Tuesday, November 26, 2013

சோழ.நாகராஜன் -நேர்காணல் ...!!!

இன்று (27.11.13 ) காலை ஐந்து மணிக்கு குறுஞ செய்தி ஒன்று வந்தது ! மிண்டும் 5.30 க்கும் அதேசெய்தி வந்தது ! தோழர் நாகராஜன்  பொதிகை தொலைக்கட்சியில் நேர்காணல் நிகழ்ச்சி பற்றிய நீனவூட்டல் ஆகும் அது ! ஏற்கனவே முகனூல் மூலம் தெரிந்த ஒன்றுதான்!

காலை 7,30க்கு நானும் எழுத்தாளர் முத்துமீனாட்சியும் தொலைக்கட்சி பெட்டிமுன் அமர்ந்தோம் !

தங்கு தடையற்ற ஆற்றோட்டம் போன்ற பேச்சு ! நிதானமான , அழுத்தமான பதில்கள்! எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை முன் நிறுத்தாமல் , கவிஞர் மீரா,உடுமலை நாராயணகவி, கலைவாணர்,மகாலிங்கம் என்று மற்றவர்களைப் பற்றி பேசியது மனத்தைக் கவர்ந்தது ! 

பட்டறிவும், முதிர்ச்சியும் நாகராஜன் அவர்களை மிக உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது அவரை நெருங்கி பார்த்தவர்களுக்குப் புரியும் ! எப்பேற்பட்ட வளர்ச்சி !

80ம் ஆண்டுகளில் வெண்புறா சரவணன், சு.வெங்கடேசன்,நாகராஜன் என்று "பட்டா " இளைஞர்களாக திருப்புரம்குன்றத்து தெருக்களில் சுற்றிய காலத்திலிருந்து அவரை அறிவேன் !

சனாதன குடும்பத்தில்பிறந்த அவர் பெரியாரை விரிட்டி விரட்டி புரிந்து கொள்ள முயன்றவர் ! தீவிர மான நாத்திகர் ! 

பின்னாளில் மார்க்சிய மெய்ஞானத்தை புரிந்து கோண்டு சமூகப் பேராளியாக மாறியவர் !

தனக்கு வந்த வங்கி பதவியை வேண்டாமென்று உதறி குடும்பத்தைக்காப்பாற்ற கோழிப்பண்ணை  நடத்திவாழ்நதவர் ! குன்றத்துக் கந்தனோடு சேர்ந்து த.மு.எ.ச.வை தூணாக நின்று வளர்ததவர்களில் ஒரு வர் !

புகைப்பட நிபுணராகவும் , தொலைக்காட்சி பதிவாளராகவும் பணியாற்றியவர் !
கவிஞாராக ,கட்டுரையாளராக பணியாற்றி இன்று "செம்மலர்" பத்திரிகையின்  துணை ஆசிரியராகமிளிருபவர் !
------------------------------------------------------------------------------------------------------------

1952ம் ஆண்டு அம்பாசமுத்திரம் தீர்தபதி உயர் நிலைப்பள்ளியில் sslc (11ம் வகுப்பு ) படித்துக் கொண்டிருந்தேன்! அப்போது ஹாஸ்டலில் கோலப்பன் என்ற  மாணவனும் படித்தார் ! கோலப்பன் கலைவாணர் அவர்களின் மகன் ! ஹாஸ்டலில் விளயாட்டு மைதானத்தில அவரை பார்த்திருக்கிறேன் ! வகுப்பறையில் பார்த்ததே கிடையாது !

கலைவாணர் கொடுத்து வாழ்ந்தவர் ! அவருக்கு கொடுத்து உதவியவர் தயாரிப்பாளர் A .L . சீனுவாசன் ! லட்சக்கணக்கில் கலைவாணருக்கு கொடுத்தவர் ! கலைவாணர் மிகுந்த சிரமத்தில் இருந்த கடைசிக்காலத்தில் கலைவாணர் எழுதிக் கொடுத்த பத்திர \ங்களை கிழிதுப்போட்டு அவருக்கு கடனிலிருந்து விடுதலை அளித்தவர் ! 

A . L .சீனிவாசன் கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் ஆவார் !
-----------------------------------------------------------------------------------------------------------
சோழ.நாகராசனுக்கு ஒரு வேண்டு கோள் ! அந்த" தெருப்பாடகன் " மகாலிங்கம் பற்றிய நூலை விரைவில் தாருங்கள்! "நாம் இருவர்    "
படத்தில் மகாலிங்கம்  நடித்த பாத்திரத்தின்  பெயர் "சுகுமாரன் "  ! தன மகனுக்கு சுகுமாரன் என்று பெயரிட்டார் மகாலிங்கம் !

மிகஅற்புதமான அந்தகலைஞனை உலகமறியச் செய்யுங்கள் தோழரே!

வாழ்த்துக்கள் !!!!










































 










































































































2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஏ.எல்.சீனிவாசன் அவர்களின் தயாள குணம் வியக்க வைக்கின்றது ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

ஏ.எல்.சீனிவாசன் அவர்களின் தயாள குணம் வியக்க வைக்கின்றது ஐயா.