Thursday, April 30, 2015

அந்த முட்டா சாமியாருக்கு 

தெரியப் படுத்துங்கள் ...!!!



உயிரினங்களில் பாலூட்டிகள் என்று வகைப்படுத்தியுள்ளார்கள் ! பாலூட்டிகளுக்கு மிகவும் முக்கியமான உருப்பு அவற்றின் மார்பகங்கள் !


பெண்ணிற்கு அவை உருவாகின்றன ! ஆணுக்கு அவை இல்லை ! 

இது இயற்கையின் விதி ! 


இந்தவிதி ஒரே ஒரு உயினத்திற்கு மட்டும் செல்லாது ! அந்த இனம்  தான்  மனித இனம்  !


மனித இனத்தின் கரு உருவாகும் போதே பெண் கருவாகத்தான் உருவாகிறது என்கீறார்கள் ! பின்னர் கரு வளர்ச்சியின் சிக்கலில் அதன் வளர்ச்சியில் கிடைக்கும் x ,Y குரோமசோம்களீன் எண்ணீக்கயைப் பொருத்து அது ஆணா பெணா என்று இயற்கை தீர்மானிக்கிறது ! பெண் என்றால் இருக்கும் உருவத்தையும் , மற்றவைகளையும் தகவமைத்துக்கொள்கிறது ! 


ஆண் என்றால் ,ஏற்கனவே உள்ள உருவத்தில் சில மாற்றங்களையும், பெண்ணிற்குரிய அம்சங்களீன் வளர்ச்சியை தடை செய்வதும் நடக்கிறது !


இதற்கு உதாரணமாக பாலூட்டிகளில் எந்த உயிரினத்திற்கும் "மார்பக காம்பு"கள் கிடையாது ! 


மனித  உருவில் மட்டுமே ஆணிற்கும்" மார்பக காம்பு"கள் உள்ளன ! 


இயற்கை கரு ஆணா பெண்ணா என்று தேர்ந்தெடுத்தபிறகு ஆண் என்றால் அவற்றை வளராமல் செய்வதும்,பெண் என்றால் வளரவிடுவதும் நடக்கிறது ! 


கரு உருவாகுகும் போது பெண்ணக மாட்டுமே உருவாகிறது என்பதே மருத்துவர்களீன் பார்வை !


இந்த் விதியை எந்த சாமியாராலும்  மாற்ற முடியாது !!!

Wednesday, April 29, 2015

"மாட்டுக்கறி திருவிழா"வும் 

சில தகவல்களும் .....!!!



மகராஷ்ட்ற மாநில அரசு மாட்டுக்கறியை தடைசெய்து சட்டம்போட்டது !  உண்மையில் இந்த சட்டத்தின் மூலம் பசுவதையை தடை செய்வது தான் அதன் நோக்கம் ! பல மாநிலங்களில் இப்படி ஒருசட்டம் பசுவதையை தடை செய்யும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது ! 


அரசுக்கு தெரியும். பசு வதையை தடை செய்ய முடியாது என்பது ! விவசாயி தன் வயிற்றுக்கே வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நீலையில் பசுவை பாதுகாக்க அவன் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பது பச்சப்புள்ளைக்கு கூட தெரியும் ! வயதான தாய் தந்தைக்கு சோறு போட முடியாமல் வேறட்டிவிடும் காலத்தில்  பால் கறக்காத மாட்டை காப்பாற்ற அவன் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா அல்ல ! 


பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் மாட்டிறைச்சி ஏற்றுமதி கூடியிருக்கிறது என்று ஒர் புள்ளீ விபரம் குறிப்பிடுகிறது ! 


அகில இந்திய மாட்டுக்கறி ஏற்றுமதிதியாளர் சங்கத்தின் தலைவர் ரஷித் கதமி என்பவர்" சென்ற ஆண்டை விட 14 சதம் ஏற்றுமதி கூடியிருக்கிறது" என்கிறார் ! மாட்டிறைச்சி எற்றூமதியில் முதலிடம் வகிப்பது பிரேசில் நாடாகும் ! அந்த நாட்டின் நாணயமதிப்புகாரணங்களால் இந்திய நாணயம் அமெரிக்க டாலருக்கு மதிப்பு குறைந்திருப்பதால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி கொடிகட்டி பறக்கிறது ! ஆனால் இப்படியே நீடிக்கும் என்று கூறமுடியாது" என்று அவர் குறீப்பிடுகிறார் !  


இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 6 இந்திய கம்பெனிகள் உள்ளன ! அவற்றில் நான்கு கம்பெனிகள் பா.ஜ.க ஆதரவாளர்களீடம் உள்ளன ! மாட்டிறைச்சி என்றாலும் அவை எருமைமாடா, காளை மாடா,பசுமாடா என்று  ஏற்றுமதியாளர்கள் பகுத்துப் பார்பதில்லை ! பா.ஜ.க அரசும் கண்டு கொள்வதில்லை ! 


இறைச்சி ஏற்றுமதியின் காரணமாக உள்னாட்டில் இறைச்சி விலைகடுமையாக உயர்ந்துள்ளது !

ஆட்டின் இறைச்சி   இன்று கிலோ 400 /- லிருந்து 450 /- ரு பாயாக இருக்கிறது !

மீன் கிலோ 700 /- ரூ எட்டியுள்ளது !

மாடிறைச்சி 250 /-ரூ லிருந்து 300/- ஆகியுள்ளது ! 


கிராமத்து விவசாயி காலை எட்டுமணீக்கு ரோட்டொரம் உள்ள டீ கடையில் மைதா மாவில் செய்த (பஞ்சம் போக்கீ) பணீயாரத்தை தீன்ரு விட்டுவயிறு நிறைய  தண்ணீர்குடித்து விட்டு வேலைக்கு போகீறான் !


புரோட்டின்,சத்துள்ள உணவு என்றேல்லாம்  அவனால் கனவு கான முடிவதில்லை ! வேலையும் இல்லமல் ,வருமானமும் இல்லாமல் அவன் பாடு சொல்லமுடிவதில்லை ! 

 

மாட்டிறைச்சி கூட இன்று வசதி உள்ளவர்களீன் உணவாக மாற்றப்பட்டு விட்டது ! 

அதை உண்ணூவதும் ,உண்ணமலிருப்பதும் தனிப்பட்டவர்களீன் உரிமை !  இதில் அரசு தலையிடுவது தனி மனித உரிமைமீறலாகும் !!!

  

Friday, April 24, 2015

"மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி !"

"வாழ்க ! வாழ்க !" என்று ஒலித்தது !!!

90 ம் ஆண்டுகளின் ஆரம்பம் ! செங்கலைக் காட்டி இந்துத்வா காரர்கள் கலகம் செய்து கொண்டிருந்த காலம் ! இவர்களை சந்திப்பது எப்படி ? என்று இடதுசாரி கலைஞர்கள் ஆலோசித்தபடி இருந்தனர் !

இந்தியா பூரவிலும் கலைஞர்களை வரவழைத்து அவர்களூக்கு  போதனை செய்ய முடிவு செய்யப்பட்டது !

தமிழ் நாட்டிலிருந்து அருணன் தலமையில், குமபகோணத்தைஸ் செர்ந்த ஜீவகுமார்,பிரளயன்,மதுரை டாக்டர் செல்வராஜ் ஆகியொரொடு நானும் சென்றிருந்தேன் ! 

மத்திய குழுவின் மெற்பார்வையில் பயிற்சி நடந்தது ! முழுக்க முழுக்க அதனை நடத்தியவர் சீத்தாரம் எச்சூரி அவர்கள் ! மேடைகளில் அவரை பார்த்திர்ந்தாலும் மிக அருகில் அவருடைய பெச்சைக்கேட்டது அப்போது தான் ! 

இந்த முகாமில் அரூணன் அவர்கள் தமிழக நிலமையை விவரித்து நமது கலைப்பணி எப்படீருக்கிறது என்பது பற்றி விவரித்தார்கள் ! நானும் என்முறை வந்த பொது நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினேன் !

செக்கச்சிவந்த மேனி ! சுருண்ட முடி ! கூரிய மூக்கு ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! கருப்பு சட்டை,கால்சராயில் காம்பீரமாக அவர் பெச ஆரம்பித்தார் ! ஆற்றொட்டம் போன்ற ஆங்கில உறை ! பண்டைய இலக்கியங்களிலிருந்தும் ,கலை வெளிப்பாடுகளீலிருந்து மேற்கோள் காட்டிய பேச்சு ! நவீன நாடகங்கள், சமகால இலக்கியங்கள் , நவீனத்துவம் .பின் நவீனத்துவம் என்று பெருமழையாய் கொட்டினார் ! 

தமிழ் நாட்டிலிருந்து வாந்திருந்த எங்களைப்பர்த்து "நீங்கள் "சோ" ராமசாமியின் சம்பவாமி யுகே யுகே" என்ற நாடகத்தைப் பார்த்திருகிறீகளா ? என்று கேட்டர் ! நான் கையைத்துக்கீனென் ! புராணங்களையும்,இதிகாசங்களையும் அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ?நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது! அவை நமக்கும் சொந்தமானது தானே ? '" பிரமிப்பில் நாங்கள் ஆழ்ந்து கொண்டிருந்தோம் ! 

இந்தியாவின் முக்கிய கலை ஆளுமைகள் அமர்ந்திருந்தனர் ! என் நினைவு சரியென்றால் ஹபீப் தன்வீர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் ! இயக்குமர் ஏம்.எஸ். சத்யூ வும் இருந்த ஞாபகம் !

நாங்கள் தமிழ்நாடு திரும்பினோம் ! 

த.மு.ஏ.சவின் மாநில மாநாடு நடக்க விருந்தது ! அதனை கோவையில் நடத்த முடிவாகி இருந்தது!

சங்கத்தின் மைய உறுப்பினர்கள்  மாநாடு நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதித்து முடிவு செய்தொம் !

மாநாட்டிற்கு சிவத்தம்ம்பி, ஜெயகாந்தன் ,ஆகியொரைக் கூப்பிட முடிவானது ! நான் என்பங்கிற்கு சீத்தாராம் எச்சுரி அவர்களி கூப்பிட வெண்டும் என்று ஆலொசானை கூறினேன் !

 

அவர் வந்தால் போகவர விமானச்செலவு ஆகுமே என்ற கவலை வந்தது ! கோவை மாவட்ட செய்லாள்ராக இருந்த வக்கீல் ஆனந்தன் அது எங்கபாடு ! கூப்பீடுங்கள்" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார் 1 

த.மு ஏ சவின் வரலாற்றில் கோவை மாநாடு தன் முத்திரையப்பதித்த ஓன்றாக மாறியது ! 

சீத்தாராம் அவர்களை விமான நிலையத்திலிருந்தூ அழைத்து வந்து  ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு எனக்கு வந்தது ! என்னோடு கானரா வங்கி தோழர் மாதேஸ்வரன் இருந்தார் ! இது தவிர 

 ஏஸ் ஏ.பி, கருணாகரன்,மாணீக்கம் ஆகியோறோடு வீமான நிலயம் சென்றொம்! அவருக்கு சால்வை இட்டு வரவேற்கும் வாய்ப்பினை சங்கம்  எனக்கு அளித்து !

கிரிம் கலர் பாண்ட்டும்,வெள்ளைசட்டையும் அணிந்திருந்தார் !  குளித்து வந்தார் ! மாலை பெசுவதற்கான குறிப்புகளை தயார் செய்தார் ! உணவருத்திணொம் ! சிறு தூக்கம் ! தூங்கும் போஹும் அதே பாண்ட் அதே சட்டை ! 

"ஏன் தோழர் ? ரிலாக்ஸ்டா கைலி உடுத்திக்குங்களேன்?" 

"you are too inqusitive ! comrade ? "

"how ?" 

"a r r e baabaa ! i forgot to bring my dress ! ikept my dress on the table ! my inner garments are there ! but paant and sahirt i forgot ! "

தோழர் மாதேஸ்வரன் தான் அந்த யொசனையை சொன்னர்! அருமையான மயில் கண் ஜரிகை செலம் குண்டஞ்சு வேட்டியை பொட்டு அண்ணணை  மாப்பிளை மாதிரி மேடைல ஏத்திடுவோம் என்ற்றர் ! தயங்கிய சீத்தாராம் எச்சூரி அவர்களை எல்லருமாகச்சேர்ந்து அமுக்கி விட்டொம் !

மாலை மெடையில் ஏறினார் !  செக்கச்சிவந்த மெனி ! சுருண்ட முடி ! கூறியமூக்கூ ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! ஜரிகை வேட்டி  ! மாப்பிள்ளை போல   மேடையில் ஏறினார் ! 

"சீத்தாராம் எச்சூரி !  வாழ்க !வாழ்க !!"

என்ற கோஷம் வீண்ணைப் பீளந்தது

"மார்க்சிஸ்ட் கட்சி வாழ்க !வாழ்க!

என்று என் காதில் ஒலித்தது!!!

Wednesday, April 22, 2015

"நூல் விமரிசனம் "



"சவுண்ட் சிட்டியும்

சைலண்ட் கோட்டூம் "  


ஆசிரியர் :   DR. அ. உமர் ஃபரூக் .


எதிர் வெளியீடு,

பொள்ளாச்சி -642002.

விலை : ரூ 70 /-


காமுத்துரை அவர்களின் நூல் அறிமுக விழாவுக்கு தேனி சென்றிருந்தேன் ! "பைபாஸ் சாலையில் உள்ள மணடபத்தில் நடந்தது ! இருபது வருடமாகியிருக்கும் ! பால்வடியும் முகம் கொண்ட சிறுவன் ( மன்னிக்கவும் ) உமர் ஃபரூக் என்று அறிமுகப்படுத்தினார்கள் ! அவர் இன்று டாக்டர்.ஃபரூக் ஆகியுள்ளார் ! அது மட்டுமல்ல ! மருத்துவம் சம்மந்தமாக முப்பதுக்கும் மெற்பட்ட நூலகளை எழுதியுள்ளார் ! அவர் எழுதிய  நுல்தான் "சவுண்ட் சிட்டியும் ,சைலண்ட் கோட்டும் " !


ஏமான் தெசத்தின் நடுவீதியில் துவங்குகிறது ! ஏமான் தேசம் கற்பனயானது தான் என்றாலும் நம்மல் அந்த தேசத்தை அடியாளம் கண்டு கொள்ள முடிகிறது ! 


இது நாவலா ? கட்டுரையா ? எல்லாமும் தான் ! இதன் இலக்கிய வகைமையை வாசகனையே முடிவு செய்து கொள்ளும்படி ஆசிரியர் கேட்டூக் கொள்கிறார் !


இது பின் நவீனத்துவம் ( Post mOdernism ) சார்ந்ததா? அப்படியும் வகைப்படுத்தலாம் !


கோணக்கழுத்தர்கள் நாடு,பேசோஸேபியன்கள்,கட்டயக் குளியல்திட்டம், என்ன அற்புதமான சித்தரிப்பு !


இரண்டு தளத்தில் நூல் பயணம் செய்கிறது ! ஒன்று கற்பனையானது ! மற்றொன்று நம் முன்னே நடப்பது ! இரண்டையும் இணைத்துள்ள பாங்கு தான் ஃபரூக் அவர்களீன் அபரிமிதமான திறமை 


மிகச்சிறந்த ஓவியன் மிகக்கவனமாக ,நுணுக்கமாக வறைந்த ஒவியம் போன்றது ! கொஞ்சம் கவனம் சிதறினாலும் கந்தலாகிவிடும் வாய்ப்பு அதிகம் ! ஃபரூக் வெற்றி கரமாக செய்துள்ளார் !


சராசரி வாசகன் "என்னய்யா சொல்றாரு ? " என்று அங்கலாய்க்க வாய்ப்புள்ளது !


நூல் முழுவதும் ஃபரூக் அவர்களின் intellectual brilliance வெளிப்படுகிறது !


இதன் பலமும் அது தான் ! பலவீனமும் அது தான் !


வாழ்த்துக்கள் DR உமர் ஃப்ரூக் அவர்களே !.

Monday, April 20, 2015

நூல் விமரிசனம் .


"அம்பாரம்"

(ஆசிரியர் : க.லெனின் )

எழில் மீடியா வெளியீடு,

திருப்பூர். விலை ரூ 50 / 


நான் தமிழகத்தின் தெற்கு மாவட்டத்துக்காரன் ! எங்கள் ஊரில் களத்து மேட்டில் அறுவை முடிந்து "சூட்டடித்த"பின் நெல்லை குமித்து வத்திருப்பார்கள் ! அதனை "அம்பாரம் "என்போம் ! கோடை காலங்களில் உளுந்து ஊடுபயிராகவும் ,சில சமயங்களில் மிளகாயும் குமித்து வைத்து "அம்பாரம் அம்பாரமாக " விற்போம் !


லெனின் அவர்கள் தன் நினைவுகளை , அனுபவங்களை 17 கட்டுரைகளாக "அம்பாரம் : என்ற நூலாக தந்திருக்கிறார் ! 

இவை கட்டுரைகளா ? சிறு கதைகாளா ? நினைவோடைகளா ? பயணக்கட்டுரைகளா ? குறுநாவலா? 

எல்லமும் தான் !


ஒர் தந்தை தன் மகள்மெல் உள்ள பாசத்தை , பிரியத்தை, இப்படியெல்லாம் சொல்ல முடியுமா? லெனின் சொல்லி இருக்கிறார் !


தன் தாயின் மீது தான் கொண்ட மதிப்பை,மரியாதையை. அன்பை கொட்டி எழுதியிருக்கிறார் !


ஒரு "டப்பர்வேர் ' பாத்திரத்தில் மிர்னி "தயிரு வேணுமா? தயிரு " என்று அந்த சின்ன குட்டி பெண்

வருகிறாள் ! தான் சிறுவயதில் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் தயிர் விற்றது நினைவு தட்ட ஆசிரியர் கண் கலங்குகிறார் !


சோனாகாச்சி யில் திருடன் பெண்குழந்தையை களவாண்டு ஓடுகிறான் ! அவனைப் பிடித்து குழந்தயை காப்பாற்றுகிறார்கள் ! இதனைப் பார்த்த ஆசிரியர் தன் காருக்கு ஓடுகிறார் ! மடிக்கணீணியை எடுத்து இரண்டு நாள் கழித்து வாங்கிய ஃப்ளைட் டிக்கட்டை கான்சல் செய்து விட்டு மறுநாள் காலைஃபளைட்டுக்கு டிக்கட் வாங்குகிறார் ! வாசகனின் மனம் ரத்தம் வர கதறுகிறது !

லெனினின் தாய் நாகலட்சுமி அம்மையார் ! எப்பெர்ப்ட்ட சித்தரிப்பு ! கேரளாக்கார வியாபாரியிடம் மாட்டை விற்பதில் சம்மதம் இல்லை !எனினும் வேறு வழியில்லை ! மாடு கேரளா பொகும் வழியில் இவர்கள் தோட்டம் வந்ததும் போக மறுக்கிறது ! இரண்டு உயிர்கள்  சங்கமிக்குமிடமாக அது மாறுகிறது 1


நூல் முழுவதும் பின்னணி இசையாக இரண்டு குரல் கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன ! ஒன்று அன்பு மகள் மிர்னி ! இரண்டாவது தாயார் நாகலட்சுமி அவர்களின் குரல் !  


மூன்று தலைமுறையாக மார்க்ஸிஸ்டுகள் ! மிர்னிய சேர்த்தால் நான்காவது தலமுறை ! 

இறப்பு எல்லருக்கும் உண்டு ! "தீக்கதிர்" பத்திரிகையில் வரும் அஞ்சலி செய்தியை மிர்னி

படித்து காட்டுவாள் ! 


நூறு ஆண்டுகள் கழித்து !


வாழ்த்துக்களுடன் !



 

Friday, April 17, 2015


Public

Post

News Feed


Syamalam Kashyapan

6 hrs · 

பசு வதை தடை தான் நோக்கம் ...!

மாட்டிறைச்சி தடை சும்மா ஜுஜுபி....!!!

மாட்டிறைச்சி தடை பற்றி விவாதம் நடக்கிறது ! உலகத்திலேயே மாட்டிறைச்சியை அதிகமாக ஏறுமதி செய்வது பிரெசில் என்கிறார்கள் ! அதற்கு அடுத்த இரண்டாவது இடம் இந்தியாவுக்கு ! இந்தியாவில் மாட்டிறைசியை மொத்தம் ஆறு கம்பெனிகள் ஏற்றுமதி செய்கின்றன ! இதில் நான்கு கம்பெனிகள் இந்துத்வா காரர்களுக்கு சொந்தமானது !

ஒர்கம்பெனி பெயர் "அல் கபூர் " ! மற்றொரு கம்பெனி பெயர்" அரெபியன் எக்ஸ்போர்ட்" ! இவை இஸ்லாமியருக்கு சொந்தம் எ ந்று எண்ணினால் உங்களுக்கு பைத்தியம் பிடிதிருப்பதாக அர்த்தம் ! இந்துத்வா காரர்கள் தான் கம்பெனி பெயரை இப்படி வைத்திருக்கிறார்கள் !

மும்பையில் ஆடு,மாடு வெட்டும் இடம் மொத்தம் மூன்று இருக்கிறது ! இதில் இரண்டு இடம் ஜைன சமயத்தவரால் ஏலம் எடுக்க்கப்பட்டுள்ளது ! மாட்டின் தோலுக்கு ஏற்றுமதி கிராக்கி அதிகம் ! அதன் கொம்பு,எலும்பு ஆகியவைகளுக்கு தொழில் பயன்பாடு அதிகம் ! சர்க்கரை ஆலைகளில் கரும்பு பாகாய் சுத்தம் செய்ய எலும்பு,கொம்பு ஆகியவற்றை பயன் படுத்துகிறார்களாம் ! அரசு தலகீழாக நின்றாலும் மாட்டிறைச்சியை இவர்களால் தடுக்கமுடியாது !

சமிபத்தில் நீதிமன்றாத்தில் மாட்டிறைச்சிய தடுப்பதின் மூலம் இன்னும் எதை எதை தடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது ! அப்போது அரசு வக்கீல் இப்போதைக்கு நாங்கள் பசுவதையை மட்டும் தான் தடுக்கப் பொகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் ! The cat is out of the bag !

பசுவதையை தடை செய்ய சட்டம் கொண்டுவர முடியாது ! அது மத சம்மந்தமான ஒருதலபட்சமானதாக இருக்கும் ! நீதி மன்றம் ஏற்காது ! அதனல் மாட்டிறைச்சியை தடை செய்யும் பாசாங்கினை இந்துத்வா வாதிகள் செய்கிறார்கள் !

நம்ம ஊர்ல மாட்டிறைச்சி உண்பதால் ஏற்படும் நனமைகள் யாவை என்று "வியாசம் " எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ! நாம் எதிரியை அடிப்பதை விட எதிரியின் நிழலை அடித்தே பழக்கப்பட்டவர்கள் !

சென்னையில் மாட்டுக்கறியை இலவசமாக கொடுக்கும் "யாகம் " நடத்த விருக்கிறார்களாம் !

திருமாவளவன்,போன்றொர் சரி !

குளத்தூர் மணீக்கும் ,வீரமணீக்கும் இது தெரியாதா ?

எங்

pan

April 13 at 12:16pm · 

திருப்பூருக்கு சென்று வந்தேன் -----3

"நாமகிரி அம்மையாரைப் பார்த்தேன் "

மார்ச் 19ம் தேதி மாலை 5மணிக்கு குமாரசாமி திருமனமண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்க விருகின்றன ! அங்கு தான் உணவுக்கூடமும் ! தோழர் லெனின் மதிய உணவுக்காக விடுதிக்கு கார் அனுப்பியிருந்தர் ! நானும் முத்துமீனாட்சியும் மண்டபம் செல்ல "லிஃப்ட்" அருகே நின்று கொண்டிருந்தோம் ! கதவு திறந்ததும் என்களை சந்திப்பதற்காக அந்த அம்மையார் வந்தார் ! அவரையும் அழைத்துக்கோண்டு நாங்கள் மண்டபம் சென்றோம் 1

காலம் அவரை மாற்றி இருந்தது ! கொஞ்சம் கருத்து ,உடல் பூசினாற்போல் இருந்தார் நமகிரி அம்மையார் ! எங்கள் ராஜாமணி முகம் மலர ,லேசான வெட்கம் பற்ற "செம்மலர்,செம்மலர் " என்று அழைப்பரே அந்த செம்மலரின் பூர்வாசிரமப்பெயர்தான் நாமகிரி ! சனாதன குடும்பத்தில் பிறந்து இயக்கத்திகாக தன்னை துய்த்துக் கொண்டவர் அவர் !

இயக்கத்தின் பொது நிகழ்ச்சிகளில் கடை போட்டு இயக்க பிரசுரங்களையும், இயக்கம் சார்ந்த பொருட்களையும் விற்கும் ராஜாமணிக்கு உதவியாக செம்மலர் இருந்தார் !

ஆசையாக " சிந்தனைப் பார்க்க வேண்டுமே ? " என்றேன்!

ஒரு மெலிதான புன்னகை மலர "அவன் தேன் நிலவுக்காக அசாம் சென்றிருக்கிறான் "என்றார்! முகத்தில் பெருமிதம்.. உள் மனம் "ராஜாமணி,ராஜாமணி " என்று கதறியது ! "நீ இல்லையே கண்ணா" இதனைப் பார்க்க என்று !

இரண்டு மகன்கள் ! ஒருவர் மூத்த மகன் தோலைக்காட்சியில் சென்னையில் பணியாற்றுகிறார் !

இரண்டாமவர் சிந்தன் இயக்கத்தின் முழுநேர ஊழியராக சென்னையில் இருக்கிறார் ! அவர் துணைவியார் தமிழ் "இந்து" பத்திரிகையில் பணியாற்றுகிறார் !

"அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கலாமே? "

"திருப்பூர் என் அரசியல் வாழ்க்கைக்கு தோதாக இருக்கிறது ! நான் இங்கேயே இருக்கிறென் என்கிறார்"என்று அம்மா கூறியதாக சிந்தன் பதிலளித்தார் !

( நாகபுரி வந்ததும் முகனூல் மூலம் சிந்தனுக்கு சிறு விபத்து மூலம் காலில் அடிபட்டிருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன் ! தொடர்பு கொண்டதில் "பயப்பட வேண்டாம். ஒருமாத்திதில் நடக்க முடியுமென்றும்,அம்மா இங்கு வந்துதனக்கு உதவியாக இருப்பதாகவும் சிந்தன் கூறி


திருப்பூருக்கு சென்று வந்தேன் .....2

"விழிப்பு நடராசன் "

விழிப்பு நடராசன் அவர்கள் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும் ! நானோ ஒரு நிலைதகவலைத்தான் எழுத விருக்கிறென் ! எப்பேற்பட்ட தோழர் !அவர் உடம்பின் திசுக்கள் பூராவும் இயக்கம் இயக்கம் என்றே ஒலிக்கும் ! 

மிகவும் அமைதியான , சலனமற்ற, உறுதியான,மெலிதான குரல் ! செயலூக்கம் ! எப்பேர்பட்ட ஆளுமை !

பொறியியல்,மருத்துவம்,நிர்வாக இயல் என்று தங்கள்குழந்தைகள் தொழிற்கல்வியில்பட்டம் பெற்று முன்னேர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில் ,கிராமத்து கள்ள மடுகளை "பவுண்டில் " அடைப்பது போல நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளீகளில் அடைக்கிறார்களே ! அன்று அப்படியல்ல ! I.I.T போன்றவை உருவான காலம் ! டெல்லி I.I.T அன்று மதிப்பு மிக்க கல்விச்சாலை !

தகுதியின் அடைப்படையில் நடராசன் அங்கு பயின்றார் !

நூற்பாலை, நெசவு ஆகிய இரண்டு துறைகளிலும் M.Tech. சிறப்புப் பட்டம் பெற்றார் ! திருப்பூர் வந்து பின்னலாடை துறையில் முத்திரை பதிக்க போகிறார் என்று கருதினார்கள் ! பின்னலாடையை விட பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே அவர் விரும்பிணார் ! அதற்கு காரணம் இருந்தது ! 

இன்று இருப்பது பொல் ஜனனாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பு அன்று உருவாக வில்லை ! சொசலிச வாலிபர் முன்னணீ ( Socialist Youth Front ) என்ற அமைப்புதான் இருந்தது ! மறைந்த தோழர் பி.மொகன்.முன்னாள் எம்.எல் ஏ நன்மாறன்,கருணாகரன், பாலகிருஷ்ணன் என்று இளம்தோழர்கள் அதனைகட்டி வளர்த்தார்கள் 1 அவர்களொடு SYF ல் செயல்பட்டவர் நடராசன் 1

பனியன் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை எழுந்தது ! அவர்களுக்கு "பஞ்சப்படி" என்றால் என்னவென்று தெரியாது ! அதனை பற்றி சொல்லி அவர்களை பஞ்சப்படிக்காக போராட செய்தவர்களில் நடராசனும் ஒருவர் ! தெருத்தெருவாக வீதி வீதியாக" பஞ்சப்படி " என்ற நாடகத்தினை எழுதி பிரச்சாரம் நடந்தது ! அவ்ருக்கு உதவியாக ,மணிக்குமார்,ராஜாமணி ஆகியொர் இருந்தனர் !

வீதி நாடகத்தில் நடிக்க தொழில் முறை நடிகை வேண்டும் என்று மதுரை பீபிள்ஸ் த்யெட்டரி பணீயாற்றிகொண்டிருந்த என்னை அணூகீணார் ! எங்கள் குழுவில் நடித்துக்கொண்டிருந்த இருவரை அனுப்பினோம் !

கிட்டத்தட்ட 50 நாட்கள் போராட்டம் ! 50 நாளும் ஒரு நாளுக்கு ஐந்து ஆறு இடங்களில் நாடகம் நடக்கும் ! வெற்றிகரமான போராட்டம் முடிந்தது !

த.மு எ.ச மாநில அளவில் இசைபயிற்சி முகாம் நடத்தியது ! திரைப்பட இசை இயக்குனர் எம்.பி சீனிவாசன் அவர்களும் ,திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள் ! கிட்டத்தட்ட 90பேர் கலந்து கொண்ட சேர்ந்திசை நிகழ்ச்சி கோவையில் அரங்கேறியது ! 90 பெராஈ ஓரே மேடையில் அமர்த்த நடராசனும்,மணிக்குமாரும் செய்த ஏற்பாடு இன்றும் என்னை பிரமிக்க வைக்கிறது !

அதுசரி ! நடராசன் எப்படி விழிப்பு நரடராசன் ஆனார் ! அது பற்றி தனியாக எழுத வேண்டும் ! திருப்பூரில் இருந்து :விழிப்பு " என்ற கலை இலக்கிய பத்திரிகையை மாதந்தோரும் நடத்திக்கோண்டிருந்தார் நடராசன் ! விழிப்பு நடராசனானார் !

Like · Comment · Share

 Kashyapan

April 11 at 8:33pm · 

திருப்பூருக்கு சென்று வந்தேன் ........!!!

சென்ற 2014ம் ஆண்டின் இறுதியில் த.மு.எ.க சங்கத்தின் 13 வது மாநில மாநாடு திருப்புரில் நடைபெறும் என்று சங்க தலமை அறிவித்தது ! 1975ம் ஆண்டு நடந்த முதல் மாநாட்டில் இருந்து 12 மாநாடுகலிலும் கல்ந்து கொண்டேன் ! இதிலும் கலந்து கொள்ள விரும்பினேன் ! தலைவர் தமிழ் அவர்களுக்கும் செயலாளர் வெங்கடெசன் அவ்ர்களுக்கும் தகவல் கொடுத்தேன் ! "மூத்த எழுத்தாளர் ! கண்டிப்பாக வாருங்கள் ! செயற்குழுவில் பேசி அழைப்பினை அனுப்புகிறேன் !" வெங்கடெசன் அவர்கள் மின் அஞ்சல் அனுப்பினார்கள் !

ஓய்வு பெற்ற எல்.ஐ.சி ஊழியன் என்ற முறையில் விருந்தினர் அறையினை எல்.ஐ.சி தொழர்கள் முளம் ஏற்பாடு செய்து கொள்வதுண்டு ! ஆனால் திருப்பூர் கிளையில் விருந்தினர் அறை இல்லை ! " தங்கும் வசதி சரியாக இல்லை என்றால் போக வேண்டாம் என்று என் மகன் கூறினான் !.சங்கடமாக இருந்தது !

ஒரு யோசனையில் தோழர் லெனின் மிர்னியை தொடர்பு கொண்டேன் ! "கவலியே படாதீர்கள் ! திருப்பூரில் இறங்கியதிலிருந்து திரும்பி ரயிலடியில் ஏறும் வரை நான் பொறுப்பு ! உங்கள் மகனைபோல் இருந்து பர்த்துக் கொள்கிறென் என்றார் '!

26 மணி நேர பயணத்தில் 18-3-15 அன்று மாலை 4.40 க்கு நானும் முத்துமினட்சி அவர்களும் திருப்பூர வந்து செர்ந்தோம் !! லெனின் தோழர் எங்களை விடுதியில் கோண்டு விட்டார்! "நான் காலை வருகிறேன்! வேறு என்ன வேண்டும் ?' என்று கேட்டார்!

திருப்பூர் பழகிய ஊர் ! விழிப்பு நட ராசனை பார்க்க வேண்டும்! தீக்கதிரில் பணியாற்றிய பொன்ராம்.தூயவன் ஆகியவர்களை சந்திக்க வேண்டும் ! எல்லவற்றிர்க்கும் மேலாக " எங்கள் தங்கம் ராஜாமணியின் துணைவியாரைபார்க்க வெண்டும் " என்றேன்!

அவர் சென்றபின் குளித்து உடை மாற்றி அமர்ந்தேன் !அறைக்கதவு மணி சிணுங்கியது ! வாருங்கள் என்றேன் !

விழிப்பு நடராசன் ! அதே உடற்கட்டு! சிவப்பு நிறம்-இடுங்கிய கண்கள் ! கொஞ்சம் வயதான தோற்றம் ! கிட்டத்தட்ட நாற்பது வருடத்திற்கு முந்தய அதே விழிப்பு நடராசன் ! கட்டிதழுவிக் கொண்டோ

ashyapan

April 10 at 3:07pm · 

ஜெயகாந்தன் அவர்களும் ,

மதுரை எல்.ஐ.சி ஊழியர்களும் .....!!!

1965ம் ஆண்டில் "உன்னை போல் ஒருவன்" என்ற படம் வெளிவந்தது ! ஜெயகந்தன் அவர்கள் இயக்கம். கந்திமதி ,பிரபாகர், வீராசாமி ஆகியொர் நடித்தனர் ! வீணை கலைஞர்சிட்டி பாபு இசை அமைப்பு ! பாடல்கள் கூடாது என்று ஜெ .கெ அறிவித்து விட்டார் !

இந்தப்படம் திரை அரங்குகள் மூலம் வந்தால் தமிழ் திரப்பட துறையை புரட்டிப் போடும் என்பது அறிந்த ஓன்று ! ஆகவே இதனை வெளியிடாமல் இருக்க கோலிவூட் உள்ளே ஒரு குழு வேலை செய்தது ! அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் "கொக்கி" பயலுகளை கோடம்பாக்கத்துக்குள்ள விடக்கூடாது " என்று லட்சிய நடிகர் அறிவித்திருந்தார் 1

ஜெ.கெ அவர்களின் சொந்த தயாரிப்பு ! தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தயரித்தார்!

மதுரையில் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் சிலர் இந்த படத்தை வேலியிட விரும்பினர் ! மதுரை செண்ட்றல் தியெட்டரில் காலை 10 மணீக்காட்சிக்கு எற்பாடு செய்தனர்! எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் நிகழ்ச்சி நடக்க காரியங்கள் நடந்தன ! டிக்கட் விற்பனை ஆயிற்று !

இதற்கிடையே இந்த படத்தை ஒருகாட்சி மூலம் வரும் வருவாயில் கணிசமான லாபத்தை கம்யுனிஸ்கட்சிக்கு கொடுக்கப் பொகிறார்கள் என்று ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் !

அந்த ஞாயிற்றுக்கிழமை காலை செண்ட்றல் த்யெட்டெரில் கூட்டம் கட்டி ஏறியது! காரானம் ஜே.கெ யின் எழுத்து,இயக்கம் என்பதால் !

படம் ஆரம்பித்து அரை மணி நெரம் ஆகியிருக்கும் ! கெளிக்கை வரி இலாகாவிலிருந்து அதிகாரிகள் சொதனையிட வந்தனர் ! சொதனை நடந்த்தது ! ஆனால் படம் வெளியிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை !

டிக்கேட் மூலம் லாபம் 1192 /- கிடைத்தது ! ஆனால் கெளிக்கை வர் இலாகா ஏதோ விதிகளைக்காட்டி 1200 /- ரூ அபராதம் பொட்டார்கள் !

ஜெகே யின் படத்தை திரை அரங்கில் வெளியிட்ட பெருமை மிஞ்சியது !

அப்பொது எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் பொருளாலராகா இருந்தவன் தான் இந்த காஸ்யபன்.

Like · Comment · Share