண்பரிடம் கெட்டு தெரிந்து கஒண்டேன்.பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கூட அப்படித்தான்.கடைகள்,பேருந்துகள்,எல்லாமே அவர்கள் மொழியில்தான் உள்ளது.ஏன் என்று கேட்டால் மும்மொழிக்கொள்கை என்கிறார்கள். நம் மாநிலத்தில் இருமொழிக்கொள்கை.ஆங்கிலமும், தமிழும் இருந்தால் பொதும்.இதன்மூலம் இந்தி வருவதைத்தடை செய்யமுடியும் என்று கருதினொம்.இசக்கிமுத்துவும்,முனியாண்டியும்சகதியை மிதிக்க இருக்கவே இருக்கும்போது திராவிட தலைவர்களின் குஞ்சுகள் ஆங்கிலவழியில் பயின்றார்கள்.இரண்டாவது மொழியாக இந்தியை பயின்றார்கள்.


நாடாளுமன்றத்தில் பேசும்போது,மறைந்த ரங்கரஜன் குமாரமங்கலம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆங்கிலம்,இந்தி,தமிழ் மூன்றயும் பயன்படுத்தினார்.1965ம் ஆண்டு போரட்டத்தின் போது அவர் தந்தை மோகனின் பங்கு முக்கியமானதகும்.தி.மு.க,அதிமுக,மதிமுக தலைவர்களின் வரிசுகள் இந்தி படிக்க வாய்ப்பு உள்ளது. இசக்கிமுத்துவுக்கும்,முனியாண்டிக்கும் முடியாது."ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்" என்று நூல் எழுதியவர் மறைந்த முரசுஒலி மாறன் அவர்கள். தயாநிதி மாறன் அவரிடத்திர்க்கு முன் மொழியப்பட்டபோது கட்சிக்குள் முணுமுணுப்பு வந்தது.தயாநிதிக்கு சரளமாக இந்தி பேசத்தெரியும் என்று கூறி சமாளித்தார்கள். முற்போக்கு என்ன 6/16.பைபாஸ் சாலையில் தான் இருக்கிறதா என்று ஏகடியம் பேசியவர்கள்,செம்மொழிமாநாடு நடத்துவது மகிழ்ச்சிதான்.அந்த முற்பொக்குகள்தான்" தமிழை செம்மொழியாக்கு" என்று டில்லி பட்டண வீதியில் ஊர்வலம் வந்தவர்கள் என்பதை நினைந்து மகிழ்ச்சியடைகிறேன்.