Tuesday, August 27, 2019





"அஞ்சல் அட்டை "




காஷ்மீரோடு தொடர்பு கொள்ள அஞ்சல்அட்டை ஒன்றுதான் வழி . ஆகா ஷாஹித் அலி என்ற கவிஞர் இதனை ஒரு கவிதையாக எழுதி உள்ளார். 

கர்நாடக இசை கலைஞர் T . M . கிருஷ்ணா  இதனை பாடி காணொளியாக ஏற்றியிருக்கிறார். காணொளியில் பின்னணியாக செயல்படாத காஷ்மீர த்துத்தொலைபேசி நிலையங்களின் "பீப் -பீப் "    ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். 

tmkrishna -reciting agha shahid ali's poetry  என்று google சென்றால் கேட்டு சோகத்தைஅனுபவிக்கலாம்.


இதோ அந்த கவிதை:




காஷ்மீர் என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்குள் அடங்கிவிட்டது !

என்வீடு 4"X 6"தான் ! 

எனக்கு சுத்தம் பிடிக்கும் !

இப்போது நான் அரைஅங்குல இமாலயத்தை என் கையில்பிடித்திருக்கிறேன் !

இது தான் என்வீடு  !

என்று சொல்லிக்கொள்ளலாம் !

நான் வீட்டிற்கு போக முடியாது!

நான் திரும்பும் பொது வண்ணங்கள் ஒளிராது !

ஜீலம் நதியின் தண்ணீர் சுத்தமாக இருக்காது ! 

என் அன்பு மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது !

என் நினைவுகள் த ன் கூர்மையை இழந்துவிட்டன .!

அதற்குப்பதிலாக 

ஓரு புகைப்படத்தின் கழுவப்படாத பிலிம் 

போல கருப்பு வெள்ளையாகவும்,

வெள்ளை கருப்பாகவும் ராட்சத்தனமாக தெரிகிறது !!!

  

நன்றி :svv 






























Sunday, August 25, 2019




நாடக விழா ,

பற்றி, 

நிறைவாக ...!!!




23 இடுகை -தொடர்ச்சியாக நாடகம் பற்றி எழுதி வந்தேன் .

பேராசிரியர் Dr .ரவிக்குமார் (ஸ்ரீராசா ) அவர்கள் பலவருடங்களாக என்னை வற்புறுத்தி வந்தார். இடது சரி நாடக வளர்ச்சி பற்றி எழுதும்படி ! மதுரையில் இருக்கும் பொது எழுதாமல் இருந்து விட்டேன்.இப்பொது முதுமையும் இயலாமையும் சேர்ந்து புலம் பெயர்ந்து வந்த இடத்தில்  எழுத ஆரம்பித்தேன். 

எந்த தரவும் இல்லை . நினைவுகளை வைத்து எழுதினேன். காலவர்த்தமானங்களில் தவறு இருக்கும் வாய்ப்பு அதிகம் தான். கலந்து ஆலோசிக்கக்  கூட தமிழ் தெரிந்தவர்கள் இல்லை.

ஆனாலும் எழுதினேன் .எங்கே முடிப்பது என்று தெரியவில்லை .

1989ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 31ம் தேதி டில்லி அருகில் காசியாபாத்தில் "ஹல்லபோல் "  என்ற நாடகம் நடந்து க்கொண்டிருந்தது. ஜனநாட் யமஞ்ச் என்ற  சப்தர் ஹஷ்மியின் குழுவினர் நடத்தினார்கள். காங்கிரஸ் குண்டர்கள் அந்த குழுவினரை தாக்கினார்கள்> படுகாயமுற்ற சப் த்தர் ஹஷ்மி அடுத்தநாள் இறந்தார்.

இந்தியா புராவிலும் நாடகவியலாளர்கள் துடித்து எழுந் தனர் .தமிழகம் மின்சாரம் பாய்சசியது போல் எழுந்தது

கிராமம் நகரம் என்று பாராமல் தெருவுக்கு தெரு சப்தர் ஹஷ்மி  நாடக குழுக்கள் தேன்றின .நூற்றுக்கணக்கில் குழுக்கள் உருவாகின..

இந்த குழுக்களின் வரலாற்றினை ஆவணப்படுத்தவேண்டும். 

நான் ஒரு skeliton ஐ மட்டுமே செய்துள்ளேன். அதற்கு ரத்தமும் சதையும் நரம்பும் அளித்து அழகுபடுத்தவேண்டியது வருங்கால வரலாற்றாளர்கள் பணியாக விடுகிறன். 

இது ஒரு ஸ்கெலிடன் கூட அல்ல. சில குறிப்புகள் மட்டுமே . 

இந்த தொடரை இதோடு நிறைவு செய்கிறேன்...!!!


வாழ்த்துக்கள் ...!!!




 

 

Friday, August 23, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




Dr .செல்வராஜின் ,

நாடக ,

உலகம்...!!! 




78ம் ஆண்டாக இருக்கலாம். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மதுரை பச்சரிசிக்கார சந்தில் கவி அரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறது.

ஒரு பையன். கருப்பாக - மூ க்கும் முழியுமாக - அப்படியே மடியில்வைத்து கொஞ்சசும் அழகுடன்-மேடையில் ஏறுகிறான். நெருப்புத்துண்டங்களாக வார்த்தைகள்கள் விழுகின்றன.

அருகில் இருந்தவரை பையன் யார் என்று கேட்டேன்.மதுரை  மருத்துவகல் லூரி   மாணவன். மாணவர் இயக்கத்தில் இருக்கிறான். பட்டிவீரன் பட்டி அருகில் ஒருகுக்கிராமம்.பெயர் செல்வராஜ் என்கிறார்.

Dr சேதுராமன், Dr .சீனிவாசன், சக்தி, சத்தியநேசன்,  முருகன் ஆகியோர் வளர்த்த மதுரை மருத்துவ மாணவர் சங்கத்தினபாரம்பரியத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கல்லூரி வளாகத்திற்குள் தி.மு.க; அதிமுக என்று யாரும் அண்டவிடாமல் பார்த்துக் கொண்ட வர்.

அதிமுக பிரமுகர் பழக்கடை பாண்டி " மருத்துவ கல்லூரில  செல்வராஜ் னு ஒருபய இருக்கான்பா ! நம்மளா உள்ள  விட மாட்டேங்கங் பா " என்று போது மேடையில் புலம்பும் அளவுக்கு செல்வராஜின் செயல்பாடுகள் இருந்தது.

என்ன வளர்சசி ! எத்தகைய வளர்சசி !! அந்த பையன் தான் இன்று மதுரையில் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான Dr .செல்வராஜ். 

அதோடு செல்வராஜ் நாடகங்களும் போட்டுக்கொண்டிருந்தார். அவரே எழுதி இயக்குவார் .அதில் "வாடகை வீடு " மிக முக்கியமான நாடகம்.ஏழை எளிய மக்களை கசக்கி பிழியும் சொந்தக்காரகளமுண்டு> 

 புறம் போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாடகைக்கு விடும் சண்டியர் நிறைந்த ஊர்தான் மதுரையும். ஏழை எளிய மக்களை கசக்கி பிழியும் வீட்டு சொந்தக்காரர்களும் உண்டு  இந்த முரணை அற்புதமாக சித்தரிக்கும்நாடகமாகும் அது. 

உணவு,உடை,இருக்க இடம் தரவேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது. இருக்க இடமளிக்கவேண்டும்.என்று அரசி ன் பொறுப்பை சுட்டிக்காட்டும் நாடகம் ஆகும். சுமார் 200 முறை போட்ட நாடகமும் அதுதான்.

செல்வராஜின் மாற்றோரு நாடகம் "கல்கி வந்தார் " என்பதாகும்.பாபர் மசூதி யின் பின்புலத்தில் மகாவிஷ்ணு கல்கி அவதரம் எடுத்து வருவார்> அவரோடு நாரதரும் வருவார் .அயோத்தியில் ராமன் பிறந்தானா ? என்று கேள்வியை எழுப்புவார்.

செல்வராஜ் எழுதிய நாடகங்கள் புத்தகமாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியராகஇருந்து ஒய்வு பெற்ற மனை வியொடு Dr .செல்வராஜ் மதுரையில்வசித்து வருகிறார்..அவருடைய ஒரேமகள் குஜராத் பல்கலையில் ஆராய்சசி மாணவியாகஇருக்கிறார்.

மன அமைதி,நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கொண்டு Dr செல்வராஜ் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன்.




Thursday, August 22, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



ஜீவ பாரதியின் ,

"இங்கே மாப்பிள்ளை கிடக்கும் "

நாடகம்...!!!



அத்வானியின் ர(த்)த யாத்திரை முடிந்து நாடு குழம்பிப்போயிருந்த நேரம். கலை துறையில் செயலாற்றிக்கொண்டிருந்த இடதுசாரி கலைஞர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். 

நாடுமுழுவதும் உள்ள கலைஞர்களை டெல்லிக்கு வரச்செய்து ஆலோசனை நடந்தது. முழுக்க முழுக்க தோழர் சீதாராம் எச்சூரி தலைமையில் கூட்டம் நடந்தது.

'ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்களுக்கு சொந்தமானது. அறிவார்ந்த கருத்துக்கள் நமக்கும் சொந்தமானது தான்> அவற்றை பயன்படுத்தவேண்டும். "சம்பவாமி யுகே யுகே "  என்ற நாடகத்தை துக்ள க் சோ போடுகிறார். நாம் என் அப்படி செய்வதில்லை. புராணங்களை மறுவாசிப்பு செய்யவேண்டும்." என்று அவர் கருத்துக்களை சொன்னார்.

இந்த கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து பண்பாடு செய்லபாட்டாளர்களான கலைஞர்கள் அருணன்,காஸ்யபன், டாக்டர்.செல்வராஜ், பிரளயன்,ஜீவபாரதி ஆகியோர் சென்றிருந்தோம். 

அந்த ஜீவ பாரதி எழுதிய நாடகம் தான் "இங்கே மாப்பிள்ளை கிடைக்கும்." என்ற நாடகம். 

கும்பகோணம் பாத்திரத்தொழிலாளர்கள் இடையே தொழிற்சங்க பணியாற்றிக்கொண்டிருந்தவர் தோழர் ஜீவ பாரதி. 

பஜாரில் உள்ள கடை  அது.முகப்பில் "இங்கே மாப்பிள்ளை கிடை க்கும் " என்ற போர்டு தொங்கும். உள்ளே பல்வேறு ஷோ கேசுகளில் விதம் விதமான மாப்பிள்ளைகள் உயிரோடு அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். ஒரு ஏழை விவசாயி மகளை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வாங்க வருவான்>.ஷோ கேசில் உள்ள மாப்பிளை ஒருவன் பார்த்து அந்த பெண் தேர்ந்த்டுப்பாள் .அழகான டாக்டர் மாப்பிள்ளை . விவசாயி விலை கேட்ப்பான். அவனால் கொடுக்க முடியாது. அவனுடைய தகுதிக்கு கால்  முடமான ஒரு மாப்பிள்ளையை வாங்கிக்கொண்டு மகளை அழைத்துக்கொண்டு செல்வான்.

சிறிது நேரத்தில் விலை  உயர்ந்தகாரில்  செல்வந்தர்  ஒருவர் வருவார். அவரோடு அவருடைய மகளும் வருவார்.ஷோ கேசில் தேடி அலை ந்து ஒரு ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளையை தேர்ந்த்டுப்பாள் . செல்வந்தர் கடைக்காரர் சொன்ன விலைக்கு செக்கை கொடுத்துவிட்டு "சரி ! பாக் பண்ணி கார் டிக்கில போடும் " என்று உத்திரவிடுவார்.நாடகம் முடியும். 

ஷோ கேசில் உள்ளமாப்பிள்ளிகள் தங்கள் தகுதி,விலை ஆகியவற்றை கிளிப்பிள்ளைகள்போலசொல்லிக்கொண்டிருப்பார்கள்.

பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.

 "உஷ் ! சத்தம் போடாதீர்கள்.நீங்களும் உங்கள் மகளுக்காக என்கடக்குதான் வரவேண்டும் என்பார் கடைக்காரர்.

 கடை க்காரராக ஜீவ பாரதி நடிப்பார் . செல்வந்தராக மிடுக்கான நடையும் கம்பிரமும்கலந்து எல்ஐசி ஊழியர் ரகுபதி அவர்கள் நடிப்பார்கள்.

தமிழ்நாடு  முழுவதும் வலம் வந்த நாடகமாகும் இது. பல மொழிகளில் சென்றதும் ஆகும்.

மறக்க முடியாத நாடகங்களில் ஒன்றும் கூட ...!!! 

   


  

Wednesday, August 21, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



கோவில்பட்டி "தர்சனா " குழுவும் ,

"கோணங்கியின்" 

மறுபக்கமும் ...!!!




தமு எ ச வின் செயல் வீரர்களில் கோவில்பட்டி தோழர்களுக்கு சிறப்பான பங்கு  உண்டு.

சிறந்த படிப்பாளிகள் ! அதேசமயம் ஈவு இரக்கமற்ற விமர்சகர்களும் கூட !!

பால் வண்ணம் தலைமையில் ஒரு குழு  செயல்பட்டுவந்தது. Dr .மனோகர்,துரை பாரதி, கிருஷி, தமிழ்ச்செல்வன் ,ராமசுப்பு, மணி , கோணங்கி.உதய சங்கர் ,நாறும்பூ என்று அதில் பலர் உண்டு. 

இவர்கள் அமைத்ததுதான் தர்சனா கலை குழு. பல அற்புதமான நாடகங்களை இவர்கள் படைத்துள்ளார்கள் . அதில் "பச்சோந்தி" என்ற நாடகம் முதன்மையானது.

தெரு நாய் ஒன்று வழிப்போக்கனை கடித்து விடுகிறது.அவன் நகராட்ச்சி அதிகாரியிடம் புகார் அளிக்கிறான். அதிகாரி நாயை பவுண்டில் அடைக்க உத்தரவிடுகிறார். காவல்காரன் "ஐயா ! இது பட்டாளத்து அதிகாரி விட்டு நாய் போல்  தெறிக்கிறது   தெரு  நாயல்ல " என்கிறான்.

அதிகாரி  புகார் கடுத்தவன பார்த்து " ஏன்யா ! நாய் வாயுள்ள கைய கொடுத்த கடிக்காம என்ன செய்யும். இவனை பிடிச்சு சிறையிலே அடையுங்கள் என்று உத்தரவிடுகிறார். 

காவலாளி " ஐயா ! இந்த நாய் பட்டாளத்துக்காரர் விட்டுநாய் போல் தெரியவில்லை ! தெரு நாய் போலும் இல்லை. அவர்விட்டுக்கு அவர் தம்பி வந்திருக்கிறர் .அவர்கள் நாய் போல்தெரிகிறது." என்கிறான் . 

அதிகாரி தன்  உத்திரவை மாற்றுகிறார். 

ஜார் மன்னர் ஆட்ச்சிக்காலத்தில் அதிகாரிகள் எப்படி பச்சொந்திகளாக இருந்தார்கள் என்பதை கிழித்துக்காட்டும் ஆண்டன் செகாவின் நாடகம் இது. இதில் மனோகர் நடித்திருப்பார் .இன்றய குணசித்திரனடிகர் "சார்லி" தான் அன்றைய மனோகர்.

சம்ஸ்கிருத மொழியில் "ஆதிசங்கரர் " என்று பல விருதுகளை பெற்ற படம் வந்தது. அதன் தயாரித்து இயக்கியவர் ஜி .வி .அய்யர்.அந்த படத்தில் அய்யருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் இன்றைய துரை பாரதி.

இவர்களின் மாற்றோரு நாடகம் " ஜப்தி " என்பதாகும். கூட்டுறவு வங்கியில் கடன்வாங்கி செலுத்தமுடியாமல் தவிக்கும் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் நாடகம். ஜப்தி அதிகாரியாக கோணங்கி நடிப்பார்.மிகவும் soft ஆன முகம்கொண்ட கோணங்கி அதிகாரியின் ஆணவத்தோடு கூடிய கோரமுகத்தை காட்டி அருமையாக நடிப்பார். கடன்வாங்கிய விவசாயி ஜப்தி நடவடிக்கையால் கதறி அழும் காட் சியில் விவசாயின் நடிப்பில் பார்வையாளர்களும் அழுவார்கள் .விவசாயியாக தமிழ்ச்செல்வன் நடிப்பார்.

1979ம் ஆண்டு மதுர நாடக விழாவில் இவர்கள் "தேரோட்டிமகன்" நாடகத்திலிருந்து ஒருகாட்ச்சிய மட்டும்நடித்துக்காட்டினார். கோணங்கி, நாறும்பூ ஆகியோர் கிரீடம் தரித்து பஞ்ச பாண்டவர்களாக வந்தனர்.

"ஜப்தி " நாடகத்தின் பொது கோணங்கி  கூட்டுறவுத்துரையில் அதிகாரியாக பணியார்க்கொண்டிருந்தார் .அதுவும் கடன் வசூல் அதிகாரியாக. ஜப்தியால் விவசாயிகள் படும் அவதியை சித்தரிக்கும் நாடகத்தை போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நான் ஜப்தி செய்யும் அதிகாரியாக பணியாற்றுவது அநியாயம் என்று கருதி 

கோணன்ங்கி அந்த பதவியிலிருந்து விலகிவிட்டார்.

கோணங்கியின் மறுபக்கம் இதுதான்.

அவரை வாழ்த்துவோம் ...!!!

 









  

Tuesday, August 20, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



திருப்பூர் நாடக குழுவும் ,

"விழிப்பு" நடராசன் ,

அவர்களும்...!!!




127 நாட்கள் நடந்த போராட்டம். பின்னலாடைநகரமே துடித்து எழுந்தது. திருப்பூர் தொழிலாளர்களின் ஒரே கோரிக்கை "பஞ்சப்படி ".

பஞ்சப்படி எனறால் என்ன வென்றே தெரியாத அந் தொழிலாளர்களுக்கு போதமுட்டிஅவர்களை போராளிகளாக்கும் பணியை செய்தவர் தான்  "விழிப்பு "நடராசன்.

வசதி யுள்ள குடும்பம். textile engineering ல் பட்ட மேற்படிப்பு. ஆயிர க்கணக்கில் ஊதியம் கிடைக்கும் பதவிகளை வேண்டாம் என்று கூறிவிட்டு, பின்னலாடை தொழிலாளர்களின் பாடுகளை களைய வந்தவர்தான் விழிப்பு நடராசன்.    

அவர்களோடு பேசினார் விவாதித்தார் பஞ்சப்படி பற்றி விளக்கினார்.அவர்களே அத கதையாக்கினார்கள்.அந்தக்கதையை நாடகமாக்கினார். திருப்பூர் நாடக குழு பிறந்தது.

மணி க்குமார் ,பாவல்,நாகராஜ் என்று ஒரு ஜமா சேர்ந்தது.போராட்டம் நடந்த  அத்துணை நாட்களும் நாடகம் நடந்தது.தமிழகம் முழுவதும் வியப்பையோடு பார்த்த நிகழ்வாகும் அது.

நாடகக்குழு அதோடு நின்றுவிடவில்லை. தமிழகத்தில் நகராட்ச்சி தேர்தல் வந்தது. திருப்பூர் நகராட்ச்சி தேர்தலில் பிரசாரநாடகம்  நடத்தினார்கள். "முனிசிபாலிட்டி -முனிசிபாலிட்டி "என்ற நாடகத்தை உருவாக்கினார்கள் .அதில் நடிக்க நடிகை -தொழில்முறை நடிகை வேண்டியதிருந்தது. விழிப்பு, மணிக்குமார் , ராசமணி ஆகியோர் மதுரையில் என் வீட்டுக்கு வந்து  ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.மதுரையிலிருந்து இரண்டு நடிகைகளை  ஏற்பாடு செய்தே ன்.ஒருமாதம் திருப்பூரில் பணியாற்ற முடிந்ததுஅவர்களுக்கு,தங்குமிடம்,உணவுத்தவிர சம்பளமும் கொடுத்து நாடகக்குழுவினர் கவனித்து கொண்டனர்.

இந்த குழுவினர் வட்டங்கள் என்ற நாடகத்தினையும் நடத்தினார்கள். அசுவகோஷ் எழுதிய இந்த நாடகம் பரவலாக பேசப்பட்ட ஒன்றாகும்.

திருப்புர் கட்டக் குழுவினரின் "பஞ்சப்படி" நாடகமும், விழிப்பு நடரசனும் அந்த நகரத்தின் முன்னோடிகள் என்றால் அது மிகை அல்ல ....!!!


Sunday, August 18, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"சென்னை நாடக குழுவும் ",

பிரளயனும் .......!!!





த .மு.எ .ச வின் மாநில மாநாடு திருநெல்வேலியில் 90ம் ஆண்டு நடந்தது. அதன் கலை நிகழ்ச்சியில் சென்னை கலைக்குழுவினர் முழுநீள  முன் மேடை நாடகம் போட்டனர். முன்ஷி பிரேம் சந்த எழுதிய "மோதிராம் " என்ற இந்தி  நாடகத்தை பிரளயன் அவர்கள் நெறியாளுகை செய்து மேடை ஏற்றினார்.

ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய கோவிந்த ராஜன்  மோதிரமாக சிறப்பாக நடித்தநாடகம் இது.

சப்தர் ஹஷ்மியின் ஜனநாட்ய மஞ்ச் இந்த நாடகத்தை போட்டுள்ளனர். "வேசி " யாக மாலா ஸ்ரீ  யும் அவரால் மயக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக ஹபீப் தன்விரும் நடிப்பார்கள். சென்னை கலைக்குழுவினர் போட்ட மேடை நாடகம் இது.

பிரளயனின் முன் முயற்சியில் பல பரிசோதனைகளை இந்தக்குழுவினர் செய்துள்ளனர். வீ தி நாடகங்களாக அவர்கள் சென்னை  நகரத்தையே கலக்கி வந்தனர்.தொழிலாளர் போராட்டங்கள்,தேர்தல் கால பிரசாரங்கள் என்று அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

பரிசோதனை முயற்சியாக அவர்கள் இசைநாடகங்களையும் நடத்தினர்.நான்கு கால்களைக்கொண்ட மிருகம் ,முதுகெலும்பை நிமிர்த்தி முன் கால் களை கைகளாக மாற்றும்  இசை நாடகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நடிகர்கள் பாடி ஆடிக்கொண்டே "தாஜ்மகால் " சிற்பமாக மாறும் காட்ச்சி பிரமிப்பை உண்டாக்கும்.

"ஏகைலைவன் பெருவிரல் "  ஒரு அற்புதமான படைப்பாகும். 

பிரளயன் ஷண்முக சுந்தரம் சந்திர சேகரன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ,அகிலஇந்தியாவில் ஏன் உலகம் தழுவிய நாடகவியலாளராக திகழ்கிறார்.

சமீபத்தில் அவர் "மத்தவிலாச  பிரகாசம் " என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் . 7ம் நூற்றாண்டில் மகேந்திர வர்மா பல்லவன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாடகமாகவும் அது. சிவனை ஆராதிப்பவர்களில் காபாலிகர்களும் உண்டு. அவர்கள் மண்டையோட்டை பயன்படுத்துவார்கள்.சைவர்கள் வேறுவகையில் வழிபடுவார்கள்.பல்வேறு சிவப்பக்த்தார்கள் பல்வேறு முறையில் வழிபடுவார்கள்> ஆனாலும் சிவன் ஒருவன்தான்.இதனை பகடியாக உயர்ந்த தளத்தில் சொல்வது தான் இந்தநாடகத்தின் பலமும் பலவீனமும் ஆகும் . 

தான் கொண்ட கருத்துக்களை மக்களுக்கு சொல்ல பிரளயன் நாடகத்தை பயன்படுத்தி கொண்டார்.

நாடகத்துறை பிரளயன் சண்முக சுந்தரம் சந்திர சேகரனை பயன்படுத்திக்கொள்கிறது.

எனக்கு பிரளயனை நிரம்ப பிடிக்கும் ...!!! 

 

Saturday, August 17, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



காஸ்யபனின் ,

"வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் "

நாடகம் ...!!!




தமிழக- கேரள எல்லையோரத்தில் உள்ள களியக்காவிளை தான நாடகம் நடக்கும் இடம் .தென்னை மரத்தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதி.இந்து ,முஸ்லீம்,கிறிஸ்துவ மரமேறிகள் வாழும் அமைதியான இடம் . 

வாரணாசியிலிருந்து திவ்யானநத மடத்திசிசேர்ந்த காவி சட்டைக்காரன் அந்த ஊருக்கு வறுகிறான். அந்த கிராமத்து சிறுவர்களை நல்வழிப்படுத்துகிறான் . அவர்களை தினமும் குளிப்பாட்டி.நல்ல ஆடை களைஉடுத்தி திருநீறு பூசி காலையில் தேவாரம் ,திருவாசகம் என்று கற்றுக்கொடுக்கிறான். கல்வி கற்றுக்கொடுக்கிறான். 

ஊர் பெரியவர்கள் மகிழ்ச்ச்சி அடைக்கிரறார்கள்.அவர்களும் காலை கூட்டங்களில் பங்கு கொள்கிறார்கள் .மூத்தவர் பலவேசம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். அப்பாவியான அவர் அநாதையான  கபூர் என்கிற சிறுவனை வளர்த்தார். இன்று கபூர் பெரியவனாகி மனைவியோடு வாழ்கிறான். 

இஸ்மாயில் காக்கா ஒரு மரமேறி. அந்த கிராமத்தில் உள்ள ஓடைக்கு பெயர் சிக்கந்தர் ஓடை.   அதன் கரையில் ஓலைகுடிசை  போட்டு இஸ்லாமியர்கள் "துவா"நடத்துவார்கள்.

மதுரையிலிருந்து சம்மந்தர் மடத்து சாமியார் வருகிறார்.. அவரும் காவிக்கரனோடு சேர்ந்து பிராத்தனை செய்கிறார்.தேவாரம் திருவாசகம் என்று சொல்லியவர் புதியதாக ஒரு பாட்ட சொல்லிக்கொடுக்கிறர்ர்.

"இந்து என்றே சொல்லிவிடு '
இந்து இன்றே சொல்லிவிடு"
இந்து என்றும் என்றுவிடு " 
என்று பாடுகிறார்கள்.

ஓடைக்கு பெயர் சிக்கந்தர் ஓடை இல்லை எனும் அது கந்தர் ஓடை ஏறும் அதன்கரையில் முருகன் கோவில்கட்டி வாரியார் சுவாமிகளை வைத்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்கிறார். பலவேசம் இதில் உற்சாகமாக பங்கேற்கிறார். கபூர் எச்சரிக்கிறான். இஸ்மாயில் காக்க கொதித்து எழுகிறார்.. 

மரமேறிகள் மத்தியில் குரோதம் உருவாகிறது. இந்த சமயத்தல் தான் கபூர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுத்துவிடுகிறான் .பிழை க்க வழியிலாதவனுக்கு தோட்ட முதலாளியும் நட்ட இது கேட்கிறார்கள்.தோட்டமுதலாளி பாய் மறுக்கிறார். பலவேசம் ஸ்டிரைக் அடிக்க சொல்லுகிறார். இஸ்மாயில் காக்க எதிரக்கிறார். 

"நான் வாங்கிட்தாரெண்டா.விழுந்தவன் முஸ்லீம்.கேக்கபோறவன் முஸ்லீம். தோட்ட முதலாளி முஸ்லீம். கேக்கிற முறைல கேட்ட முதலாளி கொடுப்பர் "என்கிறார்.

"வே !இஸ்மாயில் பாய் ! இந்தாப்பாரும் ! மார்க்கம் மயிறுன்னு எங்கிட்ட வாராதிரும். நன் பிலிப்பு நாட்டாரு,சம்முக அண்ணாசி னு தோட்டமுதலாளிய சங்கத்தத்துல நட்ட ஈடு  கொடுக்கக்கூடாது னு தீர்மானம் போட்டிருக்கோம"ன்ரு மறுத்து விடுகிறார் முதலாளி.  

சோகமாக வந்த இஸ்மாயில் காக்கா மரமெறிகள் ட இத சொல்லுதா ரு..

அப்பம்  கதி?'

ஸ்டிரைக் அடிக்க வேண்டியதுதான்'

ஆனா பலவேசம் சம்மதிக்க மாட்டான்ல"

நீறு ம்தான் அவர் சொன்ன கேக்கமாட்டேறு "

அது தப்பு தாம்ல "

இதைகேட்டுக்கொண்டிருந்த பலவேசம் 

"வே ! இஸ்மாயில் பாய் ! போதும் வே நாம புத்திகெட்டு அலைஞ்ச்சது. கபூருக்கு நல்லது நடக்கணும் இல்லைனா ஒருபாய மரத்துல ஏறப்படாது"


முஷ்டியை உயர்த்துகிறார்.

இஸ்மாயில் பாய் "எவனாவது மீறி ஏறினா .காண்ட .காலை வெட்டுப்புடுவேன் என்று கைகளை மடக்கி முஷ்டியை  உயர்த்துகிறார். 

நாடகம் முடிகிறது.  

இந்தநாடகத்தின் முக்கிய பாத்திரங்கள் இஸ்மாயில் பாயின் 8வயது மகள் பாத்திமா,பலவேசத்தின் 7வயது மகன் பழனி. கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைகளின் பார்வையில் காஸ்யபன் நாடகத்தை கொண்டு சென்றிருப்பார். 

அக்கா இந்து முஸ்லிம்னா என்னக்கா ?
ஒண்ணுமில்லைல ! இந்து தாடிய எடுத்துட்டு மீசையை வைப்பான். முஸ்லீம் மீசையை எடுத்துப்புட்டு தாடியை வப்பான்.
அம்புட்டுதானா என்று சொல்லிவிழுந்து விழுந்து பழனி சிரிக்கிறான். 
எம்ல சிரிக்கே 
இல்லக்கா ஆறுமாசம் அமைப்பட்டான் வரலைனா 
வரலைனா 
ரெண்டு பேருக்கும் தாடியும் வளந்துடும்,மீசையும் வளந்துடும், யாரு இந்து,யாருமுஸ்லீம்னு தெரியாது.

அரங்கமே கைதட்டி சிரிக்கும் .

ஆம்பளை ய்ங்க அடிசுசு க்கிட்டு சாகும்  பொது கபூரின் மனைவியும், பலவேசத்தின்மனைவியும் அன்பு செலுத்தும் காட்ச்சிகளில் கண்ணீர் சிந்தாதவர்கள் கிடையாது.

இந்தநாடகத்தில இரண்டு பாடல்கள் உண்டு. 

"முக்கா  முழம் நெல்லு பயிறு என்ற பச் சை  மால் அவர்களின் பாடலும், "நாங்க  மனுசங்கடா "என்ற இன்குலாப் பாடலும் சரியாக அமைந்தது. இந்தப்பாலகளுக்காகவே  கூட்டம் கட்டி ஏறும். குறிப்பாக ரத யாத்திரையை சித்ததரிக்கும் மறைமுககாடசியாகும் இது.தமிழகம் முழுவதும் சுற்றிவந்தநாடகம்.இது.


இன்று உள்ள இளைஞ்ர்களுக்கு இப்படி ஒரு நாடகத்தை த.மு.எ ச  கலை ஞர்கள் நடத்தினார்கள் அதுவும் ஐம் \பதுக்கும்மேற்பட்ட ஊர்களில் என்பது       ஆச்சரியமாகவே இருக்கும். 

எல்லாப்புகழும் த மு எ ச வுக்கே !!!











Wednesday, August 07, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )


குமரேசன் ---

தொழில் முனைவர் ,

நடிகரான கதை ...!!!




"அசாக்" என்ற குமரேசன் கல்லூரி நாட்களிலேயே  முனைப்பாக செயல்படுபவர். படிக்கும் காலத்திலேயே தி.வி சந்திர சேகரன் போன்ற நன்பர்களளோடு திரிவார். பின் நாளில் சந்திரு "திவேசன் " என்ற புனை பெயரில் செம்மலரில் எழுதிவந்தவர் .ஒரு இடதுசாரி. 


அவரோடு குமரேசனுக்கு பல இடது சரி நன்பர்களுக்கிடைத்தனர்> விவாதங்கள்.வகுப்புகள் ,கூட்டங்கள் என்று அவர் மனதில்  அந்த சிந்தனைக்கள் பதிந்தன. படிப்பு முடிந்ததும் சந்திர சேகரன் ஸ்டேட் வங்கியில்பணியில் சேர்ந்தார் .தொழிற்சங்க ஈடுபாடு அவரை ஒரு அகில இந்திய .தலைமைக்கு அருகில் இட்டுச்  சென்றது. . 


படிப்பு முடிந்ததும்   குமரேசன் தொழில்முனைவரானார்  அப்போதெல்லாம் மதுரையில் நூற்பு ஆலைகள்  அதிகம். பஞ்சை  நூலாக நூற்று "கண்டு"களில்பொதிவார்கள். ஆலைகளுக்கு கண்டு களை சப்பளை  செய்யும் தொழிலை செய்துவந்தார்.மதுரையில் ஐந்து ஆலைகள் ,விருதுநகர்,கோவில்பட்டி , விக்கிரம சிங்க புறம்.என்று தென்தமிழகத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். நல்ல வருமானம். நல்லவசதி.


மதுரையில் எம்.பி ராமசந்திரன் என்று இடதுசாரி தலைவர் இருந்தார்.. தொழிற்சங்க தலைவரும் கூட. அவர் வாலிபர்கள்,மாணவர்கள்  ஆகியோரை வைத்து நாடகங்கள் நடத்துவார்.அப்படிப்பட்ட நாடாக்கக்குழுதான் செம்மலர் கலைக்குழு. எம்.பி ஆரோ டு சேர்ந்து குமரேசன் நாடகத்துறையில்செயல்பட்டார். மதன் என்பவர் இயக்குனராகவும், ரகமத்,ஜீவா போனறவர்களா நடிகர்களாகவும் அந்த முழூ மதுரைநகரையே கலக்கிவந்தது .தினம் வீதி  நாடகங்கள் ,இவர்கள் நாடகம் போடாத இரவே இல்லை என்றநிலை ஏற்பட்டது.


இதனால் குமரேசனின் தொழில் பாதிக்கப்பட்டது..தொழிலா? இயக்கமா? என்ற கேள்வி எழுந்த பொது குமரேசன் கட்சியினமுழுநேர ஊழியராக சேர்ந்தார். தீக்கதிர் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவில் இணைந்து முழுநேர ஊழியரானர் .

இந்த சமயத்தில் தான த.மு.எ சங்கம் சென்னையில் மூன்றாவது நாடகவிழாவை நடத்த முடிவுசெய்தது. பெரியவர் கே.முத்தையா அவர்கள் மதுரை  பீப்பிள்ஸ் தியேட்டர் அதில் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். "காஸ்யபன் " அப்போது எழுதிய நாடகம் தான "வண்ணங்கள் வேற்றுமை பட்டால்" என்ற நாடகமாகும்'


தெற்கத்திய தென்னைமர தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய கதை  அமைப்பு.அதிலப்துல்கபூர் என்ற கதாயகன் பாத்திரத்தில் குமரேசன் னைத்தாரா. முன்வழுக்கையும் நாராய்த்த தாடியும் கொண்ட இன்றைய குமரேசன் அல்ல. அன்று இளமையும் துடிப்பும் கொண்ட குமரேசன் அவர்.


அரங்கேறிய நாடகத்தை பார்வையாளர்கள் மின்சாரம் பாய்சசியது போல் கரகோஷத்தோடு வரவேற்றனர் .நாடக முடிந்ததும்,கோமல் சுவாமிநாதன் ஓடிவந்து காஸ்யபனை கட்டி தழுவி "bold very  bold என்னால் கூட முடியாது" 

என்று பாராட்டினார்.


இந்த நாடகம் தமிழகத்தில் போடாத கிராமமே இல்லை என்று ஆகியது. குமரேசன் தமிழகம் அறிந்த நாடக நடிகரானார்.


அப்போது சென்னையில் இருந்த தீக்கதிர்ப்பதிப்பினை பலப்படுத்த கட்ச்சி முடிவெடுத்தது.குமரேசனை  கட்ச்சி சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தது.மனைவி,இரண்டு குழந்தைகளோடு குமரேசன் சென்னை வந்தார்.. சென்னையில் வாடகை வீடு , குடும்பச்செலவு என்று சொற்ப அலவன்ஸில் அவர் எப்படி வாழ்ந்தாரா என்பதை மார்க்ஸ் தான அறிவார்.


ஆனால் பத்திரிகை  யில் சிறப்பாக பணியாற்றினார் .குறிப்பாக பண்பாட்டுத்துறையிலும்,நாடக திரைப்பட விமரிசனங்கள்.இலக்கிய நிகழ்சசிகள் என்று பத்திரிகையையே பரவலாக்கினார். இதனை அங்கிகரித்த கடசி குமரேசனை சென்னை பதிப்பின் பொறுப்பாளராக்கியது.


முதுமையின் காரணமாக ஒய்வினை  ஏற்ற குமரேசன் தொலைக்காட்ச்சிகளில் கட்ச்சியின்கருத்தாளராக செயல்பட்டு வருகிறார்.


குமரேசன் அவர்கள்,மனஅமைதி,நல்ல ஆரோக்கியத்தொடு  நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியில் ஈடுபட்ட வாழ்த்துகிறேன். !!!      

  

Saturday, August 03, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



" இ.கே .நயனாரு"ம் ,

"நினைவுகள் அழிவதில்லை " 

நாடகமும் ...!



கேரளத்தின் வட மேற்கில் உள்ளது காசர்கோடு வட்டம். .சுதந்திரத்திற்கு முன் அந்த பகுதி மதராஸ் மாகாணத்தோடு இணைந்திருந்தது.விவசாயிகள் குரூரமாக சுரண்டப்பட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஐந்து இளைஞர்கள் புறப்பட்டனர். இந்த அவலம் நீங்க  வேண்டுமானால்  பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராட வேண்டும் .என்று பிரசாரம் செய்தனர். 

பிரிட்டிஷ்  போலீஸ் அடக்கு முறையை ஏவி விட்டது . ஆயுதத்தோடு விவசாயிகள் நடத்தியதாக்குதலுக்கு இளைஞர்கள் தலைமை தாங்கினார்.பிரிட்டிஷ்  போலீஸ் தப்பி ஓடியது> அதில் ஒரு போலீஸ் காரன் ஆற்றுப்   பாலத்தில்  ஓடிக்கொண்டிருந்தவன் மக்களிடமிருந்து தப்பிக்க ஆற்றில்குதித்தான்.ஆற்றில் வெள்ளம் அதிகமிருந்ததால் இறந்தான்.

போலீஸ் இறந்த தற்கு காரணம் அந்த இளைஞ்சர்கள்  தான் என்று போலீஸ் அவர்களை தேடியது. மடதில் அப்பு,அபுபக்கர், சிறுகண்டன்,குஞ்சாம்பு , ஆகிய நால்வர் பிடிபட்டனர்.ஐந்தாவது இளஞன் கடைசிவரை பிரிட்டிஷ் போலீசிடம் பிடிபடவில்லை. 

வழக்கு நடந்தது.நான்கு இளஞர்களுக்கும் துக்கு தணடனை விதிக்கப்பட்டது.மதராஸ் உயர்நீதிமன் றம்  அதனை உறுதி செய்தது.

அந்த ளாவர் தான் "கையூர்தியாகிகள் " என்று கேரளா சுதந்திர போர் வரலாற்றில் இடம் பெற்றனர்.

கையூர் கர்நாடக கேரளா எல்லையில் உள்ளது. கர்நாடகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான நிரஞ்சனா இதனை  "சிராஸ்மரனே"என்ற அற்பு தமான நாவலாக எழுதினர்.கேரளத்து வீர வரலாறு முதன்முதலாககன்னட இலக்கியத்தின் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அந்த நாவல் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்திராகாந்தி  அம்மையார் அவசர நிலையை அறிவித்த போது  தமிழக மார்க்சிஸ்ட் கடைசி தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.பரமேஸ்வரன் தலைமறைவாக இருந்தார்.அந்த சமயத்தில் அவர் அந்த நாவலை தமிழில் மொழி   பெயர்த்தார். "நினைவுகள் ஆழிவதில்லை "என்ற அற்புதமான இலக்கியம் தமிழுக்கு  கிடைத்தது  .  

வேலூரில் இருந்த அரசு ஊழியர்கள், வங்கி,இன்சூரன்ஸ் ஊழியர் ஆகியோர் ஒரு நாடகக்குழுவை அமைத்தனர்." நினைவுகள் அழிவதில்லை " என்ற நாவலை நாடகமாக்கினர்.தஞ்சை நாடக விழாவில் அதனை அரங்கேற்றினர்.


அந்த கையூர் தியாகிகள் தூக்கு மரம் ஏறும் காட்ச்சியை  குறிப்பாக அவர்கள் உடல் மறையும்போது "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று அவர்கள் முழக்கமிட்ட காட்சியை பார்வையாளர்களும் சேர்ந்து கோஷமிட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. 

இயக்கத்தை விட்டு வெளியேறினாலும் இந்த நாடகத்தில் மாஸ்டராக நடித்த அரசு ஊழியர் சங்கத்தலைவர் கங்காதரன் மிகசிறப்பாக நடித்தார்என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நான்கு இளைஞர்களை பிடித்த பிரிட்டிஷ் போலிஸாரால்  அந்த ஐந்தாவது இளைஞனை பிடிக்க முடியவில்லை. ஆறு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவன் சுதந்திரம் பெற்றபிறகு அவன் மீது போடப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. 

அந்த வீரமிக்க இளைஞன்தான் மூன்றுமுறை கேரளத்தின்முதல் அமைச்சராக இருந்த 

இ.கே . நாயனார் என்ற தீரன் !!! 

 

Friday, August 02, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"தஞ்சை 

விழாவின்

 வெற்றி..."

தமுஎச மாநிலம் தழுவிய அளவில் இரண்டாவது நாடக விழா  இரண்டு  வகையில்வெற்றி கரமாக நடந்தது .

முழு நீள  நாடகமாக ஜெயந்தனின் "நினைக்கப்படும் " நாடகத்தை பீப்பிள்ஸ் தியேட்டர் காரர்கள்  அரங்கேற்றியது ஒன்று.

நான்கு அங்கமாக விரியுமிந்த நாடகத்தில் ஒவ்வொரு அங்கமும் ஒரு கதையாகும்.

முதல் அங்கத்தில் ஒருகுடும்ப தலைவரின் பாடுகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். லஞ்சம் வாங்கி அவர் வீட்டிற்கு பணத்தை கொண்டுவந்து கொட்டுவார். வீட்டில் உள்ளவர்களை அதனை ருசித்து அனுபவிப்பார்கள் . ஓரூ கட்டத்தில் ஒரு இளைஞன் கொடுத்த புகாரின் பேரில் அவர் மாட்டிக்கொள்வார் . குடும்பத்தினர் அவரை வெறுப்பார்கள் .பிழைக்கத்தெரியாதமனுஷன்  என்று வசை பாடுவார்கள். செய்வதறியாது திகை \த்த தலைவர் புகார் கொடுத்த     இளைஞரிடம்புகாரை வாபஸ் வாங்க சொல்லி கெஞ்சுவார். இறுதியில் அந்த இளைஞன் காலில் விழுந்துவிடுவார். அதிர்ந்து போன அந்த இளைஞன் விம்மி அழுவான் .நாடகம் முடிகிறது.

குடும்பத்தலைவராக துரைராஜும் , இளைஞனாக எல்.ஐ சி சூரிய போஸும் அற்புதமாக நடிப்பார்கள்.இறுதிக்கட்ச்சியில் அவர்கள் மேடையில் "உறைநிலை"யில்  நிற்க பார்வையாளர்கள் அதிர்ந்து நிற்பார்கள்.

இரண்டாவது அங்கம்,தமிழக கேரள எல்லையோர கிராமத்தில்நடப்பதாகும் .பிழைக்க வழியில்லாத கிராமத்து மக்கள். அந்தக்கிராமத்து பெண்கள் ரேஷன் அரிசியை வாங்கி கேரள த்தில் விற்று வயிறு வளர்க்கும் நிலை .காவலர்களும்,வாட்சர்களும் அவர்களை பிடித்து கடத்தல் காரர்கள்,பதுக்கல் காரர்கள் என்று வதைப்பார்கள். அவர்களுக்கு லஞ்ச்ம கொடுத்தல் குடும்பவருமானம் போய்விடும் என்பதால் அந்த பெண்கள் அவர்களுக்கு "சுகம்" கொடுப்பார்கள் .

மூன்றாவது அங்கம் ஒரு பத்திரிகை அதிபர் பற்றியது எப்படி எழுத்தாளர்களை சுரண்டப்படுகிறார்களா என்பது சித்தரிக்கும் காட்ச்சியாகும். பதிப்பு தொழில் எப்படி printing  industry  ஆகிவிட்டது என்பதை சொல்லும்.

நங்கவது அங்கம் ஒரு வெற்றிகரமான திரைப்பட நடிகை பற்றியதாகு ம்.மிகவும் சிறந்த நடிகையான அவர் படங்களில் நடிக்க போட்ட ஒப்பந்தங்களில் horizantal  agrement  ம் உண்டு என்ற அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.

இந்த நாடகத்தை ராஜ குண சேகர் இயக்கி இருந்தார். விழாவில் வெகுவாக பாராட்டப்பட்ட நாடகம் இது.

முத்தாய்ப்பாக தஞ்சையில் போட்ட நாடகம் தான் 

"நினைவுகள் அழிவதில்லை " காவியமாகும் ...!!! 





  

 


Thursday, August 01, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




"ஜெயந்தன் " எழுதிய ,

"நினைக்கப்படும் "

நாடகம்...!!!




மதுரை "பீப்பிள்ஸ் தியேட்டர் "குழுவினர் தஞ்சையில் நடந்த இரண்டாவது நாடக விழாவில் ஜெயந்தனின் "நினைக்கப்படும்" நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்தவிழாவை மணியரசன் அவர்கள் முன்னின்றுநடத்தினார்கள்.

அப்படியானால் முதல்நாடக விழா எப்போதுநடந்தது என்று கேள்வி எழலாம். 1977ம் ஆண்டு த.மு.ஏ சங்கத்தின் செயற்குழு மாவட்டம் தோறும்  நாடகுழுவினைஉருவாக்கவேண்டும்.நாடகவடிவத்தையும்பயன்படுத்தி சங்க கலைஞர்கள் உற்சாக படுத்த  வேண்டும் என்று முடிவு செய்தது.

மதுரை. கோவில்பட்டி, திருப்பூர் சென்னை என்று பல குழுக்கள் இதில் பங்கு  பெற்றன. ஒவ்வொரு குழு பற்றியும் தனியாக எழுத இருக்கிறேன்.

ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். நாடகம்,திரைப்படம் ஆகிய இரண்டும் எப்படி வடிவத்தில் வித்தியாசப்படுகிறது என்பது பற்றி காஸ்யபன் கருத்தரங்கத்தில் பேசினார்.இறுதி நாளன்று சௌராஷ்டிரா பள்ளியில் பீப்பிள்ஸ் தியே ட்டர்சாரின் நாடகம் நடந்தது.  

தஞ்சை  விழாவின் பொது பல மாவட்டங்களிலிருந்து குழுக்கள் தங்கள் படைப்புகளை அரங்கேற்றின . பற ம்பை செல்வன் ஓர் Mime நாடகத்தைக்கொண்டு வந்தார். இதில் ஜான்சன்,பறம்பை,கந்தர்வன் ஆகியோர் நடித்தனர்.

கோவில்பட்டி "தர்சனா" குழுவினர் தங்கள் படை ப்பை முன்வத்தனர். கொண ங்கி,ராமசுப்பு, உதய சங்கர்,  தமிழ்ச்செல்வன், நாறும் பு நாதன் என்று பலர் பங்கு பெற்றனர்> மகா பாதத்திலிருந்து ஒரு காட்ச்சிய போட்டதாக நினைவு.

தணிகைச்செல்வன் செங்கை தோழர்களை பயன்படுத்தி ஒரு புராண மறுவாசிப்பு நாடகத்தை நடத்தினார்.

சகஸ்ரநாமம், பிரசன்னா,ராமானுஜம் ஆகியோர் பங்கு அளித்தனர்.