Monday, January 15, 2018






அந்ந்...த  நாளு ..ம் 

வந்ந்..தி டா..தோ !!!





அரவிந்தர் ஆசிரமத்தின் நடவடிக்கை களில் ஆர்வமுள்ளவர் என் மைத்துனி அவர்கள். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற பொது புதுசேரிக்கு ஒரு விசிட் அடித்தார்> தோழர் புதுவை ராம்ஜி அவர்கள் தான் உதவினார். ஒரு இரண்டு மணி நேரத்தில் திரும்பவேண்டய நிலை. இருக்க முடியவில்லை. 

தற்போதுமீண்டும் போகலாமென்று ஆசைப்படுகிறார். புதுவை ராம்ஜியை தொடர்பு கொண்டேன்.    

"தோழர் ! உங்களை  நானே நேத்து இரவிலிருந்து தொடர்பு கொள்ள விரும்பினேன் "என்றார் ராம்ஜி!

"அப்படியா ? என்ன விசேஷம் ?"

"த.மு.ஏ.சாவின்  14வது  மாநிலமானாடு புதுசேரில நடத்த முடிவாகி இருக்கு !உங்க சவுகரியம் எப்படி னு கேக்க  நினைச்சேன்    ! "

" கண்டிப்பா வரலாம் னு தான் இருக்கேன் ! வசாயிட்டு ! ஏன் அலையறீங்க ! னு பையன் அங்கலாய்க்கிறான் " இயலாமை கொஞ்சம் அதிகம் தான் கூட முத்து மினாடசி இருக்காங்க ! இருந்தாலும் அவங்களுக்கு 76 ! எனக்கு 82 ! அங்க வந்தா உங்களுக்கு தான் சிரமம் ! அதுதான் யோசிக்கிறேன் ! அதுசரி ! அங்க நம்ம ஆபிசுல கெஸ்ட் ஹவுஸ் இருக்கில்ல ! போட்டுருங்க !

"அதெல்லாம் இருக்கு தோழர் ! நீங்க கவலைப்படாதீங்க ! நாங்க வேற ஏற்பாடு பண்ணிடறோம் !கெஸ்ட் ஹவுஸ் வேண்டாம் " என்றார் ராம்ஜி !

த.மு.ஏ.சவை ஆரம்பித்த கே.எம் அவர்களின் நூற்ராண்டு இது. புதுவை தோழ ர்கள் கொடுத்து வைத்தவர்கள் நூற்ராண்டுவிழாவாக சிறப்பிக்கலாம்.

ஜூன் மாதம் 22.23.24 ம் தேதிகளில் நடத்த முடிவாகி இருக்கிறது.

அந்ந் .. த  நாளு ..ம்  வந்ந்..தி  டா ..தோ  !!!





1 comments:

ஸ்ரீராம். said...

வணக்கம் ஐயா.