Thursday, November 29, 2012

நேரு - நாசர் - நுக்ருமா-----!!!


இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஆப்பிரிக்க  ஆசிய நாடுகளில்  தேச பக்திமிக்கதலைவர்கள்  தங்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினார்கள். இந்தியா   குறிப்பாக நேரு இந்தத்தலைவர்களோடு மிகவும் நெருக்கமான உறவும் தொடர்பும் கொண்டிருந்தார்.புதிதாக விடுதலை  அடைந்த நாடுகளையும் இணைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட துடிக்கும் ஆப்பிரிக்க நாடுகளு க்கு ஆதரவளித்து வந்தார். இதில் அவரோடு கரம் கொத்து நின்றவர்கள் தான் எகிப்து நாட்டின்
நாசரும் ,கானா நாட்டின் நுக்ருமாவும். அன்று பத்திரிகைகளின் "three ns " என்று உலகம் பூராவும் பாராட்டப்பட்ட தலைவர்கள் இவர்கள்.

எகிப்து நாட்டின் ராணுவத்தில் கர்னலாக இருந்தவர் காமல் அப்துல் நாசர்.
எகிப்து நாட்டு அரசர்கள் ஆட்சியை மாற்றி ஒருஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர விரும்பிய ராணுவ அதிகாரிகளுக்கு தலைமை தங்கினார்.ரகசியமாக.விவசாய நாடான எகிப்தில் நிலச்சிர்த்திருத்ததை
 கொண்டுவர விரும்பினார். பிரிட்டிஷ்கரர்கள்வசம்பணம் கொழி க்கும் சுயஸ் கால்வாய் இருந்தது.
விவசாயப் புரட்சியை நடத்த பாசன் வசதியை பெருக்க வேண்டிய திருந்தது அதனை மேம்படுத்த  நைல் நதியின் குறுக்கே  ஆணை கட்ட  விரும்பினார் . எந்த மேற்கத்திய நாடும் உதவ மறுத்து விட்டன. அரசரும் இதனை விரும்பவில்லை. ஆகவே ஜெனரல்  நகிப் தலைமையில்   புரட்சியில் ஈடுபட்டு பருக்  அரசரை  நாடுகடத்தினார்.
  
   . அப்படியும் அவரால் விவசாய சீர்திருத்தத்தை கொண்டு வர முடியவில்லை. ஜெனரல் நகிப் அதனை எதிர்த்தார்.நகிப்பை  நிக்கி விட்டு அவரே  பொறுப்பேற்றுக் கொண்டார். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் ஆணை கட்ட  சுயஸ் கால்வாயை எடுத்துக்  கொண்டார்.பிரான்சு,பிடிட்டிஷ் படைகள் எகிப்தை தாக்கின.அமெரிக்க தன னுடைய போர்க்கப்பலை அனுப்ப முடிவுசெய்தது.சோவியத் பிரதமர் கொசிஜின் எச்சரிக்கை செய்ததால் அமெரிக்க,படைகள் வரவில்லை எகிப்திய மக்களும் பிரிட்டிஷ்,பிரான்சு படைகளை துவம்சம்பண்ணி கால்வாயைகைப்பறினர் .

ஏகாதிபத்தியம்  நாசரைக் கொல்ல  ஆளனுப்பியது. அவர் அந்த முயற்சியில் தப்பிவிட்டார்...  அப்போது அவர் "என் தேச மக்களே! நான் உயிவிட்டால் உங்களுக்காக உயிவிடுவேன்.நான் உயிவாழ்ந்தலும் உங்களுக்காக வாழ்வேன்.உங்களின் கௌரவம் எகிப்தின் கௌரவம் இரண்டையும் காக்க
என்னை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.


எகிப்தில் மன்னராட்சியை மிண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.முஸ்லிம்சகொதரர்கள்,புரட்சிகர கவுன்சில் என்ற பல அமைப்புகள் முயற்சிக்கின்றன சென்ற ஆண்டு நடந்த  "புரட்சியில் " முஸ்லிம்  சகோதரர்கள்  வந்துள்ளனர்
 .அவர்களின்  தலைவர் சட்டத்திருத்தம் கொண்டுவந்து விரட்டியடிக்கப்பட்ட பருக் மன்னருக்கு இருந்த அதிகாரங்களை  திரும்பவம் பெற்று ஆட்சி நடத்துகிறார்.

சென்ற ஆண்டு நடந்த புரட்சி "பதிவுலகம்" நடத்தியது  என்று  பிரச்சாரம் நடந்ததது  

பதிவுலக நண்பர்களே ! மன்னியுங்கள்.!

பதிவுலகம் எதிர்புரட்சியைத்தான் செய்யும்!

உண்மையான புரட்சியை செய்ய அனுமதிக்கப்படாது!

எச்சரிக்கை !!!


Monday, November 26, 2012

கரும்பு விவசாயியும்,சரத்பவார்,கட்காரி,காங்கிரசும்.......!!!





சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிற்கு முக்கியமான பங்கு உண்டு.உத்திர பிரதேசமும்,மகாராஷ்ட்றா மாநிலமும் இதில் முன்ணணியில் உள்ளான. குறிப்பாக மகாராஷ்ட்றாவின் மேற்கு மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் அதிகம்.இவை கரும்பு விவசாயிகளை உறுப்பினராகக்கொண்டகூட்டுற்வு ஆலைகள். அதேசமயம் இன்று அந்த ஆலைகள் சரத்பவர்கட்சி,பா.ஜ.க,மற்றும் காங்கிரஸ் தலைவர்களீன் சட்டை பையில் உள்ளன.



சரத் பவரின் தோகுதி பாராமதி.இந்த தொகுதியில்மொத்தம் 7 சர்க்கரைஆலகள் ,உள்ளன அவை அத்துணையும் அவருடையமற்றும் நெருங்கிய உற்வினர்களின் ஆதிக்கத்திலுள்ளன ..அவர்கட்சியைச்சார்ந்த ஜெயந்த் படெல்.மாநில அமைச்சர்.அவருக்குச்சொந்தமாக 3ஆலைகலுள்ளன.ஆர்.ஆர்.படீல் அமைச்சராக உள்ளார் (பவார் காங்க) அவருக்கும் ஆலகள் உள்ளண..பா.ஜ.க வின் புகழப்பரப்பிவரும் கட்காரிக்கு " பூர்த்தி. " குழுமம் உள்ளது. இவர்கள் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடுவதில்லை மாறாக வடிசாராய உற்பத்தியில்சக்கைபோடு போடு கிறார்கள்.



கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின்மேல் இவர்களுக்குபாசம் அதிகம்.அரசு நிற்ணயித்த விலை டன்னுக்கு 2300 ரூ.ஆனால் இவர்கள் 3000ரூ கொடுக்கிறர்கள்.வெட்டு கூலி,,பாரவண்டி கூலிகொடுக்கமாட்டார்கள். கரும்பின் ஈரத்தன்மைக்கு ஏற்ப விலை நிர்ணாயம்செய்கிறார்கள்.



ஆலை உற்பத்திசெய்யும் சர்கரையை அரசு நிற்ணயித்த விலையை விட குறைத்து விற்கிறார்கள். வாங்குவது இவர்களின் ஏஜண்டுகள் தான்.இதன் மூலம் கூட்டுறவு ஆலைகள் நட்டத்தில் ஓடும்படி செய்கிறார்கள். அதனல் கரும்பு விவசாயிகளுக்கு பணம் கோடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். அரசு அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறது.



சர்க்கரை ஆலைகள் நட்டப்படுவதாக கணக்குகாட்டப்படுகிறது.அதெசமயம்,அரவையிலிருந்து கிடக்கும், உப பொருட்களான வடிசாராயம்,,உரம் ,மற்றவைகளுக்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல்பார்த்துக்கொள்கிறர்கள். இவர்கள் "ஷா வாலாஸ்" .போன்ற கம்பெனி களொடு சேர்ந்து மது உற்பத்தியில் ஈடுபட்டு அடிக்கும் கொள்ளை கணக்கில்வராது.



மராட்டிய மாநிலவிவசாயிகள் இந்த உபபொருட்கள் உற்பத்தியில் தங்களுக்கு பங்கு வேண்டும் எப்ர் கேட்கிறார்கள். இதற்காக பொடப்பட்ட சி.ரங்கராஜன் கமிட்டி இந்த உப பொருள் உற்பத்தியில் விசாயிகளுக்குன் 70 சதம் பங்கு கொடுக்க வேண்டும் என்று அறிகைக கொடுத்துள்ளது. அது தற்போது நம் "தலப்பாகட்டு ".பிரதமர் மேசையில்தூங்குகிறது.



மராட்டிய மாநிலகரும்பு விவசாயிகள் போராடினார்கள். மாநில அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. ஒரு விவசாயி இறந்தார். அன்று தான் சிவ சேனை தலைவர் தியாகி பாலாசாகிப் மறைந்தார்.



அந்த சொகம் தாங்காமல் பத்திரிகைகள் அதனை பிரசுரிக்க மறந்து விட்டன.

Tuesday, November 20, 2012

அந்த மருமகனின் நூறாவது  ஆண்டு இது .....! (2)



அந்த மறுமகனின் நூறாவது ஆண்டு இது......! (2)










தெற்கு குஜராத்திலிருக்கும் பரூச் மாவட்டத்திலிருந்து பமபாய் வந்த ஜஹாங்கீர் ஃபர்தூன் காந்தியின் ஐந்தாவது மகன் தான் ஃபரோஸ். கப்பல் கட்டும் தளத்தில் இஞ்சினியராக இருந்த தந்தை இறந்ததும் தன் தாயுடன் அலகாபாத்தில் இருக்கும் சித்திவீட்டில் தங்கி படித்தார்.காந்தி என்பது அவர்கள் குடும்பப் பெயர்.



தம்பதியர் அலகாபாத்தில் வசித்தனர் மத்திய மாகாணத்தில் (தற்பொது உ.பி).விவசாயிகள் குத்தகை,வாரம் ஆகியவ்ற்றால் படும் துன்பத்திலிருந்துமீட்க அவர்களுக்காக பெராட்டத்தில் இறங்கினார் ஃபெரோஸ். 1944ல்மகன் ராஜீவ் பிறந்தான்.1946ல் இரண்டாவது மகன் சஞ்சய் பிறந்தான்.மத்திய மாகாண சட்டமன்ற உறுப்பினராக ராஜ்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமனாரோடு (நேரு) சமரசம் ஆனது. அவர் ஆரம்பித்த Natinal herald பத்திரிகையை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.



சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் ரே பரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றார்.புதிய இந்தியாவின் தொழில் வளர்சிக்கு பொதுத்துறை தான் சரி என்ற நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு இந்திய முதலாளிகளின் தகிடுதத்தங்களை ஏற்கமுடியவில்லை.முதலாளிகள் ஒவ்வொருவரும் ஒரு வங்கி,ஒரு இன்சூரன் கம்பெனி வைத்துக்கொண்டு சூரையாடுவதை தடுக்க விரும்பினார்.



"Banking is dealing with some bodies money.Insurance is dealing with no bodies money" என்றார்.



டாடவுக்கு சென்ரல்வங்கியும்,நியூ இந்தியாவும்,பிர்லாவுக்கு யூகோ வங்கியும்,இன்சூரன் கம்பெனியும்,செட்டியாருக்குஇந்தியன்வங்கியும்.யுணைடெட் இந்தியாவும் என்று கர்ஜிப்பார்.ராமகிருஷ்ண டால்மியா வங்கிப்பணத்தையும்,இன்சூரன்ஸ் பணத்தையும் மோசடியாக களவடி Beennat column co (இன்றய டைம்ஸ் ஆஃப் இந்தியா) வாங்க முயன்றதை தடுத்தார்.இந்திய வரலற்றில் முதலும் கடைசியுமாக ஒரு முதலாளியை ராமகிருஷ்ண டால்மியாவை சிறைக்கு அனுப்பி "களி" திங்க வைத்தவர் ஃபேரோஸ்.



1956ம் ஆண்டு இன்சூரன் துறைதேசியமயமாகாப்பட்டு ஏல்.ஐ.சி. உருவாக முக்கியமானவர் அவர்

அதன் பிறகும் முதலாளிகள் மறைமுகமாக இன்சூரன்சில் சூதாடுவதைக் கண்டு .வெகுண்டார் நாடாளுமன்றத்தில்குரல் எழுப்பினார். அப்பொது நிதி அமைசராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி "பிரதமரின் மடியில் இருந்து கொண்டு நாய் குட்டி குலைக்கிறது. நான் காங்கிரசின் தூண்" என்றார்.



"ஒரு தூணைப் பார்த்தால் நாய் என்ன செய்யுமே அதனை செய்கிறென்" என்றார் ஃபெரோஸ். " முந்திரா" ஊழலை அம்பலப்ப்டுத்தி டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ராஜினாமாசெய்யவைத்தார்.



இந்திய எண்ணை வளத்தை முதலாளிகள் சூரையாடாமல் தடுக்க இந்திய ஆயில் கார்ப்பரேஷனை உருவாக்குவதில் அவருடைய பங்கு மகத்தானது..



1960ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடந்தார்.



1912ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தெதி பிறந்த ஃபேரோஸ் ஜஹங்கீர் காந்தி இந்திய மக்களின் செல்ல மறுமகனும் ஆவார்   

Monday, November 19, 2012

அந்த மருமகனின் நூறாவது ஆண்டு இது .....!



அந்த மறுமகனின் நூறாவது ஆண்டு இது..........!






பதிவுலகநண்பர் ஒருவர் இது மறுமகன்களின் காலமென்றுபின்னூட்டமிட்டிருந்தார். அவர் ராபர்ட் வாதெராவையும், (சோனியாவின் மாப்பிள்ளை) ரஞ்சன் பட்டசார்யா (வாஜ்பாயின் மாப்பிள்ளை யையும் குறிப்புடுகிறார். ஆனால் நான் குறிப்பிடுவது அவர்களையல்ல





அலகாபாத் நகரத்திலொரு பள்ளிக்கூடம். அதன் முன்னல் காங்கிரஸ் தொண்டர்கள் .ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு அம்மையார் தலமையில்நடக்கிறது. அவருடைய பத்துவயது மகளும் வந்திருக்கிறார்.கடுமையன வேய்யில். வெப்பம்தாங்க முடியாமல் அந்த அம்மையார் மயங்கி விழுந்து விடுகிறார்.இதனை பர்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒடிவந்து அவருக்கு அருந்த நீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கிறான்.



அந்த அம்மையார் பெயர் கமலா நேரு.

அந்த சிறுமியின் பெயர் இந்திரா பிரியதர்சணி.

அந்த ப்தினாங்கு வயது சிறுவனின் பெயர் ஃபரோஸ் ஜஹங்கீர் காந்தி.



அதன் பிறகு அந்த ஃபரோஸ் காந்தி கமலாம்மையாரின் உற்ற தோழனாகிறான். படிப்பை நிறுத்திவிட்டு முழுமூச்சாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடுகிறான். காசநோயால் அவதியுறும் கமலா அம்மையாருக்கு, உதவியாக இருக்கிறான்.மருத்துவனைக்கு அழைத்துசெவ்வதிலிருந்து,மருந்து கொடுப்பதுவரை பொறுப்பாக செய்கிறான்" .ஆனந்தபவனின்"அங்கமாகிறான்.



ஃபரோஸ் ஜஹங்கீர் காந்தி ஜரதுஷ்ற்றமதம்(பார்சி).தன் அத்தை வீட்டிலிருந்து படித்துவருகிறான். காங்கிரசில் சேர்ந்து பொராட்டத்தில் கலந்துகொள்கிறான்.காங்கிரசின் வானர செனையில் ஒரு அங்கம் அவன்.(Monkey Brigade) அவனோடு சிறையில் இருந்தவர் பின்னாளில் பிரதமராய் வந்த

லால் பகதூர் சாஸ்திரியாவார்.



கமலா அம்மையாரின் காச நோய் சிகிச்சைக்காக ஸ்விஸ் நாட்டிற்கு செல்லும் பொது அவருக்கு உதவி செய்ய ஃபாரோஸும் பொகிறான். நோயின் கடுமை தாங்கமல் கமலா இறக்கிறார். அவ்ர் இறக்கும் போது அருகிலிருந்தவர்கள் கணவர் பண்டித ஜவஹர்லால்நேரு.மகள் இந்திரா பிரிய தர்சனி,ஃபாரோஸ்காந்தி ஆகிய மூவர் மட்டுமே.



ஃபரோஸ் மெல் படிப்புக்காக லண்டன் செல்கிறார். இடதுசாரி பேராசிரியர் லாஸ்கி அவ்ர்களின் பொருளாதர பள்ளியில் சேர்கிறார். இந்திரா பிரிய தர்சனியும் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே பரிசயமுள்ளதால் நெருங்கி பழகி.நட்பு காதலாக மலர்கிறது இந்த்யா வந்ததும் திருமணம்செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.



தந்தை ஜவஹருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. மகத்மா கந்தியிடம் மகளின் மனதை மாற்ற

கெட்டுக்க்ள்கிறார். "நாங்கள் திருமனம் செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டொம்..நீங்களும் எந்தந்தையும்வந்து நடத்தினால் மகிழ்ச்சியடைவோம் நீங்கள் வரவில்லை என்றாலும் திருமணம் நடக்கும் என்று இருவரும் அறிவித்து விட்டனர்.



திருமணம் நடந்தது. அப்பொது தான் "வெள்ளையனே வெளீயேறு" போராட்டம் நடந்தது.கணவனும்மனைவியும்போராட்டத்தில்கலந்து கொண்டு சிறை சென்றனர்.

(தொடரும் )

















(தொடரும்)

Wednesday, November 14, 2012

"முஹர்ரம்" பண்டிகையும் "ஹோலி" கொண்டாட்டமும்..........!!!

 

முஹர்ரம் பண்டிகை இஸ்லாமியர்களின் துக்க நாட களிலோன்று. தியாகத்தின் முலம் மக்களின் நன்மையை விழையும் பெரியவர்களின் இழப்பை  நினைந்து போற்றும் தினமாகும்  .

ஹோலி பண்ண்டிகயோ கொண்டாட்டமும் குதூகலமும் கொண்டு ஆடிப்பாடிகளிக்கும் நாளாகும்.

முகம்மதியர் ஆட்சிக்காலத்தில் "அவத் " என்ற பகுதியை நவாப்  வஜாஹித் அலி  அவர்கள் ஆண்டுவந்தார்கள். இன்றைய லக்னோ ,கான்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும் அது. கலை,இலக்கியம், இசை,நாட்டியம் ஆகியவை செழித்து வளர்ந்த இடம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து இந்தியாவிற்கான புதிய கலாச்சார அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்த பூமி அது.,அற்புதமான உருது கவிஞர்கள் தங்கள் படைப்புகளை  கொட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
( ஆரம்ப காலத்தில்முன்ஷி பிரேம் சந்த் தன்னுடைய கதைகளை உருது மொழியில் தான் எழுதினார்.)


இஸ்லாமியர்கள் வானத்து சந்திரனின் பயணத்தை ஒட்டி தங்களுடைய நாட்களை கணித்துக் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட வருடம் முஹர்ரம் பண்டிகையும் ,ஹோலி பண்டிகையும் ஒரே நாளில் வந்தது.

நவாப் வஜாஹித் அலி அவர்கள் முஹர்ரம் பண்டிகையை வழக்கமான
தொழுகையோடு
நடத்தினார்கள்    அரண்மனையை விட்டு வெளியில் வந்த நவாப ஹோலிகொண்டட்டம் எதுவும் இல்லாதது கண்டு விசாரித்தார்கள்..
"முகர்ரம் என்பது இஸ்லாமிய அன்பர்களின் துக்க தினம்.அன்று நாம் கொண்டாட்டமும்,குதூகலமும்,விருந்தும் கேளிக்கையுமாக இருப்பது சரி யில்லை .அதனால் இந்த ஒருவருடம் நாம் ஹோலி கொண்டாட வேண்டாம் "என்று பெரியவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினர் .நவாப அவர்கள் கண்கள் கசிந்தன. " எனது அரூமை இந்து நண்பர்களின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இஸ்லாமிய நண்பர்களே வாருங்கள் நாம் ஓவ்வொரு இந்துவின் விட்டிற்கும் போய் அவர்களோடு இணைந்து" ஹோலி ".பண்டிகையைகொண்டாடுவோம்" என்று கூறினார்.

அன்றிலிருந்து "அவத் நாட்டில் " இஸ்லாமியர்களும் ஹோலிபண்டிகையை
கொண்டாட ஆரம்பித்தார்கள்.

பி.கு ( இந்த செய்திக்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். " ஹிம்ச
விரோத சங்கம் என்ற அமைப்பிற்கும் இஸ்லாமிய அமைப்பிற்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் உச்ச நிதிமன்ற நிதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் அளித்த தீர்ப்பில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.(2008) )

ட்டிருக்கிறார்.

Saturday, November 10, 2012

"ஒரு மாநில அமைச்சர் 

                      ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

                                       ஒரு நகரத்தந்தை "

 

1967ம்  ஆண்டு தமிகத்தில் காங்கிரஸ் ஆட்சி விழந்தது.  69ம் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் மறைகிறார். கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். அரசியல் நிலமையில்மாற்றமேற்படுகிறது . 1972ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் ஒரு ஆண்டு முன்னதாக 1971ம் ஆண்டு நடக்கிறது.

 தி.மு.க-காங்கிரஸ் கூ ட்டணி சார்பில் ஒரு அணியாக நின்றார்கள். மார்க்சிஸ்ட் கட்சி தன்னந்தனியாக  போட்டி இட்டது.60 க்கும் மேற்பட்ட சட்டமன்றதொகுதியிலும் , நாடளுமனரதொகுதியிலும்
 போட்டியிட்டாலும் மிக்கவும்பரிதாபகரமாக தோல்வியடைந்தது. ஏன் மதுரை நாடாளுமனரதொகுதியில் போட்டியிட்ட அந்த சிவப்பு சூரியன் பி.ராமமுர்த்தி "டெபாசிட் "இழந்தார்". திண்டுக்கல்லில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட எ.பாலசுப்பிரமணியம் ஒருவருக்கு மட்டும் "டெபாசிட்"கிடைத்தது...

  மார்க்சிஸ்ட் கட்சி இதோடு ஒழிந்தது என்று பத்திரிகைகள்  எழுதின. கட்சி அணிகளுக்கு  சோர்வு தட்டியது.

அப்போதெல்லாம் "தீக்கதிர்" அலுவலகம் சென்று வருவதுண்டு.  அனேக
மாக இரவு பத்து மணிவரை அங்கிருப்பேன். ஒருநாள்  நான்  விடு  திரும்பிய பிறகு காலையில் நண்பர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அரசரடி ,முக்கில் தீக்கதிர் பத்திரிகையை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக் கொடியை வெட்டி எறிகிறார்கள்.கலவர  சூழல்.குறிப்பாக சோமசுந்தரம் காலனி அருகில் திமுகவினர் இதனை செய்கிறார்கள் "
என்று பேசிக்கொண்டிருந்தனர்.

தீக்கதிர் பத்திரிகையில்  வந்த  செய்திதான் இதற்கு  காரணம் என்றும்  தெரிந்து கொண்டேன் முதல் பக்கத்திலொரு  பாக்ஸ் செய்தி.
                          "ஒரு மாநில அமைச்சர் ,
          .                  ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 
                               ஒரு நகரத்தந்தை "   ஆகியோர் விடுகளில் சோதனை 

என்ற செய்திதானது  

"இந்து"  பத்திரிக்கை "according to vernacular daily " என்று செய்தியை பட்டும் படாமலும் வெளியிட்டிருந்தது.தினமலர் ,தந்தி,எதுவும் வெளியிடவில்லை.

அன்று "எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்" என்று ஊ ன்றி நின்ற பத்திரிக்கை இப்போது 50 ம்   ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது.

மெஷின் மென், அச்சுக்கோப்பவர்  பக்கம் பார்ப்பவர், சைக்கிளில் பேருந்து ,மற்றும் ரயில் நிலையத்திற்கு கொண்டு சேர்ப்பவர் ,பிழை திருத்துபவர்,  துணை  ஆசிரியர், ஆசிரியர்
,
  தோழர்களே! இதயம் விம்ம ,கண்கள் பனிக்க 

    உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.




















     

Wednesday, November 07, 2012

சின்மயி---மீன்பிடி தொழில்--ராஜன்..........!!!






தமிழக மீனவர்கள் பாடுபற்றி, மிகச்சிறந்த தத்துவ ஞானியும், அரசியல் வித்தகரும், பரந்த அனுபவம் கொண்டவருமான சின்மயி அவர்களிடம் கெட்டுள்ளனர்.அவர் மிகவும் சிறப்பன பதிலை கொடுத்துள்ளார். அது ராஜன் போன்ற சில பதிவர்களுக்கு பிடிக்கவில்லை." யாரோ ஒருவீட்டில், எவரோ தீவைக்க , தங்க மகனன்றோ தண்ணிர் சுமக்கின்றார்" என்று புலவர் செஙகீரன் பாடியது போல் இன்று பதிவுலகம் அதனை சுமக்கிறது.



"ஆமாம்! நீ இருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்கலாம். நான் செய்ததைச் சொல்கிறேன்.



தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி செய்திகள் வந்த போதே நான் அந்தப் பகுதி நண்பர்களோடு தோடர்பு கோண்டென். பரமகுடி அருகில் வங்கி அதிகாரியாக பணியாற்றும் அவர் கொஞ்சம் சமூகப் பிரஞ்ஞையும் உள்ளாவர்." ஐயா! ரொம்ப சிக்கலானதாச்சே! வெளில தெரிஞ்சது , உள்ள நடக்கிறதுனு பாத்தா கஷ்டம் தான்!" என்று பீடிகையோடு ஆரம்பித்தார்.அவர் சொன்னது------



தமிழக கிழக்கு கட்ற்கரையில் கடல்குதிரை,நண்டு, கடல் அட்டை என்றுதான் உண்டுஇவை தடை செய்யப் பட்டுள்ள வகையில் உள்ளன.. படகை எடுத்துக் கோண்டு நடுக் கடலுக்கு சென்றால் தான் நல்ல மீன் கிடக்கும். ஒருதரம் போய் வரணுமின்னா 50000 ரூ சிலவாகும்.ராட்டு,ஷீலா நு வேணும்னா சிலொன் பகுதிக் போகணும் .போட்ல ஏறுமுன்னயே மீனவருக்கு 500 ரூ வக்கணும். காலைல கிளம்பினா மறுநாள் தான் மதியம் வாக்கில வந்தாகணும். இற்ங்கினாச்சுன்னா 1500 ரூ கொடுக்கணும்.ஒருதரம் போய்ட்டு வந்தா 200000 லட்சம் ரூ மீன் கிடைச்சாதான் வியாபாரிக்குகட்டுபடியாகும்.அப்ப அவன் எங்கன பொய் பிடிப்பான். அங்க போனா நாலஞ்சு லட்சம் கிடைக்கும். சில சமயம் பத்து லட்சம்கிடைக்கும். அப்போ மீனவருக்குபொனஸ் கிடக்கும்.



மீனவர்களுக்கு சர்காரு மாதம் 15 லிட்டர் டீசல் இலவசமா கொடுக்கு.மீன்பிடி தட செய்ய்ப்பட்ட மாதங்களில் நிவாரணத்தொகை கொடுக்கு.ஒருநாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்தைந்நூரு கிடைக்கும்.மாதம் இருபது நாள்தான் வேலை.



அங்க பொனாதான் கட்டும்.நட்டத்தில பொழப்பு நடத்தவாங்கான் வியாபாரி. எதிர் கரைல அடிக்கான் .அதோட தான் இவங்களும் போய் வராங்க. இது சிலோன் அரசாங்கத்துக்கு தெரியும். அது ஒரு சுண்டைக்காய். இந்தியா நினைச்சா தூக்கிப்போட்டு மிதிக்கலாம். ஆனா முடியது. கடல் ஆதிக்கம்,சர்வதேச சட்டம் லொட்டு லொசுக்குனு வரும். முடிஞ்சவரை நீ பாதுகாத்துக உன் கரைய. ரொம்ப போயிராத. அப்புறம் நான் சும்மயிருக்க முடியாது.இது நம்ம அரசு சொல்லுது.



மீன் வியாபாரி, சிலோன்,இந்தியா எல்லாமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்துல வேல பாக்கங்கனு தோணுது.எனக்கு என்ன தோணுதுனா நம்ம ஊரு தலைவர்களுக்கும் அரசல் புரசலா இது தெரியும்.சும்மானாச்சும் கூப்பாடு பொடுதாங்களோ! இருக்கலம்! இல்லமலும் இருக்கலாம்



இது சின்மயிக்கு வள்ளிசா தெரியாது. ரஜனுக்கு தெரியுமா?எனக்கு தெரியாது இவங்க ரெண்டு பெரும் பதிவுலகத்துல சண்டை போட்டாங்க. இதுல பஞ்சாயத்து பண்ண ஏகப்பட்ட ஆளுங்க வாராங்க.ஞாநி உட்பட.!.

Friday, November 02, 2012

யார் இந்த ரஞ்சன் பட்டாசார்யா .......?


ரஞ்சன் பட்டாசார்யா என்பவர் யார்.........?






கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையில் அடிபட்டு வரும்பெயர் ரஞ்சன் பட்டாசார்யா.இவரைப் பற்றி தகவல்களை அறிய முற்பட்டேன் அப்போது வினோத் மேத்தா என்பவர் அவசர நிலை, வாஜ்பாய் என்று" இந்துஸ்தான் டைம்ஸ்" . பத்திரிகையில் (4-11-111) எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்தது.



வினோத் ஒரு பத்திரிகையாளர்.வாஜ்பயை நன்றாகத் தெரிந்தவர்."லக்னோ பையன்" (luknow boy) என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகம் பற்றிதான் "இந்துஸ்தான் டைம்ஸ்" கட்டுரை எழுதியிருந்தது.



"வாஜ்பாய் அவர்களை சமூகதளத்திலும் ,அரசியல்தலத்திலும் எனக்கு தெரியும்.நான் 1991ல் டெல்லி வந்தேன். அவருடைய நண்பர் பிரிஜேஷ் மிஸ்ரா. பிரிஜேஷ் ஐ.நாவில் இந்தியாவின் பிரதினிதியாக செயல்பாட்டவர்.வாஜ்பாய் அரசியல் ரீதியாகவோ,மற்றவகையிலோ சோர்வடைந்தால் நியூயார்க்பொய்விடுவார். அங்கு பிரிஜேஷ் உடன் தங்குவார்.ஒருபத்து நாள் தங்குவார். "ஜாலி"யாக இருப்பார்கள். கொஞ்சம் 'கச முச"இருக்கும். வஜ்பாய் ஒன்றும் " சந்நியாசி "இல்லை. புலால் உண்ணுவார்."முடாக்" குடியரில்லை. பெண் நண்பர்கள் உண்டு." என்று தன் நூலில் விணொத் குறிப்பிட்டுள்ளார்.



" அவர் பிரதமர் ஆனதும் 7 ரேஸ் கோர்ஸ் சாலை வீட்டில் தங்கினார். அவரோடு திருமதி கௌல் என்ற அம்மையாரும் தங்கினார். கணவர்கௌல் டில்லியில் பெராசிரியராக இருந்தார். இறந்து விட்டார், கௌல் அம்மையாருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் பெயர் "நிமிதா".அவருடைய கணவர் தான் ரஞ்சசன் பட்டசார்யா.நிமிதாவை தன்னுடைய தத்து மகளாகவும்,ரஞ்சனை தத்து மறுமகனாகவும் வாஜ்பாய் அறிவித்தார்.எந்த சந்தர்ப்பத்திலும் வாஜ்பாய் இந்த நால்வர் குடும்பத்தை மறைக்கவோ ,மறுக்கவோ இல்லை" என்றும் வினோத் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறர்.



பா.ஜ.க.வில் வாஜ்பாயை எதிர்ப்பவர்கள் உண்டு.அந்த எதிர் கோஷ்டியில் இருப்பவர்' "சக்தி சின்கா என்பவர்.இவர் கௌல் அம்மையாரின் இரண்டாவது மகளை (நிமிதாவின் தங்கையை)திருமணம் செய்து கொண்டவர்.



வாஜ்பய் ஆட்சியில் அதிகாரமையமாக செயல்பட்டவர் ரஞ்சன் என்பது தான் அரவிந்த் கெசரிவால் அவர்களின் குற்றச்சாட்டு. முக்கிய நகரங்களை இணக்கும் "நாற்கர சாலை" அமைக்க 50000கோடி ஒப்பந்தம் போடுவதில் ஊழல் என்றும் அதில் ரஞ்சனுக்கும் தொடர்பு உண்டென்றும் புகார் எழுந்துள்ளது.