Wednesday, December 30, 2015

திசைகள் எட்டுக்கும் 

கொண்டு செல்வீர்.....!!!





90ம் ஆண்டுகளாக இருக்கலாம். "லோக் லேகக்  சங் " என்ற மக்கள் எழுத்தாளர் சங்கம் அகில இந்திய மாநாட்டை கல்கத்தாவின் சால்ட்  லேக் சிட்டி  அரங்கில் நடத்தியது.
மதிப்பிற்குரிய  மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களும் நானும்  கலந்து கொண்டோம் .

சங்க இலக்கியத்திலிருந்து தமிழ் நவீன இலக்கியம் வரை ஒரு அருமையான சொற்பொழிவை  மேலாண்மை நிகழ்த்தினார்அவரது பேச்சின் சுருக்கத்தை இந்தி மொழியில் எழுதி நான் வாசித்தேன்.என் உச்சரிப்பு சரியாக இல்லையோ என்னவோ 1இந்து உருது எழுத்தாளர் சங்க தலைவர்  சஞசல் சௌஹான் வாசிக்க ஆரம்பித்தார்.

என் பங்கிற்கு நான் ஆங்கிலத்தில்பேசினேன். நமது கலை இரவுகள் பாற்றி விளக்கினேன். கவிஞர்  கந்தர்வன் கவிதை வரிகளை சுட்டிகாட்டினேன் .

"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ,
ஞாயற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை"

என்ற வரி களைச்சுட்டிய பொது கரகோஷம் விண்ணை எட்டியது. பஞ்சாபி ,வங்க,இந்தி கவிஞர்கள் அவரவர் வரிவடிவத்தில் தமிழ் உச்சரிப்பை கேட்டு எழுதிகொண்டார்கள் .நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து உச்சரிப்பை சரிபார்த்துக் கொண்டார்கள்.   

மராட்டிய, வங்க, பஞ்சாபி எழுத்தாளர்களோடு பேசி மகிழ்ந்தேன். " 

"சரத்த்சந்திரரும்,தகூரும்,பிரேம்சந்தும் ,காண் டெகரும்,தகழியும், வேமன்னாவும், மாஸ்தியும் எங்கள்கிராமத்து இலக்கிய வாதிகளுக்கு தெரியும்.எங்கள் கலைமகள்,கல்கி,விகடன் போன்ற பத்திரிகைகள் 50 களிலேயே அவற்றை தொடராக பிரசரித்துள்ளன.உங்களுக்குபாரதியை தெரிந்திருக்கலாம் .புதுமைபித்தனை தெரியுமா? அழகர் சாமியைதேரியுமா ? சின்னப்பா பாரதியதேரியுமா? என்று கேட்டேன்.  அவை இந்தியில்,வங்காளத்தில் வந்துள்ளதா ? என்று கேட்டார்கள்.. ஆம் என்று பொய் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது"

என்னுடைய சிறுகதைகள் இந்தியில் வந்துள்ளன.வங்காளம்,தெலுங்கு,மராத்தி.ஏன் சம்ஸ்கிருதம் பிரெஞ்சு ,ஆங்கிலத்தில் வந்துள்ளன. 

எந்த பின்புலமும் இல்லாத என்னால் இதனை செய்யமுடியுமென்றால் .....!

சிறுகதகளை  பொருத்தவரை தமிழ் சிறுகதைகள் உலக தரத்தை எட்டியுள்ளன. சந்தேகமில்லை.

இவை பற்றி இந்திய மொழி இலக்கியவாதிகளுக்கே சரியான பாரவை  இல்லை. 

நமது மொழிபெயர்ப்பாளர்களின் திறமைககும் பஞசமில்லை.

பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம் ஆகியவை முன்கை எடுத்து செயல்படவேண்டிய நேரமிது.

சுப்பாராவ், குமரேசன் போன்றவர்கள் ஆங்கிலத்திற்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு செல்ல வேண்டும்.

மொழிபெயர்ப்பு என்பது ஒருவழிப்பாதை அல்ல.

நவீன தமிழுக்கான அங்கீகாரம் மொழிபெயர்ப்போடு பின்னிப்பிணந்துள்ளது .

கொண்டு செல்வோம் !!!



 

Tuesday, December 29, 2015

தேவி பிரசாத் ராய் சவுத்திரி 


என்ற 


சிற்பி .......!!!




1923 ஆண்டு .கடுமையான கோடை வெய்யில். சென்னை திருவல்லிக்கேணி அருகில் அந்த கடற்கரையில் அந்த கூட்டம் நடந்தது அது மீ மாதம் முதல் தேதி..தொழிலாளிகளின் உரிமையையும், அவர்களின் நியாயத்தையும் உறுதிப்படுத்த சிங்காரவேலர் நடத்திய மே தினக்கூட்டம் தான் அது  இந்திய மண்ணில் முதன் முதலாக மே தினக்கூட்டம் நடந்தது.

அதற்கு 36 ஆண்டுகள் கழித்து அதன் நினை வாக  அதே இடத்தில் truamph of labour என்ற (உழைப்பின் வேற்றி ) சிற்பம் நிறுவப்பட்டது> முதல்வர் காமராஜர் 1959 ஆண்டு அதனை நிறுவினார்.

உலகம் போற்றும் அந்த சிற்பத்தை உருவாக்கியவர் தேவி பிரசாத் ராய் சவுத்திரி என்ற வாங்காளியாவார்   மதராஸ் கலைப் பள்ளியின் முதல்வராக 29 ஆண்டுகள் பணியாற்றிய உலகம் போற்றும் சிற்பி அவர்.

நான்கு தொழிலாளர்கள் பெரும் பாறை ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக பெயர்த்தெடுக்கும் சிற்பம் அது.

அதன் முதல் மற்றும் முன்றாவது உரு வத்திற்கு மாதிரியாக தன மாணவன் ராமுவை நிற்கவைத்தார் ராய்.

இரண்டாவது நான்காவது சிற்பத்திற்குதன் கல்லூரியில் காவலாளியாக இருந்தவரை மாடலாக்கினார்

அந்த உழைபபாளிகளின்  நாடி நரம்புகளையும், அவர்களின் உணர்வுகளையும் 
மிகநுட்பமாக சித்தரிக்கும் அற்புதம் அந்த சிலைகள்.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு  போராட்டத்தின் போது  பிஹார் மாநிலம் பாட்னா நகரில் துப்பாக்கி சூடு  நடந்தது..அதில் ஏழு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர் அந்த  காட்சியை  ஏழு உருவங்களும் மடிந்து  விழும் காட்சியை சிற்பமாக்கி பாட்னா நகரில் வைத்தார் சிற்பி ராய்.

தண்டி யாத்திரைக்கு சென்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார் காந்தி அடிகள்.
பொலிசாரின் அடியை ஆணும் பெண்ணும்  ஒருகையால் தடுத்துக்கொண்டு மறுகையால் உப்பினை எடுப்பதை சிற்பமாக்கினர் ராய் சவுத்திரி. 

இன்றும் அது குடியரசுதலைவர் மாளிகை முன் இருக்கிறது.

ராய் சவுத்திரி சிறந்த வண்ண  ஓவியரும்கூடா. ராசலிலைகளை  ஓவியங்களாக தீட்டியுள்ளார். 



தமிழகத்தின் மிகச்சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன் அவர்கள்.

ஏகப்பட்ட தடைகளை மீறி அவர் சிற்பக்கலையை கற்றுக் கொண்டவர் இன்றும் வெளிநாடுகளீல் அவர் படைத்த சிற்பங்கள் கோவில்களில் வழிபடப்பட்டு வருகின்றான

அவர் கடவுள்னம்பிக்கை இல்லாத நாத்திகர்.

ராய் சவுத்திரி போன்று நீங்களும் படைக்க வேண்டும் என்று என் போன்றவர்கள் 
ஆசைப்படுகிறோம்.

உங்களால்  முடியும்    தோழரே !!!

Monday, December 28, 2015

ஜோதி பாசு 

பதவி ஏற்றபோது ,

13 லட்சம் பேர் கூடினர்....!


1972ம் ஆண்டு . மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடு நடந்தது. 
எனக்கு கடைசிநாள் பேரணியில் தான் கலந்து கொள்ள முடிந்தது. மேற்கு வங்கத்திலிருந்து "பயோனிர் " பத்திரிகையின் நிருபர் வந்திருந்தார். அவர் கட்சி உறுப்பினரும்  ஆவர்..
தைக்கால்தெரு தாண்டி கிழ்பாலம் இறக்கத்தில் ஊ ர்வலத்தில்கலந்து கொண்டோம் , மனம் மகிழா வாய் நிறைய கோஷம் போட்டேன். புன்னகை யோடு அந்த வங்காளியும் மழலை தமிழில் கோஷம் போட்டார்.கிழ்பாலத்தில் பாதிதுரம் சென்றிருப்போம். "காம்ரேட் ! ரன் அப் ! கமான் ! "என்று ஓடினார்>நானும்  ஓடினேன்.. மீனாட்சி கல்லுரி தாண்டி மேம்பாலத்தில் நின்று கொண்டு ஊர்வலத்தை படம்பிடித்தார்.  செங்கொடி அசைந்தாட ஊர்வலக் கட்சி ரம்யமாக இருந்தது.

நான் இரண்டு லட்சம் பேர் இருக்கும் என்று கணித்தேன்.மறு நாள் இந்தியன் எக்பிரசில் "mamooth gathering " என்று போட்டிருந்தார்கள்..

மேற்கு வாங்க நண்பரிடம் நான் சொன்ன பொது  வாய் கோண சிரித்தார். நீங்கள்  எவ்வள்வு என்று செய்தி அனுப்பினீர்கள் ?

"25000 என்று அனுப்பினேன். "என்றார்

"நீங்கள் செய்தது அநியாயம்" . என்றேன்.

"தமிழ்நாட்டு காரர்கள் எதிலும் உணர்ச்சி வசப்படுபவர்கள்."
"எப்படி?"

"இதைவிட ப்ரும்மான்டமான் பெரணிகளை பார்த்தவன் நான் "நாங்கள்  பேரணியின் புகைப்படத்தை வைத்து அளவிடுவோம்.கூட்டத்தின் அடர்த்தி, அதில் உள்ள வெற்றிடம், படத்தில் 10x 10 சதுரத்தில்  எத்துணை பேர் நிற்கிறார்கள்  மைதானம் எவ்வள்வு பெரியது என்பதை கணக்கிடுவோம். அது  கிட்டத்தட்ட சரியாக இருக்கும்".என்றார்.. 

"அண்ணல் காந்தியடிகள் இறந்த போது அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8லட்சம்பேர்,
குருசேவும் புல்கானினும் இந்தியா வந்த போது மேற்கு வாங்க மக்கள் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் 11லட்சம் பேர் .

ஜோதிபாசு இடதுமுன்னணியில் முதலமைசராக பதவி ஏற்றபோது வந்த மக்கள் 13 லட்சம் பேர்.

இப்போது டெசம்பர் 2015 பேரணிக்கு வந்தவர்கள் கட்சியின் எதிர்பார்ப்பு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது..(மம்தா போலிசு 2லட்சம் என்று கூறியுள்ளது)

தமிழகத்தில் அண்ணா  மறைந்த பொது கூடியவர்கள் 6லட்சம்.. 

அழகர் ஆத்தில் இறங்கும் போது வரும் கூட்டம் சில ஆயிரங்கள் தான் .தமிழ் பத்திரிகைகள் லட்சக்கணக்கில் என்று எழுதினாலும்..

Sunday, December 27, 2015

தோட்டக்காரா , தோட்டக்காரா ,

அதோ வருகிறார்களே , அவர்கள் 

காலடியில் என்னை போடு !!!



சதந்திர போராட்ட காலத்தில மாகன் லால் சதுர்வேதி என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை :

நந்த வனத்தில் மலர்ந்த பூக்கள் சொன்னதாக கவிஞர் கூறுகிறார்:


தோட்டக்காரா! தோட்டக்காரா ! 
தினமும் காலையில் என்னை பறிக்கிறாய் !
மாலையாக தொடுக்கிறாய் !
ஈஸ்வரன் கழுத்தில்போடுகிறாய்  !
எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை !

சுதந்திர போராட்ட வீரர்கள் வருவார்கள் !
கரடு முரடான பாதை கல்லும் முள்ளும் குத்துமே !
அதோவருகிறார்களெ !
அவர்கள் காலடியில் போடு !
அவர்கள் பாதங்கள் நோகாமல் பார்த்துக் கொள்வேன் !
அதுதான் எனக்கு மகிழ்ச்சி !!!


நேற்று காலை பத்து மணியிலிருந்து  ஆனந்த் பஜார் பத்திரிகை தொலைக்காட்சிமுன் அமர்ந்து விட்டேன்..
அவர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக அந்த மை தானத்துக்குள் வந்து  கொண்டிருந்தாரகள்.உழைப்பாளிகள், விவசாயிகள் , ஆசிரியர்கள்,அரசு உழியர்கள் ,சிப்பந்திகள், ஆயிரம் ஆயிரமாக ,இல்லை பத்தாயிரம்பத்தாயிரமாக,இல்லை லட்சம்லட்சமாக அவர்கள் தலைமை மார்க்சிஸ்டகட்டி கேட்டுக்கொண்டதற்காக  .வருகிறார்கள்.

பிமன் தாதா என்ற அந்த சிங்கம் மேடையில் ஏரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறது.

புத்ததேவ் அவர்கள் தலைமையில் பேரணி கூட்டம் துவங்குகிறது . பிமன், பிருந்தா, மாணிக் சர்க்கார்,முகம்மது சலீம், மாநில செயலாளர் டாக்டர் சுர்யகாந்த மிஸ்ரா கொடியேரிபாலகிருஷ்னண் ,  என்று பேசுகிறார்கள்

இறுதியில் சித்தாராம் எச்சூரி பேசுகிறார்.

"வங்கம்  இன்று நினைப்பதை இந்தியா நாளை  நினைக்கும் .   
மம்தாவை பதவியிலிருந்து இறக்குவோம்" வங்கத்தை காப்போம் !
மோடியை இறக்குவோம் .இந்தியாவை காப்போம் "

என்று கர்ஜிக்கிறார்.
 பத்துலட்சம் பேர் விண்ணைமுட்ட ஓரே குரலில் 
குரலெழுப்புகிறார்கள்.!!!

கண்கள்கசிய ,நெஞ்சம் விம்ம 
பார்த்தேனே!!!

Friday, December 25, 2015

இடதுசாரிகள் தனியாக 

நின்றால் .......!!!



மதுரை கீழ  மாசி விதியில் நிறைய கிட்டங்கிகள் உண்டு. பலசரக்கு சாமான்களை மொத்தமாக வாங்கி அவ்வப்போது தேவையான சரக்கை கடைகளுக்கு கொண்டுவந்து விற்பார்கள்.இந்த கிட்டங்கிகளில் "பெருச்சாளி " தொந்திரவு அதிக மாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள்  அடித்து விரட்ட கடை சிப்பந்திகள் கூடு \வார்கள்..
கிட்டங்கியின் சகல வழி களையும் அடைத்து விடுவார்கள். சுவரில் மட்டும்  கீழ்பகுதியில்  உள்ள துவாரத்தை விட்டு வைப்பார்கள். சுவரின் வெளிப்பகுதியில் தடி யோடு சிலர் காத்திருப்பார்கள். கிட்டங்கியின் உள்ளெ உள்ளவர்கள் மூல முடுக்கில் ஒளிந்திருக்கும் பெருச்சாளிகளை  விரட்டுவார்கள்.,சுவற்றின் துவாரம் வழியாக ஒவ்வொரு பெரு ச்சாளியாக வரும்போது அதனை துவம்சம் செய்து விடுவார்கள்.

மார்க்சிஸ்டு கட்சியின் மறைந்த தலைவர்  எ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுவார்கள். "நாம் எப்பொதுமே தனியாக இருக்கக் கூடாது; எதிரி அதைத்தான் விரும்புவான். நாம் மக்களொடு இருக்க வேண்டும். அது நமக்கு பாதுகாப்பும் கூடா "என்பார்.

இந்தியாவில் இது வரை எந்த ஒருகட்சியும் தனந்தனியாக ஆட்சியை  பிடித்தில்லை . காங்கிரஸ்,பா ஜ.க உட்பட .மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரீ..

1952ம் ஆண்டு தேர்தலில் பின்புறமாக வந்த ராஜாஜியின் தலைமையில் மாணிகவேலர் உட்பட சேர்ந்து தான் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மையாக கம்யூனிஸ்டுகள் தலைமையில்கூட்டணி வெற்றிபெற்றிருந்தது.காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை 

1967லதிமுக கூட்டணியால் தான் வெற்றி பெற்றது.
அண்ண திமுக முதல் தேர்தலை திண்டுக்கல்லில் சந்தித்தது. மார்க்சிஸ்ட்கட்சி ஆதரவில் தான் வென்றது .

இது வரலாறு.'

இதுவரை எந்த கட்சியும் தனி பெரும்பான்மை பெறவில்லையா?

பெற்றது உண்டு!
மேற்கு  வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றது ஆனால் கூட்டணி கட்சிகளையும் அணைத்துக்கொண்டு அமைசரவையில் அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.

திரிபுராவிலும் இதே போல் ஆட்சியைப்பிடித்து அமைச்சரவையையும் அமைத்தது.

அரசியலில் நேர்மை , சகிப்பு உணர்வு, மக்கள் நலம் ஆகியவை மார்க்சிஸ்டு கட்சி க்கு மட்டும் அதிகமாகவே இருக்கிறது.

கூட்டணி என்பது தந்திரம் மட்டுமல்ல.
அது ஒரு அரசியல் நெறி !!!


Thursday, December 24, 2015

1983 உலக கோப்பையை கொண்டுவந்தவர்களில் 

ஒருவர் 

கீர்த்தி ஆசாத்...!!!





1983ம் ஆண்டு இந்திய உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த வீரர்கள் குழுவில் இடம் பெற்றவர் கீர்த்தி ஆசாத்.

உலகக் கோப்பைக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்தை வென்றது. அந்த போட்டியில் ஆசாத் இன் ஆட்டம் வெகுவாக புகழப்பட்டது. 
குறிப்பாக முரட்டு ஆட்டக்காரரான "போதம் " இவருடைய பந்து வீச்சில் வீழந்தார். அதன் காரணமாக இந்தியா இறுதி ஆட்டத்திற்கு நுழைய முடிந்தது.

ஆசாத் தின் தந்தை பகவத் ஜா ஆசாத்.
பழம் பெரும்காங்கிரஸ் காரர்".வெள்ளையனே வெளியேரு" போராட்டத்தில் கலந்து கொண்டவர்போராட்டக்காரர்களை எதிர்த்து  போலிஸ் துப்பாக்கியால் சுட்டது  ஆசத்தின் காலகளில்குண்டூ பாய்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக பீஹாரில் ஓராண்டு இருந்தார். உட்கட்சி பூசலினால் பதவி விலகினார்.

காங்கிரசின் அழிச்சாட்டியம் தாங்காமல் பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்தார்.அவரால் அவர்களோடு இணந்து பணிசெய்யமுடியவில்லை  உடல் நலமும் இடம் கொடுக்கவில்லை.செயல்படாமலிருந்தார்.

கீர்த்தி ஆசாத் வெளிபடையாக பேசும் குணம் கொண்டவர்.  டெல்லி கிரிகெட் கிளப்பில் இருந்தார். விளையாட்டு வீரர்களை பொறுக்கும்குழுவில் பணியாற்றினார்.

பொறுக்குக்  குழுவில் நடக்கும் பாரபட்சமான தேர்வை எதிர்த்தார்.

விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்த 29 கோடி அனுமதித்தார்கள்.அப்போது ஜெட்லி தலைவராக இருந்தார்.

எந்தவிதமான டெண்டர் இல்லாமல் சகட்டுமேனிக்கு காண்ட்ராக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பொது 130 கோடி செலவில் நிற்கிறது. ஊழல் செய்தவர் களை  தலைவர் பாதுகாத்தார் என்பது குற்றச்சாட்டு.

ஊழலை ஒழிக்க வந்த பா.ஜ.க ஊழல் குற்றச்சாட்டு சொன்ன கீர்த்தி ஆசாத் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது..

அமிர்த சரஸில் நின்று தோற்றுப்போன ஜெட்லியை அமைசராக்கியதும்,அதுவும் நிதிமைசராக்கியதும் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அருண்  ஜேட்லியின் நிலைமை சரி  இல்லை என்றுதான் தோன்றுகிறது .













Tuesday, December 22, 2015

அரிசியல் நேர்மையும் ,

நிர்வாக நேர்மையும் .....!!!




ஐ.எ.எஸ்  அதிகாரி சகாயத்தின் நேர்மை இன்று பரவலாக பேசப்படுகிறது. அவரே கூச்சப்படும் அளவுக்கு பாராட்டுகளையும் பார்க்க முடிகிறது.


இப்படி நேர்மையான அதிகாரிகளுக்கு அரசியலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் தலைவர்கள் வாய்த்தால்நாட்டின் தலைவிதியே மாறிவிடும் என்பதில் அய்யமில்ல.

கிட்டத்தட்ட 60 வது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. 

அப்போது சி.டி  தேஷ்முக நிதியமைச்சர். தனியாரின் வேட்டைக்காடாக இருந்த இன்சுரன்ஸ் துறை கணக்கில் கொள்ளப்பட்டது. 

மிக்கவும் ரகசியமாக திட்டம் தீட்டப்பட்டது. பிரதமர் நேரு வுக்குமட்டும் தெரியப்படுத்தப்பட்டது.அவருக்கும் தேதி,மற்ற விபரங்கள் சொல்லப்படவில்லை. பாட்டீல்,ராஜகோபாலன் என்ற இரண்டு அதிகாரிகளுக்கு தான் முழு விபரமும் தெரியும். இந்திய பூராவிலும் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்களில் அரசுஅதிகாரிகள ரகசியமாகநிருத்தி இன்சூரன்ஸ் துறை நாட்டுடமையாக்கப்பட்டது.

இதைக்கண்டு உலகமே வியந்தது.

அரசியலிலும், நிர்வாகத்திலும் உள்ள நெர்மையாளர்களால் இது நடத்தப்பட்டது.

இன்று எதோ அரசியலில் நேர்மை அழிந்து விட்டது போல  ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கிறது.

தனது எம்.பி பதவியில் வரும் சம்பளம் அலவன்சு அத்துனையையும் கட்சி க்குகொடுத்துவிட்டு,கட்சி கொடுக்கு 5500 ரூ பாயில் வாழ்ந்து வரூம் து.ராஜா போன்றவர்கள் இவர்கள் கண்ணில்படமாட்டார்கள்.

இரண்டுமுறை எம்,பியாக இருந்து சொந்தமாக ஒருவீடுகூட இல்லாத மறைந்த.,பி.மோகன் இவர்களுக்கு தெரியாது.

கல்லூரியில் என் பேத்திக்கு இடம் வாங்கித்தரவா நான் எம்.பி ஆனேன் என்று 
அறிவித்த நல்ல சிவன் -

இரண்டு முறை எம்.எல்.எ வாக இருந்தும் இன்றும் டீ கடையில் டீ குடித்துவிட்டு காலாற நடந்து வரும் நன்மாறன்,-

கழுத்தில்  ஐந்துகிராமில் ஒரு செயினைப் போட்டுக்கொண்டு வளைய வரும் எம்.எல்.எ  பாலபாரதி-

இவர்களெல்லாம்  அரசியல் நேர்மையில் சேர்த்தி இல்லை . ஏனென்றால் இவர்கள் இடது சாரிகள்.

சகாயம் அவர்களின் நிர்வாக நேர்மைக்கு தலைவணங்குகிறேன்.

ஊடகங்கள் என்னதான் புளுகினாலும்,மறைத்தாலும் அரசியலில் நேர்மையை கட்டிக்காக்க 

கம்யுனிஸ்டுகள் இருந்து கொண்டிருப்பார்கள்..

இது சத்தியம் !!!

Saturday, December 19, 2015

"இந்தியாவின் கேடுகளில் ஒன்று 

சுப்பிரமணியம் சாமி ---"

---ராம் ஜெத்மலானி 



"இந்தியாவிற்கு எத்தனயோ துரதிர்ஷடம் வந்துள்ளது> அதில் முக்கியமானது சுப்பிரமணியம் சாமி " என்று ராம் ஜெத்மலானி குறிப்பிட்டுள்ளார்.(20-4-98-indianEx )



சாமி யார் காலிலும் விழுவார் .
அவர் காலில் விழாத நபர்கள் அரசியலில் இல்லை.அதேபோல் காலை  வாராத நபர்களும் இல்லை .என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"அப்போது R .வெங்கடராமன் குடியரசுத் தலைவராக இருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை  அவர்தான் நியமிக்க வேண்டும் .அவருடைய பார்வைக்கு பலபெயுர்கள் வந்திருந்தான்.அதில் ரேச்சொனா சுப்பிரமணியம் சாமி பெயரும் இருந்தது. அவர் வக்கீலாக 10வருடம் 8மாதம் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.வருட வருமானம் 200000 என்றி இருந்தது.

உயர் நிதி மன்ற நிதிபதி  ஆக வேண்டுமானால் குறைந்தது 10 ஆண்டுகளாவது வக்கீல் பணிசெய்திருக்க வேண்டும். இவர் 10 ஆண்டுகால முடித்து எட்டு மாதம் தான் ஆகிறது.இவரை விட சீனியர்கள் இருக்கிறார்கள்.அதனால் அந்த சிபாரிசை திருப்பி பிரதமருக்கு வெங்கடராமன் அனுப்பி  விட்டார்\.

சுப்பிர மணியம் சாமி வெங்கடராமனின்மகள் மிது வழக்கு தொடர்ந்தார். தந்தை பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதற்காக வசூல் செய்கிறார் என்பது வழக்கு.

வாஜ்பாயின் அரசை கவிழக்க சோனியா  காந்தியை லக்ஷ்மி மாதா என்று புகழ்ந்தவர் தான் இந்த சாமி.இப்போது" தாடகை","விஷக்கன்னி" என்று வர்ணிக்கிறார்.

வாஜ்பாயை நாக்கில் நரம்பில்லாமல் ஏசியவர்தான் . முரார்ஜியிடம், வாஜ்பாய் ஒழுக்கமிலாதவர் என்று சொன்னவர்.

குமுதம் பத்திரிகையில் சாமி தொடர்  கட்டுரை எழுதிவந்தார்.அதில் 

"சின தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது> அதில் வாஜ்பாய் கலந்து கொண்டார்> குடித்து கும்மாள மிட்டார்  நிற்க உட்கார முடியாமல் தவித்தார் நானும் போயிருந்த்தால்    எனக்கு மிகவும் சங்கடமாகப் போயிற்று. நான் இதனை பிரதமர் மொரார்ஜி தேசாயிடம்கூறினேன் உடனடியாக அவர் வஜ்பாயியை  அழைத்து என் முன்னாலெயெ அவர கண்டித்தார் வா ஜ்பாய் வாய் மூடி நின்றார்.என்று எழுதி இருந்தார்>

சோனியா,ஜெயலலிதா,மாயாவதி,ஆகியோரை இந்தியாவின் முப்பெருந்தேவியர் "லட்சுமி,சரஸ்வதி ,துர்க்கை என்று வர்ணித்தவர் தான் இந்த சாமீ...

வாஜ்பாய் அரசை கலைக்க ஜெயலலிதா, சோனியா ,சாமிகலந்துகொண்ட 
 "தேநீர் விருந்து " புகழ் பெற்ற ஒன்றாகும் .

சோனியாவை குஷிப்படுத்த போபர்ஸ் ஊழலை தடம் புரளச் செய்தவரும் சாமிதான்..




Friday, December 18, 2015

பத்திரகை நிருபர்களும் ,

கொடுக்கப்படும் "கவர்களும் "......!!!




இலங்கையில் முக்கியமான தமிழ் பத்திரிகைகளில் ஒன்று "வீர கேசரி ". இந்தியா சுதந்திர மடைவதற்குமுன்பு நெல்லை,மதுரை ராமநாதபுரம் மக்கள் இலங்கையோடு கொண்டான் கொடுத்தான் உறவோடு வாழ்ந்த காலம் அது.
நெல்லயை சேர்ந்த" நெல்லையா " என்பவர் விர கேசரி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அங்கிருந்த லெனின்பிரஸ்  அவருடைய படைப்புகளை வெளியிட்டு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்..அவர் எனக்கு "பெரியப்பா" முறை வேணும்.
"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் chiefreportor ஆக இருந்தவர் P .V .ராமசந்திரன்.. காமராஜ்,ராஜாஜி, சி.சுப்பிரமணியம் ஆகியோரின் மரியாதைக்குரிய நிருபர். அவர் என் தாயாரில்தாய்மாமன் மகன்.

எங்கள்  குடும்பத்திற்கும் பத்திரிகைத் துறைக்கும் நெருக்கம் அதிகம்.

அந்தக் காலத்தில் G .K .ரெட்டி என்று ஒரு  நிருபர் இருந்தார். "இந்து"பத்திரிகையின் டெல்லி chief ஆக இருந்தார்> நேரு,இந்திரா அம்மையார் காலம்.ரெட்டி ஒரு செய்தி கட்டுரை எழுதினார் என்றால் அது பற்றி பெரிய விவாதமே நடக்கும் சரியாக ஒரு மாதம் கழித்து அரசு கொள்கை  ரீதியாக அதன் மேல் ஒரு முடிவை எடுக்கும்.

G .K ரெட்டியின் மூத்த சகோதரர் CGK ரெட்டி .இவரும் இந்துவில் எழுதியவர் தான். சுதந்திட போராட்டத்தின் பொது நேதாஜியோடு இருந்தார்> வடகிழக்கில் நேதாஜிபடையோடு வரும் பொது பம்பாய் போன்ற பகுதிகளில் ஆள் சேர்க்க ரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டுகைதானார்.அவசரநிலைக்காலத்தில்கைதுசெய்யப்பட்ட நிருபர்களில் அவரும் ஒருவர்.

அப்படிப்பட்ட நிருபர்கள் இப்போதுமிருக்கத்தான் செய்கிறார்கள். 

ஜனதா கட்சி என்று இருந்தது.பின்னர் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது .
ஜனதா கட்சி என்ற பெயரைமட்டும் வைத்துக்கொண்டு one man army ஆக செயல்பட்டு வந்தார் சு.சாமி.15 நாளைக்கு ஒருதரம் அவர்பற்றிய செய்திகள் பத்திரிகையில் வரும்.அவர் எப்பது தமிழ்நாடு வந்தார் என்பது எவருக்கும் தெரியாது. அவருடைய செய்திகள போட நிருபர்கள் ,பத்திரிக்கைகள் இருந்தனர் மதுரையி ஒரு தேசிய தலைவர் இருந்தார்.மெலமாசிவீதி ஆரிய பவனில்  மாதம் ஒரு நிருபர் கூட்டம்னடத்துவார். படங்கள் செய்திக்குறிப்பு.அறிக்கை எல்லவற்றையும் ஒரு கவ்ரில்போட்டுகொடுப்பார்> அதில் நிருபரின் தரத்திற்கு ஏற்ப நோட்டுகள் இருக்கும்.

மதுரையில் RMS போகும் சாலையில் நிருபர்கள் சந்திக்குமிடமுண்டுஅங்கு 
இருந்து தான் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு செல்வார்கள். அதில் மதுரை மெயில்,குமரி பூ என்ற பத்திரிகைகளின் நிருபர்களும் இருப்பார். இந்த போலிகள் இருப்பது நிஜ நிருபர்களுக்கும் தெரியும். 

என்னுடைய நண்பர் மகன் - sslc ல் மூன்று தரம் பெயில்.. ஒரு நாள் அவனை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பார்த்தேன். "மக்கள் ஒலி " என்ற பத்திரிகயில்செய்தி செகரிப்பவனாக இருக்கிறேன் என்றான். சம்பளம் எவ்வளவுடா ? என்று கேட்டேன். ஒருநாளைக்கு 10 ரூ என்றான்.எப்படிடா சமாளிக்கரே என்றேன். "கவர " வச்சுக்கிடுவேன் என்றான் . 

தூக்கி போட்டு தலவரானவர்கள் பிரஸ் கவ்ரேஜுக்காக  கவரில் பணம் கொடுப்பார்கள்..

கவரோடு party யும் உண்டு.அது Hot or cold  என்பது நிருபரின் சாய்ஸ்..

கவர் எல்லாருக்கும் கொடுக்கமாட்டார்கள். இந்து,இந்தியன் எக்ஸ் \பிரஸ், தீக்கதிர், தினமலர் போன்ற  பத்திரிக்கை நிருபர்கள் வாங்க மாட்டார்கள்.

இளைய ராஜாவிடம் கேட்ட நிருபர் ஒரு ஆர்வத்தில் scoop பண்ணலாம் என்று நினைத்து வஞசகமில்லாமல் கெட்டிருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

இளைய ராஜாவும் இப்போ போய் இத கேக்கறியே என்பதாகத்தான் நினைத்திருக்கிறார் ..

ஊதி பெரிதாக்கி விட்டர்கள் மற்றவர்கள்.







Thursday, December 17, 2015

நல்லவன் வாரான் !

சொம்பதூக்கி உள்ள வை !!!




இந்தியா பூராவும் விசாரிக்க சி.பி.ஐ இருக்கு. அது உள்துறை அமைச்சகத்தோட சேர்ந்தது. அதன் அமைச்சர் ராஜ் நாத் சிங். அவருக்குமன்டைக்கு வெளில மட்டும் இல்லாம உள்ளயும்  ஓண்ணும்கிடையாது . 
உடல்நலம்  இல்லாம் இருக்கற பெரிய மனுசங்களை பாக்குது. அவங்களுக்கான விருதுகளை கொண்டு போய் கொடுக்குது நு முக்கியமான அரசுப்பணிகளை    செய்வாரு.
சி.பி ஐ விஷயமா பிரதமர் தலையிடலாம்.அவரு ஒட்டுமொத்த பொறுப்பாளர்.
ஆனா இந்த ஜெயிட்லீ க்கு என்ன வந்துது ? முந்திரி கோட்டை மாதிரி நுழையுதாரூ.

மாநில அரசின் தலைமை செய்லகத்துக்குள்ள போயி முதலமைச்சரோட அலுவலகத்துல சோதனை செஞ்சிருக்காங்க.சி.பிஐ.காரங்க .

அவங்களுக்குதான் எதை  எங்க ஓளி \ச்சு வச்சிருப்பானுங்க கறது தெரியும்.
எத தேடிப்போனாங்க ? எதைகொண்டுவந்தாங்க?

பிரச்சினை வேற அண்ணன் மார்களே !

கொள்ள வருசமா ஜெயிட்லி டெல்லிகிரிகட் கிளப்புல தலைவரா  இருக்காரு.
வீரந்திர சேவக் நு ஒரு பையன் . இந்திய குழுவுலநல்ல விளையாடின பையன்.
நான் ஆட்டைக்குவல்ல நு சொல்லிட்டான். போகும் போது டெல்லி கிரிகெட் அநியாயத்துக்கு பாரபட்சம்மா நடக்குது நு சொல்லிப்புட்டாரு .

அத விடுங்க.
கீர்த்தி ஆசாத் நு ஒரு வீரர்.நல்ல ஆட்டக்காரன். பிஜேபி ல சேர்ந்து எம்.பி யா இருக்காரு.அவரு முழ நீளத்துக்கு கடிதம் எழுதி இருக்காரு. யாருக்கு நம்ம நிதி அமைசர் ஜெயிட்லி க்கு..
டெல்லிகிரிகெட்கிளப்புல ஊழல் . கிரிகெட் மைதானத்தை சிராக்க 29கோடி அனுமதிச்சாங்க>இப்பம் அது 130 கோடில நிக்கிது. கான்றக்ட் கொடுத்ததுல முறைகேடு.முரைகேட்ல  ஈடுபட்டவங்கள  நீரு பாதுகாக்கறீரு. நீரு  என்ன பாதுகாத்தாலும் உண்மைவெளிவரத்தான் போகுது நு கடிதம் எழுதி இருக்காரு.ஜெயிட்லி சம்மந்தமான ஆவணங்களை டெல்லி முதல்வர் கேசரி வால்  பத்திர மா வச்சிருக்கராம்.

அது டெலி முதலமைச்சர் அலுவலகத்துல இருந்தா அமுக்கி புடலாம் நு நினைச்சு சோதன போட்டுருக்காங்க நு ஆம் ஆத்மி கட்சி சொல்லுது.

தெக்க திருநெல்வேலிகாரன் நான் ! எனக்கு என்ன தெரியும் !

சி.பி ஐ க்காக ராஜ்நாத் சிங் பேசல. பிரதமர் பேசல!

தேர்தல்ல தோத்து புட்டு, சுவர் ஏறி குதிச்சு மந்திரி ஆன இவரு ஏன் குதிகாறு நு சம்சயமா இருக்கு !. 





Friday, December 11, 2015

துப்புரவுப்பணி 

துயர் துடைக்கும் பணியாகும் ...!!!





பாதிக்கப்பட்டசென்னை  மக்களுக்கு நிவாரணம் முழுமையாக கொடுக்கப்படவில்லை . மழை பகுதிகளில்  குறைந்து விட்டது. இப்போது அவர்கள் இருப்பிடம்,தெருக்கள் ,ஆகிய பகுதிகளில்தேங்கிய நீர வெளியேற்றுவதும் சுத்தப்படுத்துவதும்மிகவுமமுக்கியமான பணியாகமாறியுள்ளது.

சென்னியில் 20000 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவ்ர்களால் மட்டும் இந்த பிரும்மாண்ட மான பணியைச் செய்யமுடியாது.ஆகவே கோவை,திருச்சி,மதுரை  ஆகிய நகரங்களில் இருந்து துப்புரவு தஒழிலளர்களை வரவழைத்துள்ளாஎகள். 

சென்னையின் சில பகுதிகளில் வாலிபர் சங்கம்.மாணவர் சங்கம்.மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் இந்த பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள்.மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலசெயலாளர் ஜி . ராமகிருஷ்ணன் இந்த பணியிலீடுபட்டிருக்கிறார்.

துப்புறவுப்பனியை ஒருகுறிப்பிட்ட சாதிமட்டும் தான் செய்யவேண்டுமா? என்று அருந்ததியர் சங்க தலைவர் கேட்டிருக்கிறார்.

குழந்தை கழித்து விட்டால் அய்யர்,அய்யங்கார், பிள்ளை, முதலி என்று எல்லாருமே துப்புரவுத்தோழிலாளியாக மாறத்தான் வேண்டும். 

மாவீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்டான். உங்கள்கடைசி ஆசை என்ன என்று கேட்டிருக்கிறார்கள்." எங்கள் சிறையில்துப்புரவுப்பணி செய்த அந்த அம்மையார் என் தாயாகத்தெரிகிறார . அவர் கையால்  இரண்டு ரொட்டி திங்க வேண்டும் " என்று கூறி  ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூக்கு மரம் நோக்க நடந்துள்ளார் .

இந்த சமயத்தில் நரேந்திர மோடி சொன்னது நினவு தட்டுகிறது .

சமீபத்தில் "கர்ம யோகி " என்ற புத்தகம் ஒன்று பார்க்கக் கிடைத்தது ! குஜராத்தி மொழியில் வெளிவந்துள்ளது ! முன் அட்டையிலும்,பின் அட்டையிலும் "பளபள " வென்று வண்ணத்தில் நரேந்திர மோடியின் படம் போடப்பட்டிருந்தது !

அதில் துப்புரவு தொழிலாளி பற்றி "தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டும் துப்புரவுத்தொழிலை செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை ! வாழ்வாதாரத்திற்காக என்றிருந்தால் தலைமுறை தலைமுறையாக இதனை செய்து வந்திருக்க மாட்டார்கள் ! ஒரு குறிப்பிட்ட கலத்திற்கு பிறகு திடிரென்று அறவிளி வந்து நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகத்தின், கடவுளின் மகிழ்ச்சிக்கானது ,அதனால் கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொழிலை பல நூற்றாண்டுகளாக ஒரு ஆண்மீகப்பணியக செய்து வருகிறார்கள் ! அதனால் தான் தலைமுறை தாண்டியும் அவர்கள்மட்டுமே செய்யும் தொழிலாக நிடிக்கின்றது "

 என்று குறிப்பிடப்பட்டுள்ளது !

மனித கழிவை மனிதன் அள்ளுவது ஆன்மிகச் செயல் !

கடவுளை மகிழ்ச்சி யுறச் செய்வது !!

My  dear youths of India
Watch This point ...!!!

Wednesday, December 09, 2015

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ,

"சாந்தா" என்ற அக்கா உண்டு !!!.



தசரதனுக்கும் கோசலைக்கும் முதலில் பிறந்தது  ஒரு பெண் குழந்தை ."சாந்தா " என்று பெயரிட்டு   கோசலை  வளர்த்து வந்தாள். தசரதனுக்கு அதன் பிறகு குழந்தை பிறக்க வில்லை.அதனால் அவன் குழந்த சாந்தாவை வெறுத்தான்.இதனால் கோசலை  தசரதனை ஒதுக்க ஆரம்பித்தாள்.

ஆண் வாரிசுக்காக தசரதன் சுமித்திரை ,கைகேயி ஆகிய ஒரு பெண்களை மணந்தான்.எதுவும் பலிக்க வில்லை . வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டான்.
விபாந்தகன் என்ற முனிவருக்கும் ஊர்வசிக்கும்பிறந்த குழந்தை ரிஷ்யசிருங்கர் என்று வளர்வதாகவும்கூறினார் விபந்தகன் தன்மகனுக்குபெண்வாசனையெ காட்டாமல்வளர்த்து வரவதாகவும் அவன் வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு ஆண்வாரிசு பிறக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்.

தஸ்ரதநின்மகள்  "சாந்தா" அழகான அரசிளம் குமரியாக நிற்கிறாள். தன் தந்தையின் ஆசை நிறைவேற ரிஷ்ய சிருங்கரை மயக்கி,மணந்து புத்திர காமேஷ்டி யாகத்தை செய்விக்க  உதவுகிறாள்..

கோசலைக்கு ராமனும்,கைகேயிக்கு பரதனும், சுமத்திரைக்குலட்சுமணன்,சத்துருக்கனன்  என்று இரண்டு  குழந்தைகளும்பிறக்கிறார்கள்.

என்னகாரணமோ ? தசரதன் தன மகன்களிடம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு என்பதை கூறாமல் விட்டு விட்டான்.

இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்.!

"ராமாயணத்தில்  புதிய உறவுகள் " என்று ஒரு தொலைக்கட்சி தொடர் வரப்போகிறது.


மோகன் பகவத், நரேந்திர மோடி, எல்லாரும் பார்க்கத்தான் போகிறார்கள்.

நம்ம ஊர் வீரத்துறவி நேரடியாக பார்க்க மாட்டார்.

ஒளிந்து இருந்து பார்ப்பார் !!!

Monday, December 07, 2015

நாடக ஆசான் தோழர் ராமாநுஜம் 

மறைந்தார் .......!!!



1978-79ம் ஆண்டு மதுரையில் மாநிலம் தழுவிய நாடக பயிற்சி முகாம் நடந்தது. "நாடகமல்லாதவற்றை நாடகம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் " என்று வெங்கட் சுவாமிநாதன் கூறுவார்..

"அது என்னய்யா நவீன நாடகம் .நம்ம ஆளுகளூக்கும்  தெளிவு படுத்தணூமே " என்றார் கேமுத்தையா அவர்கள்.. "யாராவது இருக்காங்களா ?"
"காந்தி கிராமத்துல ராமானுஜம் இருக்கார் ? " நான்.
"யாரு? வக்கீல் தோழர் வானமாமலை மருமகன் ம்பாங்களே அந்த பையனா ?
ஆமாம் தோழர் ?
"கூப்பிடுங்க ! என்ன தான் நு தெரிஞசுகிடுவோம் " கே.எம் அவர்கள் முடித்தார்.

ராமானுஜம் அவர்களும்,எஸ்.பி ஸ்ரீநிவாசன் அவர்களும் பயிற்சி அளிக்க வந்தனர்.

composition ,theatre ,,presinium, Stanislavski , moscow thetre , form ,symbolic  theatre real theatre   போன்றவார்தைகள்அப்பொழுதுதான்நமதுஉறுப்பினர்களகேள்விப்பட்டார்கள்.

பட்டறைக்கு வந்த ராமானுஜம் பின்பு ஒருநாள் என்னிடம் கூறினார் " "காஸ் யபன் ! ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்களை உருவாக்கி ,நாடகத்தை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறீரகள் . அதில் எனக்கும் பங்கு உண்டு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
நாடகத்துறையில் எழுத்தாளர் சங்கத்தின் ஆளுமையை விகசிக்கச்செய்தவர்களில் ராமானுஜம் அவர்களின் பங்கு மகத்தானது.

எராளமான நாடகங்களை உருவாக்கி இருந்தாலும் அவர் இயக்கிய "புறஞ்சேரி " நாடகம் மிகவும் முக்கியமானது.
சிலப்பதிகாரத்தின் ஒரு சிறுபகுதியை கோவலனும்-கண்ணகியும் மதுரை வரும் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு உருவாக்கினார். வைகை யின் வடகரையில் உள்ள சேரியில் வந்து தாங்கும் காட்சி மட்டுமே நாடகம். "சேரிப் புறம்"  என்பதை மாற்றி "புறஞ்செரி"  என்றி தலைப்பு வைத்தார்.

இந்த நாடகத்தில், டாக்ட ர் மு.ராமசாமி, ஜெயந்தன், காஸ்யபன், டாக்டர் குருவம்மாள் ஆகியொர் நடிக்க எர்ணாகுளத்தில் அகில இந்திய நாடக விழாவில் மேடை ஏறியது.

அவசர நிலைக்காலத்தில் உருவாகிய இந்த நடகத்தில்நிகழ்காலத்தை சுட்டிக்காட்டினார் ராமானுஜம்.

பொதுவாக நாடகம் முடிந்ததும் கட்டியங்காரன் மங்கள வாழ்த்துப் பாடி அரங்கத்தின் திரையை மூடுவான்.
"அவசர நிலையால் அல்லொளகப்பட்டுக்கூண்டிருக்கும் இப்போது  என்னால் மங்கள வாழ்த்து பாடமுடியாது. திரையும் மூடாது என்று நிலைமை மாறுகிறதோ அன்று திரையை மூடுகிறேன்"  என்று கட்டியன்காரனாக நடித்த ஜெயந்தன் அறிவிக்க நாடகம் முடியும்.

தோழர் ராமானுஜம் காந்தி  கிரமத்தை  சுற்றி இருக்கும்முற்போக்கு செய்ல்பாட்டாளர்களோடு மிகுந்த ஈடுபாடோடு இருந்தார்.

மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளராக இருந்த தோழர் ராமலிங்கம் அவர்களோடு மிகவும் நெருக்கமாக பணியாற்றியவர்.

தமிழ் நாடகத் துறை ராமானுஜம் அவர்களூக்கு கடமைபட்டிருக்கிறது.

அவருக்கு அஞ்சலி !!!







   

Sunday, December 06, 2015

பார்த்த சாரதி கோவிலும் ,

வேங்கடகிருஷ்ணனும் .....!!!


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கொவிளின்முலவரின் திருநாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும்.
பார்த்தனை சேவிக்காமல் நீர்  அருந்தமாட்டார் அந்த பெரியவர். மாடவிதியில் குடிருக்கிறார் .
அங்கிருந்து வெளியாகும் கீதாசாரியன் என்ற தத்தவார்த்த பத்திரிகையின் ஆசிரியரும் அவரே..
வைணவ தத்துவத்தில முனைவர் பட்டம் பெற்றவர.
சென்னைபலகளைக்கசகத்தில் வைணவ துறை தலைவராக பணியாற்றி வருகிறார்..  சென்ற ஆண்டு தோழர் நடராஜன் உதவியோடு அவரை அவர் வீட்டில் நானும் முத்துமீனாட்சியும் சந்தித்தோம்.

மதுரையில்னடந்த முற்போக்காளர்களின் கருத்தரங்கில்கலந்து கொண்டார்.

கம்பிரமான ஆகிருதி. நெற்றியில் முகம் மறைக்க திருமண். மேடையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரை பார்வையாளர்கள் அதிசயமாக பார்த்தார்கள்..இந்த கூட்டத்தில் இவர் எதற்கு ?என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றிய கருத்தரங்கு அது.
அவரை பேச அழைத்தார்கள்.

" உங்களுக்கு ஆச்சரியமாகவும்  அதிசயமாக்கவுமிருக்கும்-மேடையில் 
  என்னை பார்ததும் . நான் சொல்ல வேண்டியதை இங்கு  சொல்லாமல் வேறேங்கும் சொல்லிபயனில்லை "

என்று சொல்லிதன்பேச்சை ஆரம்பித்தார்.

டாக்டர்.வேங்கட கிருஷ்ணானின் முதாதையர். ராமபக்தர்கள்.தீவிரமானவைணவர்கள். அவருடைய பாட்டி ஒரு கனவு கண்டிருக்கிறார்.  ஸ்ரீ ராமர் வந்து எனக்கு கோவில் கட்டு என்று கூறி இருக்கிறார். பாட்டி இதனை தன்மகன்களிடம் சொல்லிருக்கிறார்.அவருடையமகன்கள் "ஆகட்டும் பணம் சேர்ப்போம்.பின்னர் கொவில்காட்டுவோம் என்றுகூறி இருக்கிறார்கள். இது நடந்தது சுதந்திரத்திகுமுன்பு. ஓரளவுபணம் சேரந்ததும்  முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஸ்ரீ ராமரின் உத்திரவு அயோத்தியில் கட்டவேண்டும் என்பதாகும். சரயு நதி தீரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி இருக்கிறார். மகன்கள் மிகுந்த சிரமப்பட்டு,மாட்டுவண்டி ரயில்  என்று பயணம் செய்து அயோத்தியை அடைந்துள்ளனர்.அவர்களுக்கு அதிர்ச்சி.

நதிக்கரையில் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் குடி யிருக்கிற்றார்கள். செய்வதறியாது திகைத்த அவர்களை ஒரு முஸ்லீம்பெரியவர் விசாரித்திருக்கிறார். . இவர்கள் தாங்கள் வந்த விஷயத்தை கூறி உள்ளனர்.
குடியிருப்பில் உள்ள முஸ்லிம்களை அழைத்துகூட்டம்போட்டிருக்கிறார்.பெரியவர். அவ்ர்கள் அங்கு ராமர் கோவில் கட்ட இடம் கொடுக்க சம்மதித்து,அதற்கானபட்டாவை தரவும் தயாராக இருந்தார்கள். 

கோவில் கட்டப்பட்டது அதற்கான பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.
மாற்றாக பெருமாளின்கருட சேவையின் பொது வீதிவலம் வர தாங்கள் தான்  தூக்கி வர அனுமதி கேட்டிருக்கிறார்கள்..

பல வருடங்களாக கருட சேவை நடக்கிறது. 
"என் மூததையர்கலின் விருப்பப்படி நானும்  ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி சென்று சேவை செய்துவருகிறேன்." என்று டாகடர் வெங்கிட கிருஷ்ணன்  கூறி முடித்தார்.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டியாகி விட்டது முஸ்லிம்களின் உதவியோடு.

அதைக்கட்டியவன் 
தமிழன் !!! 








.

Wednesday, December 02, 2015

"தியாக பூமி " திரைப்படமும் ,

சென்னை மழை  வெள்ளமும் !!!





"ஆனந்தவிகடன்" பத்திரிகையில்  அப்போது கல்கி கிருஷ்ணமூர்த்தி பணியாற்றிக்கொண்டிருந்தார் .சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர் அவர். பத்திரகையின் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் தீவிரமான காங்கிரஸ்காரர். 

"கல்கி " விகடன் பத்திகையில்" தியாகபூமி " என்ற தொடர்கதையை எழுதினார். சம்பு சாஸ்திரி  என்ற அய்யர் கோவில் புசாரி. ஊருக்குள் வந்த மழை வெள்ளமாக தாழ்ந்த பகுதியை நிரப்பி விடுகிறது.அங்கு வசிக்கும்தலித் மக்கள் தங்க  வழியில்லாமல் தவிக்கும் பொது, சம்புசாஸ்திரி கோவில் கதவை திறந்து அவர்களை தங்க  வைக்கிறார். சனாதனிகள் இதனைக்கண்டு வெகுண்டு சாஸ்திரிகளை சாதியிலிருந்து விலக்கி  வைக்கிறார்கள். 

சாஸ்திரியின் மகளுக்கு திருமணமாகிறது.  அவள் கணவன் அவளை  உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறான. கணவனைப்பிரிந்த அவள் பின்னாளில் செல்வச் செழிபோடு திரும்புகிறாள் .அவளை ஏற்க வந்த கணவனை நிராகரித்து சமூகபணியில் ஈடுபடுகிறாள். 

இந்த கதையைவாசன்திரைப்படமாகதயாரித்தார் .  கே.சுப்பிரமணியம் 
இயக்கினார்
பாபநாசம் சிவன் சாஸ்திரிகளாக நடித்தார் . சாஸ்திரியின் மகளாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். அவர் கணவராக கே.ஜே.மகாதேவந நடித்தார்.

சாஸ்திரியின் பாத்திரத்தை அண்ணல்காந்தியடிகள் மாதிரி இயக்குனர் சுப்பிரமணியம்  உருவாக்கி இருந்தார்  .

சில காட்சிகளில் காந்தியடிகள் நூல் நூற்கும்காட்சிகளையும்  
இணைத்திருந்தார்

1939ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடை செய்தனர். 

இந்த படத்தின் ஒரே ஒரு பிரதி பூனே யில் உள்ள திரைப்பட ஆவண காப்பகத்திலுள்ளது..

-----------------------------------------------------------------------------------------------------------------------

திருவல்லிக்கேணியில் உள்ள மசூதியில் யாரும் தங்கி ,உணவருந்த ஏற்பாடு செய்த்ள்ளார்கள். 
அங்குள்ள சமண  கோவிலில் தங்க உணவருந்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சர்ச் சிலும் தங்க வழி வகுத்துள்ளார்கள்.-

--------------------------------------------------------------------------------------------------------------------------

"ஸ்ரீ ரங்கா நாதனை 
பீரங்கிவைத்து தகர்ப்பதும் 
என்னாளோ "
என்று பாடிய பாரதிதாசன் நினைவில் வந்து தொலைக்கிறார்.


ஒண்ணூம் செய்ய முடியாது அண்ணன் மார்களே !!!