Friday, July 20, 2012

 வர்த்தகத்தில் அந்நிய முதலீடு...........!!!

                           இந்திய  மக்களின் வறுமையைப போக்க அமெரிக்க  நிதி  முலதனத்திற்கு
 கவலை அதிகம். இந்திய தொழில்களை வளர்த்தால் பொருளாதார வளர்ச்சி
ஏற்படும் . அப்படி  வளர்த்தெடுக்க  நம்மிடம்  மூலதனமில்லை  .அதனை  அமெரிக்கமுதலாளிகள் தருகிறார்கள். நாம் என் அதனை  வேண்டாம் என்று
கூறவேண்டும்   என்று மன்மோகன் கேட்கிறார். சிதம்பரம் கேட்கிறார்  .மண்டேக் சிங் கேட்கிறார்.

பா.ஜ.க. இதனை ஏற்க மறுக்கிறது இது பற்றி நாடாளுமன்றத்தில்  பல முறை அவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுடைய முன்னாள் நிதி
அமைச்சர் யஷ்வந்த்  சின்கா குறிப்பிட்டுள்ளார். ஆனால் முழுமையாக ப.ஜ.க சொல்வதை நம்ப முடியாது . பாஜக வும் சிவா சேனையும் மும்பையில் கூட்டட்சி நடத்திய பொது நடந்த கூத்து நமக்குத் தெரியும்."என்றான்" கம்பெனியை தூக்கி அரபிக்கடலில் எறிவேன் என்று சிவசேனைத்தலைவர் அறிவித்தார்.பா.ஜ.கவும் அறிவித்தது. வாஜ்பாய் அமேரிக்கா போயிருந்த பொது அமெரிக்க முதலாளிமார்கள் காட்ட வேண்டியதைக்  காட்டினார்கள். "நாங்கள் அகில   இந்தியக்கட்சி .சிவசே னைதான் எதிர்க்கிறது அவர்களைச்சரி
 செய்யுங்கள்"     என்றார் வாஜ்பாய்.

"என்றான்" கம்பெனியின் தலைவர் "ரெபக்கா "மும்பாய் வந்தார். "மாதுஸ்ரீ " என்ற பங்களாவிற்குப் போனார். அங்குதான் பால் தாக்கரே வசிக்கிறார். கதை முடிந்தது ." என்றான் "பிரச்சினையும் முடிந்தது.
 .
 இவர்களுக்கும் காங்கிரசுக்கும் அடிப்படையில் எந்த வேற்றுமை யும் கிடையாது இவர்களுக்கு உள்ள பங்கு கிடைக்கும்  வரைதான்  இவர்களின் எதிர்ப்பு  இருக்கும்.

இப்போது சில்லறை வர்த்தகம்  பற்றி விவாதிக்கிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முலதனம் வந்தால் விலைவாசி குறையுமாம். அமெரிக்காவில் அப்படிதான் நடந்ததாம்  .அங்கு  சில்லறை  வர்த்தகத்தில் மிகப் பெரிய கம்பெனியான "வால்மார்ட் "வைத்ததுதான் சட்டம். விவசாய விலை பொருட்களை  ஈன கிரயத்திற்கு வாங்கி அநியாய விலைக்கு விற்பார்கள்.இதற்காக பெரிய பெரிய மால்கள் உண்டு.
பொருட்களை வாங்கவரும் தாய்மார்களின் கைக்குழந்தையை  வாங்கி  பாலுட்டி சிராட்டி பாதுகாப்பக  வைப்பர்கள். எந்தப் பொருளையும் ஒரு கூரையின் கீழ் வாங்கமுடியும் என்பார்கள்.சிறு வியாபாரிகளைத் தெருவிலிருந்து துரத்தும்  வரை  விலை ஏற்ற மாட்டார்கள் அதன் பிறகு அவர்கள் அடிக்கும்
கொள்ளை கணக்கில் அடங்காது.


இப்போதேல்ல்லாம் ஹிலாரி கிளிண்டன் அடிக்கடி டெல்லிவருகிறார்.
ஆப்கான் வந்தாலும் டெல்லி வருவார். பாகிஸ்தான்,பங்களாதேசம், சினா,கொரியா வந்தாலும் டெல்லியிறங்கி   மன்மோகன் கையைக் குலுக்கி விட்டுத்தான் போவார் அவரிடம் சில்லறை வர்த்தகம் பற்றி விவாதித்து விட்டு போவார். மிஸ்டர் கிளிண்டன் ஜனாதிபதி ஆவதற்கு முன் அவர்மனைவி ஹிலாரிகிளிண்டன் "வால்மார்ட்" கம்பெனியில் இயக்குனராக இருந்தார். சில்லரைவர்த்தகத்தின் முடிசூடா மன்னனான வால்மார்ட் கொண்டு வரவே இவ்வளவும்


 .
வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இதன செய்யவேண்டும் அதன் முலம் பரக் ஒபாமாவின்வேற்றியை உறுதிப்படுத்தவேண்டும். பா.ஜ.க பச்சைக்கொடி காட்டிவிட்டது.
 
இடது சாரிகள் எதிர்ப்பார்கள் ! 
தி .மு.க,  அதிமுக. திரினாமுல் என்னசெய்யும்?
 

பொத்திக்கிட்டு கிடப்பாணுவ சார்வாள்  !!!








3 comments:

சிவகுமாரன் said...

இடது சாரிகள் எதிர்ப்பார்கள். இடது சாரிகள் மட்டும் தான் எதிர்ப்பார்கள். உண்மை மறுப்பதற்கில்லை.
தேர்தல் வந்துவிட்டால் இந்த பொத்திக் கிட்டு கிடக்கிற கட்சிகள் பின்னாலேயே பொத்திக்கிட்டு போவார்கள்.

kashyapan said...

சிவகுமரன் அவர்களே!! எவ்வளவுகோபம்!எவ்வளவு ஏளனம்! இவை அத்துணையும் இடது சாரிகள் வெற்றிபெறாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தின் விளவு என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள் அய்யா. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆதங்கம் தான் ஆ....தங்கமே தான்.