Tuesday, February 13, 2018







சுந்தரம் அவர்களின் சாதனை -

ஓய்வூதிய பாதுகாப்பு !!


குருமூர்த்தி பெருமிதம் 



"இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஓய்வூதியம் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் மறைந்த தோழர் NMS தான் " என்று பெருமிதத்தோடு குருமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்கள்..

 இன்ஷுரன்ஸ் ஓய்வூதியர்கள் அகில இந்திய மாநாட்டில் குருமூர்த்தி (jt secretary Aiiea )பேசும்போது " வாங்கி ஊழியர்களுக்கு இந்த பாது  காப்பு இல்லை . ஒவ்வொரு ஊதிய உயர்வு பேச்சு  வார்த்தையின் போதும் ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியமும் உயரவேண்டும். அப்படி உயரும் பொது கூடுதலான தொகை ஒதுக்க வேண்டுமென்றால் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட சாதமானம் நிர்வாகத்திற்கு கொடுக்க வேணும் .இது தான் வங்கியில் நடைமுறை ! ஆனால் இன்சூரன்ஸ் ஊழியர் திட்டம் அப்படி அல்ல.!  இதனை சாதித்தவர் சுந்தரம் அவர்கள் "என்றார்.


"இன்சூரன்ஸ் ஊழியர்  ஓய்வூதிய திட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டது .விதி 5 (3) சேர்க்கப்பட்டது அதன்படி  ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ஓய்வூதிய நிதி எந்த வித ஊழியர் பங்கேற்பும் இன்றி பாதுகாக்கப்படும் " என்று அது உத்திரவாதப்படுத்தியது " என்று குருமூர்த்தி விளக்கினார்.


ஓய்வூதிய போராட்டத்தையும்,அதன் காரணமாக கிடைத்த நன்மைகளையும்  அரைமணிநேரத்திற்கும் மேல் விளக்கி குருமூர்த்தி உரையாற்றினார்

0 comments: