Wednesday, January 16, 2013

புத்தகக் கண்காட்சி ---2013 !


சிகாகோவில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் ஒரு மாதம் சென்னை வருவதாகக்கூறினார்.! அவரிடம்சென்னை புத்தகக்கண்காட்சிபற்றி கூறி  பயணத்தை திட்டமிடுங்களென்று சொல்லியிருந்தேன் ! அவரும்  பயங்கரமான  புத்தகப் பிரியர் ! வாங்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஒரு பாட்டியலும் கேட்டிருந்தார் !

இன்று அவர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அனுபவத்தை பகர்ந்து கொண்டார் 1
காடுக்கடங்காத கூட்டம் !  எந்த ஒரு கடைக்குள்ளும் போய்வர  முடியவில்லை ! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்கள்தான் disply ஆகியுள்ளன! மற்றவை அடுக்கி வைக்கப் பட்டிருப்பதால் தேடி வாங்க முடியவில்லை ! வாசகனுக்கோ வருகையாளருக்கோ மரியாதை இல்லை!  என்றார் !

பதிப்பகத்தார் மற்ற நாடுகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்வையிட வேண்டும்! கடைகள் புத்தகங்களை அடுக்கிவைக்கவே போதாது ! சிறுகதைகள்,நாவல்கள்,அறிவியல் ,புராணம் என்று தலைப்பு வாரியாக இருந்தாலும் பரவாயில்லை !

வருபவர்கள் ஆற அமர உட்கார ,யோசிக்க,வழியில்லை ! கிட்டத்தட்ட
10 லட்சம் பேர் வருவார்களாம்.! ஒரு ஆளுக்கு 5ரூ வாங்குகிறார்கள் ! கடைகளுக்கு 10000 ரூ வாங்குகிறார்களாம் ! 500 கடைகள் உள்ளன ! இதுவே 1கோடி வசூலாகிறது !  என்றும் குறிப்பிட்டார்

புதிய பதிப்பு என்றால்,பாரதிபதிப்பகம், கிழக்கு பதிப்பகம் தவிர வேறெதிலுமில்லை நண்பர்கள் சொன்னார்கள் !

பதிப்பகங்கள் வெளிநாடுகளில் புத்தககண்காட்சிகள் எப்படி நடை பெருகின்றன என்பதை தெரிந்து கொள்வது மிகவும்முக்கியமான ஒன்று !

கண்காட்சியை நடத்துபவர்களைவிட பதிப்பகத்தாரின் கைகள் ஒங்கி
இ ருப்பதாகவே படுகிறது

பாவம்  வாசகன்  ! !

1 comments:

vasan said...

வ‌ரும் ச‌னிக் கிழ‌மை அப்பாஜியை ச‌ந்திக்க‌ புத்த‌கக் க‌ண்காட்சியைத்தான் தீர்மானித்திருக்கிறோம்.(அவ‌ரிட‌ம் ஆலோச‌னை கேட்காம‌லேயே). ச‌ரி ந‌ட‌ப்ப‌து ந‌ட‌க்கட்டும். ஸ்டாலுக்கு 25000 ரூபாய் க‌ட்ட‌ண‌ம் எனக் கேள்விப்ப‌ட்டேன். முத‌ன்முறையாக‌ ந‌க‌ர்ந்திருக்கிற‌து 36வது க‌ண்காட்சி. அப்பாஜி மார்க‌ழி இசைவிழாவையும் இண‌த்திருப்பார் என்று எண்ணுகிறேன்.