Tuesday, March 29, 2011

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரும் அவசரநிலைக்காலமும்....

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரும் அவசர நிலைக்காலமும்.....

1972ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்தது. அதில் நாடகம் பொடுவதற்காக பீப்பீள்ஸ் தியேட்டர் என்ற நாடகக்குழு உருவானது. தோழர் நாராயண்சிங், தலைவராகவும் காலம் செனற தோழர் உபெந்திரநாத் ஜோஷி செயலாளராகவும் செயல் பட்டனர்.மூத்த எழுத்தாளர் வையைச்செழியன் "நெஞ்சில் ஒரு கனல்" என்ற நடகத்தை எழுதிக் கொடுத்தார்.அதனை இயக்கி நாடகமாக்கும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.
மாநாட்டில் நாடகம்போடப்பட்டது.இந்த நாடகத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் நன்மாறன் நடித்தார். காலம் சென்ற மதுரை டாக்டர் த.ச.ராசாமணியும் நடித்தார்.தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த நாடகம் கொண்டுசெல்லப்பட்டது.
நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலையில் 1976ம் ஆண்டு ஜனவர் மாதம் ஆண்டு விழாவில் இந்த நடகத்தை போட முடிவாகியது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.கோவிந்தராஜன் சங்கத்தின் தலைவராக இருந்தார். விழாவிற்கு பி.ஆர், வி.பி.சிந்தன் ஆகியொர் வருகிறார்கள். எங்களுக்கு தலைகால் புரியவில்ல.அவர்கள் முன்னால் நாடகம் பொடும் வாய்ப்பு சாதாரணமானதா என்ன?
ஜனவர் 30ம் தெதி நாடகம் .நாங்கள் நெல்லிகுப்பம் சென்று அரங்க எற்பாடுகளைச்செய்தோம். மதியம் சி,ஜி, அவர்களையும், வி.பீ.சி அவர்களையும் பார்த்து கண்டிபபாக நடகம் முழுவதையும் பார்த்து விமர்சிக்க வேண்டும் என்று கெட்டுக்கொண்டென்.நெல்லிக்குப்பம் ஆலை " பாரி"கம்பெனிக்குஸ் சொந்தமானது. அது பிடிட்டிஷ் காம்பெனியாக இருந்த ஒன்று. தோழிற்சங்க ஆண்டுவிழாவிற்கு கம்பெனியின் தலைவர், இயக்குனர்கள் வருவது அவர்கள் மரபு.மாலை 6மணியிலிருந்து 9மணிவரை விழா. அதன் பிறகு நாடகம் என்று ஏற்பாடாகியிருந்தது.
விழா மெடையில் பி.ஆர்., வி.பி.சி,சிஜீ ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்து கம்பெனியின் தலைவர்,இயக்குனர்கள் அமர்ந்து இருந்தனர்.நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 8 மனி சுமாருக்கு ஒரு தோழர் பி.ஆர் அவர்களிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார். அவர் விபிசி யிடம் அதைகாட்டினார். சி.கொவிந்தராஜன் மைக் முன் வந்து" பி.ஆர்.அவர்கள் அவசரமாக டெல்லி செல்ல இருப்பதால் அவர் இப்போது பெசுவார்" என்று அறிவித்தார்.
பின்னால் மேக்கப் செய்து கொண்டிருந்தவர்களிடையே சலசலப்பு .'நான் உங்களொடு பெசிக்கொண்டு இருக்கிறேன்.எவ்வளவு நேரம் பேச முடியும் என்பது எனக்குத்தெரியாது" என்ரு உணர்ச்சிகள் கொந்தளிக்க பி.ஆர் பேச ஆரம்பித்தார். வி.பி.சி மேக்கப் இடத்திற்கு வந்தார். தோழர்1 அவசரமாக செய்தி வந்திருக்கிறது.காலையில் லேபர் மினிஸடரை சென்னையில் சந்திக்க வேண்டும்.என்றார். எங்களுக்கு ஏமாற்றம். விஷயம் கசிந்து விட்டது. திமுக அரசு டிஸ்மிஸ். தமிழகத்தில் அவசர நிலை பிரகடனம் எங்கள் குழுவினரின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.நாடகம் அரசுக்கு எதிரானது. என்ன செய்ய? உயிரே பொனாலும் நாடகம்போடவேண்டும் என்பது பெரு பாலானவர்கள் அபிப்பிராயம்.
9மணிகு நாடகம் ஆரம்பமானது. முதல் காட்சியிலேயே எனக்கு பங்கு இருந்த்தது. எதிரே பி.ஆர், விபிசி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது.ஒரே இருட்டு. "செட்டப்பு தான். வந்துரும் கவலைபடாதே" என்று நாராயணசிங் எங்காதருகில் சொன்னார். மின்சாரம் வந்து விளக்குகள் பொடப்பட்டன. எதிரே அமர்ந்திருந்த பி.ஆர்.வி பிசி, கொவிந்தராஜன் அமர்ந்திருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன. பட்சிகள் பறந்துவிட்டன.
நடகம் தொடர்ந்தது. காலம் சென்ற தோழர் மாணிக்கம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தார். சொசலிச சாமுண்டிஎன்றும், 21 அம்ச திட்டம் என்றும் சொந்த வசனத்தை அள்ளி வீசினார். இரவு ஒரு டாக்டரின் மருத்துவ மனையில் நாங்கள் தங்கினோம். மறுநாள் மாலை மதுரை ரயில் நிலயதில் இறங்கும் போது மூத்த எழுத்தாளர் வையைச்செழியன் கவலையோடு காத்திருந்தார்.மதுரை தோழர்கள் நாங்கள் கைது செய்யப்பட்டிருப்போம் என்று கவலை பட்டுக் கோண்டிருந்திருக்கிறார்கள்.
"சாமா! ஒண்ணும் ஆகலியே!" என் கைகளை பற்றிகொண்டு அந்த முதிய எழுத்தாளர் வையைச்செழியன் கேட்டார். அவர் கண்கள் கலங்கியிருந்த்தன..

Saturday, March 26, 2011

சிறு கதை என்றால் என்ன?....

சிறு கதை என்றால் என்ன?......

வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை "பொறி"தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம்? பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏச்.ஜி. வெல்ஸ்.
அதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று அது பல்வேறு வடிவங்களில், பல்வேறு உள்ளடக்கத்தோடு நமக்குக் கிடைகிறது.ஆங்கில சிறு கதைகளின் தந்தை என்று போற்றப்படும் எட்கர் ஆலன் போ இது பற்றி அதிகம்கூறியிருக்கிறார்.அவரது கருத்தை ஒட்டி சாமர் செட் மாம் கூறும்போது" ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச்சோல்லும் கற்பனை" என்கிறார்." அது துடிப்போடு, மின்னலைப் போல மனதோடு இணைய வேண்டும் "என்கிறார். "ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சீராக கோடுபோட்டது போல் செல்லவேண்டும்" என்றும் குறிபிடுகிறார்.
சிறுகதை பாத்திரத்தைச்சுற்றி வராது.மாறாக கதையின் நோக்கத்தைச்சுற்றிவரும்.இது கவிதையைப் போன்று உணர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.. உபதேசம் செய்யக்கூடாது.
இலக்கியப் பண்டிதர்கள் சிறுகதையை இலக்கியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கத் தயங்கவே செய்கிறார்கள்.நூற்றுக்கணக்கான உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,நல்லதும் பொல்லாததுமாக லட்சக்கணக்கில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.இவற்றை பார்த்து ஆரய்ந்து சொல்லமுடியாத சிரமமும் இதில் அடங்கியுள்ளது.ஆக்ஸ்வர்டு ஆங்கில வரலாற்று நூல் இது பற்றி, இந்த வடிவம் பற்றி குறிப்பிடவே இல்லை.மற்ற மொழிகளிலும் இது தான் நிலை..
மனிதம் பற்றி ஆழமான சித்தரிப்பு இருந்தால் மட்டுமேஅங்கீகாரம் கிடைக்கும் என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள்.எழுத்தாளன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தான் இத்தகைய ஆக்கபூர்வமான,வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்புகளை உருவாக்க முடியும உணர்வுகளை துல்லியமாக,சரியாக,.மெச்சத்தகுந்தவகையில்வெளிபடுத்தும் திறமை கொண்டவனே ஆக்கபூர்வமான எழுத்தாளன்.சிதறிய கண்ணாடித்துண்டுகளில் தெரியும் பிம்பங்களாக அவை இருக்கக் கூடாது.
சிறுகதை எழுத்தாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்கள் இலக்கியம் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் எழுதுகிறார்கள். மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க எழுது கிறார்கள்.உணர்வுகளின்அழுத்தத்திலிருந்துவிடுபடஎழுதுகிறார்கள்.தேசீயம்,சீர்திருத்தம்,கலாசாரம்,பண்பாடு,தத்துவம்,உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்று அவர்களுக்குத் தெரிந்ததை தெளிவாகவு ம், தெளிவின்றியும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு போதமூட்டி கற்று கொடுப்பது சிரமமான காரியமல்ல.
மேலை நாட்டு இலக்கியங்களை, குறிப்பாக,பிரஞ்சு,ரஷ்ய, ஆங்கில இலக்கியங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகளில் நவீன சிறுகதைவடிவம் உருவாயிற்று.
* 1854 ம் ஆண்டு மராத்திய மொழியில் தான் முதன் முதலாக நவீன சிறுகதை வெளிவந்ததாக இலக்கிய வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.விஷ்ணு கண் ஸ்யாம் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் எழுதிய இந்தஸ் சிறுகதையின் தலைப்பு தெரியவில்லை.
*1872ம் ஆண்டு வங்க மொழியில் பூர்ண சந்திர சட்டர்ஜி என்பவர் "மதுமதி" என்கிற சிறுகதையை எழுதியுள்ளார்.
*1891ம் ஆண்டு குஞ்ஞு ராமன் நாயனார் என்ற மலையாள எழுத்தாளர் "பழக்க தோஷங்கள்" என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
*1900ம் ஆண்டு "என் அத்தை" என்ற சிறுகதையை பன்சே மங்கேஷ்ராவ் என்பவர் கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
(ஆதாரம்:Compaaritive Indian Literature vol 111, Kerala Sahithya Academy)
1854ம் ஆண்டுக்கு முன் நம் நாட்டில்சிறுகதைகள் என்ற வடிவம் இருந்த்ததில்லயா?
இருந்தது என்பதுதான் உண்மை.கதை சொல்வது என்பது மிகவும் பழமையான கலையாகும்.உலகத்திலேயே மிக அதிகமான கதைகளை கைவசம் இந்தியாதான் வைத்திருக்கிறது.பாரதி,தாகூர் போன்றவர்கள் அவற்றை நவீனப்படுத்த முயற்சித்தார்கள்..

Thursday, March 24, 2011

பொட்டப் பிள்ளை.....

சிறு கதை "பொட்டப் பிள்ளை"
இந்தி மூலம்: ராம் தரஸ் மிஸ்ரா
தமிழில் :முத்துமீனாட்சி
அவள் ஒருமுறை பார்த்தாள்.பின்னர் தலையைக் குனிந்து கோண்டு படிக்க ஆரம்பித்தாள. அவளுடைய அண்ணன் முக்கி முனகிக் கொண்டு பாலைக் குடிக்க ஆரம்பித்தான்.
"சாவித்திரி! நீ பால் குடிச்சுட்டியா?" நான் கேட்டேன்.
அவள் என்னை நிமீர்ந்து பார்த்தாள்.பிறகு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
குளிர்காலக் காலை நேரம் வீட்டின் எதிரே கொஞ்சம் வெய்யில் வந்திருந்தது.நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.என் எதிரே என் அண்ணனின் பேரக் குழந்தைகள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..நான் என் அண்ணனின் மகனைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். பேரன் ஸ்வெட்டரும் காலில் பூட்ஸும் அணிந்திருந்தான்.பேத்தியின் காலில் எதுவுமில்லை. சீட்டி துணியில் ஃப்ராக் அணிந்திருந்தள்.
" ஏண்டா என்னைக் குத்தர! படிக்கவிடு"சிறுமி கத்தினாள். நான் திரும்பிப் பார்த்தேன். பேரன் அவளைக் குத்திகோண்டே அவள் பெனாவைப் பிடுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
" நீயும் படிக்க மாட்டெங்கற.என்னையும் படிக்கவிடாம நாள் பூர சேட்டைபண்ணிட்டே திரியுற" பேத்தி பேரனை லேசாகத்தள்ளிணாள்.அவன் புரண்டு விழுந்துவிட்டான்.அவன் எழுந்து அவள் தலைமுடியைப் பற்றி இழுத்தான். சிறுமி அலறினாள்.
எனக்கு கொபம் வந்தது.எழுந்து போய் அந்தப்பயலை நாலு போடுபோடலாமா என்று வந்தது.விருந்தாட வந்தவன் நான். அடக்கிக் கொண்டேன்.இரண்டு நாள் தங்கிவிட்டு போகிரவன்.இதில் நான் தலையிட்டால் குழந்தைகளை பெற்றவர்கள் என்ன நீனைப்பார்களோ!"விடு,விடு.ஏன் அடிக்கற" என்ற அதட்டலோடு நிறுத்திக் கோண்டுவிட்டேன்.அவன் என் பேச்சைக் காதுகொடுத்துக் கேளாதவன் போல் அவன் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
குழந்தைகளின் தாயார் எட்டிப்பார்த்தாள்.பிறகு உள்ளே சென்றுவிட்டாள்.
இவள் என்ன தாய்.இவளுக்கு இதைப்பற்றி கவலையே இல்லை.. இதுகளின் சண்டையை நாமதான் நிறுத்தவேண்டும் போல் இருக்கிறது வலி தாங்க முடியாத அந்தச் சிறுமி அவன் கையில் லேசாக கடித்து விட்டாள்.
"ஐயோ! என்னக் கொல்றாளே!" என்று அந்தப் பையன் அலறினான்.திரும்பிப் போன தாய் வந்து அந்தப்பையனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள்." இவ கடிச்சுட்டாமா! ஆ..அப்பா" என்று பையன் அலறத்தொடங்கினான்.பெண்ணின் முதுகில் நாலு அறை கொடுத்து "சனியனே! அவனை ஏண்டி கடிச்ச! நாயே.."என்று பொரிந்தால் தாய்.
அந்தப்பெண் அழுகையை அடக்க முடியாமல் விம்மிக் கொண்டே" நான் எழுதும் போது பேனாவைப் புடுங்கினான் .என்னைக் குத்தினான்.என் தலை முடியை இழுத்தான்.அவன் கையிலிருந்து முடியை விடுவிக்க லேசா கடிச்சேன்" என்றாள்.
"இல்லமா! என்னை அழுத்திக் கடிச்சுட்டா"
"சனியனே பேனாவைப் புடுங்கினா கொடுத்திட வேண்டியது தானே! படிச்சு கவர்னரா வரப்போறியோ!" என்ரு கூறிய தாய் அவளிடமிருந்து பேனாவை பிடுங்கி அவனிடம் கொடுத்து" எழுதுடா கண்ண்ணா" என்று கொஞ்சினாள்.
"வவ்வவ்வே!எழுதுடா கண்ணா!எழுதவும் தெரியாது!ஒண்ணும் தெரியாது.தினம் கிளாசுல அடிவங்கறான்" என்று அந்தப் பெண் சிணுங்கியது.
"வாயை மூடு!போய் வேலையை பாரு!விடிந்து எந்திரிச்சதும் புஸ்தகத்தை எடுத்து வச்சு ஒக்காந்துட்டா!பொறவாசல்ல சாம்பல் இருக்கு.அத வயக்காட்டுல போட்டுட்டு வா"
அந்தப்பெண் எழுந்து சென்றாள்..சிறிது நேரத்தில் சாம்பல் கூடையுடன் வெளியேறினாள்.அந்தப் பெரிய மனுஷன்பேனாவைத்தூக்கி எறிந்துவிட்டு விளையாட ஒடிவிட்டான்.
.மதிய வேளை.அந்தச்சிறுமி தாயின் ஏவலுக்கேற்ப அங்கும் இங்கும் ஓடி வேலைபார்த்துக் கொண்டிருந்தாள்.
என் அண்ணன் மகனுடன் சாப்பிட உட்கார்ந்தேன்.அந்தச் சிறுமி மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
"சாவித்திரி! நீ இன்னும் சாப்பிடல!முகம் தொங்கிப் போயிடுச்சே!வா!சாப்பிட! எம்பக்கத்துல உக்காரு"என்றேன் நான்.
"இல்லல்ல!நீங்க சாப்பிடுங்க! அவ அப்புறமா சாப்பிடுவா"
அண்ணன் மகனைப் பார்த்தேன்.அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அப்பொழுதுதான் அந்தப் பய புழுதிபடிந்த காலோடு ஒடிவந்தான்.
"அம்மா! ரொம்பப்பசி!சப்பாடு போடு!" என்று அலறியபடி வந்தான்.
"வாடா!கண்ணா! வா! கைய கழிவிட்டு வா! நான் தட்டுல வக்கிறேன்."
எதிரிலிருந்த கிண்ணத்த உதைத்தான். "முடியாது.எனக்கு பசிக்குது.முதல்ல சாப்பாடு பொடு!பொடூ" என்று கத்தினான்."சரிப்பா! எதுக்கு கத்தற" என்று கூறிய அம்ம தட்டை வைத்தாள். நான் அண்ணன் மகன்முகத்தைப் பார்த்தேன் மாற்றமில்லை.சாப்பிடுக் கொண்டிருந்தான். அந்தச் சிறுமி அமைதியாக உடம்பைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
எனக்கு இது அதிசயமாக இருந்தது.சாப்படு முடிந்தது.வராந்தாவில் வந்து உட்கார்ந்தேன்.பையன் அங்கேயே விளையாடிகொண்டு இருந்தான்.
"ஐயோ! அம்மா! வயத்தை வலிக்குது..." என்று திடீரெண்று கத்த ஆரம்பித்தான்.
"கன்னா பின்னவென்று தின்றிருப்பான்" என்றேன் நான்.
"அப்படி ஒண்ணுமில்லை.நம்ம சாப்பிட்டதை தான அவனும்சாப்பிட்டான்" என்றான் அவனுடைய அப்பாவாகிய என் அண்ணன் மகன்
"நிறைய சாப்பிட்டானோ
" நிறையவா! அவன் எங்க சாப்பிடறான்.கொறிக்கத்தான் செயறான்.
" நேத்திலேருந்து பாக்கறென்.கொறிகர மாதிரி தான் சாப்பிடறான். "என்றேன் ஒப்புக்கு.விருந்துக்கு வந்தவன் நான். வம்பு எதற்கு.
" ஐயோ! வலிதாங்கலியே" என்று சிறுவன் கத்தினான்.
"சாவித்திரி"
"ஏன்ன பாபுஜி"என்று ஒடி வந்தாள் சாவித்திரி.அவள் கையில் பருப்பும் சோறும் இருந்த கிண்ணம் இருந்தது.சாப்பிட ஆரம்பித்திருக்கிறாள்.பாதியில் ஓடி வந்திருக்கிறாள்.
'சாப்பாடெல்லாம் அப்புறம்.முதல்ல ஒடிபொய் டாக்டர கூட்டி வா! நான் போய் சோடா வாங்கிட்டு வரேன்" என்ரு கூறிவிட்டு" ஏய்! வென்னிபோட்டுவை.இந்த்ப்பயலுக்கு வயத்த வலிக்குது" என்றான் மனைவியைப் பார்த்து.
சிறுமி கையிலிருந்த கிண்ணத்தைப்பார்த்தேன்.பருப்பும் ஆறி விறைத்துப்போன சோறுமிருந்த்தது.எனக்கு நல்ல சோரும் காய்கறி எல்லாம் இருந்ததே இவளுக்கு..அண்ணன் மகன் கடையிலிருந்து திரும்பி விட்டான், அவன் முகத்தில் எரிச்சல் தெரிந்தது."ராஸ்கல்! ஒண்ணும் கிடையாது.கடையை மட்டும் திறந்து வச்சிருப்பானெதுகேட்டாலுக் இருக்காது..சாவித்திரி வந்துவிட்டாள். " பாபுஜி! டாக்டர் எங்கேயோ போயிருக் காராம்"
குடிகேடி! எங்க போனாலும் காரியமாகாது!"என்றாள் அம்மா பையன் கத்திகொண்டு இருந்தான்.
இரு!இரு! எங்கிட்ட மாத்திரை இருக்கான்னு பார்க்கிறேன்" மாத்திரை இருந்தது கொடுத்தேன்.பையன் கொஞ்சம் ஆசுவாசமாகி விட்டான்.தூங்கி விட்டான்.தாய் அவனை தூக்கி கொண்டு
உள்ளே போனாள்.
" சாவித்திரி! ரெண்டு மூணூ பாத்திரமிருக்கு தேச்சுவை"
சாவிதிரியை மடியில் வைத்துகொண்டேன்.இந்தச்சிறுமிக்காக என் நெஞ்சு ஈரமாகியது.அவளை அணைத்து கொஞ்சினேன்."சாப்படு இருக்குடா கண்ணு! போய் சாப்பிடு" மடியிலிருந்து இறங்கினாள்.மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.அவள் முகத்தில் மெல்லிய சொகம் இருந்தது.
" சாவித்திரி! அம்மா" மென்மையாக அழைத்தேன்.
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
"உனக்கு கஷ்டமாயில்லயா?"
"என்ன தாத்தா?
"இதெல்லாம்?"
. இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
"ஏன்?"
"நான் போட்டைப்பிள்ளையல்லவா"
எதுவுமே நடக்காத மாதிரி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்

Saturday, March 19, 2011

வலைத்தளத்திற்கு வருகிறது பூட்டு.....

"வலைத்தளத்திற்கு வருகிறது பூட்டு"
2008ம் ஆண்டு வலைதளம் பற்றிய தொழில் நுட்ப சட்டாம் வந்தது. அதில் புதிதாக மத்திய அரசு ஒரு விதியினைச்சேர்த்திருக்கிறார்கள்.மத்திய அரசோ அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியோ நடு முழுவதும் வலைத்தலங்களை செயல் படாமல் செய்யும் அதிகாரம் கொண்டது அந்தப் புதிய விதி.
நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் எழுத்துக்கள்,தகவல்கள் என்ருகருதப்படும் வலைத்தளங்களை தடுக்களாம். மீறிச்செயல்படுபவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை அளிகலாம் என்பதும் உள்ளது
இன்று இந்தியவில் 7கோடி வலைத்தளங்கள் உள்ளன. இது ஆண்டுக்கு 11/2கோடி வீதம் அதிகரித்து வருகிறது. பொய்யான தகவல்கள், மற்றும் வதந்திகலளை பரப்புவதைத்தடுக்கவே கொண்டுவருவதாக கூறுகிறார்கள். எந்த் ஒரு சட்டத்தையும் கொண்டுவரும் பொது அப்படித்தான் சொல்வார்கள். நடைமுறைப் பதுத்தும்போது அது ஜனநாயகத்தையும் கருத்துச்சுதந்திரதையும் நசுக்கவே பயன்படுத்துவார்கள் என்பது நம் அனுபவம். ..
இந்த விதிக்கு ஆதரவாகவும் எதிர்த்தும்குரல்கள் எழுந்துள்ளன.பல நாடுகள் அமெரிக்க உட்பட இத்னைக் கொண்டுவருவது பற்றி அலோசித்து வருகின்றன.சமீப காலங்களில் எகுப்து, டூனிசியா ஆகிய நாடுகளில் டுவிட்டர், ஃபேஸ் புக் ஆகியவை வெகுவாக பயன் படுத்தப் பட்டதகவும் அதன் மூலம் மக்கள் எழுச்சியுற்றதாகவும் நம்பப்படுகிறது.அந்த நாடுகளில் வலைதளங்களை செயல் படாமல் ஆட்சியாளர்கள் செய்தார்கள்.
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.அதனால் தடுக்க முடியாது என்று கணிணீ நிபுணர்கள் கருதுகிறார்கள். தவிர நீதிமன்றம் இத்னை ஏற்காது என்றும் கூறுகிறார்கள்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது!
நாம் என்ன செய்யப்போகிறோம்?
(ஆதாரம் "தீக்கதிர்"17-3-11)

புள்ளியும் விபரமும்....

சிறு கதை


புள்ளியும் விபரமும் (காஸ்யபன்)

ஸ்டேட் பாங்கைத்தாண்டியவுடன் என்னையறியாமல் நின்றுவிட்டேன்.என் மண்டையில் ஏதோ குறுகுறுப்பு....ஞாபகத்தில் மெல்லிய வார்த்தைகள்....."சாகவேண்டும்....சாகத்தான் வேண்டும்". இந்த வார்த்தைகள் யார் கூறியது? எப்போது கேட்டது?யார்....யார்....ம்...மவுண்ட்றொடு கூட்டநெரிசலில் அவ்ர் என்னக் கடக்கும் போது காதில் விழுந்த வார்த்தைகள்....கோட்டும் சூட்டும் அணிந்த அவர் யார்? யார் அவர்? நான் திரும்பிப் பார்த்தேன்.

கலைந்த தலை-கோட்டு சூட்டு அணிந்த அந்த மனிதர் அந்தபெரியகட்டிடத்தினுள் நுழைந்தார். மாலை எழு மணிக்குள் ஆசிரியரைப்பார்த்து அன்றய செய்திகளை எழுதிக் கொடுக்க வேண்டும்.இருந்தும் நிருபருக்குள்ள புத்தி என்னை விடவில்லை.வெகமாக நடந்து அந்த மனிதரைப் பிடிக்க முனைந்தேன்.அவர் கட்டிடத்தினுள் அமைந்திருந்த லிப்டின் வரிசைக்காக காத்திருந்தார்.நான் அவருக்குச்சற்று தள்ளி நின்று கொண்டேன்.

லிப்டில் நுழைந்ததும் பதினோன்று என்றார். நான் உடனே சமாளித்துக் கொண்டு பத்து என்றேன். பத்தாவது மாடியில் இறங்கி மெதுவக பதினோன்றாம் மாடிக்கு ஏறினேன்.அதற்குள் அவர் மறைந்து விட்டார். சிறிது நேரம்நிதானித்தேன்.மேல் மொட்டை மாடிக்கு போகும் ஆள் அரவம் கேட்டது..நானும் மெதுவாகச் சென்று மொட்டைமாடியை அடந்தபோது அந்த மனிதர் கைப்பிடிச்சுவர் மீது ஏறிவிட்டார்.நான் பாய்ந்து அவர் கைகளைப் பற்றி இழுத்தேன்.

"சாகவேண்டும்..சாகத்தான் வேண்டும்" அவ்ர் வாய் முணுமுணுத்தது.மூக்குக் கண்ணாடியின் வழியாகத் தெரிந்த அவர் கண்கள் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் தெரிவித்தன..

"இல்லை! நீங்கல் வாழவேண்டும்..வாழத்தான் வேண்டும்" என்றேன் அவரை அணைத்தவாறே.

" நீங்கள் யார்? எதற்காக என் சொந்தவிஷயத்தில் தலயிடுகிறீர்கள்"என்றார் அவர். அவ்ர்கண்களங்குமிங்கும் அலைபாய்ந்தன.நான் பிடியத்தளர்தியவாறே "சகமனிதன் என்ற ஒரேகாரனத்திர்காகவே நன் உங்களைக் காப்பாற்ற வேண்டும்"என்றேன்.

"எனக்கு எதுவுமே இல்லை.நான் சாகத்தான் வேண்டும்"

" அப்படி என்னதான் வந்துவிட்டது உங்களுக்கு?"

" உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை"என் கையை உதறினார். ஒரே பாய்ச்சலில் கைப்பிடிச்சுவர் எறி...நான் அவருடைய கோட்டைப் பற்றி கொண்டேன்.கிழே மவுண்ட் ரோட்டில் ஜனங்களின் கவனத்தை நாங்கள் கவர ஆரம்பித்தோம் ஒரே ஆரவாரம்.கூட்டம் கூடிவிட்டது.போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது.நான் பலமாக அவரை இழுத்து கீழே தள்ளினேன். "நீங்கள் யார்?" என்றுஅவரைஅதட்டினேன்.

" நான் யார் என்று கூறுகிறேன்.அப்படியானால் என்னை சக அனுமதிப்பாயா?" என்றார்.

"சரி " என்றென்.எனக்கு அவகசம் தேவை.இந்த மனிதரைப் பேச வைக்க வேண்டும்.அதன்மூலமவர் மனப்போக்கை மாற்ற வேண்டும்

"நீங்கள் யார்?"

" நான் புள்ளீத்திட்ட பொருளாதாரக்கமிஷனின் தலைவர்......நான் சாகலாமா?"

"இருங்கள். இன்னும் சில கேள்விகள் இருக்கின்றான?"

"முடியாது"

"அப்படியென்றால் உங்களை விடமாட்டேன்"

விருட்டென்று பாய்ந்து முண்டி சுவரை அடந்துவிட்டார்.கீழே ஜனங்களின் கூட்டம் பெரும் திரளாகிவிட்டது.இந்த மனிதரின் தலையைக் கண்டதும் ஒரே கூச்சல்.நான் அவருடைய கோட்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே கேட்டேன்"நீங்கள் ஏன் சாகவேண்டும்?"

"நான் சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது"

"இல்லை! நீங்கல் சொன்னதெள்ளாம் பொயாகிவிடவில்லை"

"அதெப்படி உனக்குத் தெரியும்?"இ

"நீங்கள் சொன்னது என்ன வென்று தெரியதபோது அது பொய் என்று எப்பட்த்தெரியும்?'

" நான் இந்தவருடம் இரண்டு சதம்வேலையில்லாமை அதிகரிக்கும் என்றேன்"

"ஆமாம்"

"அது இப்போது நூருசதமாகிவிட்டது"

"அதனால் என்ன?'

"அதனால் என்னவா! நூலட்சம் ட்ன் விளையும் என்றேன்.நூற்றைம்பது லட்சம் டன் விளைந்துவிட்டது. "

"அவ்வளவுதானே"

"அது மட்டுமல்ல'

:"பின்?"

" நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இரண்டுகிளோ அரிசி கிடக்குமென்றேன்."

"சரி"

"இப்போது அரிசி வாங்க வழியில்லாமல் இருக்கிறார்கள்"

அவரை சடக்கென்று நான் இழுத்துக் கொண்டுவிட்டேன்.மாடி ஒரத்தில் போலீஸ் வந்துவிட்டது.அவர்களைக் கைகாட்டி நிற்கச்செய்தேன்.இந்த மனிதர் திமிறினார். நான் பிடியை விடவில்லை. கிழே உள்ள ஜனங்களுக்கு மெலே குதிக்க முயற்சித்தது யார் என்று தெரிந்துவிட்டது.ஆயிரக்கணக்கில் ஜனங்கள் கூச்சல் போட்டார்கள். "தடுக்காதே! அவர் குதிக்கட்டும்"என்ற அவர்கள் கூச்சல் எங்களுக்குக் கேட்டது.

" பார்த்தீர்களா! ஜனங்கள் என்னை வேறுக்கிறார்கள்.நான் சாகத்தான் வேண்டும்"

"எதர்காக நீர் சாக்வேண்டும். உம் குடும்பத்தை நினைத்துப்பாரும்.உம் குழந்தைகள்..மனைவி..."என்வாயை அவர் பொத்தினார்.

"மனைவியின் பெயரை இழுக்காதே.இனி அவள் முகத்தில் முழிக்க முடியாது"

"ஏன் ஏதாவதுதவறான வழியில்.."

"சீ! அதெல்லாம்"

"பின்"

"பொனவாரம் கடலை எண்ணை ஐந்து தொண்ணுராக இருந்தது."

"சரி"

"அப்போது எண்ணை விலைகுறையுமென்றேன்.எப்படிஎன்ரு கேட்டாள்.அந்நிய செலாவணி நிறைய இருக்கிறது.நாம் இறக்குமதி செயாப்போகிறோம் என்றேன்"

"அதுதான் உண்மையாகிவிட்டதே"

"எது"

" இறக்குமதிதான்"

"இறக்குமதியானது உண்மைதான்.ஆனால் கடலை எண்ணை பத்துரூ எழுபது பைசாவாகிவிட்டது.இன் ந் ஆன் என் மனைவியின் முகத்தில் முழிக்க முடியாது." திமிறிகொண்டு ஒடினார்.

அவர்டைய கையைபிடித்து இழுத்துக்கொண்டே கிழே எட்டிப்பார்தேன்.பயங்கரமான ஜனத்திரள்.அவர்கள் எல்லாரும் தங்கள் கண் எதிரே ஒரு மனிதன் கீழே விழுந்து சாகப் போவதைப்பார்க்க தயாராக இருக்கும் ஆவலோடு காத்திருந்து கூச்சல் போடுகிறார்கள்.

"நீங்கள் சாகத்தான் வேண்டுமா?"

"ஆமாம்"

"நீங்கள் இங்கே சாகத்துடிக்கிறிர்கள்.அங்கே உங்கள் ஆபீசில் என்ன நடக்கிறது தெரியுமா?"

"ஒன்றும் நடக்காது.எங்கள் கமிஷனையே கலைத்துவிடும்படி குறிப்பு எழுதிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்"

"ஆனால் உங்கள் உதவிதலைவர் கமிஷன் கூட்டத்தையே கூட்டிவிட்டார்"

"என்ன" திகைத்தார்.

"உன் களுக்கு புத்திசவாதீனம் இல்லயென்றும் உங்கல் இடத்தில் அவரத்தலைவராகா ஆகியும் தீர்மானம் போட்டு விட்டார்கள்."

"பாவி! அவன் அப்படிச்செய்வானேன்று எனக்குதெரியும்.அவனை என்ன செய்கிறென் என்று பார்" என்று கூறிகொண்டே படிகட்டை நோக்கி ஓடினார்.

போலீஸார் கூட்ட நெரிசலை விலக்க அவர்காரெறிசென்றபோது அங்கு கூடியிருந்த ஜனங்களைப் பார்த்தென்.அவர்கள் முகத்தில் தான் எத்தனை எமாற்றம்

(1977ம் ஆண்டு செந்தில் நாதனின் "சிகரம்" பத்திரிகையில் வந்தது.)

Tuesday, March 15, 2011

சமஸ்கிருத மொழி பற்றி ஒரு விளக்கம்......

சம்ஸ்கிருத மொழி பற்றி ஒரு விளக்கம்.....


சென்ற இடுகையில் "காளிதாசனும் தர்க்கவியலும்" என்று எழுதியிருந்தேன்.அருமை நண்பர் சிவகுமரன் அவர்கள் தன் தந்தை சமஸ்கிருதத்தை படிக்கச்சொன்னபொது அது பிராம்மணர்கள் மொழி அதனை நான் ஏன் படிக்கவேண்டும் என்ரு தர்க்கம் செய்து படிக்காமல் விட்டதாகவும் கூறியிருக்கிறார்.மெட்றாஸ் மாகாணத்தில் இடைக்கால அரசு வந்த போது அதில் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் சேட்டியார் அவர்கள் சில சீர்திருத்தங்களைக் கோண்டுவந்தார். ஆங்கிலத்தின் முக்கியத்துவம் மாறி தமிழிலேயே,விஞ்ஞானம்,வரலாறு,புவியியல்,சமூகவியல் என்று வந்தது.நிற்க

1975ம் ஆன்டு நாமக்கல்லில் நடந்த ஒரு கருத்தரங்கில்" சம்ஸ்கிருத மொழியின் தாக்கம்:

என்பது பற்றி நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.எனக்கு சமஸ்கிருதம் எழுதப்படிக்க மட்டுமே தெரியும். பதறிப் போன நான் அலுவலகத்தில் தினம் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு வரும் ஒர் மாமாவிடம் உதவிகேட்டுப்போனேன். அவர் கணபதிஎன்று மற்றொரு நண்பரைகாட்டி" கண்பதி சம்ஸ்கிருதத்தில் மககெட்டிக்காரன்.அவனை பிடி"என்றார்.கணபதி முதலில் மசியவில்லை.வெகு சிரமத்திற்குப் பிறகு உதவ சம்மதித்தார். சென்ற இடுகையில் நான் கூறியிருந்த வார்த்தையும் பொருளும்(வாகர்த்தாவிவ) துதிப்பாடல் பற்றி சொல்லித் தந்தவர் அவர்தான்.மெடையில் பேசுவதற்கு இது போதாது என்பதால் மேலும் சில தகவல்களைச் சொன்னார்.

இந்தியாவில் சனாதன தர்மத்தை அனுசரிப்பவர்கள் குறிப்பாக பிராமணர்கள் காலையில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை வாசிப்பார்கள்.இந்த ராமாயனத்தை எழுதியவன் வால்மீகி.இவன் அந்தணன் அல்ல. வைசியன் அல்ல.சூத்திரன் அல்ல.தாழ்த்தப்பட்டவன் அல்ல. அதற்கும்கீழே உள்ள அடுக்கான பழங்குடி மகன். மகாபாரதத்தை எழுதியவன் "வேத வியாசன்" வியசன் பிராமணன் அல்ல. ஏன்? அவர்கள் முதன் முதலில் பாடும் துதிப்பாடலை பாடிய காளிதாசன் நவீன யுகத்தின் கணக்குப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இதனை நண்பர் கணபதி தான் விளக்கிச் சொன்னார்.கணபதியின் பேயர் வீர கணபதி. சமஸ்கிருதத்தில் விற்பன்னரான அவர் பிராமணர் அல்ல.இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த "மாம்பழக் கவிராயரின்" வம்சம்.பரம்பரையாக கோவில்களுக்கு இறைவனின் சிலைகளைச்செய்யும் சிற்பிகுலம். ஆகம விதிகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சமஸ்கிருத ஏடுகளை வீட்டில் பாதுகாத்து வருபவர்கள். ஆகையால் அந்த மொழியில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.சமஸ்கிருதம் படிக்க சாதி கிடையாது. அது பாதியில் வந்தது.

எப்போது வந்தது? 1978 ஆண்டு வாக்கில்மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் ஒருகருத்தரங்கம் நடந்தது. த.மு.எ.சவின் தலைவர் ச.செந்தில்ந்திருந்தார். அங்கு நடந்த விவாதத்தி கிருத்துவம் பற்றி பெச்சு வந்தது. "கிருத்துவத்தை பரப்புவதில் போதகர்கள் சிரமப்பட்டார்கள். பாரம்பரியமான இந்து மதத்திலிருந்து உழைக்கும் மக்களை கோண்டுவருவது எளிதாக இருக்கவில்லை.இதற்குபெரும் தடையாக இருந்தது மேல் சாதியினர். குறிப்பாக பிராமணர்களும், வெள்ளாலர்களும். திருவாவடுதுறை, சம்மந்தர்,சிருங்கேரி மடாதிபதிகளின் பிடிப்பு இறுக்கமாக இருந்தது.ஆகவே பிரிட்டோ, கால்டுவெல் ஆகியோர் பல்லக்கில் வர ஆரம்பித்தார்கள்.காதி கடுக்கண், நெஞ்சில் நூல், காவிஉடை,தலைபாகை அணிந்து பவனி வந்தார்கள். போத்கரை "ஐயர்" என்று அழைக்கும் பழக்கத்தை உருவக்கினார்கள். எல்லாவற்றிர்க்கும் மேலாக ப்ராம்மணர்களின் மொழி சமஸ்கிருதம். அது ஆரிய மொழி. அது நமது மொழியல்ல என்ற கருத்தை விதைதார்கள். அப்போது ஆண்ட பிரிட்டிஷாருக்கு கிருத்துவ மதம்பரவுவது அரசியல் ரீதியாக

உவப்பானதாகவே இருந்தது

1979ம் ஆண்டு மதுரையில் த.மு.எ.ச இலக்கியப் பயிற்சி முகாம் நடத்தியது.சமணமும் தமிழும், வைணவமும்தமிழும், சைவமும் தமிழும், கிருத்துவமும் தமிழும் என்று தலைப்புகள். பெராசிரியர் சாலமன் பாப்பையா கிருத்துவமும் தமிழும் என்ற தலைபில் இரண்டுமணி நேரம் கருத்துரையாற்றினார்.அவரும் இதனை குறிப்பிட்டார்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தின் போது தமிழ் நாடு பிரிவினையை வலியுறுத்தியவர்கள்

இதனை தங்கள் ஆரிய திராவிட பிரச்சாரத்திற்கு பயன் படுத்திக் கொண்டார்கள் இது வரலாறு.

Sunday, March 13, 2011

காளி தாசனும் தர்க்கவியலும்.....

காளி தாசனும் தர்க்கவியலும்....


உலகம் புகழும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவர். அவருடைய உவமைகளை பண்டிதர்கள் இன்றும் ஆச்சரியத்தோடு அனுபவித்துப் பேசுவார்கள். காளிதாசனின் சாகுந்தலம், படித்திருக்கிரீற்கள?காளிதாசன் விக்ரமோர்வசியத்தில் இவ்வாறு கூறுகிறான்,காளிதாசனின் மெகதூதம் ஒரு போக்கிஷம் என்று சிலாகிப்பார்கள். அத்துணையும் உண்மை. ஒவ்வொரு வார்த்தையும் உளியால் செதுக்கிய சிலை போன்ற வெலைபாடுகளைக் கொண்டவை..ஆனாலும் காளிதசனுக்கு இவை போதவில்லை.

ராமாயணம் இப்பாடி சொல்கிறது,மகா பாரதம் இவ்விதம் விளக்குகிறது என்கிறார்கள். அங்கு வால்மீகியின் படைப்பையே குறிப் பிடுகிறார்கள்.வியாசனைஅல்ல, மகாபாரதத்தை சொல்கிறார்கள். அதே போல் தன்னை மீறி தன் படைப்பு நீற்கவில்லயே என்ற ஆதங்கம் அந்த கவிஞனுக்கு உண்டு.

இதற்கான காரணம் என்ன? தன் படைப்புகள் எந்த வகையில் குறையுள்ளதாக இருக்கிறது என்று கேட்டான். வால்மீகியும் வியாசனும், இதிகாசத்தைப் படைத்தார்கள்.அவர்கள் படைப்பு புராணமாகி மக்களால் தெய்வீக நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தான்.நானும் ஒரு இதிகாசத்தைப் படைப்பேன். என்படைப்பும் புராணமாகும். என்பெயரையும் வால்மீகியையும்,வியாசனையும் முந்தி நீற்கச்செய்வேன் என்று ஆரம்பித்தான். பிரும்மாண்டமாக "ரகு வம்சத்தை" ஆரம்பித்தான்.

புலவர்கள் காவியங்களைப் படைக்கு முன் கடவுள் வாழ்த்துப் பாடுவது முறையாகும். காளிதாசன் தன் தாயும் தந்தயுமாகப் பாவிக்கும் பார்வதியையும்(காளி) பரமேஸ்வரனையும் பாட ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் எவ்வளவு அன்பு பரஸ்பரம் வைத்திருந்தார்கள். அவர்கள் காதல் எவ்வளவு உன்னதமானது. அதனை எப்படி வர்ணிக்க.அவர்களின் அன்புக்கும் காதலுக்கும் உவமையாக எதைச்சொல்வது? என்று யோசித்தான். "வானும்நிலவும்" இல்லை ..வான் வேறு நிலவு வேறு. நிலவிலா வான் உண்டே...மலரும் மணமும்..இல்லை மலர் வாடிவிட்டால் மணம் இருக்காதே " என்று சிந்தித்துக் கொண்டே அத்துணையையும் நீராகரித்தான்.

நதிக்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் போது ஒரு கல்லை எடுத்து வீசினான். கல் என்பது ஒரு சொல். அதேசமயம் கல் என்பது ஒரு பொருள்.அந்தப் பொருள் இல்லை என்றால் அந்த சோல் வந்திருக்காது. அது மட்டுமல்ல அந்த சொல் தான் அந்தப் பொருளை மற்றவர்க்கு அடையாளப் படுத்துகிறது. சொல் இல்லையேல் பொருள் இல்லை பொருள் இல்லையேல் சொல் இல்லை ஒன்றை ஒன்றிடமிருந்து பிரிக்கமுடியாது. பிரிக்கமுடியாத சொல்லையும் பொருளையும் போன்றவர்கள் என் தாய் பார்வதியும் எந்தந்தை பரமேஸ்வரனும். "வாகர்த்தாவிவ சம்ஹிருத்தவ்" என்று காளிதாசன் பாட ஆரம்பித்தான். .

சனாதனிகள் தினம் ராமாயணம், மகாபாரதம் அகியவ்ற்றில்லிருந்து பாடல்களை படித்து தோழுவார்கள். ஆனால் அதற்கும் முன்பாக "வாகர்த்தாவிவ ஸ்ம்ஹிருத்தவ்" என்று கடவுள்வாழ்த்தைபாடிவிட்டுத்தான் ஆரம்பிப்பார்கள் காளிதாசன் முந்திவிட்டான்..

Tuesday, March 08, 2011

சில விளக்கங்களும் சில குறிப்புகளும்......

சில விளக்கங்களும் சில குறிப்புகளும்....


சென்ற இடுகையான இ.பி.கோ 375 பலவிதமான வினைகளை எற்படுத்தியுள்ளாது. பின்னுட்டம்,தொலைபேசி, மற்றும் மின்னஞ்சல் மூலம் நண்பர்கள் எதிர் வினை ஆற்றியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியைத்தெரிவித்துக்கோள்கிறேன்.

புராண மறுவாசிப்பு என்று வரு ம்போது இது சகஜமானதும் ஆகும். பல சமயங்களில் இவை சர்ச்சைகளையும், சில சமயங்களில்நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளன.என்னுடைய சிறுகதையான ""அவளும் அந்த அவளும்" இப்படி ஒரு நெருக்காடியில் சிக்கியது உண்டு.

பாஞ்சாலி என்ற சித்தாள் சந்தர்ப்ப வசத்தால் ஐந்து ஆண்களொடு வாழ நேர்கிறது. இறுதியில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளுடைய ஆவி ஒரு காட்டில் இறங்குகிறது அங்கு அவள் புராணகாலத்து திரௌபதி(பாஞ்சாலி). யைச்சந்த்திக்கிறாள்.திரௌபதி ஐந்து கணவன் மார்களோடு வாழ்ந்தாலும் அவளுக்கு கர்ணன் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. அதனால் அவளை சொர்க்கத்திர்க்குள் அனுமதிக்காமல் பேயாய் அலைகிறாள் என்பது கதை.இதற்கன ஆதாரங்கள் வில்லிபுத்தூறார் மகாபாரதத்திலிருந்து,பல நூல்களில் உள்ளது. இந்தக்கதை பல மொழிகளில்வெளிவந்துள்ளது.இந்தி மொழியில் திருமதி.முத்துமீனாட்சி அவர்கள் என்னுடைய தொகுப்பினை கொண்டு வந்தார்கள் வடநாட்டில் உள்ள பதிப்பகம் வேளியிட்டுள்ளது. இதற்கு மதிப்பிற்குரிய தோழர் சீத்தாராம் எச்சூரி அவர்கள் முன்னுரை அளித்திருந்தார்கள். கடைசி நிமிடத்தில் அவளும் அந்த அவளும் கதையின் முடிவு திரௌ பதியை கேவலப்படுத்துவதால் என்னுடைய பதிப்பகத்தை தாக்குவார்கள் என்று பதிப்பகம் பயந்தது..இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளுக்கு சட்டபூர்வமான பொறுப்பு "காஸ்யபன் என்று புத்தகத்தில் அச்சடித்த பிறகெ அது வேளியிடப்பட்டது.

புத்தமதத்தைச்சேர்ந்த பெண்மணி ஒருவர்பர்மாவிலிருந்து ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார். புனே நகரத்தில் தங்கிசமஸ்கிருதம் படித்தார் இந்திய இதிகாசங்களை ஆராய்ந்தார். மகாபாரதத்தில் மனம் பறிகொடுத்த அவர் " யுகாந்தார்" என்ற நூலை எழுதினார்.ஐராவதி கார்வே என்ற பெயர் கொண்ட அவருக்கு சாகித்திய அகாதமி விருது அளித்தது. மகாபாரதத்தில் ,கங்கா தேவி,சத்யவதி,அம்பா அம்பிகை அம்பாலிகை, குந்தி, திரௌபதி என்று அந்தப்பெண்கள் பட்ட பாடுகளையும் அவலங்களையும் சித்தரிக்கும் நூலாகும் அது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

அதே போன்று "மிருத்தியுஞ்சய" என்ற நூல மராட்டிய மொழியில் வந்துள்ளது.சிவாஜி சாவந்த் என்பவர் எழுதியுள்ளார்.கர்ணாணின் அழகு, பிறப்பு, அவன் சந்த்தித்த ஒடுக்கு முறை ஆகியவற்றை மீறி அவன் இரவாப்புகழ் பெற்றதைச் சித்தரிக்கும் நூல் அது. " மிருத்துஞ்சய" என்ற தொலைக்காட்சி தொடராக வந்தது. என்ன காரனத்தாலோ அதுபாதியில் நிறுத்தப்பட்டது.

எல்லாவற்றிர்க்கும் மேலாக ஒருவர்மின்னஞ்சல் எழுதியிருந்தார்.மிகவும் புத்திசாலித் தனமாக கதை கட்டி யுள்ளீர்கள்.எந்த இடத்திலும் முனிவர் குந்தியை வன்புணர்ச்சிகு உட்படுத்தியதாக குறிப்பிடவில்லை.ஆனால் வாசகனின் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.எழுத்து என்பது craftmanship என்றால் இதனையும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான்.

சிறுகதை என்பது தனிமனிதனின் அனுபவம். புராண இதிகாசங்கள் ஒரு சமூகத்தின் அனுபவம். இதொடு நிறுத்திக் கொள்கிறேன்.

Saturday, March 05, 2011

இ.பி கோ 375

சிறு கதை


இ.பி.கோ---375 (காஸ்யபன்)

யாதவ குல அரச வம்சத்தில் புகழ் பெற்றவன் சுரன் இவனுடைய மகன் தான் வசுதேவன். சுரனுக்கு வசுதேவன் தவிர பிரீதா என்ற மகளும் உண்டு.

அந்தப்புரத்தில் அமர்ந்து சுனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுரன்.தூரத்தில் சிறுவன விளையாடிக்கோண்டிருந்தான். மூன்ரு வயது.பிரீதா வயதான தாதியுடன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்தந்தை சுரனைப் பார்த்ததும். ஓடிவந்து தந்தையின் மடியில் அமர்ந்த்தாள்.

"தந்தையே! நாம் போஜநாட்டிற்கு போகப்போகிறோமா?"

"ஆம் மகளே!ஆனால் நான் வரவில்லை நீ மட்டும் தான் சிறிய தந்தை குந்தி போஜனோடு செல்கிறாய்"என்றான் சுரன்

சுரனும் குந்தி போஜனும் தாயாதிகள்.நெருக்கமான நண்பர்கள். போஜனுக்கு வாரிசு இல்லை.சுரனுக்குப் பிறக்கும் இரண்டாவது குழந்தையை போஜனுக்கு தத்துக் கொடுப்பதாய் சுரன் சத்தியம் செய்து கொடுத்திருந்தான்.

துர்வாசரும், வியாசரும் மந்திரகோஷங்களை முழங்க,குந்தி போஜன் சுரனின் மகளான பிரீதாவை தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டான்.

"குழந்தாய்! இனி போஜன் தான் உனக்கு தந்தை. இனி போஜநாட்டிலேயே நீ வாழவேண்டும்." என்று சுரன் கூறினான்.

சிறுமி புரிந்தும் புரியாதவளாக தலையை ஆட்டிவிட்டு கிழத்தாதியைப் பார்த்தாள்.

"பிரீதா என் று இனி உன்னை அழைக்க முடியாது குழந்தாய்! நீ குந்தி போஜனின் மகளாகி விட்டாய்.இனி உலகுக்கு குந்தி என்றே அறியப்படுவாய்" என்றார் மகரிஷி துர்வாசர்.

. குந்தி போஜன் நண்பனும் யதுகுல அரசனுமான சுரனிடம் விடை பெற்றுக் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏறினான்.அவர்களுக்கு முன்னும் பின்னுமாக ஏராளமாக பொன்னும் பொருளும் தாங்கிய வண்டிகள் சென்றன.

-----------------------------------------------------------

கிழத்தாதி குந்தியைப் பார்த்து முகிழ்ந்தாள்.அவளுடைய அழகும் புத்திசாலித்தனமும் கிழவியைத் திணற வைத்தது.அழகழகான உடைகளை தேடிபிடித்து குந்திக்கு உடுத்தி தாதி அழகு பார்ப்பாள்.எந்த உடையும் பத்து நாட்களுக்கு மேல் தாங்காது.உடை முழுவதும் குந்தி நிரம்பி வழிவாள்.வயது ஏறிக்கொண்டு வருகிறது. உடலில்சிறு சிறு மாற்றங்கள்.

இப்போதேல்லாம் குந்தி கேட்கும் கேள்விகளுக்கு கிழத்தாதியால் பதில் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஆண்-பெண் பற்றீ குந்தி கெட்கும் கேள்விகள் விரைவில் அவள் பரிபக்குவம் அடையப்போகிறாள் என்பதி தாதிக்கு உணர்த்தியது.

குந்தி போஜன் குந்தியின் மீது உயிரையே வைத்திருந்தான்.ஆன்டுதோறும் அவளுடைய ஜன்ம தினத்தன்று முனிபுங்கவர்களை அழைத்து நட்சத்திர ஹோமம் நடத்துவான்.

ஹொமத்திற்கு வந்திருந்த துர்வாசர் விடை பேற்று செல்ல வந்திருந்தார்.போஜன் மகள் குந்தியோடு வந்திருந்தவர்களுக்கு தக்க சன்மானங்களைக் கொடுத்துக்கொண்டுஇருந்தான்.

"முனிபுங்கவ! தங்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன்." துர்வாசரைப் பார்த்துக் கேட்டான்.

"போஜராஜனே! எமது ஆசிரமத்தில் குற்றேவல் புரிய உன் மகள் குந்தியை அனுப்பி வை"என்றார் துர்வாசர். திடுக்கிட்டுப் போன போஜன் இருகரங்களையும் கூப்பி" சுவாமி! அவள் சிறுமி!....அவளால்.."என்றான

"அதனால் தன் கூப்பிடுகிறேன் "

துர்வாசரின் கோபத்தை அறிந்த போஜன் அதற்குமேல் பெசவில்லை.

_______________________________________________

துர்வசரின் ஆசிரமத்தில் ஓடியோடி குற்றேவல் புரிந்து வந்தாள் குந்தி.கிழத்தாதியோடு நதியில் நீராடிவிட்டு பூக்களை பறிப்பாள். மாலைகளைத்தொடுப்பாள். ஒரு நாள் தனிமையில் இருந்த போது கிழத்தாதியை துர்வாசர் தனியாக அழைத்துப்பேசினார்.

"சுவாமி...!"

" குந்தி எப்படி இருக்கிறாள்?" என்று துர்வாசர் தாதியிடம் கேட்டார்.

"சின்னஞ்சீறுமி! ஓடியாடி பூப்பரித்து விளையாடி மகிழ்கிறாள்"

"அவளுக்கு எல்லாம் சொல்லிவத்திருக்கிறாயா?"

" சுவாமி! அவள் சிறுமி..."

"இன்று இரவு அவள் பஞ்சணையில் நீ படுக்க வேண்டாம்"

திடுக்கிட்டு துர்வாசரை பார்த்தாள் தாதி.கண்கள் சிவந்திருந்தன.தாடிக்குள் பருத்த உதடுகள் கோரமாய் வளைந்திருந்தது.

------------------------------------------------------------------------------

" இரண்டு மூன்று நாட்களாக இரவு நீ ஏன் என் பஞ்சணைக்கு வருவதில்லை"குந்தி தாதியிடம் கேட்டாள்.

"---------"

" நான் கேட்கிறேனே பதில் சொல்"

தாதி ந்மிர்ந்து பார்த்தாள். மிரண்டு போன குந்தியின் கண்கள் தெரிந்தன.

" என் அடி வயிறு வலிக்கிறது"

குந்தியை ஆதூரமாக அணைத்துக்கொண்ட தாதி குந்தியின் வயிறை வருடிவிடாள்.

"தாதி! எனக்கு உணவு வேண்டாம்.உணவைப்பார்த்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது"

'குந்தி! நீ அவரத்தடுக்க வில்லயா?"என்று கேட்ட தாதியையே பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தி.

" என்ன நடக்கிறது என்பது தெரிவதற்கு முன்பே எல்லாம் நடந்துவிட்டது"

"பிண்?"

" நான் பரிபக்குவம் அடையவில்லை என்று அவரிடம் கெஞ்சினேன்"

-------------------------------------------------------------------------------------

"குந்தி! நீ இப்போது கர்ப்பமாகி இருக்கிறாய்" என்றாள் கிழத்தாதி.



("தீக்கதிர்" பத்திரிகையின் இணைப்பு இதழான" வண்ணக் கதிரில்" 2004ம் ஆண்டு ஜூலை வெளியானது)

Thursday, March 03, 2011

ஜாபாலி......

சிறு கதை


ஜாபாலி (காஸ்யபன்)

சத்யகாமனை நந்தவனத்திற்கு அனுப்பினாள் பாலா.சிறுவன் துள்ளிக் குதிதுக் கொண்டு ஓடினான்.சக தோழி ஜனகவல்லியிடம் சிறுவனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு பாலா நீராடச்சென்றாள்.

உள்ளே சென்ற அவளை பின்புறமாக இரண்டு கரங்கள் அணைத்துக் கொண்டன.ஆண்மை அவளை உறுத்த முன்புறம் மார்பகங்களை இறுக்கி...அவள் வலியில் "ஸ்ஸ் ஆஆ"என்றாள்.இன்பவெறியில்கூவுவதாக நினத்து அவன் மேலும் இறுக்கினான்.நீராடி முடித்து ஆடைகளை அணியாமல் போர்த்திக் கொண்டே உள்ளேசென்றாள் பாலா.தளபதியின் பேரன் அவளை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு நீராடும் அறையிலிருந்து வெளியேறினான்.

அந்தப்புரங்களில் எழுதப்படாத ஒப்பந்தங்கள் உண்டு அரசன் ராணியிடம் விருப்பம் போல உறவாட முடியாது.இளவரசி, பிரபுக்களின் மனைவி என்று எவராக இருந்தாலும் அவர்கள் விரும்பினால் தான் கணவன்மார்கள் அவர்களிடம் உறவு வத்துக்கொள்ளமுடியும்.

தர்பாரிலும் மன்றங்களிலும் அரசன் தளபதி அமைச்சர்களருகில் அழகுப்பதுமையாக அமர வேண்டிய ராணிகளும் இளவரசிகளும் உடலழகைப் பதுகாத்துக் கொள்ளவேண்டும்.அவள் அவளுடைய "இச்சை"யைக் கூட கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் அரசனும்,அமச்சரும், தளபதியும்...அவர்களுக்குத்தான் அந்தப்புரத்தில் ஏராளனமானதாதிகள், தோழிகள் இருக்கிறார்களே.

பாலாவும் ஒரு தாதி.அவளுக்கும் இப்படிபட்ட வாழ்வு அமைக்கப்பட்டிருக்கிறது.

"அம்மா!நான் எப்போது குருகுலத்திற்கு செல்வேன்?" என்று சத்யகாமன் கேட்கும்போது பாலா மகனை ஆரத்தழுவிக் கொண்டாள்." உன் பிறந்த நாள் வருகிறது.அதன் பிறகு உன்னை அனுப்புவேன்" என்றாள் பாலா>

சக தோழி ஜனகவல்லி :களூக்" என்று சிரித்தாள்.சத்தியகாமன் உயர்ந்து நிர்க்கும் ஜனகவல்லியை கழுத்து வலிக்கும் அளவுக்கு தலையை தூக்கிப் பார்த்தான்.

"ஏன் சிரிக்கிறாய்?" பாலா கேட்டாள்.

" குருகுலத்தில் உன் மகனுக்கு இடம் உண்டா?"

"ஏன் இருக்காது?"

" குழந்தையை வைத்துக்கொண்டு இந்த விவாதம் வேண்டாம்" என்றாள் ஜனகவல்லி.தூரத்தில் தளபதி வருவது தெரிந்தது.இருவருமே பிரிந்து சென்றுவிட்டார்கள்..

பாலா யோசனையில் இருந்தாள்.தளபதி அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் தோளைப் பற்றினார்.அறுபது வயது ஆனாலும் கைகளின் பலம் பாலாவின் தோள் எலும்புகளை நோகச்செய்தது.கண்களை மூடிகோண்டு மல்லாந்து சாய்ந்தாள்.

"நான் வியாசருடைய ஆசரமத்தில் சேரப்போகிறேன்" என்றான் சத்யகாமன்.

" முடியாது கண்ணா"என்றூ பதிலளித்தாள்ஞ்சனகவல்லி.

"ஏன்?"

"நீ எந்த வம்சம் என்று வியாசன் கேட்பான்"

" நான் எந்த வம்சம்?

" உன் அம்மாவைக் கேள்""

சத்யகாமன் ஓடிச்சென்று அம்மாவிடம் கட்டிகொண்டு விழுந்தான்."அம்ம! நான் எந்த வம்சம்?"..பாலா பதில் சொல்லவில்லை.அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சத்யகாமன் யாருடைய வம்சம்...அமச்சரின் அந்தப்புரத்தில் சேவை செய்துகொண்டிருந்தேன். அமைச்சர்...அவரின்மைத்துனர்... அமைசரின் தம்பி..அப்போது ஜனித்தவனா?

தளபதி,தளபதியின்மகன் ,பேரன்...ஆடு...மாடு...நாய் ...ஆகியவற்றிற்கு உறவு முறை உண்டா?

சத்யகாமன் அம்மாவை உலுக்கினான்.நினைவு பெற்ற பாலாஅவனிடம் கூறினாள்" "வியாசனிடம் போகாதே.....அவனே....நீ கவுதமரின் ஆசிரமத்திற்கு போ...நான் சொல்வதைக் கவனமாகக் கேள்...அவரிடம் அட்சரம்பிசகாமல் சொல்....உன் பெயர் இனி சத்யகாமன் இல்லை...ஜாபாலி...பாலாவின் மகன் ...ஜாபாலி.

ஹரிதுருமாத கௌதமரின் ஆசிரமத்தின் முன் சிறுவன் நின்றான்.

" உன் பெயர் என்ன குழந்தாய்?"

"ஜாபாலி"

" அது என்ன புதுப் பெயர்?"

" என் தாயின் பெயர் பாலா.அவர்தான் என் பெயரை மாற்றீ ஜாபாலி என்று கூறச்சொன்னார்."

"நீ எந்த வம்சம்?"

"பாலாவின் வம்சம்"

"உன் தந்தையின் பெயர் என்ன?"

" எனக்கும் தெரியாது. என் தாய்க்கும் தெரியாது."

... " உன் தாய் எங்கிருக்கிறாள்?"

"தளபதியின் அந்தப்புரத்தில் ....அதற்கு முனபு அமைச்சரின் அந்தப்புரத்தில். நான் அமைச்சர் குடும்பத்தைச் சார்ந்தவனா? தளபதிகுடும்பத்தைச் சார்ந்தவனா? தெரியவில்லை?" " " உன் தாயார் என்ன சொன்னார்?"

"எவனால் ஜனித்தாய் என்பது முக்கியமல்ல மகனே.நீ பலா பெற்றெடுத்த மகன் ஆகையால் உன் பெயர் இனி ஜாபாலி என்றாள்"

"நீ வெறும் ஜபாலி அல்ல.உண்மையைச்சொன்னவன்.சத்யகாம ஜாபாலி. வா குழந்தாய்...வேதம் மட்டுமல்ல....உபநிஷத் மட்டுமல்ல....தர்க்க சாஸ்திரமும் உனக்குக் கற்பிப்பேன்" என்றார் கவுதமர்.

( ஆதரம்: சந்தோக்ய உபநிஷத்)



(செம்மலர் மே மாதம் 2004ம் ஆண்டு பிரசுரமானது)