Monday, October 28, 2013

நரேந்திர மோடி !

குஜராத் பல்கலைக்கழகம் !!

கேதான் தேசாய் !!!

கேதான் தேசாய் ஒரு டாக்டர் ! அவருடைய அப்பா பெயர் தீரு பாய் ! இவரு அம்பாநியல்ல ! திருபாய் தேசாய் ! மகன  டாக்டருக்கு படிக்க வச்சாரு ! யூராலஜி பெரிய ஆளு ! 

மகன் கேதன் தேசாய் அப்படி இப்படின்னு இந்திய மருத்துவ கழகத்தின் தலைவரா ஆயிட்டாரு 1 மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கனும்னா இவிங்க அனுமதி  வேணும் ! தனியார் மருத்துவ கால்லுரி ஆரம்பிக்கலாம்னு வந்ததும் சிக்கல் ஆரம்ப மாச்சு !

மருத்துவமனை இருக்க ?இல்லையா? நு பாக்காமாட்டாங்க ! சகட்டு மேனிக்கு அனுமதி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க ! பஞசாப்புல  ஒருகல்லூரிக்கு அனுமதி கொடுத்தாங்க ! அத கொடுத்தது கேதான் தேசாய் ! சி.பி.ஐ  அவரை கோழியை  அமுக்கர மாதிரி அமுக்கிபுட்டாங்க ! அவ்ர்வீட்ல சோதனல1000 பவுனு   தங்கம்,1500கோடி ரோக்கம்னுல்லாம் 2010ல பேப்பர்ல வந்தது !

இப்பம்செய்தி வந்திருக்கு ! அவரு குஜராத் பல்கலைகழக செனட் மெம்பரா ஆயிருக்காறு ! சரி ஆகட்டும். ! குஜராத் பல்கலைகழகத்திலேருந்து  இந்திய மருத்துவ கழகத்திற்கு ஒரு மெம்பரை அனுப்பலாம்! 

நேத்து  குஜராத்  பல் கலைக்கழகத்துல  கூட்டம் போட்டிருக்காங்க ! அதுல  கேதான் தேசாயை மருத்துவ கழகத்திற்கு குஜராத்தின் பிரதிநிதியா"ஏகமனதாக" தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்காங்க ! 

நம்ம ஊரு ஊசிப்போன கணேசன் கிட்ட கேட்டா  "அதுக்கு நரேந்திர மோடி என்ன செய்வாரு ?" ம்பாரு !

சரிதான !

நரேந்திர மோடி என்ன செய்வாரு ?






2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்க கேதான் தேசாய். வாழ்க இந்திய ஜனநாயகம்....

காமராஜ் said...

ஊசிப்போன கணேசனா ?
தோழர் சிரிச்சு முடியல