Thursday, September 18, 2014

d .R . நாகராஜ் அவர்களும்,

U .R .அனந்த மூர்த்தியும் ......!!!


அவசரநிளைக்கலத்தில்  ரகசியமாக இலக்கிய பயிற்சி முகாமை த.மு எச நாமக்கல்லில் நடத்தியது ! இந்த முகாமுக்கு ஆந்திரா,கேரளா,கர்நாடகா மாநிலங்களிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர் ! 

பங்களுருவிலிருந்து கே.சுப்பிரமணியம், சேக்கிழார், d .r .நாகராஜ் ,சித்தலிங்கையா ஆகியொர் வந்திருந்தனர் !

சித்தலிங்கய்யா பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் ! அவருடைய புகழ் பெற்ற "நன்ன ஜனங்களு " என்ற பாடலை அவர் அந்த நிகழ்ச்சியில் பாடினார் !

நாகராஜ் அவர்களொடு எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது ! கடிதங்களை சிவப்பு மையிலேழுதுவார் ! தீவிரமானஅரசியல் நிலை பாடுகளைக் கொண்டவர் ! 

அனந்த மூர்த்தியின் மாணவர் !

"நாகராஜ் என்னுடைய ஆசிரியன் ! எனக்கு மாணவனும் கூட " என்று நாகராஜைப் பற்றி  வர்ணிப்பார் அனந்த மூர்த்தி !

எந்த ஒரு மாணவனுக்கும் கிடைக்காத பேறு நாகராஜுக்கு கிடைத்தது !

மரணம் அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டது !









0 comments: