Saturday, November 23, 2019




ராமாயணம்,மகாபாரதம் , ஏன் ?

கிரேக்க புராணங்களும் 

என் பாட்டன் சொத்துதான் ...!!!




என் பால்ய நணபர் ஒருவர் கேட்டார் . 

பகவத் கீதை பற்றி  நீ என்ன நினைக்கிறாய் ?

"காலங்களில் வசந்தம் என்றும் ,மாதங்களில் மார்கழி என்றும் காண்ணதாசன் சொல்லும்போது வியாசன் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் முப்பத்தி ஐந்தாவது பாடலாக அதையே சொன்னால் ஏற்கத்தான் வேண்டும்."என்றேன்.

"கீதையின் தத்துவ விசாரணையில் எனக்கு விருப்பம் உண்டு. அறிவு என்றால் என்ன என்ற கேள்வியை வியாசன் எழுப்புகிறான். அனுபவத்தின் சாறு தான் அறிவு என்கிறான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதக்கூறியுள்ளான்.  இது பகுதி உண்மை"

"மதுரையிலும்மாஸ்க்கோவிலும் சாலைகள் உள்ளன. புது தில்லியிலும் நியூ யார்க்கில் சாலைகள் உள்ளன. சமந்தரையில் தான் அவை அமைந்துள்ளன. பூமி தட்டையாக உள்ளது என்பது நமது அனுபவம்.. ஆனால் உண்மையில் பூமி உருண்டையாக   இருப்பது தான் யதார்த்தம்."

அனுபவம் மட்டுமே அறிவாகுமா ?

மகாபாரதம்,ராமாயணம் மட்டுமல்ல  கிரேக்க புராணங்களும், அரேபிய இரவுக்கதைகளுக் என் பாட்டனின் சொத்து> தட்ஷசீல பல்கலை மாணவன் விஷ்ணுதத்தன் எழுதிய "பஞ்சதந்திர கதை"களும்,எனக்கு பாத்தியதாயானவை."

கிரேக்க மொ ழி,பாரசீகம் ,அரபி,ஸ்வகிலி  ஆகியவற்றின் கொச் சைவடிவத்தை ஆராய்ந்து  பாலி , பிராகிருதம் ஆகிய பேச் \சு மொழியை சீர்திருத்தி  ஒரு செம்மொழியை உருவாக்கிய பாணினி என் முப்பாட்டன்"

கம்பனின் வெண்பாவும் ,வள்ளுவனின் முப்பாலும்,சிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணி,குண்டலகேசியும் என் ரத்தமும்  சதையுமாகும்.

இவற்றை மதவெறியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை நான் ஏற்கவில்லை.  

எனக்கும் அவர்களுக்குமொரு வித்தியாசம் உண்டு. நான் கடவுளை   யும்,காதலையும் ஏற்கவில்லை. ஆனால் உலகத்தின் மிகசிறந்த காதல்  தம்பதியர் என்றால் ஜென்னியையும்  மார்க்ஸையும் தான் கூறுவேன் 

அந்த ஜெர்மன் நகரத்து அழகிகளில் ஒருவர் ஜென்னி. கன்னங்களிலும் தாடையிலும் கதுப்பாக சதையைக்கொண்டவன் மார்க்ஸ்..

உன் அழகுக்கு இவனை விட அழகன் கிடைத்திருபானே ஜென்னி என்று தோழிகள் ஜென்னியிடம் கூறு வார்களாம்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இப்படியொரு அறிஞன் பிறக்கப்போவதில்லை என்ற என்  மார்க்கஸுக்கு காதலியாக மனைவியாக இ ருக்கரண்டி பைத்தியக்காரிகளே என்று பதிலளிப்பாராம் ஜென்னி. 

வறுமை அவளை வாட்டியது> பட்டினியா இருந்தாலும் ம் பிள்ளைக்கு பால்கொடுப்பாள் .பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசிமறைப்பாள் " என்றான் கவிஞன் .

ஜென்னி மார்க்ஸைவிட ஐந்தாறு வயது மூத்தவள்.முயங்கும்  பொது "மார்க்ஸ் ரெம்ப வெட்கப்படாதே. நீ ஜெட்டி கூ ட போடாமல் மணியாட் டிக்கொண்டு ஓடும் போதே உன்னை  பார்த்தவள் நான். " என்பாளா ம் ஜென்னி  .இருகைகளாலும் மார்க்ஸ் முகத்தை முடிக்கொள்வானாம்.வெட்கத்தில்.

இவர்கள் வறுமையை அறிந்த நன்பர் கொங்சம் கோதுமைமாவும் சில ஷில்லிங்குகளையும் எடுத்துக் கொண்டு அவர்களை பார்க்கசென்றிருக்கிறார.அங்கு அவர்பார்த்தக்காட்ச்சி அதிர்சசி அளித்துள்ளது.

ஷேகஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடக வசனத்தை மார்க்ஸ் ரோமியோவாகவும் ஜென்னி ஜூலியட்டாகவும் பேசி நடித்துக்கொண்டிருக்க குழந்தை பெற்ரோரைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்ததாம்.

ஜென்னியை மறக்க முடியாது. !

மார்க்ஸையும் மறக்க முடியாது !!

மார்க்சிசத்தையும் தான்!!!








Monday, November 11, 2019





"பாபர்மசூதி" தீர்ப்பும் ,

இயக்குனர் அமீரின் 

கருத்தும் .....!!!


உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி  பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். "பருத்தி வீரன் " பட இயக்குனர் சமூக வலைத்தளத்தில்  பகிரங்கமாக தன கருத்தை சொல்லிவருபவர். அவர்  தீர்ப்பு பற்றி  தன்  கருத்தை சொல்லியிருக்கிறார் .

மிகவும் வித்தியாசமான அதேசமயம் ,முதிர்சசியான கருத்தினை சொல்லி இருக்கிறார் ..

" கொலைக்கு கொலை என்பதுஇஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளது தன் மகன் கொலைசெய்யப்பட்டான் என்றால் நான் ரத்த உறவுள்ள நான்  கொலை செய்ய உரிமை உள்ளவன்> அதற்காக யாரையும் கொலை செய்வ தில்லை . என்மகனை கோலா செய்தவனை கொலைசெய்ய எனக்கு இஸ்லாமிய சட்டமனுமதி அளிக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்த சட்டம் நடைறைப்படுத்தப்படுகிறது "

"இது ஒருவகை நியாயம் . கொலைசெய்தவர் தவறாக  நடந்து விட்டது - இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.  ஏற்படும் நட்டத்தை பணம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்றும் சொல்லலாம்.சம்மந்தப்பட்டவர்கள் அவரை மன்னித்து அதனை ஏற்றுக்கொள்ளலாம்.இதுவும் இஸ்லாமிய சட்டத்தில் உள்ளது> "

"இந்த இரண்டும் தவிர மூன்றாவதாக ஒன்றும் உள்ளது.மகனை இழந்தவர் அந்த கொலையாளியை மன்னிக்கலாம் . இறைவன் அவருக்கு நல்லதையே செய்வான்"

"பாபர் மசூதி இடிக்கப்பட்டுவிட்டது . அந்த இடம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அறக்கட்டகை மூலம் அரசு அங்கு ஒரு கோவிலக்கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்துக்களின் நம்பிக்கையை மேலிறுத்தி  இப்படிகூறுகிறார்கள்.இது சரியா தப்பா  என்பதைவிட நானுறு ஆண்டுகளாக நாம் அனுபவித்தோம். இப்போது அமைதிக்காக அவர்கள் அனுபவிக்கட்டுமே . இஸ்லாம் வழிபாட்டுத்தலம் தான் வேண்டும் அது எந்த இடம் என்பதை சொல்வதில்லை " என்றார் .

மிகவும் வித்தியாசமானப்பார்வையை கொண்டிருக்கிறார் .

"அதேசமயம் இந்த இடி ப்பு விஷயம் இதோடு நின்றுவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார், சு.சாமி வகையறாக்கள் இந்தியா  முழுமைக்கும் ஒரு பட்டியலை தயார் நிலையில் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்> சமரசக்குழவில் இஸ்லாமியர் சார்பாக இத்தொடு  முடிவுக்கு வரவேண்டும் என்று உத்திரவாதம்  கேட்டபோது எதிர்தரப்பினர் அளிக்க மறுத்துவிட்டனர்" என்பதையும் அமீர் சுட்டிக்காட்டியுள்ளார் .

பெரும்பாலான இந்துக்கள் அப்படி ஒன்று நடப்பதை ஆதரிக்கமாட்டார்கள் என்ற தன்  நமபிக்கையும் அமீர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அமீருக்கு நம் பாராட்டுக்கள்.







Sunday, November 10, 2019





உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ,

 பாபர் மசூதியும்....!! 



மசூதி இடிக்கப்பட்டு இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரசசினை  உண் டான பொது இதனை பேசி தீர்க்க வேண்டும் என்று  இடது சாரிகள்  கருதினர் . அப்படி முடியாவிட்டால் இரண்டு கடசியினரும் நீதிமனறத்தின் தீர்ப்பினை  ஏற்றுக்கொள்வது தான் சரியாக இருக்கும் என்றும் குறிப்பி ட்டனர் .

இப்போது திப்பு வந்துள்ளது. முதலில் அமைதிகாப்பது மிகமுக்கியம் . தீர்ப்பை  அலசுவது என்பது ஒருபக்கம் நடக்கட்டும். நாட்டின் அமைதி என்பது மிகமுகக்கியமான ஒன்றாகும்.

தீர்ப்பின் முக்கியமான வற்றை  பார்க்கலாம்.

1992ம் ஆண்டு மதவெறியர்கள் பாபர் மசூதியை    இடித்தது ஒரு கிரிமினல் குற்றம் என்று தீர்ப்பு கிறுகிறது . அப்படியானால் அந்த குற்றமிழைத்தவர்களுக்கு என்ன தண்டனை ?

1949ம் ஆண்டு தொழுகை நடந்து கொட்டிருக்கும் கட்டிடத்திற்குள்  இரவு ராமர் பொம்மையை கொண்டுவைத்தது குற்றம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. வைத்தவர்களை என்ன செய்ய ?

1991ம் ஆண்டு இந்திய அரசு ஒரு சட்டம்  கொண்டுவந்தது. அதன்படி இந்தியா சுதந்திரம் பெற்ற பொது எந்தெந்த வசுழிபாட்டு தலங்கள்  எந்தெந்த மதத்தினரிடம் இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டமென்று அந்த சட்டம் குறிப்பிடுகிறது. பாபர் மசூதி மட்டும் அதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டது> இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு.. 

மசூதி இடிக்கப்பட்ட இடம் சர்சசைக்குரியதாக அறிவிக்கப்பட்டது யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோவிலை இருந்தாக சொன்தை நீதிமன்றம் ஏற்க வில்லை . அதேபோல் நிலம் மசூதிக்கு சொந்தம் என்பதையும் ஏற்கவில்லை.

ஆகையால் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறுகிறது. 2.7 ஏக்கர் நிலத்தை அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. . இஸ்லாமியர்களுக்கு மசூதிக்காட்ட 5 ஏக்கர் நிலத்தை அவர்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்து கட்டித்தரவேண்டும் என்கிறது தீர்ப்பு.

இறுதியாக அரசு வசம்  வந்துள்ள நிலத்தை  ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் அங்கு  ஒரு கோவில் கட்டி  கொடுக்க வேண்டும் என்பதும் தீர்ப்பாகும். இது பெரும்பாண்மை இந்துக்களின் நாம்பிக்கை யை அடுத்து எடுத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த திப்பினை எதிர்த்து மாறிய பரிசீலனை செய்ய மீள்வார்கள் என்றும் குறைப்படுகிறது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பு சொல்லியிருக்கும் பொது மறு  ஆய்வு நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.