Friday, March 07, 2014

அந்த பல்கலைக்  கழகத்தில் படித்தவன் நான் ..... !

தோழர் எட்வின் அவர்கள் ஓசைப் படாமல் சில கரியங்களைச் செய்வார் ! வரலாற்றில் புகழ் மிக்க புதல்வர்களின் முதல் சந்திப்பை பற்றிஎழுதி வருகிறார் ! மார்க்ஸ் அவர்களும், ஏங்கல்ஸ் அவர்களும் முதன் முதல்   சந்தித்ததுபற்றிஎழுதசிலதகவல்கள்தேவைஎன்றுமுகநூலில் கேட்டிருந்தார்! 

சம்மந்தமில்லாமல் ஆஜராவதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் ! அவருக்குதொலை பேசி மூலம் சில தகவல்களைச் சொன்னேன் !!

பாரதி பற்றிய மலர் கொண்டுவர 1982ம்ஆண்டு"தீக்கதிர்" முடிவு செய்தது!
பாரதியின் காலம்,பாரதிக்கு முன்பு , பாரதிக்கு பின்பு என்று மூண்று பேர்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டு எழுத ஆரம்பித்தோம் !

பாரதிக்கு முன்பு இருந்த அரசியல் நிலைமை பற்றி நான் எழுத வேண்டும் ! திணறி விட்டேன் !

பேய் முழி முழித்துக் கொண்டிருந்த என்னைப்பார்த்து " என்ன ? சாமா! பாரதி தனி நபர்களை பற்றி அதிகம் பாடியதில்ல! ததா பாய்ரச  \ நௌரோஜி, ராஜாராம் மோகன் ராய்,திலகர்,கோகலே,காந்தி ஆகியவர்களை பாடியிருக்கிறான் ! அவ்ர்கள் அரசியல் தான் பாரதிக்குமுன்பிருந்த அரசியல் "என்றார் ஐ.மாயாண்டி பாரதி!  !ஒரு  புத்தகத்தையும் கொடுத்தார் !

முதலமைச்சர் காமராஜர் சுதந்திர போராட்டம் பற்றி  எழுதச் சொன்ன நூல் !
சத்திய மூர்த்தியின்மகள் லட்சுமி மேற்பார்வையில்வந்தது !

ஒவ்வோரு மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்பு அதில் உள்ளது ! அதோடு இந்திய அளவில் உள்ள போராட்ட வரலாறும்  உண்டு !

நௌரோஜி லண்டன் சென்று தேர்தலில் நின்றது அவர் சோசலிஸ்ட் கட்சியில் நிற்பதை   காங்கிரஸ் எதிர்த்தது என்று பலதகவல்கள் உள்ளன !
லண்டனில் இருக்கும் பொது "indias poverty and British tyrany "என்ற நூலை எழுதியது அதற்காக நூலகம் சென்றதும் குறிப்பிடப்பட்டுள்ளது !

இதே சமயத்தில் தான் மார்க்ஸ் அவர்களும் தனது மூலதனம் நூலுக்காக 
வருவாராம் !

பல நாட்கள் வருகைப்  பதிவேட்டில் அடுத்து அடுத்து அவர்கள் கையெழுத்து 
காணப்படுகிறது ! அவ்ர்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கியாவது இருக்கலாம் ! என்ன செய்ய ! லண்டன் சென்று மேலும் ஆராய எனக்கு வசதியில்லயே ! என்ற குறிப்பும் அதில் உள்ளது !

இந்த தகவலைத்தான் எட்வின் அவர்களிடம் சொன்னேன் !

எட்வின் ஓசைப்படாமல் இதனை முடிப்பார் !

தோழர் முடிப்பார் !!!

(எப்பட்ப்பட்ட அனுபவம் ! முத்தையா, சண்முக சுந்தரம்.ஐ.மாயாண்டி பாரதி ,எல்லாவற்றுக்கும்மேலாக எம் ஆர்.வேங்கடராமன் இந்த பேராசிரியர்களிடம் 
படித்த  நான்   பாக்கியவான்தான்.அந்தபல்கலைக்கழகத்தில் படித்தவன் நான் ) 









2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே தாங்கள் பாக்கியவான்தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே தாங்கள் பாக்கியவான்தான்.