Wednesday, September 29, 2010

hey! raam!--2

ஹே! ராம்!---2


கந்தியடிகளைப்பற்றி இந்துபத்திரிக்கையில் ஹர்ஷ் மந்தர் எழுதியிருக்கிறார். அதனைப் படித்த பாதிப்பில் இந்த இடுகையை எழுதுகிறேன்..பிரிவினையின் போது கல்கத்தாவில் கலவரம் மூண்டது.அப்போது வங்க மாகாணப் பிரதமராக இருந்த சுரவர்த்தியும் முஸ்லீம் லீக் தலைவர்களுகம் காந்தியிடம் வேண்டிகொண்டனர் நவகாளி பயணத்தை ஒத்திவைத்துவிட்டு.கல்கத்தா வந்தார் அடிகள்.முஸ்லீம் மக்கள் பகுதியில் இருந்த பாழடைந்த ஹைதாரி மாளைகையில் குப்பை கூளங்களோடு தங்கினார்.இந்துக்கள் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதமிருந்தார்.நாற்பது வயது இந்து ஒருவன் கடுமையாக காந்தியை எதிர்ப்பான்." காந்தி"திரப்படத்தில் இந்தக் காட்சியில் ஓம் பூரி இந்துவாக நடிப்பார். கலவரத்தின் போது அவனுடைய ஒருவயது மகன் கொல்லப்பட்டான். கலவரக்காரர்களில் ஒருவன் குழந்தையின் கால்களைபிடித்துத் தூக்கி சுவற்றில் அறைந்து கொன்று எரியும் நெருப்பில் போட்டதை கண்ணால் பார்த்தவன் அவன்'கலவரத்தை அவன் முன்னின்று தடுக்க வேண்டும் என்பார் காந்தி.அவன் மாண்டுபோன அவன் குழந்தயின் வயதை ஒத்த கலவரத்தில் அனாதையான முஸ்லீம் குழந்தையை வள்ர்க்கவேண்டும் ; அந்தக் குழந்தையை முஸ்லீமாகவே வளர்க்க வேண்டும் என்பதும் காந்தி அடிகளின் நிபந்தனை.அவன் ஏற்றுக் கொண்டு அடிகளுக்கு ரொட்டியைக் கொடுப்பான்.

காந்தியை மகாத்மா என்று ரவீந்திரநாத் தாகூர் அழைத்தார் இந்த தேசத்தின் தந்தை என்று நாம் அழைக்க பேறு பெற்றிருக்கிறோம்.

இருந்தாலும் காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.மிகவும்கறாரக இருப்பார். நெகிழ்ச்சியாகவும் இருப்பார்.சுத்த சைவம்.ஒருமுறை கான் அப்துல் காபர் கான் தன் குழந்தகளோடு காந்தியைப் பார்க்க வந்திருந்தார். அந்தக் குழந்தைகளுக்காக மாமிச உணவை வரவழைத்துக் கொடுதார் அடிகள் நகைச்சுவை உணர்வு உள்ளவர்.

பிரிடிஷ் அரசரைப்.பார்க்கச்சென்றபோதும் வேட்டி,மேல் துண்டோடுதான் போனார்.இதுபற்றி நிருபர் கேட்டபோது " எனக்கும் செர்த்துத்தான் அரசர் அணிந்திருக்கிறாரே" என்று கூறினார்.

அவர் சொன்னது செய்தது எல்லமே சரி என்று சொல்ல முடியாதுதான். தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்பவர் முதலில் அவராகத்தான் இருப்பார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக முன் நின்றவர் அவர்.தீண்டாமையை ஒழிக்க கடுமையாக போராடினார். அதேசமயம் சாதியை ஒழிக்க முன்வரவில்லயே!

இருந்தும் காந்தியை நாம் நேசிக்கிறோம்.அவர் ஒரே ஒரு குரலை மட்டுமே கேட்பார்.அது அவருடைய மனச்சாட்சியின் குரல்.

Sunday, September 26, 2010

"ஹே! ராம்"

"ஹே!ராம்!" திரைப் படத்தை மும்பையில் வெளியிடுவதற்கு முன்பு கொலைகாரன் நாதுரா ம் கோட்சே யின் தம்பி கோபால் கோட்சே பார்த்து அனுமதி கொடுத்தாராம்.


அந்தப் படத்திற்கு முதல் பாரட்டுவிழா கொல்கத்தாவில் நடந்தது.அதில் காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருப்பார்."காந்தி" படத்தின்" பென் கிங்ஸ்லி" யை விட சிறப்பான சித்தரிப்பு என்பது என் தனிப்பட்ட எண்ணம். பிர்லா மாளிகையின் நந்தவனத்தில் கோட்சேயால் சுடப்பட்டு பின்னோக்கி படிக்கட்டுகளைத்தாண்டி கீழே விழும் காட்சியில் ஷா அற்புதமாக நடித்திருப்பார்.

அப்படி விழும் போது "ஹே!ராம்!" என்று அவர் குரலெழுப்பமாட்டார். இதுபற்றி கமல்ஹாசனிடம் நிருபர் ஒருவர் கேட்டபோது " அப்படி குறிப்பு எதுவும்" கிடைக்கவில்லையே" என்றாராம்

இருந்தாலும்,துளசி தாசர்,பத்திராசலம் ராமதாஸ் ஆகியோரோடு ஒப்பிடும் அளவுக்கு ராமர் மீது பக்தி கொண்டவர் காந்தி அடிகள் பிரிவினையின்போது டில்லிபட்டணத்து அகதிகள் முகாமில் அவர் செய்த பணியை ராமபிரானுக்குச். செய்யும் பணியாக நினைத்துச் செய்தார் அங்குதான் அன்றய ஜனசங்கத்தின் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ் காரர்களையும் சந்தித்தார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும்,தலைவர்களும் எப்படியாவது காந்தியின் நம்பிக்கையப் பெறவேண்டும் என்று கருதினார்கள். காந்தியை தங்கள் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார்கள். .காந்தியும் ஒரு நாள் செண்றார்.

பிரும்மாணமான,அழகான அலுவலகம்.ஒவ்வொரு அறையாக காட்டினார்கள்.ஒவ்வொரு அறையிலும் வண்ணத்திரைச்சீலையில் எண்ணை ஒவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன.ராணா பிரதாப் சிங், வீர சிவாஜி என்று படங்கள் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மகிழ்ச்சியோடு பார்த்த காந்தி கிளம்பி வெளியே வந்தார்.

அவரிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்"ஐயா!அலுவலகத்தைப் பார்த்தீர்கள்.உங்கள் அபிப்பிராயம் என்ன? " என்று கேட்டுள்ளார்".அற்புதமான ஒவியங்களை வைத்துள்ளீர்கள்.ஒரு ராமர் படம் சின்னதாகவாவது வைத்திருக்கலாம். நான் ராம பக்தன்.அதுதான் என் வருத்தம்" என்றாராம் காந்தியடிகள்.

"ராணாவும், ரஜபுத்திரர்களும் முகம்மதியர்களை எதிர்த்து போராடினார்கள்.வீர சிவாஜி ஔரங்கசீப்பை எதிர்த்து போராடினார்.இவர்களைக் காட்டி பாரத மக்களுக்கு வீரமூட்டி இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவே விரும்புகிறோம். ராமர் எந்த முகம்மதியரையும் எதிர்த்து போராடவில்லையே" என்று தலைவர் பதிலளீத்தாராம்.

இந்த இடுகையைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். " நீங்கள் ஏதாவது ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஸ்டாம்ப் ஸைசிலாவது ராமர் படத்தைப் பார்த்தால்" எனக்கு தகவல் கொடுங்களேன்.

