Tuesday, December 30, 2014

"ஊடக ரௌடிகள் "



போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் ! அதுபற்றி  செய்திகளை அறிய "சன் " தொலைகாட்சியை பார்த்தேன் ! 

பாவம் ! போக்குவரத்து சீர்குலைந்ததால்மக்கள் படும்பாட்டை கல்லும்கரையும்வண்ணம் காட்டினார்கள் !

வாழப்பாடி அருகே ஆளும் கட்சி ரௌடிகள் ஆளும்கட்சி தொழிலாளர்களை தாக்கினார்களாம் !

எப்போதும் 7/- ரூ டிக்கட் தான் வாங்குவார்கள் ! இப்போது 30/- ரூ வாங்குகிறார்கள் என்று ஒருவர் அங்கலாய்த்தார் !

தொழிலாளர் ஸ்ட்ரைக் என்றால்  இவர்களுக்கு மக்கள் நலன் புலப்பட ஆரம்பிக்கும் !

தீபாவளியின்பொது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்து கட்டணம் 1500 /- ரூ தனியார் வாங்கியபோது கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் தான் இவர்கள் !

பெற்றோலுக்கும்,டீசலுக்கும் வரி போட்ட பொது பொத்தி கொண்டிருந்தவர்கள் தான் இவர்கள் !

இவர்களின் மாமனும் மச்சானும் தான் தனியார் பேருந்து உரிமம் உள்ளவர்கள் !ஒரு பண்டிகை,நல்லது வர விடமாட்டார்கள் ! அரசு அனுமதியிலாமலேயெ  அதிக கட்டணம் வசூலிப்பார்கள் ! 

வேல நிறுத்தத்தால் பொது மக்களுக்கு சங்கடம் உருவாகிறது தான் !

ஏல ! "பொதுமக்கள் " ங்கறது யார்ல ? போக்கு வரத்து தொழிலாளி போராடும்போது அரசு,ஊழியன், தனியார் கம்பெனி சிப்பந்திகள் "பொதுமக்கள்"

 அரசு ஊழியன் போராடும்போது தொழிலாளி" பொதுமக்கள் "!

காலம் வரும்ல ! அப்ப போக்குவரத்து தொழிலாளி மட்டுமல்ல ! அரசு ஊழியன், தனியார் கம்பெனி சிப்பந்திகள் , ரிக்ஷா,ஆட்டோ, ஏன் பாடுபட்டு உழைக்கிற மனுசன் அத்துணை பேரும் "செயின்ட் ஜார்ஜ் " கோட்டை வாசல்ல நிப்போம் ! 

அப்பம் வச்சுகிடுதம் !!!







Friday, December 26, 2014

"Tyranny of Democracy "

"கொடுங்கோன்மை ஜனநாயகம் "



பெரும்பான்மை கருத்தாளர்கள் சிறுபான்மை கருத்துக்களை கேட்டு அதனையும் அணைத்துக் கொண்டு செல்வது தான் ஜனநாயகம் ! 

"என்னிடம் பெரும்பான்மை  உள்ளது ! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை " என்று செயல்படுவது ஜனநாயக மல்ல !

மூ லதன ஜனநாயகத்தில் இத்தகைய மனநிலை ஆட்சியாளர்களுக்கு உருவாவது மிகச்சாதரணமானது  தான் ! அதிகார பலம் ,பணபலம் கொண்டு ஆள் சேர்த்து  அதற்கு ஒருஜனநாயக வடிவம்கொடுப்பார்கள் ! 

இதனைத்தான் "Tyranny of Democracy " (கொடுங்கோன்மை ஜனநாயகம் ) என்று வர்ணிக்கிறார் மாமேதை லெனின் அவர்கள் !

முகர்ஜி என்ற ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்திட்ட "அவசரசட்டம்" அதனையே காட்டுகிறது !

இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முடலீட்டினை உயர்த்தவும், நிலக்கரியை எடுக்க தனியாருக்கு தாரை வார்க்கவும் என்ன டா அவசரம் ! அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாமே !

இன்சூரன்ஸ்  மசோதா மாநிலங்கள் அவையில் வந்தது ! அதனை select குழுவின் பரிசீலனக்கு அனுப்பினார்கள் ! மீண்டும் அவையின் பரி சீலனைக்கு வந்தது ! அவையின் பரி சிலனை விவாதம் ஆகியவை இன்னும்முடியவில்லை ! இன்றைய நிலையில் அது மாநிலங்கள் அவையின் சொத்து ! ஜனாதி பத்தி அதில் தலையிடலாமா ?

கேட்டால் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமால் செய்கிறார்கள் என்று ஆளும் பா.ஜ.க சொல்கிறது !

சுக்ராம் நு ஒரு மந்திரி ! தொலை பேசி துறையில் ஊழல் செய்தார் ! அதை விசாரிக்க வேண்டும் என்று பதினைந்து நாட்கள் நாடாளுமன்றத்தை நிலைகுலையச்செய்தாரே goodgovernance  வாஜ்பாய் ! பின்னர் அதே சுக்ராமை தடவி உச்சிமோந்தது வேறு விஷயம் !

நாடாளுமன்ற ஆவணங்களை பரிசீலிக்கலாமா ? நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று பார்ப்போமா ? 

"ஜனநாயகம் ,ஜனநாயகம் " என்று கூச்சலிடுவான் முதலாளி அவன் நலன் காக்கப்படும் வரை !

இல்லை என்றால் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு இது தான்  ஜனநாயகம் என்று கொக்கரிப்பான் !

இதனைத்தான் Tyranny of Democracy என்கிறார் லெனின் !!!

கொடுன்கோன்மை ஜனநாயகம் என்பது இது தான் !!!!!

 

  













  

Thursday, December 25, 2014

"தியேட்டருக்கு " 

போகாதீர்கள் .......!!!


நான் திரை அரங்கிற்கு போனது கடைசியாக "நண்பன் " என்ற திரைப்படம் நாகபுரியில் "ரிலீஸ் " ஆன சமயம் ! நங்கள் குடும்பத்தோடு ஐந்து பேர் போனோம் ! சுமார் 1500 /- ரூ  செலவு ! என்மகனிடம் கேட்ட பொது சொல்ல மறுத்துவிட்டான் ! பின்னர் தெரிந்து கொண்டேன் ! அன்று முடிவு செய்தேன் இனி தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டாம் என்று !

அதன் பிறகு தியேட்டரில் பார்க்கவில்லை ! சென்னையிலிருந்து உறவினர்கள் மூலம் "சிடி" வாங்கி வீட்டிலேயெ பார்ப்பேன் !  மூப்பின் காரணமாக தியேட்டர், படி ஏறி இறங்குவது சிரமமாக இருப்பதும் ஒரு காரணம் தான் !

இப்பொழுதெல்லாம் வீட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு பார்ப்பது கூட  சிரமமாக இருக்கிறது ! மூன்று  மணிநேரம் தொடர்ச்சியாக உட்காருவது முடியவில்லை ! ஒரு படத்தை முன்று sitting  ல் பார்க்க வேண்டியதுள்ளது ! "சதுரங்க வேட்டை " சிடி வந்து ஆறு மாதமாக துங்கிக்கொண்டிருக்கிறது ! 

புதனன்று என் மகன் "Pk " என்ற படம் நன்றாக இருக்கிறது ! நீங்கள்  கண்டிப்பாக பார்க்க வேண்டும் !அமீர்கான் நடித்தபடம் ! சர்சைக்குரிய படமாதலால் தடை செய்ய வாய்ப்பு உண்டு ! நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் ! நான் online ல் டிக்கட் வாங்கிவிட்டு காரை எடுத்து வருகிறேன் !தயாராக இருங்கள்" என்றான்!

'அமிர் கானா ? கண்டிப்பாக தடை வராது ! ஏற்கனவே "மோடியை " பார்த்ததாக செய்தி வந்துள்ளது ! நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ! அரசியல் செல்வாக்கு இருக்கும் "என்றேன் !

மதியம் நான் "கதறகதற " என்னையும் முத்து மினாட்சியயும் தியேட்டருக்குள் தள்ளி விட்டான்  !

ஒரு டிக்கெட் 240 /-ரூ ! இர்ண்டு பேருக்கு 480 /- ரூ ! தண்ணி பாட்டில் கொண்டு போகக்கூடாது ! அது ப்பாட்டில் 40/- ரூ ! காபி 60/-ரூ ! பாப்கார்ன் 80/​ரூ !

விஜய், சூர்யா என்று மக்களை தியேட்டரில் படம் பார்க்கும்படி கேட்கிறார்கள் ! 

"சிடி"யை தடை செய்ய விஷால் முன் நிற்கிறார் !

தீயெட்டர் காரனை பாருங்க சாமிகளா !!

இல்லைனா "தியேட்டருக்கு போகாதிங்க மக்களே!!

இப்பொழுது எல்லாம்  விட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு 


Wednesday, December 24, 2014

        

"pk "   

(இந்தி திரைப்படம் )


2014ம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம் என்று நான் கருதுகிறேன்  அது என்ன "PK " என்ற தலைப்பு ?

கேரளத்திலும் ,இலங்கையிலும் ஆப்பிரகாம் கோவூர் என்ற பகுத்தறிவு வாதி (rationalist ) இந்தியாவையே கலக்கிக் கொண்டிருந்தார் ! அவருடைய வாழ்க்கையின் சில பகுதிகளை ஒரு பாத்திரத்தில் புகுத்தி கோவூர் என்று அழைக்கப்பட்ட அவரின் மாதிரியாக "pk " என்று வைத்தேன் என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி ! (K  for kovoor )


கதை 

வேற்று உலகத்திலிருந்து   பூமியை அறிய வருகிறான் ஒருவன் ! அவன் மிண்டும் தன வாகனத்திற்கு செல்ல அவனி டம் ஒரு REMOTE உள்ளது ! அவன் இறங்கிய இடம் ராஜஸ்தானம் ! அவனுடைய REMOTE ஒரு திருடனால் களவாடப்படுகிறது ! அவனை விரட்டி செல்லும்  பொது திருடனின் டேப்ரி கார்டார் அவன் கையில் சிக்குகிறது ! அந்த வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் தான் "PK "!

மக்களைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ! அவர்களுடைய தோல் பலநிறத்தில்,பச்சை,சிவப்பு,மஞ்சள்என்று பலவண்ணங்களில் உடலிலிருந்து வழிந்து கொண்டு இருக்கிறது !  பின்னர் புரிந்து கொள்கிறான் ! அவர்கள் தங்கள்தோலுக்கு பாதுகாப்பாக ஆடை அணிந்துகொள்கிறார்களென்பதை ! டேப்ரிகார்டரை கொண்டு தன்  மானத்தைமறைத்துக்கொள்கிறான் !  

அவனுக்கு பேச்சு மொழி தெரியாது !ஆனால் ஒருவர் கையைதோட்டால் அவனால் அவர்கள் நினைப்பதைபுரிந்துகொள்ள முடியும் ! அறிந்து கொள்ளமுடியும் ! ஆண் - பெண் என்று வித்தியாசம் பாராமல் தொடுவதால் அவன் அடிவாங்குகிறான் ! அவனை செகாவத் என்பவர் கப்பற்றுகிறார் ! அவனுடைய remote ஐ  டெல்லிபோய் தேடும்படி சொல்கிறார் !

அங்கு அவன் ஜகஜனனி என்ற பெண்ணை சந்திக்கிறான் ! ஜக்கு என்று அழைக்கப்படும் அவள் பெல்ஜியத்தில்  ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில்  பணியாற்றியவள் ! பெல்ஜியத்தில் சப்ஃரோஜ் என்ற இளைஞனைக் காதலிக்கிறாள்! அவனொரு பாகிஸ்தானி ! ஜக்குவின் தந்தை இதனை ஏற்க மறுக்கிறார்! தன குருஆன சாமியாரை கேட்கிறார் ! சாமியார் இந்த திருமாணம் நடக்கக்கூடாது என்று சொல்கிறார் !

மீறி  சர்ச்சில் திருமண  ஏற்பாடுகளை இருவரும் செய்கிறார்கள் ! தகவல் தவறால் இருவரூம்பிரிய நேருகிறது ! ஜக்கு பெல்ஜியத்திலிருந்து புது டெல்லி வருகிறாள் ! அங்குதான் அவள் pk  யை சந்திக்கிறாள் ! தொலை  காட்சி அறிவிப்பாளறான  அவள் pk வை  வைத்து நிகழ்ச்சி நடத்த விரும்புகிறாள் !

மக்கள் எதையும் "பகவான் " செய்வார் என்று வாழ்வது pk வுக்கு ஆச்சரியமளிக்கிறது !

தன்னுடைய remote "பகவான் " மூலம்கிடைக்குமா ?என்று தேடுகிறான் ! அனுமார்,கிருஷணர் ,ஏசு,நபிகள், புத்தர் என்று யாருமே அவனுக்கு உதவவில்லை ! 

அவனுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது ! இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவன் என்கிறீர்களே ! உங்கள்  உடம்பில் அடையாளமிருக்கிறதா ! என்று கேட்கிறான் ! மருத்துவமனைக்குச் சென்று பிறந்த குழந்தயின் உடலில் அடையாளம் இருக்கிறதா என்று சோதிக்கிறான் !

இறுதியில் ஜக்குவின் குடும்பசாமியாரிடம் அவனுடைய ரிமோட் இருப்பது தெரிகிறது ! தொலைக்காட்சி நிகழ்ச்சியில் pk -சாமியார் விவாத மேடையில் சாமியார் தோற்க remote  ஐ பெற்றுக்கொண்டு தன்கிரகத்திற்கு செல்கிறான்  pk  !


நமக்கு ஒரு சங்கடம் வந்தால் நாம் உடனடியாக தீர்வை தேட கடவுளிடம் தான் செல்வோம் ! ஆனால் கடவுளுக்குத்தான் எத்தனை "மானேஜர்கள் " ! இவர்களை சாடுவது தான் இந்தப்படத்தின் ஆதார சுருதி ! அற்புதமான திரைகதை அமைப்பு !

"pk " வாக நடிக்கும் அமீர் கான் சிறப்பு ! குறிப்பாக முதல் பாதியில் பேசாமல்.தன கண்கள்,உடல் மொழிமூலம் தன்னுடைய பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் !

"பகவான் ஹை கஹாங்  ரே தொ" (கடவுள் எங்கே இருக்கிறார்) என்ற பாடலுக்குப்பின் அவர் கணபதி,சரஸ்வதி ,கிருஷ்ணர் சிலைகளுக்கு முன்  நின்று பேசும் போது நம் நெஞ்சமும் கதறுகிறது ! 

ஜாக்ஜ்ஜனனியாக நடிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு இந்த ஆண்டு விருது கிடைக்கவேண்டும் ! மகிழ்ச்சி,துக்கம், பரவசம் என்று கண்சிமிட்டும்னேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ! anchor ஆக நடிக்கும் அவரின் உடல் மொழி பாவனைகள் பிரபலமான ஒருவரை கண்முன் நிறுத்துகிறது !

முரளிதரனின் காமிரா மிகவும் நேர்த்தி !

வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே ,அழவும், சிந்திக்கவும் ,தெளிவு பெறவும் வைக்கும் படம் 

"PK "





Monday, December 22, 2014

 

N .M .S அவர்களே 

1963ம் ஆண்டு ! காப்பிட்டு ஊழியர்களின் தென்மண்டல கூட்டமைப்பின் அங்கமாக தமிழ் நாடு,கெரளா,ஆந்திரா,கர்நாடகா ,பாண்டிசெரி ஆகிய மாநிலங்கள் இருந்த காலம் !

மண்டல மாநாடு மதுரையில் நடக்க விருந்தது !

மண்டலதலைவராக அந்த மாபெரும் போராளி மோகன் குமார மங்கலம் இருந்தார் !

செயலாளர்.மற்றும் மண்டல பொறுப்பாளர்களாக தோழர்கள்மேனன்,ராம்ஜி என்று அழகு சேர்த்தனர் !

மாநாடு மதுரை அழகப்பன் அரங்கில் நடந்தது ! 

மொகன் தன் அலுவல்கள் காரணமாக பதவியிலிருந்து விடுப்ட்டு தன்னுடைய நண்பர் இளம் வக்கீல் சங்கரன் அவர்களை கொண்டுவர விருப்பம் தெரிவித்தார் ! 

தென் மண்டல் பொதுச்செயலாளராக புதியவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள் !

மிகவும் இளமையான ,நெடிய ,என்.எம் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

அன்றிலிருந்து ,ஓய்வு பெற்றது வரை ,அதற்குப்பிறகும் இடைவிடாத போராட்டக்களத்தில் நின்று காப்பீட்டுக் கழக ஊழியர்களுக்கு மட்டுமல்லமல் , உழைக்கும் மக்களுக்காக பணியாற்றிய 

N.M.S அவர்களே

காலம் மாறத்தான் செய்யும் ! ஆனாலும் உங்கள் 

கம்பீரம் குறையவில்லை ! குறையாது !!!

Com .N.M.S I love you














நெப்போலியன் - மயோபதி - பா.ஜ.க ...!!!




துரைசாமி-சரஸ்வதி தமபதியரின் மகன் நெப்போலியன் !  திருச்சி கல்லூரி ஒன்றில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்றவர் ! திரைப்பட நடிகர் ! அவருடைய உறவினர் அரசியலில் பெற்ற செல்வாக்கினால் எம்.எல்.எ ஆனவர் !  பின்னர் பெரம்பலூர் எம்.பி ஆனார் ! மத்திய அமைச்சரும் ஆனார் !

அளவான குடும்பம்.மனைவி இரண்டு மகன்கள் ! 

இந்த மனிதரின் வாழ்க்கையில் சூறாவளியாக தாக்குதல் நடந்தது ! 8வயது மித்த மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி வந்தது ! ஆம் ! தசை சிதைவு நோய் !

குழந்தை வளர அவளர எலும்பு வளரும் ! ஆனால் அதே அளவுக்கு எலும்புக்கு பக்க பலமாக இருக்கும் தாசை  வளராது ! பையன் அடிக்கடி கிழே விழந்தான் ! கைகால் அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறந்தது !

