Saturday, August 28, 2010

"முகல்-இ-ஆஜம்"

"முகலாயர்களின் ரத்தினக்கல்."


கிட்டத்தட்ட ஐம்பது அல்லது ஐம்பத்திரண்டு ஆனண்டுகள் சென்ரறுவிட்டன அப்போது நான் ஹைதிராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.ரஃபீக் அகமது, ஜமீல் கான்,ரஹமான் கான் என்று நண்பர்கள்.ராமாரவ், ராம்மோகன் ராவ் என்று தெலுங்கானா நண்பர்கள் உண்டு.மாத்ருபூதம் என்று தஞ்சாவூர் பெரியவர் ஒருவர் எங்களோடு பணியாற்றியனார்.லட்சுமி இன்சூரன்ஸ் கம்பெனியின் கராச்சி அலுவலகத்தில் இருபது ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பிரிவினைக்குப் பின் இங்கு வந்தவர்.அவர் உதட்டிலிருந்து ஆங்கிலம்,சமஸ்கிருதம்,உருது மொழிகள் பிரவாகமாகக் கொட்டும்.அப்போதெல்லாம் ஒரு மரபு இருந்தது.நண்பர்களுக்கு பிறந்த தினம் என்றால் மதிய இடைவெளையில் "முஷியாரா" (கவியரங்கம்) உண்டு.உருது மொழியில் பிறந்த நாள் நண்பரைப் பற்றி ஆளுக்கு ஒரு கவிதையாவது பாட வேண்டும்."சௌதவி-கா-சாந்த்"', காகஜ்-கி-பூல்","சாஹிப்-பீவி-குலாம்" ஆகிய படங்களை சேர்ந்து பர்ப்போம்.வசனங்களில் உருது மணம் கமழும்,

"முகல்-இ-ஆஜம்"(முகமதியனின் ரத்தினக் கல்)என்ற படம் 1960 ஆண்டுவாக்கில் வந்தது.அன்றே ஒன்றரைக் கோடி தயாரிப்பு செலவு. அந்தப் படத்தின் ஒவ்வொரு வசனத்தையும், பாடல்களையும் ரஃபிக்கும்,ஜமீலும் சொல்ல நாங்கள் பரவசமாக கேட்போம்.(uruthu is a romaantic language)உருது மொழிக்கு என்று கூடுதலான அழகியல் உண்டு

அக்பரின் மனைவி "ஜோதா பாய்". கிருஷ்ணபகவானின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.எந்த சந்தர்ப்பத்திலும் அக்பர் தன் மனைவியை மதம் மாறும் படி சொல்லவில்லை. மனைவிக்காக அரண்மனைகுள்ளேயே ஒரு கிருஷ்ணன் கொவிலைக் கட்டிக் கொடுத்தார். அந்தக் கோவிலில் ஆண்டுதோரும் நடக்கும் "கிருஷ்ண ஜயந்தி விழா"ஜோதா பாயா"ல் சிறப்பாக நடத்தப்படும்."முகல்-இ-ஆஜம்" படத்திலும் இந்தக்காட்சி உண்டு.

"என் காதலன் நந்தலாலா(கண்ணன்) என்னைச் சீண்டுவான்.எனக்கு விருப்பமிருந்தாலும் நான் பொய்யாக கோபத்தைக் காட்டுவேன்.நான் பெண்ணல்லவா!ஆனால் சபையில் நான்கு பேர் முன்பு சீண்டும்போது நான் என்ன செய்வேன்'என்று கண்ணனின் காதலி பாடுவதாக வரும்.

இந்தப்பாடலை எழுதியவர் "ஷகில் பாதயுனி" என்ற இஸ்லாமியர்.மற்றொரு இஸ்லாமியர் "நௌஷத்" இசை அமைத்தார்.இந்தப் படத்தை இயக்கியவர் அசிஃப் என்ற இஸ்லாமியர். கண்ணன் வாழ்ந்த இடங்களான மதுரா,பிருந்தாவன் ஆகிய இடங்களில் பேசும் வட்டார மொழி 'பிரிஜ் பாஷ' என்ற இந்தியாகும் கவிஞர் ஷகில் பாடலில் அதனைத்தான் பயன் படுத்தி இருப்பார்.

' ஆரம்பத்தில் இந்தப் பாடலை எடுத்துவிடும்படி விநியோகிப்போர் கூறினர்.அரண்மனைக்குள் கோவில் இருந்ததும் அங்கு விழா நடந்ததும் உண்மை. நான் அந்தக் காட்சியோடுதான் வேளியிடுவேன் என்று அசிஃப் அறிவித்தார்.

பின்னர் மதுரை வந்துவிட்டேன்.என் தாய் மாமன் ஒருமுறை வந்திருந்தார்.காலை ஐந்து மணிக்க எழுந்.து குளித்து,வ டக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோவில் சென்று வந்தார். நான் அப்போதுதான் எழுந்தேன்."கிருஷ்ணஜெயந்த்தி. கொவிலுக்கு பொயிட்டுவாடா" என்றார். தூக்கக் கலக்கத்தில் "அல்லாஹு அக்பர்" என்றென். 'தாயோ....."என்று என் மாமா செல்லமாக என்னை அடிக்க கையை ஒங்க்கினார்..

Tuesday, August 24, 2010

தமிழும், எம் தமிழ் மக்களும் வாழ்க!

தமிழ் வாழ்க! எம் தமிழ் மக்களும் வாழ்க!

நான் பணி புரிந்த அலுவலகத்தில் ந.திருமலை என்ற நண்பர் என்னோடு பணியாற்றினார்.அவர் ஒரு ஸ்கூட்டர் வாங்கினார்.அதன் முகப்பில் "மெல்லுந்து" என்று பிளாஸ்டிக் எழுத்துக்களால் பொறித்திருந்தார்.அது எனக்கு விசித்திரமாக இருந்தது.அவரிடம் "பைக்"என்றால் என்ன எழுதுவீர்?

"வல்லுந்து"

"மொப்பெட் என்றால்?"

"சில்லுந்து"

"சைக்கிள்?"

"மிதி உந்து"

நான் அசந்துவிட்டேன்.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் தமிழில் தான் கையெப்பமிடுவார். வருகைப் பதிவேட்டில் "நதி" என்று குறுங்கையெழுத்திடுவார்.வங்கி காசோலையில் தமிழில் தான் கையொப்பமிடுவார்.அன்று அவரை ஒரு தமிழ் வெறியர் என்று நினைத்தேன்.

1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.'பக்தவத்சலக் குரங்கே! பதவியை விட்டு இறங்கு! என்று மாணவ்ர்களுக்கு குரல் எழுப்ப கற்றுக்கொடுத்தேன்.60--70 மாண்டுகளின் முற்பகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் துறைகளின் பெயர்பலகைகளை மாற்ற அரசு உத்திரவிட்டது.முதன் முதலில் போலீஸ் இலாகாவில் தான் மாற்றினார்கள்.அப்போது அந்த இலாகாவின் அமைச்சர் பக்தவத்சலம். திருவல்லிக்கேணியில் பெரியதெரு உள்ளது.அதுவும் வலாஜா ரோடும் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தது.அதன் பெயர்ப்பலகையை மாற்றி "காவல் நிலையம்" என்று எழுதினாரகள்.அப்பப்பா! ஆங்கிலப் பத்திரிகைகள் தலையங்கம் மூலம்

திட்டித்தீர்த்தன."அது என்ன காவல் நிலையம்? ஊர்க்கவலா? கடற்காவலா? பேசாமல் போலீஸ் ஸ்டேஷனென்று தமிழிலேயே எழுத்தித்தொலைக்க வேண்டியது தானே?" என்று கூக்குரலிட்டார்கள்.

1897ம் ஆண்டுவாக்கில் "தயாப்ஜி" தலைமையில் காங்கிரஸ் கட்சியீன் மாநாடு நடந்தது. ஆங்கிலத்தில் தான் பெசுவார்கள். தஞ்சையைச்சேர்ந்த சிங்கனாசாரி என்ற விவசாயி சார்பாளராக வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் தெரியாது.காங்கிரஸ் மஹாசபையில் தமிழில் ஒலித்த முதல் குரல் சிங்கனாசாரியினுடயதாகும். ஏன்? தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக தமிழில் பேசியவர்கள் பி.ராம மூர்த்தியும், ஜீவாவும் ஆகும்.கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மதறாஸ் மகாணத்தை மொழிவாரியாகப் பிரித்து அந்தந்த மொழிபேசும் மக்களை அந்தந்த மக்களோடு இணைக்க நடந்த போராட்டத்தில் முதல் அடி பட்டவர் கம்யூனிஸ்ட் தலைவர் காலம் சென்ற எம்.ஆர்.வெங்கட ராமன் ஆவார்.

தமிழைக் காசாக்கி,காசைக் கூழாக்கி,கூழைக் குடித்துவிட்டு, கும்மாளம் போடுபவர்களும் உண்டு.

எனது அருமை நண்பர் வேணுகோபால் எனக்கு எப்போது கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பினாலும் தமிழில் தான் அனுப்புவார்.

தமிழை வாழவைப்பவர்கள் ந.திருமலை,வேணு கோபால் போன்ற சாதாரணமானவர்கள்.தமிழுக்கு அடி உரமாக இருப்பவர்கள் எம் தமிழ் மக்கள்.

Sunday, August 22, 2010

nhatpukkum

நட்புக்கும் மேலாக------

௨௦௦௦மாவது  வருடம்                          
ஜனவரி மாதம் 25ம் தேதி அது நடந்தது.கேரள மாநிலம் வடக்கு அம்பலபுழாவில் நடந்தது.அந்த ஊரில் உள்ள இருப்புப்பாதையின் நடுவே ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தாள். எதிரில் டீசல் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் வந்து கொண்டிருந்தது.அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ளத்தான் ஓடுகிறாள் என்று சந்தேகப்பட்ட வேறொரு பெண் அவளை இழுத்து காப்பாற்றுகிறாள்.

ஓடிவந்த பெண்ணுக்கு அறுபது வயதிருக்கும்.நம்பூதிரி குடும்பத்துப் பெண்.பெயர் செல்லம்மாள் அந்தர்ஜனம்.அவரைக் காப்பாற்றிய பெண்ணின் பெயர் ரஜியாபீவி.

செல்லம்மாளுக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவரும் வெகு சீக்கிரத்திலேயே இறந்து விட்டார் உறவினர்களின் அக்கரையற்ற,உதாசீனமன,வெரு

ப்பான போக்கு செல்லம்மாளை தெருவுக்கு விரட்டியது.அவள் தனக்கு ரயிலிடம் புகலிடம் கேட்க ஓடியபொதுதான் ரஜியாபீவி அவளைத் தடுதாட்கொண்டாள்.

ரஜியா பீவி வடக்கு அம்பலப்புழாவின் பஞ்சாயது உறுப்பினரும் ஆவார்.செல்லம்மாளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அவருடைய கணவரும் நான்கு மகன்களும் அன்போடு வரவேற்றனர். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் செல்லம்மாவுக்கு என்று வீடு கட்ட பஞ்சாயத்தை ரஜியா அணுகினார். ஆதரவற்ற பெண்களுக்கான பஞ்சாயத்து திட்டம் மூலம் உதவி கேட்டார்.

செல்லம்மாள் ஒரு இந்து.அவளுக்காக நீ ஏன் அக்கரைப் படுகிறாய் என்று உறவினர்களும் ஊர்க்காரர்களும் ரஜியாவை தடுத்தனர்.

ரஜியா கவலைப்படவில்லை.தன் செலவிலேயே ஒரு ஏற்பாடு செய்தார்.தற்போது செல்லம்மாள் தனியாக வசிக்கிறார் ரஜியா தினம் ஒரு. முறை சென்று பார்த்து வருகிறார். ரஜியா தனக்கு செல்லம்மாள் என்ற தாய் கிடைத்துவிட்டதாக சொல்கிறார். தனக்கு "ரஜியா மகள்" கிடைத்து

விட்டதாக செல்லம்மாள் பூரிக்கிறாள்.

இந்தச் செய்தியைக் கெள்விப்பட்ட இயக்குனர் பாபு திருவில்லா இதனை திரைப் படமக எடுக்கிறார். எற்கனவே "தனியே", "அமரம்" என்ற படங்களை எடுத்தவர் அவர்.ரஜியா பீவி யாக கல்பனாவும் செல்லம்மாவாக சுப்புலட்சுமியும் நடிக்கிறார்கள்.இந்த்ப்படத்தின் மூலம் மத நல்லிணக்கம் பற்றி ஒரு செய்தியை மக்களுக்கு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம் என்கிறார் பபு திருவில்லா.

(ஆதாரம்: இந்து 21-8-10 )

Friday, August 20, 2010

monkey charmer

குரங்காட் டி
அவன் ஒரு சிறந்த குரங்காட்டி.குரங்குகளைப் பிடித்து வந்து பழக்குவான்.அவை ராமனுக்கு பூஜை செய்யும்.முருகனுக்கு காவடி தூக்கும்.குட்டிக் கரணம் போடும்.பழக்கிய குரங்குகளை விற்பதும் அவனுடைய பழக்கம்.
புதிதாக அவன் ஒரு குரங்கை வைத்திருந்தான். அவனுடைய வீட்டில் சிறு தோட்டம் இருந்தது. செடிகளுக்கு தண்ணீர் விடுவான்.குரங்கை தன்னீர்விட பழக்கினால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.சிறு பிளாஸ்டிக் வாளி மூலம் தண்ணீர் விட குரங்கைப் பழக்கினான்.பிறகு ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்க குரங்கைப் பழக்கினான். தொட்டியில் தண்ணீர் இல்லை என்றால் கை பம்பு மூலம் தண்ணீர் அடித்து தொட்டியை நிரப்ப குரங்கிற்கு சொல்லிக் கொடுத்தான்.இப்போது தோட்டவேலை பாதியை குரங்கே பர்த்துக்கொண்டது.
அவனுடைய நண்பர்கள் அவனை பாராட்டினர்.அடுத்த தெருவில் உள்ள நண்பர் அந்த குரங்கை விலைக்குக் கேட்டார்.அவனும் கொடுத்துவிட்டான்.
நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் வீட்டுத் தோட்ட வேலை எளிமையாகிவிடும் என்று பெருமைப் பட்டார்.குரங்குக்கு வாழைப் பழம் வாங்கிக்கொடுத்தார்.முதல் நாள் ஆனதால் சிறு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் மொண்டு குரங்கினிடம் கொடுத்தார்.குரங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள பழயகுரங்காட்டியின் வீட்டிற்கு தண்ணீர் விட ஓடியது.
பின் குறிப்பு.உங்களுக்கு அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ராஜ் நாத் சிங் நினைவு வரக்கூடாது.

Sunday, August 15, 2010

what is time?...2

காலம் என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பி இடுகை எழுதியிருந்தேன்."நல்ல தத்துவ விசாரணையில் ஆரம்பித்து இறைவனிடத்தில் சரண டைந்து விட்டீர்களே" என்று எஸ்.வி வேணு கோபால் விமரிசித்து எழுதியிருந்தார்.
காலம் இரண்டு சம்பவங்களுக்கிடையே உள்ள இடைவெளி.சம்பவம் என்றால் ? உதாரணமாக விதை பூமியைத்துளைத்துக் கொண்டு முளையாக வெளிவருகிறது.முளை செடியாகிறது.விதைக்கும் முளைக்கும் இடவெளி உண்டு.முளைக்கும் செடிக்கும் இடையேயும் இடவெளி உண்டு.
விதை இல்லை என்றால் முளை இல்லை.முளை இல்லை என்றால் செடி இல்லை.இவை இல்லை என்றால் இடைவெளி இல்லை. இடவெளி இல்லை என்றால் காலமும் இல்லை.
விதை என்ற "பொருள்" இல்லை என்றால் காலம் இல்லை.
பொருள் இல்லை என்றாலும் காலம் இருக்கும் என்று ஜெர்மனிய தத்துவ ஞானிகள் வாதிட்டனர்." இயற்கையின் தர்க்கவியல்" என்ற நூலில் ஏஞ்சல்ஸ் இதனைத் மறுத்து விரிவாக எழுதி உள்ளார்.
பொருள் இல்லை என்றால் காலம் இல்லை எனும்போது,காலமே இல்லாதபோது புண்ணாக்கு கடவுளுக்கு ஏது இடம் நண்பா?
(கைப்பந்து விளையாட்டில் ரிசீவர்,லிஃப்டர்,ஸ்டிரைக்கர் என்று உண்டு.,பின்னூட்டமிடுபவர் இங்கு லிஃப்டர். நீங்கள் தூக்கிக் கொடுத்தால் நாங்கள் அடிக்க வசதியாக இருக்கும்.)

Saturday, August 14, 2010

The real owners

திராவிட நாகரீகம் ஆரிய நாகரீகத்திற்கு முந்தயது என்று வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களே! அப்படியானால் கீழ்படியத் தயார்தானா?கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கும்.ஆனால் எல்லாவற்றிர்க்கும் தலையாய கேள்வி இயற்கையாகவே எழும் கேள்வி ஒன்று உண்டு.
இந்தநாட்டின் சொந்தக்காரன் யார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
உலகத்தில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் பல உண்டு.அவற்றில் ஒன்று மனிதன் தோன்றி பல ஆண்டுகளுக்குப் பின்னர்,பலப்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதுதான் மதம் என்பதாகும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்கிறது.வேறு பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வந்து அவர்களும் வாழத் தலைப்படுகிறார்கள். ஆக்கிரமித்தவர்கள் சில காலம் ஆளுகிறார்கள்.இந்த சில காலம் என்பது வலாற்றில் பல நூற்றாண்டுகளாகும்.இந்த நூற்றாண்டுகளில் அவர்களின் பழக்க வழக்கங்கள் ,மொழி,கலாச்சாரம்,ஆகியவை எற்கனவே இருந்த மொழி, கலாச்சாரத்தொடு பின்னிப் பிணைந்து சங்கமமாகின்றன.
எந்த ஒரு நாட்டின்நாகரீகமும் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளவும்-- செழுமைப்படுத்திக் கொள்ளவும்--வீரியப்படுத்திக் கொள்ளவும் இதே முறையைத்தான் பின்பற்றும். இது உலகின் சகல நாட்டுச் சரித்திரத்தின் பொதுவான பாதை.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் "இந்து"என்பவன் இருந்ததில்லை. புத்தன் பிறப்பதற்கு முன்னால் சீனாவிலும். ஜப்பானிலும் புத்த மதம் இல்லை.கிறுஸ்து பிறப்பதற்கு முன்னால் ஐரோப்பாவில் கிறிஸ்தவன் இருந்ததில்லை.முகம்மது நபி பிறப்பதற்கு முன் இஸ்லாமியன் இருக்கவில்லை.இவை எல்லாம் இல்லாத சமயத்திலும்"மனிதன்" இருந்தான்.மக்கள் வாழ்ந்தார்கள். காடு திருத்தி, வீடுகட்டி,அணை கட்டி, வாய்க்கால் வெட்டி,இரும்பையும் வேண்கலத்தையும்,உருக்கையும் உபயோகப்படுத்தி தங்கள் வாழ்க்கைத்தேவையை இட்டு நிரப்பிக் கொண்டார்கள்.அப்போது ஏது "இந்து"?"ரிக்வேதம்" ஏது?
நபிகள் பிறப்பதற்கு முன் அரேபியர்கள் கற்களையும் மரங்களையும் வணங்கினார்கள் பெர்சியர்களும்,எகிப்தியர்களும் நெருப்பையும் சூரியனையும் வணங்கினார்கள்.
அவர்கள் வாழ்ந்த பகுதிகளின் உள்ளேயும், வேளியேயும் புதிய சக்திகள் தோன்றி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றின.புதிய வழிபாடுகள், கலாச்சாரங்கள்,மதங்கள் தோன்றின. ஆனாலும் அதே மக்கள் தான் வாழ்ந்தார்கள்.வம்சம் வம்சமாக அவர்கள் உழுதார்கள்,நெய்தார்கள்,நிர் மாணித் தார்கள்.இந்த மண்ணோடு தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள்.ஆள்பவர்கள் கூறியதால் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டார்கள்.ஆனால் வாழும் மண்ணை மாற்றிக் கொள்ளவில்லை.மதங்கள் வந்தன.போயின.நிரந்தரமான வாழ்வைச் சமைப்பவன் மனிதன் தான் என்ற பேருண்மையை மட்டும் மாற்ற முடியவில்லை.
இந்துமத அடிபடைவாதி ஒருவன் இந்த நாடு "இந்து"வுக்குத்தானென்று கூறும்போது இல்லை என்று கூறும் துணிவு வேண்டாமா?
இந்த மண்ணிலே பிறந்து,வாழ்ந்து,உழன்று மறைந்தவர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு சொந்தமானது.என்று கூற துணியவெண்டும். ஏனேன்றால்
மதம் பிந்தயது: மக்கள் முந்தியவர்கள்!
மதம் தாற்காலிகமான சம்பவமே!

