Monday, September 22, 2014

பிரதமர் மோடி ஐநா பொதுசபையில் 

பேசுகிறார் ...............!!!



ஐக்கிய நாடுகளின் சபை அமெரிக்காவிலிருக்கிறது ! ஆண்டுதோறும் அதன் பொது சபை கூடும் !ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டு பேசுவது வழக்கம் !

இந்த ஆண்டு வரும் சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதில் பேச ஏற்பாடாகி இருக்கிறது ! அதற்காக அவர் அமேரிக்கா செல்கிறார் !

ஆளும் பா.ஜ.க வின் ஊதுகுழல்கள் இப்போதே "மேளம்கொட்ட "  ஆரம்பித்து விட்டன !

ஐநா சபை கட்டிடம் நியுயார்க்கில் இருக்கிறது ! உள்ளெ மோடி பேசுகிறார் ! கட்டிடத்தின் வெளியே அவருக்கு பிரும்மாண்ட மான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று இந்த ஊதுகுழல்கள் விவரித்துள்ளன ! 

லட்சக்கணக்கான வர்கள் கூடிவரவேற்பு அளிக்கப்படுவது போல் சித்தரித்துள்ளன !

அமேரிக்கா பூராவிலும் இருந்து அமிரிக்கா இந்தியர்கள்வருகிறார்கள் என்றும்குறிபிட்டுள்ளது !

இதற்காக "இந்திய அமெரிக்க அறிவு ஜீவிகள்சங்கம்" என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது ! அவர்கள் சனிக்கிழமை கூடி விருந்து உண்ண விருக்கிறார்கள் ! சுமார் 900 பேர் இந்த"பிரும்மாண்டவரவேற்பில்  "கலந்து கொள்கிறார்கள் ! அரசு முறையில் எந்த  விதமான வரவேற்பும் இருப்பதாக தெரியவில்லை ! 

அமெரிக்காவரை  வந்து விட்டு அதிபர் ஒபாமாவை சந்திக்காமலிருக்க முடியுமா ?

வாஷின்டன் சென்று ஒபாமாவை சந்திக்கிறார் ! அங்கு வெள்ளை மாளிகையில் எல்லாரையும் சந்திக்கும் "ஓவல் ஆபிசில்" ஒபாமாவை  பார்க்க இருக்கிறார் ! 

 சந்திக்கும் பொது பிரும்மாண்டமான பேரணி   நடக்கும் என்று  US -India democrcy forum  என்ற புதிய அமைப்பு அறிவித்துள்ளது !

ஐநா அலுவலகம் முன்பு மோடியின் இரண்டு cutout  வைக்கப்படுமாம் ! அதன் அருகில் நின்று கொண்டு யார் வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது !

நியுயார்க் விருந்தில் கலந்து கொள்பவர்களுக்கு "America  welcomes " என்ற "பனியன் சட்டை " வழங்கவும் ஏற்பாடாகியுள்ளது !

விருந்துக்கு நன்கொடை உண்டா என்பது தெரியவில்லை !

நியுயார்க்கில் வந்து இறங்கும் மோடியை வரவேற்க  அரசு அதிகாரிகள் வருவார்களா என்பது பற்றி தெரியவில்லை !

வருவதாக இருந்தால் இவர்கள் "மேளம் " கூடுதல் சத்தம் போடும் என்பதால் அரசு முறை வரவேற்பு இருக்காது என்றே தோன்றுகிறது !

என்னதான் இருந்தாலும் மோடி நமக்கும் பிரதமர் தானே !

Bonvoyage !!!





 







1 comments:

சிவகுமாரன் said...

வெளிப்படையாகத் தெரிகிறது அய்யா,