Thursday, July 23, 2015

ஸ்நேகலதா ரெட்டி அவர்களும்

அவசர நிலை காலமும்........!!!

"ஸம்ஸ்காரா" என்ற திரைப்படம்  கன்னட திரை உலகை சர்வதேச அளவில் பார்க்க வைத்த படமாகும்!

 சீத்தாராம ரெட்டியும்,சிங்கிதம் சிணிவாச ராவும் இயக்கிய இந்த படத்தில் கிறிஷ் கர்னாட்,லொகெஷ், ஆகியோர் நடித்தனர் .கதாநாயகியாக  சித்தாராம ரெட்டி அவர்களின் மனைவி ஸ்நெகலதா நடித்தார்.

ஸ்னெக லதா வின் பெற்றொர் கிறிஸ்தவ குடும்பத்தினர். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் .டாக்டர் ரம்மனொகர் லோகியாவோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் ! ஸ்நேகாவும் பிரிட்டிஷ் எடிர்ப்பு,சோஸ்லிச கருத்துக்களை கொண்டவர். . சென்னையில் 60ம் ஆண்டுகளில் இயங்கிய "மெட்றாஸ் கிளப்" என்ற நாடக குழுவில் நடித்தவர். ஜார்ஜ் பெர்ணாண்டசின் ஆதரவாளர்.

"ஸமஸ்கார"கதையை 1965ம் ஆண்டு யு.ஆர்.அனந்தமூர்த்தி மாணவரக  இருக்கும் போது எழுதினார் ! அவர்தன்னுடைய நூலில் " அவசர நிலைகாலத்தில் தலமறைவாக இருக்கும் பெர்ணண்டசை சந்திக்க சென்றேன் ! என் கண்களை கட்டி காரில்  அழைத்து சென்றார்கள் ! அவருடன் இரண்டுமணி நேரம் பெசினேன்.என்னிடம் உதவி கேட்டார்.அவசர நிலை க்கு எதிர்ப்பு இல்லை .மக்கள் அதன ஆதரிக்கிறார்கள் என்ற பொய்யை இந்திரா வெளிநாடுகளில்ல்பிர்ச்சாரம் செய்கிறார் ! இதன முறியடிக்க நான் உதவவேண்டும் என்று கெட்டுக் கொண்டார்

.

"அவசர நிலையை எதிர்த்து ரகசிய இயக்கம்  வேண்டும் ! அதன் மூலம் ஆபத்தில்லாத குண்டு வெடிப்புகளை நடத்தி நமது எதிர்ப்பை காட்ட வேண்டும் " என்றார்.

பெங்களுரில் உள்ள பிரும்மாண்டமான சட்டமன்ற கட்டிடத்தில் உள்ள கழிவறையை தேர்ந்தெடுத்திருகிறோம். அது பயன் பாட்டில் இல்லை ! அதில் சத்தம் அதிகம் கோடுக்கும் வேடியை வெடிக்டகச்செய்ய்வேண்டும்.இது ஆபயத்திலாதது.சேதம் விளைவிக்காது ! என்றார். 

இதனை ஸ்நெகலதா ரெட்டி கொண்டு வைப்பார்  நீங்கள் இதற்கு உதவவேண்டும் என்றார்.

ஆனால் இதற்கு முன்பாகவே ஸ்நெகலதா கைது செய்யப்பட்டு விட்டார். 

பங்களுர் சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டார் . பெர்ணாண்டஸ் மறைந்திருக்கும் இடத்தை சொன்னால் விட்டுவிடுவதாக கூறினார்கள் ! 

அதே சிறையிலிருந்த மது தண்டவதே கூறுகிறார்' "நட்ட நடுனிசியில் ஸ்நெகாவின் அலறல்கேட்கும்.  .அவரை அடிக்கும்சத்தம்   கேட்கும் ! " எதுவும் செய்ய முடியாமல் நான் தவிப்பேன் " என்கிறார்.

சித்திரவதை தாங்காமல் ஸ்நேகாவை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள் . பின்னர் வீட்டுக்கு அனுப்பினார்கள்.வீடு வந்த ஐந்தாம் நாள் ஸ்நெகலதா ரெட்டி மரண மடைந்தார் !   .

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தங்கி இருந்த் இடத்தை மட்டும்  அவர் தன் மூச்சு இருக்கும் வரை சொல்லவில்லை ..

ஸ்நேகலதா ரெட்டி நாடக,திரைப்பட நடிகை மட்டுமல்ல !

இந்தியாவின் தீரமிக்க பெ ண்களில் ஒருவர்!!! 


2 comments:

'பரிவை' சே.குமார் said...

இந்தியாவின் தீரமிக்க பெண்ணான ஸ்நேகலதா ரெட்டி குறித்து அறியத் தந்தீர்கள் ஐயா....

தனிமரம் said...

அறியாத தகவல் ஐயா!