Friday, August 13, 2010

Independence Day

சுதந்திர தின விழா நடத்துகிறார்கள்.இந்திய சுதந்திரம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட்டு அறுபத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த மாளிகையைக் கட்ட நடந்த வேள்வியில் சீக்கியனின்சதை யும்,இந்துவின் ரத்தமும்,முஸ்லீமின் உயிருமல்லவா ஆகுதியாகச் சொரியப்பட்டது.தங்கள் சமயத்தை சாதியை மறந்து சுதந்திர வேள்வியில் குதித்த அந்த பாரதபுத்திரர்களின் கனவு என்னவாயிற்று?
இன்று மத அடிப்படை வாதிகள் பற்றவைக்கும் பெரு நெருப்பில் அந்த மாளிகை உருகிவிடுமோ என்று அஞ்சும் நிலையல்லவா ஏற்பட்டுள்ளது?மதம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளையும், மூட பழக்கங்களையும் கட்டி வளர்க்கிறார்களே, இதனைத்தடுக்க வழியே இல்லையா? பதினெட்டு வயதுப் பெண்ணை அவளுடைய இறந்த கணவனின் உடலோடு சேர்த்து எரித்துவிட்டு "சதி மாதா கி ஜெய்" என்கிறார்களே?
வறட்சியைப் போக்க விஞ்ஞானம் வேண்டாம்! வருண பகவானுக்கு யாகம் செய்து கொள்ளலாம்!வரதட்சிணைக் கொடுமையை ஒழிக்க விஞ்ஞானம் வேண்டும்.எப்படி தெரியுமா? கருவில் வளரும் சிசு "ஆணா பெண்ணா" என்று விஞ்ஞானத்தின் உதவி கொண்டு கண்டிபிடித்து, "பெண்" என்றால் கருவிலேயேகொலை செய்துவிடலாம்,பெண் பிறந்தால் தானே வரதட்சிணை?
முப்பத்தியெட்டு ஆண்டுகள் வாழ்ந்து,சுகத்திலும் துக்கத்திலும் பங்கெடுதுக்கொண்ட சகபானுவிற்கு மூன்று மாத ஜீவனாம்சம் கொடுத்து "தலாக்,தலாக்,தலாக்" செய்துகொள்ளமுடியும். தான் பெற்ற குழந்தைக்கு இரண்டுமாத பராமரிப்புச் செலவினைக் கொடுத்துவிட்டால் போதும். இதனை முஸ்லீம் அடிபடைவாதிகள், முஸ்லீம் பெண்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் தங்களுடைய அடிப்படை மத உரிமையாக்கிக் கொண்டுவிட்டார்கள்.
இந்து அடிப்படைவாதிகளோ"இந்தியா இந்துக்களுக்கே" என்கிறார்கள்.மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழவேண்டுமென்றால்,இந்துக்களுக்குக் கீழ்படிந்து வாழ வேண்டுமாம்.
சிந்து நதி தீரத்திலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசம் வரை உள்ள உன்னதமான நாகரீகத்தின் திரை மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் விலகியது வரலாற்று ஆசிரியர்கள் இதனை "ஹரப்பா" நாகரீகம் என்கிறார்கள்.சிலர் "சிந்துவெளி" நாகரீகம் என்கிறார்கள்.
இந்த அற்புதமான வாழ்வு முறையை உருவாக்கியவர்கள் இந்துக்களா? இல்லையே! அவர்கள் சர்ந்த்திருந்த மதம் எது என்று எவரால் கூறமுடியும்?அதன் பிறகு ஈரானிலிருந்தும், தென் ரஷ்யாவிலிருந்தும் ஒரு குழு வந்தது.அவர்களை "ஆரியர்"என்றனர் வலாற்றாளர்கள்.இநத வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால் இந்துக்கள் இந்தநாட்டில் மூவாயிரத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர்கள்தானே!ஆரம்பகால கிருஸ்தவர்கள் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள், முஸ்லீம்கள் ஆயிரம் ஆண்டுகள் முன்பு உருவானவர்கள் தானே?சமண்மும் பௌத்தமும் தானே இங்கே பிறந் தது.
இவற்றிர்க்கெல்லாம் முன்பே இங்கே மனிதன் பிறந்திருக்கிறான்.வாழ்ந்திருக்கிறான். நகக் கண்ணில் ரத்தம் பீரிட மண்ணைக்கிளறி நெல்லை விளைவித்தவர்கள்--விரல் நோக கதிர் அறுத்தவர்கள்--ஆடை நெய்தவர்கள்--வீடு கட்டியவர்கள்--பழய வாழ்வினைமாற்றி புதிய நாகரீகத்தைத் தோற்றுவித்தவர்கள்--தம் அனுபவத்தால்--அதனால் கிடைத்த பட்டறிவால்--கலை இலக்கியத்தைத் தோற்றுவித்தவர்கள்--அவர்களுக்கு இந்த நாடு உரிமையுடையது இல்லையா?
உண்டு,உண்டு என்று உரக்கக் கூறுவோம்.

Thursday, August 12, 2010

what is time?

காலம் என்றால் என்ன?
மறைந்த இந்திராகாந்தி அம்மையாரின் நினைவு அறக்கட்டளை ஆண்டு தோறூம் கருத்தரங்கு நடத்துகிறது.சில ஆண்டுகளுக்கு முன்னால் Time (காலம்) என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.அதன் விவரம் முழுமையாக வெளிவரவில்லை.
காலம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடை தேரிந்த மாதிரியும் இருக்கிறது.சொல்லிப்பார்த்தால் சரியில்லை என்றும் தோன்றுகிறது.இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.ஒரு பிரமுகர் மரைந்துவிட்டார் என்றால் நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.கூட்டத்தலைவர் ஒரு நிமிடம் அஞ்சலி என்று அறிவிக்கிறார்.நாம் கண்மூடி நிற்கிறோம்.வெகுகாலம் ஆகியதுபோல் தோன்றுகிறது .ஓரக்கண்ணால் கைக்கடியாரத்தைப் பார்க்கிறோம். முப்பது விநாடிதான் ஆகியுள்ளது.நாம் காலத்தையும் நேரத்தையும் குழப்பிக் கொண்டுவிட்டோமா?
What is time? என்ற கேள்விக்கு மாமேதை லேனின் It is an interval between two phenomena(இரண்டு சம்பவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி) என்கிறார்.சின்னமுள் பனிரெண்டிலும் பெரியமுள் ஒன்றிலும் இருக்கிறது. அது மாறுகிறது.இப்போது பெரியமுள் இரண்டிற்கு வந்துவிட்டால் இந்த இரண்டு சம்பவங்க்களுக்கு இடையே ஐந்து மணித்துளிகள் கடந்து விட்டது என்று நாம் உணருகிறோம்.நான் இதனை எழுதிக் கொண்டிருக் கிறேன்.இது ஒரு சம்பவம். நான் பிறந்தது ஒரு சம்பவம். இரண்டிற்குமான இடை வெளி எழுபத்தியைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது காலம் என் பிறப்பிலிருந்து தான் ஆரம்பமாகிறதா? ஆரம்பம் எது? எனக்கு முன் என் தநதை-பாட்டனார்-அதற்கு முன்-அதற்கும் முன் என்று ஆரம்பதைத் தேடி பின்னோக்கிப் போய்க்கொண்டே இருந்தால் தொடுவானம் போல் போய்க்கோண்டே இருப்போம்.அப்படியானால் ஆரம்பம் என்று கிடையாதா?
ஆங்கில மொழியில் year என்று கூறுவார்கள்.பின் month,week,day,hour, minitue என்பார்கள். காலத்தின் கடைசி அலகை ஆங்கிலத்தில் second என் பார்கள்.It is not the first, because no body knows which, or what is first.அதனால்தான் மிகக்குறைந்த கால அளவைக்கு "செகண்டு" என்று இரண்டாவதுஎன்று குறிப்பிட்டார்கள்.
ஆதியும் அந்தமும்தெரியாதது காலம்.நமது தத்துவ ஞானிகள் இறைவன் என்ற கருத்தை ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி என்று குறிப்பிடுவதும் இதனால்தானோ!

Sunday, August 08, 2010

tha.mu.e.sa...

"தட்டி" வைத்திருந்தார்கள்
அது நடந்து இருபதுவருடமிருக்கலாம்.மதுரையிலிருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்புகள் நடத்துவார்கள். கிளையிலிருந்து வரும் தோழர்களும் எங்களைப் பார்த்து அளவலாவலாம் என்ற மகிழ்ச்சியில் வருவார்கள்.காலையில் சீக்கிரமாக வந்து பேசிக்கொண்டிருப்போம்.
ஒரு முறை ஒரு தோழர் மிகுந்த மன உளைச்சலோடு வந்திருந்தார்.புதிதாக பதவி உயர்வு பெற்றவர் அவர்.அதிகாரிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது.நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் கூறினார்.அவர்கள் ஊரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது "நான்கு மணியானால் அவரவர்கள் வீட்டிற்குள் அடைந்துவிடுகிறார்கள் ஐந்து மணிக்கு இங்கிருந்து நான் கிளம்பி ஏழு மணைக்கு ஊர் போய் என் கிராமம் போவது ஆபத்தானது.பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் கூட்டிச்செல் ல வேண்டும் "என்று வருத்தத்தோடு சொன்னார். மதியத்திற்குமேல் இரண்டு மணிக்கு கிளம்ப முடியுமா? என்றும் கேட்டார்.
அதிகாரியிடம் கேட்டபோது சம்மதிக்கவில்லை."யோவ்! நாளைக்கு ரசாபாசமாச்சு நீர்தான் பொறுப்பு" என்றதும் தயக்கத்தோடு சரி என்றார்.மதிய உணவு முடிந்ததும் தோழர் என்னிடம் விடை பெற வந்தார்.
வடநாட்டில் "ஜாட்"என்று ஒரு வகுப்பு உண்டு.ஆக்ரோஷமானவர்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் உண்டு.கரிசக்காட்டு புதரில் நம்ம ஊர் "ஜாட்" ஒருவர் கள்ளச் சாராயம் விற்று வந்தார்.நல்ல வியாபாரம். இதைப்பார்த்த பங்காளி ஒருவர் எதிக்கடை போட்டார்.வாய்ச்சண்டை, அடிதடி ஆயிற்று.மூத்தவர் இளையவரை "தூக்க" ஆளனுப்பினார்.இளையவர் புதருக்கு.முனியாண்டி வந்திருந்தான்.இளையவர் "முனியா! கொஞ்சம் கடையை பத்துக்க,இந்தா ஒதுங்கிட்டு வாரேன்"என்றார்
"தூக்க" வந்தவன் என்னத்த கண்டான்.கந்தக பூமில கொவில் பட்டர் கூட கருப்பு தான்
முனியன் சாஞ்சுட்டான்.சாராயக் கலவரம் சாதிக்கலவரமாய் விட்டது. விடைபெற வந்த தோழர் கிட்ட நான் " ஏன்யா! ஒரு கட்சி கூட வாயைத்திறக்கலையா?" என்று கெட்டேன்.உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றார். கதவு வரை சென்றவர் திரும்பிவந்தார்."தோழர்! பஸ் ஸ்டாண்டில் ஒரு "தட்டி" வைத்திருந்தது" என்றார்."உயிரப் பறிக்கத்தெரிந்த மனிதர்களே உயிரை உங்களால் கொடுக்க முடியுமா. வாருங்கள் சாத்தூரை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம்" என்று எழுதியிருந்தது.என்றார் தட்டியின் கீழே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், சாத்தூர் கிளை என்றும் இருந்த்ததாக
சொன்னார்.நெஞ்சம் விம்ம நானும் அந்த சங்க உறுப்பினர்தான் என்றேன்.

Saturday, August 07, 2010

theatre...9

"மா பூமி"


(எமது நிலம்)

தேலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை "மா பூமி" என்ற திரைக்காவியமாக 1979ம் ஆண்டு வங்க இயக்குனர் கௌதம் கோஷ் இயக்கி வெளியிட்டார்.

கிருஷ்ண சந்தர் எழுதிய "வயல்கள் எப்போது விழித்துக்கொண்டன" என்ற சிறுகதையின் திரை வடிவம் தான் அது.கிருஷ்ண சந்தர்,கோஷ்.நரசிம்மராவ் ஆகியமூவரும் திரைக்கு ஏற்ற படி கதையை சீர்செய்தார்கள். சாய் சந்த், ராமிரெட்டி,பிரபல புரட்சிப் பாடகர் "கத்தார்" ஆகியோர் நடித்தனர்.(நெல்லூரில் புனே திரைப்படக்கல்லூரி நடத்திய பயிற்சி வகுப்பில் சாய் சந்த் என்னோடு பயிற்சி பெற்றார்.)

ராமய்யா என்ற சிறுவன் விவசாயிகள் படும் வேதனையைச் சகிக்காமல் எதிர்க்கிறான்.வாலிபனான போது லம்பாடிப்பெண்ணை காதலிக்கிறான்.நிஜாமின் அதிகாரிகளுக்குத்தான் பெண்கள் முதல் சொந்தம்.இது பிடிக்காமல் ஹைதிராபாத் வருகிறான்.செங்கல சூளை ஒன்றில் தொழிலாளியாக பணி செய்கிறான்.சக தொழிலாளிகளோடு பழகி அவர்களோடு ஒரு நாள் தொழிற்சங்க

அலுவலகம் வருகிறான்.அங்குள்ள படங்கள், புத்தகங்கள் பற்றி எழுதப்படிக்க தெரியாத அவன் விசாரிக்கிறான்.எழுதப் படிக்க கற்று கொள்கிறான்.போதம் பெற்று கம்யூனிஸ்டாகிறான்.கட்சி நடத்தும்

விவசாயிகளின் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுக்க கிராமம் செல்கிறான்.

கட்சி போராட்டதை நடத்துகிறது.இந்தியா சுதந்திரமடைந்ததை போராளிகள் கொண்டாடுகிறார்கள்.நேரு அரசு தங்களுக்கு ஆதரவு தரப்போகிறது என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதிக்கிறார்கள்.விரட்டியடிக்கப்பட்ட ஜமீன்களும்,ஜாகீர்களும் கதர்குல்லாவோடு கர்னல் சௌத்திரியின் பீரங்கிகள் பதுகாக்க கிராமத்திற்குள் நுழைவது கண்டு ஆவேசமடைகிறர்கள். போராட்டம் தொடர்கிறது.

கௌதம் கோஷ் புகழ் பெற்ற இயக்குனர்.இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி படம் எடுக்க விரும்பினார்.தேசிய நூலகம் சென்று ஆராய்ந்தார்.தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் முக்கியமானதாகப்பட்டது.அது பற்றி தகவல் செகரிகச் சென்றபோது போராட்டம் நடந்த பகுதி மக்களுக்கே முழுமையான விபரம் தெரியவில்லை. போலீஸ் நடவடிக்கை,ராணுவ நடவடிக்கை

என்று குழம்பிபோயிருந்தனர், அதனால் இந்தியில் எடுக்காமல் அந்த அப்பாவி மக்களுக்கு நடந்ததை சொல்ல தெலுங்கு மொழியிலேயே எடுத்தேன்.என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

கடுமையாக காங்கிரஸ் கட்சியையும் ஆளும் வர்க்கத்தையும் விமரிசிக்கும் இந்தப் படத்தை சென்சாரில் அனுமதிப்பார்கள் என்று நினைத்தீர்களா? என்று கேட்டபோது,"சென்சார்

உறுபினர்களின் ஞானம் பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருந்தது.அது சரியென்று நிரூபணமாகியது.அது மட்டுமல்ல. ஆரம்பத்திலேயே நான் ஏன் குனிய வேண்டும்"என்றார் கௌதம் கோஷ்

Monday, August 02, 2010

theatre.....8

கிஷன் சந்தர் மிகச்சிறந்த எழுத்தாளர்.இந்தியிலும்.ஆங்கிலத்திலும்,புலமை பெற்றிருந்தாலும் அவர் உருது மொழியில் தான் ஆரம்பத்தில் எழுதினார்.1914ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார்.அவருடைய தந்தை மருத்துவராக காஷ்மீரின், பூஞ் பகுதியில் பணியாற்றியதால்,அவருடைய இளமைப் பருவம் அங்கேயே கழிந்தது.


பிரிவினையைத் தடுக்கமுடியவில்லையே என்று வேதனைப் பட்டார்."தோல்வி" என்ற நாவலை எழுதினார்.ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.1946ம் ஆண்டு அவர் எழுதிய சிறுகதை "தர்த்தி-கி-லால்" என்ற திரைப்படமாக வேளிவந்தது.தேவ் ஆனந்தின் சகோதரர், சேதன் ஆனந்த் இயக்கிய இந்தப் படம் சக்கை போடு போட்டது.ஆனந்த் சகோதரர்களும் பிரிவினைக்குப் பிறகு இந்தியா வந்தவர்கள்தான்.கிஷன் சந்தர் மும்பையில் வசிக்க ஆரம்பித்தார்..

