Thursday, February 20, 2014

பாவம் ..! அரவிந்த்  கேசரிவால் .......!


"I am not against capitalism ! I am against crony capitalism " என்று அரவிந்த் கெசரிவால் !
அறிவித்துள்ளார் ! 

ஐயா உங்களை முதலாளிகளுக்கு எதிரானவர் என்று எவரும் நினக்கவில்லை  !  உங்கள் உருவாக்கமே அவர்களுடையது தான் ! 

1740 ம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டதும் ஐரோப்பாவில் ,குறிப்பாக பிரிட்டனில் மூலதனத்திற்காக அவர்கள் செய்த காரியங்களும் வரலாறு ! 

சுரண்டலின் சுருக்கம் தோய்ந்த முகம் தான் மூலதனம் என்பது வரலாறு !

கிழ்திசை நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக கப்பல் களில் செல்லும் சரக்கை கொள்ளையடித்து மூலதனம் சேர்த்த கதை தெரியும் !

அப்படி கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை வரவேற்றதும்தெரியும் !

கொள்ளையர் தலைவன் வால்டர் ஸ்காட் "sir walter scot " ஆனதும் தெரியும் !

அது என்ன crony capitalism ? 

முதலாளித்துவம் வேண்டும் ! சலுகை சார் முதலாளித்துவம் வேண்டாம் !

இந்திய அரசு ஐந்துலட்சம்கொடி சொச்சம் ரூபாய் வரிச்சலுகை அளித்துள்ளது ! முதலாளிமார்களுக்கு !

இந்தவரிகளில் பெரும் தொகை மாநிலங்களுக்கு பங்கிட்டு அவர்களின் நலத்திட்டங்களுக்கு அளிக்கப்பட  வேண்டியவை !

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு போட்டார் சிதம்பரம் !

இந்ததொகையில் காலணாவை உங்களால் திரும்பிப் பெற முடியுமா அரவிந்த்ஜி !   

ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அந்தக் கிழவரின் சேக்காளி நீங்கள் !

இப்போது தனிக்கடை ஆரம்பித்திருக்கிறிர்கள்  !

அமெரிக்க முலதனம் சட்ட விரோத காரியங்களுக்கு லஞ்சம் கொடுக்கும் ! 

இந்தியாவில் சட்ட பூர்வ  காரியங்களுக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் ! 

என்ரானிலிருந்து, வேதாந்தா வரை அப்படித்தான் நுழைந்தார்கள் ! 

இன்று அவர்கள் கைகள் ஓங்கி இருக்கிறது 1

எதற்காக கொடுக்கவேண்டும் ?

நீங்கள் voice கொடுக்கிறிர்கள் !

அதில்பிசிரடித்தால் .....!

டெல்லியில் நடந்தது நடக்கும் !

அரவிந்தஜி ! உங்களைப்  பார்த்தால் பாவமாக இருக்கிறது !!!
































  








2 comments:

சிவகுமாரன் said...

வணக்கம் அய்யா . பாவமாகத தான் இருக்கிறது எனக்கும். வேறு சிலரைப் பார்த்தும்.

kashyapan said...

ஆகா ! சிவகுமரன் ! எப்படி இருக்கிறீர்கள் ? பையன் எப்படி படிக்கிறான் ! வாழ்த்துக்கள் !---காஸ்யபன்.