Monday, January 31, 2011

நெகிழ்ச்சியான நேரம்....

நெகிழ்ச்சியான நேரம்.....


"நலந்தான" என்று அப்பாதுரை அவர்கள் மின்னஞ்சல் மும் கெட்டிருந்தார். " அய்யா சுகமா" என்று கவிஞர் சிவா கெட்டிருந்தார். பல நண்பர்கள், தோழர்கள்,பதிவர்கள் தொலைபெசி முலமும் ,மினஞ்சல் மூலமும் விசாரித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

நடந்தது இது தான் என்னுடைய மடிக்கணிணி பழூதடைந்து விட்டது.தொடர்பு கொள்ளமுடியவில்லை.

முப்பது ஆண்டுகளாக சர்க்கரை நோய். காலை,மதியம், இரவு ஊசி.மாத்திரை,கட்டுப்பாடான உணவு இவைஅத்துணையையும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் முத்துமீனாட்சி(என் துணைவியார்) கவனித்துக்கொள்கிறார்.அவர் இல்லை என்றால் என் சமாதியில் புல் முளைத்திருக்கும்.

பதிவர்கள் தொலை பேசியில் பதட்டத்தோடு விசாரிதது, "ஐயா!நல்லாயிருக்கேளா?", சார் சௌக்யமா? எனும்போது நெஞ்சம்விம்மியது.

இந்தப் பரிவும் பாசமும் என்னை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாழவைக்கும்.

ஒரு சின்ன கரிசனமிக்க விசாரிப்பு ,அதுவும் நான் பார்த்தே இராத முகங்க்களின் விசாரிப்பு எவ்வளவு சுவைமிக்கது. வடமொழியில் ஒரு சொலவடை உண்டு."லோகோ பின்ன ருசி: " என்பார்கள்.உலகம் பிரும்மாண்டமானதுதான்.பிரும்மாண்டம் அழகல்ல.அதன் பின்னங்கள் தான் அதனை அழகுபடுத்துகிறது.

உங்கள் அத்துணை பேருக்கும் என் நன்றி.

Glory to You Comrades!

Tuesday, January 18, 2011

ஐவரானோமா?......

சிறுகதை


ஐவரானோமா? (காஸ்யபன்)

வங்கி மானேஜர் அந்த ஃபாக்ஸ் செய்தியைப்பார்த்தார்.

பிராந்தீய அலுவலகத்திலிருந்து இன்ஸ்பெக்ஷன் குழு வருகிறது.தயார் நிலையில் இருக்கவும்.

புண்ணியமூர்த்தி பெருமூச்சு விட்டார் பிராந்தீய அலுவலகத்தின் ஆடிட் அண்ட் இன்ஸ்பெக்ஷ்னுக்கு செக்ரட்டரி லெவலில் எம்.எஸ். முத்துதான் பொறுப்பு.

எட்டு ஆண்டுகள் இருக்குமா.இல்லை பத்து ஆண்டுகள் இருக்கும்.ஆம். சாத்தூரில் செக்ஷன் இன் சார்ஜ் ஆக இருந்த பொது நடந்தது.

முனியாண்டி தான் வந்தான்.

"சாமி...சாமி"

வாசலில் குரல் கேட்டு புண்ணியமூர்த்தியின் மனைவி புஷ்பா தான் எட்டிப்பார்த்தாள்.

" இந்தாங்க உங்களை பாக்க உங்க ஆபீஸ் முனியாண்டி வந்திருக்கான்"

ஷேவ் செய்து கொண்டிருந்த புண்ணியமூர்த்தி எட்டிப்பார்த்தான்.

"என்ன முனியாண்டி?"

" சாமி! என் மவன் வந்திருக்கான் சாமி"

கச்சலான நெடிய உடம்பு.குழிவிழுந்த கண்கள்.கண்களில் மிரட்சியும்,நம்பிக்கையின்மையும் கொண்ட இளைஞன்.புண்ணிய மூர்த்தியை நோக்கி இரண்டு கைகளையும் காட்டி வணங்கினான்.

"மதுரையில படிக்கான் சாமி"

"என்னப்பா படிக்க"

'பி.ஏ"



" வில் யு கம்ப்ளிட் யுவர் ஸ்டடீஸ்?"

"நோ கொஸ்டின் ஆஃப் டிஸ்கண்டினியுவன்ஸ்"

" லிட்டெரெசரா""

"எஸ் ஸார்ர்"

புண்ணியமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது."முனியா.! ஏகிளாஸ் பையன்.நல்லாபடிக்கவை"

"சரி.. சாமி.நம்ம ஆபீஸ்ல"

" அவசரப்படாத முனியா! அவன் முடிக்கட்டும்.மே மாதம் ஆபீசர் பரீட்சை வருது.ஏன்பா! உம்பெரென்ன?"

"சோள்ளமுத்து"

" முனியா நான் கிளார்க்கா வந்தேன்.இப்பத்தான் செக்ஷன் இன் சார்ஜ்.இந்தாபாரு சோள்ளமுத்து! நிறைய புத்தகம் வந்திருக்கு பரீட்சைக்குள்ள அதெல்லாம் பாத்துக்க..முனியா உம்பையன் பரீட்சை நல்லா எழுதிட்டான்னா ஆபீசர்தான்.மளமளன்னு வந்திரலாம்.ஏன்? எனக்கே ஆபீசரா வரலாம்"

முனியாண்டி நெளிந்தான்.சொள்ளமுத்துவின் கண்களில் நாம்பிக்கை குறைந்த புன்சிரிப்பு.

"சாமி!" முனியாண்டி கால்களைபிடிக்கப் போனான்.

-----------------------------------------------------------------

ஃபாக்ஸ் செய்தியையே பார்த்துக்கொண்டிருந்த புண்ணியமூர்த்தி காலிங் பெல்லைத்தட்டினார்.அக்கவுண்டு அண்டு பெர்சனல் டிபார்ட்மெண்ட் இன் சார்ஜ் வந்த்தர்.

"மார்ச் 15ம் தேதி இன்ஸ்பெல்ஷன் டீம் வருது"

"எஸ் ஸார்"

"எல்லாம் ரெடியா இருக்கா?"

"பக்காவா இருக்கு"

"கீப்-இட்-அப்"

சொள்ளமுத்து புரபேஷனரி ஆபீசராக செர்ந்தான்.பம்பாயில்பொஸ்டிங்....மூன்று ஆண்டுகளில்வடமாநிலங்களில் சுற்றினான்.சி.ஐஓபி..பரீட்சையில் நல்ல ரங்கில் தேரியபோது ஹவுஸ் மாகசைனில் அவன் போட்டோ வந்திருந்தது.முனியாண்டியின் பின்னால் மிரட்சியும் நம்பிக்கையின்மைதெறிக்கும் குழிவிழுந்த கண்களைக் கொண்ட முகமல்ல அது.மகிழ்ச்சி கொப்பளிகஇன்னும் இன்னும் சாதிக்கத்துடிக்கும் புன்முறுவலோடு இருந்தான்.கீழே பெயரும் எம்.எஸ்.முத்து என்று இருந்தது.அவ்வப்பொது தீபாவளி,புத்தாண்டு வழ்த்துக்கள் வரும்.புண்ணியமூர்த்தி தமிழ்நாடு பூராவும் சுற்றினார்.இப்போதுதான் பிராஞ்சு இன் சார்ஜ்.

முத்து மறுநாள் காலை பாண்டியனில் வருகிறான்.காரை எடுத்துக்கோண்டு போய் அழைத்து வரவேண்டும்.நாமே பொவதா இல்லை அக்கவுண்டண்டை அனுப்புவதா? வருவது முத்து அல்ல. ரீஜினல் ஆபீஸ் அதிகரி. செக்ரட்டரி...சே..நம்ம ..கண்முன்னால..நாம கைகட்டி... போகலைன்னா..தப்பில்லை பாரு போகணும்....வேரு வழியில்லை.

ரயிலடியில் ஆஜனுபாகுவாக கம்பீரமாக வந்திறங்கியமுத்து , புண்ணீயமூர்த்தியை "அண்ணாச்சி! அண்ணாச்சி!" என்றுகட்டிப்பிடித்துக்கோண்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. புண்ணிய மூர்த்திக்கும் சந்தோஷம் தான்.பதவியில் தனக்கு மேல் இருந்தாலும் பழயதை மறக்காமல் முத்து இருக்கிறான்.அவருக்கு நிம்மதிதான். இருந்தாலும்.... இருவரும் காரில் ஏறி கெஸ்ட் ஹவுஸ் சென்றார்கள்.

முத்து அவன் குடும்பத்தைப் பற்றி கூறினான்.முனியாண்டி இறந்துவிட்டதைச் சொன்னான்புண்ணியமூர்த்தியின் குடும்பத்தைப்ப்ற்றி விசாரித்தான்.எல்லமே சந்தோஷ்மகத்தான் இருந்தது. இருந்தலும்....

மூன்று நாள் இன்ஸ்பெக்ஷன் முடிந்து முத்து மறுநாள் மதுரை-பம்பாய் பிளைட்டில் மதியம் செல்வதாக ஏற்பாடு.காலை சிற்றுண்டி முடிந்ததும் சொல்லலாமென்று நினத்தார்.அவர் மனதை அது நெருடிக் கொண்டே இருந்தது.எப்படியும் முத்துவிடம் சொல்ல வேண்டும்.சொல்லித்தான் ஆக வேண்டும்....ஆனால் தயக்கமிருந்தது. இருவரும் விமானநிலையம் செல்லும் வரை அவரால் சொல்லமுடியவில்ல.விமானத்திற்காக காத்திருக்கும் போது புண்ணிய மூர்த்தியும் முத்துவும் மட்டுமே இருந்தனர்.மெதுவாக ஆரம்பித்தார்.

" செக்ரட்டரி சார்"

"என்ன அண்ணாச்சி செக்ரட்டரிசர்ங்கரிங்க"

. "அதுதான் சரி"

"அண்ணாச்சி நான் எப்பவுமே உங்களுக்கு முத்துதான்"

" எனக்கு தெரிஞ்சு சொள்ளமுத்துதான்.ஏம்.ஏஸ் முத்து செக்ரட்டரிதான்"

"என்ன அண்ணாச்சி இப்பாடி பேசரிங்க"

"நான் உங்களை செக்கரட்டரின்னே கூப்பிடறென்

" "............"

"நீங்களும் என்னை ப்ரஞ்சு மானெஜர்னே கூப்பிடுங்க"

".........."

"அண்ணாச்சின்னு கூப்பிடாதீங்க"

முத்து புண்ணியமூர்த்தியின் கண்களைப் பார்க்க முன்றான். அதுகருப்புக்கண்ணாடியால் மூடப்பட்டிருந்த்து..

"ஏன் அப்படி சொல்றீங்க" முத்து கேட்டான்.

"எனக்கு பிடிக்கல" என்றார் புண்ணிய மூர்த்தி

"ராமன் குகனை" சகொரன்னு கூப்பிடலையா

' தசரத்னுக்கு நான்கு .உன்னையும் செர்த்து ஐவராவோம்னு ராமன் சொல்லுகிறானே"

"ஆமா"

"வால்மீகியும் கம்பரும் சொன்னதுதானே அது"

"ஆமா"

" நான் உங்களைக்குப்பிடக் கூடாதா?"

'"செக்ரட்டரிசார்! வால்மீகியும் கம்பனும் விபரமானவங்க"

"அதனலதான்...."

"அவசரப்படாதீங்க்" என்று பூண்ணிய மூர்த்தி குறுக்கிட்டார் " குகனை சகோதரனா ஒத்துக்கிட்டேன்னு சொன்னது யாரு?"

"ஏன் ராமன் தான்"

"ராமனால அப்படிச் சொல்லமுடியும். குகனால முடியாது.குகன் ராமனைச் சகோதரன் என்று அறிவிச்ச மாதிரி வால்மீகியோ கம்பனோ எழுதல"

"ஏன்?"

"ஏன்னா அயொத்தியில அன்னக்கே சாதிக்கலவரம் வந்திருக்கும்"

முத்துவின் இதயத்தின் ஓரத்தில் "மளுக்" என்று சத்தம்கெட்டது.

அயொத்தியிலிருந்து நெல்லை மாவட்டம் வரை எத்தனை தூரம், எத்தனை காலம். ஏன் மாற மறுக்கிறோம் .முத்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே பம்பாய் விமானம் தரை இற்ங்கியது. ' (1985 ம் ஆண்டு வாக்கில் நெல்ல கலவரத்தின் பின்னணியில் தினபூமியில் வந்தது)

Saturday, January 15, 2011

வியாபாரிகள் முதலளியான கதை

மதுரை மேல மாசி மேலக்கோபுரத்தெரு முட்டும் சதுக்கத்தைதியாகிகள் சதுக்கம் என்று சொல்லுவோம்.நகர் தொழிற்சங்க குழு நடத்தும் ஊர்வலங்கள் அங்கிருந்து தான் புறப்படும்.விலை உயர்வை எதிர்த்து ஊர்வலங்கள் நடந்துள்ளது.


1967ம் ஆண்டு நடந்த தெர்தலில் அண்ணாத்துரை அவர்கள் நாங்கள் வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்தார். அது நிறைவேறியிருந்தால் ரூபாய்க்கு கிட்டத்தட்ட 5லிருந்து 6கிலோ அரிசியாகும். ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒருபடி என்று ஆட்சியைப் பிடித்ததும் அறுவிக்கப்பட்டது.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே விலைவாசி ஒரு பிரச்சினை தான் ஊர்வலங்களில் கோஷம் எழுப்பி எங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறோம்.அப்பொதெலாம் மேல, வட்க்கு மாசி வீதிகளில் வீடுகள் தான் அதிகமிருக்கும்.இப்போதுபோல் வர்த்தக நிறுவனங்கள் கிடையாது.. மேல மாசிவீதி,பின்னர் வடக்குமாசி வீதி வந்து கிழக்கு மாசிவீதி திரும்பியதும் எங்களுக்கு "சாமி" பிடித்துவிடும்.

கழுத்து நரம்பு புடைக்க, பதுக்கல் காரர்களை தூக்கிலிடு,கள்ளமார்கட் காரர்களை கைது செய், விலயை குறை என்று கூவுவொம்.கீழ மாசிவீதியில் தான் பலசரக்குக்கடைகளும் கிட்டங்க்கிகளும் இருந்தன. இந்த நாடு சுபிட்சமாக வேண்டுமென்றால், இந்த கீழமாசி வியாபரிகளை அமுக்கினல் பொதும் என்று மனதார நம்பினோம்.எதுவும் மாறவில்ல.

நாங்கள் ஊர்வலத்தை நிறுத்தவில்லை.கோஷத்தை மாற்றினோம்."விலையைகுறை" என்பதற்கு பதிலாக "விலையைஏற்றாதே"என்று கோஷம் போட்டோம்.எதுவும் நடக்கவில்லை.விலை ஏறத்தான் செய்தது. நங்கள் ஊர்வலத்தை நிறுத்தவில்லை.கோஷத்தை மாற்றினோம்.விலையை எற்றிக்கோள்ளுங்கள் "மானங்காணியா" ஏத்தாதீர்கள்.கொஞ்சம் கட்டுப்படுத்தி ஏற்றுங்களென்று கூறி "விலை வாசியைக் கட்டுபடுத்து " என்று கோஷ மிட்டோம்.

மினு மாசனியிலிருந்து லால்களும்,ஷா களும் கூப்பாடு பொட்டனர். விலவாசி உயரத்தான் செய்யும்.உயரவேண்டும் அது நம் வளர்ச்சியின் அடையாளம்.வளரும் நாட்டிற்கு அவசியம்" என்று விளக்கினார்கள்.

தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் வேண்டும். அன்று நம் முதலாளி மார்களிடம் மூலதனமில்லை அரசாங்கம் தன் கஜானா விலிருந்து அவர்களுக்கு கொடுக்க முடியாது.ஆ கவே ஒரு தந்திரம் செய்தார்கள். இடுபோருள்,உழைப்பு, லாபம சேர்த்து அடக்கவிலை 5ரூ என்றால் அந்தப்பொருளை 8ரூ-10ரூ விற்றுக்கொள். மிகுதியை மூலதன்மாக்கிக் கொள்ளுங்கள் என்று அன்றய" மன் மோகன்" கள் யொசனை கூறினார்கள் .

வியாபரிகள் முதலாளியான கதை இது தான்.

Wednesday, January 12, 2011

இதயமில்லா உலகத்தின் இதயம்....

இதயமில்லா உலகத்தின் இதயம்


மதுரையில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்த காலம்.என்னோடு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் பரபரப்பாக இருப்பார்.இரவு பஸ்மூலமாகவோ,அல்லது ரயில் மூலமாகவோ சென்னை கிளம்பி விடுவார்.சனிக்கிழமை மதியம் கிண்டியில் "அஸ்வமேத யாகம்". அன்று இரவு பங்களுரு.ஞாயிரு அங்கு குதிரை யாட்டம். இரவு பஸ்பிடித்து மதுரை வந்துவிடுவார். போகமுடியவில்லையென்றால், மதுரையில் உள்ள "புக்கீ" களிடம் பணம் கட்டுவார். நிகர லாபம் அவருடைய பாண்ட், சட்டை, உள்ளாடை வரை கடன். அலுவலகம் வரமுடியாது. கடன் காரர்கள் பிடித்துக் க்கொள்வார்கள்.அலுவலகம் வருவதில்லை.எங்கே போனார் என்பது இன்று வரை தெரியாது. பாவம்.அவருடைய மனைவி இரண்டு பெண்குழந்தைகளொடூ தவித்துப் போனர்.ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாலாவது வருங்கால வைப்புநீதி, பணிக்கொடை ஆகியவற்றை வாங்கித்தரமுடியும். நிர்க்கதியாய், நிராதரவாய் விட்டுப் போய் விட்டார்.

அப்பொதெல்லாம் வைகை ஆற்றில் தண்ணீருக்காக நட்ட நடுவில் ஊத்து போட்டிருப்பார்கள். நண்பரின் மணைவி குளிக்கப் போவதாக பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு மாற்றுத்துணியை குடத்தில் ஒளித்து வைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.இரண்டு பெண்குழந்தகளொடு அவர் எங்கே சென்றார் என்பது தெரியாது.இது நடந்து பதினைந்து வருடமிருக்கும்.

ஒருமுறை சென்னையிலிருந்து பஸ்ஸில் மதுரை வந்து கொண்டிருந்தேன் மாமண்டூர் அருகிள் உணவிற்காக வண்டி நின்றது. நான் சாலையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.சாலையில் ஆணும் பெண்ணுமாக கூட்டம்கூட்டமாக .பொய்க்கொண்டிருந்த்தார்கள்.லட்சக்கணக்கில் செவ்வாடை உடுத்தி அம்மா "சக்தி" வழிபட்டுக்காக மேல்மருவத்தூர் நேர்த்திகடன் செலுத்த சென்று கொண்டிருக்கிறார்கள். எனக்கு "குரு,குரு" என்ற உஅணர்வு ஏற்பட்டது. ஒரு அம்மா தயங்கியபடி என்னையே பார்துக்கொண்டிருக்கும் உனர்வு தட்டியது. நானும் அவரைப் பார்த்தேன்.என் வயிறு கலங்கியது.

"ஐயா! நல்லா இருக்கீங்களா? என்னத்தெரியுதா?"

அதே அம்மையார்தான் .இப்போது சென்னையில் இருக்கிறாராம். கடங்காரர்களுக்கு பயந்து சோல் லாமல் கிளம்பினாராம்.சென்னயில் அண்ணன் வீட்டில் அடக்கலம்.அண்ணன் ஒர்க்ஷாப்பில்மெக்கானிக். எத்துணை நாள்முடியும்.ஐந்துவருடமிருந்திருக்கிறார். பின்னர் ஒடிப்போன கணவரின் சகோதரர் வீட்டில் இருந்திருக்கிறர்.மைத்துனர் ஆட்டோ ஓட்டுனர்.பெண்குழந்தகள் பெரியவர்களாகிவிட்டனர்தனியாக வந்துவிட்டனர். மூத்தவள் "கார்மண்ட்" கம்பெனியில் வேலைபார்க்கிறாள்.இரண்டாமவள் ஒரு மருந்துக்கடையில் "சேல்ஸ்கேர்ல்." எனக்கு பிறகு இந்தப் . பெண்களின் கதிஎன்ன? இவங்களுக்கு ஒரு கலயாணம் காட்சி பண்ணனுமே? நிராதரவான எனக்கு அந்த "அம்மா சக்தி" தான் துணை" அவகிட்ட போறேன்"என்றார்.

இவர்களுக்கு யார் துணை? " அம்மா! நான் மதுரைல தான் இருக்கேன். "என் சட்டப் பையிலிருந்து நூறு ரூ தாளை எடுத்துக் கொடுத்து' பிள்ளை களுக்கு எதாவது பணியாரம் வாங்கிட்டு போங்கம்மா! என்றென்.

"ஐயா! திரும்பி போக காசிலாமத்தான் வந்தென். "அம்மா சக்தி" தான் உங்ககிட்ட நூறு ரூ கொடுத்து விட்டுருக்கா. இல்லைனா நீங்கயாரு/ நான் யாரு? உங்கள இந்த ரோட்ல சந்திக்க முடியுமா? சக்தி மகிமையே தனிதான் என்றார்.கூட்டத்தொடு கலந்து நடக்க ஆரம்பித்தார்.

ஏதுமற்றவர்கள், ஏனோதானோக்கள்,ஆதரவற்றவர்கள் விடும்பெருமூச்சின் பெருமூச்சுதான் இறைநம்பிக்கை.

இதயமற்ற உலகின் இதயம் தான் இறைநம்பிக்கை

ஆன்மா மரத்துப்போன வர்களின் ஆன்மாதான் இறை நம்பிக்கை என்றார் மார்க்ஸ்.

தலைவலி வியதியின் அறிகுறி.வியதியைக் காண வேண்டும். மதம் தலைவலிதான் என்றார்

பதிவர் அப்பாதுரை அவர்கள்

ஜண்டு பாம்,டைகர்பாம் இந்த தலைவலியைப் போக்காது என்றர் என் அருமை கவிஞர் சிவகுமரன்

அனுபவம் இவர்களை மார்க்ஸை நெருங்க வைக்கிறதோ!

Friday, January 07, 2011

எது நிரந்திர்மானது.......?

எது நிரந்தரமானது?


பகிஸ்தனில் சல்மான் தசீர் படுகொலை செய்யப்பட்டார்.அவர் ஒரு இஸ்லாமியர் அவரைக் கோன்றவன் இஸ்லாமியன்.ஆசியா பீவி என்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் அரசு மரணதண்டணை அளித்துள்ளது. அவர் ஒரு கிறிஸ்துவர் .சல்மான் அதனை எதிர்த்தார்.

ஒரு மதமோ அல்லது ஒரு கோட்பாடோ உருவாக வேண்டுமானால் அதனை உருவாக்க மனிதன் வேண்டுமே?மனிதனே இல்லாமல் மதமா? அப்படியானால் இத்துணை மதங்கள் .உருவக வேண்டாமே!

உண்மை வேறு விதமாக உள்ளது.

மனிதன் நிரந்தரமானவன்.மதம் என்பது அவனுக்கு ஏற்பட்ட விபத்து.

இயற்கைக்கும் தனக்கும் உள்ளதொடர்பை தேடிச்சென்றவன் கடவுள் என்ற கருத்தோடு முடித்துக் கொண்டான்.

கடவுளைத்தேடிச்சென்ற முனிவர்கள், தத்துவ ஞானிகள் மவுனமானார்கள்.அவர்கள் கடவுளைக்காணவில்லை.மனிதனையே கண்டார்கள்.

ராமகிருஷ்ணரும்,விவேகானந்தரும், வள்ளலாரும் இதனையேதான் நிலைநிறுத்தினார்கள்.

அப்படியானால் மதம் தேவையில்லையா?தேவையுள்ளவர்கள் வைத்துக்கொள்ளட்டும் அதற்காக . மற்ற மதத்தினர் மீது குரோதம் கொள்ள வேண்டாம்.எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவான பொக்கை அரசு கடைபிடிக்க வேண்டாம்.

அரசு விவகாரங்களில் மதம் தலையிடக் கூடாது. இதனையே- எந்த மதத்தோடும் சாராதிருக்கும் தன்மையையே- மதச்சார்பினம எனலாம்.இது என்னமோ இந்த பாரதீய ஜனதா கட்சி தோன்றியதனால் ஏற்பட்ட கொட்பாடு அல்ல. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒன்றாகும்.

கிறிஸ்து பிறந்ததும் அவருடைய சீடர்கள் அர்பணிப்பு உனர்வோடு ஐரோப்பா முழுவதும் சென்று பணியாற்றினார்கள்.நோயுற்றவர்கள்,வயொதிகர்கள்,குழந்தகள்,ஆதரவற்றவர்கள், ஆகியவர்களை காக்கும் பணிகளைசெய்தார்கள்.ரோமாபுரியில் இவர்கள் ஆற்றிய பணி மக்களைக் கவர்ந்தது.ஏற்கனவே அங்கிருந்த மதம் இதனைக் கண்டு பயந்தது.இந்த மதத்தை கொச்சையாக "பாகன்" என்று அழைபார்கள் அரசு மதமும் இதுவாகத்தான் இருந்தது.கிறிஸ்துவர்களை குறிப்பாக.இளைஞ்ர்களை பிடித்து மதவாதிகளின் தூண்டுதலால் சித்திரவதை செய்தார்கள்.

"கொலொசியம்" என்ற அரங்கில் கிறிஸ்தவர்களை இறக்கி ப்த்துநாள் பட்டினியோடு இருக்கும் சிங்கங்களை அவிழ்த்துவிடுவார்கள்.உங்கள் ஏசுபிரான் உங்களைக்காப்பாற்றட்டும் என்று ஏளனம் செய்வார்கள்.தங்களிடம் பரிவோடு இருக்கும் கிறிஸ்தவர்களை சித்திர்வதை செய்யப்படுவதைக் கண்ட ரோமாபுரி மக்கள் அவர்கள்பால் இர்க்கம் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவமதம் அங்கு பரவியது.

ஒரு கட்டத்தில் கிறிஸ்துவமதம் அரசு ஆதரவைப் பெற்றது.நிலமை தலைகீழாக மாறியது. தங்களைச் சித்திரவதை செய்த "பாகன்"களை கிறிஸ்தவர்கள் கம்பங்களில் கட்டிவைத்து சுற்றிலும் வைக்கோல் போரை பரப்பி தீயிட்டு பொசுக்கினார்கள்.இப்படி மாறி மாறி குரோதமும் கொலைவெறியும்200 ஆண்டுகல் கிறிஸ்தவர்களாலும்,பாகன்களாலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.ரோமாபுரியில் உள்ள அறிஞர்கள், பெரியவர்கள்,தத்துவ ஞானிகள்,விஞானிகள் ஆகியோர் இந்த நிலையை மாற்ற விரும்பினார்கள்.அரசு மதத்திலும் மதம் அரசிலும் தலையிடக் கூடாது என்ற கருத்து உருவாகி மெல்ல மெல்ல வலுப்பெற்றது

. "Secularism " என்ற மதச்சார்பின்மைக் கோட்பாடு உருவாகியது.

இதற்கு நேர் எதிராக மதம் என்பது புனிதமானது என்ற Secred school of thought என்ற கொட்பாடும் எழுந்ததுஇறுதியில் அரசு என்பது மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்ற . Secular school of thought வெற்றி பெற்றது

மதச்சார்பின்மை என்பது நாகரீகமான ஒரு சமூக ஒப்பந்தமாக உருப்பெற்றதுமதச்சார்பின்மை என்பது யாருடைய விருப்பத்தின் காரண்மாகவோ, பெருந்தன்மையின் காரண்மாகவோ வரவிலலை. மனிதகுலம் தன்னை நாகரீகப்படுத்திக்கொள்ள உருவான கோட்பாடாகும்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது,முஸ்லீம்கள் அதிகமக உள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமை அரசுமதமாக அறிவித்தது போல் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்தியாவில் இந்துமதம் அரசு மதமாக் அறிவிக்கப்படவேண்டும் என்ற கூக்குரல் எழுந்தது நமது அரசியல் நிர்ணயசபையில். விவாதிக்கப்பட்டு நமது முன்னோர்கள் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று மிகச்சரியாக அறிவித்தார்கள்

 அதனைக் காக்கும் கடமையைக் கோண்டவர்கள்.காப்பாற்றுவோம்.

Thursday, January 06, 2011

அரசியல் தலைமையும்--நிவாகத்தலைமையும்

அரசியல் தலைமையும் -- நிர்வாகத் தலைமையும்.


ஆட்சி அதிகாரத்தை மக்களின் சம்மதத்தோடு நடத்துவது அரசியல் தலைமைக்கு .அழகு.நிர்வகத்தில் அரசியல் தலயீடு இல்லாமல் பாரபட்சமற்ற முறையில் கொண்டுசெல்ல வேண்டியது நிவாகத்தலைமையின் பொறுப்பு.ஜனநாயகம் தழைக்க இது அவசியம்.

1949ம் ஆண்டு பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மூத்த ராணுவ தளபதிகளை அழத்து கூட்டம் நடத்தினார். புதிய இந்தியாவிற்கு முதன் முதலாக தலைமைத்தளபதியை நியமிக்க நடக்கும் ஆலோசனைக் கூட்டமாகும்.

அந்தக் கூட்டத்தில் " இந்திய தளபதிகளுக்கு அனுபவம் குறைவு.நாட்டின் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இந்தியாவின் முதல் தளபதியாக ஒரு பிரிடிஷ் காரரை நியமிக்க அரசு யோசிக்கிறது.தளபதிகளே உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்" என்று நேரு கெட்டுக்கொண்டார்.

பாரதப் பிரதமரின் யோசனை. தள்பதிகள் சிலர்மண்டையை ஆட்டினர்.சிலர் மவுனம் சாதித்தனர். ஒரே ஒரு தளபதி மட்டும் மெதுவாக எழுந்தார். லெப்.ஜெனரல் நாது சிங் ராதோர் என்பது அவருடைய பெயர்."ஐயா! ஒரு தேசத்தை தலைமை தாங்கும் அனுபவமும் நமக்கில்லை தான்.அதற்காக ஒரு பிரிட்டிஷ்காரரை பிரதமராக்க லாமா? "என்று கெட்டுவிட்டு அமர்ந்தார்.

நேரு புன்னகைத் தார்."ரதோர் நீங்களே அந்தப்பொறுப்பை ஏற்றுக்கோள்ளுங்களென்" என்ற போது" எனக்கும் மூத்தவர் ஜெனரல் கரியப்ப இருக்கிறார். அவரை நியமியுங்கள் " என்றார் ராதோர்.நேரு அதனை ஏற்றார்.( கொஞ்ச நேரமாவது ஆதர்ஸ் சொசைட்டியை மறப்போமே)

1971ம் ஆண்டு.கிழக்கு பாகிஸ்தான் கொந்தளித்துக்கொண்டிருந்த நேரம்.அதன விடுவிக்க இந்தியா ராணுவ நடவடிக்கைக்கு போக விரும்பியது. பிரதமர் இந்திரா அம்மையார் அமைச்சரவையைக் கூட்டினார்.எப்போது. எப்படி தாக்குவது என்பதை முடிவு செய்யவேண்டியதால் தலைமை ராணுவத்தளபதியும் அழைக்கப்பட்டிருந்தார்.பிரதமர்"உடனடியாகத் தாக்குதலுக்கு தயராகும்படி உத்திரவிட்டார்

மண்டையாட்டி அமைச்சர்கள் மவுனமாயிருந்தனர். ஜெனரல் மானக் ஷா மெதுவாக எழுந்தார். "அம்மையார் அவர்களே! துருப்புகளை பல்வெறு தளங்களுக்கு அனுப்ப வெண்டும்.ரகசியமாக சில பணிகளை முடிக்கவேண்டும். எல்லாவற்றிர்க்கும் மேலாக என் வீரர்களின் உயி ரை தேவையில்லாமல் சேதமாக்க விரும்பவில்லை . எனக்கு மூன்று மாதம் கொடுங்கள்.கச்சிதமாக முடிக்கிறேன் " என்றார்.

பிரதமர் மூன்று மாதம் கொடுத்தார். Inandation (பெரு வெள்ளம்) என்ற யுக்தி.யைக் கையாண்டு உலகமே வியக்கும் வெற்றியை இந்திய ராணுவம் பெற்றுத்தந்தது

ராதோர்,கரியப்ப,மானக் ஷ ஆகியோர் மறைந்து விட்டனர்.

Monday, January 03, 2011

தாய்தான்

சிறு கதை


தாய்தான் (காஸ்யபன்)







(இளம் கிரிகெட் வீரர் மஹேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா தோற்றபோது அவர் அவமனப்ப்டுத்த்ப்பட்டார் கட்டிக்கொண்டிருந்த வீடு செதப்படுத்தப்பட்டது.தன்னந்தனியாக இருந்த. அவர் தாய்தந்தயர் அச்சுருத்தப்பட்டனர்.அவருடைய சகொதரி மிரட்டப்பட்டார். 2007ம் ஆண்டு .தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த இறுதிபோட்டியில் இந்தியா வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இனி கதையைப் படியுங்கள்)





காம்பவுண்ட் கதவு பூட்டியிருந்தது.கோபக்காரப் போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.

அவர்கள் வயதானதம்பதியர்.அவ்வப்பொது யாராவது வந்து கதவைத் தட்டினார்கள்."தேவை இல்லமல் அவர்களை ஏன் சிரமப்படுத்துகிறீகள்" என்ரு கூறி போலீஸ்காரர் அவர்களை அனுப்பிவிடுவார்.

அந்த அம்மாள் வெளியில் தலையைக்காட்டவில்லை.. ஜன்னல் கதவைக் கூட சாத்திவிட்டு உள்ளேதான் இருந்தார்.

மணி மூன்றாகிவிட்டது.

"சூடாக தேநீர் தரட்டுமா?" என்றார் அம்மையார்.

"சரி"

" கொரிக்க ஏதாவது? "

நம்கீனையும் பொரியையும் கலந்து அதில் எலிமிச்சைச்சாறை பிழிந்து ஒரு தட்டில் கோண்டுவந்தார். பெரியவர் அதனை ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.

மகனின் கொடும்பாவியை எரித்த நினைவு தட்டியது தொலைக்காட்சியில்,பத்திரிகைகளில் பார்த்தபோது பயமாக இருந்தது புதிதாக .கட்டப்படும் வீட்டையே இடிக்க வந்தார்களே.....

அன்று அவர்கள் முகத்தில் எவ்வளவு கொடூரம்-எவ்வளவு ஆவேசம்.எதிரில் உள்ளது எதுவானாலும்-உள்ளதுயாரானாலும் அழித்துவிடும் கொடூரம்.வாசலில் கதவு தட்டும் ஒசை கேட்டது. மாப்பிளை தான் வந்தர்.

"மணி நான காகிவிட்டது.நீங்கள் தனியாக இருப்பீர்களேஎன்றுதான் வந்தேன்" என்றார் மாப்பிள்ளை குப்தா.

"ஜெயந்தி எப்படியிருக்கா?"

"உணர்ச்சிப்பிழம்பாக இருக்கா"

"ஏன்?"

"நீங்க தனியாக இருப்பதால்"

ஜெயந்தியும் குப்தாவும் ராஞ்சியில் இல்லை.எண்பது மைல் தள்ளி வெளியூரில் இருக்கிறார்கள்."நான் இங்கு குழந்தகளோடுஇருக்கிறேன்.நீங்கள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் துணையாகப் போய் இருங்கள்.என்று என்னை அனுப்பிவைத்தாள்".குப்தா கைகால் கழுவிக்கொண்டு வந்தான்.மாமியார் கொடுத்த தேநீரை அருந்திக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியைப் போட்டான்.ஆரம்பமாகப் பொகிறது.

இந்தியா "டாஸ்" வென்று ஆட ஆரம்பித்தது.

முதல் பந்தை எதிர் கொண்டது உத்தப்பாதான்.சில கணங்கள் தாமதிக்க பந்து எறியப்பட மட்டையோடு பாய்ந்து தன்னையே வீசினார்மைதானமே அதிர்ந்தது.

குப்தாவின் மாமனாரும் மாமியாரும் நெஞ்சைப்பிடித்துக்க் கொண்டார்கள்.எதிரணி வீரர்கள் கட்டிப்பிடித்து மைதானத்திலேயே கொண்டாடினர்கள்.

பிரும்மாண்டமான திரையில் அவுட் இல்லை என்று வந்ததும் மீண்டும் கரகோஷம்.

மணி எட்டேமுக்கால்.வீட்டு வாசலில் கோஷம் போடுகிறார்கள்.தெரு க்களில்,வீதிகளில் கிராமங்களில்,நகரங்களில்,மும்பை,டில்லி, சென்னயில் கோண்டாட்டம்.இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.

குப்தா கதவத்திறந்தார்.தம்பதியர் இருவரும் வாசலுக்கு வந்தனர்

பெரியவர் குளமான கண்களைத்துடைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு கை காட்டினார்.

அம்மையார் வெகுநேரம் வரை விம்மிவிம்மி அழுதுகொண்டிருந்தார்." தோனிதான் ஜெயிச்சுட்டானே.ஏண் அழறே" என்றார் பெரியவர்.

"மாமா! அத்தை கண்ணில் வருவது ஆனந்தக்கண்ணீர்" என்றார் குப்தா.

"இல்லை!பாகிஸ்தான் காப்டன் ஷொயிப் மாலிக்கின் தயாரை நினைத்து அழுகிறேன்"என்றார் அந்த அம்மையார்.



( 14-10-2007 வன்னக்கதிரில் பிரசுரமான சிறுகதை)