Monday, December 22, 2014

 

N .M .S அவர்களே 

1963ம் ஆண்டு ! காப்பிட்டு ஊழியர்களின் தென்மண்டல கூட்டமைப்பின் அங்கமாக தமிழ் நாடு,கெரளா,ஆந்திரா,கர்நாடகா ,பாண்டிசெரி ஆகிய மாநிலங்கள் இருந்த காலம் !

மண்டல மாநாடு மதுரையில் நடக்க விருந்தது !

மண்டலதலைவராக அந்த மாபெரும் போராளி மோகன் குமார மங்கலம் இருந்தார் !

செயலாளர்.மற்றும் மண்டல பொறுப்பாளர்களாக தோழர்கள்மேனன்,ராம்ஜி என்று அழகு சேர்த்தனர் !

மாநாடு மதுரை அழகப்பன் அரங்கில் நடந்தது ! 

மொகன் தன் அலுவல்கள் காரணமாக பதவியிலிருந்து விடுப்ட்டு தன்னுடைய நண்பர் இளம் வக்கீல் சங்கரன் அவர்களை கொண்டுவர விருப்பம் தெரிவித்தார் ! 

தென் மண்டல் பொதுச்செயலாளராக புதியவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள் !

மிகவும் இளமையான ,நெடிய ,என்.எம் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

அன்றிலிருந்து ,ஓய்வு பெற்றது வரை ,அதற்குப்பிறகும் இடைவிடாத போராட்டக்களத்தில் நின்று காப்பீட்டுக் கழக ஊழியர்களுக்கு மட்டுமல்லமல் , உழைக்கும் மக்களுக்காக பணியாற்றிய 

N.M.S அவர்களே

காலம் மாறத்தான் செய்யும் ! ஆனாலும் உங்கள் 

கம்பீரம் குறையவில்லை ! குறையாது !!!

Com .N.M.S I love you














1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

என்.எம்.எஸ் அவர்கள் பாராட்டிற்கு உரியவர் ஐயா