Thursday, January 26, 2012

நாற்பது வயதில் 4000கோடியை சுருட்டிய முதல்வர்...........

நாற்பது வயதில் 4000 கோடியை சுருட்டிய முதல்வர் ......
மது கோடாவுக்கு 40 வயது ஆகிறது. அவர் தன் முப்பதாவது வயதில் சட்டமன்ற உருப்பினர் ஆனார். வாஜ்பாய், அத்வானி ,நரெந்திர மோடி, ஆகிய மூவரும் இந்த துடிப்பு மிக்க இளைஞருக்கு 2000ம் ஆண்டில் ஜார்கண்டு மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தனர்.
பாபுலால்மராண்டி தலைமையில் பா.ஜ .க ஆட்சி அமைத்தது. அதில் பஞ்சாயத்து அமைச்சர் மது கோடா. அடுத்து அர்ஜுன் முண்டா தலமையில் அமைச்சராக இருந்தார். அவரையும்கவிழ்த்துவிட்டு மது கோடா முதலமைச்சராக ஆனார்

இவருக்கு ஆதரவு காங்கிரஸ்,லல்லு,மற்றுமுள்ள கஜா முஜா கட்சிகள் ஆதரவு. முக்கியமாக மாவொயிஸ்டுகளும் ஆதரித்தார்கள்.

ஆண்டுக்கு 100 கோடி கணக்கில் 40 வயதில் 4000 கோடி அமுக்கியிருக்கிறார் மது கோடா. அதில் 30% மாவொயிஸ்டுகளுக்கு..

கோடாவுக்கு மும்பையில் மூன்று ஹோட்டல், இரண்டு கம்பெனிகள், தாய்லாந்தில் கம்பெனிகள், லைபீரியாவில் சுரங்கங்கள் உள்ளன. வெளிநாட்டுக் கம்பெனிகள் மலைவாழ் மக்களை விரட்டிவிட்டு சுரங்கங்களை நடத்துகின்றன. மலை வாழ் மக்களுக்காக ஆயுதம் தாங்கிய மாவொயிஸ்டுகள் 1200 கோடியை பெற்றுக் கொண்டு ... ஆயுதமாவது மண்ணாவது ...!

ஆந்திராவில் (கெண்டு) பீடி இலை ஒப்பந்தகாரர்கள் நிதி உதவி! உதவியா? செய்கிறார்கள் .

புரட்சியை மம்தாவோடும்,மது கோடாவோடும் சேர்ந்து கொண்டுவந்தால் நமக்கு என்ன வலிக்கவா போகிறது !

Monday, January 23, 2012

Dam 999........திரை விமரிசனம்

Dam 999
திரைவிமரிசனம்

சங்கரன் சனாதனமன வாழ்க்கையை நடத்துபவர்.ஒன்பது கோள்களின் இயக்கத்தை கவனித்து நடக்க இருப்பதை துல்லியமாக கணிக்கும் ஆற்றல் படைத்தவர்.ஆயுர் வேத வைத்தியத்திலும் கெட்டிக்காரர்.அவருடைய மகன் தான் வினய். சிறுவனாக இருக்கும்பொதே அவர்கள் வீட்டிற்கு மீரா என்ற அநாதைச்சிறுமி அடைக்கலமாக வருகிறாள் . மீராவும் வினயும் பால்ய சிநேகிதர்களாக வளருகிறார்கள்.வாலிப வயதில் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.வினயின் தந்தை சங்கரனும் இந்த திருமணத்தை விரும்புகிறார்.

இருவரின் ஜாதகத்தைப்பார்த்த சங்கரன் கோள்களின் இயக்கம் சரியாக இல்லாததால் திருமணம் செய்யக்கூடாது என்கிறார் .வினய் கப்பல் வேலைக்குச்சென்று விடுகிறான்,மீரா தன் உணர்வுகளுக்கு அணைகட்டி வாழ்கிறாள்.

வினயின் சக மாலுமி ஃப்ரடரிக். அவன் பாகிஸ்தானைச்செர்ந்த ரஜியாவை மணக்கிறான் அவர்களுக்கு குழந்தையில்லை என்ற ஏக்கமுள்ளதுஇருவரும் தங்கள் உணர்வை அணைகட்டி வாழ்கிறார்கள்.

சங்கரன் மீராவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண எற்பாடு செய்கிறார். வினய் மீராவிடம் பேசுகிறான்.கோபப் படுகிறான். இதனை வரவிருக்கும் மாப்பிள்ளை பார்த்துவிடுகிறான்.திருமணம் நின்றுவிடுகிறது. வினய் மீண்டும் கப்பல் வெலைக்குச் சென்றுவிடுகிறான் .தன் உணர்வுகளுக்கு அணைகட்டி காகசிய நாட்டு தொலைக்காட்சி நிருபராகப் பணியாற்றும் சாண்ற்றா என்ற பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறான்.

துரை என்ற பொறுக்கி அரசியல் வாதி முன்னாள் மேயர் ராஜன் சாவுக்காக சந்தெகப்படப்பட்டவன்.ராஜனுக்குப்பிறகு மேயராகிறான். ராஜனின் மகள் மரியாவை வீட்டில் அடைத்து வைக்கிறான். மரியாவின் சகொதரன் தான் ஃபிரடரிக் .புதிய அணை ஒன்றை thurai. பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்து கட்டுவிக்கிறான்.

வினய்-சாண்ற்றா தம்பதியருக்கு சாமுவேல் என்ற மகன் பிறக்கிறான் குழந்தைக்கு சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி.வினய்க்கும் சாண்ற்றாவுக்கும்மனக்கசப்பு.அதனால் மகன் சாமை அழைத்துக்கொண்டு வைத்தியத்திற்காக தந்தைசங்கரனிடம் வருகிறான். வந்த இடத்தில் மீராவைப் பார்க்கிறான். மீண்டும் அவன் இதயத்தில் அன்பு துளிக்கிறது. மீராவுக்கும் அதே நிலைதான். இதனை அறிந்த சங்கரன்கொதிக்கிறார். மிகப்பெரிய நாசம் வரப்போகிறது என்று அறிவிக்கிறார்.

2009 ஆண்டு 9 ம்மாதமான செப்டம்பர் மாதம் 9 தேதி (9,9,9) அன்று அந்த நாசம் வரும் என்கிறார்.

அதே தினத்தன்று கடும் புயலும் மழையும் அடிக்கிறது. அணையில் நீரின் அளவு எறுகிறது.கசிவு அதிகமாகிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரி மதகைதிறக்க வருகிறார்.மேயர் தடுக்கிறார். தொலைக்காட்சி நிருபர் சாண்ட்றா செய்தி சேகரிக்க வந்தவர் அதிகாரிக்கு உதவுகிறார் மதகு திறக்கப்படுகிறது ஆனாலும்நேரம் கடந்துவிட்டது அணை உடைகிறது.

கதை மாந்தர்கள் 9 பேரின் தேக்கிவைக்கப்பட்ட உணர்வுகளும் உடைகிறது

Dam 999 .படத்தின் திரைக்கதை இதுதான். வினயன் வின்செண்டின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல இருக்கிறது. புயல்,மழை,அணை,காட்சிகளில் தொட்டதரணி மேலை நாடுகளுக்கு சவால் விடுகிறார்.

இந்தப்படத்தின் உச்சம் அதன் இசைதான். ஹரிஹரன்,ஸ்ரெயா கொசல் பாடும் "சோட்கே ",தலப்புஇசை இரண்டும் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.உலகத்தரமான பின்னணி இசை. அமைத்த ஊசுப்பாச்சனுக்கு விருது அளித்து ஆஸ்கார் குழு தன்னப் பெருமைபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஆங்கிலம்,இந்தி,மலையாளம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்இந்தபடத்தை சொகன் ராய் இயக்கி உள்ளார்.

தமிழ்நாட்டு அறிவு ஜீவிகள் வலைத்தளத்தில் பார்க்கின்றனர் .தமிழ்பத்திரிகைகள் இது பற்றி எழுதாமல் தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டுவிட்டன.

Friday, January 20, 2012

ரத்தம் அடர்த்தியானது........(முழுக்க முழுக்க கற்பனை)

ரத்தம் அடர்த்தியானது.....(முழுக்க முழுக்க கற்பனை)

மேற்கு ஆசியாவில் உள்ள தேசத்தின் இளவரசர். ஷேக்-பின் -சாப்ரி- அலி என்பது அவர் பெயர்.மிகவும் பராக்ரம சாலி. "எல்லாம் இறைவனுக்கே " என்று வாழ்பவர். பின் லெடனுக்கு விசுவாசமாக இருப்பவர். வெளியில் தெரியாது. அவருக்குத்தான் இதய நோய்.அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைப்பார் என்பது நிலமை.அங்கு சிகிச்சை முடியாது என்பதால் ரகசியமாக இந்தியாவநதார்.

மும்பையில் சிகிச்சைக்கு எற்பாடாகி இருந்தது. ஆனாலும் சிக்கல் தான்.அவருடைய ரத்தகுரூப் நான்கு வகையையும் தாண்டியிருந்தது.அசாதாரணமானது மிகைச்சிலருக்குத்தான் அத்தகைய குரூப் உண்டு . மும்பை டாக்டர்கள் கையை விரித்து விட்டனர். உடனடியாக ரத்தம் வந்தால் தான் அறுவை சிகிச்சை நடத்தமுடியும் என்று கூறிவிட்டனர்.

குஜராத்தில் அப்போது தான் "சத்பாவனா "(நல்லெண்ண இயக்க ம்) தொடங்கியிருந்தது. முதலமைச்சர் அதனை கோத்ரா ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிப்பதாக இருந்தது.ரத்ததானத்துடன் ஆரம்பிக்க இருக்கிறார்கள். முதலமைசர் ரத்த தானம் செய்கிறார். அவருடைய ரத்தம் மிகவும் அபூர்வமானது. பத்திரிகைகள் பக்கம் பக்கமக செய்திகளை எழுதியிருந்தன .
மும்பை டாக்டர்கள் "வலையில்" தேடிப்பிடித்து அரபிய இளவரசருக்கு இந்த ரத்ததை கொடுக்க முன்வந்தனர்.

குஜராத் முதல்வர் ஒரு அரபிய இளவரசருக்கு ரத்தம் கொடுப்பது முக்கிய செய்தி அல்லவா!

சர்வதேச பத்திரிகையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் வந்து குவிந்துவிட்டனர்.சிறப்பு விமானத்தில் டாக்டர்கள் மும்பையிலிருந்து வந்து ரத்தத்தை பெற்று செல்ல ஏற்பாடகியிருந்தது." ஜெயா " தொலைக்காட்சியில் " சோ" ராமசாமி சிறப்பாக நிகழ்ச்சிகளைதொகுத்தளித்தார்.

இளவரசருக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது மயக்கம் தெளிய மருத்துவர்களும் அவருடைய மனைவியும் தம்பியும் காத்திருந்தனர். இளவரசர் கண்விழித்தார். மருத்துவர்கள் மகிழ்ச்சியாக அவருடைய தம்பியை அழைத்தனர்.தம்பியை இளவரசர் பார்த்தார். அருகிலிருந்த பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி முஸ்லீம் தம்பியை சுட்டுக் கொன்றார். .

உலகமே திகைத்தது!

அத்வானி திகைக்கவில்லை!!

Wednesday, January 18, 2012

திரைப்பட விமரிசனம்..."நண்பன்"

திரைப்பட விமரிசனம்.

"நண்பன்"

வசதிமிக்க குடும்பத்தைச்ச்சார்ந்த ஒருவன்,நடுத்தரவர்க்கத்தைசசார்ந்த ஒருவன் , ஏழைக்குடும்பத்தைச்சார்ந்த ஒருவன் என்று சமூகத்தின் மூன்று தளங்களிலிருந்து வந்த மூன்று மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேருகிறார்கள். உயர்கல்வித்துறையின் போதாமையால் எற்படும் இன்னல்களும் அதனால் எற்படும் பரஸ்பர இறுக்கமும் அவர்களை நண்பர்களாக பரிணமிக்கவைக்கிறது..

இந்தப்படத்தை பார்த்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேரும்போது, இரண்டு படிமங்கள் மனத்தை நெருடுகின்றன.நான்காம் ஆண்டுபடிக்கும் மாணவனின் தந்தைக்கு முதல்வர் எழுதும் கடிதத்தால் அவன் தந்தை புலம்புவதும் , பின்னர் மகன் தற்கொலை செய்வதால் அவனுக்கு கொள்ளி வைப்பதும் மனதைக் கனக்கச்செய்கிறது . தண்ணீர் தொட்டியருகில் ஸ்ரீவத்சன் தோல்வியும்,ஆங்காரமும் கோபமும் அழுகையுமாக தன் நண்பர்களிடம் "நான் என்னடா உங்களுக்கு துரோகம் செய்தேன்" என்று சவால் விடும்காட்சியுமாகும். தந்தையாக நடிக்கும் "ராமு"வும் ஸ்ரீவத்சனாக நடிக்கும் சத்யனும் அற்புதமாகச்செய்திருக்கிறார்கள்.

மொழுகு பொம்மை போல வந்து கொண்டிருந்த ஸ்ரீகாந்த் மிகக் கவனமாக தன் பாத்திரத்தை செய்துள்ளார். மடிகணினியை மாற்றி நல்லகாமிரா வாங்க தந்தை சொல்லும் போது மிக நேர்த்தியாக ஸ்ரீகாந்த் செய்துள்ளார்.

எந்த சவாலையும் என்னால் ஏற்கமுடியும் என்று ஜீவா நிரூபித்துள்ளார். ஏழ்மை அதனால் எற்படும் அவமானம், அடிபட்டு தெளிந்தமனதின் உறுதி ஆகியவற்றை நிறைவாக செய்துள்ளார்.இளமையும் திறமையும் வாய்ப்பும் அவரை மெலும் உயர்த்தும்.

சத்யராஜ். ,இலியனா ஆகியொர் நிறைவாக நடித்துள்ளனர் .

கவிஞர் கார்க்கி அவர்கள் ஒரு பாட்டிற்கு பத்து மொழிகளில் கவிதை எழுதியுள்ளதாக குறிப்பிடார்கள். For what? and For whom? கொவையில் ஒரு இளைஞர் பட்டாணிகடலையை மூக்கால் நெட்டி தள்ளீக் கொண்டே மூன்று மைல் சென்றார் என்பர்கள். அதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

"த்ரீ இடியட்ஸ் " இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ராஜபாட்டையை போட்டுவிட்டதால் சங்கருக்கு அதிக வேலையில்லை. ஆனாலும் ....நண்பர்கள் ஊட்டிகுச்செல்லும் காட்சியில் ....மூன்றே விநாடிகள் வரும் "ஹெர்பின்" வளைவுகளுக்காக அவரும் மனோஜ் பரமஹம்சாவும் மெனக்கிட்டிருப்பது பாராட்டுக் குறியது.ரயிலுக்கு வர்ணம் பூசுவது ப்ரம்மாண்டமா? முத்துராஜ் கொஞ்சம் மாற்றி யொசியுங்கள்

செத்தன் பகத் எழுதியுள்ள ."Five points someone" என்ற நாவலை ஒரு லட்சம் ரூ க்கு வாங்கினார் தாரிப்பாளர் சோப்ரா." த்ரீ இடியட்ஸ்" பல கோடிகளை கண்டு விட்டது. ஆனால் செதன் பகத் தன்பெயரை போடவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடவேண்டியதாயிற்று.எழுத்தாளன் நிலமை இது தான்.

விஜய் என்ற நட்சத்திரத்தை நடிகனாக மீட்டெடுத்ததுதான் சங்கரின் வெற்றி .

Monday, January 16, 2012

டாக்டர் ஜாண் செல்லதுரை அவர்களின் இடுகையை பதிவு செய்துள்ளேன்.

JAN
16
பசு வதை தடையா, தடையால் வதையா?
கடந்த சில வருடங்களாக தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் ஆடத் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பகடை 'பசு'.

'பசு பாதுகாப்பு சாம்பியன் நானே' என சுயபிரகடனப் போட்டியை இராஜஸ்தானிலும், பசு சென்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டத்தை குஜராத்திலும் பார்க்கிறோம். மத்திய பிரதேச அரசு ஒரு படி மேலே சென்று, பீஃப் வைத்திருந்தாலே 7வருடம் சிறைத்தண்டனை என சட்டமியற்றி தனது 'பசு'மையை காட்டியுள்ளது. காந்திய வாதிகள், குறிப்பாக வினோபா பக்தர்கள் தம் பங்கிற்கு, 'பசு பாதுகாப்பு' இயக்கத்தை நிர்மாணத்திட்டமாக்கி 'லாபி' (lobby) செய்கின்றனர்.

இவ்வாறு பசு பாலிடிக்ஸ் ஆகிவிட்ட நிலையில் அதன் கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், சமயம், கலாசாரம் என மற்ற அம்சங்களையும் பார்த்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது.

தாய்மை: பால் என்பது உயிரோட்டமான சரி விகித உணவு. விளையாட்டுப்பருவமுதல், வீர விளையாட்டுப்பருவம் வரை உகந்த போஷாக்கு. அரிய தனிமங்கள்( rare elements), தலையாய விட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி என சகல மருத்துவ குணமும் கொண்டது. பசு நெய்யில் லேகியம் செய்வதும், வெண்ணெய் பூசிக்குளிப்பதும் இந்திய பாரம்பரியம். சாண எரிவாயு, தொழு உரம் என சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தவையும் அதிலுண்டு.

இப்படி எல்லா விகிதத்திலும் வாழ்விற்கு பக்கபலமாக, பலனை சற்றும் எதிர்பாராமல் வாழும் ஓர் சக ஜீவனை அன்பின் வடிவமாக்கி பாதுகாத்தல் ஒரு கைமாறு மட்டுமல்ல, நம்மில் மனிதத்தை வளர்ப்பதற்கு ஓர் ஒப்பற்ற வழியும் கூட என 'கோ ரக்-ஷன்' பிரசாரகர்கள் வைக்கும் வாதத்தில் ஆன்மீக நியாயம் உண்டு.

விபரீதம்: ஆழமான தத்துவ பின்னணி கொண்ட இந்த தாய்மையின் வடிவைக் காப்பாற்ற 'எத்தனை தலை வாங்கவும் (தரவும் அல்ல) தயார்' என ஒரு சாரார் குரல் எழுப்பும் போதுதான் விஷயம் விபரீதமாகிறது.

மறுபக்கம்: இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, அமுக்கமாக மாட்டிறச்சியை உண்டு களிக்கும் ஒரு பெருங்கூட்டம், மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ஏகப்பட்ட வாதங்களை வாளாக்கி களத்தில் குதிக்கத் தயாராகி இருக்கிறது.

அண்மையில் டெல்ஹியில் நடந்த ஒரு மாநாட்டின் உணவு வேளை விவாதமாக வந்து சேர்ந்தது 'பசுவதை'. மேசையில் நால்வர்: ஒரு கேரளம், ஒரு நாகலாந்து பெண்மணி, ஒரு ஜார்கண்ட் மனித உரிமை ஆக்டிவிஸ்ட். நான்-வெஜியாக இருந்து வெஜிடேரியனாக மாறியுள்ள நான் அம்மேசையில் 1/4 மைனாரிடி. பரிமாறப்பட்ட மட்டனை (மட்டன்?) கடித்துக் கொண்டு அவர்கள் சுவையாக பரிமாறிய வாதம்:

'நம் நாட்டின் புரதத் தேவையில் நாற்பது சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் உணவாக அசைவம் உள்ளது.

அதில் நான்கில் ஒருபகுதி பீஃப் (beaf). பசுவதை என மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு நாட்டின் 10 சதவிகித புரதத் தேவையை இவர்கள் எவ்வாறு சமன் செய்யப் போகிறார்கள்' என ஜார்கண்ட் வாதத்தை துவக்கிவைத்தார்.

'பசு வதைத் தடை என்பதைல்லாம் 'கறி'க்குதவாத வாதம். அப்படி வாதம் செய்கிறவர் யாராவது மாட்டை வைத்து பொழப்பு ஓட்டுகிறார்களா? பால் மாடு வைத்திருக்கும் விவசாயிட்ட போய் கேளுங்க; அவனுக்கு அது ஒரு பொருளாதாரம். பால் கறந்தா கறவை மாடு, மறுத்தா அடிமாடு. ஐயோ பாவம்! நம்மைக் காப்பாற்றிய மாடு, அதனை நாமும் காப்பாற்றணும் என்பது அபப் பொருளாதார ( uneconomic)வாதம். ஐம்பது ரூபாய்க்கு தீவனம் போட்டால் எண்பது ரூபாய்க்கு பால் தருவதே பெரும்பாடா இருக்கு. இதுல மலட்டையும் கிழட்டையும் சேர்த்துக்க யாரால் முடியும்.'

'இந்தியாவைப் பொருத்தவரை 'பீஃப்' ஆனது பால் பொருளாதாரத்தின் ஒரு உபப் பொருள் ( Byproduct). இறைச்சிக்காக மாட்டுப் பண்ணை என்பது இங்கே கேள்விப்படாத ஒன்று. பால் உற்பத்தியானது ஏழை மற்றும் கீழ் நடுத்தர வகுப்பு (லொயர் மிடில் க்ளாஸ்) மக்களின் தொழில். அவங்க யாரும் பால் மாட்டையோ திடகாத்திரமான காளைமாட்டையோ அடிமாடாக சந்தைக்கு அனுப்புவதில்லை. பல்லு போனதையும், சினைபிடிக்காததையும் வைத்து அவன் என்ன செய்வான்? கோடை வறட்சியில, உள்ள மாட்டுக்கே புல்ல காணோம்ங்கிர நிலையில வெத்துமாட்டுக்கும் சேர்த்துப் போடுவது அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.' என கேரளக்காரர் பொரிந்து தள்ளினார் தனது மலையாளம் கலந்த ஆங்கிலத்துல.


இப்படி (விவசாயியின் பொருளாதாரத்தால்) ஒதுக்கப்பட்ட மாடுகளே 'மாட்டிறைச்சி' என்பதால் இது பால் பொருளாதாரத்தின் உபப் பொருள். உபப் பொருள்25% முதலீட்டில் நமக்குக் கிடைக்கும் லாபகரமான பொருள். இதனால் விவசாயிக்கு லாபமோ இல்லையோ, இது (இந்த ரீ-சைக்ளிங்க் வருமானம்) இல்லாமல் அவன் பால் தொழில் செய்யவே முடியாது என தனது இரண்டாங்கட்ட வாதத்தையும் வைத்து விட்டு தட்டில் இருந்ததை ஒரு கடி கடித்தார்.

'ஆட்டுக்கறி 350-400ரூபான்னு விற்கும் நேரத்துல, உபப் பொருளாக சந்தைக்கு வர்ரதனாலேதான் ஏழைகளுக்கு சௌரியமா ரூபாய் 80 - 100ன்னு மாட்டிறைச்சி மலிவா கிடக்குது. இப்ப அதுல மண்ணை அள்ளிப் போட முனைராங்க.'

அடி மாட்ட 'புனிதமாய்க்' கருதி மேய விட்டோம்னா பால் மாட்டுக்குத் தீனி பத்தாம (புல்வெளி இல்லாத நிலையில், குறைந்த அளவே வைக்கோல் தீவனம் உள்ள நிலையில்) பால் உற்பத்தி 20-30 சதவிகிதம் நசிவடைய சாத்தியம் இருக்கு" என மலையாள நண்பருக்கு ஓரிரு இணையங்கம் வாசித்துவிட்டு "உங்களுக்குத் தெரியுமா?" என சுவாரசியமாக் ஆரம்பித்தார் ஜார்கண்ட். "மும்பையில் ஐந்து பெரிய அபடாய்ர் (மாடு அடி நிலையம்) இருக்கு. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யறாங்க. அதுல முதல் மூன்றுக்கு சொந்தக்காரர் ஜைனர்கள் (Jains). விஷயம் எங்க நிக்குது பார்? விற்கலைன்னா பொழப்பு போயிரும் என்று சந்தைக்கு வரும் விவசாயிகிட்ட தத்துவம் பேசிட்டு, அங்க போய் அதுலேயே பில்லியன் பிஸினஸ் பண்ணுவதுதான் சாமர்த்தியம்."

'விவசாயி பசுவை கறவைக்கும், காளையை உழவுக்கும் வைத்திருந்தான். நாம கலப்பின பசுன்னு விளம்பரம் பண்ணி காளையையும் கலப்பினமாக்கிட்டோம். அது நடக்கவே குடை கேட்குது. வெயில்ல வந்தாலே வீஸிங்க் ஆகுது. தெண்டத்த வைத்து என்ன செய்யறது? காளையை கலப்பினமாக்கியது விவசாயியா? அவன விக்கக்கூடாதுன்னு சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கு?'

'எப்படியோ இந்த மாடுகள வச்சு உழலாம்னு போனா, தெருவுக்கு இரண்டு டிராக்டர் இறக்கி விட்டிருக்காங்க, வண்டி மாட்ட ஓரம் கட்டணும்னே ட்ரக்குகளை ஓட விட்டிருக்காங்க. இதுல அகிம்சை தத்துவம் வேற. எவ்வளவுதான் விவசாயிய இம்ச பண்றது?" இது என்னங்க நியாயம்?' என மனித உரிமைக் குரல் கொடுத்தார் ஜார்கண்ட்.

எனது தட்டு காலியாகி கை காய்ந்து கொண்டிருக்க, எழும்ப எத்தனித்த நான் அதுவரை அசைவத்தோடு ஐக்கியமாயிருந்த அம்மணி ஆரம்பித்தவுடன் அமர்ந்துவிட்டேன். "பீஃப் எங்களது (நாகலாந்து) இஷ்ட உணவு" என தொடங்கினார்.


'மாட்டிறைச்சி உணவு எங்களது பாரம்பரிய கலாச்சாரம். ஒரு கலாச்சாரத்தைக் கேள்விக்குறியாக்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அப்படிச் செய்வது எங்களை அவமானப்படுத்தும் செயல்' என உணர்வு மேலோங்கக் கூறியவர், சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, 'பசுவை பூஜிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிவதற்கு முந்தய காலத்திலிருந்தே பீஃப் எந்தளது கலாசார உணவாக இருந்துவந்துள்ளது. ஒரு சாராரின் பக்தியை அவமானப்படுத்துவது எங்களது நோக்கமாகவோ, உள்நோக்கமாகவோ இருந்ததில்லை எனும்போது, இதனை வாதப்பொருளாக்குவது எப்படி நியாயமாகும்?' தர்க்க ரீதியாக யோசிக்க வைத்தவர் அதனை வலுவாக்கும் விதமாக மேலும் ஒரு கேள்விய போட்டார், "ஏங்க, எங்க கலாச்சாரத்தில ஒன்றிய ஒரு உணவை தடை செய்யணும்னு பேசறாங்களே, நாங்களும் ஒரு சொல்லுக்கு சொல்லுறோம், எங்க கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத இட்டிலி தோசையை தடை செய்ன்னு, (டாக்டர்கூட சொல்ரார், தோசையும் தாளித்த சட்னியும் கார்சினோஜீனிக் என்று) நல்லதுக்காகவே இருந்தாலும் உங்களால அத விட முடியுமா? அது இல்லாத உணவுக் கலாச்சாரத்த உங்களால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? அப்படித்தான் மாட்டிறைச்சி எங்களுக்கும்" அப்படின்னு சொல்லிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. "இப்படி பல்வேறு விஷயங்களிலும் எங்கள அற்பமா எண்ணி, எங்க உணர்வுகள உதாசீனப்படுத்துவதாலதான், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்கள்ல நாங்க தனி நாடு கேட்டு போராடுறோம்கிறத நீங்க புரிஞ்சிக்கணும்."


ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி, இந்த அம்மா நம்ம இட்டிலி சட்டினியிலிருந்து எல்லைவரைக்கும் ஒட்டு மொத்தமா 'வேட்டு' வைக்குதே! நான் கிளம்பி விட்டேன் 'கை கழுவ'.

பொருளியல் பார்வை: மூலப் பொருளிலிருந்து அதிகப்பட்ச உற்பத்திப் பொருளை வெளியெடுப்பதே நல்ல உற்பத்தியாளருக்கு அழகு என்கிறது பொருளாதார தத்துவம். நிலக்கடலை விவசாயமே எண்ணெய் உற்பத்திக்காகத்தான் என்றாலும், அதன் காய்ந்த செடி கால்நடை தீவனமாகவும், சண்டு (shells) எரிபொருளாகவும், சக்கை (oil cake) புரத உணவாகவும் மாற்றப் படுவதில்லையா. அதனாலேதான் கடலை எண்ணெய் விலை ரூபாய் 100க்குள் நிற்கிறது. உபபொருள் உற்பத்தி சாத்தியம் இல்லையெனில் பால் கூட லிட்டர் 30ரூபாய்க்கு கிடைக்காது.

டிமாண்ட் சப்ளை உறவு பொருளியலில் ஒரு விசேஷமான சம்பந்தம். டிமாண்ட் இல்லை எனில் உற்பத்தி சாத்தியமே இல்லை. பால் நுகர்ச்சிதான் பால் உற்பத்திக்கான தலையாய உந்துதல் என்கிற பார்வையில், பால் நுகர்வோரே மாடுகள் 'அடிமாடா'க முதல் காரணம் (பால் உற்பத்தியில் உபப்பொருள் உற்பத்தி தவிர்க்கமுடியாத ஒன்று என்கிற நிலையில்). பாலை நான் குடித்துவிட்டு, அதனால் ஏற்படும் விழைவை நீ கட்டி அழு என விவசாயியை கூறுவது தேசிய பார்வையற்ற வாதம்.

கருணை: ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்: இரண்டுகோடி பசுமாடுகள் உள்ள நம் நாட்டில் மாட்டிறைச்சித் தொழிலை நிறுத்தி விட்டால், (பிறப்பதில் ஒன்றுக்குப்பாதி ஆண் மாடு, மீதியில் கால்வாசி மலடு மற்றும் கிழட்டு மாடு என்கிற நிலையில்) ஏறக்குறைய ஒண்ணேகால்-ஒண்ணரை கோடி வெற்று மாடுகளை என்ன செய்வது? கட்டி வைத்து தீனி போட முடியாத நிலையில், விவசாயி அவற்றை அவிழ்த்துவிடுவதைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்? அனாதையாக தெருத்தெருவாக அலைய விடுவது எந்த வகையில் கண்ணியமான செயலாக இருக்கும்? பசு வதை தடுப்பு வாதம் செய்வோரும், பால் நுகர்ச்சியாளரும் அதற்கு நாங்கள் பொருப்பு இல்லை என வாதம் செய்யப் போகிறார்களா?

பசுவின் மீது பாசம் எல்லோருக்கும் உண்டு. ஏழை விவசாயி அவன் மாட்டை பெயர் வைத்துத்தான் அழைக்கிறான். மாட்டுப்பொங்கலில் பார்த்திருபீர்கள், 'அவளை' மிளிரச்செய்து உச்சி முகர்வான். மழையானால் பசுவை வீட்டிற்குள் கட்டி, திண்ணையில் ஒதுங்குகிறான். அதற்கு வெட்கையானாலும், வேட்கையானாலும் அதனை தணிக்க அழைத்துக்கொண்டு பல மைல் தூரம் நடந்து செல்வான். பசுவை பாசத்துடன் வைத்துக்கொள் என அவனுக்கு சொல்வது பட்டதாரிக்கு பால பாடம் எடுத்த கதை.'


துவைதம் (Dilamma): பாசம் உண்டு. ஆனால் பால் தராத மாடு அவனுக்கு 'பேரிடி'. யதார்த்தத்திற்கு வருவோம். நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தில், பென்ஷன் இல்லாத கையில் சொத்தே இல்லாத முதியவர்களை நம்குடும்பங்களில் எப்படிப் பார்க்கின்றனர்? பிள்ளைகளுக்குப் போக, வந்தவர்களுக்குப் போக, உழைப்பவர்க்குப் போக மிஞ்சியதே 'பெருசுக்கு' என்கிற அவலம் நம் வீடுகளில் இல்லையா? பிள்ளைக்கு முடியலைன்னா அன்றைக்கும், கட்டியவளுக்குன்னா அடுத்த நாளும் மருத்துவரிடம் போகும் ஏழை, தனக்குன்னா 'அதுவா சுகமாகட்டும்'னு நாலு நாள் இழுத்துப்பார்த்து, வீட்ல எல்லோரும் விரட்டின பிறகுதான் டாக்டரிடம் செல்கிறான். ஏழை பெற்றோர் முடியாம போனால், இத்தோடு 'முடிஞ்சிருமா' ('முடிஞ்சுடாதா)ன்னு எட்டிப்பார்க்கும் அவலம்தான் அங்கு இருக்கு. அன்பு இல்லை என்றில்லை, ஏழையின் பட்ஜட்ல பாசம் எப்பொழுதுமே ஒரு டெஃபிசிட் ஐடம் தான். ஏழ்மைக்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டத்தில், ஏழ்மையை இறக்கி வைக்க முடியாத நிலையில் பாசத்தின் எல்லையை சுருக்கி தன் தெம்புக்குள் போராடும் அவன் சம்யோசிதனாகவே திகழ்கிறான். கம்யூன் வாழ் நாளில் எங்களுக்குக் கிடைத்த பாடம்*; ஏழையாகிப்பாருங்கள் யதார்த்த வலி புரியும்..

நடைமுறை மாற்றுவழி: அதையும்மீறி பசு பாதுகாப்பு உணர்வு நம்மில் மேலோங்கினால், நாம் வெரும் நுகர்வோராக, பார்வையாளராக இருந்து பேசுவது போலித்தனமாகிவிடும். நாம் நுகரும் பாலுக்கான மாட்டை நாமே வளர்க்கணும், அதன் எதிர்காலத்திற்கு உகந்த காப்பீட்டுத்திட்டத்தை துவங்கி எட்டுவருடம் பால் தந்த மாட்டை மேலும் பத்துவருடம் பாதுகாத்து வரலாம். இயலாத பசுவை பேணுவதுன்னா என்னங்கிர ஞானம் நமக்கும் கிடைக்கும், கஸ்தூரிபா அம்மையாருக்குக் கிடைத்தமாதிரி.

அது சாத்தியமில்லை என்று தோணினால் பால் நுகர்ச்சியை விட்டுவிடணும். பால் நுகர்ச்சி 'மானிட' உணர்வுக்கு எதிரான செயல். பிள்ளையின் முதல் எட்டு பத்து மாதங்களே தாய்ப்பால் உணவு என்கிற இயற்கை நியதியை மீறி ஆயுளுக்கும் அவள் முலைப்பாலுக்கு ஏங்கி, 'நாசுக்கா'க செய்த ஏற்பாடே மாட்டுப்பால். சுதந்திரமான ஜீவன்களை டொமஸ்டிகேட் செய்வது எந்த வகையில் நியாயமான செயல்? வாழும் ஜீவராசிகளில் யாரும் செய்யத்துணியாத, மிருகத்தனத்தைவிட கேவலமான செயல் ஆயுளுக்கும் பால் அருந்துவது என வாதம் செய்யும் மேனகா காந்தியின் அகிம்சை எவ்வளவோ போற்றதக்கது. அதுவே யதார்த்ததிற்கு உகந்த 'பசு' பாதுகாப்பு வாதம்.


ஒத்திசைவு(complementarity): பல்வேறு மொழி, இனம், மதம், நடை, உடை, பாவனை என வேறுபாடுகளை சரளமாகத் தனதகம் கொண்ட பாரதத்தாய், தனது பெருங்குடும்பத்திற்கு அழகு சேர்க்கும் அணி அலங்காரமாகவே அவற்றைப் பார்க்கிறாள்.

வேஷ்டி கட்டினால் அழகு, குர்தா பைஜாமாவும் அழகு; அங்கவஸ்திரமும் 'டை'யும் இங்கே ஒரு சேர வேலை செய்யும்; தேனினும் இனிய தமிழ் மொழி தாண்டவமாடும் அதற்கு கன்னடமும் தெலுங்கும் பின்னிசைக்கும். சாமிக்கு நேர்ந்து சடாமுடி வளர்ப்பது மனநிறைவென்றால், அதே சாமிக்கு மொட்டை அடிப்பது முழுநிறைவு; சாமி சிலையை பின்னொருவர் காயப்படுத்தினால் மதக்கலவரம், அதே சாமியை அலங்கரித்து மேளதாளத்துடன் நீர் நிலையில் ஊர்கூடி போட்டுடைத்தால் இறைவிழா. முரணாகத் தெரியவில்லை?

தெரியவில்லையே! இவையெல்லாம் பல்வேறுபட்ட வழிமுறைகள் என உணரும் மனபக்குவம் உள்ளதால் நமக்கு முரணாகத்தெரியவில்லை.

இப்படித்தான் வாழ்வின் ஒவொவொரு அம்சமும் எதிரும் புதிருமானதாக உள்ளது. விவசாயி இராப்பகல் கண்விழித்து ஆடு மாடு மேயாமல் பயிரை பாதுகாப்பான், கடன் வாங்கியாவது உரமிட்டு வளர்ப்பான் பின்னர் அவனே நாள் குறித்து ஆள் கூட்டி மொத்த பயிரையும் அறுதெடுப்பான். குஞ்சு பொரிக்க பழுதற்ற முட்டைகளை அடைவைப்போம்; உடையாத முட்டை இருபத்தியோராம் நாள் உடைந்தால்தான் குஞ்சு உடையாவிட்டால் அது கூமுட்டை. இருபது நாள் உடைந்துவிடக்கூடாதே என ஏங்குவதும், இருபத்தியோராம் நாள் உடையணும் உடையணும் என வேண்டுவதும் நமக்கு முரண்பாடாகத் தெரிவதில்லை. சூரியன் இன்றி வாழ்வில்லை; எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு எப்பண்டா அவன் அடைவான் என ஏங்குவோம்; மழைவேண்டி வர்ணஜெபம், கழுதை கல்யாணம் நடத்துவோம், கொட்டுமழை நிற்கட்டும் சாமி என வேண்டுதல்ஜெபமும் நடத்துவோம். வேண்டப்பட்டவரை பார்க்கத் துடிப்போம், அவரே கண்ணை மூடிட்டால் 'சவத்த எப்ப தூக்கப் போரீங்க' ம்போம்.

எதிரும் புதிரும் என்பது ஒன்றுக்கொன்று விரோதமானது என நாம் தப்புக்கணக்கு போடுகிறோம். உடலியலால் ஆணும் பெண்ணும் எதிரும் புதிருமே. இந்த இனம் நீடிக்க அவர்கள் எதிரும் புதிருமாயிருப்பதே அடிப்படை. அவை முரண் அல்ல, ஒன்றுக்கொன்று ஒத்தாசையானவை (complementary), நீ விட்டதை நான் முடிப்பேன் என ஓடும் ரிலே ரேஸ் போல.

இரவும் பகலும் போல; வளர்ப்பதும் போற்றுவதும் பின்னர் வீழ்த்துவதும் விவசாயத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி வரை ஒன்றுக்கொன்று இணக்கம் (compatible) கொண்டதே என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. பொருளாதாரம் சார்ந்த உணவியல் ஒன்றும் விதிவிலக்கல்ல.

ஒன்றுக்கொன்று இடம்கொடுத்து வாழ்ந்தால் பசு வதையும் இல்லை, அதனால் சமூக வதையும் இல்லை.
---- -----


* கம்யூன் நண்பர்கள் ஏழரை வருடம் நிலத்தை ஆதாரமாக்கி சுய சார்பு வாழ்க்கை வாழ, மதுரையை அடுத்த பாலமேடு-தெத்தூர் கிராமத்தில் செய்த பயி
Send feedback

Saturday, January 14, 2012

மத்திய அமைச்சரவையின் அசையா மூலதனம் அந்தோணியாகும்.......

வங்கிகள் ஆண்டுதொறும் அவர்களின் வரவு செலவு கணக்கை அறிவிப்பார்கள். அதில் கடன்கொடுத்து வராதவைகளையும் தங்கள் சொத்துக்களோடு சேர்த்திருப்பார்கள் . அதேசமயம் இந்த சொத்தின் மூலம் வங்கிக்கு "முக்காத்துட்டு" வரும்படி வராது. பேப்பரில் மட்டும் எழுதிவைப்பார்கள் .இதனை ஆங்கிலத்தில் N PA(Non performing asset) என்பார்கள்

டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்களும்,சக அமைச்சர்களும் பாதுகாப்புத்துறை அமைச்சர் A.K. அந்தோனியை நமுட்டுச்சிரிப்போடு NPA என்றுதான் அழைப்பார்கள். .

உலகத்தின் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்திய ராணுவம் சுமார் 1கோடியே 13 லட்சம் பேர் பணியற்றுகின்றனர். அதன் தலமைதளபதியாக ஜெனரல் வி.கே .சிங் இருக்கிறார்.அவர் பிறந்த தெதியில் சிக்கல் எற்பட்டுள்ளது.அதற்குக் காரணம் பாதுகாப்பு அமைச்சரவைதான். அந்தோனி செய்யவேண்டியதை செய்யவேண்டியநேரத்தில் சரியாக செய்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது . ஜெனரல் சிங் அமைச்சருக்கு கடிதம் எழுதியும் பதில்போடாமல் இருந்ததால் வந்த வினைதான் இன்று உலகத்தின் முன் ஒரு அற்புதமான ராணுவ வீரன் ஒருநாட்டின் தளபதி தலைகுனிய வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.

ஜெனரல் சிங்கின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்தான். அவருடைய மனைவி ராணுவ மருத்துவ மனையில் தான் 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தெதி குழந்தையப் பெற்றார். ராணுவ மருத்துவ மனையில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிங்கின் தந்தயின் ராணுவ கோப்புகளிலும் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருயைய s.s.l.c. சான்றிதழிலும் 10-5-51 என்றுதான் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறுவன் சிங்குக்கு 14 வயதாகும் போது அவன் தந்தை மகனை தேசீய ராணுவக் கல்லுரியில் சேர்க்க விரும்பினார். சிறுவன் அதற்கான மனுக்களை வாங்கி தன் ஆசிரியரிடம்கோடுத்து பூர்த்தி செய்யச்சொன்னான்.ஆசிரியரும் பூர்த்தி செய்து கொடுத்தார். அதி பிறந்த தேதி 10-5-50 என்று குறிப்பிட்டிருந்தார். படித்து பட்டம்பெற்று ராணுவத்ர்தில் சேர்ந்து சிறந்த வீரன் என்று பெயரெடுத்து லெப்.ஜெனரல் ஆனார் சிங். அடுத்து அவர்மேஜர் ஜெனரல் பதவிக்கு வரவேண்டும்.அப்பொது தான் ராணுவ அமைச்சக அதிகாரி அவருடைய பிறந்ததெதியில் உள்ள முரண்பாட்டினை தெரிவித்தார்.அதிர்ந்து போன சிங் ராணுவ அதிகாரிகளின் யோசனையின் பேரில் எதாவது ஒருதெதியை தெர்ந்தெடுத்தால் பொதும் என்றும் அதனை பணிக்காலத்தில் மாற்ற மட்டேன் என்றும் எழுத்துமூலமாக உத்திரவாதப்படுத்த வே

ண்டும் என்றும் கூறியதால் அவ்வாறே செய்தார்.

அவர் உண்மையில் பிரந்த தெதி1951. ஆனால் வேண்டாதவர்கள் மொட்டை பொட்டு அவருடைய பிறந்தநாளில் சிக்கல் உள்ளது என்றும் அவருடைய பிறந்தவருடத்தை 1950 என்று தான் கணக்கிட வேண்டுமென்ரும் சாதிக்கின்றனர். அமைசகமும் 50என்று முடிவு செய்து அவரை ஓய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஜெனரல் சிங் பல சந்தர்ப்பங்களில் அமைச்சக அதிகாரிகளொடு மோதியவர்.நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர்.1கோடியே 13 லட்சம் பெருக்கு காலுக்கு பூட்ஸ் வாங்க வேண்டுமானாலும் ஒப்பந்தகாரர்கள்தான். அவர்கள் சட்டைகளில் பொடும் பித்தலை பொத்தான் கூட வாங்க ஒப்பந தகாரர்கள் தான். "ராணுவம் தன் காலால் நடப்பதில்லை.அது தன் வயிற்றால் நடக்கிறது" என்று சொல்வார்கள். எந்தப்பாவி பத்தவச்சானோ !

ஜெனரல் சிங் அந்தோணிக்கு பலமுறை கடிதத்தின் மூலம் தன் பிற்ந்த தெதியை சரிசெய்யும்படி கேட்டுக்கொண்டும் எதுவும் அவர் செய்யவில்லை.

இது என் சுய மரியாதையை,நேர்மையை பாதிக்கும் என்கிறார்ஜெனரல் சிங்.

இந்திய ராணுவத்தின் மரியாதையும் பதிக்கப்படும்.

இதனைதவிர்க்க ராஜீனாமாசெய்துவிடலாமா என யொசிக்கிறார்.ஜெனரல் சிங்!

Tuesday, January 10, 2012

மாட்டுக் கறியும் மத்திய பிரதேசமும் .......

மாட்டுக்கறியும் மத்தியப்பிரதெசமும்.......

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக மாட்டுக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய விவாதம் நடந்து வருகிறது. நக்கீரன் கோபால் "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி " என்று அறிவு பூர்வமாக ஒரு கட்டுரை எழுத அந்த கட்டுரைக்கு பதிலடியாக அ.தி.மு.க தொண்டர்கள் நக்கீரன் அலுவலகத்தை தாக்கியுள்ளனர்.

இன்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி 400 ரூ யாக விற்கிறது.அதேசமயம் மாட்டிறைச்சி 80ரூ லிருந்து 100 ரூயாக விற்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சாதரணமக்களுக்கு மாடு ஒரு இரண்டாவது வருமானத்தைத்தரும் ஒன்றாக இருக்கிறது. இன்று நம்நாட்டில் ஒரு பழைய கணக்குப்படி 3கோடி மாடுகள் இருக்கிறது என்கிறார்கள். பால் மாடுகள் 1லிட்டருக்கு 20 ரூ கொடுக்கிறது. பால் வற்றிய மாடுகள் விவசாயிக்கு ஒரு பெறும் சுமை.அவற்றிர்க்கான தீவனம் வேறு உள்ளது. இது தவிர காளை மாடுகளின் பிரச்சினையையும் அவன் சந்த்திக்க வேண்டியதுள்ளது.காளை மாடுகளை,உழுவதற்கும்,கமலை அடிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ட்ராக்டரும்,பம்புசெட்டுகளும் அவனுக்குதுணையாகிவிட்டன்.இன்று காளைமாடுகளை ஊசிமாடுகளாகவே வைத்துள்ளனர்.அவனுடைய தேவைக்கு 50 கறவைக்கு ஒரு காளை போதும். பிறக்கும் காளை கன்றுகளை காட்டிற்குள் அனுப்பி விடமுடியாது.காடுகளும் சிறுத்து வருகின்றன.இவற்றிர்க்கான புல் வைக்கோல் ஆகியவற்றால் பராமறிப்புச்செலவுதான் கூடும். வருமானம் தராத காளைகளையும், பால்வற்றிய கறவை மாடுகளையும் விவசாயிதலையில் கட்டுவது என்ன நியாயம்? வயதான இவைகளைப் பயன் படுத்தினால் மூக்கு ஒழுகி நிற்குமே தவிர பயன்படாது. அதனால் தான் தொடர் பொருளாதாரத்தின் அடிப்படையில் இவை இறைச்சிக்காக அனுப்பப் படுகின்றன.அதன் மூலம் விவசாயிக்கு 2000 மோ 3000 மோ வருகிறது. இது விவசாயப் பொருளாதாரத்தின் அங்கம்.சமனப் படுத்தும் வழிவகையாகும்.

மேலை நாடுகளில் காளைக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாமிசத்திற்காக விற்கப்படுகின்றன..அங்கு இவை "டின்"களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன . அது ஒரு தொழிலாக மாறிவிடுகிறது. விவசாயிக்கு அங்கு இடமில்லை. அதன் லாபத்தில் அவனுக்குப்பங்கு இல்லை. கிலோ. 80 ரூ கிடைக்காது. அது சந்தைப் பொருளாதரத்தின் அங்க மாகிவிடும்.

ஒரு புராண பேச்சாளர் கூறியதை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ராமாயணத்தின் அடிநாதமான திருப்பம் என்ன? மிதிலையின் இளவரசி சீதை. அரண்மனையில் விதவிதமான உணவுகளை உண்டவர். அவருக்குக் கிடைக்காத சைவ அசைவ உணவா ? ஆனாலும் அழகான மானை பார்த்ததும் அதன் மாமிசத்தைப் புசிக்க ஆசைப்பட்டு கணவனிடம் அதனைப் பிடித்து வரும்படி கெட்டுக் கோண்டார். சீதா தேவியை தெய்வமாக கொண்டாடுகிறொம். மாமிசம் சாப்பிடுவது என்பது தெய்வ குற்றம் இல்லை. ஆட்டுருவத்தில் வந்த அசுரர்களை அடித்து சாப்பிட்ட முனிபுங்ககவர்கள் வாழ்ந்த நாடு இது. மாட்டுக்கறியை சாப்பிட்டால் மக பாவமா?

நக்கீரன் கோபால் பதில் சோல்லட்டும். அவரை மறைமுகமாக ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க தலைவர்களும் தொண்டர்களும் பதில் சோல்லட்டும்!

இப்பொது மாட்டிறைச்சியை உண்டால் பாவம் மட்டுமில்லை! ஏழு ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளாகும் குற்றம் என்று பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச அரசு சட்டமியற்றி உள்ளது. இந்த சட்டத்தின் படி ஒரு காவலர் ஒரு வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலே கைது செய்யலாம். காவலர் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கத்தேவையில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்தான் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

போபாலிலும் இந்தூரிலும் ம.பி யின் மற்ற பகுதிகளிலும் கணிசமாக வசிக்கும் முஸ்லீம் மக்களின் கதி என்ன ? மனித உரிமை பேசுவோர் என்ன செய்கிறார்கள்?

தலித்துகளுக்காக உயிரைக்கொடுப்பேன் என்று மார்தட்டும் திருமா,கிருஷ்ணசாமிகள், ரவிகள்,குமார்கள்,சந்திரன்கள் என்ன செய்கிறார்கள்?

Saturday, January 07, 2012

நொந்து போயிருக்கிறார் அன்னா ஹசாரே....!

நொந்து போயிருக்கிறார் அன்னா ஹசாரே.....!

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை டிசம்பர் 29ம் தெதி " அன்ன நோந்து போயிருக்கிறார்" என்று நான்கு பத்தியில்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருததுஉண்ணாவிரதம் பிசுபிசுத்தது ,சிறை நிரப்பும் போராட்டம்,உண்ணாவிரதம் ஆகியவற்றை அன்னா கைவிட்டார்.என்றும் எழுதியிருந்தது.

சென்ற ஆண்டு ஜந்தார் மந்தர் முன்பு 15ooo பேர் கூடியிருந்த கூட்டாத்தை 10லட்சம் என்று புளுகிய ஊடகங்கள் மும்பை உண்ணாவிரதத்தில் காலியாக இருந்த பந்தலில் நாற்கலிகளை படம் பிடித்து போட்டது.

நாகபுரியில் ரிசர்வ் வங்கி சதுக்கத்தில் நட்ந்த உண்னாவிரதத்தைப் பார்கப் போன பொது கிடைத்த தகவல் இதுதான்."நான் அன்னா ஹசாரே" என்று எழுதப்பட்ட குல்லாக்கள் 3000 இருக்கும். கட்டுக்கட்டாக ஒரு ஓரத்தில் பிரிக்கப்படமல் கிடந்தது.

விரல் விட்டு எண்ணக்கூடிய நிருபர்கள் தான் இருந்தனர். உண்ணாவிரத்ம் முடிந்ததும்,முழுக்கடலை சுண்டலும் தேனீரும் கொடுப்பதுவழக்கம்..ஆனால் வெறும் குடிநீர்தான் கொடுத்தார்கள் என்று வந்திருந்த வெகுசிலர் பரிதாபமாகச்சொன்னார்கள்.

வரும் ஐந்து மாநிலத்தேர்தலில்காங்கிரசை எதிர்த்துபிரச்சாரம் செய்வேன் என்று அவர் கூறியது தான் காரணம் என்று பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.. கங்கிரசை எதிர்த்தால் பா.ஜ.க வுக்கு ஆதரவு என்றாகிறது. 80ம் ஆண்டுகளில் அன்னா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்செயல்பட்டார் என்பதுகூடுதல் தகவலாக கசிந்தது..அன்னா குழுவிலுள்ள சாந்தி பூஷன் மீது பத்திரம் பதிந்ததில் ஊழல் என்று குற்றம் சாட்டப்பட்டு 27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அன்னா உடல் நிலை சரியில்லை . அவர் இனி போராட்டம் உண்ணாவிரதம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளாதாக செய்திகள் வந்துள்ளன..

ஆட்டம் முடிந்தது.

Monday, January 02, 2012

ரோகிணி நதியும், நதி நீர் பிரச்சினையும்.......

ரோகிணி நதியும் நதி நீர் பிரச்சினையும் .........

நேபாள நாட்டின் ஒரு மாவட்டத்தின் பெயர் கபிலவாஸ்து. 2500 ஆண்டுகளுக்கு முன் அதுஒரு தலைநகரமாக இருந்தது. நகரத்தின் நடுவில் ரோகிணிநதி வடக்கிலிருந்து
தெற்காகபாய்ந்தோடுகிறது.அதன் மேற்குக் கரையில் கபிலவாஸ்துவை தலைநகராகக் கொண்டு சாக்கிய இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.கிழக்குக்கரையில்
கோலியன்நகரை தலைநகராகக் கொண்டுகோலிய இன மக்கள்வாழ்ந்தனர்.விவசாயம்தான் அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது.

ஓராண்டில் மழை பொய்த்துவிட்டது .இரண்டு பகுதியிலும் பயிர் தீய்ந்து போகும் நிலை.கொலிய மக்கள் தங்கள் பயிரைக்காப்பாற்ற ரோகிணி ஆற்றிலிருந்து நீரினை மடை மாற்ற விரும்பினர். சாக்கியர்களுக்கும் அதே பிரச்சினைதான் அவர்களும் ரோகிணி ஆற்றின் நீரை பயன்படுத்த விரும்பினர். இரண்டு குழுக்களுக்கும் இடையே வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.இரண்டு பக்கமும் தூண்டிவிட ஆளிருந்தனர்.சாக்கியர்கள் தங்கள் இனத்தின் பஞ் சாயத்க்தைக் கூட்டினர். கொலியர் மீது யுத்தம் தொடுப்பது- அவர்களை அழித்து நீரையும் நிலத்தையும் பிடுங்கிக் கொள்வது என்பது தீர்மானம்.

சாக்கியர்களின் தீர்மானத்தை சாக்கிய இளைஞன் சித்தார்த்தன் தன்னந்தனியனாக எதிர்த்தான். அவனை மற்றவர்கள் ஏளனம் செய்தனர். ஏகடியம் பேசினர். அவனுடைய ஒற்றை எதிர்ப்புக்குரல் எடுபடவில்லை.திர்மானம் நிறைவேற்றப்பட்டது. சித்தார்தனோ தன் எதிர்ப்பை கைவிட மறுத்தான். பஞ்சாயத்தின் தீர்மானத்தை எதிப்பவன் மரணதண்டனைக்கு ஆளாக வேண்டும்.சித்தார்த்தன் தண்டனையை எற்பேன்.யுத்ததை எற்கமாட்டேன் என்று நின்றான்

"ஆயுதங்களால் சகோதரர்களாக வாழ வேண்டியவர்கள் தாக்கிக் கொள்ள வேண்டுமா? நீர் வற்றிய குளத்தின் மீனைப் போல இரண்டுபக்கமும் துடிதுடித்து சாக வேண்டுமா? மக்களுக்குள்ளே பகமையை பரப்ப வேண்டுமா? கோலியர்களோடு பேசி தீர்வு காண்போம் " என்பது சித்தார்தனின் வேண்டுகோள்.

சித்தார்தனுக்கு மரண தண்டனை உறுதியானது. பஞ்சாயத்தில் ஒருவிதி உண்டு. தீர்மானத்தை ஏற்காதவன் சகலத்தையும் துறந்து ,வீடு,மனைவி,குழந்தை குட்டிகளைத்துறந்து வெற்று நாட்டிற்கு அகதியாகச்சென்று வாழலாம் என்பது அந்த விதி. சித்தார்தனின் மனைவி மற்றுமுள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சித்தார்தனை வெளிநாட்டிற்கு அனுப்பி வத்தார்கள்.

ரோகிணியாற்று படுகைவழியாக நடந்த சித்தார்த்தன் கயா வந்தடைந்தான் .

. பிற்காலத்தில் சித்தார்த்தனை " புத்தன் " என்று மக்கள் அழைத்தனர்.