Saturday, November 05, 2016







எட்டு பேர் ,

சுட்டு கொலை .....!!!



"போபால் நகரத்தின் அருகில் தீவிரவாதிகள் எட்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர் . இது ம.பிபோலிஸார் தெரிவித்தது. இவர்கள் சிறையிலிருந்து தப்பி உள்ளனர் .அவர்களை தடுத்த சிறை காவலரை குரல்வளையை அறுத்து கொன்றுள்ளனர். பொலிஸாரின் துரித நடவடிக்கை காரணமாக இவர்கள் தப்ப முடியாமல் போய்விட்டது. காவல் துறைக்கு நம் பாராட்டுக்கள் ."  என்று பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகள் எழு து கின்றன. 

இந்த தீவிர  வாதிகளுக்கு ஆதரவாகஎதிர்க்கட்ச்சிகள்,குறைசொல்வது தவறு என்றும் அவை சொல்கின்றன.

இந்த எட்டு பெரும் கொலை கொள்ளைகுண்டுவைப்பு  என்று பல்வேறு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டு விசாராணைக்கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.வழக்கு விசாரிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வரவிருப்பதாக செய்திகள் கூ றுகின்றன.இவர்களானேகமாகவிடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் சிறையிலிருந்து தப்பியது  ஒரு திரைப்படம் போல் இருக்கிறது.பலதேய்க்கும் பிரஷ் ,மற்றும் பலகை களைக்கொண்டு மாற்று சாவி தயாரித்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் அறைகளை திறந்திருக்கிறார்கள் . இந்த தீவிர வாதிகள் எட்டு பெரும் தனித்தனி அறைகளில் இருந்தால் எட்டு சாவி போட்டு எட்டு பூட்டை திறந்து .... 

கிட்டத்தட்ட 30 அடி உயரம் உள்ள மதில் சுவரை ஏறி தாண்டி இருக்கிறார்கள். தங்களுக்கு கொடுத்த போர்வை ஜமுக்காளம் ஆகியவற்றை கிழித்து ஏணியாகி தப்பித்து  இ ருக்கிறார்கள். சுவரில் ஆதாரமாக தொங்கவிட ? ஒருவேளை மதிலுக்கு வெளியே யாரவது நூலேணியை பிடித்து ....? யார் அவர்...?

இப்படி தப்பிக்கும் பொது தடுக்க முயன்ற சிறைக்காவலர் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.எந்த ஆயுதத்தால் அறுத்தார்கள்...?ஏது ஆயுதம்...?

இந்தியாவின் மிகவும்பாதுகாப்பன் சிறைகளில் ஒன்று போபால் சிசிறை சாலை. சுற்றிலும் காமிராக்கள் உண்டு. அருகில் உள்ள புதர்களிலும் காமிராக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதிசயமாக இரவு 2மணியிலிருந்து சம்பவ தினத்தில் காமிரா வேலை செய்ய வில்லை.

சிறைச்சாலையை சுற்றிலும் விளக்குகள்மிகவும்பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் .சம்பவத்தன்று அவை எரியவில்லை.

ம.பி அரசு அதிகாரி தீவிர வாதிகளிடம் ஆயுதங்கள் இல்லை என்று அறிவித்திருக்கிறார் . நிராயுத பாணியிலான இவர்களால் என்ன ஆபத்து வரும் என்று போலீசார் கருத்தினார்களோ தெரியவில்லை .சுட்டு கொன்று விட்டார்கள். 

ஆனாலும் தீவிர வாதி களை நாம் ஆதரிக்கக் கூடாது தான் . 

பின் ஏன் எதிர்க்கட்கசி ளும், மனித உரிமைக்காரர்களும் அரசை நமப மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை . 

புரிந்தவர்கள் விளக்குங்களேன் !!!

  

 

1 comments:

சிவகுமாரன் said...

உங்களுக்கே புரியவில்லை என்றால் யார் விளக்குவது அய்யா .