Friday, November 29, 2013

நரேந்திர மோடியும் ,

அகமதாபாத்தும் .......!!!


அகமதாபாத்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் வந்திருந்தார் ! அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசியலும் பேசினோம் !

"எப்படி இருக்கிறது அகமதாபாத்?" என்று ஆரம்பித்தேன் !

"மகா  கேவலமா இருக்கு சார் ! யாரோ மதுரியாம் ! அதே பெச்சா இருக்கு ! பெட்டிகடை,ஹோட்டல்,பஸ் ஸ்டாண்டுனு இதே பேச்சுதான் ! பத்திரிகைகள்ல பூராம் படம் போட்டு ... ஜனங்கள் அது பற்றிதான் பேசிக்கிட்டு இருக்காங்க !" என்றார் !

"குஜராத் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன் " என்றேன் !

"சார் ! சாத்தூர்,சிவகாசி போயிருக்கேள்ல ! அங்க ஐந்து வயசு பிள்ளைல இரூந்து எதாவது செஞ்சுகிட்டு இருக்கும் ! உழப்பு அவங்க ரத்தத்துல ஊறினதூ"

"ரோம்பம்போதுவா பேசறீங்க "

"இல்ல சார்!  தமிழ் நாட்லொரு பழக்கம் உண்டு ! ஒன்பதாப்பு பத்தாப்பு படிக்கும்போதே சின்னப்ப்யளுகளை டைப் படிக்க  அனுப்புவாங்க ! முடியும்னா ஷார்ட் ஹாண்டு படிக்க சொவங்க ! கைவசம் இருக்கட்டும்னு சொல்வாங்க !"

"சரி" 

"அத மாதிரிதான் குஜராத்துல ! 9ப்பு படிக்குற் பையன் கிட்ட ரண்டாயிரம்  மூவாயிர கொடுத்து  வியாபாரம் பண்ணுடா ம் பாங்க ! படிச்சுக்கிட்டே பண்ணுவான் ! இது அவனங்க trait ! அரசு ஊழியர், வங்கி,இன்சூரன்சு நு எல்லாருமே வீட்ல பத்து தையல் மிஷின வாங்கி போட்ருப்பாங்க ! எடைக்கு காட்டன் துணியை வாங்கி ரெடிமேட் ஆடைகளை தைச்சு மொத்த வியாபாரிட்ட விப்பாங்க ! வணிக மனோபாவம்,எண்டர்ப்றுனர்ஷிப்   உள்ள ஜனங்கள் ! வேலையும் பாப்பாங்க ! சிறு குறும் தொழில்லயும் இருப்பாங்க ! அது மோடி வந்தாலும் செய்வாங்க ! எந்த கேடி வந்தாலும் செய்வாங்க !"

"அப்போ மோடி மேல அவங்களுக்கு .....!"

"நம்ம ஆளு பிதமரா வந்தா நல்லதுன்னு பொதுவா நினைக்க மாட்டமா ? ஜெயில் சிங்  ஜனாதிபதி ஆனாரு ! நகைதொழிலாளிகள் கொண்டாடினாங்க ! அதுமாதிரிதான் !அதோட கொஞ்சம் பயப்படுறாங்க ..!"

"ஏன் ?"

"அவரு பி.ஜே.பி காரருல்ல ! தெக்க தமிழ்நாடு,ஆந்திரா ,கர்நாடகா, கேரளா நு சப்பொற்டு  இல்லை ! ம.பி,,குஜராத்,ராஜஸ்தான் மட்டுமிந்தியா இல்லையே !"

"என்ன தான் சொல்றீங்க ?" 

"ஜனங்க கெட்டிக்காரங்க சார் ! அவர் வந்தா இந்தியாவுக்கு கஷ்டம் ! வராட்டா  குஜராத்துக்கு மட்டும் கஷ்டம் !"

 "அப்போ ...",

"குஜராத்துலயெ  அவரோட பிடி இளகரமாதிரி தான் இருக்கு ...!  ஜனவர் பிப்ரவரில அவரு ஒரு குண்டு போடுவாருனு நினைக்காங்க !"

"அது என்னைய குண்டு ?"

" நான் தப்பு பண்ணிட்டேன் ! 2002 ல நடந்ததுக்கு நான் மன்னிப்பு 
 கேட்டுக்கறேன் ! நு அறிவிப்பர்னு சொல்லிக்கறாங்க !"


மன்னிப்போமா ?
























































ரொம்ப பொதுவா பேசரீங்க ! "

2 comments:

இராய செல்லப்பா said...

அரசியலில் எதுவும் நடக்கலாம்! சஞ்சய் காந்தி, இந்திரா காந்திக்குப் பிறகு இன்றுதான் (மோடி என்ற) ஒரு தனி மனிதனை நாடு முழுதும் விவாதிக்கத்தொடங்கி யுள்ளது. இதுவே அவரது புகழை அதிகப்படுத்தி வாக்குகளைக் குவிக்கும் வாய்ப்பும் (அல்லது 'அபாயமும்'?) உள்ளதை மறுப்பதற்கில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

அரசியலில் எதுவும் நடக்கலாம்!