Thursday, November 13, 2014

ஜவகர்லால் .........!!!



அந்தச் சிறுவன் பள்ளிக்கு சென்றிருந்தான் ! பள்ளி வாசலில் அவனை அழை த்துச் செல்ல கார் நிற்கும் ! அதில் ஏறி வீட்டிற்கு செல்வான் ! ஓர்நாள் அவன் தன கூட படிக்கும் சிறுவர்களோடுபேசிக்கொண்டே வெளியெ வந்த பொது காரைக் காணவில்லை! 

அந்த பள்ளிக்கு  நான்கு வாயில்கள் ! எப்போதும் வரும் வாயில் வழியாக வராமல் வெறு வாயில் வழியாக வந்து விட்டான்  ! விடு செல்ல நேரமாயிற்று ! செல்லப்பிள்ளை ! 

அவன் தந்தை நான்கு கார்களை வாங்கினார் ! நான்கு ஓட்டுனர்களை நியமித்தார் ! நான்கு வாயிகளிலும் கார்களை நிறுத்தி தன செல்ல மகன் இஷ்டம்போல் வர ஏற்பாடு செய்தார் !

அந்த செல் மகன் பெயர் ஜவகர் !அவன் தந்தை பெயர் மோதிலால் !--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜவகர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டுமொத்தம்  3000நாட்கள் சிறையில் இருந்ததாக சொல்வார்கள் !

ஜவகரின் செல்லமகள் பிரியதர்சினி !சிறு வயதில்  அவர் தன மகளோடு கொஞ்சி விளையாடியதில்லை !

மகளுக்கு சிறையிலிருந்து கடிதம் எழுதியே உலக சரித்திரத்தை போதித்த தந்தை உலகத்திலேயே அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் !

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஜவகரின் மகள் இந்திரா பிரியதர்சனி ! திருமணமாகி பேரன் பிறந்திருக்கிறான் ! ஜவகர் அப்போது சிறையில் இருந்தார் ! பேரனைப் பார்க்க வேண்டுமானால் ஜாமீனில் போங்கள்  என்று பிரிட்டிஷ் அரசு சொன்னது !

ஜாமீனில் செல்ல மறுத்து விட்டார் ! 

 போலிஸ் வானில் அவரை அழைத்துச் சென்றார்கள் 1 இந்திரா அந்த சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் தன மகனை தூக்கி காட்டினார் ! ஜவகர் பேரனைப் பார்த்துகையசைத்தார் !  

ஜவகர் ,இந்திரா, குட்டி பேரன் ராஜீவ் ஆகியோர் இந்தியாவின் பிரதமராக இருந்தது பின்னாளைய சரித்திரம் ! 

--------------------------------------------------------------------------------------------------------------------------

 ஜவகரின் மனைவி பெயர் கமலா ! அலகாபாத்தில் ஒரு பள்ளி முன்பு சத்தியாகிருக்த்தில் ஈடுபட்டர் ! வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தார் ! கூட அவருடைய சின்னஞ்சிறு மகள் இந்திரா ! பள்ளிச் சிறுவன் ஒருவன் ஓடிவந்து கமலாவைத் தூக்கி வைத்து முதலுதவி செய்து வீட்டில் கொண்டு விட்டான் ! 

அந்த சிறுவன் பெயர் பெஃரோஸ் ஜஹாங்கீர் காந்தி ! பின்னாளில் இந்திராவை மணந்தவர் !

ஜவகருக்கு இந்த திருமணத்தில் விரு ப்பமில்லை !மகாத்மா  காந்தியின் மூலமாக பெஃரோஸை மாற்ற முயன்றார் ! காந்தி இந்திராவை கூப்பிட்டு அனுப்பினார் ! "புகழ் பெற்ற தலவர்கள் நீங்கள்  இருவரும் ! நான் பெஃரோசை மணப்பதை உங்களால் தடுக்க முடியாது ! உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் " என்று கூறிவிட்டார் இந்திரா !

--------------------------------------------------------------------------------------------------------------------------ஜவகரின் மனைவி கமலாவுக்கு உடல்நலம் மோசமாகியது ! அவர் சுவ்ட்சர் லாந்தில் ஓய்வெடுக்க மருத்துவர் அனுப்ப விரும்பினார் ! பாரிசில் இறங்கி மூன்று  ரயில்களில் மாறி செல்ல வேண்டும் ! மருமகள் சிரமப்படுவார் என்று கருதிய மோதிலால் பாரிசிலிருந்து சுவிஸ் வரை தனியாக  ஒரு ரயிலை ஏற்பாடு செய்தார் ! அதில் கமலா,ஜவகர் ,இந்திரா,மற்றும் பெஃரோஸ் மட்டும் பயணம் செய்தனர் !(30 ம் ஆண்டுகளில் )

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஜவகர் ஒரு நாத்திகர் !கோவில் குளத்திற்கு சென்று சாமியார் காலில் விழாதவர் ! காந்தி  தான் ஒரு "இந்து "என்று பெருமைப்படுபவர் ! ராம பக்தரும் கூட !

வல்லபாய் படே லா -ஜவகரா  என்று கேள்வி எழுந்த போது  ஜவகர் தான் என்று நின்றவர் காந்தி !

-----------------------------------------------------------------------------------------------------------------------







------------------

4 comments:

Unknown said...

ஆச்சரியமான விஷயங்கள். ஜவஹர்லால் பற்றிய பதிவுக்கு நன்றி ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

நேருவைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல் பகிர்வு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத பல செய்திகளை அறியத் தந்தீர்கள் ஐயா
ஐயா

சிவகுமாரன் said...

காங்கிரஸ் காரர்கள் கூட அறியத் தராத ( அறியாத) பல விசயங்கள் . நன்றி அய்யா