Wednesday, November 26, 2014

ATM பற்றியது அல்ல ....!!!




Automatic teller mechine  என்றால் என்ன என்று கட்டுரைஎழுதப்போவதில்லை ! 

ATM என்பதை தமிழில் எப்படி சொல்லுவீர்கள் என்று வங்கியில்பணிபுரியும் மூத்த ஊழியரிடம் கேட்டேன் ! ATM  நு தான் சொல்றாங்க என்றார் !

இதில் பணம் எடுக்கும் போது நடக்கும் வழிப்பறி பற்றி செய்திகள் வந்துள்ளன ! அந்த இயந்திரத்திலிருந்து மற்றவர் பணத்தை "அபேஸ் " செய்வது பற்றியும்செய்திகள் வந்ததுண்டு !

சமீபத்தில் அந்த இயந்திரத்தையும் அதனை கண்காணிக்க வைத்திருந்த காமிராவையும் துக்கிச்சென்ற  செய்தியைப் பார்த்தோம் !

மிக அதிகமாக அதில் 20லட்சம் ரூ வைத்திருப்பார்கள் என்கிறார்கள் !

இதனை பிடிக்க போலீஸ் சிறப்பு விசாரணை ,கமிஷன் என்று போடுவார்கள் !

சில ஆண்டுகளுக்குமுன்னால் "கிங் ப்ஃஷர் கம்பெனி தள்ளாடியது !அதன் தலைவர் மல்லையா தெருத்தெருவாக அலைந்தார் ! கடனுக்காக !ஒருபய கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான் !

அப்பம் நம்ம நிதி அமைச்சர் ரொம்ப வருத்தப்பட்டார் ! ஸ்டேடவங்கிய கூ ப்பிட்டு அவருக்கு கொஞ்சம் கடன் கொடுத்து (5000 கோடி ) உதவுங்கள் என்று சிபாரிசு செய்தார் !

சின்ன அதிகாரி இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க விரும்பினார் ! அவருக்கு தெரியும் கடன் திருப்பி வராது என்பது !"இவ்வளவு பெரிய தொகையை என்னால் அனுமதிக்க முடியாது ! இதனை வங்கி தலைவர்தான் முடிவு செய்யணும் " என்று தப்பித்து கொண்டார்  !

தலைவர் இதனை மோப்பம் பிடித்தவர் ! "படக் " என்று வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போய்விட்டார் ! மல்லையா கையை பிசைந்து கொண்டிருப்பதை பார்க்க சகிக்காமல் நிதி அமைச்சர் கண்ணிர் வீட்டர் !

அதிகாரிகளை கலந்து ஆலோசித்தார் ! ஸ்டேட் வங்கி அதிகாரிகளை கடன் கொடுக்கும் ஆவணத்தை தயார் செய்ய்ச் சொன்னார் ! ஒரு அதிகாரியை விமானத்தில் அனுப்பி  தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரசெய்தார் ! சோத்துக்கு லாட்டரீ அடித்த மல்லையாவுக்கு கடன் கிடைத்தது !

இது ஐக்கிய முன்னணி U P A காரன் செஞ்சது!

NDA காரன் அப்படி எல்லாம் செய்யவில்லை !

அதனியை பிரதமர் தன்னோட விமானத்திலேயே அழைத்துசென்றுவிட்டர் !

6000 சொச்சம் கோடி கடனை ஸ்டேட்வங்கி கொடுக்கும் நு செய்திகள் சொல்கின்றன !

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடிவருகிறார்கள் !

"எப்படிங்க கொடுக்க முடியும் ! லட்சக்கணக்கில கடன் பாக்கி இருக்கு ! நட்டம் ! ஊதியம் எப்படி கூட கொடுக்க முடியும்"நுநிதி அமைச்சகம் சொல்லுது !

வங்கி ஊழியர்கள் மல்லையா,அதானி வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்யாமலிருக்க வேண்டும் !

நம்ம பத்திரிகைகள் ATM கொள்ளைபற்றி  பத்தி பத்தியா எழுதும் !

படிச்சுக்கிட்டு இருப்போம் !!!






1 comments:

சிவகுமாரன் said...

அரசாங்கத்தை நடத்துவதே அவர்கள் தானே அய்யா. - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்