Tuesday, May 26, 2015

அந்த போர் வீரன் 

INSURENCE WORKER

பத்திரிகையை 

முத்தமிட்டான்.....!!!

எங்கள் ஆயுள் காப்பிட்டுக் கழக மதுரைகோட்ட சங்கத்தின் செயலாளராக பலமுறை இருந்திருக்கிறார்! தலைவராகவும் இருந்திருக்கிறார் ! ஆங்கிலத்தில் நிரம்ப புலமை உள்ளவர் ! பள்ளிப்படிப்பை அன்றய "சிலோனில்" முடித்தவர் ! பின்னர் M.A பட்டம்  பெற்றார் !

மிகச்சிறந்த மனிதாபிமானி !

சங்க கூட்டம் ஒன்றீர்க்காக நானும் அவரும்  நகர பேருந்தில் வந்தோம் ! மதுரை வெளிவீதியில் உள்ள கற்பகம் ஓட்டலிம் காபி குடித்தோம் ! "நீங்கள் போய்க்கொண்டு இருங்கள்1 ரயிலடியில் ஒரு நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்" என்றார் ! 

ரயிலடியில் ஒரு சிறு பேப்பர் கவர் கிடைத்திருக்கிறது ! அதற்குள் புதன் கிழமை அதிகாலை ரயிலுக்கான டிக்கெட் உள்ளது ! ரிசர்வெஷன் செய்யப்பட்ட அட்டை டிக்கட் ! அதன் பின்னால் 5 பெருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கண்டிருந்தது ! மதுரையிலிருந்து பாட்டியாலா செல்லும் பயண சீட்டூ 

நண்பர் யோசித்தார் ! நேரடியாக ரயிலடியில் உள்ள ரிசர்வேஷன் அலுவலக அறைக்கு சென்றார் ! அங்குள்ள அதிகாரிகள்  மூலம் பயணியின் முகவரியைபெற்றார் !

முகவரியில் மேலூர் அருகே உள்ள ஒரு சிறு கிறாமம் ! தகவல் அனுப்பி அவர் வந்து டிக்கட்டை பெற்றுக்கொண்டு பயணிப்பது முடியாத காரியம் ! நேரடியாக அருகில் உள்ள ஆர்.எம்.ஏஸ் அலுவலகம் சென்று ஒரு கார்டுவாங்கினார் !

"ஐயா 1 நீங்கள் புதன் காலை பயணம் செய்யவேண்டிய டிக்கட் என்னிடம் உள்ளது ! நீங்கள் எந்த கவலையும் படாமல் மதுரை ரயிலடிக்கு வாருங்கள் ! நான் டிக்கட்டோடு நீங்கள் ஏறவேண்டியகோச்சின் அருகே நின்று கொண்டிருப்பேன்! பயனத்தை தொடருங்கள் ! வாழ்த்துக்கள் ! என்று

 எழுதி தபாலில் செர்த்து விட்டார் !

அதே போல  புதங்கிழமை அதிகாலை எழுந்து ரயிலடிக்கு சென்று காத்திருந்தார் ! அந்தப்பயணி அவருடைய மனைவி ,தாயார்,இரண்டு குழந்தைகளுடன் வந்து செர்ந்தார் ! பாடியாலாவில் ராணுவத்தில் பணியாற்றுகிறார் ! 

அவரும் அடையாளம் கண்டு டிக்கட்டை பெற்று நெக்குருக அணைத்துக் கொண்டார் ! "நன்றி,நன்றி" என்ற அவருடைய வார்த்தைக்கு எங்கள் தலைவர் " இந்த தேசமே உங்களுக்கு கடமை பட்டிருக்கும் போது எனக்கு எதற்கையா நன்றி "என்றார்! 

அடையாளமாக  என்தலைவர் கையில் வத்திருந்த   "insurance worker  " அந்த போர்வீரன் வாங்கிகண்ணீல் ஒத்திக் கொண்டு முத்தமிட்டான் !

ஓய்வு பெற்றபின், சென்னையில் பத்தாண்டுகளூக்கும் மெலாக insurance worker அலுவலகத்தி அந்த பத்திரிகையை  வளர்த்து வந்த  K. David தன் அந்த தலைவர் !

Sunday, May 24, 2015

எல்.ஐ.சி சங்கமும்,

சமையல் எரிவாயுவும் ...!!!

1972ம் ஆண்டாக இருக்கலாம் ! மதுரை மாவட்ட கூட்டுறவுபண்டகசாலை மேற்கு வெளிவீதி- வடக்கு வெளிவீதி சந்திப்ப்பில் ,பெரிய பொஸ்ட்டாஈசுக்கு எதிரில் இருந்த அழகப்பன் ஹாலில் இருந்தது ! 

முதன் முதலாக மின் பற்றாக்குறை வந்து பல தொழில்கள் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டதும் அப்போது தான் !  ஏரும் விலைவாசியை கட்டுப்படுத்த பண்டக சாலை மூலமாக நியாயமான விலையில்  அத்தியாவசிய பொருட்கள வழங்க ஆரம்பித்தார்கள் !

