Monday, July 14, 2014

புராணங்களையே  வரலாறாக மாற்ற 

பா.ஜ.க  திட்டம் .....!!!


" வெற்றி -வெற்றி ! ஆரம்பமாகிவிட்டதடி ! அரூபத்தின் அற்புத வேலைகள் " என்று" மனோகரா " திரைப்படத்தில்  வசனம் வரும் !

அரூபமாக அல்ல ! நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்  தன் வேலையை ஆரம்பித்து விட்டது !

ஒய். சுதர்சன் ராவ் என்பவர் திருவாய் மலர்ந்திருக்கிறார் !

"பண்டைக்காலத்தில்  இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதீய முறைமைகள் அதிகமாக உதவியிருக்கின்றன!  குறிப்பாக "வர்ணாசிரம தர்மம் " இந்திய சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றிருக்கிறது " என்று கூறியிருக்கிறார் ! 

இவரைத்தான் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக நியமித்திருக்கிறார் !

இவர் யார் ?

தேடிப்பார்த்தேன் !

வாரங்கல்  நகரில் உள்ள காகடீய பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ! முழ நீளத்திற்கு பட்டங்களை வாங்கியிருக்கிறார் ! 

இவருடைய ஆராய்ச்சியின்படி " சாதி சமூகத்தை படினிலைப்படுத்துகிறது ! வர்ணாசிரம தர்மம் தனி மனிதனின் செயலைக் குறிக்கிறது !" என்கிறார் !
( மனுஷன் குழப்பறான் ! ஒரு மண்ணும்புரியல )

இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக   பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதமர்  மோடி  இந்த "எல்லபிரகத  சுதர்சன ராவ்" என்ற அய்யரை நியமித்திருக்கிறார் ! 

இந்த அறிவாளி "சாதி பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் தவறானவை ! 700 ஆண்டுகள்  நடந்த முஸ்லீம்களின் ஆட்சியின் காரணமாக  இது 
 நடந்துள்ளது  ! ஆதிகாலத்தில் சாதிகளால் நன்மைகள்தான் சமூகத்திற்கு நடந்துள்ளன!"என்கிறார் !

ராமர்,கிருஷ்ணர் எல்லாம் வரலாற்று ரீதியாக வாழ்ந்தவர்கள் ! இவை பற்றி ஆராய்ந்து உண்மைகளை  மக்களுக்கு சொல்லப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார் !

சகல ஆராய்ச்சி மையங்களையும் ஆர்.எஸ்.எஸ் காவிமயமாக்கப் போகிறது !

விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக "குருநாத ஜோசியரை" நியமிப்பார்கள் !

கேக்க முடியாது !

ஏன் ? 

அள்ளி போட்டோம்ல வாக்குகளை !!!





  


1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சாதியின் பெயரால் ஏற்படுகின்ற அநீதிகளைக் களைவதற்குப் பதில், அதன் மேன்மைகளைப் பேச ஆரம்பித்தால், அவ்வவளவுதான்
மீண்டும் பின்னோக்கித்தான் பயணிக்க வேண்டும்