அதிர்ந்து போன நெப்போலியனும் அவர் துணைவியாரும் மருத்துவர்களை தேடி  அலைந்தார்கள் ! இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலை தெரிந்தது !

நாட்டு வைத்தியத்திற்கு திரும்பினார் !

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் டாக்டர் ராமசாமி என்பவர் மயோபதி என்ற சிகிச்சை முறைமூலம் இதனை சீர் செய்கிறார் என்று அறிந்து அங்கு என்று தங்கினார் !

இங்கு மருந்து  கொடுப்பதில்லை ! மாறாக கடுமையான பயிற்சிகளின் மூலம் குழைந்தகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறார்கள் ! குறிப்பாக நீச்சல் பயிற்சி சிறப்பு அம்சம் !

நெப்போலியனின் மகன் கொஞ்சம் தெளிவு பெற்றான் ! மேலும் சிகிச்சை பெற வெளி நாடு போகவேண்டும்! குறிப்பாக அமேரிக்கா !

மகனையும் மனைவியையும் அனுப்பி சிகிசை நடக்கிறது ! இதற்கான மருந்து கண்டுபிடிக்கும்  தொடர்பில் !இருக்கிறார்  ! தன மகனை பரிசோதனையில் ஈடுபடுத்த அனுமதிக்கிறார் ! லட்சக்கணக்கான குழந்தகளின் நிலையையும்,தாய் தந்தையாரின் மனக்கஷ்டத்தையும் புரிந்து கொண்ட நெப்போலியன் இந்தியாவிலும் அத்தகைய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் !

இன்றுவீரவனல்லுரி;ல் பிரும்மாண்ட மான ஆராய்ச்சி மையம் எழுந்துள்ளது ! டாக்டர் ராமசாமி தலைமையில் ! தன வாழ்நாள் சம்மபாத்தியம் முழுமையையும் கொட்டி நெப்போலியன் அதனை  எழுப்பி வருகிறார் !

நாகபுரியில் எனது டாக்டர் நண்பர் ஒருவரின் 12 வயது மகன் ! இதே நோயால் பாதிக்கப்பட்டவன் அங்கு சென்று சிகிச்சைபெற்று வந்தான் !

வீரவநல்லூர் சென்று அந்த மருத்துவ மனையையும் பார்த்தேன் ! சேரன் மாதேவி ​ அம்பை ரோட்டில் தினசரி  நோயாளிகள்   வந்து சிகிச்சை பெருகின்றானர் ! உள் நோயாளிகளுக்கு ஊருக்கு உள்ளெ பிரும்மாண்டமான வளாகம் உள்ளது ! நான் சென்றிருந்த போது குறந்தது நூறு குழைந்தகளாவது சிகிச்சையில் இருந்தார்கள் ! "கட்டுச்சிகிச்சை " என்றமுறையில் சிகிச்சை நடக்கிறது !பயிற்சிக்காக மிகப்பெரிய நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள் !!

பீஹார்.ம.பி.ராஜஸ்தான்,மராட்டியம்,என்று வடநாட்டு மக்கள் தான் அதிகம் ! அவர்கள் தங்குவதற்கும்,நோயாளிக்குழந்தைகள்  தங்குவதற்கும்சிறப்பு  ஏற்பாடுகள் உள்ளன ! 

சிகிச்சை,மருந்து இலவசம் !

இந்த மருத்துவமனையை எனக்கு அடையாளம் காட்டிய தோழர் கவிஞர் கிருஷி அவர்களுக்கு  ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ! கிருஷி த.மு எ க .சாவின் மாநிலக்குழு உறுப்பினரும் ஆவார் !

-------------------------------------------------------------------------------------------------------------------------

நெப்போலியன் பா..ஜ.க.வில் சேர்ந்தது சரியல்ல ! நல்ல மனிதர் ! மோசமான கட்சிக்கு போவானேன் ! 

தசை சிதைவு நோயாளிகளுக்கு அவர் ஆற்றும் பணியை மனதில் கொண்டு அவரை முகநூல் நண்பர்கள்  விமரிசிக்கலாமே !!!









Friday, December 19, 2014

இயக்குனர் மகேந்திரன் 

"கருப்பு கருணா" வை தெரிந்திருக்க மாட்டார் ....!!



சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது ! கோ ட்டு போட்ட பெரியவர்கள் ,சரத்குமார் ஆகியொர் ஆங்கிலத்தில் பேசினார்கள் !  தமிழக அமைச்சர் பேசும் போது விழாவுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்டார் !

இயக்குனர் மகேந்திரன் பேசினார் !

"உலகத்திரைப்படங்களைப் பற்றி அறிவேன் ! திரைப்பட உலகத்திப் பற்றி அறிந்து கொள்ளவில்லை " என்று ஆரம்பித்தார் !

" நமது கதாநாயகர்களும்,நாயகிகளும் இன்னும் மரத்தைசுற்றி வருகிறார்கள் ! இதை நிறுத்தப்போகிறோமா ? அயல்நாட்டு படங்கள பார்த்து ,அவர்களின் பண்பாட்டு, பழக்கவழக்கங்களை அறிந்து கொள்கிறோம் ! நமது ரசனையை விரிவு படுத்து கிறோம் ! இதற்கு இத்தகைய விழாக்கள் உதவுகின்றன ! "

"சென்னையத்தாண்டி இந்தப்படங்களை கொண்டு போக வேண்டாமா ! அதற்காக என்ன செய்யப்போகிறோம் ! செய்யவேண்டாமா ? "என்று கேட்டார் !

" ஐயா ! இவை நடக்கத்தான் செய்கின்றன ! "என்று கத்தவேண்டும் போல் தோன்றியது !

"சாலையே இல்லாத குக்கிராமத்திற்கு" புரொஜெக்டரை " தோளில் சுமந்து கொண்டு "கருப்பு கருணா "என்ற எங்கள்  எஸ்.கருணா உலக த்தின் மிகச்சிறந்த படங்களை போட்டு காண்பிக்கிறான் ! ரயிலே போகாத "கம்பம் நகரில் " சர்வதேச திரைப்பட விழாவை நடத்து கிறான் ! அவனுக்குத் துணையாக எங்கள் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம்  இருக்கிறது ! "

"மத்திய மாநில அரசுகளிடமிருந்து "மூக்கா துட்டு " பெறாமல் மூச்சு காட்டாமல்    இது நடக்கிறது !"

இயக்குனர் லெனின் போன்ற சில நல்லவர்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் !

வளர்ந்து வருகிறோம் !

மாற்று சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவோம் !!!  

உங்களையும் அழைப்போம் ! 

வாருங்கள் ! பாருங்கள் !

அந்த மக்கள் சர்வதேச திரைப்பட விழாவை !!!

 எல்லாப் புகழும் த.மு.எ.க.சங்கத்திற்கே !!!

  "  


Thursday, December 18, 2014

அம்மன்குடி அய்யங்கார் மக 

"ஆயிஷா "வை மதம் 

மாத்துங்கடா !!!




கிறிஸ்துவர்களையும்,இஸ்லாமியர்களையும் இந்துக்காளாக மாற்றி இந்துமதத்தைகாப்பாத்த "மோடி " அரசு முடிவு பண்ணியிருக்கு !

கேட்டா "நான் இல்ல ! ஆர்.எஸ்.எஸ் சொல்லுது " ம்பான்ங்க !

ஆர்.எஸ் எஸ் கிட்ட கேட்டா விஸ்வ இந்து பரிஷத் சொல்லுதும் பான் !

"ஆர்கனைசர் பத்திரிக்கை " தலையங்கம் தீட்டி   இருக்கு !

அம்புட்டு பயலுவளும் அதுக்கு அடங்கினவுங்க !

பெரிய ஆளு  ஒத்தன் சொல்லியிருக்கான் !" இந்துவா மாறினா உனக்கு எந்த சாதி வேணுமோ அதுக்கு போய்க்கோ "  நு சொல்லிட்டான் !

பிராமணான ஆகிகொயில்ல மணியாட்டணூம்னாலும் சரி  போய்க்கோ ஞான்!

கிறிஸ்துவன் நா இரண்டு லட்சமாம் ! இஸ்லாமியன்னா ஐந்து !

நமக்கு தேவை இல்லாத சந்தேகம் வருது !

"நக்வி " நு ஒரு மந்திரி இருக்காரு ! அவர மாற சொல்லலாமே ! மாட்டாரு ! கட்சிய மாத்திடுவாரு !

நம்ம தஞ்சாவூரு அம்மன்குடி ராமானுஜ  அய்யங்காரு மக கிட்ட பேசிபாருங்களேண் !

அதுதான் அண்ணே ! "கனவுக்கன்னி " ஹேமமாலினி ! பா.ஜ.க  எம் பி !

தர்மேந்திரா பஞ்சாபி ! கலயாணமாகி குழந்தைகுட்டியோட இருந்தாரு ! அவர கட்டிக்க ஆசைபட்டங்க !

" ஏண்ணே ! தப்பா ? "

அவரு வீட்டுக்கார அம்மா  முடியாதுண்ணுட்டங்க !

தர்மேந்திரா முஸ்லிமா மாறி "தில்வார் கான் " ஆயிட்டாரு ! அம்மையார் ஹேமா "ஆயிஷா" வா மாறிட்டாரு ! கட்டிக்கிட்டாங்க !

பா.ஜ.க எம்பி ஆயிட்டாங்க !

"ஆயிஷா"  வை மதம் மாறசொல்லுங்க வே !

"இந்து " மதத்தை காப்பாத்தலாம் !!!







Wednesday, December 17, 2014

தோழர் அர்சுணனும் ,

நாடகமும் .......!!!


முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரையில் நாடகபயிற்சி வகுப்பு ! 

பல்வேறு குழுக்கள் நாடகம் நடத்தின ! 

ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் !

வத்தலான ஆசிரியர் தன குழந்தைகளுக்கு தினபதற்காக ஆரஞசுபழம் வாங்கிக்கொண்டு வருவார் ! ஒரு பழம் வாங்கினாலும் நான்கு குழந்தகளும் பங்கிட்டுக் கொள்ளவார்கள் அல்லவா! ஆசிரியர் அவ்வளவுதானே செலவழிக்க முடியும் !

அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வருவார் ! வீட்டு வாசலில் ஆரக்ன்சுப்பழத்தோல் வீசி இருப்பதைப்பார்த்து பதறி விடுவார் !

"என்ன உடம்பு ? யாருக்கு உடம்பு சரியில்லை ? " என்று பதறிக்கொண்டு கேட்பார் !

உடல் நலமில்லை என்றால் தான் ஆரஞசுபழம் திங்க முடியும் என்ற அவல நிலையில் இருக்கும் ஆசிரியர்களைபடம்பிடிக்கும் "பாவனை:நாடகம்" !

ஸ்ரீவில்லைபுத்தூரிலிருந்து வந்த அந்த ஒல்லிப் பையன் ஆரஞ்சு விற்பவனாக நடிப்பார் !ஆரஞசுப்பழத்தை கையில் வைத்து உருட்டி,தூக்கிபிடித்து அசல் வியாபாரியாக அவர் பாவனை செய்து வந்த காட்சி கைதட்டல் பெற்றது !

அவர்தான் இன்று விருதுநகர் மாவட்ட செயலாளராக  வந்திருக்கும் தோழர்.அருச்சுனன் !

வாழ்த்துக்கள் தோழரே !





Monday, December 15, 2014

"அவா " பாடப்போறா ,

"இவா "ளுக்காக ....!!!




சென்ற  வரம் முழுவதும் சென்னையில் இருந்தேன் ! கடுமையான குளிர் பகுதியிலிருந்து வந்தவனுக்கு சென்னையின் மிதமான குளிரும் ,அவ்வப்போது பெய்த மழையும் ரம்மியமாக இருந்தது ! 

நகரத்து "பிளக்ஸ் " போர்டுகளில் நித்யஸ்ரீ அவர்களும்,சௌம்யா அவர்களும் கர்நாடக இசையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் !

ம்யுசிக அகாடமி,நாரதகான சபா என்று பட்டியலிட்டு .ரவா தோசை,அடை அவியல், பூரி கிழங்கு, என்று எந்தெந்த காண்டீனில் எது நன்றாக இருந்தது என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன !

ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் ஆபீசர் நட்ராஜிளிருந்து மாயவரத்தான் வரை விமரிசிக்கப் போகிறார்கள் !

சில நாட்களுக்கு முன்பாக டி .எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரை நினைவு தட்டியது!

"இசைக்கு சாதி உண்டா ? நாதஸ்வரத்தை குறிப்பிட்ட சாதியினரே பாடுகிறார்கள் ? கர்நாடக இசை  "அந்த " சாதிக்கு மட்டுமே உள்ளதா ?"

கிருஷ்ணா தன கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்விகள் இவை !

இன்று காலை கோவை வக்கீல் தோழர் ஞான பாரதியை நலம் விசாரித்தபோது அவர் சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது !

இசையில் ஆரோகணம்,அவாரொகணம் என்பது முறை ! இதனை மீறி  ஆரோகணம் மட்டுமே கொண்ட இசையை நிகழ்த்திக் காட்டியவர்  இளைய ராஜா ! பிஸ்மில்லாகான் "சாஸ்த்ரீய "சங்கிதத்தில் போற்றப்படுபவர் !" என்று அவர் விளைக்கினார் !

--------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கிறது "உரூர்-ஒல்காத் குப்பம் "!

முழுவதும் மீனவ சமூகத்தைச் செர்ந்தவர்கள் வாழும் பகுதி ! இங்கு மார்கழி விழா கொண்டாட விருக்கிறார்கள் !

செவ்விசையை கார்போரெட் நிருவனங்கள் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக உருவான அமைப்பு "வெட்டிவேர் கூட்டமைப்பு "என்பதாகும் !இந்த அமைப்பைச் சேர்ந்த திவ்யா நாராயணன் !"செவ்விசை மேட்டிமைத்தனமாகிவிட்டது ! இதனை பலதளங்களை சார்ந்த மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ! நாட்டுப்புற இசையோடு இவற்றையும் உழைக்கும்  மக்களூக்கு கொடுக்க வேண்டும் !"என்கிறார் !

குப்பத்தில் உள்ள கோவில் வாயிலில் இந்த விழா நடை பெறவிருக்கிறது !டிசம்பர் 29,30 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது !

குப்பத்து குழந்தைகளின் வில்லுப்பாட்டோடு  29ம் தேதி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன !

அன்று மாலை 6.30 க்கு பி உன்னிகிரு ஷ்ணன் செவ்விசை நிகழ்ச்சி அளிக்கிறார் ! அதன் பிறகு :"கட்டைகூத்து " நிகழ்ச்சி நடக்கிறது !

மறுனாள் ஆர்.குமரேஷ் (வயலின்) ஜெயந்தி (வீணை ) சங்கரநாராயணன் (மிருதங்கம்) அருண்குமார் (மோர்சிங் ) நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது ! பின்னர் கலாக்ஷேத்ரா குழுவினரின் நடன  நிகழ்ச்சி உள்ளது ! 

"செவ்விசை மக்களை சென்றடைய வேண்டும் -இசைக்கு சாதி,மத மாச்சரியங்கள் கிடையாது "என்று செயல்படும் கிருஷ்ணா  இதன் பின்னணியில் உள்ளார் என்பது சொல்லாமலேயே விளங்கும் செய்தியாகும் !






Saturday, December 06, 2014

சம பந்தி போஜனமும் ,

சாதிமறுப்பு திருமணமும் ,

சாதியை ஒழிக்குமா ....?


"சம்பந்தி போஜனமும்,சாதி மறுப்பு திருமணமும் சாதியை ஒழிக்காது " என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்  ! 

தீண்டாமையை ஒழிக்க ராஜா ராம்மோகன் ராயும் காந்தியும் பாடுபட்டார்கள் ! ஆனால் இருவரும் அதற்கு அடிபடை சாதி என்பதையும் ,அதன் சல்லி வேரை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறிவிட்டார்கள் ! 

பாரதி போற்றிய தலைவர்களுள் ராம்மோகனும் ஒருவர் ! அவர்பற்றிய கட்டுரை ஒன்றில் " எப்பேர்பட்ட சீர்திருத்தவாதி நீ ! சாகும்போது கூட உன் மார்பில் புரளும் "முப்புரி நூலை " எடுக்க மறந்து விட்டாயே  " என்று கதறு கிறான் !

தாழ்த்தப்பட்டவன் அவன் ! வசதி உள்ளவன் ! தீர்த்த யாத்திரை செல்கிறான்  1 வந்ததும் வழக்கப்படி தன சாதியினருக்கு விருந்து வைக்கிறான் ! விருந்தில் "நெய் " விட ஏற்பாடு செய்கிறான் ! 

புனித நூல் படி தாழ்த்தப்பட்டவர்கள் "நெய்" உண்ணக்கூடாது ! நெய் பரிமாறுவதால் மேல்சாதி இந்துக்களை அவமானப்படுத்திவிட்டான் ! அவர்கள் ஆத்திரம் கொண்டு பரிமாற வைத்திருந்த பதார்த்தங்களை தூக்கி வீசுகிறார்கள் ! உண்ண  வந்தவர்களை அடித்து விரட்டு கிறார்கள் ! அண்ணல் அம்பேத்கர் இதனைகுறிப்பிடுகிறார் ! உயிருக்குப் பயந்து அவர்கள் ஓடிவிடுகிறார்கள் !

1936 ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்தது ! இன்றும் கார்ப்ரெட் காலத்தில் நடக்கத்தானே செய்கிறது ! 

கர்மவினை , ஆன்மீகம்,சாத்வீகம்,புலால் மறுப்பு என்றாலும் இவற்றிர்க்குபின்னால் ஒளிந்திருக்கும் சாதீயம் புலப்படத்தானே செய்கிறது!

 மனிதர்களிடையே ,தன்மையில்,திறமையில்,செயல்பாட்டில் வேற்றுமை இருக்கிறது என்பது உண்மைதான் ! அனைவரும் இந்தவிஷயத்தில் சமம் இல்லைதான் ! அதற்காக சமமானவர்கள் இல்லை என்பதாக நடத்தப்பட வேண்டுமா என்று கேட்கிறார் அம்பேத்கர் ! 

அரசியல் மேடையில் பல கொடுமைகள்  நடக்கின்றன ! அதனை விட சமுக தளத்தில் நடக்கும் கொடுமைகள்படு பயங்கரமானவை ! அரசியல் கொடுமையை எதிர்ப்பவனை விட சமூக கொடுமையை எதிர்ப்பவன்  தீரமிக்கவன் என்கிறார் அண்ணல் ! 

இந்துக்களுக்கு சாதி மாற  முடியாது ! ஒரு சாதியில் செரவேண்டும்  என்றால் அதில் நீ பிறந்திருக்க வேண்டும்   கிறிஸ்துவனோ ,இஸ்லாமியனோ இந்து வாக முடியாது ! அப்படி வந்தால் அவனை எந்த சாதியில்  புகுத்துவாய்  ! அந்த சாதி ஏற்றுக்கொள்ளவேண்டுமே ! அதனால் தான் மதமாற்றம் அனுமதிக்கப் படுவதில்லை  ! இந்துத்வா காரர்கள் மதமாற்றத்தினை இதனால் தான் எதிர்க்கிறார்கள்!

பிள்ளை மகன் ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை காதலித்து மணந்தான் ! ஆண்டுகள் ஓடின ! அவன் மகளுக்கு திருமண  வயது வந்தது !  தாய் தன சகோதரன் மகனை தேர்ந்தெடுத்தாள் ! தந்தை தன சகோதரி மகனை தேர்ந்தெடுத்தான் ! இது சாதீயம் என்பது ஒருமனநிலை என்பதை காட்டவில்லையா ?

சமபந்திபொஜனமும்,சாதிமறுப்பு திருமணமும் மட்டும் சாதியை ஒழிக்காது ! 

சாதியை ஒழிக்க என்னதான் செய்ய வேண்டும் ?

சாதியை கட்டிக்காக்கும் சாத்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை நொறுக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர் !!!

கட்டுரையில் பாரதி கூர்ய்கிறான் !

எல்லாப் பார்பனர்களையும் ஒழித்து விட்டால் 

சாதி அழிந்து விடுமா ....?


"தி இந்து " பத்திரிகையில் பணியாற்றிவரும் "சமஸ் " அவர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் !

உடைக்கமுடியாத அடித்தளத்தை உருவாக்கி சாதிய கட்டுமானத்தை "மனுதர்ம " விதிகளும் ,பார்ப்பனர்களும் தன்னந்தனியாக அழியாமல் காத்து வரமுடியுமா ? என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார் !

பார்ப்பனீயம் "காலத்திற்கு" தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு வாழ்கிறது என்று இதற்கான பதிலாகச் சொல்லப்படுகிறது !

எனக்கு தனிப்பட்ட முறையில் அருமையான நண்பர்களுண்டு ! தத்துவார்த்த நிலையில் என்னோடு உடன் படுகிறவர்களும் உண்டு ! உடன் படாவிட்டாலும் என்னை நேசிப்பவர்கள் அதிகம் ! 

"சாதி ஒழிய வேண்டும்" என்று நினைப்பவர்கள் அவர்கள் !அதன் மூலம் பார்ப்பனியம் என்றும் அதனை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்றும்கருதுபவர்கள் அவர்கள் ! 

வெவ்வேரு "சாதி"(?)  யைச்சர்ந்த எங்களிடையே விவாதம் வந்தது ! சாதீய முறைமையை கடைப்பிடிபதில்  அவரவர் சாதியைப்பற்றி விமரிசிக்க ஒப்புக்கொண்டாம் ! இறுதியில் அது தேவையற்றதாக வெறும் வார்த்தை ஜாலமாக ,இறுதியில் அத்தனைக்கும் மூலகாரணம் "பார்ப்பனியம் "என்றுமுடிந்தது !

அமேரிக்கா  ஹிரோஷிமாவிலும் ,நாகசாகியிலும் குண்டு போட்டதற்குக் காரணம் தமிழ்நாட்டிலுள்ள  "பாப்பான் " தான் என்று திராவிட கழகம் சொல்லலாம் ! 

அது போன்று எங்கள் விவாதம் விதண்டாவாதமாக முடிந்தது !

மகாராஷ்ட்ராவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு "கயர்லாஞ்சி " ஒருபாடமாக அமைநதது !

பையாலால்போட்மாங்கேயின் குடும்பம் கஷ்டப்பட்டு உழைத்து ஒட்டு வீடு கட்டினார்கள் ! இதைப்பொறுக்காத மேல்சாதியினர் அவர்களை வம்புக்கு இழுத்தார்கள் ! பையாலாலின் மனைவி,மருமகள்,மகள் ஆகியோரை நிர்வாணமாக்கி ஊர்வலம் விட்டர்கள் ! பையாலாலின் ,மகனையும், அவன் தாயை ,சகோதரியை புணர வற்புறுத்தினார்கள் ! அவன் மறுத்தபோது அவன் குறியை வெட்டி எறிந்தார்கள் ! அந்தப் பெண்களினுறுப்புகளில் கட்டைகளைச் சொறுகி  கொன்றார்கள் !

இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் எந்தச்   "சாதி " ?

இருபது பெண்கள்,பத்தொன்பது குழந்தைகள். ஐந்து ஆண்களை துடிக்க துடிக்க  தீயிலிட்டு பொசுக்கிய  கோபால கிருஷ்ணன் ஐயரா ? ஐயங்காரா?

பேகம்பூரில் தோல்பதனிடும் தொழிலாளர்களோடு உண்டு உறங்கி  அவர்களை மனிதர்களாக நடமாட வைத்த எ.பாலசுப்பிரமணியம் மறைந்தபோது "ஒரு செம்மலர் உதிர்ந்தது " என்றவர்கள்  "அமிர்தலிங்கம் ஐயர் மகன் தனே "என்று ஏகடியம் பேசியதையும் நாம்கேட்கத்தானே செய்தோம். ! 

தான் ,,தனக்கு,என்று இல்லாமல், குடும்பம் கொள்ளமல் ,துப்புரவுத் தோழிலாளர்களுக்காக  வாழ்ந்து "தீக்கதிர்" அலுவலக மாடிப்படிகளையே தன உலகமாக வாழ்ந்த  "விருத்த கிரி " ஐயர் தானே !

சுய சாதியை, சாதீய கட்டுமானத்தை உடைதெறிய வந்த "பார்பனர்கள் "

அதிகமா ! இல்லை மற்றவர்களா ?

மக்கள் கலை இலக்கிய வாதிகளின் கொள்கையினை ஏற்றுக்கொண்டவன் இல்லை நான் ! ஆனால்  அந்த இயக்கத்தின் மாதையனையும்,வீராச்சாமியும் பார்பனர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்கிறேன் !

தியாகராஜன் என்ற சின்னகுத்தூசியை மதிக்கிறேன் !

வேம்பு ஐயர் மகன் சங்கரன்  என்றாலும் "ஞாநி "   யை  மதிக்கிறேன் ! !

சாதியை  ஓழிக்கும் வேள்வியில் பார்ப்பனர்களை ஒழிக்கும் பொது இந்த நல்லவர்களையும் ஒழித்து விடுவோமோ என்றும் பயப்படுகிறேன் !!! 



 

தத்துவார்த்த நிலையிலென்ணொடு உடன் படுகிறவர்களும் உண்டு   

Thursday, December 04, 2014

Film Music and V.R . krishna Iyer 


Film Music and "VRk "

’ஆக்கபூர்வமான கலை வெளிப்பாடு என்பது பற்றி பரிசீலிக்கும் போது அதன் ஆத்மாவைக் கண்டறிதல் வேண்டும்.

இசைப்பணியில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் அந்த இசையை அனுபவிப்பதை அவனுடைய உரிமையாகக் காண்கிறான். திரப்பட தயாரிப்பாளர் அவனுடைய எஜமானன் என்ற முறையில் அதனைப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டவர். இரு உரிமையாளர்களும் ஒரே நேரத்தில் உரிமைகளைத் தொடர முடியாதா? என்ற கேள்வியை நீதிபதி வி ஆர் க்ருஷ்னய்யர் எழுப்புகிறார்.

ஒரு திரப்படத் தயாரிப்பாளரோ திரைப்படத்தில் திரைப்படப் படிமங்களையும் இசையையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறார். அவரால் இசையை மட்டும் பிய்த்து தனியான பொது நிகழ்ச்சியாகக் கொடுக்க முடியாது.

இதனை ஒரு இசை அமைப்பாளரால் ஒரு இசைக் கலைஞரால் கொடுக்க முடியும் அந்த கலைஞனும் பொது மக்களும் பரவசமடைய முடியும் இந்த உரிமையைத் தயாரிப்பாளர் பறிக்கலாமா? எனும் கேள்வியை எழுப்புகிறார்.

அதன் பிறகே இன்று இசையமைப்பாளருக்கான உரிமையும், அதன்பின்னான இசைக்கலைஞர்களான பாடகர்களுக்கும் பாடலுக்கான ராயல்டி உரிமையும் (1913 அக்டோபர் 5 முதல்) கிடைத்தது.

Syamalam Kashyapan திருமதி ஹன்ஸா அவர்கள் திருச்சியில் வழக்குறைஞராக பனியாற்றுகிறார் ! Legal aspects of Musicology என்ற தலைப்பில் பட்ட மேற்படிபுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டர் ! இதற்கு வி ஆர்.கே அவர்களின் தீர்ப்பு மிகவும் பயன்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் ! அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிலைத்தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளதை தந்துள்ளேன் !

11 mins · Like

Wednesday, December 03, 2014

அந்த விளம்பரம் பற்றி ......!!!



அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கலாம் ! புதுதாக திருமணம் ஆனவர் ! 

"நான்  நினைத்தபடி எனக்கு அமைந்தது ! இவ்வளவு சீக்கிரம் இது நடக்குமென்று நான் நினைக்கவில்லை  !"

சோபாவிலமர்ந்திருந்த அவள் கணவன் வெட்கம் கலந்த பெருமிதத்தோடு பார்த்தவிட்டு குனிந்துகொண்டான் !

"அழகா எனக்கு பிடித்தமாதிரி " அந்தப்பெண் தொடர்கிறாள் ! 

அவள் கணவன் அவளைப் பார்த்துவிட்டு தலையை குனிந்து  கொண்டு "இப்படி எல்லாம் பேசுகிறாளே ! வெட்கமில்லாமல் " என்று நினைத்துக் கொண்டு லேசாக தன தலையில் செல்லாமாக அடித்துக்கொள்கிறான் !

"அழகா, சின்னதா , குட்டியா " அவள் தொடருகிறாள் !

கணவன் அவளை  நிமிர்ந்து   பார்க்க  மேலும் என்ன சொல்லப்போகிறாள் என்பதை  கேட்க ஆசையோடு பார்க்கிறான் !

"இப்படி ஒரு ப்ஃளாட்  கிடைக்கும் என்று " அவள் தொடறுகிறாள் !

தன்  புது மனைவி தன்னை சொல்கிறாள் என்று நினைத்த கணவன் ஒரு சிறு புன்னகையோடு தன்  ஏமாற்றத்தை மறைத்துக்கொள்கிறான் !

"அருண் பில்டேர்ஸ் " விளமபர  படம் இது !

concept ,takings ,நடிப்பு எல்லாமே அருமை !

குறிப்பாக புது மணத்தம்பதியாக  Anchor "dd"  யும்  அவருடைய கணவர்  ஸ்ரீகாந்தும்  அருமையாக நடித்தனர்!

ஸ்ரீ காந்தின் நடிப்பு  சபாஷ் போட வைக்கிறது !

( சென்னையில் உள்ள பிரபலமான கல்லுரி ஒன்றில் பேராசிரியராக இருக்கிறாராமே anchor "dd" )