Wednesday, March 05, 2014



































தோழர்களே உங்களால் மட்டுமே இது சாத்தியம் !!!


அசோக் மோசி ஒரு தலித் ! செருப்பதைக்கும் தோழிலாளி ! குத்புதீன் அன்சாரி தையல் தோழிலாளி !இருவருமே கஞ்சிக்கு செத்தவங்க ! அசோக்கின் ஆவெசத்தை பத்திரிகைகள்  வெளியிட்ட படங்களில் பாத்திருப்பீர்கள் !  பஞ்சரங்க் தளம் அவனுள் ஏற்றிய வெறியின் வெளிப்பாடு அது  !


அந்த வெறிக்கு முன்னால் அன்சாரியின் கதறலையும் உலகம் பூராவும் பார்த்தது ! அன்சாரி தப்பி விட்டான் ! அவன் எங்கு இருக்கிறான் ! மே.வங்கத்தில் இருக்கிறான் என்றார்கள் ! பீஹாரில் இருக்கிறான் என்றார்கள் ! 


அவர்கள் இருவரையும் நேற்று இந்திய பத்திரிகைகள் முதல் பக்கத்தில்போட்டு செய்திகளை வெளியிட்டிருந்தன ! 


அவர்கள் இருவரும் தலைசேரியில் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர் ! அவ்ர்களை தனித்தனியாக ரயிலில்பயணம் செய்வித்து குஜராத்திலிருந்து சில முற்பொக்கு கலைஞர்களும் எழுத்தாளர்களுஅழைத்து வந்திருக்கிறார்கள் என்று செய்திகள் சொல்கின்றன !  


அசோக் மலர்கொத்தை அன்சாரியிடம் கொடுக்கிறான்! அன்சாரி அதன பெற்றுக்கோள்கிறான் !

இருவரும் இணந்து மக்கள் ஓற்றுமைக்கான பாடலைப் பாடுகிறார்கள் !


பாரதமே பரவசத்தில் ஆனந்த கண்ணிர் விடுகிறது !


என் அருமைத்  தோழர்களே உங்களால் தான் இது து சாத்தியம் !

உங்களால் மட்டுமே இது சாத்தியம் !!!உங்களால் மட்டுமே இது சாத்தியம் !!!

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

பெருமையாக இருக்கிறது ஐயா
நன்றி
(எழுத்துப் பிழை காரணமாக முதல் கருத்துரையினை நீக்கிவிட்டேன்)

suvanappiriyan said...

அசோக் மோஷி தனது உரையில் 'நான் முன்பு மிகப் பெரும் தவறு செய்து விட்டேன். மனிதத் தன்மை என்ன என்பதை தற்போது கற்றுக் கொண்டுள்ளேன். குஜராத்தில் வளர்ச்சி எங்கு இருக்கிறது? மாநிலம் முன்னேறி விட்டது என்று சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டும். லால்தர்வாஜாவில் உள்ள நடைபாதையில்தான் நான் இன்றும் வாழ்ந்து வருகிறேன். எனக்கு 39 வயதாகிறது. இன்று வரை தனிமையில்தான் உள்ளேன். திருமணம் முடிக்க என்னிடம் வசதி இல்லை.' என்று கூறினார்.

அன்சாரி தனது உரையில் 'அனந்த் ஷ்ரோப் என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இந்துத்வாவாதிகளால் இஸ்லாமியருக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நானும் அசோக் மோஷியும் குஜராத்திகள். மேடையில் இங்கு அருகருகே அமர்ந்துள்ளோம். ஆனால் இவ்வளவு நெருக்கமாக அருகருகே குஜராத்தில் உட்கார முடியாது. மோடியின் ஆட்சியில் இதுதான் தற்போதய நிலை. சமூகங்கள் பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. இன்று அசோக் மோஷி தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நமது நாட்டு மனிதத் தன்மையின் புதிய அத்தியாயம் இன்று தொடங்கியுள்ளதாக எண்ணுகிறேன்.' என்றார்.

மனோஜ் குமாரின் புகழ் பெற்ற பாடலான 'ஹே...ப்ரீத் ஜஹாங்கி ரீத் சதா' என்ற பாடலை அசோக் மோஷி பாடினார். பாடி முடிந்தவுடன் மிக பலமான கைதட்டல்களால் அந்த இடமே அதிர்ந்தது. கேரளாவில் மொழி கடந்து நாட்டு பற்றினை அனைவரும் வெளிக்காட்டினர்.

http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_3589.html