எல்.ஐ.சி ஊழியர்களிடையே  சினி தட்டுப்படு பெரிய பிரச்சினையாக எழுந்தது ! சங்கதலைமை தலையிட்டு செயல்வீரர்கள்   மூலம்  எதிர்கொள்ள முடிவு செய்தது ! 

மாவட்ட கூட்டுற்வு இயக்குனர் மதுரை வந்த போது அவரை சந்தித்தனர் !  மாதம் இரண்டு மூடை சீனி நியாய்விலையில்கொடுக்கப்படும் ! அதனை ஊழியர்கள் பங்கு வைத்து எடுத்துக்கொள்ளலாம என்று முடிவாகியது ! 

அதே போல் மண் எண்ணை யும் வினியோகமானது !  தொழிற்சங்கம் இதனை செய்வது சரியா

 என்ற கேள்வி எழுப்பப்பட்டு  விவாதிக்கப்பட்டது ! 

உழியர்களின் நலன் தான் முக்கியம் ! அவர்களின் அன்றாட பிர்ச்சினைகளுக்கும் நிவாரணம் பெற்று தரவேண்டியது சங்கத்தின் கடமைகளீல் ஒன்றூ ! ஆகவே சரிதான் !

அதுமட்டுமல்லாமல் இந்த நடவ்டிக்கை சங்க உருப்பினர்களிங்குடுமப் உறுப்பினர்களீன் ஏகோபித்த ஆதரவையும் சங்கத்தின் பால்திருப்பியதும் முக்கியமானதாகும் !

இந்த சமயத்தில் தான் செய்தி ஒன்ரு டெல்லியிலிருந்து வந்தது ! வரும் பட்ஜெட்டில் சமயலெரிவாயுவிற்கான "சிலிண்டர்' வைப்பு பனம் 30/- ரூ லிருந்து 50 /-ரூ யாக்கப்பொகிறார்கள் என்று அறிவிக்கப்படும் என்பது தான் அது ! பிப்ரவ்ரி மாதம்20 தேதி செய்தி வந்தது ! அப்போது எரிவாயு வினியோகம் கூட்டுறவு பண்டக சலையுடன் இருந்தது ! 

செயல் வீரர்கள் மீண்டும் இயக்குனரை சந்தித்தனர் ! ஊழியர்கள் எரிவாயு வேண்டும் என்று வெகுவாக ஆசைப்பட்டனர் ! எரிவாயு அடுப்பு, குக்கர், சிலீண்டர், ஸ்டாண்டு என்று எல்லாவற்றுக்கும்  பணம் வேண்டுமே ! வங்கியில் கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது ! 

நானும் அப்பொதுதான் வங்கினேன் ! குஜரத்தில் செய்த "லக்ஷ்மி "அடுப்பு, குக்கர், ஸ்டாண்டு, ரப்பர் கனெக்டர், என்று வாங்கினேன் ! சிலிண்டர் வைப்பு பணம் 30 /-ரூ செர்த்துமொத்தம் 207 /-ரூ ஆனது 

காஸ் விலை 12.50 காசு !

கிட்டத்தட்ட 40 வருடம் ஆகிவிட்டது !  

திமுக,அதிமுக ஆட்சி மாறி மாறி வந்தது !

மத்தியில் காங்கிரஸ் பாஜக வந்தது ! 

சிலிண்டர் வப்பு பணம் 1800/-ரூகட்டியுள்ளேன்

இந்தமாதம் எரிவாயு வாங்கினேன் ! 

ஆதார் அட்டை,வங்கி கணக்கு எல்லாக்க்கழுதையும் கொடுத்து விட்டேன் !

சிலிண்டர் கொண்டு வந்த பையன் பில்லை கொடுத்தான் !

706 /-ரூ என்று இருந்தது !

கொடுத்தேன் !!!

Friday, May 22, 2015

"நேர்மையான அரசியல்வாதிகளும் ,

நேர்மையான அதிகாரிகளும் ,

இந்தியாவில் இருக்கத்தான் செய்தார்கள்......."



நாளை செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கப் போகிறார் ! ஐந்தாவது முறையாக பதவி ஏற்கிறார் ! 

இதனை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது! உச்சநீதி மன்றமல்ல-சர்வெத அளவில் விசாரணை வைத்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை ! சட்டத்தில்  ஓட்டை ! விசாரணையில் ஒட்டை ! விசாரித்த் அதிகாரிகளே எங்கு ஓட்டை இருக்கிறது என்று சொல்லும் வாய்ப்பும் உள்ளது ! விசாரித்த அரசியல் தலைமை வழக்கை விட அதனால் ஏற்படும் அரசியல் லாபத்தைகணக்கில் கொண்டதும்  காரணம் !

எல்லாவற்றையும் விட செல்வி ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கைப்ற்றிய வெகுஜன நம்பிக்கை ! காமராஜருக்கு குடும்பமில்லை ! பணம் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை ! தனி நபர் !

செல்விஜெயலலிதாவும் தனி நபர் ! யாருக்காக அவர் சொத்து சேர்க்க வேண்டும் !  அவரை சுற்றி இருப்பவர்கள் சம்பாதித்தால் அவர் எப்படி பொறுப்பாகமுடியும் என்ற  பொதுப்புத்தி அவரை எப்பொதுமே காப்பாற்றும் சக்தியாக மக்களீடையே பதிந்துள்ள ஒன்று !   


இந்திய வரலாற்றில் மோசடி செய்த முதலாளி ஒருவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது ஓரே ஒருமுறதான் நடந்தது !


ராம்கிருஷ்ண டால்மியா இன்சூரன்ஸ் துறையில் செய்த மோசடியில் சிக்கினார் ! இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பியவர் ஃபெரோஜ் காந்தி ! அப்பொது நிதி அமைச்சராக இருந்தவர் சி,டி தேஷ்முக் ! இருவருமே அப்பழுககற்ற நேர்மையான அரசியல் வாதிகள் ! 


இன்சூரன் கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றிய ராஜகோபாலன்,காமத் ,போன்ற அதிகாரிகளின் நேர்மை !

இவர்களீன் நேர்மையின் மிது நம்பிக்கை வைத்து அவர்கள் முடிவுகளீல் தலயிடாத பிரதமர்  எல்லமாக செர்ந்து டால்மியாவை சிறையில் தள்ளீயது !


அன்றய பிரதமருக்கே  தேரியாமல் இன்சூரன்ஸ் துறையை தேசீயமயமாக்கியதும்,அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டதும் ஒரு ஹாலிவுட் thriller படம்போன்ற நிகழ்வாகும் !


அந்த நேர்மையும், நியாமும் இன்னமும் மிச்சமிருக்கத்தான் செய்கிறது ! 


நாம் அதனை இளையதலைமுறைக்கு எடுத்து சொல்வோம் ! 


அவர்கள் சாதித்து விடுவார்கள் !!!


Monday, May 18, 2015

(இது ஒரு மீள்பதிவு )



2012


சுப்பையா என்ற பெயர் எனக்கு பிடிக்கும்.............





                                           சுப்பையா என்ற பெயர் எனக்குப் பிடிக்கும்..தமிகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் அதிகம் உண்டு.. முருகனின் பெயர்களில் ஒன்று சுப்பிரமணியன். செல்லமாக சுப்பிரமணியனை சுப்பை யா   என்று அழைப்பார்கள்.."அப்பனைப் பாடும் வாயால் , ஆண்டி சுப்பனை பாடுவேனோ "  என்று சிவகவி படத்தில்  தியாகராஜா பாகவதர் பாடியது நினைவுக்கு வரலாம்..நெல்லை மாவட்டத்தில் தெருவுக்கு நான்கு சுப்பையா இருப்பார்கள்..


                                 எனக்கு இந்தப் பெயர் பிடித்ததற்கு தனி காரணங்கள் உண்டு..எனக்கு  முத்த சகோதரை "சுப்பையா " என்றுதான் அழைப்போம்..பாசத்தோடு அழைக்கும் பொது "ஸ்சுப்பையா" என்பேன் கோபம்வந்தால் "சப்பையா" என்பேன்..நாங்கள் பெரியவர்களாகி குடும்பஸ்தர்களான பின்  எங்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே இல்லை.எங்கள் தாயார் எங்களை வளர்த்த விதம் அப்படி!!

.அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.. சுப்பையா எனும் பொது என் நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது..



                                        எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்ததற்குக் காரணம் உண்டு.."காடெல்லாம் விறகாகிப் போச்சே " என்ற அந்த எட்டைய புறத்தானை அவன் வீட்டில் தாய்,,தந்தை,,உற்றார் உறவினர் 

நண்பர்கள் சுப்பையா என்று தான் அழைப்பார்களாம் "கப்பலோட்டிய தமிழன்" என்ற படத்தில் ஒரு காட்சிவரும் பாரதியின் படத்தின் முன் வ..உ..சி நிற்பார்..பாரதிமறைந்த செய்திகேட்டு "பாரதி  எப்பா!!சுப்பையா  "என்று 

கதறும் காட்சி சித்தரிக்கப் பட்டிருக்கும்..அந்த மஹா கவிஞன் பெயரும் 

சுப்பையா தான் என்பதால் பிடிக்கும் 



                                              எல்லாவற்றிர்க்கும் மேல் ஒரு காரணம் உண்டு ..1946ம ஆண்டு இந்தியாசுதந்திரம் வாங்குவதற்கு ஓராண்டிற்கு 

முன்பே தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி  போராடி விடுதலை 

பெற்றார்கள்..முன்று ஆண்டுகள் செங்கொடியின் கீழ் அவர்கள் 1949 வரைஆண்டார்கள்..பல தலைவர்கள் தலைமைவகித்து அவர்களை வழி

நடத்தினார்கள் அவர்களில் ஒருவர் சுந்தரய்யா ஆவார்.. பிரிட்டிஷ் இந்தியாவான மதராஸ்  மாகாணத்திலிருந்து துப்பாக்கி ,துப்பகிக் கான ரவை , தளவாடங்கள்,மற்றும் புரட்சிவிரர்களுக்கு உணவு என்று சகலத்தையும் வரவழைத்து

 கொடுக்கும் பொறுப்பு  சுந்தரய்யவிற்கு  இருந்ததது .தலை மறைவாக இருந்து கொண்டு அதனை செய்தார்.. அப்போது அவாது தலைமறைவு 

வாழ்க்கையின் பொது அவரது பெயர் "சுப்பையா"தான் .


என் அண்ணன் பெயர் சுப்பையா .என் நெஞ்சு நெகிழ்கிறது..

என் மகாகவி பெயர் சுப்பையா..என்மனம் மகிழ்கிறது

எங்கள் சுந்தரய்யாவின் பெயர் சுப்பையா .என் மனம் பரவசமடைகிறது    ,


Saturday, May 16, 2015

தீரமிக்க அதிகாரிகளூம் ,

பா.ஜ.க.வின் இரட்டை நாக்கும்....!!

நம்ம டீ ஆத்துன பிரதமர் சீனா போயிருக்காரு ! அதுக்கு முன்னால சதீஸ்கர்  போயிருந்தாரு ! அங்கு "பஸ்தார் " மாவட்டம் தீவிர வாதிகள் கட்டுப்பாட்டுல உள்ளதாகும் ! அதுவும் "தந்தவாடே "  என்ற கிராமம் அவர்களின் கெந்திர மான ஊரு ! பலமுறை இங்கு போலிசாரொட மோதி இருக்காங்க ! நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ! 

பொதுவா இந்த ஊர்கள்ள அரசு ஊழியர்கள் கொஞ்சம் யோசித்து தான்   போவாங்க ! ஆனாலும் கலெக்டர்,பொளீஸ் அதிகார்கள்  செயல்படாமல் இருக்க முடியாது !

அரசியல் தலவர்கள் உலகம் பூரா சுத்து வாங்க ! இந்தபக்கம் தலை வச்சு படுக்க மாட்டாங்க ! இந்த ஊருக்கு போகணும்னு பிரதமர் மோடி விரும்பினார் ! பிரதமர் வந்தால் அந்த கூட்டத்திற்கு யாரும்பொகக்கூடாது நு தீவிரவாதிகள் சொன்னாங்க ! பக்கத்து கிராமத்துல உள்ளவங்க பொவோம்னாங்க ! அவங்களுக்கு கலெக்டர்கல் பாதுகாப்புகொடுப்போம் நு அறிவிச்சாங்க ! 

அந்த கிராமத்துல உள்ள 500 பேர துப்பாக்கிமுனைல பிடிச்சு தீவிரவாதியக:  பிணக்கைதிகளாக அறிவிச்சாங்க ! மறுநாள் பிரதமர் வரவிருக்கிறார் ! அந்த ஊர் மாவட்ட மாஜிஸ்ற்றெட் அமீத் கடாரியாவும், கலெக்டர் கே.சி  தேவ  சேனாபதியும்   தீவிர வாதிகளொடு பேச்சுசுவார்த்தை நடத்தி கிராமத்தினரை விடுவித்தார்கள் !  

மறுனால்பிரதமர அவர்களை இருவரும் விமான நிலையம் சென்று வரவேற்றனர் ! பிரதமருக்குமகிழ்ச்சி !அமித் கடாரியா கைகுலுக்கும் பொது அவர் நெஞ்சில் கைவத்து " தபாங்க் ஆபிசர் " (தீரமிக்க அதிகாரி) என்று பாராட்டினார் !

தெவ சேனாபதியும் கைகுலுக்கி பிரதமரை வரவேற்றார் !

அன்று மாலை இரண்டு அதிகாரிகளுக்கும் அரசிடமிருந்து நோட்டீஸ் வந்தது !" பிரதமர் வரும் போது அரை வர்வேற்ப்பதற்கான உடை அணியவில்லை ! கண்களில் கருப்புக்காண்ணடி அணிந்திருந்தீர்கள் ! இது மரியாதைக்குறைவான செயல் 1 விளக்கம் தருக " என்று அதில் கண்டிருந்தது !

ரெய்பூரை செர்ந்த தோழர் ஒருவரிடம் கேட்டேன் ! "பர்ஸார்" வெப்பக் காடுகள் கொண்ட பகுதி ! நீராவி பெட்டிக்குள் இருப்பது போன்ற சீதோஷ்ணா நிலைதான் எப்போதும் ! ஆகவே டிரெஸ் கோடூ  எல்லாம் பார்க்க முடியாது ! அது மட்டுமல்ல ! கலெக்டர் தேவ சேனாபதி kOட்டை கையில் வாத்திருந்தார் ! வெப்பம் தாங்காமல் போட்டுக் கொள்ளவில்லை !" என்று விளக்கினார் ! 

வழக்கில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று ஒரு கோஷ்டி சொல்லும் !இன்னோரு கோஷ்டி வேண்டாமென்று சொல்லும்

பிரதமர் தீரமிக்க அதிகாரி என்பார் ! முதல்வர் அதே அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்புவார் !

இவர்களுக்கு வாயும் பேசும் ! 

--டி யும் பேசும் .....!!!


Friday, May 15, 2015

நவீன ஜமீந்தார்கள் ......!!! 

இன்றைய இளைஞர்களுக்கு ஜமிந்தாரி முறை என்றால் என்வென்று கூட தெரியாத நிலை உள்ளது!நடைமுறையில்சிறந்த உதாரணமாக சைக்கிள் ஸ்டாண்டு முறையை எடுத்துக்கொள்ளலாம் ! 

சைகிளை பஸ்ஸ்டாண்டில்பாதுகாக்க டோக்கன்வாங்கு கிறொம் ! இதன நாகராட்சிகள்  ஏலத்துக்கு விடுகின்றன !ஏ லம் எடுத்த காண்ட்றாக்டர் ஒரு குறிiப்பிட்ட தொகையை கட்டிவிட்டு வசூலித்துக் கொள்கிறார்! 

நாற்கரச்சாலைகலில் " டொல்கேட்"  வசூலிக்கிறார்கள் ! இதனை தனியாருக்கு ஏலம் விடுகிறார்கள் ! அவர்களோ கோடிக்கணக்கில் வசூலிக்கிறார்கள் !

பிரிடிஷார் காலத்தில் நிலத்திற் கான வரியை வசூலிக்க ஜமிந்தாரி முறை இருந்தது ! சமஸ்தானங்களிl  இதனை ஜாகீற்தார் முறை என்றார்கள் ! 

கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து  வசுலிப்பதற்கு பதிலாக இந்த ஜமீந்தார்கள் பிரிட்டிஷ் அரசுக்கு மொத்தமாக பணம் கட்டி விடுவார்கள் ! பதிலுக்கு விவசாயிகளிடமிருந்து ஜமீந்தார்கள் வரி வசூலித்து விடுவார்கள் ! அந்தந்த ஜமீன் பகுதியில் உள்ள நிலம்,காடுகள், ஏரிகள்,குளங்கள்,மேய்ச்சல் நிலங்கள் அத்துணையும் ஜமீந்தார்களூக்கு சொந்தம் ! 

அவர்கள் எவ்வளவு வேண்டுமானலும்,எப்படி வேண்டுமானலும் வசூலித்துக் கொள்ளலாம் !

வங்கம்,பீஹார்,ஆந்திரா ஆகிய இடங்களில் இதனை எதிர்த்து கம்யூணீஸ்டுகள் கடுமையாகபோராடினார்கள் ! சுதந்திரம் வந்த பிறகு இந்திய அரசு இந்த முறையை ஒழித்தது ! நிலங்களை  விவசாயிகளுக்கு அளித்தது ! ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலம் விவசாயிக்குகிடைத்தது!

பா.ஜ.க அரசு நிலம் கையகப்படுத்த தற்பொது சட்டம் கொண்டுவந்துள்ளது !

இதன் படி ஜமிண்தார் களீடமிருந்து விவசாயிகளுக்கு கிடைத்தனிலத்தை பறித்து இந்த கார்பரேட் முதலாளீகளுக்கு கொடுக்க விருக்கிறார்கள் 1

அந்த காலத்தில்ஜமீந்தார்கள் தங்க பல்லக்கில் பவனி வந்தார்கள் !

இந்த நவீன கார்ப்ரெட் ஜமீந்தார்கள் BMW கார்களில் வரவிருக்கிறார்கள் ! 

Wednesday, May 13, 2015

"மனு தர்மம் " வருவதற்கு முன்பே சாதி இருந்ததா ?

சமிபத்தில் அருந்ததி ராய் அவர்கள் தமிழகம் வந்திருந்தார்கள் ! வழக்கம் போல கம்யூணீஸ்டுகளை குறிப்பாக மார்க்சிஸ்டுகளை விமரிசித்து விட்டு போனார் !

பொது வாக "கம்யூனிஸ்டுகளை கடி"ப்பவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் தங்கள் நிலையை மாற்றீக் கொள்வார்கள் !

தமிழகம் வந்த அருந்ததி ராய் அவர்கள் " வர்க்கத்தையும் சாதியையும் " பார்ப்பதில் கம்யூனிஸ்டுகள் தவறிழைத்து விட்டார்கள்" என்று என்று கூறிவிட்டு போயுள்ளார் ! 

"When arguments fails you abuse " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு ! அதுதான் நடந்துள்ளது !

சாதிகளின் தோற்றம் என்று ஒரு  நூல் ! "குணா"என்பவர் எழுதியது ! பல ஆண்டுகளுக்கு முன் எழுதியது ! அதன் அடிப்படையான  வாதத்தை ஏற்கமுடியாவிட்டாலும் அந்த நூலில் அவர் சொல்லியிருக்கும் சில விவரங்கள் வெளிச்சம் தருபவை ! 

இர்ஃபன் ஹபீப் என்ற வரலாற்றூ பெராசிரியர் "ஜாதி " என்ற வார்த்தை முதன் முதலாக பௌத்த கிரந்தங்களில் குறிப்பிடப்படுவதாக கூறுகிறார் ! 

சமிபத்தில் கட்டுரையாளர் ஒருவர் " ஆண்டான் அடிமைச்சமுதாயத்திலயே சாதியப்பிரிவினை தோன்றி விட்டதாக கூறியுள்ளார் !

இது பற்றி என்னுடைய சந்தேகங்களை தீர்க்க மார்க்சீய அறிஞரும் களத்திலிரங்கி பாணீயாற்றுபவருமான  பெரியவர் ஒருவரை தொடர்புகொண்டேன் !

"உண்மைதான் ! ஆண்டான் அடிமை சமூகத்திலேயே  சாதி தோன்றிவிட்டது ! அது பின்னர் வந்த நிலபிரபுத்துவ சமூகத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது ! வளர்ச்சிப் போக்கீல் மனுதர்மமாக உறுதிப்படுத்தப்பட்டது !" என்று விளக்கினார் !

இது பற்றீ இ.எம்.எஸ் அவர்கள் ,வரலாற்றாளர் கோசாம்பி,தெவி பிரசாத் சட்டோபாத்யாயா ஆகியோரை படியுங்கள் என்று கூறீனார் ! 

"இந்தியாவில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளது !" என்று கொள்வது மிகவும் சரி !

இந்த சிக்கலை உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவார்த்தமாக அணுக வேண்டும் !

அணுகுவோம் !!!

  

Sunday, May 10, 2015

AB என்ற ஏ.பாலசுப்பிரமணீயம் அவர்களூம் ,

மாணவர்களூம்.............!!!



கட்சியில் மதுரை - முகவை மாவட்டம் என்று தான் சொல்லி வந்தார்கள் ! பின்னர் தான் மதுரை மாவட்டம்  அதன் பின்னர்,திண்டுக்கல்,தேனி என்று மாவட்டங்களாகபிரிந்தது ! 


மதுரை மில் தோழிலாளியாக இருந்த ABPஎன்ற  எ.பி பழனிச்சாமிதான் மதுரைமாவட்ட செயலாளராக வெகு காலம் இருந்தார்! அப்பொது தான் அவரை நான் முதன்முதலாக பார்த்தேன் ! "திண்டுக்கல் பாலு" என்று அழைப்பார்கள் ! ஏ.பாலசுப்பிரமணியம் என்ற  AB பின்னாளில் மாநில  செயலாளராக.அரசியல்தலமைக்குழு உறுப்பினராக உயர்ந்தார் ! 


மிட்லண்ட் ஹோட்டல் எதிரில் இருக்கும் அரசமரம் சந்தில் தான் பொது தொழிலாளர் சங்கம் இருந்தது ! அதற்கு முன் அதன் பின்புறம் உள்ள கருகப்பிலை கார சந்தில் ஒருவீட்டின் மொட்டை மாடியில்  ஓலை குடிசை போட்டு செயல் பட்டு வந்தது ! அங்குதான் கட்சி யூனிட் கூட்டம் நடக்கும் ! 9 பெர் உறுப்பினர்கள் ! சனிக்கிழமை மதியம் படை பதைக்கும் வெய்யிலில் மொட்டைமாடியில் வகுப்பு நடக்கும் !  AB,NS போன்ற தலைவர்கள் வகுப்பு எடுப்பார்கள் !


வகுப்பு முடிந்ததும் NS அவர்கள் "சரியாக இருந்ததா ? நல்ல புரிஞ்சிதா ? நான் பேசினது சரிதானா என்று என் போன்ற குஞ்சுகுளுபவாங்களீடம் விசாரிப்பார்! 'தலைவா தலைவா "  என்று எங்கள் நெஞ்சம் கதறும் ! எப்பேர்பட்ட தலைவர்கள் ! இவர்கள் காலடியிலமர்ந்து பாடம்கேட்ட நாங்கள் எவ்வளவுபாக்கியவான்கள் !


மாணவர்கள் இயக்கத்தை கட்டி அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது ! 

 

ரயிவே கர்டர் பாலத்திற்கு அருகில தான் "ராஜா மில் "இடுந்தது ! அதன் பின்னால் மதுரையின் சாக்கடை நீர் வைகையில் கலக்கும் ! அதில் உள்ள திட்டுகளில் மரங்களையும் செடிகளயும் வளர்த்திருப்பார்கள் ! அதனை அங்கு குடியிருக்கும் மில் தொழிலாளர்கள் "பூந்தோட்டம் " என்று அழைப்பார்கள் 1 அங்குதான் மாணவர்களூக்கான வகுப்புகள் நடக்கும் ! எங்களைப்போன்றவர்கள் மாணவர்களை அங்கு அழைத்து வரும் பொருப்பினை ஏற்றுக் கொள்வோம் !


ஒரு முறை AB  தொடர் வகுப்பின எடுத்தார் !  வகுப்பு எடுக்கும் போது ஒரு மாணவன் எழுந்து சந்தேகங்களை கேட்பான் ! தலவரும் விளக்கமளீப்பார் ! சில சம்யங்களில் அவனுடைய சந்தேகங்கள் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் ! வெட்டித்தனமாகவும் இருக்கும் !  இந்த மாணவன் மட்டும் அதிகம் கேட்பான் ! ஒருமுறை  AB அவர்கள் வகுப்பு முடிந்ததும் என்னை வந்து பார் ? என்றார் ! 


"எங்கு படிக்கிறாய்?"

"அக்ரி கல்லுரியில் "

"எங்கு இருக்கிறது?"

"மேலூர் ரோட்டில் 1ஆனை மலை அருகில் "

"பேராசிரியர் கிரிஜா அவர்களைத்தெரியுமா ?"

பையன் முகத்தில் ஆச்சரியக்குறி !

"அவர்களிடம்விசாரித்தேன் ! "

"அவன் தங்கமான பையன் ! மற்றவர்களூக்காக  உயிரக்கொடுத்து வேல செய்வான் ! ஆனால் அவன யாரும் சட்டை செய்யமாட்டார்கள் ! படிக்கவே மாட்டான்! சிங்கில்டிஜிட் தான் மார்க் ! எந்த மாணவனும்  அவனோடு  ஓட்டாமாட்டான் என்று பேராசிரியர் சொன்னதாக  கூறினார் ! தோழா !

பி.டி ஆர் தெரியுமா ! நமது அகில  இந்தியதலவர் ! அவர் ஆங்கிலம் பேசினால் பிரிட்டிஷ் காரனே தடுமாறுவான் ! ஷெக்ஸ்பியரையும்,மிலடனையும் கரரைத்துக் குடித்தவர் ! அவர் விக்டொரியன் ஆங்கிலம் பேசுவார் ! மாணவர் சங்க தலைவர் சிதாராம் எச்சுரி தெரியுமா? ! அவர்  நேஷனல் மெரிட் லிஸ்டில் நம்பார் ஒன் ! எம்.ஆர்.வி தெரியுமா ? அவர் சென்னை பலகலைகழக கால்பந்து குழுவில் இருந்தார் ! உலக கால்பந்து போட்டி ஹாலந்தில் நடக்கும் போது பார்த்தவர் ! பீலியின் விளயாட்டை பார்த்தவர் !   அண்ணாமலையில் தான் நான் படித்தேன் ! பல்கலைகழகஹாக்கி டீமில் விளையாடீயிருக்கீறேன் ! நாம் எங்கு இருந்தாலும் முதலிடத்தை பிடிக முயற்சிக்க வேண்டும்  ! அப்போது தான் நம்மை மற்றவர்கள் பார்ப்பார்கள். கவனிப்பார்கள் ! காது கொடுப்பார்கள் ! "


பெருமூச்சு விட்டார் AB ! " பெராசிரியர் கிரிஜா என் மனைவி ! நல்ல படி !" என்று அந்த மாணவனை விடை கொடுத்து அனுப்பினார் !


Thursday, May 07, 2015


POSTS RSS

CONTACT

LOG IN

Thursday, May 09, 2013


வடக்கே  புத்தன் சிந்தன்

V P C.....!!!

அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !

மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .


சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !

என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 

நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 

பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !

 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 

"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !

"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!

"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !

நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 

"ஆமா ! நீ என்ன பண்ற ?"

சொன்னேன் !

"கட்சில மேம்பராயிட்டயா?"

"இல்ல "  

"ஏன் ?"

என் வாய்க் கொழுப்பு ! 

"I  don't have any objection " என்றேன்!

கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 

"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!

"ஏன் ?" 

"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  

எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!

அவர் குட்ட வில்லை !

என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!

 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!

என்னை ஆசீர்வதியும்!!!


தோழர் தண்டபாணி அவர்களூம்

"வாரா" கடன்களூம்............! 



மதுரை பகுதி இண்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலவராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பணீயாற்றியவர்  தோழர் எஸ்.தண்டாபாணி அவர்கள் ! சென்னை பலகலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு படித்து முதல் வகுப்பில் முதலாவதாக தேறியவர் !மிகச்சிறந்த மார்க்சீய ஊழியர்  ! 

 

மிகவும் கூர்மையான விவாதங்களூக்கு  சொந்தக்காரர் ! ஒருமுறை கூட்டத்தில் பேசும்பொது குறிப்பிட்டார் ! " வங்கிகளில் தொழில் முனைவோருக்கு கடன் கொடுக்கிறார்கள் ! அவர்கள் தொழில் ஆரம்பிக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட கண்காணீப்பதில்லை ! அப்படி ஆரம்பித்தாலும் கம்பெனியைமூடிவிடுகிறார்கள் ! கடன் கொடுத்தபணத்தை திருப்பி செலுத்துவதில்லை ! நானகெட்பதெல்லாம் இது தான் ! "எவன் எவ்வளவு கடன் வாங்கினான் ! எவ்வளவு ஏப்பம் விட்டான் என்பதை சொல்லக்கூடாதா ! கடன்வாங்கினவன் சொகுசா கார்ல சுத்தரான் ! எங்களுக்கு தெரிஞ்சா ரோடல அவன பாக்கும்போது "இந்தா போறான் பாரு ஒருகொடி ஏமாத்தினவண் ! இந்தா இவன் 50 லட்சம் நாமம் போட்டவன் "நு சொல்லியாவது ஆறுதல் அடைவோம் ! "என்றார் !


நாகபுரியினை சுற்றி அதிகமான சுரங்கதொழில் உண்டு !  சுரங்க முதலாளிகல் வங்கிகளீல் கோடிகணக்கில் கடன் வாங்குவார்கள் ! முக்கா துட்டு திருப்பி கொடுக்க மாட்டார்கள் ! லட்டசக்கணக்கான கொடிகளை வங்கிகள் "வாரா" கடனாக அறிவித்துள்ளது ! இதில் பாஜக,காங்கிரஸ் ,தேசிய காங்கிரஸ் என்று வேறுபாடில்லை !


இங்கு கொடீஸ்வரர்கள் தெரு என்று உள்ளது ! "குரோர்பதி கல்லி " !  இதில் யஷ்வந்த் ஸங்க்லா,

மஞ்சு ஸ்ங்கலா என்று இரண்டு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள் ! இவர்கள் லிக்சன் கோல் அண்ட் மினரல் பிரைவேட் என்ற கம்பெனியைனடத்தி வருகிறார்கள் ! யூனியன் வங்கியிலிருந்து 55 கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ! திருப்பிகொடுக்கவில்லை !


செவ்வய் கிழமை கால யூனியன்வங்கி ஊழியர்கள் அவர்கள் வசிக்கும்பங்களா முன் சென்று ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர் ! "ஸ்ங்க்லாவே மக்கள் பணத்தை திருப்பிக்கொடு  " என்று பதாகைகளை ஏந்தி ஆற்ப்பாட்டம் செய்துள்ளார்கள் !


தமிழ் நாட்டிலும் இப்படி ஆரம்பிக்கலாம் ! பல இன்னாள் முன்னாள் அமைச்சர்கள் வீட்டு வாசலில் ஆர்ப்பட்டம் நடத்தலாம் ! 

Saturday, May 02, 2015

இட ஒதுக்கீட்டை ஏற்கும் 

"மன வளம் " வேண்டும் ...!!!

இடது சாரி பார்வை கொண்ட திரைப்பட இயக்குனர் மிருணாள் சென் அவர்கள் புனே திரைப்பட கல்லூரியின்  பட்டமளீப்பு விழாவில் பேசினார் !

" சுதந்திரத்திற்கு முன் இந்திய குடிமகனிடம் உன் எதிரி யார் என்று   கேட்டால்  காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள இந்தியன் "பிரிட்டிஷ் எகாதிபத்தியம்"என்று ஒரே முனைப்பாக கூறுவான் !  இன்றூ வாலிபன் ஒருவனிடம் கேட்டால்  "இட ஒதுக்கீடூ" என்கீறான்!  பலசரக்கடை முதலாளியிடம் கேட்டால் தொழிலாளர்கள் என்கிறான் ! நமது பார்வையை சிதறடித்து நம்மை குழப்பி வைத்துள்ளார்கள் " என்றார் !

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட,மற்றும் ஒரம்கட்டப்பட்ட மக்களூக்கு "இட ஓதுக்கீடு ' சகல ரோக நிவாரணி இல்லைதான் ! நிலமும்,அதிகாரமும்,அதன் பயன் பாடும் வந்தால் தான் அவர்கள் நிமிர முடியும் ! இட ஒடுக்கீடு ஒரு நிவாரணீதான் !  Instead of solving the problem we are tackling the situatioan ! அவ்வளவுதான் !

இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துள்ளது ! குறிப்பக இடது சாரிகள் விவாதத்தை கிளப்பி யுள்ளனர் !

மாநில அரசு ஊழியர்களூக்கு இந்த சலுகை முழுமையாக உள்ளதா ? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியதிருக்கிறது ! தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களூக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது ! ஏன் ? இந்த கேள்விக்கு விடை இல்லை ! 

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரசார் சொன்னார்கள் !  

இது பற்றி தமிழக உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கூறும் பொது " உச்சநீதி மன்றம் இடஒதுக்கீடூ பிரச்சினயில் தலையிட்டுள்ளது ! அதனை சட்டதிருத்தத்தின் முலம் தீர்த்தால் தான் முடியும் "என்றார் !

இன்சூரன்சு துறையில் , வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு உண்டு  ! அந்த உரிமையை அங்குள்ள இடது சாரி தொழிற்சங்கம் போராடி பெற்றுத்தந்தது ! பா.ஜ.க போன்ற வலது சாரிகள் அதன எதிர்த்தபோது தன்னந்தனியாக அந்தசங்கம் நின்று அந்த உறிமையை பாதுகாத்தது 1 

  

மாநில அரசு ஊழியர் சங்கங்கள் இந்த விஷயத்தில் ஏன் கள்ள மௌனம் சாதிக்கின்றன ! 

திமுக கொள்கை அளவில் நாங்கள் இதனை ஏற்கிறொம் என்று அறிவித்ததோடுசரி ! 

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உயிரக் கொடுக்க தயாராக இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி ,திருமாவளவன் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் !

தொலைக்காட்சி பெட்டிக்குள்ளேயே கட்சி நடத்தும் வேல்முருகன் இது பற்றி பேச மறூக்கிறாரே !

ஏன் ?

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வந்தால் அரசுப்பணியில் தரம்   குறைந்து விடும் என்கீறார்களா?

தன்னைவிட குறந்த பணிக்காலம் கொண்டவர்கள் மேல் பதவிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த ஊழியர்கள் பயப்படுகிறார்களா ? 

இன்சூரன்சு துறையில் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நடை முறையில் இருக்கிறதே ! 

 உலகம் பூராவும் போற்றிப் புகழும் வகையில் ஏல்.ஐ..சி பிரும்மாண்டமாக எழுந்து நிற்கிறதே !!

சம்மந்தப்பட்டவர்களூக்கு இடஒது கீட்டினை ஏற்றுக்கொள்ளும் 

"மன வளம் " வேண்டும் !

வரும் ! வரவைப்போம் !!

அக்