Friday, February 07, 2014

கடலை வித்தவனும் ,

தேநீர் வித்தவனும் .....!!!

"கடலை வித்தவன் ஜனாதிபதியானான் " என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வந்தது ! அமெரிக்காவின் 39 வது  ஜனாதிபதியாக கார்டர் என்பவர் தெர்ந்தெடுக்கப்பட்டபொது  பத்திரிகைகள் இப்படித்தான் செய்திகளைப் போட்டன !

நம்ம  ஊர்ல சினிமா கோட்டைகை \ல கடலை விக்கிறவன் கூட  ஒருநாள்  நமக்கும் நல்லகாலம் பொறக்கும்னு சாமிகும்பிட போனான் ! 

உண்மைல கார்டர் மிகப்பெரிய நிலம் சொந்தமாக வைத்திருப்பவர் ! அவருடைய எஸ்டேட்ல நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலக்கடலை பயிர் செய்தார்கள். அவற்றை எண்ணை  பிழிய விற்பார்கள் ! அவருடைய எஸ்டேட்டில் அவருக்கு மட்டுமே பாத்தியமான நதியும், அதில் சிறிய அணையும் இருந்ததாகச் சொல்வார்கள் !

பத்திரிகைகள்  கடலை வித்தவன் என்று சொன்னது பாதி சரி  !  ஆனால் அவர மிகப்பெரிய நிலச்சுவான் தார் என்பதை சொல்ல வில்லை ! 

இப்போ புதிதாக தேநீர் வித்தவரை பற்றி பேசுகிறார்கள் !

நம்மூர்ல பாய்லர் முன்னால அழுக்கு துண்ட காட்டிக்கிட்டு "டீ " அடிக்கிறவர நினைச்சுக்கிட்டு ---அவர் வேற ---இந்த மனுஷன் வேற !

டீ அடிக்கிறவர் நாள்பூரா நின்னு அடிச்சா சாயங்காலம் 30 ரூ கூலி வாங்குவார் !

காலேஜ் போற பையன் சாயங்காலமா அண்ணன் டீ  கடைக்கு காலாற நடந்து ஒரு டீ குடிப்பான் ! அப்போ அண்ணன் "தம்பி ! கடைய பாத்துக்கோ ! ஒதுங்கிட்டு வரேன் பா !" நு சொன்னா அந்தநேரத்துல கல்லாவை பாத்துக்கிடர முதலாளிதான் இவரு !

அழுக்கு வேட்டி கட்டுன டீ அடிக்கிறவர் இல்ல இவரு !

இவருடைய ஜிப்பா ஸ்பெஷலா டிசைன் பண்ணினது ! குர்தா வும் ஸ்பெஷல் ! பக்கத்துல போய் நின்னா வெளிநாட்டு சென்ட் வாசம் ஜமாய்க்கும் !

"டீ " க்கடைங்கிரது  "டூப்பு" !!!








    

   







1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அரசியல் எப்படியெல்லாம் பேச வைக்கிறது ஐயா