Monday, January 31, 2011

நெகிழ்ச்சியான நேரம்....

நெகிழ்ச்சியான நேரம்.....


"நலந்தான" என்று அப்பாதுரை அவர்கள் மின்னஞ்சல் மும் கெட்டிருந்தார். " அய்யா சுகமா" என்று கவிஞர் சிவா கெட்டிருந்தார். பல நண்பர்கள், தோழர்கள்,பதிவர்கள் தொலைபெசி முலமும் ,மினஞ்சல் மூலமும் விசாரித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

நடந்தது இது தான் என்னுடைய மடிக்கணிணி பழூதடைந்து விட்டது.தொடர்பு கொள்ளமுடியவில்லை.

முப்பது ஆண்டுகளாக சர்க்கரை நோய். காலை,மதியம், இரவு ஊசி.மாத்திரை,கட்டுப்பாடான உணவு இவைஅத்துணையையும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் முத்துமீனாட்சி(என் துணைவியார்) கவனித்துக்கொள்கிறார்.அவர் இல்லை என்றால் என் சமாதியில் புல் முளைத்திருக்கும்.

பதிவர்கள் தொலை பேசியில் பதட்டத்தோடு விசாரிதது, "ஐயா!நல்லாயிருக்கேளா?", சார் சௌக்யமா? எனும்போது நெஞ்சம்விம்மியது.

இந்தப் பரிவும் பாசமும் என்னை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாழவைக்கும்.

ஒரு சின்ன கரிசனமிக்க விசாரிப்பு ,அதுவும் நான் பார்த்தே இராத முகங்க்களின் விசாரிப்பு எவ்வளவு சுவைமிக்கது. வடமொழியில் ஒரு சொலவடை உண்டு."லோகோ பின்ன ருசி: " என்பார்கள்.உலகம் பிரும்மாண்டமானதுதான்.பிரும்மாண்டம் அழகல்ல.அதன் பின்னங்கள் தான் அதனை அழகுபடுத்துகிறது.

உங்கள் அத்துணை பேருக்கும் என் நன்றி.

Glory to You Comrades!

9 comments:

'பரிவை' சே.குமார் said...

ungal utalnalam sugam enpathi makizhchi. niraiya ezhuthungal ayya.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காஸ்யபன் சார்!நலமா?

நான் உங்களை இந்த இடைவெளியில் அழைக்கவும் முடியவில்லை.எழுதவும் முடியவில்லை.ஆனால் சுவையான பதிவுகளை இழந்திருந்தேன்.

உங்கள் கணிணிதான் பழுதடைந்திருக்குமென்றும் யூகித்திருந்தேன்.

எப்படியோ ஒரு சின்ன இடைவெளி பெரிய இடைவெளியாய்த் தெரிவது காணாமல் போகும் மனிதர்களைப் பொறுத்ததே என்பது உங்கள் இடுகையின் உணர்விலிருந்து தெரிகிறது.

இனியென்ன? வெளுத்துக்கட்டுங்க.

Rathnavel Natarajan said...

We pray for your sound health.
N.Rathnavel
Smt N.R.Uma Gandhi

சிவகுமாரன் said...

உங்கள் மறுவருகை மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தது.

bogan said...

மீண்டும் வருக!பிரம்மாண்டம் அழகல்ல..பின்னங்களே அழகு ....ம்ம் சட்டென்று ஒரு சடோரி அடித்தது..கிரேட்.

மதுரை சரவணன் said...

நல்ல உடல் நலத்துடன் அதிக நாட்கள் எங்கள் அன்பில் வாழ்வீர்கள்.. பகிர்வுக்கு நன்றீ.

பாரதசாரி said...

உங்கள் ஐம்பதாம் ஆண்டு மணநாளுக்கு நேரில் வந்து சந்திக்க ஆசை...
நிறைவேற்றுங்கள் ஐயா... :-)

மோகன்ஜி said...

காஷ்யபன் சார்! இன்றே பல நாள் கழித்து நானும் வலை புகுந்தேன். இடைப்பட்ட இந்த நாட்களில் நம் வலை சொந்தங்களின் மின்னஞ்சல்களும் அலைபேசி அழைப்புகளும் நெகிழ வைத்தன. என் உணர்வுகளை நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்கள்.

இனி தடையேதும் உண்டோ தமிழாட அன்பரே! உங்களுக்கு வலையில் இன்னும் நூறு வருடம் வேலையிருக்கிறது. எதையாவது சொல்லாதேயும். நிறைய பதிவிடுங்கள். காத்திருக்கிறோம்.

காமராஜ் said...

தோழர் என்ன ஆச்சு ?
முடியலியா ?
நானும் கூட ஒரு வாரம் ltc
போயிருந்தேன்.

நலமே வேணும்.