Thursday, September 23, 2010

சிற்றேரும்பு புற்றெடுக்க

பதினைந்தாவது நாடளுமன்றத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(ஐ.மு.கூ)யின் இரண்டாவதுஅவதாரம் கூடுதல் இடங்களைப் பெற்றது.543 இடங்களில் அது262 இடங்களில் வெற்றிவாகை சூடியது.இடதுசாரிகள் 24 இடங்களை மட்டுமே பெற்று சரிவினைச் சந்தித்தார்கள்


காங்கிரஸ் கட்சி மட்டும் சென்ற தெர்தலைவிட 61 இடங்களை அதிகமாக பெற்றது.இத்தனைக்கும் அதற்கு கூடுதலாக 2% வாக்குகளே கிடத்தன.மதவேறி சக்திகள் ஓரங்கட்டப்பட்டன என்பதுதான் ஒரே ஆறுதல்.இந்த வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் என்ன?

தேசீய ஊரக வேலை உத்திரவாத திட்டம் என்ற திட்டத்தை ஐ.மு.கூ அரசு நடைமுறப் படுத்தியது. இதன்படி 4கோடியே 50 லட்சம் கிரமப்புற ஏழைகள் 48 நாட்கள் வேலை பார்க்கமுடிந்தது.இந்தத் திட்டத்தை ஐ.மு கூட்டணியின் குறைந்த்பட்ச திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினர்.மனமோகனும்,சிதம் பரமும் கடுமையாக எதிர்த்தார்கள்.பின்னர் நாம்தானே நடைமுறைப் படுத்த வேண்டும் ,அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஏற்றுக் கோண்டனர்.ஆனால் இடதுசாரிகள் மனமோகனின் தாடியையும், சிதம்பரத்தின் சட்டையை யும் பிடித்து உலுக்கிய உலுக்கில் அது நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதொடு நிற்கவில்லை.விவ்சாயிகளின் கடனை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பழங்குடி மக்களுக்கும் வனகுடிமக்களுக்கும் உள்ள உரிமைகளை உத்திரவாதப் படுத்த சட்டம் இயற்றவைத்தார்கள்.

இவை எல்லாம் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் நடந்தது என்பது அந்தத்திட்டங்க்களால் பயனடைந்தவர்களுக்குக் கூட தெரியாதபடி ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன.

என்ன செய்ய? சிற்றெரும்பு புற்றெடுக்க கருநாகம் குடி வந்தால் என்ன செய்ய முடியும்?

உலகம் பூராவும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது.அமெரிக்க வங்கிகள்,திவாலாகின.அதன் காரணமாக வேலைவாய்ப்பு, I.T தொழிலில் சிராய்ப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள்.வளர்ந்த நாடுகள் குலைநடுங்க என்ன ஆகுமோ என்று பதறினபோது,இந்தியா அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.அதற்கான முக்கிய காரணம் வங்கித் தொழிலும்,காப்பீட்டுத்தொழிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகும்.

எல்.ஐ.சி.யின் மூலதனம் 5கோடி. அதனை 100 கோடியாக்க பிரதமர் விரும்புகிறார்.பொட்டியாக பணத்தை கொட்டி பங்குகளை வாங்க அநிய கம்பெனிகள் தயராக இருக்கின்றன.அதேபோல் வங்கிகளின் மூலதனத்தை 26 சத்திலிருந்து 49 சதமாக்க மன்மொகன் ரெடி..ஆனால் இடதுசாரிகள் அருவாளைத்தூக்கி விடுவார்களே என்ற பயம் அவரத்தடுத்து வந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அவதாரத்திற்கு இன்று இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை மனமோகன சிங் தைரிய(திமிரொடு)மாகத்தான் பெசுவார்.

நாடாளுமன்றத்தில் அவர் தாடியைப் பற்றி உலுக்க ஆளில்லயே! மக்கா! என்ன செய்ய? .

Friday, September 17, 2010

மொழிபெயர்ப்பும் கவிதையும்

மொழிபெயர்ப்பும் கவிதையும்


தொலைக்காட்சிப் பெட்டியைத்திறந்தால் இந்தியில் வாயசைக்கும் விளம்பரங்களுக்கு தமிழில் ஒலிவரும்."காம்ப்ளான் சாப்பிடாத குழந்தைக வளந்தாங்க 3செண்டி மீட்டர்!

காம்ப்ளான் சாப்பிட்ட குழந்தைக வளந்தாங்க 6செண்டிமீட்டர்!" என்று ஒலிக்கும்.சில இந்தி தொடர்கள் தமிழில் பேசும்."வருகிறேன் சாப்பிட!" போகிறேன் வீட்டுக்கு!" என்று வினைச்சொல்லை முன்வைத்து பெசும்.இந்தி மொழியில் வினச்சொல்லை முதலில் பயன்படுத்துவது வழக்கம்தான்.மொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதால் .ஏற்பட்டதின் விளைவுதான் இது.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன்,திருமண வீடுகளில் வாத்தியக்காரர்கள்,நாதஸ்வரமாக இருந்தாலும்,பாண்டுவாத்தியமாக இருந்தாலும் ஒரு பாட்டை வாசிக்காமல் இருக்கமாட்டார்கள்.அதிலும் பெண்ணோ, மாப்பிள்ளையோ ஊர்வலமாக வரும் போது கண்டிப்பாக வாசிப்பார்கள்.அது

"கல்யாண

ஊர்வலம் வரும்

உல்லாசமே தரும்---மகிழ்ந்து நான்

ஆடிடுவேன்" என்ற பாடலாகும்.இது ஒரு திரைப் படப்பாடல்."அவன்" என்ற படத்தின் பாடல். இந்தியில் "ஆ: என்று வெளிவந்த படத்தின் "டப்பிங்" வடிவம்.ராஜ் கபூர், நர்கீஸ் நடித்தார்கள்.சங்கர்--ஜெய்கிஷன் இசை அமைத்தனர்.ஷைலேந்திரா என்ற உருதுக் கவிஞர் படலை எழுதினார்.அது:

" ராஜா-கி-ஆவொகி பராத்

ரங்கோலி-கிராத்---மகனு மை

நசூங்கி" என்பதாகும்.இந்தப் படத்தின் அத்துணை பாடல்களும் பிரபலமானவை".ஜி.கிருஷ்ணவேணி" என்ற "ஜிக்கி" பாடியவை.அந்த்க்காலத்தில் இசைத்தட்டு விற்பனையில் முத்லிடம் பெற்றவை. தமிழ்ப் பாடலைக் கேட்ட ஷைலேந்திரா பாடலாசிரியரைப் பார்க்க தமிழ்நாடு வந்தார்."ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை உருதுமொழியில் நான் மொழிபெயர்தது போன்று அமைந்துள்ளது" என்று பாராட்டினாராம்.

மனதில் கவித்துவமும் மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

அந்தப் பாடலாசிரியர் பெயர் "கண்ணதசன்"

Monday, September 06, 2010

அக்ரி கல்சர் போய் பிரான் கல்சர் வருகிறது..

விவசாய நாகரீகமும்......


1957-58மாண்டுகளில் ஒரு முறை சி.பி.ராமசாமி அவர்களின் சொற்பொழிவு ஒன்றை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.நாகரீகம் என்ற தலைப்பில் பேசினார்.பயிர்தொழிலைத் தெரிந்த்து கொண்ட பிறகு நாகரீகம் வல ர்ச்சியடைந்தது என்பது அவருடைய பேச்சின் சாரம்.பயிர்செய்ய ஆரம்பித்த பின்னர் தான் அவன் நிரந்தரமாக தங்க ஆரம்பித்தான்.இது அவனுடைய மொழி,பழக்கவழக்கங்கள் சகமனிதர்களொடு கூடிய உறவுகள் ஆகியவற்றில் மாற்றங்களை உருவாக்கியது.Agri என்றால் விவசாயம்.Culture என்றால் பழக்கவழக்கங்கள்,பண்பாடு, நாகரீகம் எனலாம்.அதனால் தான் Agriculture என்கிறோம் என்றும் விளக்கினார்.

தாமிரவருணி,காவிரி டெல்டாபகுதிகளில் விவசாயம செழித்தது.அங்கு கலை,இலக்கியமும் வளர்ந்தது.வடக்கே நெல்லூர்,கிருஷ்ணா,கோதாவரி டெல்டா பகுதிகளும் இப்படித்தான்.மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு விவசாயம் அடிப்படையாக அமைந்தது எனலாம்.இன்று நிலமை மாறிவிட்டது.

விவசாயிகள் நெற்பயிருக்குப் பதிலாக பணப்பயிரை நாடுகிறார்கள்.நெல்லூரில் ஆயிரக்கணக்கானவர இப்போது நெல் பயிரிடுவதில்லை.மீன் பண்ணைகளை உரூ  வாக்கி" பிரான்" வளர்க்கிறார்கள்.கிழக்கு கோதாவரியில் லச்சக்கணக்கான ஏக்கரில் மீன் பண்ணை கள் வந்துவிட்டன்.

விவசாயத்தைவிட மீன் வளர்ப்பதில் லாபம் அதிகம்.குறிப்பாக "பிரான்" வளர்த்தால் விலை கூடுதலாகக் கிடைக்கிறது.ஒரு கிலொவுக்கு 600 ரூ கிடக்கற து.ஒருகிலொவுக்கு பத்திலிருந்து பதிணைந்து "பிரான்" நிற்கும்.600ரூ கிடைக்க 30 கிலோ நெல் விற்கப்படவேண்டும். மீன் வளர்த்தால் ஒரு ஹெக்டெகருக்கு ஆண்டுக்கு 15லட்சம் ரூ கிடக்கும். நெல் பயிரிட்டால் 50000 ரூ கிடைக்கும்.

ஆளும் பெரிசுகள் மீன் பண்ணைகளை தஞ்சையில் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆந்திரா இதைவிட மோசம். வடநாட்டு பேபர் கம்பெனிகள் விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்து மூங்கில் பயிரிட வைக்கின்றனர் ஓங்கோல் மாவட்டத்தில் இது மிக அதிகமாக நடைபெருகிறது.

மலேசியா, தாய்லாந்து,நாட்டி.ல் உள்ள பன்னாட்டு கம்பெனிகள் மீன்விதையை .கொடுக்கின்றன.விளை நிலத்தை வாங்கி தாங்களே மீன் வளர்த்தால்! விவசாயத்திலும் அந்நிய முதலீடு ? ஏன் கூடாது? பங்களா தேசத்தை பிரும்மபுத்திரா பாயும் பகுதியை நாசமாக்கியவர்கள் இந்தியாவுக்கும் வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் கொள்கை விஷயங்களில் தலையிடக் கூடாது என்று பிரதமர்

மன் மோகன் சிங் தொலை நோக்குப் பார்வையோடுதான் கூறியுள்ளார்.

Thursday, September 02, 2010

தாய் மொழியில் பெசுவது பிறப்புரிமை

தாய் மொழியில் பேசுவது பிறப்புரிமை.


இந்திய தொழிற்சங்க மையத்தின் நான்காவது அகில இந்திய மாநாடு1979ம் ஆண்டு எப்ரல் மாதம் சென்னையில் நடந்தது. இந்தியா பூராவிலும் இருந்து ஐயாயிரம் சார்பாளர்கள் கலந்து கொண்ட மிகப் பிரும்மண்டமான மாநாடாகும் அது.

ஐயாயிரம் சார்பாளர்கள் காலை எட்டு மணிக்குள் காலைக் கடன்களை முடித்து,குளித்து,காலை உணவை முடிக்க வேண்டும்.ஒன்பதரை மணிக்கு விவாதம் ஆரம்பமாகும்.சங்கத்தின் தலைவர் பி.டி. ரணதிவே.யார் வந்தாலும் வராவிட்டாலும் சரியான நெரத்தில் கராறாக ஆரம்பித்து விடுவார் சார்பாளர்கள் குலைநடுங்க ஓடி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். சரியாக பதிணொண்ணரை மணிக்கு ஐயாயிரம் பெருக்கும் ஐந்து நிமிடத்தில் .தேநீர் கொடுக்க வேண்டும்.ஆறாவது நிமிடம் அடுத்த சார்பாளரை தலைவர் பெசக் கூப்பிட்டுவிடுவார்.

மதியம் ஒன்று முப்பதுக்கு முப்பது நிமிடம் இடைவேளை. அதற்குள் அத்துணைபேரும் உணவை முடித்துக் கொள்ள வேண்டும்..மாலை நான்குமணிக்கு தேநீர். ஐந்து நாட்கள் தமிழக சி.ஐ.டி.யு ,குறிப்பாக சென்னை தொழர்கள் இதனைச்செய்துகாட்டினார்கள்.அவர்களுடய செய்நேர்த்தியையும்,செயல்திறனையும் பார்த்து தேனீ கூட வெட்கித்தலை குனியும்.

இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஜனநாயக மாண்பு மாநாடு நடத்தப்பட்ட முறையில் அற்புதமான வகையில் வெளிப்பட்டது.திரிபுராவின் பழங்குடி,அசாமின் தேயிலைத்தோட்டத்தொழிலாளி,டார்ஜிலிங்கின் கூர்கா,டோங்கிரி பேசும் காஷ்மீரி,,மத்திய பிரதேசத்தின் வனகுடிகள், மும்பையின் ஆலைத்தொழிலாளி,பஞ்சாபி,இந்தி,உருது, தமிழ்தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,வங்கம்,இந்தியாவின் சகலமொழிக்காரர்களும் அங்கு இருந்தனர்.அவர்கள் அத்துணை பெரும் அவரவர் தாய் மொழியிலேயே பேச அனுமதிக்கப்பட்டனர்.இது எப்படி நடைமுறைபடுத்தப் பட்டது? . உதாரணமாக,குஜராத்தியில் ஒருவர் பேசினால், அவர் பெசிமுடித்தவுடன் தலைவர் பி.டி.ஆர் ஐந்துந்மிடம் மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பார்..குஜராத்தியில் பெசியது இந்தியில் மொழிபெயர்க்கப்படும்.இந்தி தெரியாதவர்களுக்காக வேரொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்.ஆங்கிலமும்,இந்தியும் தெரியாதவர்கள்

என்னாவது?அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவர் பொது மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பார்.இந்தி ஆங்கிலம் தெரிந்த அந்தந்த மொழிக்காரர்கள் தங்கள் தங்கள் தாய். மொழியில் அந்தந்த குழுக்களுக்கு மொழிபெயர்ப்பார்கள்.ஐயாயிரம் சார்பாளர்களிடையே இருபத்து மூன்று இந்திய மொழிகள் ஒரேசமயையித்தில்

பெசப்படுவதை கேட்பதும் பார்ப்பதும் மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வாகும

என்னசெய்வது? மத்திய அமைச்சர் ஒருவர் தாய்மொழியில் தான் பெசுவேன் என்று இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்.இறுதியில் ஆங்கிலத்தில் எழுதிவைத்து வாசிக்கவேண்டியதாயிற்று.பணபலமோ,அதிகாரபஇல்லாதவர்களால்முடிகிறது

ஆட்சியாளர்களால் ஏன் முடியவில்லை?