அவருடைய சிறுகதைகள் 16 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.1977ம் ஆண்டு "அந்தப் புறவுக்காக" என்ற நாவலை எழுத ஆரம்பித்தார்.முதல் வரி"நூரானிக்கு புறா,குரங்கு, வண்ணப் பறவைகளைப் பிடிக்கும்......." என்று எழுதிக் கொண்டிருந்தவர் கையில் பேனாவைப் பிடித்தபடியே மாரடைப்பு எற்பட்டு மரணமடந்தார்.தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியை அமரகாவியமாகப் படைத்த "மா பூமி" என்ற தேலுங்கு திரைப் படத்திற்கு கதை எழுதியவரும் அவரே."தானம்"சிறு கதை தமிழில் நாடகமாக அரங்கேறியது.

பொள்ளாச்சி கவிஞர் வேலுச்சாமி எனக்கு அறிமுகம் உண்டு.த,மு,எ.ச வின் முதல் மாநாடு மதுரையில் நடந்தபோதுதான் நேருக்கமாக பழகினோம்."செம்மலரில்" கவிதைகள்,கதைகள் எழுதுவார்.60ம் ஆண்டுகளின் முற்பகுதியில் "செம்மலர் குழு" என்ற நாடகக்குழுவை நடத்தி வந்தார். கோவைப் பகுதியில் நாடகங்களை இந்தக் குழு நடத்தி வந்தது."தானம்" சிறு கதையைப் படிதுவிட்டு

நாடகமாக்கினார்.பலமுறை அரங்கேறினாலும் அன்றய நிலையில் போதிய வாய்ப்பு இல்லாததால்

குழு சிதைந்தது     

Sunday, August 01, 2010

theatre....7

விவசாயிகளின் ஆயுத எழுச்சியை ராணுவத்தைக்கொண்டு அடக்கிவிட்டார்கள்.நிஜாமிடமிருந்து விடுதலை பெற்று மூன்று ஆண்டுகள் நிர்வாகம் செய்தது வெளியே தெரியாமல் இருக்குமா? தெற்கு மரத்வாடா பகுதி,ஒரிசா,பீஹார் விவசாயிகளும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.மத்திய அரசு இதனைத்தடுக்க திட்டம் போட்டது.ஒன்று தோழர்களை அடக்கி ஒடுக்குவது.விவசாயிகளை ஏமாற்றுவது.இதற்காக அவர்கள் போட்டதுதான் "பூமி தான இயக்கம்"


விவசாயிகளின் நிலத்தைப் பறித்த பாவிகள் அதே மிட்டா,மிராசுகளிடமிருந்து நிலத்தை தானமாகப் பெற்று,விவசாயிகளுக்கு அளிப்பதுதான் "பூமி தான இயக்கம்".அரசின் பண,பலத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர் அந்த "பௌனார்" ஆசிரமத்துச் சாமியார் ஆசார்ய வினோபா பாவே ஆவார். 1975ம் ஆண்டு 'முழுப் புரட்சி'(Total Ravolution) என்று அறிவித்த' லோக் நாயக்' ஜெய ப்ரகாஷ் நாராயணன் இந்த இயக்கத்தின் புரவலர்.

தெலிங்கானாவின் 'போச்சம்பள்ளி' கிராமத்தில் ஆரம்பித்து இந்தியா முழுவதும் நிலதானம் கேட்டுவந்தார் பாவே. தமிழ்நாட்டுக்கும் வந்தார்.அப்போது சேலம் மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்துக்கும் வந்தார்.மேட்டூர் மின் இலாகாவில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள் அவரைப் பார்க்க ஓடினார்கள்.அப்படி ஓடிய பாவிகளில் நானும் ஒருவன்'.கீதைப் பேருரை' புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் பெற்றுக் கொண்டேன்.

இந்தியா முழுவதும் நடந்தே சுற்றி வந்தார். இந்த மொசடி பற்றி எழுத்தாளர்களும் கலை୍ஞர்களூம் தங்கள் படைப்பில் சித்தரித்தார்கள்.

வரண்ட நிலப்பகுதியில் வசிக்கும் நிலமற்ற விவசாயி தன் பகுதிக்கு பாவே வருவதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறான். அந்தக் கூட்டத்திற்கு சென்ற அவனுக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்கிறது.கல்லும் முள்ளும்.பாறையுமான நிலம்.ஆனாலும் நிலம் நிலந்தானே.உழைக்கலாமே. உழைக்கிறான்.அவன்,அவன்மனைவி, குழந்தை குட்டிகள் என்று உழைக்கிறார்கள்.விளைநிலமாக மாற்ற மேலும் பணம் வேண்டும்.கந்துவட்டிக்கு கடன் வாங்க்குகிறான்.பாறையை உடைக்க மேலும் கடன். உழைத்து உழைத்து ஓடாகிறது அவன் குடும்பம்.ஓட்டாண்டியாய் கோவணத்தோடு அலைகிறான்.

பாவே மீண்டும் அதே கிராமத்திர்க்கு வருகிறார்.இவனும் போகிறான்.பாவே ஊர்ப் பெரியவர்களைப் பார்த்து மேலும் நிலமிருந்தால் கொடுங்களேன் என்று கேட்கிறார்.சபை அமதியாகிறது.அவன் எழுகிறான்."நிலமா வேண்டும்,இந்தா.." என்று கூறி கோவணத்தை அவிழ்த்து பாவேயின் முகத்தை நோக்கி வீசுகிறான்.

"தானம்" என்ற இந்த கதையை கிஷன் சந்தர் இந்தி யில் எழுதினார். தானம் தமிழில் நாடக மாக நடிக்கப்பட்டது