Saturday, April 15, 2017






"நாங்கள் 


காட்டுவாசிகள் 


தானே ஐயா ...!!!









என் மனைவிக்கு உதவியாக இருப்பவர் யமுனா தேவி. ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்தவர்.வனகுடி  மக்கள் இங்கு வந்து பணிசெய்து மாதாமாதம் அவர்கள் அனுப்பும் மணி ஆர்டர்  மூலம் குடும்பம் பிழைக்கிறது . எப்போதாவது அவருடைய கணவர்  வருவார்.வந்தால் என்னிடம் பேசிக்கொண்டிருந்த விட்டு இரவோ மறுநாளே சென்று விடுவார்.

நல்ல ஞானஸ்தர் . தமிழ் நாட்டை  விசாரிப்பார். இந்தமுறை வந்திருந்த பொது மதுவிலக்கு போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் . ஆண்களை வீட பெண்கள் மிக ஆக்ரோஷஹமாக  ஈடுபடுகிறார்கள் என்று கூறினேன்.அவர்களை போலீசார் அடக்குவதையும் சொன்னேன்.

"எங்கள் குடி  இருப்புகளிலும் இப்படி தான் நடக்கிறது "


"எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது."


"தலையாரியே எங்கள் கிராமங்களில் பெரிய ஆபிசர் "


"அப்படியா ?'


"இப்பம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு "


"ஏன் ?"


'பசங்க எதிர்ப்பு தான் "


"எப்படி ?" 


"நாங்க படிக்காதவங்க ! ஆளைப்பிடிச்சு புளிய மரத்துல தலைகீழா தொங்க விடருவம் . செங்குத்தா வீட மாட்டோம். விட்ட மண்டைல ரத்தம் ஏறி நரம்பு வெடிச்சு  செத்துருவான். கொஞசம் சாயமானமா வேசுருவம் . மண்டைல ரத்தம் ஏற ஏற தலைவலி தாங்காம கதறுவான் ."


"இல்லைனா உடம்புல தேனதடவி கரையான் புத்துல போட்ருவம் . கரையான் வாயில விஷம் இருக்கு. குண்டூசி முன்னால ஆயிரத்துல   ஒரு பங்கு இருக்கு.  அதனால தான் நமக்கு கடிச்ச்சதும் சுரீர்ங்குது . நூத்துக்கணக்குல  கரையான் கடிச் \சா  கதறவேண்டியது தான்   "


"வித்தியாசமா இருக்கே ? "


'போமபளட்ட  வாலாட்டினா வேறமாதிரி !"


"வாழை க்குலை காம்புதான் வெள்ளை அடிக்க வச்சிப்பம் . வலது கை  மணிக்கட்ல  இரும்பு உலக்கையால் போடுவம் . வெள்ளை அடிக்க கூ ட கையை பயன்படுத்தமுடியாது"


"காட்டுமிராண்டித்தனமா இருக்கே "


"நாங்க காட்டு வாசிகள் தானே ஐயா !"



0 comments: