Wednesday, June 29, 2011

முதுமை கம்பீரமானது ........

முதுமை கம்பீரமானது..........

ஜப்பானில் சுனாமி வந்து அந்தமக்கள் பேரழிவைச்சந்தித்தார்கள்.ஃபூகு சமா தீவில் அணு உலை வெடித்தது.ஒன்றல்ல.இரண்டு வெடித்தது.ஏராளமான சேதம்.பாவிகள் முழுவிவரத்தையும் சொல்லமாட்டார்கள்.இந்த விபத்தினைத் தடுக்க அரசு விஞ்ஞானிகளை அழைத்துக்கேட்டது."அணு உலையின் வெப்பத்தக் குறக்க வேண்டும்.சமுத்திர நீரை ஹெலிகாப்டர் மூலம் உலையின் மீது கொட்டினால் வெப்பம் குறையும்."என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.

உலை தனியாருக்குச்சொந்தமானது.ஜப்பான் அரசு அவர்களிடம் அனுமதி கேட்டது.கதிர் வீச்சல் ஏற்படும் சேதம்,சமுத்திரநீரால் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதம் இரண்டையும் முதலாளி கணக்குப்போட்டான்.இயந்திரத்தைப் பாதுகாக்க முடிவெடுத்தான். அதனால் சமுத்திரா நீரைஉலையின் மீது அரசால்கொட்டமுடியவில்லை.உலை வெடித்து கதிர்வீச்சு அமெரிக்காவின் கலிபோர்னியாவரை இருந்ததாகச்சொல்கிறார்கள்.

உலை இருந்த இடத்தில் கதிவீச்சு இருக்கும்.சுமார் ஆயிரம் வருடங்கள் வரை இருக்குமாம். கதிர்வீச்சு பரவாமல் இருக்க அதனை மூடவேண்டும்.மூடும் பணி ஜப்பானிய மொழியில் சொல்வதென்றால் "கிடானை,கிட்சுயி,கிசென் " என்கிறார்கள்.ஆங்கிலத்தில்Dirty, Difficult, Dangerous. தமிழில் அவலமானது, கடினமானது,ஆபத்தானது.எராளமான இளம் இஞ்சினியர்கள் தங்கள் உயிரைப் பணயமாக்கி இந்தப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . கதிர் வீச்சால் அவர்கள்முடமாகலாம்.மலடாகலாம்.அவர்களின் சந்ததிகள் பாதிக்கப்படலாம்.தங்கள் நாடும் தங்கள் மக்களும் காப்பாற்றப்படவேண்டும் என்பதைதவிர அவர்களுக்கு வேறு சிந்தனையில்லை

யசுடெரு யமட என்பவர் இஞ்சினியர் எழுபத்தீரண்டு வயதாகிறது.ஸ்மிடொமோ மெடல் இண்டஸ்றிஸில் பணி . அவர் " எனக்கு வயதாகிவிட்டது. நான் ஒரு இஞ்சினியர். என்னால் இந்தப்பணிகளைச்செய்யமுடியும். கதிர்வீச்சினால் எனக்கு மலட்டுத்தன்மை வந்தால் என்ன? எனக்கு சந்ததிவேண்டாம். ஆண்டு அனுபவித்தவன் நான். நான் உலையை மூடும் பணியில் இறங்கப்போகிறேன். நம் நாட்டின் முதிய இஞ்சினியர்களே வாருங்கள் .கதிர் வீச்சைத்தடுப்போம்.இளைஞர்களையும் மக்களையும் காப்போம்" என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

அவர் பின்னல்முதியவர்கள் திரண்டு வருகிறார்கள்.

முதுமை கம்பீரமானது. .

Wednesday, June 22, 2011

ஈஸ்வர அல்லா தேரே நாம் -----------

ஈஸ்வர்-அல்லா தெரே நாம் .....

அண்ணல்காந்தி அடிகளுக்கு மிகவும் பிரியமான பாடல்கள் "வைஷ்னவ ஜனதோ"வும் "ரகுபதி ராகவ "வும் ஆகும். சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றிருந்தபோது "வைஷ்ணவ" நர்சி மெத்தா என்ற சித்த புருஷரால் எழுதப்பட்டது என்று அறிந்தேன்.

சென்னையில் ஒலிநாடாவாங்கினேன். போட்டுப்பார்த்தபோது "ஈஸ்வர் அல்லா " என்ற வரிகள் இல்லை. கடைக்காரரிடம் விசாரித்தபோது மூலப் பாடலில் அந்த வரிகள்கிடையாது என்று கூறினார். பாடியது விஷ்னு திகம்பர் பலுஸ்கர் என்று அட்டையில் போட்டிருந்தது.அவருடைய வாழ்க்கைகுறிப்பாக அவர் சுதந்திரப் போராளி, கண்பார்வையற்றவர், சிறந்த இசைக்கலைஞர் "தண்டி"யாத்திரையின்போது காந்தியடிகளின் பிரர்த்தனைக்கூட்டத்தில் பாடுவார் என்றுமிருந்தது. (பலுஸ்கர் பற்றிதனியாக இடுகை போடுவேன்).

"ரகுபதி ராகவ "பாடலை எழுதியது யார்? "ஈஸ்வர் அல்லா" ஏன் ஆரம்பத்தில் இல்லை?. பின்னர் எப்படி வந்தது? என்று கேட்டு விடைதேட ஆரம்பித்தேன்.

கோவை "தீக்கதிர்" பதிப்பில் துணை ஆசிரியராக இருக்கும் கணேசன் அப்போது நகபுரியில் இருந்தார்,அவர்மூலம் இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் முனைவர் ஜாண் அவர்களைத்தொடர்புகொண்டேன்.காந்தி அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் படித்து முனைவர் பட்டம்பெற்ற திருநெல்வெலி மாவட்டத்தைச்செர்ந்தவரவர்.என் கேள்விக்குபதிலை நாராயண தேசாய் ஒருவரால் தன் கொடுக்க முடியும் என்றார் ஜாண் செல்லதுரை.

காந்தியடிகளின் மனசாட்சியக திகழ்ந்த மகாதேவ தேசாயின் மகன் தான் நாராயண தேசாய். சபர்மதி ஆசிரமத்தில்பிறந்து காந்தி அடிகளில் மடிகளில் தவழ்ந்து விளையாடியவர் நாராயண் தேசய். தற்பொது தொண்ணூறு வயதகிறது. குஜராத்தில் வசிக்கிறா அவரை தொட ர்பு கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் மற்றொரு நண்பர் சில தகவல்களைச்சொன்னார். குஜராத் மாநிலத்தில் புழங்கும் ஒரு நாட்டுப்புற பாடல் வரிகள் இவை என்றும் அது பற்றிய விவரங்களையும் சொன்னார்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பியர்கள் சூரத் நகரத்தில் தங்களுடைய கிட்டங்கியை வைத்தனர். போர்பந்த்ரிலிருந்து சரக்குகளை கொண்டுவரவும் இந்திய சரக்குகளை சேகரித்து அனுப்பவும் அது மையமாக இருந்தது. அதனால் துறைமுகத்தில் போக்குவரத்து அதிகமாகியது.சரக்குகளை ஏற்ற இறக்க தொழிலாளர்கள் அதிகமாகவந்தனர். தொழிலாளர்களில் ஜைனர்கள் ஜரதுஷ்டிரர்கள்(பார்சிகள்),இந்துக்கள் , கிறிஸ்துவர்கள்,இஸ்லாமியர்கள் என்று குவிந்தனர். ஒன்று பட்டு பக்கத்து கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். பண்டிகைகளில் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்களை மேய்க்கும் கங்காணிகளுக்கு இதில் சம்மதமில்லை . தங்கள் குடியிருப்புகளில் "இவர்கள் வழக்கமாக சொல்லும் சொலவடைதான் "அரே! ஈஸ்வர் க்யா ஹை ! அல்லா க்யா ஹை! சப்கு சன் மதி தே பகவான்" என்பதாகும்
காந்தி அடிகள் "தண்டி யாத்திரை " புறப்பட்ட போது அவரோடு செர்ந்தவர்கள் எழுபத்தெட்டு பேர். செல்லச்செல்ல மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அபடித் திரண்டவர்களில் துரைமுகத் தொழிலாளர்களும் உண்டு. பிரார்த்தனை கூட்டத்தில் "ரகுபதி ராகவ" பாடும்போது ஜனங்களும்செர்ந்து பாடுவார்கள். "ரகுபதிராகவ ராஜாராம் - பதித் பாவன சீத்தாரம் " என்றதும் இந்தத் தொழிலாளர்கள் "ஈஸ்வர அல்லா தெரே நாம் சப்கோ சன் மதி தெ பகவான் " என்று எதிர்பாட்டுபாடுவார்கள். காந்தி அடிகள் மகிழ்ந்து போய் பாடிக்கொண்டிருந்த விஷ்னு திகம்பர் பலுஸ்கரிடம் இந்த வரிகளையும் சேர்த்து பாடச்சொன்னார். அன்றிலிருந்த்து அப்படியே பாடப்பட்டு வருகிறது. .

Tuesday, June 14, 2011

கள்ளப்பணம் வைக்க கிட்டங்கிகள் .............

கள்ளப்பணத்தின் கிட்டங்கிகள்.........

மதுரைச்செர்ந்தவர்களுக்கு "கிட்டங்கி" என்ற வர்த்தை தெரிந்திருக்கும் அங்கு வடக்குமாசிவீதி,கீழமாசிவீதி களில்கிட்டங்கி கடைகள் என்ற பலகைகளைப் பார்த்திருக்க லாம். இந்தக்கடைகளில்,உளுந்து,பருப்பு, வத்தல், சீனி போன்ற பொருட்களை மூடைமுடைகளாகவோ ,சிப்பங்களாகவோ வாங்கி மொத்தவியாபாரத்திற்காக வைத்திருப்பார்கள்.கம்பம்,தேனி, திண்டுக்கல்,காரைகுடி,ராமநதபுரம் வர்த்தகர்கள் மொத்தவிலைக்கு வாங்கிச்செலவார்கள். குடிதனக்காரர்களும் வருடாந்திரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தவிலைக்கே வாங்கிச்செல்வார்கள்.

இப்போது பணத்தை மூட்டை மூட்டையாக வைக்கவும் கிட்டங்கிகள் வந்து விட்டான. பணம் என்றால் கள்ளப் பணம்.வர்த்தகர்கள், சிறு தொழிலதிபர்கள், லெவாதெவிக்காரர்கள் ஆகியொரிடம் செரும் கள்ளப்பணத்தை கடைகளிளோ, அலுவலக்ங்களிலோ வைக்க முடியாது. இதனை வைக்க நம்பகமான ஒரு இடம் தேவைப்படுகிறது.இதனை சில வங்கிகள் (தனியர்) செய்து உதவுகின்றன.

எனகுத் தெரிந்த நண்பர் N.R.I. ஒருவர் ஆரம்பித்த தனியார் வங்கியில் வேலைக்குச்செர்ந்தார். அவருடைய வேலை? காலை பத்து மணிக்கு அவர் சென்றவுடன் மெனெஜர் ஒருகாரையும் கொடுத்துவிடுவார். சிலதொலை பேசி எண்களையும் கொடுப்பார். அந்த நபர்களொடு இவர் தொடர்பு கொண்டு அவர்களைச்சந்திக்க வேண்டும்.அவர்கள் 10லட்சம்,20 லட்சம் மூட்டைகளில் பணத்தை கட்டி தயாராக வத்திருப்பார்கள். அதனை எடுத்துக்கொண்டு வங்கியில் கொடுக்கவெண்டும். இதற்கு எந்த ரசீதும் கிடையாது. வங்கியில் உள்ள Money Godown என்ற அறையில் அதனை போட்டுவிடுவார்கள்.சொந்தக்காரர் எப்பொது வேண்டுமானாலும் எவ்வளவு வெண்டுமானாலும் எடுத்துக் கொண்டு பொகலாம். மெனெஜுருக்கும் அவருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் (Gentlemens agreement !!!) அது தான்
இந்த வசதிக்காக வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும் .

" அந்த அறையில் பணம் குவிக்கப்பட்டிருக்கும் .எனக்கு பார்க்கவே பயமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.கணக்குவழக்கு கிடையாது. என்ன மொசடியோ என்னவோ என்று பயத்தில் அந்த வங்கி வேலையை விட்டுவிட்டேன்"என்றார் நண்பர்.

அந்த வங்கியை ஆரம்பித்தவர் பெயர் இந்துஜா.

1994ம் ஆண்டு ஆரம்பித்துவைத்தவர் அன்றய நிதி அமைச்சர்
Dr.மன்மொகன் சிங் .

Sunday, June 12, 2011

அந்தப் பாகிஸ்தனத்துக் கவிஞன்...........

அந்த பாகிஸ்தானத்துக் கவிஞன் .......
மேரா ஜூதா ஹை ஜபானி , என் செருப்பு ஜப்பானிலிருந்து,
யே பத்லூன் இங்கிலீஸ்தானி , என் உடுப்பு இங்கிலாந்திலிருந்து ,
லால் டொபி ரூசி , என் சிவப்பு தொப்பி ரஷ்யாவிலிருந்து
பிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி ! என் இதயமோ இந்துஸ்தானத்திலிருந்து !
1955ம் ஆண்டு" ஸ்ரீ 420" என்ற திரைப்படம் வந்தபொது அதில் உள்ள இந்த பாட்டுதான் அன்று இளைஞர்களின் தேசீய கீதமாக இருந்தது.

இந்த பாட்டை எழுதிய கவிஞர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர்.ஷைலெந்திர என்ற அவர் 1923ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி ராவல் பிண்டியில் (british india ) பிறந்தார்
சங்கர் தாஸ் கெசரிலால் என்பதுஅவருடைய பெயர்.புனை பெயர் ஷைலெந்திர.அவரும் பெற்றொரும் லக்னௌ வந்துதங்கினர் அப்பொது ஷைலெந்திராவுக்கு 20 வயது இருக்கலாம். அவருடைய தாயர் திடீரென்று மரணமடைந்தார்.வெருப்புற்ற கவிஞர் நத்திகராக மாறினார். சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தனக்கென்று தனிப் பாணியை வைத்துக்கொண்டார். வண்டிப்பேட்டை, சந்தைப்பெட்டை ஆகிய இடங்களில் கூடும்சாதாரண மனிதர்களிடையே கவிதைகளை எழுதி வாசிப்பார்.உணர்ச்சியூட்டும் இந்தக்கவிதைகள் நேரடியாக என்மக்களைச்சென்றடைய இது தான் என் வழி என்பார். தொழிலாளர்களும் பாடுபடும் மக்களும் இவரை விரும்பி வரவேற்றனர். மெள்ள மெள்ள இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு ஏற்பட்டது.இந்திய மக்கள் நாடக சங்கத்தில் இணைந்தார். (Indian People Theatre Association--I.P.T.A)

இதற்கிடையே இந்திய ரயில்வேயில் வெலை கிடைத்தது. அதனால் மும்பை பொக வேண்டியதாயீற்று. வேலை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் இடசாரிகள் நடத்தும் கூட்டங்களில் பேசுவதையும் கவிதை வாசிப்பதையும் தொடர்ந்தார்.கவியரங்கங்களில் ஷைலேந்திரா வருகிறார் என்றால் மக்கள் மொய்த்தனர்.

அப்பொது மும்பையில் பிரித்விராஜ, ராஜ் கபூராகியோர் தங்கள் நாடக சினிமா முயற்சிக்காக கலைஞர்கள் கவிஞர்களைத் தேடிக்கோண்டு இருந்தனர். இடது சாரிகள் நடத்தும் கலைவிழாக்கள், கவியரங்கங்கள் தான் இவர்களின் மையம் . ராஜ் கபூர் ஒரு நிகழ்ச்சியில் ஷைலேந்திராவின் கவிதையைக் கேட்டிருக்கிறார். "பஞ்சாப் பற்றி எறிகிறது" என்ற தலைப்பில் அவர் பாடிய உணர்ச்சி மிக்க கவிதை ராஜ் கபூரை உலுக்கி எடுத்து விட்டது. உங்கள் கவிதைகளைத்தாருங்கள் புத்தகமாக பொடுகிறென் என்று கூறியுள்ளார்.இந்த தொடர்பு அவர் மரணம் வரை நீடித்தது.

ராஜ் கபூரின் "பர்சாத் " படத்திற்காக அவர் எழுதிய "பர்சாத்-கி " என்ற பாடல் நிலைத்து நின்றது.ராஜ் கபூர்,கே . ஏ. அப்பாஸ் ,சங்கர் ஜெய்கிஷன், ஷைலெந்திரா என்ற நலவர் குழு உதயமாகியது.

பால்ராஜ் சஹானி, செதன் ஆனந்த் (தெவானந்த்தின் அண்ணன்),ஹிங்கல், சலீல் சவுத்திரி, பிமல்ராய், நிமாய் கோஷ் , என்று இடதுசாரிகள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள் அப்பொது.

Thursday, June 09, 2011

இதனை இவன் கண் விடல் ........

இதனை இவன் கண்விடல் .....
எந்த ஒரு காரியத்தையும் அது வெற்றி பெற வேண்டுமானால் தகுதியான நபரிடம் விடவேண்டும் . ஒரு குறிப்பிட்ட விஷயத்தில்வெற்றியடைபவர்வெறு விஷயத்தில் அனுபவமின்மையால் சொதப்பிவிடலாம்.அதனால் தான் " குறைந்த விஷயம் பற்றி அதிகமாகத் தெரிந்தவனே நிபுணன் "என்கிறார்கள் . An expaert is one who knows more and more about less and less . கண்வைத்தியரிடம் இதய நோய்க்கு மருந்து கெட்பதில்லை.
கள்ளப்பணம் பற்றி பாபா ராம்தேவ் பெசிவருகிறார்.இந்த நெரத்தில் கள்ளப்பணம் பற்றி அதனுருவாக்கம்பற்றி தெரிந்து கொள்வது நல்லது.வங்கிகள் முலமாக. . வங்கிகளால் நடத்தப்படுகிறது . personnel Banking என்று இருக்கிறது நம்முடைய தொலை பெசிகட்டணம் மின் கட்டணம் சொந்தமாக கடன்,மற்றும் தனிப்பட்ட பணம்செலுத்தும் கடமை களை வங்கிகளே செய்து அதற்காக சிறு தொகையை வாங்கிக்கொள்வார்கள் இதுதான் நமக்குத் தெரிந்தது . .
உங்கள் பணம் வெள்ளையா, கருப்பா,என்று கெட்காமல் ,அதனை கண்ணை இமை காப்பது பொல காத்து வரி இலா நாட்டில் சேர்த்து அங்கு அதைக்குட்டி பொடவைக்கும் வங்கிகள் உள்ளன. City Bank . போன்ற வை இதில் சிறந்தவை.இப்படி ஒருவங்கி சேவை அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது .அமெரிக்கக் கம்பெனிகளின் நலனை பாதுகாக்க அரசியல்தளைவர்கள், பொம்மை ஆட்சியாளர்கள் , சர்வாதிகாரிகள் என்று அவர்களுக்கு வாக்கரிசிபோட சி ஐ ஏ உருவாக்கிய திட்டம் தான் இது.
தென் அமெரிக்காவிலும் ,மத்திய அமெரிக்காவிலும் இவர்கள் ஆரம்பித்த கூத்தின் பலனை அனுபவிக்கிறோம்.சரித்திரம்படித்தவர்களுக்கு தெரியும் .மத்திய அமெரிக்காவில அன்னாசிபழம் அபரிமிதமாக விளையும்.தென் அமெரிக்காவில்வாழை பழம் விளையும் .இவற்றை வாங்கி விற்பவை அமெரிகக்கம்பெனிகள் இந்தக் கம்பெனிசொல்லும் நபர்கள் த ன் இந்த நடுகளின் ஜனாதிபதி, பிரதமர் அதனால் இவற்றிர்க்கு அன்னசிபழகுடியரசு என்றும் வாழைப்பழ குடியரசு என்றும் கூறுவார்கள். இந்த தலைவர்கள் உள்நாட்டில் கொள்ளை யடித்த பணத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் புதிய வங்கி சேவைகள்.இன்று அவை பட்டைதீட்டி நன்கு பளபளபாக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு போட்ட வாக்கரிசிதான் இவை.இதனை அரைத்தலைப்பா மன்மோகனாலோ , அரைவழுக்கை சிதம்பரத்தாலோ நினத்தாலும்திருப்பி கொண்டுவர முடியாது.(காரணம் !!!!!)
பின்பாபா ஏன் இந்தத்தாவு தாவுகிறார்.
இவர் ஹரியானாவை சேர்ந்த யாதவகுல சீலர். தற்போது 1000கோடி சொத்துக்காரர். ஸ்காட்லந்து அருகில் சொந்தமாக ஒரு குட்டிதீவு . சொந்தமாக இரண்டு விமானங்களுள்ளன. இவருக்கு ஆலோசகர்களாக அரியானா உயர்நிதி மன்ற ஒய்வுபெற்ற நீதிபதி பிரீதம்பாலும்பத்திரிகையாளர் தெவெந்திர சர்மாவும் உள்ளனர். முன்னாள் உளவுத்துறை தலவர் அஜித் தொவில் இருக்கிறார். பத்திரிகையாளர் வெதபிரகாஷ் (ஆர்.எஸ்.எஸ்.) இருக்கிறார்.பக்கா ஆர்.எஸ்.எஸ்.காரரான குருமூர்த்தி இவருக்கு ஆலோசனை அளிக்கிறார்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக உமாபாரதியின் சேக்காளியான கோவிந்தாசார்யாதான் இவருடைய நெருங்கிய நண்பர் .அவருடைய பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளையும்,ஆர்.எஸ்.எஸ். இரண்டு அமைப்புகளும் தான் இந்த ராம் லீலா கூட்டத்தை கொண்டுவந்தது.
திருடன் ஓடும் பொது "திருடன் திருடன்"என்று ஊவிக்கொண்டு பொவான். நாமும் அவன்பின்னே ஒடி களைத்து விழுவோம்.
பாபாவின் மொழிக்கொள்கை என்ன? சட்டங்களை இந்தியில் கொண்டு வர வேண்டும். .இந்திதன் ஆட்சி மொழியாக வேண்டும்
அயொத்தியில் ராமர் கொவில் கட்ட வேண்டும். அதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தயார்.
குஜராத் கலவரம் சரிதான்.
பாபா இந்துத்வா வாதி அல்ல. அவர்.ஆர்.எஸ்.எஸ் .அல்ல என்று அவரே கூறியிருக்கிறார்.அவர் பா.ஜ.க அல்ல. அதவானி சொல்கிறார்.நம்புவோம்

Monday, June 06, 2011

ராஜகுருவும் பாபா ராம தேவும் ----

ராஜ குருவும் பாபா ராமதேவும்....
பாபா ராம தேவ் தன் உண்ணாவிரததை ஆரம்பிக்குமுன்னால் ராஜ குருவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் ஆரமபித்தார்.இந்திய சுதந்திரப் பொராளிகளில் முதன்மையான இடத்தைப் பெற்ற அந்த மூவர் பகத்சிங், ராஜகுரு,சுகதேவ் ஆகியோராவர் .
ஷிவ்ராம் ஹரி ராஜகுரு பூனே அருகிலுள்ள காட்டே என்றசிற்றுரில் 1908மாண்டுஆகஸ்டுமாதம் 24ம் தேதி பிறந்தார்.மேல் படிப்புக்காக வாரணாசி சென்றார். சமஸ்கிருதத்தை,உபநிஷத்தை, ஸ்மிருதிகளை கற்றறிந்தார்.இயல்பிலேயே கூர்மையான புத்திகொண்ட அவர் தூக்கத்தில்கேட்டாலும் எந்த கெள்விக்கும் விடை அளிக்குக்கும் திறமை உள்ளவர்.
வாரணாசியில் இருக்கும் போது தான் அவருக்கு புரட்சியாளர்களோடு பழக்கம் ஏற்பட்டது.சந்திரசேகராஆஜாத்,பகத்சிங், சுகதெவ், படுகெஷ்வர், ஜதின் தாஸ்,யஷ்பால் ஆகியோரோடு நெருக்கம் ஏற்பட்டது.இந்துஸ்தான் சொசலிச குடியரசு படையில் சேர்ந்தார். இந்த இளம் படையினர் காகோரி வழக்கில் சிறையில் அடைகப்பட்டவர்களை சிறையிலிருந்து வேளிக் கொணர திட்டம்தீட்டினர். ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.
அப்பொது தான் சைமன் கமிஷன். வந்தது. காங்கிரஸ் அதனை பகிஷ்கரிக்க முடிவு செய்தது.நாடங்கும் அதனை எதிர்த்து கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன .பஞ்சாபில் நடந்த ஊர்வலத்திற்கு லலா லஜபதி ராய் தலைமை தங்கினார். வெள்ளைகாரஸ்காட் என்ற இன்ஸ்பெக்டர் லலாவை தலையில் தடியால் அடித்தான். மருத்துவமனையில் லஜபதி ராய் மரணமடைந்தார்.இந்தியா பூராவும் கொதித்து எழுந்தது. குடியரசுப்படையினர் பழி வாங்கத் துடித்தனர்.
பழிவாங்கும் பொறுப்பு புரட்சிப் படையினரால் பகத்சிங், ராஜகுரு ,சுகதேவ் ஆகிய மூவருக்குக் கொடுக்கப்படது. ராஜகுரு குறிபார்த்து சுடுவதில்வல்லவர்.இவர்கள் லாகூர் சென்றனர்.பொலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வேள்ளைகார இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று விட்டு ஒடிவிட்டனர். மறு நாள் பத்திரிகைகளைப்பார்த்த மூவரும் திடுக்கிட்டனர். கொல்லப்பட்டது ஸ்காட் அல்ல. ஹெட்கான்ஸ்டபிள் சாண்டர்ஸ் .

போலீஸ் மொப்பம் பிடித்துவிட்டது. மூவரும் தலைமறைவாகினர்.ராஜகுரு டெல்லி வந்தார்.. அங்கு இருக்க முடியவில்லை. வேட்டை நாயாக போலீஸ் துரத்தியது.அங்கிருந்து நாகபுரி வந்தார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெக்டெவாரைச்சந்தித்தார். அவர் மூலம் ஒரு ஆர்.எஸ். எஸ்.தொண்டர் விட்டில் தங்கினார். பின்னர் பூனே செல்ல ரயிலில் போய்க் கொண்டிருக்கும் போது போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
சாண்டர்ஸ் கொலை வழக்கில் தான் பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியமூவரும் தூக்கிலிடப்பட்டனர்.அப்போது ராஜகுருவுக்கு 23 வயது முடியவில்லை.
,
பாபா ராமதேவ் மூவருடைய சிலை இருக்கும் மேடையில் ஏறினார்.தொலைக்காட்சியில் காட்டினார்கள் .முதலி பகத்சிங்.
மாலை பொடவில்லை. அடுத்து ராஜகுரு. பாபா மாலை பொட்டார். அடுத்து சுகதேவ்.மாலை போடவில்லை. ஏன்? ஏன் ? ராஜகுருவுக்கு மட்டும்.....?

என் மண்டை வெடித்து விடும் போலிருக்கிறது.

. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

Friday, June 03, 2011

சிறுகதை
" பகவான் "
"ஹரிஷ் வர்மாவுக்கு கழுத்தில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது ---உடனே வரவும் ---அவனால் இனி ..."
இ-மெயிலில் வந்த தகவல் மதுரையிலிருந்து விமானத்தில்மும்பை சென்று அங்கிருந்து ஜலகொன் செல்லவேண்டும்
ஹரிஷ் இருபத்தியைந்து வயது இளைஞன்.சி.ஏ முடித்துவிட்டு தனியார் கமபெனியில் நல்ல சம்பளத்திலிருக்கிறான்.பத்து வயதிலிருந்தே அவனைத்தெரியும்.நான் நாகபுரி செல்லும் போதெல்லாம் அவனுக்கு என் பயணம் பற்றி தெரிவிப்பேன்.
"அங்கிள்-- அங்கிள் " என்று சுற்றி சுற்றி வருவான்.மகரகண்டம்தாண்டி குரல் உடைந்தபின் அவன் குரல்மெருகேரியது.ஜெசு தாசின் கம்பீரமும் கார்வையும் உண்டு.முகம்மது ரவியின் கூர்மையும் உண்டு.
" சின்ன சின்ன ஆசை " பாட்டை என்னிடம்கெட்டு எழுதிக்கொண்டு பாடுவான். "ச்சின்ன ...ச்சின்ன ...ஆஷை " என்று அவன் மழலையில் பாடும்போது என்னால் மிகவும்ரசிக்கப்படுவான். அவனுக்குத்தான் அறுவை சிகிச்சை .
நல்ல வருமானம் என்றாலும் பாடுவதை அவன் நிறுத்தவில்லை .சிறு குழுவாக "லைட் மியுசிக்" கச்சேரிகள் நடத்திவந்தான்.பக்திப்பாடல்கள் பாடுவதில் அனூப் ஜலோட்டா, மற்றும் பங்கஜ் உதாசுக்கு நிகராக இருக்கும் .சூர் தாசரின் "நான் வெண்ணை திருடவில்லை "என்ற பாடலை பாடும்போதுஅவையோர் மெய்மறந்து நிற்பார்கள்.துளசிதாசரின் பாடல்களை மீணடும் மீண்டும் பாடச்சொல்லி அவையோர் கேட்கும்போது ஹரீஷ் குனிந்து வணங்கி மீண்டும் பாடும்நேர்த்தி ---அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வெண்டும்.
நான் நாகபுரி செல்லும் போதெல்லாம் எப்படியும் அவனுடைய கச்சேரிக்கு அழைத்துச்சென்று விடுவான் . நானும் என் மனைவியும் அவனோடு கர்நடக , இந்துஸ்தானி இசையின் மேன்மை ,மற்றும்மென்மைபற்றி விவாதிப்போம்.
2002ம் ஆண்டு என்மனைவிக்கு அறுபதாம் ஆண்டு முடிந்து விட்டது.அவருடைய தாயாரை பார்த்து ஆசிவாங்க நாங்கள் சென்றிருந்தோம். ஹரீஷும் வந்திருந்தான். எங்களை வணங்கி ஆசிபெற்றான்.மறுநாள் அவனுடைய கச்சேரி ஜலகொனில் இருப்பதகவும் நாங்களும் வரவேண்டுமென்ரு வற்புறுத்தினான்.சுமார் 250 கி.மீ. இருக்கும்.அவனுடைய காரில் சென்றோம்.மே மாத வெய்யில் தெரியாமல் ஏ.சி செய்யப்பட்டிருந்தது. கச்சேரி முடிந்து நாங்கள் இரவு திரும்பிக் கொண்டிருந்தோம்.
"அங்கிள்..அமைதியா வரீங்களே "என்றான் ஹரீஷ்
"ஆமாம்" என்றேன்.
"கச்செரி எப்படி இருந்தது அங்கிள்?"
நான் அவன் முகத்தைப்பார்த்தேன்.நிர்மலமாக இருந்தது."எனக்கு பிடிக்கல ஹரீஷ்"
"ஆண்டி! நீங்க சொல்லுங்க ஆண்டி "
" எனக்குநல்லாதன் இருந்தது. அவ்ர் எதையாவது சொல்லுவார். அதை மனசுல வச்சுக்காத "
" ஹரீஷ் கச்செரியை முடிக்கும்போது நீ என்ன பாட்டு பாடுவ " நான் கேட்டேன் .
"ரகுபதி ராகவ ராஜாராம் "பாடுவேன் "என்றான்.
"அண்ணல் காந்தியடிகளின் பிரியம்மிகுந்த பாட்டு .இருநூறு ஆண்டுகளுக்கு முன் குஜராத மாநிலத்தில் தோன்றிய சித்தர் ஒருவர் பாடியபாட்டு.அதனை முழுமையாக பாடவில்லையே ?..ஏன்?"நான் கோபமாகக்கேட்டேன் .
ஹரீஷின் உதடு கோணி சுழித்துக்கொண்டது."ரகுபதி ராகவ ராஜாராம் ,பதித பாவன சீதாராம் "என்று பாடினேன்.
"அதை மட்டுமே திருப்பிதிருப்பி பாடினே "
"அதற்கு மேல்பாடமுடியாது "
"ஏன்?"
" அடுத்த அடி என்ன ?
"ஈஸ்வர அல்லா தேரே நாம் ,சப்கோ சன்மதி தே பகவான் "
"அங்கிள்! குஜராத் அருகில் உள்ளது ஜலகோன் .இங்கு இரண்டாவது அடியை யாருமே பாடுவதில்லை .பாடக்கூடாது."
"ஏன்?'
"பாடினால் கலாட்டா செய்வார்கள்.பாடினவனை இம்சை செய்வார்கள்." என்றான் ஹரீஷ்.
"மனிதர்கள் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்று ஆண்டவன் அருள் பெற்று பாடிய சித்தரின் பாடலைத் தவிர்க்கலாமா ? ஒரு கலஞன் என்ற முறையில் ஒரு பாடகன் என்ற முறையில் நல்லதைப் பாட பயப்படலாமா?" என்று அவனுக்கு உபதேசம் செய்தேன். வற்புறுத்தினேன் .
மதுரை வந்ததும் அவனிடமிருந்து தகவல் வந்தது .சதீஷ்கரின் ரெய்பூரில் பாடினானாம்ஹைதிராபாத், வார்தா,கல்கத்தா ஆகிய ஊர்களில் பாடும்போது குறிப்பாக "ரகுபதி ராகவ" பாடும்போது எழுந்து நின்று எல்லரும் பாடினார்களாம் மகிழ்ச்சியோடு எழுதியிருந்தான்.
-------------------------------------------------
இன்னும் இருபது நிமிடங்களில் விமானம் மும்பையில் தரை இறங்கிவிடும் .சட்டப் பையில் இருந்த இ-மெயிலை எடுத்து மீண்டும் வாசித்தேன்.
"ஹரீஷ் கச்செரி முடியும் போது "ரகுபதி ராகவ" பாடினான் .எங்கள் ஈஸ்வரனுக்கு அல்லா என்று பெயர் வைத்தவன் எவன் என்று கெட்டுக் கொண்டு சிலர் கலாட்ட செய்தார்கள் சிலர் ஹரீஷின் அருகே ஒடினார்கள்.அவன் கழுத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஒடியது.ஹரீஷ் வர்மாவுக்கு கழுத்தில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது உடனே வரவும். அவனல் இனி பாடமுடியாது....".
என் கண்கள் குளமாகியது.
" ஹரீஷ் வர்மா ! இளைஞனே!உன் குரலை இனி கேட்க முடியாது.! காரணம் ...நான் தான்...நன் தான் ...நான் மட்டும் தானா?"