Saturday, February 12, 2011

பிறப்பதில்லை.....


__சிறு கதை__


பிறப்பதில்லை (காஸ்யபn)



"அம்மா....நான் சுந்த்ர்....கிந்தர் யாரையும் பார்க்க விரும்பல"

"அந்த டிவி சனியனை அணைடீ"என்று அடுக்களையிலிருந்து லட்சுமி கத்தினாள்.

"டிவி,இல்லமா! நாந்தான் சொன்னேன்" என்ரு கூறிகோண்டே காபி டம்ளரோடு உள்ளே நூழைந்தாள் லட்சுமியின் மகள் சுந்தரி

சுந்தரி பங்களுரில் உள்ள விஞான கழகத்தில் பட்டம் பெற்றவள்...."உலோகங்களின் மூலகங்கள்" பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவள்.ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் விசிட்டிங் புரபசராக இருக்கிறாள்.பன்னாட்டுக் கம்பெனி ஒன்றில் கன்ஸல்டிங் பண்ணுகிறாள்.முப்பத்தி ஆறு வயது.திருமணமாகவில்லை.

உள்ளே வந்த சுந்தரியை அம்மா பார்த்துக்கொண்டு நின்றாள்.

பட்டுப் போன்ற முகத்தில் மெலிதான முதிர்வு தெரிகிறது.கட்டாக இருந்தாலும் மார்பு இறங்க ஆர்ம்பித்துவிட்டது.பெருமூச்சு விட்டாள்.

"வெள்ளிக்கிழமை நீ சும்மதன இருப்ப?"

"இல்லமா! நாக்பூர் பொறேன்" என்றாள் சுந்தரி.

"எப்ப வருவ?"

"பிளைட்கிடச்சாவேள்ளிக்கிழமை மதியம்! எதுக்காக கேக்கற?

லட்சுமியின் முகம் சுருங்கியது."எந்தலையெழுத்து!என்னசெய்ய? என்று ஆயாசத்தோடு பெருமூச்சு விட்டாள்.

"அம்மா!"என்று கூரிய சுந்தரி அம்மாவின் அருகில் வந்தாள்."ஏன் டென்ஷனாற!எனக்குஎன்ன வேணும்கிறத நான் முடிவு செய்யமுடியாதா? ப்ளீஸ் லீவ்...இட்" என்று சமாதன்ப்படுத்த முயன்றாள்.

"கிழிச்சே! உன்னை வளத்தேம்பாரு! என்னை செருப்பால அடிக்கணம்! ம்..ம்..நல்ல படிப்பு...நல்ல சம்பாத்தியம்...நல்லவாழ்க்கை கிடக்கலியே.."

"எதும்மா நல்ல வாழ்க்கை!முகந்தெரியாத மூதேவி கூட முதநாளே படுக்கணும்.ராவும் பகலுமா படிச்சு குறிப்பெடுத்து செய்த ஆராய்ச்சியைஅவன் கால்ல சமர்ப்பிக்கணம்...போதும்மா! உங்களோட போதும்!"

"நீ போண்ணாப் பொறந்தவடீ" என்று அழுத்திக்கூறினாள் லட்சுமி.

" இருக்கட்டுமா! எங்க கம்பெனி வைஸ் என்ன சொல்றான் தெரியுமா? ஃபார் ஈஸ்டுக்கு என்னை இன்சார்ஜ் ஆக்கப்போறானாம்...கம்பெனிக்காக கோடிகணக்கான டாலர் சம்மந்தமாகக் கூட முடிவெடுக்க அதிகாரம் த்றான்...அவங்கிட்ட இருக்கிற நம்பிக்கை உனக்கு எங்கிட்ட இல்லயே..? என்வாழ்க்கயை நான் முடிவு பண்ண எனக்கு தகுதி இருக்குமா...கவலைபாடாத..."

"நீ பொட்டச்சிடீ..! சுந்தரம் இல்ல" என்று கூறினாள் லட்சுமி.

சுந்தரி பெசவில்லை கையிலிருந்த காபி டம்ளரை சிங்க்ல் பொட்டாள்.

"ஏன்?கழுவி வைக்க கைவராதோ?"

"ஏன் சுந்தரம்னா கழுவ வேண்டாமோ?"

"நீ பொம்பளடீ"

"நான் அப்படி நினைக்கல"

"முப்பத்தாறு வயசு போண்ணு பெசற பேச்சா இது?"

"அம்மா! பொம்பளைங்கறது ஒரு கன்செப்ட்...அவ்வளவுதான்.."

வேண்டாம்டீ...இந்தப்பேச்சு...நாசமாயுடும்டீ!...சொன்னா கேளு.."

பெச்சு முடிந்தது.லட்சுமி குளிக்கப்பொனாள்சயன்ஸ் வோர்ல்டு பத்திரிகையை எடுத்து சுந்தாரி புரட்ட ஆரம்பித்தாள்.மதையம் பனிரெண்டுமணிக்கு சுந்தரி குளித்து சாப்பிட தயாரானாள்.

'சாப்பிடறாயாடி" அம்மா கேட்டாள்.

"சாப்பிடறேன்..அப்புறம் லேசா தூக்கம். மூணுமணிக்கு எழுபிடறயா!"

."எப்ப ஆபீஸ் போவ?"

"நாலு மணிக்கு பாஸ் வர்ரான்.டிஸ்கஷன் இருக்கு...நைட் டின்னர் டிஸ்கஷன்...ஒரு மணியாகும்மா..."

"இது நல்லதுக்கில்ல...நூறுதரம் சொல்லியாச்சு"

"சுந்தரத்துக்கிட்ட ஒருதரம் கூட சொல்லலியே"

லட்சுமியின் முகம் புடைத்தது.கோபமும் அழுகையும் தெறித்தது

சுந்தரி மெஜையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.அம்மாவையும் அருகில் உட்கார்ந்து சாப்பிடச்சொன்னாள்.லட்சுமி எதிரில் உட்கர்ந்து சாப்பிட்டுக்கொண்டே அவளை ஆதூரத்தோடு பார்த்தாள்.

"அம்மா" என்று சுந்தரி ஆரம்பித்தாள்.

"என்ன கொழந்தை?""

"எனக்கு முப்பத்தாறு வயசாறது.நான் குழந்தையில்ல"

"எனக்கு நீ எப்பவுமே குழந்தைதாண்டீ..." அம்மா கூறும் போது குரல் தழதழத்தது.சுந்தரி இடதுகையால் அம்மாவின் இடதுகையை அழுத்தினாள்.பரஸ்பரம் பற்றிகோண்டார்கள்.

"அம்மா! நான் பிறந்து சில நிமிஷம் கழிச்சு சுந்தரம்பிறந்தான்...அதனால அவன் அண்ணன் ஆனான்."

லட்சுமி பெசாமல்கெட்டுக்கொண்டிருந்தாள்.

அவனுக்குபாண்ட் சட்டை போடுவ...எனக்கும் போடுவ...எனக்கு கவுன் போடுவ...அவனுக்கும் கவுன் போடுவ எங்க ரெண்டு பேர்ட்டயும் வித்தியாசமே பாக்கல நீ..."சுந்தரி நிறுத்தினாள் ஓருவாய் சாதத்தைவாயில் போட்டுக் கொண்டு விழுங்கினாள்.டம்ளரிலிருந்து ஒரு மடக்குத்தண்ணிரை குடித்தாள்.

"ஞாபகம் இருக்காம்மா!....ஒருநாள் சுந்தரம் உங்கிட்ட ஓடியே வந்த்தான்...மூணுவயது இருக்கும்..அம்மா..அம்மா..னு.. சந்தொஷமா ஒடிவந்தான்....அம்மா...அம்மா சுந்தரியோட குஞ்சாவை காணும்னு ஆச்சரியத்தொட சொன்னான்....பளீர்னு அவன் கன்னத்துல அடிச்ச...ஆசையா அம்மாகிட்ட தான் பார்த்ததை சொல்ல வந்த குழந்தயை அடிச்ச...அவன் அழுதான்...நீ ஏன் அடிச்ச...எனக்கு புரியல..அழுகைவந்தது ...நானும் அழுதேன்...உன் போக்குல ஏதோ வித்தியாசம் ...எனக்கு புரிஞ்சும்...புரியாமலும்.."

லட்ஸ்மி வெட்டினள்.போதும்..போதும்..சாப்பிட்ட கையை அலம்பிக்கோ..நாளைக்கு உங்க அக்க வரா... அவகூட பேசிக்கோ.."

" அவ எதுக்குவரா?

"எதுக்கோ உங்கூட பெசணுமாம்"

சந்தரிக்கு புரிந்தது. பயித்தியக்காரிகள் என்று நினைத்தாள்.அனு அக்கா கல்லுரியில் பெராசிரியராக இருக்கிறாள்.கணவர் போர்ட்டி.ரஸ்டில் ஹெட்கிளார்க்..அக்கா கார் வைத் திருக்கிறாள். அவளே ஒட்டுவாள். ஆங்கிலத்தில் சிறப்பு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவள்."அறிவியல் சொற்களும் ஆங்கிலமும்" என்ற அவளுடைய புத்தகம் மிகவும் அதிகமாக விமரிசிக்கப்பட்ட புத்தகம்.ஞாயிறு அன்று அனு வந்தாள்.அம்மாவுக்கு மிக மெலிதான காஷ்மீரத்துச்சால்வை வாங்கி வந்திருந்தாள்.சுந்தரிக்கு கருநீலத்தில் ஜீன்சும் ஆகாயகலரில் டாப்பும் வாங்கி வந்திருந்தாள்.டில்லி போயிருந்தாளாம்.

"என்ன சுந்தரி! தாய்லந்து போகப்போறியாமே?"

ஆமா அக்க! இரண்டுவாரம் .பத்து நாளாவது தங்கவேண்டியதிருக்கும்,"

"தைரியம் தாண்டி!"

"ஏங்க்கா?"

"படிபுங்கரதுவேற...தைரியம் கறது வேற.."

"உண்மைதாங்க்கா"

"கொழுப்பு தான் உனக்கு"

"ஏங்க்கா?"

"நான் படிச்சாலும் கோழைதான்னு சொல்ற"பதில்சொல்லசுந்தரி அங்கில்லை.கண்ணாடிமுன்நின்று கொண்டு அனு கொண்டுவந்த ட்ரஸ்ஸை மேலே போர்திக்கொண்டு சரிபார்த்தாள்

"ஏய்! சுந்தரி! நான் பாட்டுக்கு பேசிக்கிறேன்....நீ எழுந்திருந்து போற"

"சாரி அக்கா!நீ கேட்ட கேள்விக்கு பதில் சோன்னா உனக்கு கோபம் வரும்"

"வராது கண்ணம்மா...நீஎன் செல்லத் தங்கை"

"இல்லக்கா..சில விஷயத்துலகோபம்வரும்தான்"

"சரி

விடு!மாசாமாசம் ஸ்விஸ்,ஆஸ்திரேலியா,பாரீஸ்னு சுத்திக்கிட்டு இருக்கே...என்னிக்கு குடியும் குடித்தனமுமா இருக்கப்போறே"

"அத்திம்பேர்மாதிரி குடியும் உன்னமாதிரி குடித்தனப்பாங்கா இருக்கணுமா?"

அனு விதிவிதிர்த்து நீன்றாள்."சுந்தரி! என்ன அதிகப்பிரசங்கித்தனம்" என்று கோபமாக அனு கேட்டாள்.

"விட்டுடு அக்கா! அதுக்குத்தான் பதில் பேசாமவ்ந்தேன்"

"சுந்தரி! நீ பேசரதும்சரியில்ல...செய்யரதும் சரியில்ல" என்றாள் அனு.

"சரியில்லாம எதைச்செய்யறேன்"என்று சுந்தரி கேட்டபோது"எதைச்சரியாச்செய்யறே" என்று கெட்டுக்கொண்டே அம்மா லட்சுமி வந்தாள். " என்ன? கூட்டணியா?" என்று சூழலின் இ.றுக்கத்தைகுறைக்க சுந்தரி முயன்றாள்

"அம்மா ரொம்ப வருத்தப்படறா நேத்து ராத்திரி மூணு மணிக்கு வந்தயாம்.உங்க "பாஸ்" கொண்டுவிட்டான்

அவன் திரும்பி கார்ல ஏரும்போது தள்ளாடினானாம்.! அனு குறுக்கிட்டாள்.

"நான் தள்ளாடலை அக்க.."'

"அவன் குடிச்சிறுக்கான்"என்றாள் அம்மா

" குடிச்சா எங்கூட வராதன்னு அவங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே?

சுந்தரி பதில் சொல்லவில்லை.மெதுவாக அனு அருகில் வந்தாள்.

."அத்திம்பெர் கிட்ட சொல்லியிருக்கியா....குடிக்கிறாரே...அவர் உன் புருஷன் தானே...அவன் என் "பாஸ்" ஆபீஸ் கொலீக்...அவன் நாட்டுப்பண்பாடு...நான் தலையிட வேண்டிய அவசியமில்ல...வேணும்னா ஒதுங்கிக்களாம்" என்றாள் சுந்தரி.

'ஒதுங்கிக்கோ'என்று அனு கூறியதும் சுந்தரி ஆவேசப்பட்டாள்...."ஆமா ஓதுங்கணும்...நீ ஒதுங்கறயா?...எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு....நான் எட்டாவது படிச்சிட்டிருந்தேன்...அத்திம்பேரும் நீயும் வந்தீங்க...எனக்கு பாவாடை, தாவணி எல்லாம் வங்கிட்டு வந்தீங்க...முத முதல்ல உடுத்தினதால சகஜமா இல்ல...நான் ரூமிலேருந்து வந்ததும் அத்திம்பெர் என்னை கட்டிப்ப்டிச்சார்...தூக்கிக் கொஞ்சினார்...அவருடைய உடம்பு என் மீது உறுத்துவதாக பட்டது...எனக்கு...உன் முகத்தைப் பார்த்தென்...முகம் சுளித்தாய்...அத்திம்பேர்...நான் ...பெண்..பெண்தான் ...என்று சொல்லாமல் செயல் மூலம் ...காட்டுகிறார்.உனக்கு அது பிடிக்கல...தனியாக இருக்கும் போதாவது அத கண்டிச்சியா? அதுக்கக அவர் கிட்ட இருந்து ஒதுங்கிப்பியா...?"

சுந்தரி மெதுவாக நடந்து திண்டில் அமர்ந்து கொண்டாள்.அம்ம ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். சுந்தரி மீண்டும் பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்

"அம்மா! தோட்டத்துல கிளி இருக்குமா...அதுல ஆண்கிளினு, பெண்கிளினு உனக்கு பார்த்த உடனே சொல்லத்தெரியுமா?முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் போதுதான் அது பெண் கிளி...இப்படிக்கூட கிளிகளுக்குள்ள ஒரு புரிதல் இருக்குமா..தெரியாது...மற்றபடி கூடுகட்ட இரைதேட...ஆண்பெண் என்றா பாக்குது....மனுசன் தன் சக மனுசனை மனிதன்னு உனராதகாலம்...மிருகமாக பாவித்த ... காலம்..இருந்தது....அப்ப ஆண் பெண் பார்த்தானா...தெரியாது...பாத்திருக்க வாய்ப்பு இல்ல....அ..ம்மா! பிறக்கும்போது எல்லாருமே ஒரே உயிரினம் தான்...பெண் பிறப்பதில்லை...அக்கா! உங்களை மாதிரி உள்ளவங்க உருவாக்கிறீங்க....."

சுந்தரி திண்டில் சாய்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறாள்.

8 comments:

'பரிவை' சே.குமார் said...

Kathai romba arumai... nalla kathai padiththa thiruppthi...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கை கொடுங்க காஸ்யபன் சார்.

சரியாய்ச் சொன்னீங்க. பால் பேதங்களை நாமும் நம் சமூகமும்தான் உருவாக்குகிறோம்.

சுந்தரியின் குரலில் பேச எல்லோருக்கும் வாய்ப்பதில்லை-பேச விரும்பினாலும்.

நீங்க எழுதற விஷயத்துல குழப்பமில்லாமல் இருப்பதால் பிழையின் தாக்கம் பொருளைக் குறைப்பதில்லை.

ஆனாலும் கொஞ்சம் குறில் நெடில் பார்த்து டைப் பண்ணலாம்ங்கறது என்னோட ஆசை.

மிகத் துணிச்சலான பொருளை அடக்கிய கதை. இதை நீங்கள் எழுதுவதும் சாலப் பொருத்தம்.

மதுரை சரவணன் said...

super..

பாரதசாரி said...

ரசித்து படித்தேன் வழக்கம் போல. மூன்று முறை படித்து விட்டேன் எதையும் Overlook செய்யக் கூடாது என்று. நன்றி ஐயா!

அப்பாதுரை said...

படித்ததும் அறை வாங்கிய உணர்வு.

பாரதசாரி said...

//சுந்தரி திண்டில் சாய்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறாள்.
//
சுந்தரி திண்டில் சாய்ந்து விம்மி விம்மி "அழுதாள்" என்றில்லாமல் "அழுது கொண்டிருக்கிறாள்" என்று முடித்திருப்பது யோசிக்க செய்கிறது.

kashyapan said...

பாஈதசாரி அவர்களே! சரியகப்புரிந்து கோண்டிருக்கிறீர்கள்.சுந்தரிகள் ஆயிரம் ஆயிரம் பேர் இன்றும் அழுது கொண்டிருக்கிறார்கள். படித்த பெண்கள் கூட Ignorence is bliss என்று இருப்பதைப்பார்த்து தனக்காக இல்லாமல் மற்ற பெண்களை எப்படி கடைததேற்ற என்று அழுகிறாள்.இந்த்க்கதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் "செம்மலரில்" வந்தது.நாம் மாற மறுக்கிறோம்.நன்றி பாரதசாரி---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

அருமை அய்யா. 1996 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். எங்கள் ஊர் த.மு.எ,ச.வின் "தோழி" சிற்றிதழில், அவ்வருட எனது பங்களிப்பைப் பாராட்டி சில செம்மலர் இதழ்களை பரிசளித்தார்கள். அதில் இந்தக் கதையை படித்து வியந்திருக்கிறேன். நீங்கள் எழுதியது என தெரியாது.