Monday, July 25, 2016






கன்னியப்பன் நெல்லை அவர்கள் 

நிலைத்தகவலை முன் நிறுத்தி ....!!!



முக நூலில் காயத்திரி மந்திரம் பற்றியும் அதன்பல பலன்களை பற்றியும் நிறைய எழுது கிறார்கள்..கன்னியப்பன் சம்ஸ்கிருத காயத்ரி மந்திரத்தின் பொருளையும் கொடுத்து  விரித்துள்ளார்கள்.

உயிர் களிலேயே மிகவும் பலவீனமானது மனித உயிரினம் தான். சிங்கம் புலி யானை என்று அத்துணை உயிரினங்களையும் ஆளும் வல்லமை படைத்ததும்மனித இனம் தான். காரணம் மற்ற உயிரினங்களுக்கு வாய்க்காத   அறிவு வளர்சசி. இந்த வளர்சசிக்கு காரணம் அதன் அனுபவம்.இந்த அநுபவத்திற்கு காரணம் "உழைப்பு " என்ற அற்புதம்.

ஆதி மனிதன் குழுவாக கூட்டமாக வாழ்ந்தான் . மற்ற மிருகங்களுக்கு அஞ்சியே இருந்தான். அவனுக்கு இரவும் இருட்டும் மிகவும் ஆபத்தான அனுபவங்களை கொடுத்தன. மிருகங்களுக்கு பயந்து மரப்பொந்துகளிலும்,கிளை களிலும்,பாறைகளின் உசசியில்  உள்ள இண்டு  இடுக்குகளிலும் வாழ்ந்தான் . 

இரவும் இருட்டும் அவனை அசசத்தில் ஆழ்த்தின .வெளிசசம் அவனுடைய தேவைகளில் முக்கியமானதாயிற்று. அது வருவதும் போவதும் அவனை ஆசசரியப்படுத்தியது.

வெளிசசம் வெப்பத்தை தருகிறது .வெப்பம் சூழலை மாற்றுகிறது. காற்று வீசுகிறது,மழை பொழிகிறது . பசுமை நிறைகிறது. காய் கனிகள் விளைகின்றன . மனம் மகிழ்கிறது இதற்கு காரணம் வெளிசசம் என்று கருதினான்.

வெளிசத்தை ,இயற்கையை வணங்க ஆரம்பித்தான். 

தத் சவிதா: வரேண்யம் என்கிறது காயத்திரி . சவிதா: என்றால் வெளிசம் .மானுடவியல் பேராசிரியர் சொன்ன விளக்கம்   இது.

இதில ஒரு நிறடல் உண்டு  . 

சமஸ்கிருதகி மொழி கிமு 300 -500 ஆண்டுகளில் தான் வரிவடிவம் பெற்றது. தக்கசீலம் (பாகிஸ்தானில் உள்ளது ) அருகில் உள்ள கிராமத்து "பாணினி "  ஐரோப்பிய, ஆப்பிரிக்க,அரேபிய மொழி  களை ஆராய்ந்து இலக்கணமும் வரிவடிவமும் சமஸ்கிருதத்திற்கு தந்தார் என்பது மொழி   இயலாளர் கருத்து.

ஆதிமனிதனுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் காயத்த்ரி மந்த்ரம் ஆதிமனிதனோடதுஇல்லை என்றாகிறது.

இது பற்றி மேலும் சிந்திக்கவும் விவாதிக்கவும் மட்டுமே இந்த தகவல்களை தருகிறேன்.

 

      


















Saturday, July 23, 2016





சாமி டா !

மைலாப்பூர் சாமி டா !!!



நான் மதுரைக்கு     62  ம் ஆண்டு மாற்றலாகி வந்தேன்.    அப்போதெல்லாம் மேல ஆவணிமூலவீதி ,வடக்கு ஆவணிமூலவிதி ஆகியவற்றில் ஏராளமான திரைப்பட விநியோக கம்பெனிகள் இருக்கும் .10 x  8  அறையில் இருக்கும் . ஒரே அறையில் ஆண்டாள் பிலிம்ஸ்,ஆழ்வார்  டிஸ்ட்ரிபியூட்டேர்ஸ் , அஃபர் தியேட்டர்ஸ்  என்று இருக்கும். 

