Tuesday, January 24, 2017







"தோழர் சைலேந்திர பாபு ! "

"தோழர்கள் மீது மரியாதை உள்ளவர் " 


தோழர் சைலேந்திர பாபு அவர்களை முக நூலில் பலஅன்பர்கள் கோபத்தோடு பார்க்கிறார்கள். தவறு.அவர் நல்லவர் தோழ ர்கள் மீது மரியாதையும் ,அன்பும் கொண்டவர் அதற்கு அவர்தம்பி  தோழர் ராஜன் பாபுவே  சாட்ச்சி .

தோழர்  ராஜன் பாபு  திண்டுக்கல் எல்.ஐ. சி  அலுவலகத்தில் தாற்காலிக மாக பணியாற்றி வந்தார் . ஒரு கட்டத்தில் தற்காலிக ஊழியர்களை  நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கி விட்டது , 

தோழர் சைலேந்திர பாபு பெரிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும்  எல்.ஐ.சி சங்க தோழர்களைத்தான் சந்தித்தார்.முத்த தோழர்களையும், தலைமை  தோழர்களையும் வந்து பார்த்தார்.

சங்கம் வழக்காடியது .  வழக்கு  என்றாலே காலதாமதமாகும் தானே. பாவம் சைலேந்திர பாபுவும் அடிக்கடி வந்து தோழர்களை வந்து பார்த்து  தம்பி வேலை விஷயமாக விசாரித்து செல்வார் .

வழக்கு  வெற்றிகரமாக முடிந்தது.  தோழர் ராஜன் பாபுவும் பணியில் சேர்ந்தார்.

தோழர் சைலேந்திர பாபுவும் தோழ தோழர்கள் ர்கள் மீது மரியாதையும்  நட்பும் கொண்டவராகவே இருந்தார்.


பாவம் !  என்ன நிர்ப்பந்தமோ !!!



0 comments: