Wednesday, June 25, 2014

ஒளிரும் இந்தியா !

தங்க நாற்கர சாலை  !!

பா.ஜ.க ஆட்சி !!!


முந்தய பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவை ஓளிர செய்தார்கள் ! அதற்காக தங்க நாற்கர சாலைகளை அமைத்து இந்தியாவை இணைக்கப்போகிறேன் என்று அறிவித்தார்கள் !

இணைந்திருந்த கிராமங்களை துண்டு துண்டாக்கி  பிரித்து விட்டர்கள் !

சாலை போடும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தார்கள் ! தனியார் மயத்தை திமிரோடு ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் ! இதனால் பயனடைந்த கம்பெனிகளில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு கொள்ளை லாபம் கிடத்தது !

சாலை போட்ட இவர்கள் அந்த சாலையை பயன் படுத்தும் வாகனங்களிட மிருந்து சுங்க வரி வசூலிக்க இந்த கம்பெனிகளுக்கு உரிமை அளித்தார்கள் ! 15 ஆண்டுகள் இப்படிசுங்கம்வசூலிக்க அனுமதித்தார்கள் !

இந்த சாலைகளை அமைக்க நிலம் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்டது ! அத்ற்காக  தேசீய நெடுஞ்சாலை வாரியம் உருவாக்கினார்கள் ! இந்த வாரியம் நிலம் பிடுங்கப்பட்டவர்களுக்கு இன்னும்நஷ்ட ஈடு கொடுக்க வில்லை !

சாலைபோட என்று காரணம் காட்டி லட்சக்கணக்கான மரங்களை வெட்டினார்கள் ! அதனை விற்றர்களா ? வெட்டியா மரங்கள் ஒன்றுக்குப் பதிலாக பத்து மரங்களை நடுவோம் என்று நிதி மன்றத்தில் சொன்னர்கள் !

சாலைகளின் நடுவில் செவ்வரளிச்செடியை நட்டு நீரில்லாமல் காய விட்டு
 இருக்கிறார்கள் ! 

இப்போது சுங்க வரி என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது !

சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக பங்களுரு செல்லும் சாலையில் மட்டும்   ஒன்பது சுங்கச்சாவடிகள் உள்ளன!  மொத்தம் 270 /-ரூ நகட்டினால் தான் செல்ல முடியும் !

இதனையும் தனியாருக்கு ஏலம் விட்டுள்ளார்கள் ! நிர்ணயித்த வரியை விட இவர்கள் அதிக வரி வசூலிக்கிறார்கள் !

பள்ளி கொண்டா என்ற இடத்தில் அநியாய வரி  வசூல் நடந்தது ! லாறி உரிமையாளர்கள் தாங்கமுடியாமல் புகார் கொடுத்தனர் ! எதுவும் நடக்கவில்லை ! சுங்கச்சாவடிக்கு  பக்கத்தில் 40 செண்டு நிலத்தை வாங்கினார்கள் ! அங்கு ரோடு போட்டார்கள் ! சாவடிக்குள் போகாமல் கடக்க முயன்றனர் !  ஏலம் எடுத்தவர் இற்ங்கி வந்தார் ! அதற்குள் ன் லாறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்னீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது !

மகாராஷ்டிரா மாநிலத்தில் இது மிகப்பெரிய போராட்டமாக நடக்கிறது ! பால் தாக்கரேயின் மகன் உதவ தக்கரே ! பெரிய தாக்கரேயின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே !

அழகிரி- ஸ்டாலின் மாதிரி வாரிசுச் சண்டை !   ராஜ் "மகாராஷ்டிரா நவ நிரமான் "  நு கட்சி ஆரம்பிச்சார் ! 

நாசிக் பகுதில செல்வாக்கு உண்டு ! அங்குள்ள நாற்கர சாலையில் சுங்க வரி  வசூலிக்க ஆரம்பித்து 15 வருடம் முடிஞ்சிடுச்சு ! நாசிக் முனிசிபாலிடி நாங்களே வசூலிக்க்றொம் நு தீர்மானம் போட்டுடாங்க !

அப்பத்தான் தெரிஞ்சுது ! இந்த பாவிங்க மேலும 30 வருசத்துக்கு அதே தனியாருக்கு உரிமையை கொடுத்திருக்காங்கங்கிறது ! 

ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள்  ஆத்திர மடைந்தனர் ! 

எப்படியோ ! சுங்க வசூலிக்கும்  கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டது !

மகராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் இப்படியாகி விட்டது !

கன்னியாகுமரி,நாகர் கோவில், கோவை சென்னை நு சில "சின்ன பையங்க "
நாற்கர சல நாங்கதான் போட்டோம்னு கரையரங்க !

அவனுக கிட்ட இதை  சொல்லுங்க !







1 comments:

Unknown said...

அவனுக கிட்ட மட்டுமல்ல,என்னால் முடிந்தவரை அனைவரிடமும் சொல்ல முயல்வேன்