ஒரு  மானேஜர்- கிளார்க் ,கிளார்க் -பலசோலி என்று இருவர் அங்கு பணியாற்றுவார்கள்.

நாங்கள் போது வசூலுக்கு அங்கு செல்வோம். "வாங்க அப்பூ !  "என்று அவர்கள் அழைத்தாலும்  மூன்று ரூ கொடுக்க புலம்புவார்கள்.

மதுரையில் என் உறவினர் பையன் மாநில அரசு பணியில் இருந்தான்.அவனோடு ஒருமுறை மேலக்கோபுர தெருவுக்கு சைக்கிள்கடை வரை சென்றிருந்தேன். பிலிம் கம்பெனி      ஒன்றையும் பார்க்க சென்றேன். கூட என் உறவினரும் வந்தார்.எங்களை பார்த்ததும்  அந்த மானேஜர் பதறிவிட்டார்.

"ஐயா ! என்னய்யா !இவ்வளவு தூரம். சொல்லி இருந்தா நானே  ஆபிஸ் வந்து  பாப்பேனே ! "என்று என் உறவினரைப்பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.   

நான் வசூலுக்கு வந்திருக்கிறேன் என்றதும் கொஞ்ச்ம நிம்மதி அடைந்தார். நான் ரசிது   புத்தகத்தை நீட்டினேன். நுறு ரூ கொடுத்து ரசீது போட சொன்னார் .

வெளியே வந்தோம் 1"என்னப்பா ! மூணு ரூ க்கு முக்கால அழ ஆரம்பிப்பான் .இப்ப நுறு ரூ கொடுக்கான் "  

"டேய் !நான் வணிக வரித்துறை.! இவங்க பூரா  வட்டிக்கடை காரங்க. ஆயிரம் ரூ கொடுத்துட்டு 3000 ரூ நோட்டு போடுவான். பூரா  கள்ளப்பணம் ! அத கணக்குல காட்ட சினிமா கம்பெனி. பாத்தயா. போண்டா படமா வசிரிப்பாங்க .டூரிங் கொட்டகைள வசூலானதாக காட்டுவாங்க. நிறைய கருப்பை  கொஞ்சம் வெள்ளையாக்குவாங்க.எங்க ஆபிசுக்கு வந்த்து கேளிக்கை வரி சீலுக்காக நிப்பாங்க .அதுனால என்னை பாத்ததும் கூட கொடுக்கான் " 

இப்பம்  மதுரைல இப்படி இருக்கா தெரியல !

இப்பம் கார்பொரேட் கம்பெனியாயிட்டுது. கோடிக்கணக்கில் வசூலனு போடுதான் !

இதுல கருப்பு எவ்வளவு ! வெளிநாட்டிலிருந்து உள்ள வர கருப்பு  எவ்வளவு ?

டே  !

சாமி டா !!

மைலாப்பூர் சாமிடா !!!











ஸ்ரீதரின் நாகபுரி 

விஜயம் ........!!!





தமிழ் நாடு முற்போக்கு எழ்த்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர்  நாகபுரி வந்திருந்தார். அவருடைய மகள்  செல்வி சூர்யா திருசசி  NIT யில்  இறுதி ஆண்டு M . Tech  படிக்கிறார். நாக்புரியில் உள்ள தேசிய சுற்றுப்புற சூழல் பொறியியல் ஆராய்சசி மையத்தில் ஆறுமாதம் பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவரை கொண்டுவிட ஸ்ரீதர் வந்திருந்தார். 

20-7-16 அன்று இரவு 7 மணிக்கு என் வீட்டிற்கு வந்தார் .இரவு பத்துமணி வரை பேசிக்கொண்டிருந்தோம் . மறுநாள் மகளை தாங்கும் விடுதியில் சேர்த்து விட்டார். 22-ம் தேதிக்கால 10மணிக்கு  வந்தவரோடு மாலை 3 மாணவரை பேசினோம்.    

