Saturday, April 12, 2014

காய்ந்த இலையை கங்கையில் முக்கினால் 

பச்சை இலை யாகுமா .......?


ஜெஷோதாவைப் பற்றி நாம் கேட்டால்  மோடியின் நிலைமையை விளக்குகிறார்கள் !

பால்ய விவாகம்,தாம்பத்திய உறவு,தியாகம் என்று பேசுகிறார்கள் !

நீங்கள் மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா  ?

அங்கே அம்மன் கொடிமரத்தின் அருகே நின்றுகொண்டு ,இருகைகளையும் நீட்டி "தாயே மீனாட்சி " என்று நெக்குருக வேண்டும்  தாய்மார்களை  பார்த்திருக்கிறீர்கள ?

தலிக்குத்தங்கமும்,காது மூக்குக்கு தங்கமும் போடமுடியாமல் வயது முதிர்ந்த தன்  மகளை  கரையேற்ற முடியாமல் உருகும் தாயைப் பார்த்திருக்கிறிகளா !

வீடுகளில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கடனை வாங்கி மகளை கரயேற்றும் தாயை பார்த்திருக்கிறீகளா ?

திருமணமாகி முன்றே ஆண்டுகளில் விதவையாகி கையில் குழந்தயோடு திரும்பியமகளை பார்த்து  தாயும் தந்தையும் படும் வேதனையை அனுபவித்திருக்கிறீர்களா ?

தனக்குப் பிறகு இவளுக்கு யார் பாதுகாப்பு ? என்ற அவ்ர்களின் வலி தெரியுமா ?

"விதவை தரிசு நிலம் என்று பகலில் கூறிவிட்டு இரவில் பள்ளியறைக்கு  அழைக்கும்" சாமியார்கள் உள்ள பூமியில் அவர்கள்வேதனை  புரியுமா ?

பதினைந்து வயதில் திருமணமாகி  பதினைந்தே நட்களில் கணவனால் கைவிடப்பட்ட  ஜெஷிதா வின் தந்தையும் தாயும் பட்ட வேதனை ?

மாலை ஐந்து மணி யானால் ஜோஷிதா இன்னும் வரவில்லையா ?என்று அவ்ள் தாயும்,தந்தையும் புலம்பியிருப்பார்களே ! அதன் பின்னால் இருக்கும் சோகம்  தெரியுமா ?

ஜோஷிதாவுக்கு மறுமணம் செய்வதா வேண்டாமா என்று எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பார்கள் ?

அந்தக்குடும்பத்தில், ஜோஷிதாவின் தந்தை,சகோதரர்கள், சக மனிதர்கள் அத்துணை பெரும் என்ன பாடு பட்டிருப்பார்கள் !

காய்ந்த சருகாகிவிட்ட தாயே ! உனக்கு என் வந்தனங்கள் !

ஆனால் ! உன் கணவனை நான் மன்னிக்க மாட்டேன் !!








































































































1 comments:

suvanappiriyan said...

//ஆனால் ! உன் கணவனை நான் மன்னிக்க மாட்டேன் !!//

சரியான வார்த்தை!