Thursday, December 12, 2013

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த 

மகன் .......!!!

ஆசாராம்  பாபு சாமியார் கம்பி எணிக்கிட்டு இருக்கார் ! அவருக்கு இரண்டு குழந்தைகள் ! பையன்  பேரு சாய் நாராயணன் ! ஒரு மகள் ! பேரு பாரதி !

சாய் நாராயணன் அப்பாவுடைய தொழிலையே பாக்கான் ! அதாவது கர்மயோகம்,பக்தி யோகம்னு சொல்லி அப்பாவி ஜனங்களை ஏமாத்தி பொழைக்கறது !

ஏகப்பட்ட ஆச்ரமங்கள் ! சொத்து சுகம் ! ஆள் அம்பலம் ! இதுல   இரண்டு ஆஸ்ரமத்தை  மகனை பாத்துகச் சொல்லிட்டாறு அப்பன் சாமியார்!

மகன் சாய் நாராயண் மேல ஏகப்பட்ட புகார் ! பாலியல் குற்றச்சாட்டு தான் அதிகம் ! போலிஸ் தேட ஆர்சம்பிச்சது! அண்ணன் ஒளிஞசிகிட்டாறு!

ஒருவாரத்துக்கு முன்னால சிக்கிட்டாறு !

இப்ப சாய் சாமியார் "தன மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள ஒப்புக்கிட்டாறு 

கற்பழிப்பு குற்றசாட்டினை மட்டுமல்லாது தான் வேரு எட்டு பெண்களோட தொடர்பு    வைத்திருந்ததையும் ஒப்புக்கிடாரூனு சுரத் போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா சொல்லி இருக்காரு !

சாய் கல்யாண  மாணவர் ! இது தவிர அவருக்கு உதவியாளரா இருக்கும் ஜமுனா என்ற பாவனா கூட உறவு உண்டாம் ! அவர் மூலமாக ஒரு பையன் பிறந்துள்ள தாகவும்  கூறியுள்ளார் !

கற்பழிப்பு குற்றச்சாட்டை பொருத்தவரை " அந்தப் பெண்ணும் அவரும் காதலித்தாகவும் இருவரும் சம்மதித்தே உடலுறவு கொண்டதாகவும் " சாய் கூறியுள்ளார் !

சமணர்களோடு ஆதி சங்கரர் சம்வாதம் செய்தார் ! மண்டன் மிஸ்ரரோடு வாதம் செய்து வெற்றிபெற்றார் ! அவர்மனைவி உபய பாரதி தன்னோடு வாதம் செய்ய வருமாறு சவால் விட்டார் ! சங்கரர் சம்மதித்தார் !

உபய பாரதி  ஆண்  பெண் உறவு பற்றி சரமாரியாக கேள்விகேட்க சங்கரர் தினறிவிட்டார் ! பதினைந்து நாள் அவகாசம் கேட்டு இறந்த ஒருவரின் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து ஆண்பெண் உறவு பற்றி தெரிந்து கொண்டு வாதம் செய்தார் !

மனிதன் உயிர்வாழ மூச்சு விட வேண்டும்! பசி ,தூக்கம்,வேண்டும் ! சிறுநீர்,மலம் கழிக்க வேண்டும் அது போலதான் பாலுறவு ! இல்லாதவன் மனிதனாக இருக்கமுடியாது!
சங்கரரின் இந்த கதை அதைச் சுட்டுவது தான்

சாய் நாராயணனாகட்டும்,ஆசராம் பாபுவாகட்டும் அல்லது எந்த மடாமாகட்டும், ஆதார உணர்வுகளில் ஒன்று பாலுறவு !

தவிர்க்க முடியாதது !!!












  

0 comments: