Saturday, November 08, 2014

செவ்விசையும் . இசை உலக போராளி 

T. M .கிருஷ்ணாவும் ....!!!



கர்நாடக இசை வானில் இளம் நட்சத்திரங்கள் புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ! சமீப காலங்களில் பலருடைய கவனத்தை கவர்ந்தவர்களில் திரு T.M .கிருஷ்ணா முக்கியமானவர் !

 நோபல் பரிசு பெற்ற அமார்த்திய சென் அவர்கள் , கோபாலகிருஷ்ண காந்தி அவ்ர்கள் தலைமையில் கிருணாவின் "தி சதெர்ன் மியூசிக் " என்ற புத்தகத்தை 2013ம்  ஆண்டு வெளியிட்டார் ! அந்த புத்தகம் பற்றி ஆங்கில மொழி அலைவரிசை ஒன்றில் கிருஷ்ணாவின் காணொளி நேர்காணலை பார்க்க கிடைத்தது !

--------------------------------------------------------------------------------------------------------------------------

அது பற்றி எழுது முன் கிருஷ்ணாவை  பற்றி சில வார்த்தைகள் ! 

கிருஷ்ணா வின் தந்தை தொழில் முதலாளி ! அவருடைய தாயார் சங்கிதம் பயின்றவர் ! சிறு வயதிலேயே தாயின் குருவிடம் இசை பயின்றார் ! ஜே.கிருஷ்ண் மூர்த்தியின் தத்துவ பள்ளியில்(ரிஷிவந்தியம்) பயின்றார் !விவேகானந்த கல்லூரியில் பட்டம் பெற்ற்வர் !

மறைந்த இந்திய நிதி அமைச்சர் TT  கிருஷ்ணமாச்சாரி  அவருடைய தாய்வழி பாட்டனார் !  

--------------------------------------------------------------------------------------------------------------------------

"கர்நாடக இசை குறிப்பிட்ட சாதியினுடையதாக மாறிவிட்டது ! ஆம் ! நான் பிராமணர்களைத்தான் குறி ப்பிடுகிறேன் ! இசைக்கு அவ்ர்கள் ஆற்றிய  பணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை !அவர்களில் இசைமேதைகள் பலர் தோன்றியுள்ளார்கள்! ஆனாலும் இசை ஏன் பரவலாகவில்லை ? "

"பள்ளிகளில் ஏன் இசை கற்றுக் கொடுக்கப்படுவதில்லை ! ஓவியத்திற்கு   வகுப்பு இருக்கிறது ! இன்னுமெதற்கு குருகுல பயிற்சி ! மற்ற வகுப்பைச் சேர்ந்தவனும் கற்க வசதி ஏற்பட்டால் இசை தங்கள் கையைவிட்டு போய்விடுமென்பதாலா !"

"நாதஸ்வரமும்,தவிலும் இசையின் அற்புதமான வாத்தியங்கள் ! அதனை ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் வாசிக்க வேண்டுமா ? திருவாவடு துறை ராஜரத்தினமும்,காருகுறிச்சி அருணாசலமும் மட்டும் தானா ! அதன் பிறகு ஏன் வரவில்லை ?"

"இதை விட படு பாதகமான நிகழ்ச்சி என்ன தெரியுமா ? மிகச்சிறந்த மிருதங்க வித்வான், வயலின் வித்வான் ஆகியொர் "குறிப்பிட்ட பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வாசிக்க மாட்டேன் "என்று அறிவித்தார்கள் ! அவர்கள் அறிவித்தபாடகர்களின் திறமைக்  குறை விற்காக என்றால் கூட சரி என்று கொள்ளலாம் ! ஆனால் அவ்ர்கள் "பெண் "  என்பதால் மறுத்தார்கள் !"

" இதை விட சோகம் என்ன வென்றால் மேடை ஏறும்  ஒரு பாகவதர் கூட இதனை எதிர்க்கவில்லை  ! பெண்பாடகர்களும் வாய் திறக்கவில்லை !"

"சங்கீத மும்மூர்த்திகள் கச்சேரி செய்து பிழைக்கவில்லை ! கச்சேரிக்காக விதி முறை எதையும் வைத்துவிட்டு போகவில்ல ! ஒரு வர்ணம் , ஒரு சிறு கீர்த்தனை, ஒரு பல்லவி, தானம், கனராகம், துக்கடா என்று எந்தபந்தாவும் இல்லை ! சில தலைகட்டுகள் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள் ! நான் ஒரு இசைக் கலைஞன் ! என் மனம் மகிழ  பாடவிரும்புகிறேன் ! இதில் எதற்கு விதிமுறைகளோ ! மேடை பந்தாவோ !"

செவ்விசைத்துறையில்  அசுத்தம் (dirt in music ) சேர்ந்து விட்டது அதனை களைய வேண்டிய தருணம் வந்து விட்டது ! 

போராளிகிருஷ்ணாவின் கைகளை பலப்படுத்துவோம் !!!!

 

  

6 comments:

சிவகுமாரன் said...

ஆச்சரியமாய் இருக்கிறது. அவரும் பிராமணர் என்றல்லவா நினைத்திருந்தேன்.

'பரிவை' சே.குமார் said...

ஆச்சர்யமான செய்தி ஐயா...
இங்கு ஒரு சிலவை ஒரு சில சாதிக்கென்றே அமைக்கப்பட்டு விட்டன....

கரந்தை ஜெயக்குமார் said...

இசைத்துறையிலும் துர்நாற்றமா
வேதனை ஐயா

kashyapan said...

திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாசரி (T.T KrishNamachari ,ex.finance minister) ஒரு பிராமணர் ! டீ.எம் கிருஷ்ணாவின் தாயரின் தாய் மாமன் ! அப்படியானால் கிருஷ்ணாவும் பிரமணர்தான் என்று கருதுகிறேன் சிவகுமரன் அவ்ர்களே ---காஸ்யபன்.

சுப்ரா said...

சங்கீத அசிங்கம் . கிருஷ்ணா அழகாக்கி விடுவார் நிச்சயமாக .

சிவகுமாரன் said...

அப்படியெனில் கிருஷ்ணா இன்னொரு பாரதி.