Monday, August 22, 2011


டாக்டர் கிரண்  பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......


























    

டாக்டர் கிரண் பேடி அவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று...?

டாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......

80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.

காவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக "மகசே" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

சமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.

2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்."அன்ன ஹசாரே" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.

நடந்தவை எல்லம் நல்லவையே!

சந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி "லோக் பால்" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக "ஜன லோக் பால்" என்ற மசோதாவை "அன்னா " குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று "அன்னா " அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்." விடுதலிசெய்யப்பட்டார்"அன்னா " .

திகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .

கிரண் பேடியும் பெசினார்."அன்னா தான் இந்தியா! இந்தியாதான் அன்னா!" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா " இந்திரா தான் இந்தியா! இந்தியாதான் இந்திரா" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.

கிரண் பேடியவர்களே! உங்களுக்குஎன்னவாயிற்று?









டாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......

80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.

காவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக "மகசே" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

சமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.

2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்."அன்ன ஹசாரே" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.

நடந்தவை எல்லம் நல்லவையே!

சந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி "லோக் பால்" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக "ஜன லோக் பால்" என்ற மசோதாவை "அன்னா " குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று "அன்னா " அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்." விடுதலிசெய்யப்பட்டார்"அன்னா " .

திகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .

கிரண் பேடியும் பெசினார்."அன்னா தான் இந்தியா! இந்தியாதான் அன்னா!" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா " இந்திரா தான் இந்தியா! இந்தியாதான் இந்திரா" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.

கிரண் பேடியவர்களே! உங்களுக்குஎன்னவாயிற்று?









































Wednesday, August 17, 2011

"தெய்வத் திருமகள் "---விமரிசனமல்ல ....

"தெய்வத் திருமகள்"---விமரிசனமல்ல .........

" தெய்வத்திருமகள் " திரைப்படம் பற்றி பத்திரிகைகள் விமரிசனம் ந்ல்லதாகவே எழுதியுள்ளன . அவை முக்கியமாக அந்தப்படம் ஆங்கிலப்படத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும், அதனை இயக்குனர் விஜய் குறிப்பிடாமல் விட்டது தவறு என்றும் சுட்டிக்காட்டி யுள்ளன.

பதிவர்கள் சிலரும் அப்படியே விமரிசித்துள்ளனர். ஒரு சில பதிவர்கள் கடுமையான வர்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளனர். ஒருசில வருடங்களுக்கு முன் 12b என்று ஒரு தமிழ் படம் வந்தது.முழுக்க ஆங்கிலப் படத்தை அடியோற்றி இருந்தது.

1949-50 ஆண்டுகளில் "ராஜி என் கண்மணி' என்றொரு படம் வந்தது. கண் தெரியாத பூ விற்பவள் மீது காதல் கொண்ட நாடோடி இளைஞன் அவளுக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து பார்வையை வரவழைக்கிறான். அந்தப்பெண் டாக்டரை காதலிப்பதை அறிந்து ஒதுங்கி விடுகிறான். சார்லி சாப்லின் நடித்த ஆங்கில படத்தின் நகலான இதில் ஸ்ரீரஞ்ஜனி,டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர் . ஜெமினி தயாரிப்பு.

அலக்சாண்டர் டூமாசின் நாவல் தான் உத்தம புத்திரன். இரண்டுமுறை தமிழில் எடுக்கப்பட்டது.

"Two half times " செக் படத்தைத்தான் அமெரிக்கா கால்பந்தாட்டவீரர் பீலியை நடிக்கவைத்து மீண்டும் எடுத்தது.

அகிரா குரசொவாவின் seven samuroy தான் அமெரிக்காவின் Magnificiant seven.

இயக்குனர் ஒருவர் இந்தி,வங்காளி, மராத்தி, மலையாளப் படங்களை சுட்டு தமிழில் இயக்கி வெளியிட்டுள்ளார்.கிட்டத்தட்ட 19 படங்கள் கணக்கில் வருகிறது இவருடைய விருது வழங்கும் விழாவில் இந்த விமர்சகர்கள் கலந்து கொண்டு கும்மியடித்தார்கள்.

விக்கிரம் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்கிறார்கள். அவரோ எல்லாப் பெருமையும் "விஜய்" குத்தான் என்கிறார்." மதறாச பட்டினம் " சிறந்த படம் தானே.பதிவர் ஒருவர் அந்தப்படத்திற்காக தரக்குறைவாக விமரிசித்துள்ளார். சில விமரிசகர்கள் தங்கள் மேட்டிமயை காட்டவிரும்புகிறார்கள். திரைப்பட விமரிசனம் பற்றி திரைப்படக் கல்லூரிகளில் வகுப்பு நடத்துகிறார்கள். இவர்களை அங்கு அனுப்புவது பயிற்சி பெறவைப்பது தமிழ்த்திரைபட உலகத்திற்கு நன்மை பயக்கும்

Saturday, August 13, 2011

தனிப் பயிற்சி மையங்களும்-தனியார் பள்ளிகளும்...

தனிப்பயிற்சி மைங்களும்- தனியார் பள்ளிகளும் ......

சமச்சீர்கல்வி பற்றிய சர்ச்சை முற்றிலுமாக முடியவில்லை. ஆனாலும் ஆகஸ்டு16 ம் தேதியிலிருந்து புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.இதில் ஆசிரியர் இயக்கங்களில் பெரும்பாலானவை இதனை ஏற்று ஒத்துழைப்பு கோடுக்கின்றன. இன்னும் தனியார் பள்ளி நிர்வகங்கள்சண்டித்தனம் செய்துவருகின்றன்."எங்கள் உயிரே பொனாலும் மெற்றிகுலேஷன் " என்ற பெயரை நீக்க மாட்டொம் .ஆங்கிலவழிக்கல்வியை தொடருவோம் "என்று கொக்கரிக்கிறார்கள் இருந்தாலும் நடந்ததுவரை நல்லதே.

மகாராஷ்ட்ற்றா,மத்திய பிரதெசம்,உ.பி,பீஹார் ஆகிமாநிலங்களில் நிலமை மிகவும் வித்தியாசமானது. இங்கு பள்ளிக்குச்செல்லாமலேயே ,வாசப்படியை மிதிக்காமலேயே +2 முடித்து பொறியியல் மருத்துவம் மற்றும் தொழில் முறைக்கல்லூரிகளில் சேர முடியும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் தனியார் பயிற்சி மையங்கள் செய்து கொடுக்கின்றன.உதாரணமாக தொடுவானம் பயிற்சி மையம், நம்பிக்கை மையம் என்று நாகபுரி நகரத்தில்மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மையங்கள் இருக்கின்றன.

இவர்கள் காலை 6மணியிலிருந்து 9மணிவரை பயிற்சி அளிப்பார்கள் மீண்டும் மாலை 5 மணியிலிருந்து 10 மணிவரை பயிற்சி அளிப்பார்கள் .ஒரு மணி நேரத்திற்கு ஒரு "பாட்ஸ் இது கிட்டத்தட்ட 8ம் வகுப்பில் ஆரம்பிக்கிறார்கள். பயிற்சி பெரும் மானவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மையங்களில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை குறிப்புகளை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் 8,9,10,11,12 வகுப்பு பாடங்கள் நடத்தப்படும். மையங்களே தேர்வுகளை நடத்தும். இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி,என்.ஐ.டி,மற்றுமுள்ள பொறியியர்கல்லுரிகளில் ,மற்றும் பிரபலமான மருத்துவ கல்லுரிகளில் இடம் கிடைப்பதை மைய நிர்வாகிகளே கவனித்துக் கொள்வார்கள். ஐந்து ஆண்டுகளுக்கும் மொத்தமாக பல லட்சங்களை பெற்றுக் கொள்வார்கள்.

இவர்களுக்கும் அரசு அங்கீகாரம்பெற்ற பள்ளிகளுக்கும் tie-up உண்டு .பயிற்சி மையங்களில் படிக்கும் மானவர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிப்பதாகவும், அவர்கள் தினம் பள்ளிவருவதாகவும் சான்றிதழ் தருவார்கள் .10 வகுப்பு,12ம்வகுப்பு அரசு தேர்வுகளுக்கு இந்த அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவர்களாக அனுப்பப் படுவார்கள். இந்தப் பள்ளிகளுக்கு ஆகும் கட்டணச்சிலவு என்ன உண்டோ அதனை பெற்றொர்கள் கொடுக்க வேண்டும். அது மட்டுமே 5லட்சமாகும். (ஐந்துஆண்டுகளுக்கும்சேர்த்து)பள்ளிக்கே வராத மாணவனுக்கு கல்விக் கட்டணம் வந்தால் தனியார் பள்ளி நிர்வாகிக்கு கசக்குமா!

இந்த மையங்க ளை நடத்துபவர்கள் காங்கிரஸ்,பா .ஜ .க, சிவசேனை தலைவர்கள் . இவர்கள் பட்டா போட்டுக்கொண்டு விதர்ப்பா,மராதா, சாங்கிலி என்று ஏரியா பிரீத்துக்கொண்டு கல்விச்சேவை புரிகிறார்கள். மக்களவை சபாநாயகராயிருந்த ஜோஷி ,மகாஜன் , மாகே ஆகியோர் மிகச்சிறந்த கல்வி வள்ளல்கள் என்று சொல்வார்கள்.

மைய அரசு நடத்தும் தேர்வுகளில் குறிப்பாக பொறியியல் மருத்துவம் ஆகியவைகளில் கெள்வித்தாள்கள் out ஆவதற்கு காரணம் இந்த மையங்கள் தான் என்பது உலகறிந்த ரகசியம். ஏனென்றால் மையங்களை நடத்துபவர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்.
இந்த அனுபவத்தின் பின்னணியில் தமிழகம் பரவாயில்லை என்று சொல்லத்தோன்றுகிறது.

Wednesday, August 10, 2011

அந்தச்சிறுவனுக்கு அகவை அறுபதாகிறது.....

அந்தச்சிறுவனுக்கு இப்பொது அகவை அறுபதாகிறது.......

சோமயாஜுலு - கல்பாக்கம் தம்பதியரின் மகன் தான் சீத்தாரமன் சின்னஞ்சிறுவன் .பூர்வீகம் காக்கிநாடா பக்கம். தற்போது ஹைதிராபத்தில்தங்கியிருக்கிறார்கள்.தந்தை மத்திய அரசில் இஞ்சினியராக இருக்கிறார்.அடிக்கடி மாற்றல்வரும்.

1969மாண்டு.சென்னாரெட்டி தலமையில் தனிதெலுங்கானா பொராட்டம் நடந்தது. பொக்குவரத்து முழுவதுமாய் நின்று கல்விநிலயங்கள் மூடிவிட்டன. சீதாராமனின் தந்தைக்கு மகனின் கல்வி பற்றி கவலை குடும்பத்தை டில்லிக்கு மாற்றிக்கொண்டர். அங்கு அப்பொதுதான் +2 ஆரம்பம். சீதாராமனை அங்கு சேர்த்தார்.தெச அளவில் நடக்கும் சி.பி.எஸ் சி தேர்வு.

பத்திரிக்கையில் தேர்வு முடிவு வந்தது.பள்ளி அளவில் அவன் பெயரைக் காணவில்லை. மாவட்ட அளவில், மாநில அளவிலும் இல்லை. தொலை பெசி ஒலித்தது.பத்திரிகை நிருபர் பெசினார்.சீத்தாராமன்first in the national merrit list ல் வந்திருப்பதாகவும் புகைப்படம் வேண்டுமென்றும் கூறினார் அந்தச்சிறுவன் யாருமல்ல -மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்கள் அவை குழு தலைவருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தான்.டெல்லியில் பி.ஏ ஹானர்ஸ் படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஜவஹர்லால் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்காக பதிவு செய்து கொண்டார்.

ஜே.என்.யு .வில் மாணவர்களிடையே செயல் பட்டார்.74-78 ஆண்டுகளில் மூன்று முரை தொடர்ச்சியாக மானவர் தலைவராக இருந்தார். அவசரநிலை வந்தபோது தலை மறைவாக இருந்து மாணவர்களுக்கு தலமை தாங்கினார். போலீஸ் கைதுசெய்தது.படிப்பு தடை பட்டது. 75ம் ஆண்டு மார்க்ஸிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மத்திய குழு,செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என்று உயர்ந்தார்.

மிகச்சிறந்த படிப்பாளி. பின் நவீனத்துவ வாதிகளோடு விவாதிப்பதில் அளவு கடந்த ஆர்வமுள்ளவர். த .மு .எ.ச வின் கோவை மாநாட்டில் அவர்பங்கேற்று பெசியதை இன்றும் இலக்கிய ரசிகர்கள் நினைவு கூறுகிறார்கள்.
அத்வானியின் தேரோட்டத்துக்கு முன் டில்லியில் இடது சாரி கலைஞர்களுக்கு ஒரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அப்பொது " சோ " வின் நாடகமான "சம்பவாமி யுகே யுகே" குறிப்பிட்டார்.கலை,இலக்கியத்துறையில் அவருடைய ஞானம் போற்றத்தக்கது .உலகம் முழுவதும் சுற்றியவர்.விடுதலை இயக்கங்களின் முக்கியதலைவர்களுடன் நெருக்கமானவர்.குறிப்பாக யாசர் அராபாத், நெல்சன் மண்டேலா, ஃபிடல் காஸ்ட்றோ ஆகியோரை பலமுறை சந்தித்து விவாதித்துள்ளார்.

சென்னையில் நடந்த த .மு.எ.ச மாநாட்டில்.பரிணாம வளர்ச்சியையும், பத்து அவதாரங்களையும் அவர் இணைத்துபெசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 16,17,18,ம் தெதிகளில் விருதுநகர் மாநாட்டிற்கும் அவர் வரலாம் என்று தெரிகிறது.

first in natinal merit list ல் வந்த சிறுவன் சீதாராமன் ,சீஈதாராம் யெச்சூரியாகி 12-8-11 அன்று தன் அறுபதாவது வயதை அடைகிறார்.இந்தியப் பாட்டாளிகளும், அறிவுஜீவிகளும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள்.அவர்களோடு நானும்நாமும் நீங்களும் எல்லோரும் சேர்ந்து கொள்வோம்.

Haappy Birth day Com. Yechuri !

Wednesday, August 03, 2011

பாலு மஹேந்திரா என்ற அறிவார்ந்த மனிதர்...

பாலு மஹேந்திரா என்ற அறிவார்ந்த மனிதர்......

80ம் ஆண்டுகளின் முற்பகுதியில் சென்னையில் நாவல் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடத்தியது.

பிரபலமான நாவல்கள் தெர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.எழுத்தாளர்களில் ஒருவர் விமரிசிப்பார் . பின்னர் பயிற்சியாளர்கள் தங்கள் கருத்தினை சொல்வர்கள் வந்திருந்த ஆசிரியர் விளக்கமளிப்பார். இப்படி ஒரு பயிற்சிமுகமை இது வர யாரும் நடத்தியதில்லை என்னும் அளவுக்கு வெற்றிகரமாக நடந்தது.

அசோகமித்திரன், பொன்னீலன், என்று பலர் வந்தனர்.அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலை விமரிசிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமுக்கு பாலு மஹெந்திரா அவர்களும் கருத்துரையாளராக பங்கு பெற வந்திருந்தார்.மதிய இடை வேளையின் பொது பாலு அவர்களுடன் பெச வாய்பு கிடைத்தது.

உலக சினிமாவிலிருந்து,பேசினோம்.கோதார்து,டி சிகா,என்று இடதுசாரி கலைஞர்களை பற்றி விவாதித்தோம் .
" பாலு சார்! ஜப்பானிய திரைப்படம் ,பிரன்சு திரைப்படம், ஜெர்மனிய திரைப்படம் என்று இருக்கிற து. அவை அந்த நாடுகளின் கலாச்சார பண்பாடுகளை சித்தரிக்கின்றன. ஒட்டுமொத்த மாக " இந்திய சினிமா" என்று இருக்கிறதா? என்று கெட்டேன்.
மென்மையாகப் பேசுபவர் அவர்.கைப்பிடிச்சுவரிலிருந்து இறங்கி என் அருகில் வந்து எந்தோளில் கைபோட்டு குலுக்கினார்.என்னிடமிருந்து விலகி என் கண்களைப்பார்த்து " தமிழ் சினிமா இருக்கிறது.மலையாள சினிமா இருக்கிறது வங்காள .கன்னட மாராத்தி படங்கள் ,ஏன் இந்தி சினிமாவும் உள்ளது. இந்திய சினிமாவை நம் தான் உருவாக்க வேண்டும். " என்றார்.

Monday, August 01, 2011

நடிகர் வீரப்பனும் வாழைப்பழ காமிக்ஸ்ஸும்

நடிகர் வீரப்பனும் வாழைப்பழ காமிக்ஸ்ஸும் ......

இந்தி திரைப் பட உலகில் காதர் கான் என்ற நடிகர் பேரும் புகழும் பெற்றதற்குக் காரணம் அவர் வாழப்பழ காமிக்ஸை பயன்படுத்தியது தான் என்பார்கள் இந்திய மொழிகள் பலவற்றில் இந்த அற்புதமான நகைச்சுவைக் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் நகைச்சுவை முதன் முதலாக கவுண்டமணி -செந்தில் ஆகியொரால் நடிக்கப்பட்டு அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இன்றும் அந்தக் காட்சியை தொலைக் காட்சியில் பார்க்கும் போது செந்தில்,கவுண்டமணி,ஜுனியர் பாலையா,சரளா ஆகியொர் நடிப்பை பார்த்து பிரமிப்பே ஏற்படுகிறது

உண்மையில் இந்தக்காட்சியை கற்பனை செய்து உருவாக்கிக் கொடுத்தவர் வீரப்பன் என்ற அற்புதமான .நகைச்சுவை நடிகராகும். தமிழ்த்திரை உலகையே புரட்டிபோடும் அளவுக்கு திரமையும் கற்பனை வளமும் கொண்ட அவரை அவர் கம்யூனிஸ்ட் என்பதால் ஒதுக்கித் தள்ளியதுதமிழ்த் திரை உலகம்.

நான் ஹைதிராபாத்தில் இருக்கும் போது அவரை முதன் முதலாகப் பார்த்தேன்.அங்கு தென் இந்திய கலாசாரகழகம் என்ற அமைப்பில் அப்போது செயல்பட்டு வந்தேன் அதன் தலைவர்களாக ஜஸ்டிஸ் ஸ்ரீனிவசாசாரி அகியொர் இருந்த காலம்.(1957) ஒவ்வொரு ஆண்டும்டிசம்பர்மாதம் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு முறை செகந்திரபாத் நிஜாம் பள்ளியில் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகங்கள் நடந்தது.மெடை அமைப்பு கலாசாகரம் ராஜகோபால். தி.ஜானகிராமனின் "நாலுவெலிநிலம்," "வடிவெலு வாத்தியார்" என்று நடந்தது.வடிவெலு வாத்தியாரில் வீரப்பன் பக்காஃப்ராடும் ,திமுக அனுதாபியுமான ஒரு தையல் காரராக நடிப்பார். இதே நாடகத்தில் ஆப்ரகாம்வாத்தியாராக பிரபாகரென்ற நடிகரும்நடிப்பார். தமிழ் நடகத்துறையும்,இலக்கியவாதிகளும் கைகோத்து நடை பயின்ற அற்புதமான காலம் அது.

ஜெயகாந்தன் "உன்னைப்போல் ஒருவன்" என்ற படத்தை இயக்கி அளித்தார். அதில் வீரப்பனும் பிரபாகரும் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர் அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது .ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த தேசிய விருதாகும் அது

ஜெயகாந்தன் கம்யுனிஸ்டாக அடையாளம் காணப்பட்டதால் அதனை வேளியிட விடாமல் செய்யப்பட்டது. தனிக் காட்சியாக எல்.ஐ.சி ஊழியர்கள் வெளியிட்டு . கையைச்சுட்டுக் கொண்டனர்.