ஸ்ரீதரை பார்த்தவுடன், SAP யிலிருந்து வேலாயுதம் வரை ,lic  சாந்தாராமிலிருந்து Gic  ரமேஷ் வரை , நன்பர்களை பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது.

பார்ப்பனீயம் ,பார்ப்பனர் எதிர்ப்பு, பார்ப்பனர் அல்லாத இடைநிலை வகுப்பார் தலித்துகள் மீது நடத்தும் தாக்குதல் , அதற்கு கேடயமாக "மனுநீதியை " சொல்லும் சிலர் என்று பேசினோம். 

இந்திய கம்யூனிஸ்ட் கடசிக்குள் அரசு பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு- ஏகபோகத்தின் தலைமையில் முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ  ஆடசி என்பதிலிருந்து , தேசிய முதலாளிகளும்,தொழிலாளர்களும் நடத்தும் ஆடசி என்பது வரை விவாதித்தோம் .

இயந்திரமாக்கல், டீசல் மயமாக்கல்,மின்மயமாக்கல், கட்டெய்னரை  எதிர்த்தது பற்றியும், கணிப்பொறி எதிர்த்ததையும் பேசினோம்.

கல்கத்தா  துறைமுகம் தளர்ந்ததையும் சிங்கப்பூர் துறைமுகம் வளர்ந்ததையும்   புரிய முயற்சசித்தோம் . 

முதுமையும் இயலாமையும் என் செயல் திறனை முடக்கி விட்ட நிலையில் ,த.மு எ.க .ச வின் வளர்ச்சி எதிர்கால செயல்பாடு என்று தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..

"தீட்சா பூமியை "கண்டிப்பாக பார்த்துவாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தேன்.

எனக்கு இரண்டு பேரன்கள் . பெயர்த்தி இல்லை. ரயிலில் வரும்போது செல்வி சூர்யா என்னை "தாத்தா " அழைத்த பொது என்கண்கள் கசிந்தது.

"சூர்யா ! உன் பயிற்சி சிறப்பாக முடியும் . மேலும்மேலும் நீ உயர்வடைவாய் கண்ணம்மா !!!"

"வாழ்த்துக்கள் !!!  "


Tuesday, July 12, 2016






"தவறு என்று தெரியாமலேயே 

தவறு செய்து கொண்டிருக்கிறோம் ...."






1920ம் ஆண்டு வாக்கில் தான்  சமூக நீதி பற்றிய விழிப்பு உருவாக ஆரம்பித்தது. அது ஒரு இயக்கமாக நிதிகடசியாக பரிணமித்தது. பிரிட்டிஷாரின் ஆட்சியில்  கல்வி பொதுவாக்கப்பட்டது.பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்க வாய்ப்பு வந்தது. கற்ற பிராமணரல்லாதோருக்கும் வேலை வாய்ப்பு வேண்டி கோரிக்கைகள் வந்தன.     

பிராமணர் -பிராமணர் அல்லாதோர் என்று பிரிவும் அதனால் ஏற்பட்டது.இதன் காரணமாக ஒன்று  பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமும் உருவானது. என் சிறு வயதில் bramin -nonbramin ( b - nb ) என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிராமணர் அல்லாதோரின்    முன்னேற்றத்திற்கான  பல முடிவுகள் வந்தன.இதனை சாதித்ததில் திராவிட இயக்கத்திற்கு பங்கு உண்டு 

அன்று  b -nB என்று இருந்த நிலை திராவிட இயக்கம் 1967ம் ஆண்டு அரசு கட்டிலில் ஏறியதும் மாறியது.

அப்போது நான் எல்.ஐ சி யில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் . நணபர் ஒருவர் மிகவும் சோகமாக அலுவலகம்வந்தார் .விசாரித்தேன்."இன்று மாலை ஒரு அஞ்சலி கூட்டம். அதற்கான "போஸ்டர் " களை  அடிக்க வேண்டும். பிழை திருத்தவேண்டும் " என்றார் . அதனை வாங்கி பார்த்தேன் .

                                            கண்ணீர் அஞ்சலி 
                         
                             கர்நாடக நடிகர் ராஜ்குமார்  மறைவு !!!

                                            இப்படிக்கு 
                                நாடார் சங்கம் ,மதுரை 

எனக்கு அதுவரை ராஜ்குமார் நாடார் என்பது தெரியாது .

பஞ்சாபில் குருத்வாரா அங்கீகரித்தால் தான் மத சடங்குகளை ஒருவர் செய்துவைக்க முடியும்.எந்த வித்தியாசமும் இன்றி அதற்கான பயிற்சியை குருத்வாரா செய்து கொடுக்கும். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு "ஞ்னி " என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு மதச்சடங்குகளை செய்விக்கும் உரிமையை கொடுப்பார்கள். அப்படி பட்டம்வாங்கியவரி ஒருவர் தான் "ஞ்னி " ஜெயில் சிங்  

அவர் குடிஅரசு தலைவரானார். மதுரை நகர சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டான

         நன்றி.              நன்றி          நன்றி 
அன்னை இந்திரா விற்கு . நன்றி .ஜெயில் சிங் அவர்களை குடியரசுதலை வராக ஆக்கிய அன்னைக்கு நன்றி .
இப்படிக்கு 
தங்க நகை ஆசாரிகள் சங்கம் மதுரை .


சாதி வித்தியாசாம்பார்க்காமல்  மத சடங்குகளை  செய்விக்கலாம்  என்கிற  சீக்கிய மதம்   பட்ட பாடு .

நான் வசிக்கும் அடுக்ககம் மிகவும் பெரியது மூன்று ஷிப்ட் களி ல் செக்கியூரிட்டி உண்டு.புதிதாக வந்திருந்த செக்யுரிட்டியிடம் பெயர் கேட்டேன். "திலீப் ,பிராமின் "என்றான். இங்கு யாரிடம் பெயர்  கேட்டாலும் "நான் தேஷ்முக் ஆசாரி " நான் பாண்டே - பட யி " என்கிறார்கள்.

இப்படி  இல்லாதிருந்த தமிழகத்தில் இது  விட்டது.

எங்கே தவறு என்று தெரியாமலேயே   

நாம் தவறு செய்ய ஆரம்பித்துவிட்டோம் !!!




 

























"நாங்கள் 

இருவரும்......." 




குறைந்தது 35 வருடங்களாவது இருக்கும் நாங்கள் இருவரும் சந்தித்து பேச  ஆரம்பித்தது . மிகவும் நெருக்கம்.அவர் தஞ்சை மண்டல பட்டுக்கோட்டைகிளையில்எல் .ஐ.சி யி ல்பணியாற்றினார். நான் மதுரை மண்டல எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாயாற்றி  வந்தேன்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் இருவருமே செயல்விரர்களாக இருந்தோம்.  மாநில அளவில் நடக்கும் மாநாடுகள்    அத்துணையிலும் சந்திப்போம் .

அவர் த.மு. எ  சங்கத்திலும்  செயல் படுபவர்  .கலைத்துறையிலும் ஈடுபாடு உடையவர்.

ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டவர்.திடீர் திடீரென்று குடுமபத்தோடு பல ஊர்களுக்கு சென்று வருவார். 

சென்னையில் ஒருமுறை பார்த்த போது "ஏன்யா ! உலகம் பூறா சுத்தரேறே ! குடும்பத்தோடு மதுரை வந்து  எங்க வீட்ல நாலுநாள்தங்குமே ?"என்றேன்.

"அதுக்கென்ன ! செஞ்சுட்டா போசசு "

அவர் குடும்பத்தோடு வர ஏற்பாடு செய்தார்.

அவருடைய துணைவியாருக்கு ஒரு பயம்." நாங்கள் என்ன ஆளுகளோ என்னமோ " அங்கு போய் குண்டக்க மண்டக்க நடந்து கொள்ளக்கூடாது.இரண்டு மகள் ,சின்ன பையன் ! தவறாக பேசிவிட கூடாதல்லவா " இது பற்றி கணவரிடம் பேசி இருக்கிறார். " அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா ! கேட்டுக்கிறதும் இல்ல ! ஒரு திருநெல்வேலி காராரு. ! சைவ பிள்ளைவாள் னு அனுமானிக்கிறேன் ! என்று கூறி இருக்கிறார்.ஒரு முறை திருசசியில் நானும் அவரும் non veg சாப்பிட்டிருக்கிறோம்.

என்வீட்டில் முத்துமீனாட்சி அவங்க veg ஆ non veg ஆ என்று கேட்ட போது " அவர்கள் ரெட்டியார் என்று நான் அனுமானிக்கிறேன். நானும் அவரும் non veg சாப்பிட்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டேன்.

"எனக்கு non veg  முடியாது. மிஞ்சி போனா ஆம்லெட் போடறேன் "இல்லை! நீங்க  ஹோட்டலுக்கு ஒருநாள்     கூட்டிக்கிட்டு போங்க " என்றார் . "பார்த்துக் கொள்ளலாம் " என்று பேசசை  முடித்தேன்.

தஞ்சை யிலிருந்து மகள்கள் வைஷ்னவி, லாஷ்க்மி ,அருண் சகிதம் அவர்கள் வந்து இறங்கினர். 

அவர் மனைவி தயங்கிய படியே உள்ளே நுழைந்தார். மகள்  வைஷ்ணவி தாயாரிடம் சுவரில்மாட்டியிருந்த படத்தைக்காட்டி ஏதோகிசுகிசுத்தாள்.

"என்னம்மா அம்மாகிட்ட என்ன சொல்றே "

"ஒண்ணுமில்ல ! நீங்க சாப்பிடுவேளோ !இல்லையோ ! கைசுத்து முறுக்கும்,மாலாடுவும்வீட்ல செஞ்சு  கொண்டு வந்தேன் ! படத்தைக்காட்டி இவா சாப்பிடுவா அம்மா ! " னு சொல்றாள் .

சுவரில் படத்தில் என்மகள் ஹன்ஸா ஒன்பது கெஜம்  புடவையில்   கல்யாணக்கோலத்தில் மறு மகன் Dr .ss ராமன் அருகில் நின்று புன்னகைத்துக்கொண்டிருந்தாள் .

Com Ragupathi   Red salute to you !!!




















Monday, July 11, 2016





காஞ்சியிலே

"சுந்தாவை

பார்த்தேன் "



80ம் ஆண்டாக இருக்கலாம் . மதுரையில் இலக்கிய முகாம் நடந்தது. மாநிலம்    பூறாவும்  இருந்து நண்பர்கள் வந்திருந்தனர்.

அப்போது நான் புனே திரைப்பட கல்லூரி நடத்தும் திரை ரசனை வகுப்புக்கு போய் வந்திருந்தேன். திரைப்படம் பற்றி என்னை வகுப்பு எடுக்க சொன்னார்கள். அரை மனதோடு சரி என்றேன் .

வகுப்பு ஆதம்பிக்கும் முன்  கல்லூரிப்பேராசிரியர் அருள் நந்தி "கட்டாயமாக " மா  பூமி "  பற்றி   சொல்லுங்கள் " என்றார் .

 திரைப்படத்தின் தோற்றம் , verbal  language ,language  Drawing , Language photography , language of cinematography என்று பேசிவிட்டு   "மா பூமி" பற்றி இருப்பது நிமிடம் பேசினேன்..  எல்லாரும் பாராட்டினார்கள் .

சென்னையில் இருந்து வந்த நண்பர் பாராட்டினார்> அவர் அருகில் இருந்தவர் என்னை படமாக வரைந்துள்ளார் என்றும் சொல்லி அந்த நண்பரை அறிமுகப்படுத்தினார்.கல்லூரி மாணவன் போல் -இல்லை - பள்ளி மாணவன் போல் இருந்த சுந்தா தான் அது.

பொதுத்துறை வங்கியில் பணியில் சேர்ந்து  அதிகாரியாகி ஓய்வு பெற்ற சுந்தாவை 3-7-16  அன்று  பார்த்தேன் .

காஞ்சி  த.மு.எ .ச      நண்பர் பலரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கலந்து உரையாடினோம். என்னுடன் வந்திருந்த முத்துமீனாட்ச்சி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது.