Friday, September 07, 2018






திரைப்படம் என்பது 

ஒரு கலைவடிவமா..... ?

புனே திரைப்பட கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன் பட்ட மளி ப்பு விழா நடந்தது  உலகப் . புகழ் பெற்ற மிரினாள்  சென்  கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார் .

" கட்டிடக்கலை, போர்க்கலை நாட்டியம் ,நடனம்,நாடகம்,நடிப்பு, இசை ஓவியம் சிற்பம், என்று அத்துணை கலைகளையும் விழுங்கி செரிமம் செய்து, தன்னையே ஒரு தொழில்நுணுக்க புரட்ச்சி மூலம் ஒருகலை வடிவமாகவும் ஆக்கிக்கொண்டதுதான் திரைப்படம்."என்றார் .

 திரைப்படம் 70  சதம் விஞ்ஞானம் .30 சதம் கலை. 30  சத்தத்திற்குள் . முற்போக்கு,பிற்போக்கு, கலை ,இலக்கியம், என்று பார்க்க முடியும்.

மின்சாரம் இல்லை என்றால் திரைப்படம் இல்லையென்பது தான் நிலை.தமிழகம் மின்சாரமயமாக்கப்பட்டது  திரை த்தொழிலுக்கு சாதகமாக அமைந்தது என்பது மிகை அல்ல. இதே சமயத்தில் தான் ஹரியானா மின்சாரமயமாகியது என்பதை நினைவில் கொள்வது நல்லது.மனிதகுலதகவல்  தொடர்பு வளர்சசி என்பதின் ஒரு அம்சம் தான் திரைப்படம்.

மாமேதை லெனின் மக்களுக்கு போதனை செய்ய திரைப்படத்தை பயன் ப டுத்தினார். அதனால் திரைபடத்தை கல்வித்துறையின் ஒரு பகுதியாக வைத்தார் .நம் நாட்டில் அதனை பொழுது போக்காக கருதுகிறோம். அடிப்படையில் மனிதன் தன சகமனிதனோடு தொடர்பு கொள்ள ஒரு சாதனத்தை தேடினான்.தன்  கருத்தை  தன்  சக  மனிதனுக்கு உள்ளதை உள்ளபடியே மடை மாற்றுவதற்கு அவனுக்கு அன்று கிடைத்த கருவி தான் "பேச்சு  மொழி "(verbal language ). பேசு வதின் மூலமா மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியாது என்று அதன் போதாமையை  உணர்ந்தான். மொழிக்கு மாற்றாக அல்லாமல் அதற்கு அனுசரணையாக ஒரு கருவி அவனுக்கு தேவைப்பட்டது. 

உதாரணமாக என்நண்பர் என் வீட்டுக்கு வர விரும்புகிர்றார் . நான் தெருவின் பெயரை சொல்லி அந்த தெருவில் மரம் இருக்கும்,அதன்  அருகிலிருக்கும் விடு என்கிறேன்.

அங்கு இரண்டு வீட்டின் முன்னாலும் மரம் இருக்கிறது.நண்பர் திகைக்கிறார். ஒருமரம்  தென்னை.மற்றோ ன்று வெப்ப மரம் . நான் ஒரு காகிதத்தில் தென்னை மரத்தை படமாக காட்டி ருந்தால்நண்பர் சிரமம் குறைந்திருக்கும் . அதாவது பேசசு மொழிக்கு அனுசரணையாக ஓவியம் கிடைத்தது .இதனை language of drawing என்று வகைப்படுத்தினார்> மனிதனின் தகவல் தொடர்பு சாதனத்தில் ஒரு சிறு வளர்சசி உருவாகியது.

 (தொடரும் )

0 comments: