Wednesday, April 28, 2010

they were...2

அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிரெண்டாம் வகுப்பில் அவருடையமகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். நண்பருடைய தந்தை தமிழகத்தில் மரியாதைக்குரிய பெரியவர்.என் நண்பரின் மகளுக்கு அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கினை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ள விருப்பம்.இரண்டு கல்லூரிகளிலிருந்து இடம்கொடுத்தார்கள். நண்பருக்கு மகளை நாங்களிருந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிரபலமான கல்லூரியில் சேர்க்க விருப்பம்.நான் இருக்கும் சாந்தி நகரில் அந்தகல்லூரி பேராசிரியை ஒருவர் குடியிருந்தார்.என் மனைவிக்கு அவரை பழக்கம் உண்டு.நண்பர் என்னிடம் அந்தகுறிப்பிட்ட பேரசிரியை மூலம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்."ஐயா உங்கள் தந்தை பெயரைச்சொன்னாலே கிடைக்குமே" என்றேன்.அவர் அதனை விரும்பவில்லை. என் மனைவி மூலம்பேரசிரியரை அணுகினேன். "என்னங்க! அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் "அத்தா" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்."பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா? " என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்."நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமா?ஏன் அத்தா! என் பேத்திக்கு காலேஜில சீட்டு வாங்கத்தான் கட்சி என்னை எம்.பி ஆக்கியிருக்குன்னு நினைக்கேளா? என் று கேட்டதக சொன்னார்.அந்த எம்'பி, தமிழர்களுக்கு தமிழில் தந்தியடிக்கும் உரிமையைப்பெற்றுத்தந்த ஏ. நல்லசிவன் அவர்கள்தான்.

Saturday, April 24, 2010

they were........

அவர்கள். சமீபத்தில் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. இந்தியா சுதந்திரமடையும்பொது குஜராத் மாநிலம் உருவகவில்லை.பம்பாய் மகாணத்தில் தான் இருந்தது. அப்போது அந்த மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தெசாய்.அவ ருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகன்,ஒருமகள். மகள் மருத்துவம் படித்தாள். இறுதி ஆண்டில் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை.மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியுமடைந்தாள்.தந்தை மொரர்ஜியிடம் சென்று முறையிட்டாள்.தன்னுடைய தாளை மறு மதிப்பீட்டுக்கு அனுப்பும்படி கெட்டுக்கொண்டாள்.மமொரர்ஜி"மகளே நீ தேர்ச்சியடையாததால் நான் மகிழ்ச்சி யகத்தான் இருக்கிறேன்.நீ படித்து வெற்றி அடைந்தாலும் என்னைத்தான் பழிசொல்வார்கள்.இப்போது மறுமதிப்பீடு என்றால் நான் மதிக்கும் நேர்மை தவறியவனாக ஆகிவிடுவேன்.அடுத்தாஆண்டு எழுதிக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார்......................
மகள் மனமுடைந்து விட்டாள். தலையில் மண்ணெண்ணையை ஊற் றி நெருப்பை வைத்து தற்கொலை செய்து கொண்டாள். "இந்த சோகம்தான் என்னுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றால் அதனையும் ஏற்றுக்கொள்கிறேன்"என்றார் மொரர் ஜி தேசாய்.

Fire doesnot know....

நாகபுரியின் வடக்குபகு ப் பகுதியில் வனதேவி நகர் இருக்கிற்து.குடிசைப் பகுதியை த்தான் அப்படி அழைக்கிறார்கள்.சுமர் ஐம்பது அறுபது குடும்பங்க்கள் வசிக்கின்றன.இந்துக்கள்,முஸ்லீம்கள் சேர்ந்துவழ்கிறார்கள் தினம் தினம் சண்டைதான்.ரிஜ்வன் கான் வீட்டிற்கும்தெவ்சந்த்வீட்டிற்கும் தினம்சாக்கடை சண்டை.குடிசைக்குள் படுத்தால் கால் பக்கத்துகுடிசையில் இடிக்கும்.அதனால் நிலச்சண்டை..பரசுராம்சிங்காவிர்க்கும் அப்துல் பஷிருக்கும் . ஃபிளக்ஸ் பொர்டுதான் வீட்டுக்கூரை.கித்தான் மற்றும்சாக்குகள் தான் சுவர்கள்.இன்று கா லை பத்திரிகைகளில் வனதேவி நகர்தான தலைப்பு செய்தி. வியழக்கிழமை இரவு அங்கு தீ விபத்து நடந்துள்ளது.ரிஜ்வன் வீடு சம்பலாகிவிட்டது.அவனுக்கு இரண்டு கைகளிலும் தீ காயம்.பக்கத்துவீட்டுதெவ்சந்த் இரண்டு தகரஷீட்டுகளை வைத்திருந்தான்.ரிஜ்வன் தன் வீட்டு தீ பக்கத்து வீடான தெவ் வீட்டில் பரவாமல் தடுக்க அவன் வீட்டுச்சாமா.ன்களை அப்புறப்படுத்தியிருக்கிறான்.தகரமாதலால் சூடு அவன் கையை பதம் பார்த்து விட்டது. தெவ்சந்த் வீட்டில் ஒரு தகர பெட்டிஉள்ளது.அதனை வெளியே கொண்டுவரும்போது பெட்டியின் சூடுதாங் காமல் தெவின் மனைவிக்கு காயம். பெட்டிக்குள் சில பத்து ரூ நோட்டுக்கள் கருகிப்போயிருந்தன......பஷீர் ரிங் ரோடில் உள்ள கடையில் சமயல் செய்கிறான்.தன்னார்வத்தொண்டர்கள் சிலர் பணம் வசூலித்தார்கள்... ரிங் ரோடில் உள்ள ரமாகாந்த் பலசரக்குகடைக்கு ஒருவர் ஓடினார்.இரவு 12மணிக்கு அவர் கடையைத்திறந்து அரிசி.எண்ணை உப்பு ஆகியவற்றை கொண்டுவ்ந்தார்.பஷீர் தலைமையில் புலவு தாயரிக்கப்பட்டது.முதலில் குழந்தைகள்.பின்னர் பெண்கள் என்று பரசுரம் பந்தி வைத்தான். குழந்தைகள் தூங் கி விட்டன ர்.ஆண்களும் பெண்களுமாக பழய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.தெவ் ரிஜ்வனைப்பார்த்தான்.தோஸ்த்,கை. புண் ஆற பத்து நாள் ஆகுமே.என்னசெய்யப்போகிறாயேன்றுகேட்டான்.ரிஜ்வன் சுரத்தில்லாமல் இளித்தான். பரசுராம் அவன் கையை பற்றி கொண்டான்.பத்திரிகையில் இதனை படித்தநான்நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் வீட்டு வாசலில் மரநிழல் உண்டு.ரிக்ஷா காரர்கள் வருவார்கள்.அவர்களொடு பேசிக்கொண்டிருப்பெண்.ஓரு ரிக்ஷகரரிடம் பத்திரிகையில் படித்ததை சொன்னேன்.அதற்குள் அவருக்கு சவாரி வந்துவிட்டது.வண்டியை நக்ர்திக்கொண்டே"ஆக் ஜானே க்யா இந்து,முசல்மான்,தலித்."(நெருப்பிற்குத்தேரியுமா இந்து முஸ்லிம்.தலித்தென்று) என்றார்.

Thursday, April 22, 2010

charminar...

1958ம் ஆண்டு கோடையில் நான் முதன்முதலாக சார்மினாரைப் பர்த்தேன்.பிரும்மாண்டமான நாங்குதூண்களின் மெல் அமர்ந்துள்ள மசூதியாகும் அது. 1591ம் ஆண்டு முகம்மது ஷாஹி என்ற அரசர் கட்டிய அமைப்பாகும் அது.கீழ்தளத்தில் உள்ளதூண்களை ஒட்டி படிக்கட்டுகள் உள்ளன.அதன்மேலெதான் மசூதி இருக்கிறது.ஐம்பது பேர் அமரலாம்வெளியில் ஐம்பது பேரமரலாம். . ஹைதிரபாத்தில் "பிளெக்" நொயின் பதிப்பால் மக்கள் எலிக்ளைப்போல் செத்துமடினந்தனர்.அதனை எதிர்த் து ஷாஹி பணியற்றி வெற்றிபெற்றார்.அந்தநினைவைப்போற்று ம் வகையில்தான் நினைவுச்சின்னம் எழுப்பப்ப்ட்.டது. 1962ம் ஆண்டு நான் மதுரை வந்துவிட்டேன். அதன் பிறகு 1996ம் ஆண்டு என் மனைவியுடன் ஹைதிராபாத் சென்றேன்.சுந்தரய்யா கேந்திரம்,கொல்கொண்டா,சாலார் ஜங்,என்று என் மனைவியிடம் பெருமையாக காட்டினேன். பின்னர்சார்மினாருக்கும் சென்றேன்.அங்கு நான் கண்ட காட்சி என்னை குலைனநடுங்கவைத்தது.அந்த பிரும்மண்டமான கிழக்குத்தூணை ஒட்டி காளியம்மன் கோவில் கட்டப்பட்டிருந்தது. அங்க்கு பூஜை நட்ந்துகொண்டிருந்தது.அம்மா,அக்கா கெட்டவார்த்தைகளாக கொட்டித்தீர்த்துவிட்டென்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஆசுவாசப்ப்டுதினர் .ஹைதிரபத்தில் தற்பொது அநுமார் ஜெயந்தி நடக்கிற து.அதொடு கலகமும் நடக்கிறது.ஊரடங்கு உத்திரவு பொடப்பட்டுள்ளது.....என்ன செய்ய? மக்கா என்னசெய்ய?