Friday, December 26, 2014

"Tyranny of Democracy "

"கொடுங்கோன்மை ஜனநாயகம் "



பெரும்பான்மை கருத்தாளர்கள் சிறுபான்மை கருத்துக்களை கேட்டு அதனையும் அணைத்துக் கொண்டு செல்வது தான் ஜனநாயகம் ! 

"என்னிடம் பெரும்பான்மை  உள்ளது ! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை " என்று செயல்படுவது ஜனநாயக மல்ல !

மூ லதன ஜனநாயகத்தில் இத்தகைய மனநிலை ஆட்சியாளர்களுக்கு உருவாவது மிகச்சாதரணமானது  தான் ! அதிகார பலம் ,பணபலம் கொண்டு ஆள் சேர்த்து  அதற்கு ஒருஜனநாயக வடிவம்கொடுப்பார்கள் ! 

இதனைத்தான் "Tyranny of Democracy " (கொடுங்கோன்மை ஜனநாயகம் ) என்று வர்ணிக்கிறார் மாமேதை லெனின் அவர்கள் !

முகர்ஜி என்ற ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்திட்ட "அவசரசட்டம்" அதனையே காட்டுகிறது !

இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முடலீட்டினை உயர்த்தவும், நிலக்கரியை எடுக்க தனியாருக்கு தாரை வார்க்கவும் என்ன டா அவசரம் ! அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாமே !

இன்சூரன்ஸ்  மசோதா மாநிலங்கள் அவையில் வந்தது ! அதனை select குழுவின் பரிசீலனக்கு அனுப்பினார்கள் ! மீண்டும் அவையின் பரி சீலனைக்கு வந்தது ! அவையின் பரி சிலனை விவாதம் ஆகியவை இன்னும்முடியவில்லை ! இன்றைய நிலையில் அது மாநிலங்கள் அவையின் சொத்து ! ஜனாதி பத்தி அதில் தலையிடலாமா ?

கேட்டால் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமால் செய்கிறார்கள் என்று ஆளும் பா.ஜ.க சொல்கிறது !

சுக்ராம் நு ஒரு மந்திரி ! தொலை பேசி துறையில் ஊழல் செய்தார் ! அதை விசாரிக்க வேண்டும் என்று பதினைந்து நாட்கள் நாடாளுமன்றத்தை நிலைகுலையச்செய்தாரே goodgovernance  வாஜ்பாய் ! பின்னர் அதே சுக்ராமை தடவி உச்சிமோந்தது வேறு விஷயம் !

நாடாளுமன்ற ஆவணங்களை பரிசீலிக்கலாமா ? நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று பார்ப்போமா ? 

"ஜனநாயகம் ,ஜனநாயகம் " என்று கூச்சலிடுவான் முதலாளி அவன் நலன் காக்கப்படும் வரை !

இல்லை என்றால் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு இது தான்  ஜனநாயகம் என்று கொக்கரிப்பான் !

இதனைத்தான் Tyranny of Democracy என்கிறார் லெனின் !!!

கொடுன்கோன்மை ஜனநாயகம் என்பது இது தான் !!!!!

 

  













  

0 comments: