Sunday, October 30, 2011

அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கிறுக்கர்களும் ...

அண்ணல் காந்தி அடிகளும் இந்தக் கிறுக்கர்களும்...

வழுக்கைதலயும் பொக்கைவாயுமாக காந்தியின் பிம்பம் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.காந்தி தொப்பியை மாடிக்கொண்டு இருக்கும் அன்னா ஹஸாரே யின் உருவத்தோடு ஒப்பிட மனசு மறுக்கிறது.ஊழலை ஒழிக்க காந்தீயா வழியில் புறப்பட்டவர் அன்ன ஹசாரே.இப்பொது அவருக்கு உதவியாக இருக்க அமைக்கப்பட்ட குழிவினரின் தொந்திரவு தாங்கமுடியாமல் கமிட்டியை மாற்றலாமா என்று எண்ணுகிறாராம்.
கமிட்டியின் முக்கியமான உறுப்பினர் கிரன்பேடி.எங்கள் அலுவலகத்தில் இரண்டுஆண்டுக்குஒருமுறைசொந்தஊருக்குசென்றுவர பயணச்சிலவைகொடுப்பார்கள் என்நண்பரொருவர்புதுக்கோட்டையிலிருந்துடெல்லிசென்றுஅதற்கானபயணச்சிலவைபெற்றுக்கொண்டார். பின்னர்நடந்தவிசார்ணையில்அவர் சொன்ன தினத்தில் புதுக்கோடை ரயில் நிலயத்திலிருந்து முதல் வகுப்பில் .பயணிகள் யாரும் செல்லவில்லை என்று தெரியவந்தது.அவர் தண்டிக்கப்பட்டர். கிரண்பேடி விமானத்தில் மிக உயர்ந்த கட்டணத்தைத்தான் பயணப்படியாக பெற்றுக்கொள்வார். (அவர் நடந்து சென்றாலும் கூட )இது பற்றி பத்திரிகைகள் எழுதியபோது மிகுதியான் பயணப்படியை தான் வாங்குவது தான் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுக்கத்தான் என்று விளக்கமளித்தார். போபாலைச்சார்ந்த அமைப்பு நோட்டீசு அனுப்ப இன்று அதிகமாக அவர்களிடம் வாங்கிய பயணப்படியை திரும்ப கொடுக்க சம்மதிதுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இந்தக் கமிட்டியில் வக்கீல் ஒருவர் இருக்கிறார். வாயத்திறந்தாலே வம்புதான்.காஷ்மீரில் உள்ள இந்துக்களுக்கு தனி மாநிலம் அமைக்க அங்கு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.சர்சை தீயாக கொழுந்துவிட்டு எரிகிறது.
கேஜரிவால் என்பவர் வருவாய்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்.வருமான வரித்துரயைசார்ந்த இவர் பதவி விலகி மக்கள் செவைக்கு வந்துவிட்டர். சுமார் 9 லட்சம் வர்மானவரிகட்டாமல் பத்து வருடமாய் ட்பாய்க்கிறார்.ஹசாரேமுதல் உணாவிரத்தின்பொது 800 லட்சம்
வசூலானது. சிலவு 30லட்சம் போக பாக்கி 50 லட்சம் ரூபாயை கேஜரிவால் தன் பெயரில் வங்கியில் பொட்டுக்கோண்டு விட்டார்.உள் குத்து நடந்து கோண்டிருக்கிறது.இது தவிர போர்டு அறக்கட்டளையிலிருந்து இவருக்கு கோடிக்கணக்கில் உதவியிருப்பதாக பேச்சு உண்டு.
மூலவர் அன்னா ஹசாரே. அஹிம்சாமூர்த்தி. அவருடைய கிராமத்தில் விவசாயிகளுக்கு பாசன் வசதி செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.அங்குள்ள மக்களிடையே நல்ல செல்வாக்கு.காந்தீய வாதியல்லவா .கிராமத்தில் யாரும் குடிகக்கூடாது. அஹிம்சாவாதியல்லவா! யாரும் மாமிசம் உண்ணக்கூடாது. மீரும் தலித்துகளை மரத்தில் கட்டிவத்து உதைக்கிறார்கள்.
அண்ணல் காந்தியடிகளின் வார்தா ஆஸ்ரமத்தில் புலால் உண்ணமுடியாது. எல்லைப்புரத்தில் உள்ள வனகுடி மக்கள் மிகவும் ஆக்ரோஷ மானவர்கள்..பிரிட்டிஷாரை எதிர்த்து போராடினார்கள் அவர்களுடைய தலைவர் தான் பாதுஷா கான். அஹிம்சாவாதி காந்தியின் பிரதமசீடர்.தன் மக்களை அஹிம்சை வழியில் பொராடவைத்தவர்.காந்தியப் பார்க்க தன் குடும்பத்தோடு வார்தாவுக்கு வந்திருந்தார். அவருடைய பேரக்குழந்தைகளும் வந்திருந்தனர். ஆஸ்ரமத்தில் புலால் உண்ண முடியாது.குழந்தை பட்டினி.இதனை காணச்சகிக்காத அண்ணல் காந்தி ஆடு மாமிசம்வாங்கிசமைக்கச்சொல்லிகுழந்தைகளை உண்ணச்செய்தார் என்பது வரலாறூ.
காந்தி பெயரைச்சொல்லி கும்மியடிக்கும் இவர்களை கிறுக்கர்கள் என்று சொன்னால் கோபப்படாதீர்க்ள்.

Thursday, October 27, 2011

சசிகுமார் என்ற ஊடகவியலாளர் ....

சசி குமார் என்ற ஊடகவியலாளர்...

சமீபத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது ஊடகம் பற்றிய கருத்தரங்கிற்குச்சென்றிருந்தேன்.சசிகுமார் அவர்கள். கருத்துரை ஆற்றினார்கள்.ஊடகத்திற்கு விடுதலை - ஊடகத்திலிருந்து விடுதலை என்று எடுத்துரைத்தார்கள்.அவர் ஆற்றிய உரை பற்றியது அல்ல என் பதிவு.
சசிகுமார் எண்பதுகளின் கடைசியில் தூர்தர்ஷனில் செய்திவாசிப்பார்.அவர்வாசிக்கிறார் என்றால் எந்தபணியாக இருந்தாலும் நிறுத்திவிட்டு செய்தி கேட்கப் போய்விடுவேன்.உச்சரிப்பு,கைதேர்ந்த கவிஞனின் கவிதையை ஒத்திருக்கும். சென்னையில் ஒரு மூறை லட்சுமிபுரம் இளைஞனர்சங்கத்தில் சி.பி.ராமசாமி அய்யர்பேசுவதை கேட்டிருக்கிறேன். அதன் பிறகு சசிகுமார் தான் என் நினைவுக்கு வருவார்.செய்தி வாசிக்கும்போது, காலப்பிரமாணத்தை அவர் பயன்படுத்துவத்துவது அற்புதமாக இருக்கும் .
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது "காலமும் குறியீடுகளும்" என்ற பாடம் இருந்தது .அவன் வருகிறான் (.) வந்தவன் ரயிலை பார்க்கிறான்.(.)ஒரு வாக்கியத்திற்கு மற்றொரு வாக்கியத்திற்கும் இடையில் முற்றுப்புள்ளி போடுகிறோம். ஒருவாக்கியம்முடிந்து அடுத்த வாக்கியம் ஆரம்பிக்க எவ்வளவு இடைவெளி வேண்டும் . முற்றுப்புள்ளி என்றால் நான்கு மாத்திரை. கோலன் என்றால் மூன்று மாத்திரை. செமிகோலன் என்றால் இரண்டு மாத்திரை.கமா என்றால் ஒரு மாத்திரை. ஒரு மாத்திரை என்பது கண் சிமிட்டும் நேரம் .எங்களை வாசிக்கச்சொல்லி வாத்தியார்கள் பயிற்சி அளிப்பார்கள். சசிகுமார் செய்தி வாசிக்கும் போது இதனை அனுபவிப்பேன்.
அவசர நிலை முடிந்ததும் சென்னை ஜெர்மனி தூதரகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. sex,censor, cinema என்பது தலைப்பு .பொன். பரமகுரு நடுவராக இருந்தார்.திரைப் பத்திரியாளர்கள் ரண்டார் கை ,என்று எழுத்தாளர்கள் மனித உரிமையாளர்கள், என்று கருத்துரையாளர்கள் வந்திருந்தனர்.ஊடகங்களுக்கு தணிக்கையிலிருந்து விடுதலை என்ற கருத்து முன்னின்றது.பார்வையாளர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டனர். எனக்கும் அனுமதி கிடைத்தது."பத்திரிகயாளர்கள் அரசு,அதிகாரரிகள் ,காவல்துறை ,என்று விமரிசிக்கும் பொருப்புள்ளவர்கள்.அவசர நிலைக்காலத்தில் பல பத்திரிகை ஆசிரியர்கள் போக்குவரத்து காவலர் காலில் விழுந்த கதை.எனக்குத்தெரியும். சுதந்திரம் எதற்கக? யார் நலனுக்காக " என்று கூறி முடித்தேன். அரங்கத்தின் மூலையிலிருந்து மிகவும் பலகீனமான கர ஒலி வந்தது. மதிய உண்வு இடைவேளையின் போது என்னை கை குலுக்கி பாராட்டினார். ஒல்லியான நீண்ட முகத்தில் கருத்த தாடியோடு இருந்த சசிகுமார்.
சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு டெல்லியில் அவர்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .நான்கு நாள் விழா .சப்தர் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.நெஞ்சை உருக்கும் அதனைதயாரித்தவர் சசிகுமார்.
இந்திரா அம்மையார் கொலைசெய்யப்பட்டபொது சீக்கியர்களுக்கு எதிரன வன்முறை ஏவிவிடப்பட்டது.இதனை சித்தரிக்கும்படம் வந்தது சீமா பிஸ்வாஸ் நடித்த இந்தப்படத்தில் வன்முறையாளர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும்.படத்தில் வன்முறையை காட்டமலேயே சசிகுமார் இயக்கி இருப்பார்.
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான கல்லூரி ஒன்றை நடத்திவரும் சசிகுமாருக்கு வாழ்த்துக்கள்.