Thursday, December 30, 2010

தெய்வீக அற்புதமும்-சமூக அற்புதமும்

(Divine Mirracle and SOcial Mirracle)


தெய்வீக அற்புதமும், சமூக அற்புதமும்

இரண்டு நாட்களுக்கு முன்பு டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர் குடும்பத்தொடு என்வீட்டிற்கு வந்திருந்தார் சிறந்த காந்தீயயவாதி..இந்திய அமைதி மையத்தின் இயக்குனர்.பல்வேறு தத்துவார்த்த பொக்குகள் பற்றி அவருடன் விவாதிப்பேன். அப்ப.டித்தான் தெய்விக அற்புதம் பற்றீயும் விவாதம் வந்தது.

ஏசுவானவர் மலைப்பிரசங்கம் பற்றி பெசினோம். மூன்று நாள் மக்கள் அவர் பேச்சை மெய்மறந்து கேட்கிறார்கள்.அவரிடம் அவர்கள் பசியார உணவுப்பொருள் இல்லை.இருந்தது ஐந்துரொட்டித்துண்டுகளும் மூன்று மீன் துண்டுகளுமே வந்திருந்த சுமர் 5000 பெரும் பசி ஆறு கிறார்கள்.இது தெய்வீக அற்புதம். எசுவுக்கு முன்பு மொசஸ், அதற்குமுன்பு ஆப்ரகாம் இப்படி ஒவ்வொருவர் காலத்திலும் ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்கிறது. .ஆப்ரகமின் பெரன்கள் தங்கள் சகொதரிக்காக் நாற்பத்தாறு பேரைக்கொன்று விடுகிறார்கள். அதாவது கொலை பழிவாங்குதல் என்பது சர்வ சாதாரனம். மோசஸ் தன் காலத்தில் இதனை மாற்றுகிறார்..புதிதாக முறைமையை மாற்றுகிறார். கட்டளையிடுகிறார்.ஒன்றுக்கு ஒன்று.ஒரூயிருக்கு ஒரூயிர். ஒரு பல்லுக்கு ஒரு பல். ஒரு கண்ணுக்கு ஒருகண் என்று தண்டனை முறைமையை மாற்றுகிற.ர்.இதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏசு வருகிறார்.அன்பை வழிமொழிகிறார்.அன்பின் மூலம் தான் வாழமுடியும் என்று போதிக்கிறார்.ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்கிறார்.

காட்சி மாறுகிறது. நாம் வீட்டில் இருக்கிறோம். எனக்கும் என்மனைவிக்கும் மட்டுமே உண்வு இருக்கிறது.இரண்டு நண்பர்கள்வருகிறார்கள் அவர்களையும் உணவருந்தச் சொல்கிறோம் அவர்கள் இப்போதுதான் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் அது உண்மையில்லை என்பது நமக்கு தெரியும்.எங்களுக்கும் பசியில்லை வருங்கள் சாப்பிடுவோம் என்கிறொம்.இது உண்மையில்லை என்பது வந்தவர்களுக்கும் தெரியும்.உண்கிறொம்.ஒரு ரொட்டி மிஞ்சுகிறது.அது.அன்பின் மிகுதி.வந்தவர்கள் பசியாரட்டும் என்று நாங்கள் விட்டுவைக்க,இருப்பவர்கள் பசியாரட்டும் என்று வந்தவர்கள் விட்டுவைத்த அன்பின் மிகுதி.

மலைப் பிரசங்கம் கெட்க வந்தவர்கள் மூன்று நாள் சாப்பிடாமலா இருந்தர்கள்? அழகர் ஆற்றிலிரங்கும் திரு.விழாவுக்கு கட்டுச்சொறொடுதானே போகிறோம். மலைபிரசங்கத்திற்கும் அப்படித்தானே வந்திருப்பார்கள்.? ஏசு போதித்த அன்பு , உணவு இருப்பவன் கொண்டுவந்த உணாவு தீர்ந்து விட்டவனுக்கு பகிர்ந்தளிக்கத் தூண்டியிருக்காதா?அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பசியாற்றிக்கொண்டிருக்க மாட்டார்களா?

இந்த மனிதர்கள்மனத்தில் இந்த சமுகத்தின் மனத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்காதா?

பின்னாளில் இந்த சமூக அற்புதம் தெய்வீக அற்புதமாகியிருக்க முடியாதா?

(என் அன்புத் தோழர்களுக்கும்,பதிவுலக அன்பர்களுக்கும் ஏசு சகாப்தத்தின் 2011 ஆன்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறென்.இந்த அற்புதத்தை விளக்கிய டாக்டர் ஜாண் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்)

Saturday, December 25, 2010

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"


சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரின் படைபுகள் எதையும் நான் படித்ததில்லை.நண்பர்கள், இலக்கிய அன்பர்கள் மூலமாக அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன் எல்லோருமே எதிர்மறையான கருத்துக்களையே சொன்னார்கள் சமீப காலங்களில் அவருடைய கட்டுரைகளைப் படித்து வ.ருகிறேன.. வெறுப்பை உமிழ்வார். "விஜய் டி.வி" யில் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டார்கள் என்று கூறியிருந்தார். அதன் பிறகு "நீயா?நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப்பார்த்தேன்.

"மனம் கொத்திப் பறவை" என்று ஒரு தொடர் விகடனில் எழுதி வருகிறார். அதில் சில வாரம் முன்பு மதுரையில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் மதுரையில் நாடகம் போட்டபொது சிலா தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.என்ன நாடகம்? ஏன் தாக்கினார்கள்?யார் யார் தாக்கினார்கள்.?

நாடகவியல் (Dramaatics) படித்தவன் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். நவீன நாடக ஆசிரியர்களில் அமெரிக்க நாடக ஆசிரியர் டேன்னசி வில்லியம்ஸ் எனக்குப்பிடித்தவர்களில் ஒருவர்.அவருடைய நாடகமான Cat on a Hot tin Roof அமெரிக்காவின் பிராட்வேயில் சக்கைபோடு போட்ட நாடகம். பின்னர் திரைப்படமாக வந்தது.எலிசபத் டெய்லரும்,மாண்ட்கோமரி கிளிஃப்ட் ம் நடித்தது. மிகசிறந்த கால்பந்தாட வீரன். அவனுக்கு "ஓரினச்சேர்க்கை" பழக்கம் உண்டு.அவன் திருமனமாகி தாம்பத்திய வாழ்வில் ஈடுபட இந்தப்பழக்கத்திலிருந்து விடுபட அவன் படும் பாடுகள் தான் கதை. இந்தியாவிலும் பரவலாக வவேற்கப்பட்ட படம்.

மதுரையில் மகாத்மா மாண்டிசெரி பள்ளி யிருக்கிறது.3000 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி. அதன் வளாகத்தில் தான் சாரு நிவேதிதா "இரண்டாம் ஆட்டம்" என்று நாடகம் போட்டார்.நாடகத்தின் கரு "ஓரினச்சேர்க்கை." அந்தக் கருவுக்கு வெஞ்சனமாக "சுய இன்பம்" வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாதது என்ன இருக்கும் என்று பார்க்க விரும்பினேன். வேறுபணியின் கரணமாக முடியவில்லை

போன இளஞ்ர்கள் வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாத்தைப் பார்த்தார்கள்." ஓரினச்சேர்க்கை "யும்,சுய இன்பமும்" காட்சிபடுத்தப்பட்டிருந்தது.மேடை யேறி நாடகத்தை நிறுத்தச் சொன்னார்கள். தகராறு நடந்தது. அப்போது தடுத்தவர்கள், இப்போது மதுரைபல்கலையில் பெராசிரியராக இருக்கும் டாக்டர்ரவிகுமார் என்ற ஸ்ரீரசா,தீயாணைப்பு அதிகாரியக இருக்கும் ஆருமுகம்.தோழர் ராகவன், ஆசிர்யர் ஷாஜகான் ஆகியோர்.நாடகத்தை போடவேண்டும், அது மனித உரிமை என்று சாரு நிவேதிதாவை ஆதரித்து வந்தவர்கள் டாகர் கே.ஏ. குணசெகரன்,பொதியவெற்பன் ஆகியோர்.

சாரு நிவேதிதா பாதி உண்மையைச் சொல்லும் பழக்கமுள்ளவர் என்று தான் படுகிறது.

Thursday, December 23, 2010

"ஈருள்ளியும்" இன்சூரன்ஸும்

"ஈருள்ளியும்" இன்சூரன்ஸும்


தமிழகத்தின் தென்பகுதியில் "ஈருள்ளி" என்றால் வெங்காயம். அதுவும் சின்னவெங்காயம். சோற்றுக்கு வெஞ்சனம் வேண்டாம்.வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு பொதும்.பழைய சோற்றுக்கு இவை இருந்தால் ஒரு வெட்டு வெட்டிடலாம்.

சிலோன்,சிங்கப்பூர், மலேசியா என்று அனுப்புவார்கள்.பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு இதுதான் "மைய" உணவு.சிலொனுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக போகும். தெயிலைத் தோட்ட தோழிலாளர்களுக்காக அனுப்புவர்கள். யாழ்ப்பாணத்திற்கும் பொகும். யாழ்பாணத்தில் அப்போதெல்லாம் பனங்காடுகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனங்குடலில் பாடுபடும் மக்களுக்கு பனம்பழம் ஒருவெளைஉணவு.அதோடு,பனங்கிழங்கு, நுங்கு,பதனீர், கள்ளூ விளைவிப்பார்கள். பனம்பழம் மிகவும் ருசியாக இருக்கும்.வாசனை தூக்கி அடிக்கும். சிறு வயதில் அனுபவித்து உண்டிருக்கிறேன்.தாழ்த்தப்பட்ட இவர்களை "பனஞ்சூம்பிகள்" என்று மேல் வகுப்பினர் அழைப்பார்கள். ஒரு வேளை அரிசி சோறு உண்டு அதற்கு வெஞ்சனம்தான் "ஈருள்ளீ'"

சின்னவெங்காயத்தை சிலோனுக்கு அனுப்பும் பொது அதற்கான ஆவணங்களொடு இன்சூரன்ஸ் சான்றுகளையும் இணைக்க வெண்டும்.இல்லை யென்றால்.கப்பலில் ஏற்றமுடியாது.தூத்துக் குடி நகரத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கும்.கொழும்பு துறைமுகம் போக ஆறு மணி நேரம் ஆகலாம்.இந்த ஆறுமணிநெரத்திற்காக இன்ஸுரன்ஸ் கட்டணம் தேவையா என்று கருதும் வியாபாரிகள் உண்டு.

பொது இன்சூரன்ஸ்( GeneraL) துறையில் முதலில் பாலிசி கொடுப்பதில்லை. Cover note என்று ஒரு காகிதத்தைக் கொடுப்பார்கள். தவிர பொது இன்சூரன்ஸ் மாலை 4மணிக்கு ஆரம்பித்து மறுநாள் மாலை 4மணிக்கு முடியும். வெங்காய வியாபரி யிடம் கம்பெனி கட்டணத்தை வசூலிக்கும்.கணக்கில் காட்டாது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு போய்ச்செர்ந்ததும் அங்கிருந்து தந்தி வரும்.வியாபாரி,கம்பெனி, கப்பல் ஏஜெண்டு கட்டணத்தை பங்கு போட்டுக் கோள்வார்கள்.சிக்கல் வந்தால்,கணக்கில் காட்டி நட்டஈடு பெற்று விடுவார்கள்.

ஒன்றரையணா வெங்காய வியாபரத்தில் இவ்வளவு தில்லு முள்ளு பண்ணமுடிகிறது என்றால் கோடிக்கணக்கில் வியாபாரம் பண்ணு பவர் என்ன இளிச்ச வாயரா?

Tuesday, December 21, 2010

எல்.ஐ.சி.யில் இட ஒடுக்கீடு......

எல்.ஐ.சி யில் இட ஒதுக்கீடு.....


1956ம் ஆண்டு ஆயுள் காப்பிட்டுத்துறை தேசீயமயமாக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சலுகைகள் 1972ம் ஆண்டுதான் வழங்கப்பட்டதுஅந்த ஊழியர்கள். கேட்ட போதெல்லம் எல்.ஐ.சி ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட.து. அதில் தலையிட முடியாது என்று அரசு கூறியது

1980 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு போராட்டம் நடந்தது.அங்கு மருத்துவக்கலூரியில்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான மேற்பட்ட படிப்பில் கொடுக்கப்பட்ட சலுகையை ரத்து செய்யவேண்டும். நோயாளிகளின் உயிரோடு விளையாடக்கூடாது. தகுதி அடிப்படையில் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று போராடினார்கள் பா.ஜ.க தன்னைத்தூக்கி.நிறுத்த கிடத்த சந்தர்ப்பமாக இதனக் கருதி.யது மெலும் நடுத்தரவர்க்கமும் இதில் முனைப்பாக நின்றது குஜராத்.மாநிலத்தில் ஒரூ விசேஷ நிலைமயும் அப்போது நிலவியது.

1950-60ம் ஆண்டுகளில் தாழ்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் மிகவும் கராராக அமல்படுத்தப்பட்ட மாநிலமாகும் அது.அதன் காரணமாக பழங்குடிகள் படித்து பட்டம் பெற்று பணியிலும் பதவியிலும் இடம் பெற்றார்கள்.தொழில்வளம் வளர்ந்து அதன் காரணமாக புதிய மத்தியதரவர்க்கம் . உருவாகியது அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்பு இல்லை. இவர்களின் அதிருப்தியை விசிறி விட்டு குளிர்காய ப.ஜ.க விரும்பியது."உங்கள் துயரத்திற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களுக்கானா சலுகை தான்.பாருங்கள்.எப்படியிருந்த பழங்குடியினர் எப்படி உயர்ந்துள்ளார்கள்.உங்கள் வேலை வாய்ப்பை பறித்தவர்கள் இவர்கள் தான்" என்று பிரச்சாரம் செய்தார்கள்.பொராட்டம் நடந்தது.ஏமாந்த மத்தியதர வர்க்கம் மூர்க்கமாகப் பொராடியது.

பந்த் அறிவிக்கப்பட்டது அகமதாபாத்,சூரத்,பரொடாஎன்று மாநிலம் முழுவதும் பரவியது.மத்திய மாநில அரசுஊழியர்கள் ஆசிரியர்கள்,வங்கி உழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். ஆனால் எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டும் பங்கெடுக்க மறுத்துவிட்டனர்."சமுக நீதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆடிமைபட்டிருந்தவர்களுக்கு,நியாயம் கிடைத்துள்ளது.இது பாரபட்சமானது அல்ல. இது நியாயத்தின் பாரபட்சம் ஆகவே இந்த.போராட்டத்தில்

கலந்து கொள்ளமாட்டோம்" என்று அறிவித்தனர்

பலம் பொருந்திய இந்த சங்கத்தை உடைக்க நிர்வாகம் சமயம்பார்த்துக்கொண்டிருந்தது. ப.ஜ.க ஆதரவாளர்கள் கருங்காலிகள் என்று குரலெழுப்பி தடுக்க எல்.ஐ.சி ஊழியர்கள் A.I.I.E.A LONG LIVE என்று கொஷம் போட்டுக்கொண்டு அலுவலகம் சென்றனர். அரசு ஊரடங்கு உத்திரவினப்போட்டது.ஊழியர் அசரவில்லை. கல்கத்தாவில் உள்ளதலமையை அணுகினர். "நிர்வாகத்திடம் வேலைக்கான 'பாசை" வாங்கிக்கோண்டு உள்ளே நுழையுங்கள்" என்றது அந்த தீரமிக்க தலைமை.காத்திருந்த நிர்வாகம் வழங்க மறுத்தது.ஊழியர்கல் அசரவில்லை".காப்பீட்டு ஊழியர் சங்கம் வாழ்க' என்று குரலெழுப்பியவாரே உள்ளே சென்று சமூக நீதியைக் காத்தனர்.

நான் ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. வங்கியில் என் ஓய்வூதியத்தை எடுக்கும் போதெல்லாம் என்மனம் A.I.I.E.A என்று குரலேழுப்பும். சுற்றுமுற்றும் .பார்த்துவிட்டு என் வாய் LONG LIVE என்று முணுமுணுக்கும்.

Thursday, December 16, 2010

ஊழல் தெய்வீகமானது.....

ஊழல் தெய்வீகமானது.....


"நகர்வாலா ஊழல்" பற்றி எழுதீயிருந்தேன்.பதிவர் ஒருவர் இது தான் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் என்ரு கருதிவிட்டார்.மத்தாய் ஊழல்,பிஜு ஊழல், முந்திரா உழல் என்ரு நேரு காலத்து ஊழல்கள் பற்றி எழுத ஆரம்பித்தால், எழுதி மாளாது.

மகாயோக்கியர்கள் என்று கருதப்படும் பிரிட்டிஷ் ஆண்டகாலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தான் இதற்கான சுழியை பொட்டவர். அப்போது வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை நடந்து கொண்டிருந்தது.ஹூக்ளியின் கவர்னராக ராஜா நந்த குமார் இருந்தார்.அவர் நவாபால் நியமிக்கப்பட்டவர்.சிலபகுதிகளில் நவாபு ஆட்சியும் சில பகுதிகளில் ஆங்கிலெயர் ஆட்சியும்நடந்துகொண்டிருந்த காலம் அது.நவாபுக்கு வாரிசு இல்லை.அவர் மனைவி தத்து எடுத்துக் கொண்டார் கவர்னர் ஜெனரல் அதனை அங்கீகரிக்க வேண்டும் இல்லை யென்றால் நாடு நவாபுக்குப் பிறகு பிரிட்டிஷார் வசம் போய்விடும்.கவர்னர் ராஜா நந்தகுமார்.ராணியின் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருலட்சம் வாரன்ஹேஸ்டிங்க்ஸ் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அங்கீகாரமளித்தார்.நாணயமான மனிதர்.வாங்கிய லஞ்சத்திற்கு ரசீது கொடுத்திருந்தார்.ப்ரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுந்தது. பாராலுமன்ற உறுப்பினர் எட்மண்ட் பர்க் வாதிட்டார் Impeachment of Warren Hestings என்ற பர்க் கின் உரை ஆங்கில இலக்கியத்தில் ஒரு மைல்கல்.நான் படிக்கும் காலத்தில் .B.A. இலக்கியமானவ்ர்களுக்கு அந்த உரை பாடமாக இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க முதன் முதலாக இந்தியாவில் உச்சநீதிமன்றம் உருவாக்க பட்டது.முதல் நீதிபதியாக வாரன் தன் ஆப்த நண்பரை நியமித்தார்.

இதுதான் முதல் ஊழலா? இல்லை.வரலாற்றில் கொஞ்சம் பின்னால் செல்லவெண்டும்

தக்காண பீட பூமியில் நவாபுகள் ஆட்சி.ராமன் என்பவர் வரிவசூல் செய்து,கஜானாவில் கட்டவேண்டியவர்.வசூலித்து அவர் விருப்பம் போல் செலவு செய்துவிட்டார்.நவாபு அவரப்பிடித்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார். ராமனின் துன்பத்தைக் காணமுடியாத இரண்டு பெரியமனிதர்கள் ராமோஜி, லஷ்மணோஜி என்பவர்கள் ராமன் கட்டவெண்டிய வரிப்பணத்தைக்கட்டி அவரை விடுவித்தார்கள்.ராமன் கட்டிய கொவில் தான் பத்திராசலத்தில் உள்ளது. அந்தக் கொவீல் மூர்த்திகள் தான் ராமொஜியும்,லஷ்மணொஜியும். ராமன் தான் பக்த ராமதாஸ

இதுதான் முதலா? இல்லை. அதற்கு தாய் தமிழகத்திற்கு போகவேண்டும்.

மதுரையை பாண்டிய மன்னர் ஆண்டகாலம்.தன் படை பலத்தை அதிகரிக்க குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்தார். தன் மந்திரி யிடம் பொற்காசுகளைக்கொடுத்து அனுப்பினார் மந்திரி அதனை தனதாக்கிக்கொண்டார். மன்னர் கேட்டபோது திரு திருவென்று விழித்தார்..அப்போது தென்னாடுடைய சிவன் நரிகளைப் பர்களாக்கி அவரைக்காப்பாற்றினார்.மதுர அருகில் உள்ள திருமொகூர் ஆலயம் தான் மந்திரி கட்டியது." நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்த" பாடலுக்கு பத்மினி ஆட நாம் ரசித்துக்கோண்டிருப்போம்.

ஊழல் செய்த அதிகார்களையும் அரசியல் வாதிகளையும் தெய்வாம்சம் பொருந்திய பக்த ராமதாசாகவும் மாணிக்க வாசகராகவும் கொண்டாடும் பண்பாடு கோண்டவர்கள்நாம்

Scam is divine

ஊழல் தெய்வீகமானது

Tuesday, December 14, 2010

நகர்வாலா ஊழல்.....

நகர்வாலா ஊழல்.....


டில்லிப்பட்டண வங்கியிலே,

கொள்ளைபோன அறுபதுலட்சம்,

கள்ளப்பணமா வெள்ளைப்பணமா?

காங்கிரஸ்காரன் கருப்புப்பணமா?

டில்லிராணியே இந்திராவே!

அல்லிராணியே என்ன பதில்?

என்ற தணிகைச்செல்வனின் கவிதைவரிகளைக் குரலெழுப்பி மதுரையின் நான்கு மாசிவீதிகளிலும் ஊர்வலம் வந்த ஆயிர்க்கணக்கானவர்களில் நானுமொருவன்.நகர்வாலா ஊழல் என்று பத்திரிகைகள் வர்ணித்தாலும் நகர்வாலா என்பவன் அம்பு.

பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி.பெரிய படிப்பாளி என்று சொல்லமுடியாது.கார்களை ரிப்பெர் பார்க்கத்தெரியும். இந்தியமக்களுக்கு 40000ரூ கார்கொடுக்க அரசு ஒருதிட்டம் பொட்டது.சஞ்சய் மாருதி கார் தாயாரிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.அரசு அதற்கான அனுமதியைக் கொடுத்தது. சஞ்சய் இன்ஞ்சின் தயாரிக்கும் பொறுப்பை எற்றுக்கொண்டார்.

இதற்கிடையே டெல்லி சர்வதேச விமானநிலயத்தில் ஒரு சம்பவம் நடந்தது.சந்தெகப்படும்படி இருந்த ஒருவனை போலீஸ் பிடித்தது. அவனைபொட்டு உலுக்கியதில் உண்மையைக்கக்கிவிட்டான். அவனுடைய பெட்டியில் அறுபது லட்சம் ரூ இருந்தது.விமானத்தில் மொரிஷியஸ் செல்லும் பயணி ஒருவரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளான்.

உள்குட்டு வேறு. அந்த விமானத்தில் சஞ்சய் மொரிஷியஸ் பொவதாக டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது அவர் கடைசினிமிடத்தில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.மொரிஷியஸ்,பெய்ரூட்,போன்ற இடங்களில் கள்ளப் பண பரிவர்த்தனை சர்வசாதாரணம்.பிரச்சினை பெரிதாகியது.

முக்கியமான கேள்வி அறுபதுலட்சம் யாருடையது? எங்கிருந்து வந்தது?

டெல்லி நாடளுமன்ற விதியில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் எடுக்கப் பட்டுள்ளது. வங்கியில் குரலை மாற்றிபேசி பணத்தை மொசடியாக எடுத்தவன் இவந்தான் என்று நகர்வாலா என்பவனைக் காட்டினார்கள். மாருதி கம்பெனிக்காக சஞ்சயிடம் கொடுக்க விமானனிலயம் வந்த பணம் இது. கொடுக்க வந்தவனை போலீஸ் பிடித்துவிட்டது. அதன மறைப்பதற்காக பிடிபட்டவனை மறைத்து அப்பாவி நகர்வாலாவைக் காட்டுகிறார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.நகர்வாலாவுக்கு "திக்குவாய்". அவன் குரலை மாற்றி பெசியிருக்க முடியாது.

வழக்கு நடந்தது. வழக்கு நடக்கும் பொதே நகர்வாலா இறந்தான் இந்த வழக்கை புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் காஷ்யப் விபத்தில் இறந்தார்.காஷ்யப் மரணத்தை விசாரிக ராமநாதன் வந்தார். விசாரணை சம்பந்தமாக டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் பொது லாரி மோதி இறந்தார். இந்த ஊழலை நாடளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜோதிர்மயி பாசு அவசரநிலைக்காலத்தில் அவரக் கைது செய்து.சித்திரவதை செய்தார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக வெலியே வந்து இறந்தார்.

பின்னாளில் மாருதி கம்பெனி "மாருதி உத்யோக் " ஆனது. நாடளுமன்ரவீதி ஸ்டேட் வங்கியில் அறுபதுலட்சம் ரூ தூக்கிக் கொடுத்த அதிகாரி மாருதி உத்யொக் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரானான்.

Sunday, December 12, 2010

ஜரிகைப் பட்டு...

ஜரிகைப் பட்டு...


தங்கம்,வெள்ளி,பட்டுநூல் ஆகியவற்றின் விலை குலைநடுங்க வைக்கும் நிலையில் ஜரிகைப் பட்டு பற்றி எழுதுவது அராஜகம்தான்.காஞ்சியிலோ,காசியிலோ பட்டு நெய்பவர்கள் ஜரிகையை "கண்டு " கணக்கில் வாங்கி பயன் படுத்துகிறார்கள்.ஒரு "கண்டு" என்பதுசுமார் 250கிராம் இருக்கும்.ஒரு 20000 மீட்டருக்கு குறைவாக நீளமிருக்கும்.ஜரிகை நூலின் கனம் .3 மில்லிமீட்டர் இருக்கும்.

2005ம் ஆண்டு கிராம் 640 ரூ ஆக இருந்த தங்கம் இன்று 1500 ரூ தாண்டியிருக்கிறது.வெள்ளி கிராம் 10ரூ யாக இருந்தது இன்று 40ரூ யாக இருக்கிறது.பட்டுநூல் கிலோ 600ரூ யாக இருந்தது இன்று 2000ரூ ஆகீவிட்டது.ஒருகண்டு ஜரிகை3150ரூயாக இருந்ததுஇன்று7000ரூ ஐ நெருங்குகிறது.

தரமான தங்க ஜரிகை என்றால் 55% வெள்ளி,24% பட்டுநூல்,22% செம்பு, .60 % தங்கமிருக்கவேண்டும்.

சந்தையிலொ பொலிஜரிகை தான் ஆக்கிரமித்துள்ளது.நாம் வங்கும் ஜரிகைப் பட்டு எந்த அளவுய தரமானது? ஒரு ஆய்வின்படி சென்னையில் 80% ,ஹைதிராபாத்தில் 70%, மைசூரில் 50% போலி ..

இந்தியாவில் ஜரிகை சூரத்தில் 55%சதம்,மீதமுள்ளவை வாரணாசி,ஆக்ரா,ஜெய்பூர்,ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. சூரத்தில் கி.பி. 16ம் நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது.வெள்ளிக்கட்டியிலிருந்து நூலைத்தயாரிக்கும் பணி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.சூரத்தில் உள்ள ஐந்து ஆறு குடும்பங்களுக்கு மட்டுமே அது தெரியும்.

ஹைதிராபாத்தில் வெள்ளியை கம்பியாக திரிக்கும் ஆரய்ச்சி நடபெருகிறது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் ஜரிகை தயாரிக்க தானியங்கி தொழிற்சாலை ஒன்று இருக்கிறதுஇந்தியாவில் தமிழ்நாட்டில் "நல்லி" ஒன்ருதான் 60% வெள்ளீ ஜரிகையைப் பயன் படுத்துகிறது.மற்றவை...?

ஜரிகையின் தரத்தை பரிசோதிக்க .இயந்திரம் உள்ளது. ஆனால்ஜவுளிக் கடைகரர்கள் பரிசோதிப்பது அவர்களை அவமதிப்பதற்குச்சமம் என்று கூறி மறுக்கிறார்கள்.

பதிவர்கள் யாராவது நுகர்வோர் நீதிமன்றம் போனாலாவது விடியுமா?

Monday, December 06, 2010

"ஆஷ்" கொலை வழக்கும் பாரதிதாசனும்.......

"ஆஷ்"கொலைவழக்கும், பாரதி தாசனும்.....


மணியாச்சி சந்திப்பில் கலக்டர் ஆஷ் இருந்த பெட்டிக்குள் வாஞ்சி ஐயர் நுழைந்தபோது வெளியே சற்று தள்ளி வெள்ளை வெட்டி சட்டையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் என்று சென்ற இடுகையில்குறிப்பிட்டிருந்தேன். ஒரு வேளை வாஞ்சி யின் குறி தப்பிவிட்டல்,அசந்தர்ப்பமாக ஆஷ் கொல்லப்படவில்லையென்றால்,காரியத்தைக் கச்சிதமாக முடிக்க உதவிக்கு அனுப்பப் பட்டவந்தான் தள்ளி நின்றவன். ஆஷ்துரைசெத்தான் என்று தெரிந்ததும் அவன் தப்பிவிட்டான் தப்பிபயவன். பெயர் மாடசாமி.

இதெல்லாம் பிரிட்டிஷ் பொலீசுக்கு தெரிய ஒருமாதமாகியது. மூன்று பெரைப்பிடித்ததில் . சோமசுந்தரம் பிள்ளை அப்ரூவராக மாறி தகவல் கிடைத்தது. ஆஷை கொல்ல ஒருவர் அல்ல இருவர் அனுப்பப் பட்டிருந்தனர் என்பதே அதன் பிறகு தான் போலீசுக்குத்தெரியும். அதற்குள் மாடசாமி பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரஞ்சு இந்தியாவுக்கு போய்விட்டான்.

அங்கு ஏற்கனவே பாரதி,வ.வெ.சு.ஐயர்,பி.பி.ஆசார்யா ஆகியொர் இருந்தனர்.ஆசார்யா கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ம்பித்த போதே உறுப்பினரானவர். வாஞ்சிகுழுவினருக்கு துப்பாக்கி வந்ததே இவர்கள் மூலம் தான் என்று ஒரு செய்தி உண்டு.கொல்லப்பட்டவன் பிரிட்டிஷ் கலக்டர். அரசுக்கு சவால். ஆகவே ஆங்கிலேயரின் நிர்ப்பந்தம் பிர்ஞ்சு அரசாங்கத்திற்கு இருந்த்தது. ஆங்கில பிரஞ்சு போலீசார் பாண்டிசேரி முழுவதும் மாடசமியைத்தேடி அலைந்தனர். பாரதி, வ.வே.சு ஐயர் ஆகியொர் கண்காணிக்கப்பட்டனர். மாடசாமி வந்தால் அடைகலம் கொடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் இருந்தன.

மாடசாமி பாண்டிச்சேரி வந்ததும் உடனடியாக அவனை வெளிநாடு அனுப்பவேண்டும்.பாண்டியில் இருப்பது ஆபத்து. ஐரோப்பாவுக்கு தமிழ் மட்டுமே தெரிந்த மாடசாமியை அனுப்புவது ஆபத்து. ஆகவே பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமின் தலைநகரமான சைகோன் அனுப்புவது என்று முடிவாகியது. மாடசாமியை சைகோன் அனுப்பும் ஏற்பாட்டைக் கவனிக்கும் பொறுப்பு பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்டது

பாண்டிச்செரியில் பெரியகப்பல் கள் வராது. நடுக்கடலில் நிற்கும். கரையிலிருந்து தோணிகள் மூலம் பயணிகள், சரக்குகள் எடுத்துச்செல்லப்பட்டு கப்பலில் எற்றப்படும். மாடசாமியை ஒரு இருட்டான நட்ட நடுநிசியில் தோணியில் கொண்டுசென்று ஏற்ற முடிவாகியது.தோணியில் பாரதிதாசனும் மற்றவர்களும் ஏறிக்கொண்டனர். கூடவே ஒரு மீன் படகும் சென்றது.

கப்பலை நெறுங்குக்போது போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர். உள்ளே பாரதிதாசன் இருந்தார்.ஆனால் மாடசாமி யில்லை .தோணியை போலீசார் விட்டுவிட்டனர். இதனை எதிர்பார்த்த பாரதிதாசன் மாடசாமியை தோணியில் ஏற்றாமல் மீன்படகில் ஏறச்சொல்லியிருந்தார். போலீசாரைப் பார்த்த மீன் படகு கப்பலருகில்செல்லாமல் நடுக்கடலை நோக்கிசென்றது மாடசாமி என்ன ஆனார்?

( திருநெல்வேலியில் அந்தக்காலத்தில் T.M.B.S என்றொரு பஸ் கம்பெனி இருந்தது. அவர்களுக் லாரியும் உண்டு. அதற்காக சென்னையில் ஒரு .கிட்டங்கி வைத்திருந்தனர். சைகோன் பொகமுடியாத மடசாமி மீன் படகுமூலம் சிலோன் சென்றதாக ஒருபேச்சு உண்டு 1950 வாக்கில் வயதான மாடசாமி தன் குடும்பத்தைத்தேடி நெல்லை வந்ததாகவும்

அவர்களைப் பர்ர்க்கமுடியாமல் சென்னை சென்றதாகவும் கூறுகிறார்கள். சென்னயில் TMBS கம்பெனி கிட்டங்கியில்

காவலாளியாக பணியாற்றுவதாக தெரிந்து கொண்டு அவருடைய உறவினர்கள் விசாரித்துள்ளனர். அ.வர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கம்பனி அவர்களிடம் கூறியிருக்கிற்து.இவை உறுதி செய்யப்படவில்லை.)

Saturday, December 04, 2010

"ஞான்... அ..மரிக்கான் பொகுன்னு..."

"ஞான்... அ...மரிகான்  பொகுன்னு".......


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது 1905லிருந்து 1908 வரை தென் தமிழகத்தில் புரட்சிகரமான சுதந்திர இயக்கங்கள் அதிகமாகவும் ரகசியமாகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தன.கலேக்டர் வின்ச்துரை அனுப்பிய ரகசிய குறிப்பில் திருநெல்வெலி மாவட்டத்தில் குறப்பாக தூத்துக்குடியில் கூடுதலாக இருப்பத்தாக தெ.ரிவித்தது.அதற்குக் காரனமுமிருந்த்தது.

வங்க மக்களிடயே தேசீய தாகம் கூடுதலாக இருந்தது.1905ம் ஆண்டு கர்சான் பிரபு வங்கத்தை இரண்டாகப்பிரித்தான்.இதனை எதிர்த்து.இளைஞர்கள் வீருகொண்டு எழுந்தனர்.ஆங்காங்கே புரட்சிகரக் குழுக்க.ளாக செயல்பட்டு வெள்ளையர்களை ஆயுத்மேந்தி விரட்ட முடிவு செய்தனர்.இந்த இயக்கம் கசிந்து வங்கக்கடலோரம் பரவி தூத்துக்குடி வரை பற்றியது

அதே சமயம் பரொடா கங்கிரஸ் பொய்விட்டு வந்த வ .உ.சிதீவிரமாக செயல்பட்டார்.தினம் ஒரு பொதுக் கூட்டம்,என்று நெல்லை மாவட்டம் முழுவதும் சுற்றிவந்தார்.தூத்துக்குடி மில்லில் தொழிற்சங்கம் தோன்றியது.கப்பல் கம்பெனி உருவானது.தூத்துக்குடிக்கு என்று தனியாக ஆஷ் என்பவன் சப்கலெக்டராக நியமிக்கப்பட்டான். பிரிட்டிஷாரின் பிடி இறுகி கொடூரமாகியது.

1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தெதி. ஆஷ் துரை நெல்லை வந்து கலெக்டரைப் பர்த்துவிட்டு தூத்து க்குடி செல்ல ரயிலேருகிறான். சிலோன் பொட் மெயிலுக்காக மணியாச்சி சந்திப்பில் ரயில் காத்திருக்கிறது.ஆஷ் இருந்த பெட்டி முன் வெள்ளை வேட்டி.கோட்டு, உச்சிக்குடுமியோடு ஒருவன் நிற்கிறான். அவனுடன் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தவன் சற்று தள்ளி நிற்கிறான்.உச்சிக்குடுமி ரயில் பெட்டிக்குள் ஏறுகிறான். துப்பாக்கி வெடிக்கும்சத்தம் கெட்கிறது.ஆஷ் மனைவி மேரியின் மடியில் செத்துவிழுகிறான்.பெட்டிக்கு வெளியே நின்றவன் ஓடிவிடுகிறான்.உச்சிக் குடுமி பெட்டியிலிருந்து வெளியேறி கழிவரைக்குள் செல்கிறான்.துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

போலீசார் கழிவரையில் பார்க்கும்போது உச்சிக்குடுமி பிணமாக கிடக்கிறான் அவன் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருக்கிறது.அதில்"எங்கள் ராஜா வெள்ளைக்காரர்கள் அல்ல. 5ம் ஜார்ஜ் எங்கள் அரசன் அல்ல. அவன் இந்தியாவந்தால் சுட்டுத்தள்ளப்படுவான்.வெள்ளையர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள மதறாஸ் மாகாணத்தில் 3000 பெர் ரத்தக்கயெழுத்திட்டு காளி மேல் சத்தியம் செய்திருக்கிறோம்.---R.வாஞ்சி ஐயர்

போலிசார் விசாரணையில் தெரியவந்தது.செங்கோட்டையில் வசிப்பவர் ரகுபதி ஐயர். தெவஸ்வம் பொர்டில் காரியம் செய்துவந்து ஓய்வு பெற்றவர்.அவர் மகன் வாஞ்சி நாதன்.புனலூரில் ஃபாரஸ்ட் வாச்சராக இருக்கிறான்.மனைவி பெயர் பொன்னம்மாள். சமிபத்தில் தான் பெண் குழந்தை இறந்துள்ளது. அடிக்கடி பரோடா,மற்றும் வடமாநிலங்களுக்கு செல்வான்.அவனுக்கும் தந்தைக்கும் இதனால் சுமுக உறவு கிடையாது

சம்பவம் நடந்த முன் தினம் மனைவி பொன்னம்மாளிடம் பேசியிருக்கிறான். அவன் சார்ந்த இயக்கத்தில் பொய் சொல்லக்கூடாது. அதனால் தான் ஆஷ் துரையைக் கொன்றுவிட்டு கழிவரைக்குள் ஓடி வாயில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுட்டு மரணமடந்திருக்கிறான்.

"நாளை எங்கே பொகிறீர்கள்? என்று பொன்னம்மாள் கேட்டாள். வாஞ்சி யோசித்தான்.கொஞ்சம் இழுத்தான். "அ..மரிக்கான் பொகுன்னு".(சாகப்பொகிறேன்)மலையாளத்தில் உண்மையைச் சொல்லிவிட்டான். பேதை பொன்னம்மாள் கணவன் அமேரிக்கா செல்வதாக மகிழ்ந்தாள்.

( ஃப்ரண்ட் லைன் பத்திரிகையில் ஏ.ஆர். வெங்கடாசலபதி கட்டுரை,தினமணி காதிரில் ரகமி எழுதியது.ஆகியவற்றை ஆதரமாகக் கொண்டது,அடுத்த ஆன்டு வாஞ்சியின் நூற்றாண்டு நினவு .தினம்.ஆஷ் துரையின் மகன் ராபர்ட் என்பவர் வருவதாகக் சொன்னதாக வெங்கடாசலபதி கூறிருக்கிறார்.நல்லது..நமக்கு நினைவிருக்குமா?)

Thursday, December 02, 2010

"வழிப்பாடல்" நாவலும் நெடுஞ்சாலைத்துறையும்

"வழிப்பாடல்" நாவலும் நெடுஞ்சாலைத்துறையும்


விபூதி பூஷன் பந்தோபாத்யாயா "வழிப்பாடல்" என்ற நாவலை எழுதினார். வங்காள பிராமணக்குடும்பம் எப்படி தன் அடையாளமிழந்து தன்னை நவீனப் படுத்திக்கொண்டு வாழ்க்கயை மீட்டெடுக்கிறது என்பதுதான் நாவலின் சாரம்.20ம் ஆண்டுகளின் துவங்கி அன்றய வாழ்க்கையைலிருந்து இன்றுவரைசித்தரிக்கும் இந்த நாவலை திரைப்படமாக எடுக்க சத்தியஜித் ரே விரும்பினார்.ஒரே படமாக எடுக்காமல் மூன்று படங்களாக எடுக்க திட்டமிட்டார.Apu Trialogy என்று உலகம் போற்றும் "பதேர் பஞ்சாலி"(வழிப்பாடல்) அபு சன்சார்(அபுவின் உலகம்) அபராஜிதோ(அபராஜிதன்) ஆகிய மூன்றும் தான் அவை.

பதேர் பஞ்சாலி படம் எடுக்க ஆரம்பித்தார். அதுவரை தான் சேமித்து வத்திருந்த பணத்தில் படப்பிடிப்பு தவங்கியது.பனப்பற்றாக்குறை. மனைவியின் நகை,விற்கப்பட்டது. நண்பர்கள் மூலமாக பணம் வந்தது.ஆனாலும படம் முடியவில்லை. படப்பிடிப்பு நின்றுவிட்டது. ஓராண்டாக ரே செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.இதற்கிடையில் நடிகர் ஒருவர் மரணமடைந்தார்.வேரு வழியின்றி மாநில அரசின் உதவியை நாடினார்.

அப்போதெல்லாம் திரைப்படத்துறை அங்கீகரிகப்படாத ஒன்று.முதலமைச்சராக பி.சி.ராய் இருந்தார். அவர் உதவ விரும்பினாலும் செயல்பட முடியவில்லை.முக்கிய அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனை செய்வதாகக் கூறி ரே ஐ அனுப்பினார்.

அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஒவ்வொரு துறை அதிகாரியும்" நான் ஆட்டைக்கு வரவில்லை" என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி வரவில்லை. அவர் தனக்குப் பதிலாக இளம் அதிகாரி ஒருவரை அனுப்பியிருந்தார்.இளம் கன்று."ஐயா! நான் குறிப்பு ஒன்றை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறென். நீங்கள் எற்றுக்கொண்டால் உதவமுடியும்" என்றார். முதல்வரும் "குறிப்பை அனுப்பிவையுங்கள்" என்றார்.

முதல்வர் பார்வைக்கு: நெடுஞ்சாலை துறையின் விளம்பரத்திற்காக இந்த் ஆண்டு 3 லட்சம் ஒதுக்கப்பட்டது செலவழிக்கப் படவில்லை.மூன்ருமாதங்களுக்குள் செலவழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனை திருப்பி அனுப்பிவிட வேண்டும தயாரிக்கப்படும் படத்தின் பெயர் "வழிப் பாடல்".நெடுஞ்சாலையின் விளம்பரத்திற்காக இந்தப்படத்திற்கு 3 லட்சம் அளிக்க அனுமதி அளிக்கவும்.என்று அந்த இளம் அதிகாரி எழுதிவத்தார். முதல்வர் அனுமதிதார்.

உலகத்தில் இதுவரை எடுத்த படங்களில் பத்தை தேர்ந்தெடுத்தால் அதில் "பதேர் பாஞ்சாலி"யும் ஒன்று. பத்து இயக்குனர்களை எடுத்தால் அதில் சத்யஜித் ரே ஒருவர்.

அவரை உலகுக்கு தெரியவைக்க குறிப்பு எழுதிய அந்த இளம் அதிகாரியின் பெயர் சுப்பிரமணியன்.

தமிழ் நாட்டச்செர்ந்தவர்.

Tuesday, November 30, 2010

கடல்----

கடல்......


மதுரையில் பணியாற்றுவதற்கு முன்பாக நான் ஹைதுராபாத்தில் பணியாற்றினேன். ஹைதிராபாத்தையும் செகந்திராபாத்தையும் இரட்டை நகரம் என்பார்கள். இரண்டு பகுதிக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது.(57-58ம் ஆண்டு) அந்தக்குளத்திற்குப் பெயர்தான் ஹுசைன் சாகர்.

மத்திய இந்தியாவின் மையப்பகுதிகளில் பெரிய கம்மாய் என்றாலே சாகரம் என்று பெயர்வைத்து விடுவார்கள். .இங்குள்ள மக்கள் 500லிருந்து 1000 மைலாவது சென்றால் தான் கடலைப் பார்க்கமுடியும்.இந்தபகுதியின் தென் கோடியில் இருப்பதுதான் தக்காண பீடபூமி.

ஹைதிராபாத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் உண்டு.அப்பொது நான் திராவிடநாடு பிரிந்தால் தான் நாம் உருப்படுவோம் எனும் விடுதலை இயக்கத்தின் ஆதரவளன்.தெலுங்கானா மக்கள் நம்ம திராவிட நாட்டவர்கள் என்ற எண்ணமும் உள்ளூர இருந்தது

ராமாராவ்,ராம்மோகனராவ்,அனுமந்தராவ்,ரஃபீக் அகமது ஆகியோர் எனக்கு நெருக்கமானவர்கள்.. மதிய உணவு இடைவேளையில் பெசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் "கடல்" பற்றியதாகத்தான் இருக்கும்.அவர்கள் சமுத்திரத்தையே பார்த்திராத்வர்கள்.

"வேவ்ஸ் ஐஸி ஆதி கியா?" என்று ராமாராவ் கைகளை உயர்த்திக்காட்டுவான். பரிதாபமாக இருக்கும்.

"நான் சமுத்திரத்தை சினிமாவில் தான் பர்த்திருக்கிறேன்" என்பான் ரஃபிக்.நான் அள்ளி விடுவேன். அலைகளின் மிது ஏறி விளயாடுவது பற்றி அளப்பேன்.

ராமேஸ்வரத்தில் குளித்திருக்கிறேன்.குளத்தில் கூட கொஞ்சம் கூடுதலாக அலைவீசும்.திருச்செந்த்தூரில் குளித்தது பற்றி அளப்பேன்.இறுதியில்.நான் அவர்களை அழைத்துக்கொண்டு மெட்றாஸ் போய் மெரினா பீச்சை காட்டுவதாக உறுதி அளித்ததும் கலைவோம்.இது தினம் நடக்கும்.

ஹைதிராபாத்.நாகபுரி,ஜான்சி, போபால்,டெல்லி, ஏன் அயொத்தி ஆகியநகரங்களில் உள்ளவர்களில் பலரின் நிலமையும் இது தான். டெல்லியிலிருந்து சென்னை வரும் வடநாட்டவர்கள் கூடூர் தாண்டியதும் சமுத்திரம் தெரிகிறதா என்று பார்க்க ஆரம்பிப்பார்கள்.பார்த்தவுடன் பெரியவர்கள், முதியவர்கள் கன்னத்தில் பொட்டுக்கொள்வார்கள். குழந்தைகல் குதூகலிப்பார்கள்.

மத்தியப்பிரதேசத்தின் விந்தியமலையின் ஒரு சிகரம்தான் திரிகோணமலை. அதன் அடிவாரத்தில் உள்ள பெரிய நீர் நிலையை வால்மீகி கவித்துவமாக சாகரம் என்று கூறியுள்ளார். அங்குள்ள கொண்டு இன மக்களின் தலவனை இன்றும் ராவணண் என்று அழைக்கிறார்கள் என்று கூறுவொரும் உண்டு.

வால்மீகி ராமாயணத்தை குறிப்பாக உத்தரராமாயணத்தை படிக்கக்கூடாது என்பார்கள்.எதைக் கூடாது என்கிறார்களோ அதனச்செய்து பார்பது மனித இயல்பு.நானும் மனிதன் தானே. மலையாளத்தில் "காஞ்சன சீதா" என்று ஒரு திரைப்படம் வந்தது.அரவிந்தன் எனற புகழ் பெற்ற இயக்குனர் எடுத்தது.ராமர் யாகம் செய்கிறார். சீதையில்லாமல் யாகம் செய்யமுடியாது. அதனால் தங்கத்தால் சீதையின் பதுமை செய்து அருகில் வைத்துக்க்கொண்டு யாகம் செய்கிறார்.

ராமர் பிறந்த இடத்தை நீதிமன்றமே அடையாளம் காட்டிவிட்டது. "வில் ஒன்றும் சொல் ஓன்றும்" கொண்ட விரன் ராராமன்.பராக்கிரமத்தில் அவனுக்கு ஒப்பார் இல்லை. அவனுடைய நினவிடம் எது?

அரவிந்தன் அடையாளம் காட்டுகிறார். யாகம் முடிந்து சரயு நதிக்கு நீராடச்சென்ற ராமர் "கசத்தில் " விழுந்து இறக்கிறார்.

ராமருக்கு நீந்தத் தெரியாது!

Sunday, November 28, 2010

ரயில்........

ரயில்.....


நான் பிறந்துவளர்ந்தது திருநெல்வெலி பாட்டப்பத்து கிராமம்.அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. பள்ளியின் பின் புறம் வாய்க்கால்.அதன் மீது ரயில் பாலம். ரயில் வரும் நேரம் பார்த்து"சார்"என்று ஒற்றை விரலைக்காட்டிவிட்டு ரயில் கடகட சத்தத்தோடு பொவதைப் பார்க்க ஓடுவோம்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொது திலி டவுண் ரயிலடி வழியாகச்செல்வோம்.நின்று கிளம்பும் ரயிலில் "மோஷனில்" ஏறி இறங்குவோம்.ம.தி.த இந்து கல்லூரி திலி ஜங்ஷனில் உள்ளது.அங்கு இண்டர் படித்தேன்.கல்லிடைக்குரிச்சியிலிருந்து தினம் 22மைல் ரயிலில் வந்து படித்தேன்.இதுவல்லாம் முக்கியமல்ல. அப்பொது நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது.சென்னயிலிருந்து நாகர் கோவிலுக்கு டிக்கெட் கொடுப்பார்கள். திலி.ஜங்ஷனில் இறங்கி out agency எனப்படும் பயோனியர் பஸ்மூலம் நாகர்கொவில் செல்லவேண்டும்.

களக்காடு தொடங்கி கன்யாகுமரி வரை ரயில் கிடையாது. கல்விச்சுற்றுலா என்று கூறி பள்ளீ மாணவர்களை ரயில் பார்க்க ஜ்ங்ஷன் அழைத்து வந்து பர்த்தால் உண்டு.அந்தக் காலத்தில் ரயில் பார்க்காத கல்லூரி மாணவர்கள் குமாரி மாவட்டத்தில் உண்டு.

பல மாநிலங்களில் பணியாற்றிவிட்டு மாற்றலில் மதுரை வந்துசெர்ந்தேன்.மேற்கு வெளிவீதியில் உள்ள பாரத் கட்டிடத்தில் தான் அலுவலகம்.புதிதாக .நியமனம் பெற்றவர்களில் நாகர்கோவிலைச்சார்ந்த மூன்று பெர் அதில் உண்டு.ரயிலையே பார்க்காதவர்கள்.வெளிவீதிக்கு அடுத்து மதுரை குட்ஷெட்.,ரயில்நிலயம் உள்ளது.

நாகர்கொவில் பையங்கள் முன்று பெரும் காலையிலேயே வந்துடுவிடுவார்கள்.மூன்றாம் மாடிக்குச்சென்று ஜன்னல் அருகில் நிற்பார்கள்."எல!ராமந்த்ரா! எல!இஞ்சினுல! எம்புட்டு பெரிசு பாத்தியால! இங்கவால!" துரைசாமி ராமச்சந்திரனைக் கூப்பிடுவான்."சும்மாகெடக்கணம் தொரை! மெள்ள பேசேம்ல! இந்த ஊர் புத்திமான் நம்மள பட்டிக்காட்டான்னு நினைக்கப்போறான்" என்று ராமந்ரன் பதில் சொல்லுவான்.மூண்றாவதாக உள்ள விட்டல் தாஸ் அழுத்தமானவன். அமைதியா பார்த்துக்கோண்டிருப்பான்.

மாலை 5மணியானால் அருகில் இருக்கும் ரயில் நிலையம் சென்று விடுவார்கள்.இஞ்சின் அருகில் இருந்து சாவி மாற்றுவதைப் பார்ப்பார்கள். டிரைவர்,கார்டு,டி.டி.இ, பாயிண்ட்ஸ்மான்,ஏன் பொர்டரிடம் கூட ரயிலைப் பற்றி அதிசயிப்பார்கள்.

இப்போது ராமசந்திரன் மகன் ஒருவன் டெல்லியிலும்,மற்றோருவன் சிங்கப்பூரிலும் இருக்கிறான்."டெல்லிபோகும் போது சொல்லேன்ரயிலடியில் பார்க்கிறேன்"என்றால்" எங்கப்பா!இந்தப் பயிலுக ரயில ஏறப்படாதுங்கா.பிளைட் தான் இப்போ"என்று பதில் வருகிறது.குமரி மாவட்ட c.i.t.u தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

துரைச்சாமி பேரன் பேத்தியோடு சவுகரியமாக இருக்கிறான். விட்டல் தாசின் ஒரே மகள் அமெரிக்காவில் வசிக்கிறார்.

Friday, November 26, 2010

"மழை"....

மழை


தீராதபக்கங்களில் பதிவர் மாதவராஜ்."மழைக்காலம்"என்றொரு அற்புதமான பதிவினை இட்டிருந்த்தார்.வேப்பமரத்தின் கிளையில் நனைந்த காகம் கரையாமல் அமர்ந்திருந்ததயும், பச்சைநிற பூச்சி ஒன்று ஊர்ந்துசெல்வதையும் வர்ணித்திருந்தது அழகுணர்வின் உன்னதமாக இருந்தது." இன்னைக்கு எங்களுக்கு லீவு" என்று சிறுவர்களும்,சிறுமிகளும் கூவிக்கொண்டு ஒடும்போது நாம் கால தேச வர்த்தமானங்களை மறந்து பரவசப்பட்டோம்.

நான் இப்போது வசிப்பது நாகபுரியில்.இந்த ஊரின் கோடை வெப்பம் உங்களுக்கு நினவில் வரலாம்.இந்த ஊரின் மழையும்,பனியும் கூட அற்புதமான அனுபவத்தைக்கொடுக்கும்.

மழை என்பது வானுக்கும் பூமிக்கும் கடப்பாரைக்கம்பிகளால் சாரம் கட்டியதுபோல் இரண்டுநாள் மூன்றுநாள் அடிபின்னும்.நீரில்லை என்ற நிலமை வந்தது கிடையாது.ஊர் எப்போதுமே பச்சைப்பசேல் என்றிருக்கும் "மாசற்ற சூழலைக் கொண்ட ஒரே நகரம்" என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஊர் இது.

தேசீய சுற்றுச்சூழல் பொறியியல் ஆரய்ச்சி மையம்(.NEERI).இங்குதான் உள்ளது.தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலைக்கு அனுமதிமறுத்த நிருவனம் அது மழை பெய்தால் ரயிலடியில் ரயில் வருவது.தெரியாத அளவிற்கு கொட்டும்.

சமிபத்தில் மதுரை நண்பர்கள் சிலர் டெல்லி சென்றார்கள். அவர்களைச்சந்திக்க ரயிலடி சென்றிருந்தேன். மழை கொட்டியது.நிலயக் கட்டிடத்தை நோக்கி ஓடினேன். வாசலில் வெட்டவெளியில் சிறுவர் சிறுமியர் உள்ளாடை மட்டும் அணிந்துகொன்டூ மழையில் நனைந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்தால் இந்தியர்களைபோல் தெரியவில்லை. செக்கச்செவேல் என்று ஈரானியர்களைப் போல் இருந்தார்கள்.அவர்களின் உதவியாளர்களைப் போல் இருந்தவரிடம் விசாரித்தேன்.அவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள்.ஷேக் குடும்பம். உதவியாளர் மெலும் சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவர்கள் ஊரில் மழையே பெய்யாதாம். குழந்தைகளுக்கு மழை என்றால் என்ன வென்றே தெரியாது.ஷேக்குகள் குழந்தகளை மே, ஜூன் மாதங்களில் மும்பை அழைத்து வந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி மழைக்காக காத்திருப்பார்கள். மழை வந்ததும் புல்வெளியில் நனைந்து ஆடிப்பாடி மகிழ்வார்களாம்.

பூமிப்பந்து எப்படிப்பட்ட பூகோள அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கிறது!

மழையைப் பார்க்காதவர்கள் உண்டு..... சரி!

ரயிலைப் பார்க்காதவர்கள் உண்டா?......உண்டு.

Thursday, November 18, 2010

டாக்டர் அம்பேத்கரும் நாமும்....

அம்பபேத் கரும் நாமும்


" டக்டர் பாப சாகெப் அம்பெத்கர்" என்ற தமிழ் திரப்படம் டெசம்பர் மாதம் 3ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.கம்ய்னிஸ்ட்கள் எடுத்த "பாதைதெரியுது பார்"என்ற படத்தை விநியோகிப்பதற்காக ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாங்கினார்.பெரிய கம்பெனி-அனுபவஸ்தர்-படம் சக்கைபோடு போடும் என்று தோழர்கள் மகிழ்ந்தனர்..சென்னைக்கு அருகிலுள்ள கிராமத்து கீத்துகொட்டகையில் ஒருவாரம் ஒட்டிவிட்டு பட டப்பாவை கிட்டங்கியில் பொட்டுவிட்டார்.அந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன்.ஜயகாந்தன்.கெ.சி.அருனாசலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.இசைத்தட்டு விற்பனைமட்டுமே நட்டமில்லாமல் ஆக்கியது.

டாக்டர் அம்பேத்கர் படத்தையும் அப்படிப்பண்ணக்கூடிய ஆபத்து தெரிவதால் இதுபற்றி படத்தை பார்க்க மக்களைடம் போகவேண்டும் என்ற யோசனையும் வந்தது.அந்தப்படம் பற்றி ஒருஇடுகை எழுதியிருந்தேன்.

வெளிநாட்டு நண்பர் ஒருவர் " நான் பள்ளியில் படிக்கும் போது காந்தி,நேரு பற்றி படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு அம்பேத்கர் பற்றி தெரியவில்லை.நான் படித்த பள்ளியில் மட்டும் அப்படியா?" என்று எழுதியிருதார்.

மற்றொரு நண்பர்" நானும் படித்ததில்லை. திருமாவளவன்,கிருஷ்ணசாமி போன்று மராட்டியத்தில் அம்பேத்கரும் ஒரு தலைவர் என்று தான் கருதியிருந்தேன்" என்கிறார்.

" நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு இவையெல்லாம் பாடமாக இருக்கவில்லை' என்று கூறினார் இவர்களில் பலர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

இன்றய தமிழக தலித் தலைவர்கள் "அம்பேத்கர்" பெயரைச்சொல்லி தங்களை வளர்த்துக் கொண்டார்களோ என்று தோண்றுகிறது.மராட்டிய நண்பர்கள் சிலரிடம் பேசினேன்." அவர்கள் தங்களை " தலித்" என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அழைத்துக் கொள்வதில்லை. "நான் ஒரு அம்பெத்கரைட்" என்று நெஞ்சுயர்த்தி கூறி கொள்கிறார்கள்." அம்பேத்கரைட்" என்பது ஒரு இயக்கமக மாறியதால் தான் அவர் பெயர் நிலைத்துவிட்டது.

அம்பேத்கர் ஒரு "பௌத்தர்" என்று கூறிக்கொண்டு பௌத்த மதத்தை வளர்க்கும்சாக்கில்,தலித்துகளை புறந்தள்ளும் பணிக்கு ஜப்பான், தாய்லாந்து நாடுகள் மூலம் கோடிகணக்கில் நிதியாதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அம்பேத்கர் வாழ்ந்த காலதில் கடுமையாக போராடவேண்டியதிருந்தது.

அவருடைய மரணத்திற்குபிறகும் இதே நிலை தொடரலாமா?

Tuesday, November 16, 2010

டாக்டர் பாபா சகேப் அம்பெத்கர் திரைப்படம்......

டாக்டர் பாபா சாகேப் அம்பெத்கர் திரைப்படம்....


டிசம்பர் மாதம் 3ம் தேதி அன்றுஅண்ணல் அம்பெத்கரின் வாழ்வினைச்சித்தரிக்கும் திரைப்படம் தமிழில் வெளியிடப்படுகிறது.இதில் அம்பேத்கராக நடித்த மம்முட்டிநடிப்புக்கான தேசீய விருதினைப் பெற்றார். நிதின் தேசாய் கலை இயக்குனர் விருதினைப்பெற்றார். இதனை இயக்கிய டாக்டர் ஜப்பார் படெல் சிறந்த இயக்குனருக்கான விருதினை ஏற்கனவே பெற்றவர்.

பூனே நகரத்தில் உள்ள குழந்தை மருத்துவத்தில் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் டாக்டர் படெல். அவருடைய இதய தாகம் நாடகங்கள்..Theatre Accademy என்ற அமைப்பை உருவாக்கினார். விஜய் தெ.ண்டுல்கரின் உலகப்புகழ் பெற்ற நாடகமான "காசிராம் கொத்வால்" நாடகத்தை இயக்கியவர் ஜப்பார் படேல்.

"தலித் இலக்கியம் மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அது உயர்ந்த நிலைக்குச்சென்றது. பலமானதும் கூட.அதனால் புத்தியுள்ள மராட்டியனுக்கு அம்பெத்கர் யார் என்று தெரியும் யாரும் தலித் இலக்கியத்தை ஒதுக்கமுடியாது" என்கிறார் ஜப்பார் படெல்.

" அம்பேத்கர் பாத்திரத்திற்காக வெளிநாட்டில்கூட தேடினோம்.இறுதியில் இரண்டு பேரை முடிவு செய்தோம். அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்க நினைத்தோம் ஆனால் எனக்கு மமுட்டி மீது ஒரு கண் இருந்தது.மூன்றாவது நபர் மூலம் தொ.டர்பு கொண்டபோது ஒரு புன்னகை தான் பதிலாக வந்தது.கம்ப்யூட்டர் மூலம் அவர் முகத்தில் சில மாற்றங்களை வரைந்து பார்த்தேன். அம்பேத்கருக்கு மிக நெருக்கமான உருவ ஒற்றுமை.கிடத்தது" என்று விளக்கினார்.

" நடிக்க ஏற்றுக்கொண்ட பிறகு அவரிடம் ஏற்பட்ட மாற்றம் அற்புதமான ஒன்று. அம்பேத்கர் மாதிரியே புன்னகை. அவரைமாதிரியே கோபம்.அவரை மாதிரியே அறிவார்ந்த பாவனையை கொண்டுவந்த அழகை படம் பார்த்துத்தான் அனுபவிக்கவேண்டும்.உள்ளார்ந்த ஈடுபாடுஇல்லையென்றால் இதனைச்சாதிக்கமுடியாது" என்று வர்ணித்தார்.

"நான் சொல்வதை மிகக் கூர்மையாகக் கவனிப்பார்.திரைக்கதையை மீண்டும் மீண்டும் படிப்பார்.அம்பேத்கர் என்ற மாமனிதரை உள்மனத்தில் அறிவின் உதவியோடு நிர்மாணித்துக் கொண்டார். படத்தில் அவருக்கு மிகப்பெரிய உரைகள் கிடையாது.மௌனத்தின் மூலமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தினார்." என்கிறார் ஜப்பார் படேல்..

"காந்தியைப்பற்றி அதிகம் சொல்லவில்லை என்ற விமரிசனம் எழுந்ததே ?"என்று கேட்டபோது"நான் அம்பேத்கர் பற்றிதான் படம் எடுக்கிறென்.அதில் காந்திக்கு எவ்வளவு இடமுண்டு' என்றார்.

"அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் படித்தகாலத்தில் அந்த வளாகத்திற்குள் கருப்பின மக்கள் நுழையக்கூடமுடியாது. பல்கலைகழகத்தின் எதிரில் தான் நிக்கிரோக்களின் செரி.அந்த்ப் பகுதியில் அவர் நடந்து சென்றிருப்பாரே! ஏதாவது நட்ந்திருக்குமே" இவை எல்லம் என்மனதிலோடியவைகள்.நாங்கள் அங்கே சென்றும் படம் பிடித்தோம்"

"காந்தி படத்திற்கு 18 கோடி கொடுத்தார்கள். இந்தப்படத்திற்கு மராட்டிய மாநிலம் ஒரு கோடி கொடுத்தது.மத்திய அரசு 5கோடி கொடுத்தது." என்று ஜப்பார் படெல் குறிப்பிட்டார்.

Monday, November 15, 2010

முகேஷ் அம்பானியின் 27மாடி வீட்டில் ஒருநாள்.......

முகெஷ் அம்பானியின் 27 மாடி வீட்டில் ஒரு நாள்...


. மும்பையில் 8000கோடி ரூபாயில் 27மாடி வீட்டில் தான் முகேஷ் அம்பானி வசிக்கிறார். அவருடைய வீட்டில் ஒரு நாள்.......

காலை 6மணிக்கு 15வது மாடியிலிருக்கும் அவருடையபடுக்கை அறையில் எழுந்து விடுவார்.எழுந்ததும் குளத்தில் போய் குளிப்பது அவருடைய வழக்கம்.

17வது மாடியில் அவருக்காகவே ஒரு குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளம்.அங்கு போய் குளிப்பார்.

குளித்ததும் காலை சிற்றுண்டி வேண்டுமல்லவா! அதற்காக 19வது மாடிக்குச் செல்வார். அதன் பிறகு

வெளி வேலைகளுக்குச்செல்லவேண்டும்.உடைமாற்ற 14வது மாடிக்கு ச்செல்வார்.வெளியே செல்வதற்கு முன் அவருடைய தனி அலுவலகம் இருக்கும் 21வது மாடிக்குச்சென்று தேவையான கோப்புகள், கைபெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்வார்.

அவருடைய நீதபாய் அம்மையாரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவர் வெளியே சென்றதில்லை. அவரிடம் சொல்லுவதற்காக 16வது மாடிக்கு செல்வார். குழந்தைகள் 13வது மாடியில் தான் தங்குகின்றன போவதற்கு முன் அங்கு சென்று குழந்தைகளிடம் "டாடா" வங்கிக்கொண்டு புறப்படுவார்.

அவருக்கு எப்போதுமே மெர்சிடெஸ்-பென்ஸ் வண்டி என்றால் பிடிக்கும்.250லட்சம் ரூபாயில். (2.5கோடி) நிற்கிறது.கார்களை நிறுத்துவதர்க்காகவே மூன்றாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதுமே அவருக்கு மெர்சிடெஸ்-பென்ஸ் காரை அவரே ஓட்டிச்செல்வதுபிடிக்கும். மூன்றாவது மாடிககுச்சென்று காரைத்திறக்க சாவியை எடுக்.... சாவியில்லை.பாண்ட் பாக்கட்டில் தெடினார். கோண்டுவரமறந்துவிட்டர். எங்கு விட்டிருப்பேன்? எந்த மாடி? 15ஆ?17ஆ? 13,16, 19,21? பணியாட்கள்,சமயல்காரன்,காரோட்டிகள், தோட்டக்காரன். எல்லாரும் தெடினார்கள். கிடைக்கவில்லை.வருத்தத்தோடு "அயோனா" வண்டியை எடுத்துக்கொண்டு போனார்.

அவருடைய வீட்டில் துணி துவைக்கும்பெண்வரவில்லை.தாற்காலிகமாக ஒரு பெண் வந்து கொண்டிருந்தார்.16வ்து மாடியின் பால்கனியில் உலர்த்தியிருந்த பாண்ட் காற்றில் பறந்துபோய்விட்டது சாவீ அந்த பாண்டில் தான் இருந்திருக்கும் என்று நீதுபாய் கருதுகிறார்.

இரண்டு நாள் கழித்து நீதுபாய் கேட்டார்" ராத்திரி பூராவும் ஒரே சத்தம்".விர்-விர்" என்ற சத்தத்தில் தூங்கவே முடியவில்லை.நீங்கள் லேட்டாக வந்தீர்களா?" என்று அம்பானியிடம் கெட்டார்." இல்லையே" என்றார் அவர்



மெர்சிடேஸ்- பென்ஸ் கம்பெனி ஜெர்மனியில் இருக்கிறது.சாவி தொலந்துவிட்டது அல்லவா? புது சாவி வாங்க ஜெர்மனி போன ஹெலிகாப்டர் சாவியோடு திரும்பிவந்து 27வது மாடியில் இறங்கிய சத்தம் தான் அது.

(நெட்டில் சுட்டு கொஞ்சம் விரிவாக்கப்பட்டது.)

Sunday, November 14, 2010

திரைப்படத்தில் நான் நடித்த காதை.......2

திரைப்படத்தில் நான் நடித்த காதை


மனிதர்களுக்கு வாய்ப்புவரும் அதுவும் ஒருமுறைதான் வருமாம்.நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்களை எழுதியிருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன்.த..மு.ஏ.ச.தலைவர்களில் ஒருவரான செந்தில் நாதன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.நாம் எடுக்கப் போகும் திரைப்படத் தில் நீங்கள் நடிகிறீர்கள்.உடனடியாக கு.சி.பா வை தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதியிருந்த்தார்.நாமக்கல் சென்று அவரைத்தொடர்பு கொண்டு படக்குழுவோடு சேர்ந்து கொண்டேன்

முதன் முதலாக காமிரா முன் நிற்கிறேன். கற்பழிக்கும் காட்சி பங்களுருவில் உள்ள நாடகக்குழுவான "சமுதாயா"வின் தோழர் சுதாவை கற்பழிக்கும் காட்சி. இதற்கு சாட்சியாகத்தான் அந்த ஜன்னலில் தெரிந்தமுகம் எப்படிப்பட்ட வாய்ப்பு!

எனக்கு தத்துவ போதம் அளித்தவர்களில் ஒருவர்,சுத்ந்திரப்போராட்ட தியாகி, மார்க்சிஸ்ட் கட்சியீன் மத்தியகுழு உறுப்பினர், மாநிலத்தலைவர்களில் ஒருவர்- தோழர் என்,சங்கரய்யா தான் ஜன்னலில் நின்று பார்த்துக் கோண்டிருந்தார். நான் தயங்குவதைப் பார்த்து இயக்குனர் செல்வராஜ்" என்ன சார்! என்ன சிக்கல்" என்றார்."ஒங்க சித்தப்பா அங்க நிக்காரு. நான் எப்படி சார் நடிக்க" என்று பதில் கூறினேன். ஜன்னலருகில் சென்ற அவர்" சின்ன நாயினா! உள்ளவாங்க" என்று சொல்லி காமிராவுக்குப்பின்னால் இருட்டான பகுதியில் நாற்காலியில் அமர்த்தினார். அவர் இருட்டில் இருந்தாலும் நான் வெளிச்சத்தில் செய்வதை பார்க்கத்தானே செய்வார்.

படப்பிடிப்பு சென்னயில் தொடர்ந்தது. டப்பிங்கும் அங்குதான்.இரண்டுக்கும் செல்லவேண்டியதாயிற்று சவுண்டு இஞ்சினியர் வைத்ததுதான் சட்டம். தொழில் முறை டப்பிங்கலஞர்களைத்தான் அவர் விரும்புவார்.என் காட்சிகளுக்கு நான் குரல் கொடுத்தேன். நான் மதுரை திரும்பியதும் அதை வெட்டிவிட்டார்.

டெக்னீஷியங்களிடமும், உதவியாள்ர்களிடமும் துணைநடிகைகள் படும் பாடு சொல்லும்படி இல்லை. பாவம்! சுயமரியாதை என்பதை நினைகக்கூட முடியாது. சீனியர் துணை நடிகைகள் புதியவர்களை வசக்குவார்கள். பதினந்து வயதுப் பெண் கச்சையை இறுகக் கட்டி பத்துவயது சிறுமியாக நடிக்க வாய்ப்பு கெட்டு உதவியாளர்களை நாடுவார் ""வா!பாப்பா! வா! "என்று மடியில் அமர்த்திக் கொண்டு அந்தத்தடியன் தடவுவான்.அவன் எண்ணம் சிறுமிக்கு இல்லை அந்தப்பெண்ணுக்கு புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதைவிட கொடுமையானது தூரத்தில் நிற்கும் அவளூடைய தாயின் நிலை.

துணை நடிகர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் அவர்கள் தவியாளர்களிடம் படும்பாடு--புழுவைவிட கெவலமாக மதிக்கப்படுவது--உண்ண அனுமதிகிடைத்ததும் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி தலைதெரிக்க ஓடுவது--சகிக்கமுடியாதவைகள்.

"ஹாலிவுட்" உறுவானது பற்றி ஹெரால்டு ராபின்ஸ் Dream Merchants என்ற நாவலில் விவரிப்பார். கோடம்பாக்கத்தில் நூறு நாவல்கள் எழுத வாய்ப்பு உள்ளது.

படம் முடிந்து, படத்தொகுப்பும் முடிந்து, தணிக்கை முடிந்து,முதல் பிரதியும் வந்தது.நிர்வகத்தால் வேலியிட முடியாமல் போயிற்று. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு முறை போட்டுக்காட்டப்பட்டது.பாடல்களும்,படமும் நன்றாக உள்ளது.ஐம்பதுநாட்கள் ஓடும் என்று சிலர் சொன்னர்கள்

படத்தொகுப்பாளர் நண்பர் மூலம் நான் வரும் ஒரே ஒரு 35எம் எம் பிலிமை வாங்கி போட்டோவாக்கி சுவரில் மாட்டியிருந்தேன்.சாட்சியாக. .

Friday, November 12, 2010

திரைப்படத்தில் நான் நடித்த காதை...

திரைப்படத்தில் நான்  நடித்த காதை


த.மு.எ.ச நண்பர்கள் சிலர் செர்ந்து திரைப்பட்ம் எடுக்கலாம் என்று யோசித்தனர்."யுக சந்தி" என்ற கம்பெனியும் உருவாக்கப்பட்டது.மூத்த எழுத்தார்கள் கு.சி.பா, செந்தில்நாதன்,டி.செல்வராஜ் வேறு சிலர் இயக்குனர்களாக இருக்க சம்மதித்தார்கள். எந்த கதையை எடுப்பது என்ற விவாதத்தில்,தாகம்,தேநீர் என்ற இரண்டும் முன்னுக்கு வந்தன. இறுதியில்" தாகம் "முதலில் எடுப்பது என்று முடிவாகியது.கம்பெனியின் நிதி ஆகியவற்றை குசிபா அவர்களே கவனித்துக்கொண்டார்கள்.

த.மு.எ.ச நாடக நடிகர்களை அதிகமாக பயன் படுத்துவது என்றும் கூறப்பட்டது படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜா.. பாடல்கள் தணிகையால் எழுதப்பட்டன. "அன்னக்கிளி " ஆர்.செல்வராஜ் இயக்கம். செல்வராஜ் திரைப்படச்செய்திகளை "தீக்கதிர்"பத்திரிகைக்கு எழுதி நிருபராக இருந்தவர்.சுதந்திரப் போராட்டவீரரும் மார்க்சிஸ்ட் கட்சிதலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா அவர்களின் சகொதரரின் மகன் தான் செல்வரஜ்.

விநியோகஸ்தர்கள் விருப்பம், வர்த்தக நுணுக்கம் கருதி நடிக நடிகைகள் தேர்வு இயக்குனரிடம் விடப்பட்டது.வளர்ந்து வரும் நடிகையான இ.வி.எஸ்.விஜயலட்சுமி காதாநாயகி.கன்னடத்தச்சேர்ந்த குமாரராஜா கதாநயகன்.தாகம் நாவலில் வரும் மாரப்பன் பாத்திரத்திற்கு சிலோன் சின்னையா. மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரைச்சார்ந்த துரைராஜ்,காஸ்யபன், சென்னையைச்சர்ந்த சீதராமன் ஆகியோரும் உண்டு

நாமக்கல்லிலிருந்து செல்லும் கொல்லிமலை அடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்தது.தயாரிப்பு பணியில் தன்னந்தனியாக பணியாற்ற வேண்டியதிருந்ததால் கு.சி.பா வால்கதைவசனத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனையும் இயக்குனரே கவனித்துக்கொண்டார்.கொஞ்சம் கொஞ்சமாக கதை தாகத்திலிருந்து திசைமாரியது தாகம் என்பதற்குப்பதிலாக."புதிய அடிமகள்" என்று பெயரும் மாறியது

நான் அலுவலகத்திற்கு செல்லாமல், சொல்லாமல் வந்திருந்தேன்.துரைராஜ் மில் தொழிலாளி.மிகக் குறந்த.வாழ்வாதரங்களைக் கொண்டவர்கள்.காலையில் படப்பிடிப்பிற்கான உடைகளை அணிந்து கொண்டு தயராக இருப்போம். யாருக்கு, என்று, எங்கே, படப்பிடிப்பு என்பது தெரியாத.நிலமை காமரா முன் அமர்ந்.திருக்கும் போதும் வசனம் எது என்று தெரியாது.எந்த விதமான திட்டமிடலும் இல்லை என்றே தொன்றியது.

காலையில் சிற்றுண்டி. கோழிக்கறியோடு அருமையான இரவு உணவு. ஒரு வாரம் வரை என்னைப் பயன்படுத்தவில்லை. வெட்டியாக அமர்ந்திருப்பதும் சரியில்லை என்று தோன்றியது அவ்வப்போது கு.சி.பா சில வேலைகளைக் கொடுப்பார்.அதனைச்செய்வேன்.ஒருநாள் பரபரப்பாக இருந்தது.உடையலங்கார காசி எனக்கு படப்பிடிப்பு இருப்பத்தகக் கூறினார். ஒருவீட்டில் படப்பிடிப்பு. நான் என் மகனின் மனைவியை கற்பழிக்கும் காட்சி படமாக விருந்தது. காலையிலிருந்தே மனம் பதைபதைத்தது.என் மனை மக்கள் நினவாகவே இருந்த்து.

காமிரா முன் நான் பலியாடு மாதிரி நிண்றேன்.நான் கற்பழிக்கப்பட வேண்டிய நடிகை தாயாராக இருந்தார்.நான் காமத்தொடு அவரப்பார்க்கவெண்டும். அவருடைய மாரப்பு சேலையை உருவ வேண்டும். துணை இயக்குனர் லட்சுமி நாராயணன் சொல்லிக்கொடுத்தார். நான் நடிகையைப் பார்த்தேன்."சார்! உங்க மகளை பார்ப்பது போல் பார்க்காதீர்கள்."என்றார் இயக்குனர் செல்வராஜ். சுற்றிமுற்றும் பார்த்தேன்.வெளியிலிருந்து ஜன்னல் வழியாக.

படப்பிடிப்பை பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.அதில் தெரிந்த அந்த முகம்.....என் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிவிட்டது

(தொடரும்)

Tuesday, November 09, 2010

காற்றழுத்தக் குக்கருக்கு "வடிகால்" போல-----

காற்றழுத்த "குக்கருக்கு " வடிகால் போல.....


புனே திரைப்படக் கல்லூரி அவ்வப்போது பல்வெறு ஊர்களில் திரைப்பட ரசனை பயிற்சி முகாம்களை நடத்தும். அப்படியோருமுகாமுக்கு சென்றிருந்தேன். பெராசிரியர் சதீஷ் பகதூர் தான் நடத்துவார்.மார்க்சீயத்தின் பால் ஆர்வமுள்ளவர்.இதுதவிர,பி.கெ.நாயர்,டாக்டர்.சியாமளாவனரசே ஆகியோரும் வகுப்புகள் நடத்துவார்கள்.பெராசிரியை சியாமளா "வெகுஜன உளவியல்" பாடத்தை நடத்துவார்.பின்னர் மதுரை வந்துவிட்டேன்.

என் நண்பர் ஒருவரின் மகள் சிறந்த படிப்பாளி. உயர் கல்வியில்"உயிரியல்" அப்போதுதான் மெட்டவிழ் கின்ற நேரம். அந்தப்பெண்ணிற்கு பாரிஸ் பல்கழகத்தில் உயர்கல்வி படிக்க இடம் கிடத்தது.வெளிநாட்டில் படிக்க பெண்களை அனுப்புவது பரவலாகாத காலம். பெற்றோர்கள் தயங்கினார்கள்நான் தலையிட்டு அனுப்பச்சொன்னேன் ஆறு ஆண்டுகள் அங்கே படித்தார்.

திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர். அப்போது"சிவந்தமண்" என்ற படத்தைப் பார்க்க துடியாய்துடித்தார்

"ஈவில்டவர்" காட்சி" வரும்போது கைதட்டி ரசித்தார்."ஏன்மா! டவர நேர்ல பா த்தவ.நிழல பாத்து குதிக்கிறயே" என்றேன். "போங்கமாமா!புறநகர் பகுதில நலுபேரா தங்கியிருந்தோம்.பொங்கிசாப்பிட்டு மெட்றோவில காலேஜ் போய்வரவே உதவிப்பணம் பத்தாது.இதுல எங்க ஊர்சுத்த"என்றார்.ஈவில்டவரை பார்க்காத அவருடைய ஆதங்கம் திரைப்படத்தால் நிறைவேறியது.

என் உறவுக்காரப்பெண் மாநில அரசு ஊழியர்.ஞாயிறு அன்றும் காலையில் எழுந்து ஆறு ஏழு படவைகளை தோய்த்து,மடித்து வைப்பார்.அப்போதுதான் தினம் ஒரு புடவையை "மணம்"மாக கட்டிக்கொண்டு போகமுடியும். தினம் ஒரு புடவை வாங்கமுடியாதே! திரைப்படத தில் கமலும் ரேவதியும் பாடல் காட்சியில் நிமிடத்திற்கு ஒரு ஆடையில் ரேவதிவருவதை ரசிப்பதின் மூலம் அவருடைய அந்தவார ஆசை,நிராசை எல்லாம் வடிந்துவிடும்.

அநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டா?திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும்,அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது

."Ángry young man" அமிதாப் வெற்றி பெற்றதின் சூட்சுமம் இதுதான்.

சோறு வடிக்கும் குக்கரில் அழுத்தம் காரணமாக அரிசி வேகிறது.அழுத்தம் அதிகமானால் வெடித்துச்சிதறி விடும்.அதற்கு வடிகாலாக உள்ளே இருக்கும் ஆவி வெளியெற ஏற்படுகள் உள்ளன.

. சமூகத்திற்கும் பக்தி,ஆன்மீகம்,கடவுள் என்று பலவடிகால்கள் உண்டு.

இன்று திரைப்படம் அத்தகைய வடிகாலாக பயன்படுகிறது.

Tuesday, November 02, 2010

ஆந்திர மாநிலமும் தெலுங்கானாவும்

ஆந்திர மாநிலமும் தெலுங்கானாவும்


ஆந்திரா ஒன்றாக இருக்கவேண்டும் - இல்லை அதனைபிரித்து தெலுங்கானா உருவாகவேண்டும் என்று இரண்டுகருத்துகளின் மோதல் தான் பிரச்சினை என்கிறார்கள். இந்த இடுகையின் மூலம் சில உண்மைகளைச் சொல்லாம் என்று கருதுகிறென்.

" ஒக்க ஆந்திரா"காரர்கள் புராணகாலத்திலிருந்து எப்படியிருந்தது என்று மகாபாரதம்,ராமாயணம் என்று ஆதாரங்களை வைக்கிறார்கள அப்படியானால் .எப்போது பிரிந்தது,எப்போது செர்ந்தது, இப்போது ஏன் பிரியவெண்டும் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

அசாஃப்சாஹி வம்சம் ஆண்டபொது குண்டூர், கிருஷ்ணா,கோதாவர்,ராயலசீமா, மற்றும் தற்போதய தெலுங்கானா எல்லாமே ஒன்றாகத்தன் இருந்தது.கிழக்கிந்தியக் கம்பெனி வந்தபிறகு தான் சிக்கல் ஆரம்பமாகியது. 1776ம் ஆண்டு அசஃப்சாஹி அரசர் குண்டூர், கிருஷ்ணா,கோதாவரி மாவட்டங்களை கம்பெனிக்கு கொடுத்தார். அதே ஆண்டு ராயலசீமா மாவட்டங்களையும் கம்பெனிக்கு கொடுத்தார்.ஏன் கொடுத்தார்? அவர் அரசர்? இவர்கள் முதலாளிமார்கள்.கொடுப்பார்கள். வாங்குவார்கள். நாம் கேட்க முடியாது.1857 க்குப்பிறகு கம்பெனி சர்யாக ஆட்சி செய்யவல்லை என்று கூறி ஆங்கிளேய அரசு ஆட்சியை எடுத்துக் கொண்டது. அப்பொது கம்பெனியிடமிருந்து மதறாஸ் மாகாணத்திற்கு தெலுங்கு பேசும் மக்கள் சென்றது.கிருஷ்னா நதியும்,கோதாவரியும் பாய்ந்தாலும் வெள்ளமும்,வறட்சியும் மாறிமாறி அந்தப்பகுதியைச்சீரழித்தன. ஆங்கிலேயரசு கிருஷ்ணாவிலும்,கோதாவரியுலும் தடுப்பணைகளைக் கட்டியது.செழிப்பான வயல்களில் புகை இலையைப் போட்டால்-- பணப்பயிரென்று விவசாயியும், பிரிட்டிஷ் முதலாளிக்கு அபரிமிதமான லாபமும் கிடைக்குமே! பணக்கார விவசாயிகள் அரசியலிலும் பங்கெடுக்க வந்தனர்.

நிஜாம் ஆட்சியில் ஜமீந்தாரிமுறை அமலில் இருந்தது .மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் நடந்தது. வளர்ச்சிப்பணி என்று எதுவும் கிடயாது.கொத்தடிமைகளாக வாழ்ந்தார்கள். கல்வி ,சுகாதாரம்,பொக்குவரத்து என்று எதுவுமே இல்லை.நீராதரங்கள் பூராவும் பிரிட்டிஷ் இந்தியாவின் கையில். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வி கற்ற விவசாயிகள் அரசியல் உணர்வு பெற்றவர்களாக வளர்ந்தனர்.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் இயகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இவர்களின் துணையோடு தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்தது.ராஜாஜியும், நேருவும் இதனச்சாதகமாக்கி நிஜாமை வசக்கினர். நிஜாம் வளைந்தார்

புதிய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தெலுங்கு பேசும் மக்கள் ஒன்றிணைய வெண்டும் என்பது நியாயம்தானே! ஆனால் நிஜாம் ஆட்சியில் ஏத.மற்றவர்களாக ஆகியமக்கள் எப்படி கல்வியிலும்,வசதியிலும் சிறந்த டெல்டா மக்களோடு போட்டி பொடமுடியும். ஆகவே சில சலுகைகளை அவர்கள் கெட்டனர்.ஒப்பந்தம் உருவாகியது.தெலிங்கானா பகுதியில் மற்ற பகுதியினர் நிலம் வாங்கக்கூடாது.வேலை வாய்ப்பில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும்.(இதனை முல்கி விதி என்பார்கள்) இந்த ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படவில்லை.(மூன்று ஆண்டுகள் தெலுங்கானாவில் வாழ்ந்தாக சான்று இருந்தால் முன்னுரிமை.ஏராளமான ராமசாமிகளும்,சுபிரமாணியங்களும் அரசு போலீஸ் பணிகளில் சேர்ந்தனர்.கேட்க ஆளிள்லை)

சென்னாரெட்டி கெட்டார். முதலமைச்சராக்கினர்கள்.கெட்பதை ந்றுத்திக் கொண்டார்.தெலுங்குதேசம், காங்கிரஸ் என்று அந்த மக்களை மாறி மாறி வஞ்சித்தனர்.சந்திர சேகரராவ் கெட்டார்.கங்கிரஸ் கூட்டணியில் மந்திரியானர். நிறுத்திக் கொண்டார்.

ஜார்கண்டு பிரிந்தது. சதீஸ்கர் பிரிந்தது. உத்திராஞ்சல் பிரிந்தது.அந்த மக்களூக்கென்னகிடைத்தது? அதேதான் தெலுங்கானாவுக்குமா?

மூலதனம் தனக்கு வேண்டுமென்றால் பிரிக்கும். சேர்ந்த்தால் லாபம் என்றால் சேர்க்கும்.இந்த விளையாட்டில் அப்பாவி மானவர்கள், இளஞர்கள்,உழப்பாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.

ஹைதிராபாத் இன்று ஒருகெந்திரமான தொழில் நகரமாக மாறிவிட்டது. D.B.R. மில்லும்,பிஸ்கட் கம்பெனியும், செங்கல் சூளையும் மட்டுமே இருந்தநகரம் இன்று பிரும்மாண்டமான தொழில் நகரமாகியுள்ளது. இதன் சொந்தக்காரர்களுக்கு ஹைதிராபாத்தை விட மனதில்லை. அவர்கள் வெளியிலிருந்து வந்த முதலாளிகள்.

அவர்கள் எதை விரும்புகிறார்களோ அது தான் நடக்கும்.

Sunday, October 24, 2010

பாம்புப் பிடரனும் எம்.பி.எஸ் அவர்களின் இசையும்---3

பாம்புப் பிடாரனும் இசையும்.


மானாமதுரை(M) பாலசுப்பிராமணியம்(B) சீனிவாசன்(S) என்பது அவருடைய முழுப்பெயர்.வசதியான குடும்பம்.சென்னை பி.எஸ் உயர் நிலைப் பள்ளியில் படிப்பு. பின்னர் மதறாஸ் மாகாணக் கல்லுரியில் உயர்கல்வி.படிக்கும் காலத்திலேயே கம்யூனிசத்தில் ஈடுபாடு. மதறாஸ் மாணவர் அமைப்பை கட்டி வளர்ப்பதில் முன்னணியில் நின்றார்.அவருடைய செயல் திறனையும் செய்நேர்த்தியையும் பார்த்த கட்சி அவரை டெல்லிக்கு .அனுப்பியது அங்கு பணியாற்றி கொண்டிருந்தார். பின்னர் மதறாஸ் மாகாணத்தில் மாணவர் அமைப்பை பலப்படுத்த மதுரைக்கு வந்தார்.மதுரை கட்சிவாழ்க்கை பற்றி அவர் கூருவதை கேளுங்கள்.

" மண்டையன் ஆசாரி சந்தில்தான் கட்சி அலுவலகமிருந்தது.குருசாமிநாயனாவும் மற்றொரு தோழரும் அங்கேயே தங்கி இருந்தார்கள். அவர்களோடு நானும் செர்ந்து கொண்டேன். முழுநெர உழியருக்கு மாதம் புத்து ரூ அலவன்சு. கட்சி கஷ்டத்தில் இருந்த நேரம். அலவன்சு கூட மாதாமாதம் கொடுக்க முடியாது. அங்கு நாந்தன் இளவ ரசன் எனக்கு பதினந்து.ரூ அலவன்சு.நான் மத்திய கமிட்டியால் அனுப்பப்பட்டவன். ஒவ்வொரு மாதமும் டெல்லியிலிருந்து டாண் என்று பத்தாம் தேதி மணியார்டர் வந்துவிடும்.வந்தால் எங்களுக்கு ஒரே ஜாலிதான்" என்று விவரித்தார் எம்.பி.எஸ்.

"மண்டயன் ஆசாரி சந்திலிருந்து டவுண் ஹால்ரொடு போனால் சுல்தானியா ஹோட்டல் வரும் .ஒரு பிளெட் பிரியாணி எட்டணா.அரை பிளெட் நாலணா. நாங்கள் கட்சிக்காரர்கள் என்பது கடை முதலாளிக்குத் தெரியும். எங்களுக்கு மட்டும் கால் பிளெட் இரண்டணாவுக்கு கொடுப்பார். குஷ்காவுக்குக் கீழே இரண்டு துண்டு கறி கூடுதலாக வைத்திருப்பார் இரவு குதிரை வண்டி லாயத்திற்கு போவோம்.ஆச்சி ஒருவர் காலணாவுக்கு இரண்டு இட்லி தருவார். தலைக்கு ஆறு இட்லி தின்போம். என் அலவன்சு கரைந்து விட்டால் சிக்கல்தான்":என்று தொடர்ந்தார்.

" மண்டையன் ஆசாரி சந்து முக்கில் கிருஷ்ணாகாபி இருந்தது.காபி கொட்டையை வருத்து அரைப்பார்கள்.வசனை மூக்கைத்துளைக்கும்.குருசாமி நாயனா ஒரு ஈய டம்ளரில் வெந்நீரைக்கொடுப்பார். வாசல்ல பொய் "வாசனையை பிடி.வெந்நீரைக் குடி அதுதான் இன்னய காப்பி" எம்.பி.எஸ் நிறுத்தினார். "எவ்வளவு இனிமையான காலம்" அவர் குரல் தழுதழுத்தது.கண்கள் கலங்கின.அவருடைய தொடையை இருகைகளாலும் பற்றி அழுத்தினேன்."நான் அழவில்லை காஸ்யபன் அது ஒரு சுகானுபவம்"என்றார் அந்த கம்யூனிஸ்ட்..

"முத்தையா! என்னை ஏன் முன்னாலயே அழைக்கவில்லை. இப்படி ஒரு அமைப்பு இரு ப்பது தெரியாம போச்சே." என்று கே.எம்.இடம் அங்கலாய்த்தார்" முப்பது பையங்களை.என்னிடம் அனுப்பு.மிகச்சிறந்த சேர்ந்திசைக்குழுவை உருவாக்குகிறென்" என்றார்

டெல்லியில் இருக்கும் போது ஜபிதா என்ற காஷ்மீரத்து முஸ்லீம் பெண்ணை காதலித்து மணந்தார். சுதந்திரப் போராட்டவீரரும்,காங்கிரஸ் தலைவருமான டாக்டர்.சைபுதீன் கிச்சுலுவின் மகள்தான் ஜபிதா.

ஏப்ரல் மாதம் குழு பயிரற்சிக்கு வரச் சொல்லியிருந்தார் எப்ரல் முதல் வாரம் நிகழ்ச்சிக்காக லட்சத்தீவு சென்றார். மாரடைப்பு ஏரற்பட்டு மரணமடந்தார்.(1988).அவர் மனைவி ஜபிதா 2002ல் இறந்தார் மகன் கபீர் 2009ம் ஆண்டு மறைந்தார்

பின் குறிப்பு:இது என்னுடைய ஐம்பதாவது இடுகை என்னுடைய முதல் இடுகைக்கு முதல் பின்னூட்டமிட்ட இ.எம்.ஜொசஃப் அவர்களுக்கு என் நன்றி. மற்றும் ராம்ஜி யாஹூ, ஹரிஹரன் ஆகியொருக்கும் நன்றி.பதிவர்களுக்கு இது சோதனையா? வேதனையா?சாதனையா? என்பதற்கு தொழர்கள் காமராஜ், மாதவராஜ் ,எஸ்.வி.வேணுகோபால் ஆகிய மூவர்தன் பொறுப்பு---அன்புடன் காஸ்யபன்.

Saturday, October 23, 2010

பாம்புப்பிடாரனும் எம்.பி.எஸ் அவர்களின் இசையும்---2

பாம்புப்பிடாரனும் இசையும்


"என்னுடைய பயணப்பெட்டியில் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் எழுதிய கலையும் இலக்கியமும் என்ற தொகுப்பு நூலும்.பாரதியின் முழுமையான கவிதைத்தொகுப்பும் இருக்கும்.அறையில் தங்கி இருக்கும் போது படிப்பேன்.பாரதியின் வசன கவிதைகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.அவற்றில் ஒரு அமானுஷ்யம் புலப்படும்.அது பாரதியின் பழக்க வழக்க ங்களில் ஏற்பட்ட குறைபாடாகக் கூட இருக்கலாம்.இருந்தாலும் இசை பற்றி ஒரு புதிய பரிமாணத்தை அவரால் கொடுக்க முடிந்தது"என்று எம்.பி.எஸ் விளக்கினார்

என் நினைவில் குன்றக்குடி வைத்தியனாதனின் நினைவு தெரித்தது.குடகில் ஊறி கொப்பளித்து ,ஆடுதாண்டும் காவிரியாகி,அருவியாகப் பொழிந்து,அகண்டகாவிரியாகி,தஞ்சைப் புழுதியை நனைத்துவிட்டு,கீழைக் கடலில் சங்கமிக்கும் காவிரியை தன் வில்லேழுப்பும் ஓசைமூலம் காட்சி ரூபமாக்கியவர் அவர். எனக்கு முன்னோடி எம்.பி.எஸ் அவர்களின் "பாம்புப்பிடாரன்" தான் என்றார்

"ரயிலின் சப்தம் கூட ஒரு லயத்தொடுதான் உள்ளது.நிலயத்தில் "உப்புமா,வடை,காப்பி" என்று விற்பவர் ஒரே சுருதியில் சொல்கிறார். உச்சி வெயிலில் தொம்பைப் பெண்" முறம் வங்கலியோ முறம்" என்று தெருவில் கூவும்போது அதில் ஒரு லயம் கிடைக்கவில்லயா?" என்று எம்.பி எஸ் தொடர்ந்தார்.

பாம்புப்பிடாரன் இசைக்கோர்வையில் மகுடியும் கவிதையும் மட்டுமல்லாமல்,இவைகளும் இனைந்திரு க்கும்.இந்த சமயத்தில் இசை ஆரய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி . மாணவி சொன்னது நினைவுதட்டுகிறது.

"ராக்கம்மா கையைத்தட்டு---" என்ற பாடலை பற்றி கூறுவார்.."மேற்கத்திய இசையில் ஆரம்பித்து,நாட்டுப்புர இசைக்குவந்து செவ்விசையில் முடியும்.அதுமட்டுமல்ல.தேனில் ஊறிய பலாப்பழம் தொண்டையில் நழுவுமே அதுபோல அந்த மாற்றம் நிகழும். இசைக்கல்லூரிகளில் இவற்றை விளக்கிச் சொல்ல மாட்டேன் என்கிறார்களே' என்று ஆதங்கப்பட்டார்.

இசைக்கல்லூரிகள் கூட தொழில்முறை கல்வியாக, தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் வேலை வாங்கித்தரும் கல்வியாக மாறிவிட்டதே!

இந்துமாக் கடல் எங்களுடையது.அங்கோர் வாட் கொவில் எங்களுடையது.என்ற பாடலை எம்.பி.எஸ் சொல்லிக்கொடுத்தார்.எங்களுடையது என்று உச்சரிக்கும் பொது நெஞ்சு புடைக்க வேண்டும் என்று பாடகர்களிடம் வற்புறுத்துவார்.இந்துமாக்கடல் என்ரு உச்சரிகும் போது குரல் மேலும் கீழுமாக உயர்ந்தும் தாழ்ந்தும்வர கடலலை பொன்ற பிம்பம் மனதில் தோன்றும்.

விடுதலை போரில் வீழ்ந்த மலரே.என்ற பாடலில் தோழா என்ற வார்த்தயை உச்சரிக்கும் பொது கண்ணீர் வந்துவிடும்.

"ஐயா! செம்மலர் பத்திரிக்கைக்காக ஒரு நேர்காணல் தரவேண்டும்" என்று கெட்டேன். மறு நாள் அறைக்கு வரச்சொன்னார்.போனேன்(தொடரும)

Friday, October 22, 2010

பாம்புப் பிடாரனும் எம்.பி எஸ் அவர்களின் இசையும்----1

"பாம்புப்பிடாரனும் இசையும்'


முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் த.மு.எ.ச சார்பில் மாநில அளவில் ஒரு இசைப்பயிற்சி பட்டறை நடத்த கே.எம் அவர்கள் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். மதுரையில் அப்போது விளாச்செரியில் இசைக்கல்லூரி முதல்வராக

திருப்பாம்பரம் சண்முகசுந்தரம் அவர்கள் பணியாற்றிவந்தார்கள். மிகுந்த இசைப்புலமைமிக்க நாதஸ்வர கலைஞர்.பலநாடுகளுக்கு சென்று வந்தவர்.அவர் வகுப்புகள் எடுத்து பயிற்சி தர ஏற்றுகொண்டார்கள். அடுத்து மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்(மறைந்த) எம்.ஆர்.வெங்கடராமனின் சகோதரர் மகன் எம்.பி.சீனிவாசன் பயிற்சி அளிக்க இசைந்தார்கள் பட்டறை கோவையில் நடந்தது.

தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்ததும் எம்.பி.எஸ் இசையின் தோற்றம் வளர்ச்சி பற்றி மார்க்சீய நோக்கில் விளக்கினார். மதியம் சேர்ந்திசை பயிற்சிக்கான பாடலை எழுதி போட்டார். மதிய உணவுக்காக கலைந்தோம்.பயிற்சி பெற வந்தவர்களுக்கு அந்தப்பாடலின் கருத்து பிடிக்க வில்லை.இந்திராஅம்மையாரின் புகழ் பாடுவதாக இருந்தது

கே.எம் அவர்களும்,எம்.பி.எஸ் அவர்களும் உணவிற்காக நகரத்திற்கு செல்ல காரில் ஏறினர்.அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த. நான் "ஐயா!முதல் பாடலாக "பாம்புப்பிடாரனை வைக்கலாமே"என்று எம்.பி.ஏஸ் அவர்களிடம் கூறினேன்..அவர் என்னைப் பார்த்தார். கார் நகர்ந்துவிட்டது..

தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்பிவிட்டோமோ என்று பயம் வந்துவிட்டது.நிகழ்ச்சி மூன்றூ நாளும் விலங்கமிலாமல் நடக்க வேண்டுமே! அவர்கோபித்துக்கொண்டால்...." நடுங்கிக் கொண்டே இருந்தேன்.

பாரதியின் வசனகவிதையில் ஒன்று "பாம்புப்பிடாரன்".இசைபற்றி ஆன்மீகமும், அறிவியலும் கலந்த கவிதை.பாம்புப்பிடாரனின் மகுடியிலிருந்து இசைவருகிறதா? அல்லது அவன் உதாட்டிலிருந்துவருகிறதா?.சம்பந்தமே இல்லாத இரண்டை இணைப்பது எது? இசையா? இசை என்றால் காற்றா?மதிய வெய்யிலில் 'ஜரிகை வாங்கலியோ ஜரிகை" என்கூவுகிறானே அவன் குரலுக்கும் குழலுக்கும் ஒரே சுருதியை லயத்தைக் கொடுத்தது யார்? என் சக்தி தானே?

என்று .வரும். வானொலியில் உள்ளம் உருகும் வகையில் எம்.பி.எஸ் இசை அமத்திருப்பார்.கேட்கக் கேடக பிரமிப்பாக

இருக்கும்.

மண்டப வாயிலில் கார் வந்தது.கே.ஏம் இறங்கினார்கள். அடுத்து எம்.பி.ஏஸ் பரபரப்பாக இற்ங்கினார்கள். வேகமாக உள்ளேவரும்போதே "யார் காஸ்யபன்? யார் காஸ்யபன்?" என்று கேட்டுக்கொண்டே வந்தார்" நான் தான்.ஐயா" என்று பலியாடு போல் அவர் முன் நின்றேன்

'பாம்புப்பிடாரனைக் கேட்டிருக்கிறீர்களா?".

"பல முறை"

"எங்கே"

"வானொலியில்"

"எப்படி இருக்கிறது"

"அற்புதம்"

"என் படைப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானது"

என் கைகளைப் பற்றிகொண்டார்.தன்னுடைய உதவியாளரை அழைத்து முதல் பாடலாக "ஆன்கொர் வாட்" என்று மாற்றி விட்டேன்.அதை எழுதிப்போடுங்கள் என்று கூறினார் "பாரதி சொன்னதைவிட கூடுதலாகச் சேர்த்திருக்கிறீர்கள்..இது எப்படி உங்கள் கவனத்திற்கு வந்தது? என்று கேட்டேன்."காஸ்யபன்! ஒருமுறை கட்சி வேலையாக கான்பூர் சன்றிருந்தேன்" என்று சொல்ல ஆரம்பித்தார்.(தொடரும்)

Tuesday, October 19, 2010

மனித உரிமை (அமெரிக்க மாதிரி)---2

மனித உரிமை (அமெரிக்க மாதிரி)


ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து காக்கா,குருவிகளை வேடர்கள் வலைவீசுப்பிடிபார்களே அப்படி ஸ்பானிய வியாபாரிகளால் கருப்பு இனத்தைச்ச்செர்ந்த மக்கள் பிடிக்கப்பட்டு அடிமைகாளாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட வம்சத்தை சார்ந்தவர் பால் ராப்சன்.(1898-1976)

தன்வாழ்நாள் பூராவும் அந்தமக்களின் விடுதலைகாக பாடுபட்டவர்.மிகச்சிறந்த படிப்பாளி,விளையாட்டுவீரர், வழைக்குரைஞர்,தொழிற்சங்கவாதி,நடிகர், உலகப்புகழ் பெற்ற பாடகர்..கருப்பின  மக்களின் விடுதலை என்பது அமெரிக்காவில் சோசலிசம் வந்தால் தான் கிடக்கும் என்று மனதார நம்பியவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தான் வலதுசாரி அரசியல்வாதிகளான மக்கார்த்தி,எட்கார் ஹூவர்,டல்லாஸ் ஆகியோர் அமெரிக்க அரசியலில் செல்வாக்கோடு இருந்தனர்.உலகம் பூராவும் சென்று இசைநிகழ்ச்சி நடத்திவந்தார். இங்கிலாந்து சென்று தொழிலாலர்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்துவார்.சுரங்கத்தோழர்களோடு அவர்கள் வாழும்பகுதியல் வழ்வார். அவர்களோடு சுரங்கத்திற்குள் இறங்கி அவர்கள் கொடுக்கும் ரொட்டியை உண்பார்.ஐரோப்பாமுழுவதுமுள்ள அடக்கப்பட்ட மனிதர்களுக்காக குரல் கொடுத்தார்.ஆப்பிரிக்கமானவர்களுக்கான அமைப்பைத்தோற்றுவித்தார்.1934 ம் ஆண்டுவாக்கில் சொவியத் யூனியன் சென்றார்.

அங்குள்ள பல்வேறு இனமக்கள் ஒன்று பட்டு வாழ்வதிப் பார்த்து வெள்ளையரும் கருப்பர்களும் தன்நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று நம்பினார்.

ஸ்டாலின் அமைதிப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க அரசு அவருடைய பாஸ்போர்ட்டைப் பறித்தது. அவர் மேடைகளில் பாடக்கூடது என்று தடைசெய்தது..அவர் பாடும் நிகழ்ச்சிகளில் கலாட்டா செய்தது.20000 தொழிலாலார்கள் முன்னால் பாடவரும்பொது நிறவெறியர்கள் அவரைத்தாக்க முற்பட்டனர்.நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தயங்கி ரத்து செய்தனர். தொழிலாளர்கள் அதே இடத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு நடத்த முடிவு செய்தனர்.

20000 தொழிலாலர்கள் கைகோர்த்து உலகப  புகழ் பெற்ற அந்த்ப்பாடலைப்பாடினர்.

We shal not move ( நாங்கள் நகர மாட்டோம்) என்று பாடினர்.

பால் ராப்சனை நாடாளூ மன்ற கமிட்டி விசாரித்தது. ."இவ்வளவு பெசும் நீ ரஷ்யாவுக்குப் போய்விட வேண்டியதுதானே? என்று கமிட்டி தலைவர் கேட்டார்." அமெரிக்க தோட்டங்களிலும்,வயல்வெளிகளிலும் அடிஉரமாக இருப்பது ஒருகோடி கருப்பர்களின் ரத்தமும் சதையும்.அவர்களின் வாரீசுகள் நாங்கள் நாங்கள் ஏண்பொகவெண்டும் என்ரூ  கெட்டார். வயதான காலத்தில் ஓய்வுக்காகவும் மருத்துவத்திற்காகவும் மாஸ்கோ சென்றார். அங்கு சி.ஐ.ஏ உளவாளிகள் அவருக்கு விஷம் கொடுத்தனர். நல்லவேளை பிழைத்துவிட்டார்.

மார்டின் லூதர் கிங் கருப்பின மக்களின் உரிமைகளுக்கக உயிரைவிட்டார். அவரை மேலை நாடுகள் போற்றிப்புகழ் கின்றன.மிகச்சிறந்த மனித நேய மாண்பு அது.

பால் ராப்சன் தன் வாழ்வை அந்த அடிமை மக்களுக்காக அர்ப்பணித்தார். அதோடு சோசலிசம் வேண்டும் என்றும் கூறினார்.

Friday, October 15, 2010

மனித உரிமை (அமேரிக்க மாதிரி)

அமேரிக்காவின் மனித உரிமை மாண்புக்கு இரண்டே இரண்டு சான்றுகளைச் சொல்லலாம் என்று கருதுகிறென்.ஒருவர் அந்த மாபெரும் நடிகர் சார்லி சாப்ளின். மற்றொருவர் பாடகர்,நடிகர்,எழுத்தாளர், நாடகவியலார்,வழக்குரைஞர், தொழிற்சங்கவாதி,கருப்பின மக்களின் தலைவர், சொவியத் நாடு சென்று வந்தவர். பால் ராப்சன்.


இந்த நாய்களுக்கு கம்யூனிசம் என்றால் பிடிக்காது.மெக்கார்த்தி,எட்கார் ஹூவர், டல்லஸ் ஆகியோர் ஜமக்காளத்தில் வடிகட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர்கள்.இவர்களுக்கு வசதியாக 1908ம் ஆண்டே சட்டம் இயற்றிவிட்டார்கள். அமேரிக்க எதிர்ப்பு நடவடிக்கை கண்காணிப்பு சட்டம் என்று பெயர் சோவியத் புரட்சிக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளை அழித்தோழிப்பது இந்த சட்டத்தின் முக்கிய பணியாகியது.

அமேரிக்க அறிவுஜீவிகள்,எழுத்தளர்கள்,கலைஞர்கள்,ஆகியோர் சோசலிசம்,சோவியத் என்று பெசத்தலைப்பட்டனர்.இவர்கள் ஒரு குழுவாக செயல்படுவதாக அரசு புரளியைக் கிளப்பிவிட்டது.நாட்டிற்கு இவர்களால் மிகப்பெரிய ஆபத்து வரும் என்று பிரச்சாரம் செய்தனர்..இதற்காக ஒரு இயக்கத்தையே உருவாக்கினர்.. அந்த இயக்கத்தின் பெயர்தான்"சிவப்பு பயம்"(red scare)'

தன்னுடைய கவனத்தை நாடகத்துறையிலும் சினிமாத்துறையிலும் .செலுத்த ஆரம்பித்து.குட்டி நடிகர்கள்,எழுத்தளர்களை வசக்கினர் பெரிய நடிகர்களில் தாங்கள் சந்தேகிகப்படுபவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தினர். பல பெரிய நடிகர்கள். ஒதுங்கினர். பத்து பேர் "உன் சோலியப் பாருடா" என்று. ஊன்றி நின்றனர். அவர்களில் முதலாமவர்தான் சார்லி சாப்ளின். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல.அமெரிக்க மக்களுக்கு சோசலிசம் வந்தால் நலது என்று நினைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே.

உலகத்திரப்பட வரலாற்றில் மிகசிறந்த பத்து படங்களை தேர்ந்தெடுத்தால் அதில் சாப்ளினின் Great Dictator ஒன்றாகும்..இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை எதிர்த்து எடுக்கப்பட்டபடம். அப்போது . போரில் அமேரிக்கா சேரவில்லை. ஹிட்லரை எதிர்த்து வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று படத்தயாரிப்பை தடுத்து விட்டது.(பின்னாளில் ஹிட்லரே பார்த்து பாரட்டிய படமாகும்) சாப்ளின் மற்ற தயாரிப்பிலும் ஈடுபட முடியாமல் செய்தது.படபிடிப்புத்தளங்களை கொடுப்பவர்களை,துணை நடிகர்களை,படம் பிடிப்பவர்களை மிரட்டியது.சாப்ளின் அமேரிக்காவை விட்டு வேளியேரினார்.இங்கிலாந்தில் குடியேறிணார்.

இப்படி சக நடிகர்களை காட்டிக்கொடுதவரகளில் ஒருவர்தான் எலியா காஜன் என்ற இயக்குனர்.அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க ஆஸ்கார் கமிட்டியை அமேரிக்க அரசு நிர்ப்பந்தித்தது.ஆஸ்கார் கமிட்டி அடிபணிந்தது ஆனாலும் எலியா காஜனின் எதிர்பாளர்கள் பணியவில்லை. விருது வழங்கும் விழாவின் போது கலந்து கொண்டார்கள்.

விருது வழங்குக் போது எல்லாரும் எழுந்து நின்று கைதட்டும் பொது கைதட்டாமல் அமர்ந்து அவரை அவமதிதார்கள். (தொடரும்)

Tuesday, October 12, 2010

கற்பனை என்பது இல்லை. There is no Fiction---3

சென்ற இடுகையில் கற்பனை என்பது கிடையாது என்பதாக முடித்திருந்தேன்.ஆனாலும் பதிப்புரிமை என்று இருக்கிறது. காப்புரிமை என்றும் இருக்கிறது.கற்பனையே இல்லை என்றால் அதற்கான உரிமை என்பது முரணாகத் தெரியும்.


உதாரணமாக நானும் நண்பரும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறோம். வெளியே வருகிறோம்விடுதியின் வாயிலில் உள்ள கடையில் வெற்றிலை வாங்கி மெல்லுகிறோம். உணவு விடுதிக்காரர் முட்டுச்சந்தில் எச்சில் இலைகளைப்போட்டிருக்கிறார். பசியோடு இருக்கும் சிறுவர்கள் தொட்டியை நோண்டி,மிச்சம் மீதியை எடுதுத் திங்கிறார்கள். " நாம் சுவையான உணவை உண்டோம். அந்தச் சிறுவர்களைப் பாருங்கள்.பசியார உணவில்லை எச்சிலைத் திங்கவேண்டிய நிலை" என்ரு ஆதங்கத்தோடு என்னிடம் நண்பர் கூறுகிறர் நெடுமரமாய் நிற்கும் நான்"ஃபில்டர் வில்ஸ் வாங்குங்கள்." என்கிறேன் நண்பரின்முகம் வாடிபோய் விடுகிறது..வீடு வந்து சேர்கிறோம்.

நண்பர் இரவு முழுவதும் தூங்கவில்லை. நடந்ததை நயம்பட எழுதி பத்திரிக்கைகு அனுப்புகிறார். சிறுகதையாக வெளிவருகிறது.கதைச்சம்பவத்தை நானும் பார்த்தேன்.நன்பரும் பார்த்தார்..நான் நெட்டைமரமாய் நின்று ஃபில்டர் வில்ஸ் ஊதினேன்.நண்பர் மன உளைச்சலோடு தூங்காமல் அதனைப் படைபாக்கி சகமனிதர்களுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனி மனித அனுபவத்தை உலக அனுபவமாக மாற்றுவது தானே இலக்கியம்.எனக்கும் அவருக்கும் வித்தியாசம் வேண்டாமா? அதனால் தான் அது கதையாகி அதன் உரிமை அவருக்கு என்றானது..

("புதிய புத்தகம் பெசுகிறது" என்ற இதழ் "பதிப்பு--காப்பு உரிமை" என்று சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது) பதிவுலக நண்பர்கள் பல சந்தேகங்களை,கேள்விகளை எழுப்பி உள்ளனர்.விமானத்தை பார்த்ததில்லை. படைக்கவில்லையா? பணம் காய்க்கும் மரத்தைப் பார்த்ததில்லை. கற்பனையில் தோன்றவில்லையா? நடிகையை அரை குறை ஆடையில் பார்த்தா இருக்கிறொம்.கற்பனை செய்யவில்லையா? என்று கேட்கிறார்கள்.பார்த்தல்,கேட்டல், முகர்தல், தொடல்,சுவைத்தல் ஆகிய ஐம்புலன்களின் மூலமாக மட்டுமே வெளி உலகம் மனிதனுக்கு புலப்படும். அது விஞ்ஞானம்.மற்றவை அஞ்ஞானம்.-----------(முடிந்தது.)

Monday, October 11, 2010

கற்பனை என்பது கிடையாது.(There is no fiction)---2

கற்பனை என்று உண்டா என்ற கேள்வி சென்ற இடுகையில் எழுப்பப்பட்டு இருந்தது.பிற உயிர்கள் அத்துணையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறது.மனிதன் மட்டுமே இயற்கையோடும் ,இயற்கையிலிருந்து தனித்தும் வாழ்கிறன்.அவனுக்கு வெளியே இருக்கும் உலகம்,அவனுக்கு எப்படி புலப்படுகிறது?


ஒரு ரோஜா செடியில் பூத்திருக்கிறது.செடியில் ரோஜா இருப்பதாக அவன்நினைப்பதால் அது இருக்கிறதா? அது இருப்பதால் தான் அவன் நினைக்கிறானா?

அது இருக்கிறது.அதனல் பார்க்கிறான். நுகர்கிறான்.இதழ்களை தொடுகிறான்.காற்றில் அது அசையும் ஒசையைக் கேட்கிறன்..அதன் இதழை வாயில் போட்டு அதன் இனிப்பான துவர்ப்பை ருசிக்கிறான். மொத்தத்தில் ஐம்புலங்களின் மூலம் ரோஜாவின் இருத்தலின் சாரத்தைப் புலப்படுத்திக் கோள்கிறான்.மனிதனுக்கும் அவனுக்கு வெளியே இருக்கும் உலகிற்குமான புரிதல் அவன் புலன்கள் மூலமாக உருவாகிறது புலன்களின் கூர்மைக்குத்தகுந்தபடி அவனுடய புலனறிவு கூடுகிறது,அல்லது குறைகிறது

நாய்களுக்கு கண்கள் உண்டு. ஆனால் அவைகளுக்கு இந்த உலகம் கருப்பு வெள்ளையாகவே தெரிகிறது வண்ணங்கள் புலப்படுவதுஇல்லை...(clour blindness).குறைபட்ட புலன்கள் மூலம் குறைபட்ட புலனுணர்வைத்தான் பெறமுடியும்.

உதாரணமாக கண்ணில்லாதவனுக்கு தஞ்சை பெரியகோவில் ஒரு கலைவடிவமல்ல.Rambrant அவர்களின் வண்ண ஒவியம் ஒருகலைப்படைப்பு இல்லை. காதில்லாதவனுக்கு எம்.எஸ். அவர்களின் இசை ஒருகலை வடிவமில்லை.

இதனையே மார்க்ஸ் அவர்கள் இன்னும் கூர்மையாகச் சொல்வார்.எல்லாருக்கும் காதிருக்கிறது.எத்துணை பேர் இசையை ரசிக்கிறோம்.காதிருந்தால் மட்டும் போதாது.இசைக்காது (musikal ear) வேண்டும் என்பார்.

"இயற்கையின் தர்க்கவியல்" (Dialatics of Nature) பற்றி நண்பர்களோடு விவாதிக்கும்போது பரிசொதனை ஒன்று செய்வோம்.ஒரு சில மணித்துளிகளில் நாமும் செய்துபார்த்துவிடலாம். ஒரு ஐந்து விநாடி கண்களை மூடிக்கோள்வோம்.எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்வோம்.நாம் கற்பனை செய்ததை நண்பர்களோடுபகிர்ந்து கொள்ள வேண்டும். தயாரா? ஒரே ஒரு நிபந்தனை.இதுவரை நீங்கள்பார்த்திராத,கேட்டிராத,முகர்ந்திராத,தொட்டிராத,ருசித்திராத ஒன்றைகற்பனை செய்திட வேண்டும்.தயாரா?

பதிவுலக நண்பர்களே உங்களால் முடியாது.புலனறிவு மூலம் பெற்றதை மட்டுமே கற்பனை செய்யமுடியும் அதனால்தன் இல்லாத கடவுளுக்குக் கூட இருக்கும் மனிதனின் கண், மூக்கு,காது,கை,கால்,சிங்கமுகம், யானைமுகம்

என்று வைக்கிறோம்.

இல்லாததைக் கற்பனை செய்யமுடியாது.இருப்பதைக் கற்பனை செய்ய"

" நீ என்ன அண்ணாவி?"

அப்படியானால் கற்பனை என்பது கிடையாது தானே!THERE IS NO FICTION.----(தொடரும்)

Sunday, October 10, 2010

கற்பணை என்று கிடையாது.(There is no Fiction)

கற்பனை என்று உண்டா?




" வண்ணக்கதிரில்" காஸ்யபன் எழுதிய" எங்கேஅவர்கள்?"என்ற சிறுகதையை பதிவிட்டிருந்தேன்.பின்னூட்ட்ங்கள் மூலமும்,தொலைபெசிமுலமும் பல நண்பர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.இது உண்மையா? புனைவா? என்று பலர் கேட்டிருந்தனர்.இது உண்மையாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் பலரிடம் வெளிப்பட்டது.RVS என்ற பதிவர் இது புனைவா? எப்பெடியானாலும் சவாரசியமாக இருந்த்தது என்கிறார்.இதன் கட்டமைப்பினைப் வைத்து இதனை சிறுகதை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறர் தொழர் S.V.V. இந்தக் கேள்விகளுக்கு பதில் இரண்டுவகைகளில் சொல்லலாம்.ஒன்று இந்தியத் தத்துவ மரபு.மற்றொன்று மார்க்சீய வழி.

மாயாவாதம்.

பதிவர்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் படித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்.ஆகவே படிக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் நண்பரோடு பெசிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீரகள் ஆகவே பெசிக்கொண்டிருக்கிறீர்கள் உண்மையில் அப்படி எதுவும் நிகழவில்லை.எல்லாமே உங்கள் மனமாயைதான்.என்கிறது ஒருமரபு..சர்ப்ப கந்த யோகம் என்று இதனை விளக்குவார்கள். இருட்டில் பாதையில் செல்கிறோம். குறுக்கே பாம்பு இருக்கிறது.விலகி ஓரமாகச் செல்ல முற்படுகிறோம்..அருகாமை அடந்ததும், அது பாம்பல்ல கயிறு என்று தெரிகிறது. பாம்பு நம் நினைவில் இருந்தது.உண்மயில் பாம்பு இல்லை.இங்கு பாம்பு என்பது வேறும் மாயை.அதேபோல் கயிறு என்று நினைத்து பாம்பு தீண்டுவதும் வாய்ப்புக்குறியதே..இங்கு கயிறு மாயை.உலகமே மாயை.எல்லாமே நம் மனம் காட்டுவதுதான். உண்மையில் அவையில்லை. என்பது தத்துவம்.

மார்க்சீயவாதியான காலம் சென்ற தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள் அற்புதமான உதாரணத்தோடு மறுப்பார் இந்த பூமி,மரம்,குளம்,நீ,நான் எல்லமே உண்மை என்று அடித்துச் சொல்லுவார்.கயிறை பாம்பு என்று நினைப்பவன் பாம்பைப் பார்த்திருக்க வேண்டும்..பாம்பையே பார்க்காதவன் பாம்பைப் பற்றிய பிம்பமே தெரியாதவன் மனதில் எப்படி பம்பின் நினைவு வரும்.கயிறு பற்றிய பிரக்ஞையே இல்லாதவன் மனதில் கயிறு என்ற உருவம் எப்படித்தோன்றியது. ஆக அவன் பாம்பைப் பார்த்திருக்கிறான். கயிறையும் பார்த்திருக்கிறான். பாம்பம், கயிறும் இருந்தது உண்மை. மாயை அல்ல.என்று தன்னுடைய வகுப்புகளில் விளக்குவார்.

மார்க்ஸ் அவர்கள் (Ther is no fiction) கற்பனை என்று ஒன்று கிடையாது என்று கூறுவார்.(தொடரும்)

Thursday, October 07, 2010

சிறு கதை

சிறு கதை






எங்கே அவர்கள்?



(காஸ்யபன்)



கேதன் தேசாயிடமிருந்து எண்ணூறு கோடி ரூபாய் ரொக்கம்-கிலோ கணக்கில் தங்கம் -பேப்பரை மூடி வைத்தேன். இவன்லாம் மனுசன்தானா? ச்சீ - இந்தியா என்ன ஆகப் போகிறது?

டைம் ஆப் இந்தியா வை எடுத்தேன். மாதுரி குப்தா கைது என்று தலைப்பு. யார் மீது கோபம்? எதற் காக? குளத்தின் மீது கோபம் என்றால்... என்ன திமிர்? இவர்களை என்ன செய்யலாம்?

நேற்று இரவு சினிமா பார்த்தேன். அயர்ச்சியாக இருக்கிறது. நிஜாம் ஆட்சியில் ஜமீன்தார்கள் ஜனங்களை கொடுமைப்படுத்தியது பற்றித்தான் படம். இந்து ஜமீன் தார், முஸ்லீம் ஜமீன்தார் என்று பேதமில்லாமல் கொடு மைகளைச் செய்துள்ளது சித்தரிக்கப்பட்டிருந்தது. மிகச் சிறந்த நடிகர்கள், அம்ரிஷ்பூரி, கிரிஷ்கார்நாட், குல்பூஷன் கர்பந்தா, நசுருதீன் ஷா, சப்னா ஆமி- இரவு படத்தின் பாதிப்பால் தூக்கம் வர வெகுநேரமாகி விட்டது. படத்தின் பெயர் அங்குர்.

பேப்பரை படிக்க முடியவில்லை. கண் இமை கனத் தது, படத்தின் இயக்குனர் -ஷ்யாம் பெனகல்.

------------------------------

எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நினைவு இருக்கும். சுதந்திரம் கிடைத்தவுடன் வெளியான பத்து ரூபாய் தாளில் பி. ராமாராவ் என்று கையெழுத்திட்டிருக் கும். அவர்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்.ஐ.சி.எ.ஸ்அதிகாரி.

அவருடைய சகோதரர் நரசிங்கராவ் சர்வதேச நீதிமன்றத் தில் நீதிபதியாகப் பணியாற்றுபவர். ஐ.சி.எ.ஸ் அதிகாரி.

மூன்றாவது சகோதரர் நரகரிராவ், பிரிட்டிஷ் இந்தியா வின் தணிக்கை அதிகாரி. அவரும் ஐ.சி.எ.ஸ் தான்.

மூவருமே பெனகல் குடும்பம்.

------------------------

ஸ்டுடிபேக்கர் காரில் மூன்று பேரும் பாராளுமன்ற மைய மண்ட பத்துக்குச் சென்று கொண்டிருக் கிறார்கள். ஆகட் 14 இரவு பத்து மணி. பன்னிரெண்டு மணிக்கு பிரிட்டனின் கொடி இறங்கி இந்தி யாவின் மூவர்ணக் கொடி ஏறப் போகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராகிறார். இந்திய மக் கள் ஒவ்வொருவரும் தாங்களே பிரதமராகப் போவதாக நினைத்து விடிய விடியக் காத்திருக்கிறார்கள்.

-----------------------

மூன்று சகோதரர்களும் மூத்த அதிகாரிகள். பதவியேற்பு நிகழ்ச் சிக்கு அவர்கள் அழைக்கப்பட்டி ருந்தனர். பன்னிரெண்டு மணி, பண் டித நேரு எழுந்தார். உலகம் முழு வதும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தியா விழித்தெழுகிறது என்ற அவருடைய புகழ் பெற்ற உரையைத் துவக்கினார்.

---------------------

"டிரைவர் வண்டியை நிறுத்து" என்றார் ராமாராவ். போட் கிளப் அருகில் ஸ்டுடிபேக்கர் வண்டி நின்றது. "மணி மூன்றாகப் போகி றது அண்ணா" என்றார் நரசிங்கம் ஹரி எதுவும் பேசவில்லை.

விலை உயர்ந்த மதுவை ஊற் றிய கிண்ணத்தோடு வெளியே இரு வரும் வந்தார்கள்.

குளிர்ந்த காற்று இதமாக வீசி யது.

"நேரு பிரதமர் என்றதும் வெளி நாட்டில் என்ன பேசிக் கொள் கிறார்கள்," என்று கேட்டார் ராமாராவ்.

"சோவியத் பிளாக்குக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா", என்றார் நரசிங்கம்.

"பிரிட்டன், பிரான்சு, அமெ ரிக்கா ஆகியவை கொஞ்சம் தயங்கியே நேருவை ஆதரிக்கின்றன" என்று அவர் தொடர்ந்தார்.

"ஏன் தயக்கம்?"

"மெள்ள மெள்ள நேரு இந்தியாவை ஒரு சோசலிச நாடாக்கி விடுவாரோ என்று பயப்படுகிறார்கள்".

"நேரு அப்படிச் செய்ய மாட்டார்."

"பின்?"

"நடுநிலை வகிப்பார்" என்று கூறிய ராமா ராவ், "ஹரி! என்னப்பா வாயைத் திறக்கவே மாட்டேங்கற," என்றார்.

"ஹரி டல் லாத்தான் இருந்தான். விழா வில் ரொம்ப சீரியசாத்தான் இருந்தான்" என்றார் நரசிங்கம்.

ஹரிக்கு விழா நிகழ்ச்சிகளில் ஏதோ குறை. இருந்தது போல் பட்டது. என்ன குறை? எங்கே குறை? ஹரியின் மனது அல்லாடியது.

-----------------------

ஹரியின் வீட்டருகே கார் வந்ததும் ஹரி இறங்கிக் கொண்டார்". பை ஹரி!" ராமாராவ் விடை பெற்றார்.

"ஒரு நிமிடம் அண்ணா!"

"என்னப்பா?"

"பி.வி. கேஸ்கர் தெரியும்லயா?"

"ஆமா"

"பதவி ஏற்பு நிகழ்ச்சிய ஆவணப்படமா எடுத்திருப்பாங்க இல்லை?"

"ம்ம்"

"அந்த லூப் மட்டும் ஒரு காப்பி வாங்கி தருவியா?"

"எதுக்கு?"

"மனசுல ஏதோ நெருடல். அத பாத்தா தெளிஞ்சுடும்," என்றார் ஹரி.

"உன் தணிக்கைப் புத்தி உன்னை விட்டுப் போகாதே! "இடை மறித்தார் நரசிங்கம்

"நான் ஐ.சி .எஸ்தான். இந்தியனும் கூட", என்று ஹரி பதிலளித்தார்

-------------------------------.

ஆகஸ்ட் 18ம் தேதி நரஹரிராவ் அவர் வீட்டில் அந்த ஆவணப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தினம் இது தான் வேலை. எதுவும் புலப்படவில்லை. ஒரு மாதம் ஆகி விட்டது. செப்டம்பர் 2ம் தேதி படத்தை திருப்பி அனுப்பிவிட்டார். இருந்தாலும் மனது கேட்கவில்லை.

பழைய பத்திரிகைகளை புரட்டிக் கொண் டிருந்தார். ஆகட் 15ம் தேதி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக சுதந்திர தின செய்திகள்தான். காந்தி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வியெழுப்பிய பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்திருந்தன.

டாம்மொரேஸ், 14-ம் தேதி காலை 8 மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் பண்டித நேரு என்ன செய்து கொண்டிருந்தார் என்று பட்டியலிட்டிருந்தார்.

காலை 8 மணி சர்தார் பட்டேலுடன் காலை உணவு,

காலை 9 மணி இடைக்கால அமைச்ச ரவைக் கூட்டம்,

காலை 10 மணி இடைக்கால அமைச் சரவை ராஜினாமா செய்யும் கடிதம் தயாரிக் கப்பட்டது.

11 மணி ராஜினாமா கடிதத்தை கொடுக்க நேருஜி புறப்பட்டார்.

1 மணி மதிய உணவு,

2மணி காங்கிர தலைவர்களோடு ஆலோசனை,

5 மணி படேலுடன் தீவிர ஆலோசனை,

-------------------------------------

செப்டம்பர் 6-ம் தேதி காலை பம்பாயி லிருந்து ராமாராவ் எட்டு மணிக்கு பேசினார்.

"ஹரி! பேப்ரை பாத்தியா?"

"இந்துஸ்தான் டைம்தானே?"

"ஆமா எப்படி வெளில வந்தது"

"அவர்களுக்கு உள்ள ஆளிருக்கலாம்"

சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜிக்கு தணிக்கை அதிகாரி நரஹரிராவ் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.

மதிப்பிற்குரிய பிரதமருக்கு!

தணிக்கை அதிகாரி நரஹரிராவ் அறிவுறுத் தும் கடிதம்.

ஐயா! தாங்கள் ஆகஸ்டு 14-ம் தேதி மதியம் இடைக்கால பிரதமர் பதவியை விட்டு விலகி கடிதம் கொடுத்துள்ளீர்கள்.

அன்று இரவு 12 மணிக்கு மேல் பாரதத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் தேதி ஆகஸ்டு மாத ஊதியத்தை முழுமையாகப் பெற்றுள்ளீர் கள்.

ஆகஸ்டு 14-ம் தேதி மதியத்திலிருந்து அரை நாள் நீங்கள் இந்திய அரசின் எந்தப் பதவியி லும் பணியாற்றவில்லை.

நீங்கள் உடனடியாக கூடுதலாகப் பெற்ற அரை நாள் ஊதியத்தை கருவூலத்தில் திரும்பக் கட்டும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

(ஒப்பம்)

பி. நரஹரிராவ்

தணிக்கை அதிகாரி -------------------------

மறுநாள் டெல்லியில் கூக்குரல் எழுந்தது. "பிரிட்டிஷ் அடி வருடி துரோகி நரகரி ஒழிக" என்று ஜால் ராக்கள் குதித்தன.

சில தலைவர்கள் அதிகாரியை எதிர்த்தும் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டனர்.

பத்திரிகையாளர்கள் பிரதமரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்.

மாலை 5 மணிக்கு பிரதமர் பத்திரிகை யாளர்களைச் சந்திப்பார் என்று அரசு அறிவிப்பு தெரிவித்தது. மாலை பத்திரிகை யாளர்களை சந்தித்தார். பத்திரிகையாளருக்கு ஒரு குறிப்பு தரப்பட்டிருந்தது.

தணிக்கை அதிகாரியின் கடிதம் பிரத மரின், கவனத்துக்கு வரும் முன்பே பத்திரிகை களில் வந்தது தவறு. இது பற்றி விசாரிக்கப் படும் பிரதமர் என்ற பதவியையோ, அவரின் அரசியல் செல்வாக்கைப் பற்றியொ,கணக்கில் கொள்ளாமல், அரசின் விதி மீறல்களைச் சுட்டிக் காட்டிய தணிக்கை அதிகாரியை பாராட்டுகிறோம். நவபாரதத்திற்கு இத்தகைய அதிகாரிகள் தான் வேண்டும். புதியதாக தணிக்கை மற்றும் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பி. நரஹரிராவ் அவர்களையே நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. (பி.கு- கூடு தலாகப் பெற்ற அரைநாள் ஊதியம் கருவூலத் தில் கட்டப்பட்டு விட்டது.)

-------------------------------

"சோபாவில் ஒக்காந்து தூங்குறீங்களா! கழுத்து வலிக்கப் போகுது". என் மனைவியின் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தேன்.

"என்ன இது, பேந்தப் பேந்த முழிக்கிறீங் களே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டீ களா? "என்றாள்.

"நான் கண்டது சொப்பனமா? அதுவும் கெட்ட சொப்பனமா?" எனக்குத் தெரியவில்லை

Tuesday, October 05, 2010

வட்டிக்காரன் வலை (சௌகார்--கி--பாஷ்)

சுமார் முப்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அப்போது CINE INDIA என்றொரு பத்திரிகை வந்து கோண்டிருந்தது. திரைப் படம் பற்றி அறிவார்ந்த கட்டுரைகளைத்தாங்கி ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. சித்தார்த்த கார்க் என்பவர் அதனுடைய ஆசிரியராகப் பணியாற்றினார்.பூனே திரைப்படக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.அந்தப்பத்திரிகையின் தீவிரமான வாசகன் என்ற முறையில் அவர்களோடு தொடர்பு உண்டு


"வர்த்தக ரீதியாகவே படைப்பு.கள் வந்து கொண்டிருக்கின்றனவே,ஆரம்பத்திலிருந்தே இந்தத்துறை இப்படித்தானா?" என்றொரு சந்தேகம் எனக்கு இருந்தது.அந்தப்பத்திரிகையின் மூலம் சர்வதேசரீதியாகவே திரைப்படத்துறை மிகவும் ஆரோக்கியமான ஆரம்பத்தையே கொண்டிருந்தது என்பதைத் தெரிந்துகொண்டேன்.ஒரு திரப் படத்தீன் கதையை எழுதி விளக்கியிருந்தார்கள்

"வட்டிகாரன் வலை"( சௌகார்-கி-பாஷ்)

மும்பைனகரத்து பஞ்சாலையின் வாயில்.தொழிலாளர்கள் உள்ளே சென்று கொண்டிருக்கிறார்கள்.காவாலாளி ஓருவர் ஒவ்வொருவராக பரிசொதித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். வயதான தொழிலாளி ஒருவரைத்தடுத்துநிறுத்துகிறார்.." நிர்வாகம் உங்களுக்கு வயதாகிவிட்டதால் உங்களுக்கு ஓய்வு அறிவித்துவிட்டது" என்று தடுக்கிறார்".நான் வேலை செய்யும் இயந்திரத்திற்கு ஓய்வு இல்லை. எனக்குமட்டும் ஓய்வா" என்று சண்டை வருகிறதுகாவலாளி தள்ளிவிட தொழிலாளி படிகல்லில் மொதி கீழே விழுகிறார். சாகும் தருவாயில் அவருடைய மகன் அவர் தலையை மடியில் கிடத்திக் கொள்கிறான்.

காட்சி மாறுகிறது.பூனே நகரத்தின் அருகிலுள்ள வயல்வெளி. அந்தத் தொழிலாலி  வயக்காட்டில் கிணற்றிலிருந்து நீர் இரைத்துக்கொண்டிருக்கிறான்.அவன் மனைவி இடுப்பில் குழந்தையோடு கஞ்சி கொண்டுவருகிறாள்.வயலின்பசுமை அவர்களை மகிழ்விக்கிறது. சில மாதங்கள் கழித்து அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது வட்டிக்காரன் வந்து மகசூலை மட்டுமிலாமல் நிலத்தையும் பிடுங்கிக் கொள்கிறான்.விவசாயி மனைவியொடும் குழந்தையோடும் மும்பையை நோக்கி நடக்கிறான்.

காட்சி மாறுகிறது.கிழவனாகிவிட்ட ,விவசாயி, கூலித்தொழிலாளியாகி மண்டையில் அடிபட்டு மகனின் மடியில் கிடக்கிறான். வாலிபனான மகனிடம்" என்ன ஆனாலும் வட்டிக்காரனிடம் மட்டும் கடன் வாங்காதே" என்று சத்தியம் வாங்கிக்கொண்டு உயிரை விடுகிறான்..

இந்தப்படம் ஊமைப்பட காலத்தில்(MOVIE) வந்தது தொழிலாளியாக பாபு ராவ் பேயிண்டர் என்பவர் நடித்தார்.மகனாக இளம் சாந்தாராம் நடித்தார்

இந்த .படத்தை உடனேயே பார்க்க வேண்டும் என்று நீங்க்கள் துடிக்கலாம்.பூனேயில் இருக்கும் திரைப்பட காப்பகதில் ஐம்பதுஅடி, நூறு அடி என்று அறுந்த நிலையில் சில துண்டுகள் மட்டுமே உள்ளன என்று தெரிந்து கொண்டேன்

Wednesday, September 29, 2010

hey! raam!--2

ஹே! ராம்!---2


கந்தியடிகளைப்பற்றி இந்துபத்திரிக்கையில் ஹர்ஷ் மந்தர் எழுதியிருக்கிறார். அதனைப் படித்த பாதிப்பில் இந்த இடுகையை எழுதுகிறேன்..பிரிவினையின் போது கல்கத்தாவில் கலவரம் மூண்டது.அப்போது வங்க மாகாணப் பிரதமராக இருந்த சுரவர்த்தியும் முஸ்லீம் லீக் தலைவர்களுகம் காந்தியிடம் வேண்டிகொண்டனர் நவகாளி பயணத்தை ஒத்திவைத்துவிட்டு.கல்கத்தா வந்தார் அடிகள்.முஸ்லீம் மக்கள் பகுதியில் இருந்த பாழடைந்த ஹைதாரி மாளைகையில் குப்பை கூளங்களோடு தங்கினார்.இந்துக்கள் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதமிருந்தார்.நாற்பது வயது இந்து ஒருவன் கடுமையாக காந்தியை எதிர்ப்பான்." காந்தி"திரப்படத்தில் இந்தக் காட்சியில் ஓம் பூரி இந்துவாக நடிப்பார். கலவரத்தின் போது அவனுடைய ஒருவயது மகன் கொல்லப்பட்டான். கலவரக்காரர்களில் ஒருவன் குழந்தையின் கால்களைபிடித்துத் தூக்கி சுவற்றில் அறைந்து கொன்று எரியும் நெருப்பில் போட்டதை கண்ணால் பார்த்தவன் அவன்'கலவரத்தை அவன் முன்னின்று தடுக்க வேண்டும் என்பார் காந்தி.அவன் மாண்டுபோன அவன் குழந்தயின் வயதை ஒத்த கலவரத்தில் அனாதையான முஸ்லீம் குழந்தையை வள்ர்க்கவேண்டும் ; அந்தக் குழந்தையை முஸ்லீமாகவே வளர்க்க வேண்டும் என்பதும் காந்தி அடிகளின் நிபந்தனை.அவன் ஏற்றுக் கொண்டு அடிகளுக்கு ரொட்டியைக் கொடுப்பான்.

காந்தியை மகாத்மா என்று ரவீந்திரநாத் தாகூர் அழைத்தார் இந்த தேசத்தின் தந்தை என்று நாம் அழைக்க பேறு பெற்றிருக்கிறோம்.

இருந்தாலும் காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.மிகவும்கறாரக இருப்பார். நெகிழ்ச்சியாகவும் இருப்பார்.சுத்த சைவம்.ஒருமுறை கான் அப்துல் காபர் கான் தன் குழந்தகளோடு காந்தியைப் பார்க்க வந்திருந்தார். அந்தக் குழந்தைகளுக்காக மாமிச உணவை வரவழைத்துக் கொடுதார் அடிகள் நகைச்சுவை உணர்வு உள்ளவர்.

பிரிடிஷ் அரசரைப்.பார்க்கச்சென்றபோதும் வேட்டி,மேல் துண்டோடுதான் போனார்.இதுபற்றி நிருபர் கேட்டபோது " எனக்கும் செர்த்துத்தான் அரசர் அணிந்திருக்கிறாரே" என்று கூறினார்.

அவர் சொன்னது செய்தது எல்லமே சரி என்று சொல்ல முடியாதுதான். தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்பவர் முதலில் அவராகத்தான் இருப்பார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக முன் நின்றவர் அவர்.தீண்டாமையை ஒழிக்க கடுமையாக போராடினார். அதேசமயம் சாதியை ஒழிக்க முன்வரவில்லயே!

இருந்தும் காந்தியை நாம் நேசிக்கிறோம்.அவர் ஒரே ஒரு குரலை மட்டுமே கேட்பார்.அது அவருடைய மனச்சாட்சியின் குரல்.

Sunday, September 26, 2010

"ஹே! ராம்"

"ஹே!ராம்!" திரைப் படத்தை மும்பையில் வெளியிடுவதற்கு முன்பு கொலைகாரன் நாதுரா ம் கோட்சே யின் தம்பி கோபால் கோட்சே பார்த்து அனுமதி கொடுத்தாராம்.


அந்தப் படத்திற்கு முதல் பாரட்டுவிழா கொல்கத்தாவில் நடந்தது.அதில் காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருப்பார்."காந்தி" படத்தின்" பென் கிங்ஸ்லி" யை விட சிறப்பான சித்தரிப்பு என்பது என் தனிப்பட்ட எண்ணம். பிர்லா மாளிகையின் நந்தவனத்தில் கோட்சேயால் சுடப்பட்டு பின்னோக்கி படிக்கட்டுகளைத்தாண்டி கீழே விழும் காட்சியில் ஷா அற்புதமாக நடித்திருப்பார்.

அப்படி விழும் போது "ஹே!ராம்!" என்று அவர் குரலெழுப்பமாட்டார். இதுபற்றி கமல்ஹாசனிடம் நிருபர் ஒருவர் கேட்டபோது " அப்படி குறிப்பு எதுவும்" கிடைக்கவில்லையே" என்றாராம்

இருந்தாலும்,துளசி தாசர்,பத்திராசலம் ராமதாஸ் ஆகியோரோடு ஒப்பிடும் அளவுக்கு ராமர் மீது பக்தி கொண்டவர் காந்தி அடிகள் பிரிவினையின்போது டில்லிபட்டணத்து அகதிகள் முகாமில் அவர் செய்த பணியை ராமபிரானுக்குச். செய்யும் பணியாக நினைத்துச் செய்தார் அங்குதான் அன்றய ஜனசங்கத்தின் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ் காரர்களையும் சந்தித்தார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும்,தலைவர்களும் எப்படியாவது காந்தியின் நம்பிக்கையப் பெறவேண்டும் என்று கருதினார்கள். காந்தியை தங்கள் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார்கள். .காந்தியும் ஒரு நாள் செண்றார்.

பிரும்மாணமான,அழகான அலுவலகம்.ஒவ்வொரு அறையாக காட்டினார்கள்.ஒவ்வொரு அறையிலும் வண்ணத்திரைச்சீலையில் எண்ணை ஒவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன.ராணா பிரதாப் சிங், வீர சிவாஜி என்று படங்கள் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மகிழ்ச்சியோடு பார்த்த காந்தி கிளம்பி வெளியே வந்தார்.

அவரிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்"ஐயா!அலுவலகத்தைப் பார்த்தீர்கள்.உங்கள் அபிப்பிராயம் என்ன? " என்று கேட்டுள்ளார்".அற்புதமான ஒவியங்களை வைத்துள்ளீர்கள்.ஒரு ராமர் படம் சின்னதாகவாவது வைத்திருக்கலாம். நான் ராம பக்தன்.அதுதான் என் வருத்தம்" என்றாராம் காந்தியடிகள்.

"ராணாவும், ரஜபுத்திரர்களும் முகம்மதியர்களை எதிர்த்து போராடினார்கள்.வீர சிவாஜி ஔரங்கசீப்பை எதிர்த்து போராடினார்.இவர்களைக் காட்டி பாரத மக்களுக்கு வீரமூட்டி இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவே விரும்புகிறோம். ராமர் எந்த முகம்மதியரையும் எதிர்த்து போராடவில்லையே" என்று தலைவர் பதிலளீத்தாராம்.

இந்த இடுகையைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். " நீங்கள் ஏதாவது ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஸ்டாம்ப் ஸைசிலாவது ராமர் படத்தைப் பார்த்தால்" எனக்கு தகவல் கொடுங்களேன்.

Thursday, September 23, 2010

சிற்றேரும்பு புற்றெடுக்க

பதினைந்தாவது நாடளுமன்றத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(ஐ.மு.கூ)யின் இரண்டாவதுஅவதாரம் கூடுதல் இடங்களைப் பெற்றது.543 இடங்களில் அது262 இடங்களில் வெற்றிவாகை சூடியது.இடதுசாரிகள் 24 இடங்களை மட்டுமே பெற்று சரிவினைச் சந்தித்தார்கள்


காங்கிரஸ் கட்சி மட்டும் சென்ற தெர்தலைவிட 61 இடங்களை அதிகமாக பெற்றது.இத்தனைக்கும் அதற்கு கூடுதலாக 2% வாக்குகளே கிடத்தன.மதவேறி சக்திகள் ஓரங்கட்டப்பட்டன என்பதுதான் ஒரே ஆறுதல்.இந்த வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் என்ன?

தேசீய ஊரக வேலை உத்திரவாத திட்டம் என்ற திட்டத்தை ஐ.மு.கூ அரசு நடைமுறப் படுத்தியது. இதன்படி 4கோடியே 50 லட்சம் கிரமப்புற ஏழைகள் 48 நாட்கள் வேலை பார்க்கமுடிந்தது.இந்தத் திட்டத்தை ஐ.மு கூட்டணியின் குறைந்த்பட்ச திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினர்.மனமோகனும்,சிதம் பரமும் கடுமையாக எதிர்த்தார்கள்.பின்னர் நாம்தானே நடைமுறைப் படுத்த வேண்டும் ,அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஏற்றுக் கோண்டனர்.ஆனால் இடதுசாரிகள் மனமோகனின் தாடியையும், சிதம்பரத்தின் சட்டையை யும் பிடித்து உலுக்கிய உலுக்கில் அது நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதொடு நிற்கவில்லை.விவ்சாயிகளின் கடனை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பழங்குடி மக்களுக்கும் வனகுடிமக்களுக்கும் உள்ள உரிமைகளை உத்திரவாதப் படுத்த சட்டம் இயற்றவைத்தார்கள்.

இவை எல்லாம் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் நடந்தது என்பது அந்தத்திட்டங்க்களால் பயனடைந்தவர்களுக்குக் கூட தெரியாதபடி ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன.

என்ன செய்ய? சிற்றெரும்பு புற்றெடுக்க கருநாகம் குடி வந்தால் என்ன செய்ய முடியும்?

உலகம் பூராவும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது.அமெரிக்க வங்கிகள்,திவாலாகின.அதன் காரணமாக வேலைவாய்ப்பு, I.T தொழிலில் சிராய்ப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள்.வளர்ந்த நாடுகள் குலைநடுங்க என்ன ஆகுமோ என்று பதறினபோது,இந்தியா அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.அதற்கான முக்கிய காரணம் வங்கித் தொழிலும்,காப்பீட்டுத்தொழிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகும்.

எல்.ஐ.சி.யின் மூலதனம் 5கோடி. அதனை 100 கோடியாக்க பிரதமர் விரும்புகிறார்.பொட்டியாக பணத்தை கொட்டி பங்குகளை வாங்க அநிய கம்பெனிகள் தயராக இருக்கின்றன.அதேபோல் வங்கிகளின் மூலதனத்தை 26 சத்திலிருந்து 49 சதமாக்க மன்மொகன் ரெடி..ஆனால் இடதுசாரிகள் அருவாளைத்தூக்கி விடுவார்களே என்ற பயம் அவரத்தடுத்து வந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அவதாரத்திற்கு இன்று இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை மனமோகன சிங் தைரிய(திமிரொடு)மாகத்தான் பெசுவார்.

நாடாளுமன்றத்தில் அவர் தாடியைப் பற்றி உலுக்க ஆளில்லயே! மக்கா! என்ன செய்ய? .

Friday, September 17, 2010

மொழிபெயர்ப்பும் கவிதையும்

மொழிபெயர்ப்பும் கவிதையும்


தொலைக்காட்சிப் பெட்டியைத்திறந்தால் இந்தியில் வாயசைக்கும் விளம்பரங்களுக்கு தமிழில் ஒலிவரும்."காம்ப்ளான் சாப்பிடாத குழந்தைக வளந்தாங்க 3செண்டி மீட்டர்!

காம்ப்ளான் சாப்பிட்ட குழந்தைக வளந்தாங்க 6செண்டிமீட்டர்!" என்று ஒலிக்கும்.சில இந்தி தொடர்கள் தமிழில் பேசும்."வருகிறேன் சாப்பிட!" போகிறேன் வீட்டுக்கு!" என்று வினைச்சொல்லை முன்வைத்து பெசும்.இந்தி மொழியில் வினச்சொல்லை முதலில் பயன்படுத்துவது வழக்கம்தான்.மொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதால் .ஏற்பட்டதின் விளைவுதான் இது.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன்,திருமண வீடுகளில் வாத்தியக்காரர்கள்,நாதஸ்வரமாக இருந்தாலும்,பாண்டுவாத்தியமாக இருந்தாலும் ஒரு பாட்டை வாசிக்காமல் இருக்கமாட்டார்கள்.அதிலும் பெண்ணோ, மாப்பிள்ளையோ ஊர்வலமாக வரும் போது கண்டிப்பாக வாசிப்பார்கள்.அது

"கல்யாண

ஊர்வலம் வரும்

உல்லாசமே தரும்---மகிழ்ந்து நான்

ஆடிடுவேன்" என்ற பாடலாகும்.இது ஒரு திரைப் படப்பாடல்."அவன்" என்ற படத்தின் பாடல். இந்தியில் "ஆ: என்று வெளிவந்த படத்தின் "டப்பிங்" வடிவம்.ராஜ் கபூர், நர்கீஸ் நடித்தார்கள்.சங்கர்--ஜெய்கிஷன் இசை அமைத்தனர்.ஷைலேந்திரா என்ற உருதுக் கவிஞர் படலை எழுதினார்.அது:

" ராஜா-கி-ஆவொகி பராத்

ரங்கோலி-கிராத்---மகனு மை

நசூங்கி" என்பதாகும்.இந்தப் படத்தின் அத்துணை பாடல்களும் பிரபலமானவை".ஜி.கிருஷ்ணவேணி" என்ற "ஜிக்கி" பாடியவை.அந்த்க்காலத்தில் இசைத்தட்டு விற்பனையில் முத்லிடம் பெற்றவை. தமிழ்ப் பாடலைக் கேட்ட ஷைலேந்திரா பாடலாசிரியரைப் பார்க்க தமிழ்நாடு வந்தார்."ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை உருதுமொழியில் நான் மொழிபெயர்தது போன்று அமைந்துள்ளது" என்று பாராட்டினாராம்.

மனதில் கவித்துவமும் மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

அந்தப் பாடலாசிரியர் பெயர் "கண்ணதசன்"

Monday, September 06, 2010

அக்ரி கல்சர் போய் பிரான் கல்சர் வருகிறது..

விவசாய நாகரீகமும்......


1957-58மாண்டுகளில் ஒரு முறை சி.பி.ராமசாமி அவர்களின் சொற்பொழிவு ஒன்றை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.நாகரீகம் என்ற தலைப்பில் பேசினார்.பயிர்தொழிலைத் தெரிந்த்து கொண்ட பிறகு நாகரீகம் வல ர்ச்சியடைந்தது என்பது அவருடைய பேச்சின் சாரம்.பயிர்செய்ய ஆரம்பித்த பின்னர் தான் அவன் நிரந்தரமாக தங்க ஆரம்பித்தான்.இது அவனுடைய மொழி,பழக்கவழக்கங்கள் சகமனிதர்களொடு கூடிய உறவுகள் ஆகியவற்றில் மாற்றங்களை உருவாக்கியது.Agri என்றால் விவசாயம்.Culture என்றால் பழக்கவழக்கங்கள்,பண்பாடு, நாகரீகம் எனலாம்.அதனால் தான் Agriculture என்கிறோம் என்றும் விளக்கினார்.

தாமிரவருணி,காவிரி டெல்டாபகுதிகளில் விவசாயம செழித்தது.அங்கு கலை,இலக்கியமும் வளர்ந்தது.வடக்கே நெல்லூர்,கிருஷ்ணா,கோதாவரி டெல்டா பகுதிகளும் இப்படித்தான்.மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு விவசாயம் அடிப்படையாக அமைந்தது எனலாம்.இன்று நிலமை மாறிவிட்டது.

விவசாயிகள் நெற்பயிருக்குப் பதிலாக பணப்பயிரை நாடுகிறார்கள்.நெல்லூரில் ஆயிரக்கணக்கானவர இப்போது நெல் பயிரிடுவதில்லை.மீன் பண்ணைகளை உரூ  வாக்கி" பிரான்" வளர்க்கிறார்கள்.கிழக்கு கோதாவரியில் லச்சக்கணக்கான ஏக்கரில் மீன் பண்ணை கள் வந்துவிட்டன்.

விவசாயத்தைவிட மீன் வளர்ப்பதில் லாபம் அதிகம்.குறிப்பாக "பிரான்" வளர்த்தால் விலை கூடுதலாகக் கிடைக்கிறது.ஒரு கிலொவுக்கு 600 ரூ கிடக்கற து.ஒருகிலொவுக்கு பத்திலிருந்து பதிணைந்து "பிரான்" நிற்கும்.600ரூ கிடைக்க 30 கிலோ நெல் விற்கப்படவேண்டும். மீன் வளர்த்தால் ஒரு ஹெக்டெகருக்கு ஆண்டுக்கு 15லட்சம் ரூ கிடக்கும். நெல் பயிரிட்டால் 50000 ரூ கிடைக்கும்.

ஆளும் பெரிசுகள் மீன் பண்ணைகளை தஞ்சையில் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆந்திரா இதைவிட மோசம். வடநாட்டு பேபர் கம்பெனிகள் விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்து மூங்கில் பயிரிட வைக்கின்றனர் ஓங்கோல் மாவட்டத்தில் இது மிக அதிகமாக நடைபெருகிறது.

மலேசியா, தாய்லாந்து,நாட்டி.ல் உள்ள பன்னாட்டு கம்பெனிகள் மீன்விதையை .கொடுக்கின்றன.விளை நிலத்தை வாங்கி தாங்களே மீன் வளர்த்தால்! விவசாயத்திலும் அந்நிய முதலீடு ? ஏன் கூடாது? பங்களா தேசத்தை பிரும்மபுத்திரா பாயும் பகுதியை நாசமாக்கியவர்கள் இந்தியாவுக்கும் வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் கொள்கை விஷயங்களில் தலையிடக் கூடாது என்று பிரதமர்

மன் மோகன் சிங் தொலை நோக்குப் பார்வையோடுதான் கூறியுள்ளார்.

Thursday, September 02, 2010

தாய் மொழியில் பெசுவது பிறப்புரிமை

தாய் மொழியில் பேசுவது பிறப்புரிமை.


இந்திய தொழிற்சங்க மையத்தின் நான்காவது அகில இந்திய மாநாடு1979ம் ஆண்டு எப்ரல் மாதம் சென்னையில் நடந்தது. இந்தியா பூராவிலும் இருந்து ஐயாயிரம் சார்பாளர்கள் கலந்து கொண்ட மிகப் பிரும்மண்டமான மாநாடாகும் அது.

ஐயாயிரம் சார்பாளர்கள் காலை எட்டு மணிக்குள் காலைக் கடன்களை முடித்து,குளித்து,காலை உணவை முடிக்க வேண்டும்.ஒன்பதரை மணிக்கு விவாதம் ஆரம்பமாகும்.சங்கத்தின் தலைவர் பி.டி. ரணதிவே.யார் வந்தாலும் வராவிட்டாலும் சரியான நெரத்தில் கராறாக ஆரம்பித்து விடுவார் சார்பாளர்கள் குலைநடுங்க ஓடி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். சரியாக பதிணொண்ணரை மணிக்கு ஐயாயிரம் பெருக்கும் ஐந்து நிமிடத்தில் .தேநீர் கொடுக்க வேண்டும்.ஆறாவது நிமிடம் அடுத்த சார்பாளரை தலைவர் பெசக் கூப்பிட்டுவிடுவார்.

மதியம் ஒன்று முப்பதுக்கு முப்பது நிமிடம் இடைவேளை. அதற்குள் அத்துணைபேரும் உணவை முடித்துக் கொள்ள வேண்டும்..மாலை நான்குமணிக்கு தேநீர். ஐந்து நாட்கள் தமிழக சி.ஐ.டி.யு ,குறிப்பாக சென்னை தொழர்கள் இதனைச்செய்துகாட்டினார்கள்.அவர்களுடய செய்நேர்த்தியையும்,செயல்திறனையும் பார்த்து தேனீ கூட வெட்கித்தலை குனியும்.

இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஜனநாயக மாண்பு மாநாடு நடத்தப்பட்ட முறையில் அற்புதமான வகையில் வெளிப்பட்டது.திரிபுராவின் பழங்குடி,அசாமின் தேயிலைத்தோட்டத்தொழிலாளி,டார்ஜிலிங்கின் கூர்கா,டோங்கிரி பேசும் காஷ்மீரி,,மத்திய பிரதேசத்தின் வனகுடிகள், மும்பையின் ஆலைத்தொழிலாளி,பஞ்சாபி,இந்தி,உருது, தமிழ்தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,வங்கம்,இந்தியாவின் சகலமொழிக்காரர்களும் அங்கு இருந்தனர்.அவர்கள் அத்துணை பெரும் அவரவர் தாய் மொழியிலேயே பேச அனுமதிக்கப்பட்டனர்.இது எப்படி நடைமுறைபடுத்தப் பட்டது? . உதாரணமாக,குஜராத்தியில் ஒருவர் பேசினால், அவர் பெசிமுடித்தவுடன் தலைவர் பி.டி.ஆர் ஐந்துந்மிடம் மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பார்..குஜராத்தியில் பெசியது இந்தியில் மொழிபெயர்க்கப்படும்.இந்தி தெரியாதவர்களுக்காக வேரொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்.ஆங்கிலமும்,இந்தியும் தெரியாதவர்கள்

என்னாவது?அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவர் பொது மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பார்.இந்தி ஆங்கிலம் தெரிந்த அந்தந்த மொழிக்காரர்கள் தங்கள் தங்கள் தாய். மொழியில் அந்தந்த குழுக்களுக்கு மொழிபெயர்ப்பார்கள்.ஐயாயிரம் சார்பாளர்களிடையே இருபத்து மூன்று இந்திய மொழிகள் ஒரேசமயையித்தில்

பெசப்படுவதை கேட்பதும் பார்ப்பதும் மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வாகும

என்னசெய்வது? மத்திய அமைச்சர் ஒருவர் தாய்மொழியில் தான் பெசுவேன் என்று இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்.இறுதியில் ஆங்கிலத்தில் எழுதிவைத்து வாசிக்கவேண்டியதாயிற்று.பணபலமோ,அதிகாரபஇல்லாதவர்களால்முடிகிறது

ஆட்சியாளர்களால் ஏன் முடியவில்லை?

Saturday, August 28, 2010

"முகல்-இ-ஆஜம்"

"முகலாயர்களின் ரத்தினக்கல்."


கிட்டத்தட்ட ஐம்பது அல்லது ஐம்பத்திரண்டு ஆனண்டுகள் சென்ரறுவிட்டன அப்போது நான் ஹைதிராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.ரஃபீக் அகமது, ஜமீல் கான்,ரஹமான் கான் என்று நண்பர்கள்.ராமாரவ், ராம்மோகன் ராவ் என்று தெலுங்கானா நண்பர்கள் உண்டு.மாத்ருபூதம் என்று தஞ்சாவூர் பெரியவர் ஒருவர் எங்களோடு பணியாற்றியனார்.லட்சுமி இன்சூரன்ஸ் கம்பெனியின் கராச்சி அலுவலகத்தில் இருபது ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பிரிவினைக்குப் பின் இங்கு வந்தவர்.அவர் உதட்டிலிருந்து ஆங்கிலம்,சமஸ்கிருதம்,உருது மொழிகள் பிரவாகமாகக் கொட்டும்.அப்போதெல்லாம் ஒரு மரபு இருந்தது.நண்பர்களுக்கு பிறந்த தினம் என்றால் மதிய இடைவெளையில் "முஷியாரா" (கவியரங்கம்) உண்டு.உருது மொழியில் பிறந்த நாள் நண்பரைப் பற்றி ஆளுக்கு ஒரு கவிதையாவது பாட வேண்டும்."சௌதவி-கா-சாந்த்"', காகஜ்-கி-பூல்","சாஹிப்-பீவி-குலாம்" ஆகிய படங்களை சேர்ந்து பர்ப்போம்.வசனங்களில் உருது மணம் கமழும்,

"முகல்-இ-ஆஜம்"(முகமதியனின் ரத்தினக் கல்)என்ற படம் 1960 ஆண்டுவாக்கில் வந்தது.அன்றே ஒன்றரைக் கோடி தயாரிப்பு செலவு. அந்தப் படத்தின் ஒவ்வொரு வசனத்தையும், பாடல்களையும் ரஃபிக்கும்,ஜமீலும் சொல்ல நாங்கள் பரவசமாக கேட்போம்.(uruthu is a romaantic language)உருது மொழிக்கு என்று கூடுதலான அழகியல் உண்டு

அக்பரின் மனைவி "ஜோதா பாய்". கிருஷ்ணபகவானின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.எந்த சந்தர்ப்பத்திலும் அக்பர் தன் மனைவியை மதம் மாறும் படி சொல்லவில்லை. மனைவிக்காக அரண்மனைகுள்ளேயே ஒரு கிருஷ்ணன் கொவிலைக் கட்டிக் கொடுத்தார். அந்தக் கோவிலில் ஆண்டுதோரும் நடக்கும் "கிருஷ்ண ஜயந்தி விழா"ஜோதா பாயா"ல் சிறப்பாக நடத்தப்படும்."முகல்-இ-ஆஜம்" படத்திலும் இந்தக்காட்சி உண்டு.

"என் காதலன் நந்தலாலா(கண்ணன்) என்னைச் சீண்டுவான்.எனக்கு விருப்பமிருந்தாலும் நான் பொய்யாக கோபத்தைக் காட்டுவேன்.நான் பெண்ணல்லவா!ஆனால் சபையில் நான்கு பேர் முன்பு சீண்டும்போது நான் என்ன செய்வேன்'என்று கண்ணனின் காதலி பாடுவதாக வரும்.

இந்தப்பாடலை எழுதியவர் "ஷகில் பாதயுனி" என்ற இஸ்லாமியர்.மற்றொரு இஸ்லாமியர் "நௌஷத்" இசை அமைத்தார்.இந்தப் படத்தை இயக்கியவர் அசிஃப் என்ற இஸ்லாமியர். கண்ணன் வாழ்ந்த இடங்களான மதுரா,பிருந்தாவன் ஆகிய இடங்களில் பேசும் வட்டார மொழி 'பிரிஜ் பாஷ' என்ற இந்தியாகும் கவிஞர் ஷகில் பாடலில் அதனைத்தான் பயன் படுத்தி இருப்பார்.

' ஆரம்பத்தில் இந்தப் பாடலை எடுத்துவிடும்படி விநியோகிப்போர் கூறினர்.அரண்மனைக்குள் கோவில் இருந்ததும் அங்கு விழா நடந்ததும் உண்மை. நான் அந்தக் காட்சியோடுதான் வேளியிடுவேன் என்று அசிஃப் அறிவித்தார்.

பின்னர் மதுரை வந்துவிட்டேன்.என் தாய் மாமன் ஒருமுறை வந்திருந்தார்.காலை ஐந்து மணிக்க எழுந்.து குளித்து,வ டக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோவில் சென்று வந்தார். நான் அப்போதுதான் எழுந்தேன்."கிருஷ்ணஜெயந்த்தி. கொவிலுக்கு பொயிட்டுவாடா" என்றார். தூக்கக் கலக்கத்தில் "அல்லாஹு அக்பர்" என்றென். 'தாயோ....."என்று என் மாமா செல்லமாக என்னை அடிக்க கையை ஒங்க்கினார்..

Tuesday, August 24, 2010

தமிழும், எம் தமிழ் மக்களும் வாழ்க!

தமிழ் வாழ்க! எம் தமிழ் மக்களும் வாழ்க!

நான் பணி புரிந்த அலுவலகத்தில் ந.திருமலை என்ற நண்பர் என்னோடு பணியாற்றினார்.அவர் ஒரு ஸ்கூட்டர் வாங்கினார்.அதன் முகப்பில் "மெல்லுந்து" என்று பிளாஸ்டிக் எழுத்துக்களால் பொறித்திருந்தார்.அது எனக்கு விசித்திரமாக இருந்தது.அவரிடம் "பைக்"என்றால் என்ன எழுதுவீர்?

"வல்லுந்து"

"மொப்பெட் என்றால்?"

"சில்லுந்து"

"சைக்கிள்?"

"மிதி உந்து"

நான் அசந்துவிட்டேன்.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் தமிழில் தான் கையெப்பமிடுவார். வருகைப் பதிவேட்டில் "நதி" என்று குறுங்கையெழுத்திடுவார்.வங்கி காசோலையில் தமிழில் தான் கையொப்பமிடுவார்.அன்று அவரை ஒரு தமிழ் வெறியர் என்று நினைத்தேன்.

1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.'பக்தவத்சலக் குரங்கே! பதவியை விட்டு இறங்கு! என்று மாணவ்ர்களுக்கு குரல் எழுப்ப கற்றுக்கொடுத்தேன்.60--70 மாண்டுகளின் முற்பகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் துறைகளின் பெயர்பலகைகளை மாற்ற அரசு உத்திரவிட்டது.முதன் முதலில் போலீஸ் இலாகாவில் தான் மாற்றினார்கள்.அப்போது அந்த இலாகாவின் அமைச்சர் பக்தவத்சலம். திருவல்லிக்கேணியில் பெரியதெரு உள்ளது.அதுவும் வலாஜா ரோடும் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தது.அதன் பெயர்ப்பலகையை மாற்றி "காவல் நிலையம்" என்று எழுதினாரகள்.அப்பப்பா! ஆங்கிலப் பத்திரிகைகள் தலையங்கம் மூலம்

திட்டித்தீர்த்தன."அது என்ன காவல் நிலையம்? ஊர்க்கவலா? கடற்காவலா? பேசாமல் போலீஸ் ஸ்டேஷனென்று தமிழிலேயே எழுத்தித்தொலைக்க வேண்டியது தானே?" என்று கூக்குரலிட்டார்கள்.

1897ம் ஆண்டுவாக்கில் "தயாப்ஜி" தலைமையில் காங்கிரஸ் கட்சியீன் மாநாடு நடந்தது. ஆங்கிலத்தில் தான் பெசுவார்கள். தஞ்சையைச்சேர்ந்த சிங்கனாசாரி என்ற விவசாயி சார்பாளராக வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் தெரியாது.காங்கிரஸ் மஹாசபையில் தமிழில் ஒலித்த முதல் குரல் சிங்கனாசாரியினுடயதாகும். ஏன்? தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக தமிழில் பேசியவர்கள் பி.ராம மூர்த்தியும், ஜீவாவும் ஆகும்.கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மதறாஸ் மகாணத்தை மொழிவாரியாகப் பிரித்து அந்தந்த மொழிபேசும் மக்களை அந்தந்த மக்களோடு இணைக்க நடந்த போராட்டத்தில் முதல் அடி பட்டவர் கம்யூனிஸ்ட் தலைவர் காலம் சென்ற எம்.ஆர்.வெங்கட ராமன் ஆவார்.

தமிழைக் காசாக்கி,காசைக் கூழாக்கி,கூழைக் குடித்துவிட்டு, கும்மாளம் போடுபவர்களும் உண்டு.

எனது அருமை நண்பர் வேணுகோபால் எனக்கு எப்போது கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பினாலும் தமிழில் தான் அனுப்புவார்.

தமிழை வாழவைப்பவர்கள் ந.திருமலை,வேணு கோபால் போன்ற சாதாரணமானவர்கள்.தமிழுக்கு அடி உரமாக இருப்பவர்கள் எம் தமிழ் மக்கள்.

Sunday, August 22, 2010

nhatpukkum

நட்புக்கும் மேலாக------

௨௦௦௦மாவது  வருடம்                          
ஜனவரி மாதம் 25ம் தேதி அது நடந்தது.கேரள மாநிலம் வடக்கு அம்பலபுழாவில் நடந்தது.அந்த ஊரில் உள்ள இருப்புப்பாதையின் நடுவே ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தாள். எதிரில் டீசல் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் வந்து கொண்டிருந்தது.அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ளத்தான் ஓடுகிறாள் என்று சந்தேகப்பட்ட வேறொரு பெண் அவளை இழுத்து காப்பாற்றுகிறாள்.

ஓடிவந்த பெண்ணுக்கு அறுபது வயதிருக்கும்.நம்பூதிரி குடும்பத்துப் பெண்.பெயர் செல்லம்மாள் அந்தர்ஜனம்.அவரைக் காப்பாற்றிய பெண்ணின் பெயர் ரஜியாபீவி.

செல்லம்மாளுக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவரும் வெகு சீக்கிரத்திலேயே இறந்து விட்டார் உறவினர்களின் அக்கரையற்ற,உதாசீனமன,வெரு

ப்பான போக்கு செல்லம்மாளை தெருவுக்கு விரட்டியது.அவள் தனக்கு ரயிலிடம் புகலிடம் கேட்க ஓடியபொதுதான் ரஜியாபீவி அவளைத் தடுதாட்கொண்டாள்.

ரஜியா பீவி வடக்கு அம்பலப்புழாவின் பஞ்சாயது உறுப்பினரும் ஆவார்.செல்லம்மாளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அவருடைய கணவரும் நான்கு மகன்களும் அன்போடு வரவேற்றனர். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் செல்லம்மாவுக்கு என்று வீடு கட்ட பஞ்சாயத்தை ரஜியா அணுகினார். ஆதரவற்ற பெண்களுக்கான பஞ்சாயத்து திட்டம் மூலம் உதவி கேட்டார்.

செல்லம்மாள் ஒரு இந்து.அவளுக்காக நீ ஏன் அக்கரைப் படுகிறாய் என்று உறவினர்களும் ஊர்க்காரர்களும் ரஜியாவை தடுத்தனர்.

ரஜியா கவலைப்படவில்லை.தன் செலவிலேயே ஒரு ஏற்பாடு செய்தார்.தற்போது செல்லம்மாள் தனியாக வசிக்கிறார் ரஜியா தினம் ஒரு. முறை சென்று பார்த்து வருகிறார். ரஜியா தனக்கு செல்லம்மாள் என்ற தாய் கிடைத்துவிட்டதாக சொல்கிறார். தனக்கு "ரஜியா மகள்" கிடைத்து

விட்டதாக செல்லம்மாள் பூரிக்கிறாள்.

இந்தச் செய்தியைக் கெள்விப்பட்ட இயக்குனர் பாபு திருவில்லா இதனை திரைப் படமக எடுக்கிறார். எற்கனவே "தனியே", "அமரம்" என்ற படங்களை எடுத்தவர் அவர்.ரஜியா பீவி யாக கல்பனாவும் செல்லம்மாவாக சுப்புலட்சுமியும் நடிக்கிறார்கள்.இந்த்ப்படத்தின் மூலம் மத நல்லிணக்கம் பற்றி ஒரு செய்தியை மக்களுக்கு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம் என்கிறார் பபு திருவில்லா.

(ஆதாரம்: இந்து 21-8-10 )

Friday, August 20, 2010

monkey charmer

குரங்காட் டி
அவன் ஒரு சிறந்த குரங்காட்டி.குரங்குகளைப் பிடித்து வந்து பழக்குவான்.அவை ராமனுக்கு பூஜை செய்யும்.முருகனுக்கு காவடி தூக்கும்.குட்டிக் கரணம் போடும்.பழக்கிய குரங்குகளை விற்பதும் அவனுடைய பழக்கம்.
புதிதாக அவன் ஒரு குரங்கை வைத்திருந்தான். அவனுடைய வீட்டில் சிறு தோட்டம் இருந்தது. செடிகளுக்கு தண்ணீர் விடுவான்.குரங்கை தன்னீர்விட பழக்கினால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.சிறு பிளாஸ்டிக் வாளி மூலம் தண்ணீர் விட குரங்கைப் பழக்கினான்.பிறகு ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்க குரங்கைப் பழக்கினான். தொட்டியில் தண்ணீர் இல்லை என்றால் கை பம்பு மூலம் தண்ணீர் அடித்து தொட்டியை நிரப்ப குரங்கிற்கு சொல்லிக் கொடுத்தான்.இப்போது தோட்டவேலை பாதியை குரங்கே பர்த்துக்கொண்டது.
அவனுடைய நண்பர்கள் அவனை பாராட்டினர்.அடுத்த தெருவில் உள்ள நண்பர் அந்த குரங்கை விலைக்குக் கேட்டார்.அவனும் கொடுத்துவிட்டான்.
நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் வீட்டுத் தோட்ட வேலை எளிமையாகிவிடும் என்று பெருமைப் பட்டார்.குரங்குக்கு வாழைப் பழம் வாங்கிக்கொடுத்தார்.முதல் நாள் ஆனதால் சிறு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் மொண்டு குரங்கினிடம் கொடுத்தார்.குரங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள பழயகுரங்காட்டியின் வீட்டிற்கு தண்ணீர் விட ஓடியது.
பின் குறிப்பு.உங்களுக்கு அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ராஜ் நாத் சிங் நினைவு வரக்கூடாது.