Thursday, February 28, 2013

திரிபுரா தேர்தலும் 

"தீக்கதிர்" நாராயணன் அவர்களும்...!


திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி 60 இடங்களில் 52 இடங்களைப் பெற்று வெற்றி யடைந்துள்ளது !

மாணிக் சர்க்கார் அவர்களை நேரடியாக தெரியாது ! அவரின் வெற்றிச்செய்திக்காக லட்சக்கணக்கான தோழர்கள் காத்திருக்கிறார்கள் ! அவர்களில் முக்கியமானவர் ஒருவருக்கு தொலை பேசிமூலம் வாழ்த்த விரும்பினேன் !
"ஹலோ ! "

"ஜி! மாணிக் சர்க்கார் வெற்றி ! வாழ்த்துக்கள் "என்றார் தோழர் "தீக்கதிர்" நாராயணன் !மதுரை "தைகால் " தெருவில் சின்னஞ்சிறு வீட்டிலிருந்து பேசினார்!

என் நினைவு 1970ம் ஆண்டை நோக்கி ஓடியது !

மாணவர் இயக்கத்தை    புதிப்பித்து செயல் படுத்த முடிவாகியது ! அப்போது தியாகராசர் கல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் நாராயணன்!பரம்பரையான கம்யூனிஸ்டு குடும்பம்! அகில இந்திய அளவில் மாணவர்களை திரட்டி ஒரூ அமைப்பை உருவாக்க முடிவுசெய்யப்பட்டது !

இந்தியா பூராவிலுமிருந்து 40 மாணவர்களை அழைத்து பூர்வாங்கமாக பேச கல்கத்தா வந்தனர் ! அதில் நாராயணனும் ஒருவர் !  இது மே மாதம் நடந்தது 1  
14 பேர் கொண்ட அமைப்புக்குழு உருவானது!

பிமன் பாசு, ஸ்யாமள் நந்தி ,சுபாஷ் சக்ரவர்த்தி ,மற்று ம் ஒருவர் மே.வங்கத்திலிருந்து ! தமிழ் நாட்டிலிருந்து தோழர் நாராயணன்! திரிபுராவிளிருந்து தோழர் மாணிக் சர்க்கார் ஆந்திரா,  உ.பி, என்று அமைப்புக்குழு உருவானது ! இது 1970ம் ஆண்டு ஜூலை மாதம்! 

நாராயணன் சொல்கிறார் "மாணிக் சர்கார் ஒல்லியான உருவம்!கிட்டத்தட்ட நிருபன் சக்ரவர்த்தி மாதிரியான உருவமும் சுபாவமும் உண்டு ! 5 நாள் கூட்டம்! தினம் மாலை நானும் மாணிக் பாபுவும் கல்கத்தா கடை வீதிகளில் ஒரு கைலியை சுற்றிக்கொண்டு நடப்போம் ! அவர் வேற்றிலை போடுவார் ! நான் சிகரெட்டு கூட குடிக்க மாட்டேன்! அவர் நிறைய படிப்பார்! தத்துவார்த்த விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுப்பார்! மக்களொடு தொடர்பு கொள்வ வது பற்றி போதிப்பார்! "

இந்திய மாணவர் சங்கம் 1970 டிசம்பரில் திருவனந்தபுரத்தில்தாகூர் நுற்றாண்டு மண்டபத்தில் உதயமாகியது !அகில இந்திய துணைத்தலைவராக மாணிக் பாபு தேர்ந்தேடுக்கப்பாட்டார் ! 

தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை துணைதலைவராக்க விரும்பினார்கள் ! அப்போது தலைவர் தோழர் எ.பாலசுப்பிரமணியம் என்னை தீக்கதிருக்கு மு
ழு நேர ஊழியர் வேண்டும் ! நீ அகில இந்தியாவுக்குபோகவேண்டாம்! என்றார்

 தமிழ்நாட்டிலிருந்து தோழர். என்.ராம் அவர்களை இந்திய மாணவர் இயக்கத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் !  ,       

தொலைக்காட்சியில் தலைவர்கள் திரிபுரா வெற்றி பற்றி பேசினார்கள்! தோழர் பிருந்தாகாரத் அவர்களிடம்  "மாணிக் சர்காரின் எளிமைஇந்த வெற்றி க்கு காரணம் தானே! ?" என்று நிருபர் கேட்டார் !   
"மணிக் பாபுவிடம் இதனை கேட்காதீர்கள்! அவர் நிரம்ப சங்கடப்படுவார் ! கட்சியும் அதன் கூட்டுத்தலைமையும் தான் இந்த வெற்றிக்கு கரணம் என்று நினைப்பவர் அவர் !"என்றார் பிருந்தா! 





  

Tuesday, February 26, 2013

அவங்களை கெட்டவார்த்தை சொல்லி 

திட்டணும் போல இருக்கு .........!!!


மும்பை தாஜ் ஹோட்டல் லவும்,ரயிலடியிலையும் தீவிர வாதிகள் தாக்கினாங்க ! இது நடந்தது 26-11-2008! கொள்ள பேரு செத்தாங்க !

இப்படி தாக்குதல் நடக்குது நு தெரிஞ்ச நிமிடமே அந்த இடத்துக்குஓடிபோனார் ஹேமந்த் கார்காரே என்ற அதிகாரி. ! அவர்தான் மும்பாய் நகர தீவிர வாத எதிர்ப்பு படையின் தலைவர் ! 

படைவீரரகளை அனுப்பிட்டு பினால நிக்கற வம்சமில்ல கார்காரே! நெஞ்ச நிமித்தி முன்னால போறவரு ! அந்த மோதலில் அவர்வீர மரணம் அடைந்தார் !

அவர் பிள்ளைகுட்டிங்க என்ன பாடுபடும் ! பாவம்! அவர் அவர்கள் பாதுகாப்புக்காக 25 லட்சம் ரூ ஆயுள் காப்பிட்டு கழகத்தில் பாலிஸி எடுத்திருந்தார் ! மும்பை தாதர்  கிளைல உள்ள அதிகாரிகள் அவர் இறந்த ஐந்தாவது நாள் அவர்க்கு சேர வேண்டிய பணத்தை அவர்வீட்டிற்கு கொண்டுபோய்  கொடுத்து தங்கள் இரங்கலையும் சொல்லி விட்டு வந்தாங்க!

2009 ம் ஆண்டு மைய அரசு அவருக்கு அசோகா சக்ர விருது கொடுத்தது !

பா.ஜ.க.,காங்கிரஸ்  அம்புட்டு பயகளுமா சேர்ந்து காப்பிட்டு துறையை வளர்க்க தனியாரை கொண்டுவந்தாங்க இல்லையா!

பாவம் ! கார்காரே தனியார் கம்பெனி ஒன்றின் மூலமும் பாலிஸி எடுத்திருக்கிறார்!

அந்த   கம்பெனி காரன் சொல்லிட்டான் ! " தீவிர வாதிகள்சுட்டுகிட்டுஇருக்கான்!  நீ புத்தி கேட்டு அங்க போனா குண்டு பாயத்தான செய்யும் ! என்ன --துக்கு அங்க போன! அதுக்கு நாங்காசு எதுக்கு கொடுக்கணும்" நு சொல்லி இன்னக்கி வரை கொடுக்கல !!

எனக்கு கெட்டவார்த்தை சொல்லி திட்டணும்போல   இருக்கு !!

யாரை  திட்ட??? 





























  




  

Monday, February 25, 2013

"நீதிபதி கட்ஜூ ஒரு பரதேசி "

ராஜிவ் பிரசாத் ரூடி -பா.ஜ.க தலைவர் சொன்னது 


பா.ஜ.க தலவர்கள் இடையே  வாதம் நடந்து கொண்டிருக்கிறது ! அதுவும் உள்துறை அமைச்சர் வருத்தம்   தெரிவித்ததிலிருந்து இது அதிகமாகிவிட்டது ! சிலர் மன்னிப்பு கேட்டர் விட்டுவிடுவோம் என்கிறார்கள் ! வேறு  சிலர் விடக்கூடாது என்கிறார்கள் !

இதற்கிடையில் ராஜீவ் பிரசாத் ரூடி என்பவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஒரு பரதேசி (vagabond ) என்று கூறியிருக்கிறார் !

உச்ச  நீதிமன்ற வக்கீலான ஜெய்ட்லி இதனை ஏற்கவில்லை ! "இந்த ஆள் இப்படி" குண்டக்க மண்டக்க " பேசித்தான் காரியத்த கெடுக்கிறான்! இவன் 
கிளிச்சது நமக்கு தெரியாதா ?"என்கிறார் 

வாஜ்பாய் ஆட்சியிலிந்த ரூடி விமானத்துறை அமைச்சராக  இருந்தார் ! அப்போது குடும்பத்தோடு, உற்றார் உறவினர் சகிதம் வெளிநாட்டிற்கு சென்றுவந்தார் ! அதற்கான சிலவை அரசுப்பயணத்தில்சேர்த்து "பில்" போட்டுவிட்டார் !

"இவன்லாம் எதுக்குவாயைவிடுறான் "என்கிறார் ஜெய்ட்லி!

(ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா (25-2-13) தலையங்கம் )





Monday, February 18, 2013

1952ல் சரியாகவே ஆரம்பித்தோம்...!


மத்தியிலும் சரி ,மாநிலத்திலும் சரி 1952ம் ஆண்டு சரியாகவே ஆரம்பித்தோம் !  

1952ம்   ஆண்டு முதல்தேர்தல் நடந்தது ! பண்டித  ஜவகர்லால்நேரு பிரதமராக பதவிஏற்றார் ! அதிகார பூர்வமான எதிர்கட்சியாக எந்தகட்சிக்கும் தேவையான எண்ணிக்கையில்  நா டாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை !

கம்யுனிஸ்ட்கட்சிக்கு காங்கிரசுக்கு அடுத்தபடியாக 18 உறுப்பினர்களிருந்தனர். சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்  ! ஜி.வி .மாவ்லங்கர் என்ற காந்தீய வாதி வெற்றி பெற்றார் ! 

இந்தியா தன்னுடைய நாடளுமன்ற நடைமுறையை பிரிட்டனின் மரபை ஒட்டி நடைமுறைப்படுத்த விரும்பியது. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை ஆளும் கட்சி தலைவருமேதிர்கட்சிதலைவரும் இருபுறமும் "கைலாகு" கொடுத்து  அழைத்துவந்து சபாநாயகர் இருக்கையில் அமர்த்த வேண்டும் !

உலகமே பண்டித நேருவுக்கு அடுத்து இந்தியாவின் அடுத்தபடியான   தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள காத்திருந்தது ! 

மாவ்லன்கரின் வலது புறம்    நேருவும் இடது புறம் எ.கே .கோபாலனும்  கைலாகு கொடுத்து அழைத்து வந்தனர் !

ஆம்! இந்திய குடியரசின் முதல் நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக  "நான் என்றும் மக்கள் ஊழியனே" என்று அறிவித்த எ.கே.ஜி 1952லிருந்து 1967வரை 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார் !

அன்றைய மதறாஸ் மாகாணத்திலும் தேர்தல் நடந்தது !

சட்டமன்றத்தில்  காங்கிரஸ் கட்சிதோல்வியத்தழுவியது ! கம்யூனிஸ்களு க்கு 68 இடங்கள்கிடைத்தன! சோசலிஸ்டுகள்,பிரஜா சோசலிஸ்டுகள் ,மற்றும் சிலகட் சிகளோடு சேர்ந்து ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுவாகியது ! பிரகாசம் காரு தலைமையில் அரசு உரூவாக   கவர்னர் பிரகாசாவை சந்திக்க சென்றனர் !   

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ,முதலாளி கோயங்கா, டிடி கிருஷ்ணமாசாரி இதனை எதிர்த்தனர்! காமராஜர் கம்யுனிஸ்டுகள் வந்தால் என்ன ?வரட்டுமே? என்று மௌனம் காத்தார் ! அவருடைய எதிர்ப்பாளர்கள்  
ராஜாஜியை சந்தித்தனர் !அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ராஜாஜியை கவர்னர் அழைத்து முதலமைசராக பதவிப் பிரமாணம் செய்வித்தார் ! அப்போதைய வன்னியர்கட்சியான காமன்வீ ல்,,உழப்பாளர்கட்சிகளை விலைக்கு வாங்கி அமைசரவையை அமைத்தார் ராஜாஜி! 

சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் வந்தது !  தலித்துகளின்தலைவர்  சிவசண்முகம்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்! சட்டமன்ற கட்சி தலைவர் சி சுப்பிரமணியம் ஒர்பக்கமும், எதிர்கட்சியான கம்யூனிஸ்ட்கட்சிதலைவர் நாகி ரெட்டி மற்றொரு பக்கமும்  கைலாகு கொடுத்து அவரை இருக்கையிலமர்த்தினர் !


























































 













Friday, February 15, 2013

தேச பக்தர்கள் .....?

நக்சல்பாரிகள் 

தேச  பக்தர்களே !

ஆம் ....

ஆண் 

நக்சல்பாரிகள் .!!!!

Thursday, February 14, 2013

 

 

 

 

கெளதம் கோஷும்  ரவி குமார்களும்...!!!


1975 ம் ஆண்டு வாக்கில் பங்களுருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் " மா பூமி " என்ற தெலுங்கு படம் மிகச்சிறந்த அரசியல் படத்திற்கான விருதினை பெற்றது !

தெலுங்கானா விவசாயிகள் ஆயுதமேந்தி நடத்திய தெலுங்கானா புரட்சிபற்றிய படமாகும் ! docofiction முறையில் எடுக்கப்பட்ட அந்தப்படம், நேரு,ராஜாஜி, காங்கிரஸ் கட்சி ஆகியவை அந்த விவசாயிகளுக்கு செய்த துரோகத்தைச் சித்தரிக்கும் படம் !

கர்னல்  சௌத்திரி தலைமையில் இந்திய ராணுவம் ஹைதிராபாத்துக்குள் நுழைந்து புரட்சிநடத்திய கம்யுனிஸ்டுகளை நரவேட்டையாடியதை சித்தரித்த படம் !

அதன் இயக்குனர் தான் கெளதம் கோஷ் ! அவரிடம்  ஒரு நேர்காணலின் பொது நிருபர் கேட்டார் " ஐயா! இந்தப்படம்  அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாடுகிறது ! இதனை சென்சாரில் அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர் பார்த்தீர்கள் ? "என்று !      

"இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான தருணத்தை படமாக்க விரும்பினேன் ! விக்டோரியா நூலகத்தில் தேடினேன் ! அப்போது கிடைத்த தகவல்தான் தெலுங்கானா புரட்சி ! அதன் உன்னதமும் உக்கிரமும் குறையாமல் சித்தரிக்க விரும்பினேன்! படமெடுக்க ஆரம்பிக்கும்போதே சமரசம் செய்ய வேண்டுமா? பார்ப்போமே ஒரு கை ! என்று நினைத்தேன்! அதுமட்டுமல்லாமல்  தணிக்கை உறுப்பினர்களின் அறிவு பற்றியும் எனக்கு ஒரு அனுமானம் உண்டு " என்றார் கெளதம் கோஷ் !

 நம் ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டியபடம்"மா பூமி  







காதலர் தினம் முடிந்து விட்டது !!!

 

காதலர் தினம் 

முடிந்து விட்டது !

பெண்ணே !

மயக்கம் தெளி !

 முட்டையிடும் கோழிக்கு 

வலிக்குமா?

தினம் முட்டையிடுகிறதே !

மனிதனுக்காக !

விழித்துக் கொள் !!!



Friday, February 08, 2013

சூரியனெல்லி வழக்கும் 

மாநிலங்கள் அவையும் .....!!!

சூரியனெல்லி என்ற ஊர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது ! அங்குள்ள 16 வயது பெண் ஒருவரை பஸ்  கண்டக்டர் ஒருவர் ஏமாற்றி கடத்தி வேறோரு பெண்ணிடம் விற்று விட்டான் .

அந்தப்பெண் அவளுடைய கூட்டாளியான தர்மராஜன்னோடு சேர்ந்து விபசார விடுதிகளுக்குபெண்களை சப்ளை செய்பவள்.தர்மராஜன்  வக்கீலுக்கு படித்த்வன் .

இது 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது ! அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விபசாரத்தில் ஈடுபத்தியுள்ளனர் ! பெரியமுதலாளிகள் ,அதிகாரிகள், அரசியல் வாதிகள் என்று இதில்சம்மந்தப்பட்டுள்ளனர் ! சுமார் 40 நாட்களுக்குப்பிறகு, 42 பேர் அந்தப்பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் அவளை அனுப்பிவிட்டனர் ! 

அந்தபெரியமனிதர்களில் ஒருவர் தன காங்கிரஸ் தலைவர் பி.ஜே குரியன் . 
 
 இதற்கிடையில் சென்ற டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்துவ மாணவி ஒடும் பஸ்ஸில்கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது .இதனை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின் காரண மாக அரசு பெண்களுக்குஎதிரான குற்றங்களை தடுக்க ஒரு அவசர சாட்டம் கொண்டுவந்துள்ளது .இந்தச்சட்டம் மானிலங்கள் அவையில் விவாதிக்கப்பட இருக்கிறது. 

மாநிலங்கள் அவையின் துணைத்தலைவராக இருப்பவர் பி.ஜே குரியன்.1996ம் ஆண்டு சூரியன்ல்லி பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட அதே குரியன் .

இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 42 பெரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனை எதிர்த்து உச்ச நீதி மனரத்தில்மெல்முறையேடு நடந்தது. உயர்னிதிமன்ற தீர்ப்பு தவறு என்று உச்ச நீதிமன்றம்கூறவிட்டது.     

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட  த்தை விவாதிக்கபி.ஜே குரியன் தலைமையில் கூடாது. அவரை பதவி விலகச்     சொல்லவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கூறுகின்றன ..

அமைசர்கள் குறிப்பாக உலக உத்தமர் அந்தோணீ,வயலார் ரவி ஆகியொர் வாயை முடிக்கொண்டு மௌனம் சாதிக்கின்றனர

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்  சோனியா , மற்றும் ராகுல் காந்திக்கு  கடிதம்  எழுதியிருக்கிறார் !




Tuesday, February 05, 2013

"விஸ்வரூபம்"

படமும் -பாடமும் .....!!!


நாளை மறு நாள் "விஸ்வருபம் " திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது ! நேற்று இரவு  11மணி  வரை இந்திய அமைதிமையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்! "விஸ்வரூபம்" பற்றியும்பேச்சு வந்தது !

நாகபுரியில் நான்குநாட்களாக ஐந்து அரங்குகளில் ஐந்து காட்சிகள் அரங்கு நிறந்த காட்சிகளாக ஒடுகிறது !

":கோடிகணக்கில் சிலவு செய்தாலும் கமலுக்கு இவ்வளவு விளம்பரம் கிடைக்காது "என்றார் டாக்டர் 

"தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும் ,மற்ற நாடுகளிலும் ஓடுகிறதே "-நான் 

"பாவம்! 90 கோடி  சிலவாமே "

"இருக்குமா ?"

"சந்தேகமா?"

"75 லட்ச்ம்கோடி கறுப்புப் பண த்தின் அங்கம் அந்த தொழில் திரைப்படத்துறை " 

"அதனால் "

"இரண்டுலட்சம்  கொடுத்துவிட்டு ஒருலட்சத்திற்கு ரசீது வாங்கும் துறை " 

"பரபரப்பு அதிகம் ! அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆவல் !"

டாக்டர் பெருமூச்சு விட்டார் !" தேவையற்ற சர்ச்சை! தணிக்கைஆன பிறகும்"   

"சட்டம் இருக்கிறதே "

"சட்டம் தனி நபரை மட்டுமே தண்டிக்கும் " 

"அரசியல் சட்டம் இருக்கிறதே "

"அரசியல் சட்டம் தான்  நீதிமன்றத்தை தந்தது ! அரசியல்சட்டம்தான் நிர்வாகத்தையும் , தணிக்கையையும் தந்தது " 

"தணிக்கையை   எதிர்த்தது தனி நபர் அல்ல ! 24 இஸ்லாமிய கூட்டமைபு ! தங்கள் தங்கள் ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள one up manship நடந்தது"

"யூ டுயுபில்" பார்த்தேன் ! கமலின் குடும்பத்தினரை இழிவாக பேசினார்கள் "

"நானும் பார்த்தேன் "என்றார் டாக்டர் 

பெருமூச்சு விட்டார் ! 

"இவர்களை தண்டிக்க முடியாதா ? "நான் கேட்டேன் 

மெதுவாக நிதானமாக சொன்னார் " வழிபாட்டுத்தலத்திற்குள் ஒருவன் புகுந்து பங்கம் செய்தால் தண்டிக்கலாம் ! பாபர் மசூதிக்குள் புகுந்து இடித்தவர்களை என்ன செய்தோம் ??? "



சட்டம் தனி நபர்களைத்தான் தண்டிக்கும் ! இது தான் "விஸ்வரூபம்" படம் தரும் பாடம் !!!!














Sunday, February 03, 2013

நகையா,பாலய்யா .ராகவன்---

(நகைச்சுவைக்காக மட்டுமே )


  பதிவர் ஆர்.வி.எஸ்  நாகையா பற்றி ஒருபதிவினைஇட்டிருந்தார் .தந்தையாக    நடிப்பதற்காக  பிறந்தவர் என்றாலும், டி .எஸ் பாலையாவையும், விஎஸ்.ராகவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் !

1957ம் ஆண்டிலிருந்து வி எஸ் ராகவன் அவர்களின் நாடகங்கள பார்த்துமகிழ்ந்தவன் நான்! திருவல்லிக்கேணி skt மண்டபத்தில்  அவருடைய நாடகங்கள்  நடக்கும் ! .வசனங்களை அவர் உச்சரிக்கும் பாணிக்காக அமெச்சூர் கோஷ்டிகளான என்போன்றவர்கள் அவருடைய நாடகங்களுக்குச்செல்வோம் .    பின்னர்   அவர்  திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ! 

இன்று" மிமிக்ரி " செய்பவர்கள் கூட அவரை மிமிக்ரி செய்து பெயர் வாங்குகிறார்கள் !

நியு ஜெர்சியில்  இருக்கும் பதிவர் நண்பர் "  பாரதசாரி " இது பற்றி எழுதியிருந்தார் "

" தந்தையாக நடிப்பதென்றால ராகவனை மிஞ்ச முடியாது! ராகவனின் தந்தையே அவரை அப்பா என்றுதான்கூப்பிடு வாராம் !   அந்த அளவுக்கு இயல்பாக நடிப்பாராம்! அவருக்கு மிமிக்ரிசெய்பவர்களை கண்டால் கோபம்வருமம்! " மிமிக்ரிசெய்யுங்கப்பா! யார் வேண்டாங்கறா ! என் குரல்ல 
ஏன்  செய்யணும் நு தான்  நான் கேக்கறேன் "என்பாராம் !

" ஒரு முறை தி.நகர்ல அண்ணா (ராகவன் சார்) ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தாராம் ! நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ! முகூர்த்த நேரம் வந்திருச்சு ! "ப்ரோகிதர் நேரமாயிடுச்சு ! பொண்ணோட அப்பாவை கூப்பிடுங்கோ ! என்று சத்தமா சொல்லியிருக்கார் ! பாவம் நம்பாளு (ராகவன் சார்) "இதொ வந்துட்டேன்  "  நு துண்டை இடுப்பில கட்டிண்டு மேடைக்கு ஒடிட்டாராம் "  


இது எப்படி இருக்கு !!!