Tuesday, February 20, 2018






நிஹால் காஷ்யப்  

தேசிய இசை போட்டியில் 

"இரண்டாம் இடம்" !!!




பல்கலைக்கழகங்களுக்கிடையே யான தேசிய இசை போட்டி நடந்தது .அதில் நிஹால் காஷ்யப் (எனது பேரன் ) அகிலஇந்திய அளவில் இரண்டாம் இடத்தை பெற்றான் .

நாகபுரி பல்கலையின் சார்பில் கலந்து கொண்ட நிஹால் மேற்கத்திய இசையில் இந்த விருதினை பெற்றிருக்கிறான் .

கடந்த 19-2-18 அன்று ராஞ்சி நகரத்தில் பல்கலைக்கழகங்களை இடையே யான இசைப்போட்டி நடந்தது. நிஹால் சிறுவயதில் கர்நாடக சங்கீதம் கறறான் . கல்லூரியில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து அதன் "கம்போஸராக " இருந்தான். கல்லூரியின் சார்பாக பல்கலைக்கழக போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றான் .

நாகபுரி பல்கலைக்கழ்கம் இந்த குழுவை தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு ராஞ்சி நகருக்கு அனுப்பியது . மேற்கத்திய இசையிலும் சிறப்பாக பாடும் நிஹால் அவன் சார்ந்த பல்கலைக்கு இரண்டாம் இடத்தை பெற்றுத்தந்திருக்கிறான்.

தோழர்களும் அன்பர்களும் அவன் மேலும் சிறக்க ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தருமாறு வேண்டுகிறேன்.

 

0 comments: